Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

23

பின் அடுத்த நாள் கல்லூரிக்கு வித்யுத்தும் சைந்தவியும் செல்ல அவர்கள் செல்வதை ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது .

1 வாரம் சென்ற நிலையில் அதிதி எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள் .ஹரிக்கும் அந்த ஒரு வாரம் ஸ்டடி ஹாலிடேயாக இருந்ததால் காலையில் அங்கே வித்யுத் சென்றதும் வரும் அதிதி மாலையில் வித்யுத் வந்த பின்பே வீட்டிற்கு செல்வாள் .

இந்நிலையில் அவளுக்கும் ஹரிக்கும் நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது .சேர்ந்து படிப்பதும் பேசுவதும் வரைவதும் என்று நேரத்தை செலவிட்டனர்.ஹரிக்கு முதலில் அவள் மேல் இருந்த ஈர்ப்பு நட்பிற்கானது என்று இம்முறையும் சரியாய் தப்பாக புரிந்து கொண்டு அவளுடன் ஒரு நண்பனாய் பழக துவங்கினான்.

மேலும் 2 நாட்கள் சென்ற நிலையில் ஆதிதிக்கும் வித்யுத்திற்கும் வீட்டில் பெரிய வாக்கு வாதமே நடந்து கொண்டிருந்தது .

வித்யுத் "அதிதி நீ என்ன சொன்னாலும் நீ சொல்றதுக்கு நா என்னைக்கும் ஒத்துக்கவே மாட்டேன் "என்க

அவளோ "நா என்ன அப்டி தப்பா கேட்டுட்டேன் எல்லாரும் கேக்குறத தான நா கேட்டேன் இதுல என்ன தப்பிருக்குங்கிற ?"என்க

அவனோ"நாட்டுல நெலம எப்படி இருக்குனு தெரிஞ்சு தான் பேசுறியா அவன் அவன் பொம்பள புள்ளைங்க வெளிய போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் டென்ஷன்ல பிபி patient ஆய்ட்ருக்கான் நீ என்னனா coollaah இங்க இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற கோச்சிங் கிளாஸ்க்கு cyclela போயிட்டு வர்றேங்குற "என்க

அவளோ "நீ தான என்ன எப்போவும் தைரியமா இருக்கனும் எதையும் face பண்ணனும்னு சொன்ன இப்போ வரைக்கும் உன் பாதுகாப்புலயே வச்சுருந்தேனா எப்படி நா அடுத்து என் lifeah பாத்துக்குறது ?"என்க

அங்கு வந்த சைந்தவியும் ஹரியும் "என்ன நடக்குதிங்க?" என்க

அதிதி "பாருங்கண்ணி இந்த அண்ணனை இங்க இருக்குற கோச்சிங் கிளாஸ்க்கு cyclela போயிட்டு வரேண்டான்னு சென்னா நா தான் கூட்டிட்டு போவேன் அப்டினு ஒத்த காலுல நிக்குறான்.இவன் காலேஜ் எந்த பக்கம் இருக்கு? என் கோச்சிங் கிளாஸ் எந்த பக்கம் இருக்கு ?சொன்னா கேக்க மாடீங்கிறான் ."என்க

சைந்தவியோ "இல்லடா என்னனாலும் அந்த சைடு vehiclesum அவ்ளோ போயிடு வராது ஈவினிங் டைம் கொஞ்சம் டெஸெர்ட்டாஹ் தான் இருக்கும் .ஸ்பெஷல் கிளாஸ்லாம் வச்சா ரிஸ்க் தான ."என்க

அவளோ "அண்ணி யு டூ.ஏன் ஹரியும் அந்த வழியா தான போறான் அவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா "என்க

வித்யுத் ஏதோ கூற வர ஹரி "மாமா நா ஒன்னு சொல்லவா ?"என்க

வித்யுத் "என்னடா சொல்லு "என்க

ஹரி "மாமா அவ அந்த வழியா cyclela வரணும்னு நெனைக்குறா அண்ட் அவ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல எல்லாத்துக்கும் பயப்பட இப்டியே பயந்தா அடுத்து அவளுக்கு careerku இது நல்லதா இருக்காது மாமா .அது மட்டுமில்லாம ஒரு architect ஆக நெனைக்குற பொண்ணுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாவே வேணும் .சோ இன்னும் அவளை கொழந்தையா நினைக்காம அவளை விடுங்க நானும் அதே வழியா தான போவேன் நா பாத்துக்குறேன்."என்க

சிறிது நேரம் யோசித்த வித்யுத் "சரிடா இனி என் தங்கச்சி உன் பொறுப்பு பத்திரமா பாத்துக்கோ " என்க

ஹரி மனதில் "மூச்சு முடியிற வரைக்கும் பத்திரமா பாத்துக்குவேன் "என்று எண்ணியவன்

அவனிடம் "சரி மாமா" என்க அதிதியோ ஹரியிடம் சென்றவள் "thanksda "என்று அவன் கையை பிடித்து உலுக்கியவள் அங்கிருந்து சென்றால்.அவள் செல்வதையே ஹரி பார்த்து கொண்டிருக்க அவனை கவனித்த வித்யுத் புன் முறுவலுடன் "அது சரி "என்று நினைத்து கொண்டான்.

அடுத்தநாள் அதிதி அவனிடம் சொல்லி கொண்டு ஹரியுடன் கிளம்ப வித்யுதும் சைந்தவியும் தத்தம் வண்டியில் கல்லூரியை அடைந்தனர் .வித்யுத் முன்னே செல்ல சைந்தவியின் தலையில் ஏதோ காகிதம் பட்டு கீழே விழ அதை எடுத்து பிரித்து பார்த்தாள்.

அதில்

"அன்புள்ள சைந்தவிக்கு வித்யுதின் அப்பா விஷ்வா எழுதிக்கொள்வது.என் மகனும் நீயும் ஒருத்தர ஒருத்தர் எவ்ளோ விரும்புறீங்கன்னு கொஞ்ச நாலா நா பாத்துட்டு வர்றேன்.என் மகன் வாழ்க்கைல சந்தோஷத்தை நானே அழுச்சுட்டேன் அது இப்போ உன் மூலமா திரும்ப கிடைக்குது அவனுக்கு ஆனா அது அவனுக்கு முழுசா கெடைக்கணும்னு நினைக்குறேன் .உன்ட கொஞ்ச நேரம் தனியா பேசணும் உன் காலேஜ்க்கு எதிர்க்க இருக்குற பார்க்குக்கு 5 மணிக்கு வாம்மா.உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் வா "என்று எழுதி இருக்க அவள் சுற்றி முற்றி பார்க்க ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளி வந்த விஷ்வா "ப்ளீஸ் "என்று கண்களால் கெஞ்ச அவளும் "சரி "என்க அவன் அங்கிருந்து சென்றான்.பின் அவள் திரும்பி நடக்க அங்கே வந்த வித்யுத் எவ்ளோ நேரம்டி என்ன பண்ணிட்ருந்த ?"என்க

அவளோ"ஒன்னும் இல்லடா ID cardah தேடி எடுத்துட்டு இருந்தேன் .வா போலாம் "என்க அவனும் "சரி வா" என்று உள்ளே சென்றனர் .

அவனுடன் சென்ற சைந்தவி "எதற்காக கூப்டருப்பாரு??என்ன சொல்ல போறாரு அவரு கண்ணை பாத்தா பொய் இருக்குற மாறி இல்ல ஆனாலும் வித்யுத் சொன்னதை எல்லாம் வச்சு பாக்கேல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் முக்கியமா அவனுக்கு தெரிய கூடாது .என்று அவள் நினைத்துக்கொண்டே சரி அவரை போய் பாத்துட்டு வருவோம் என்று முடிவெடுத்தால்.

என்றும் அவள் பூஜாவிடம் அனைத்தையும் கூறிவிடுவாள் ஆனால் வித்யுத்தை பற்றிய எதையும் அவள் அவளிடம் கூறியதில்லை .இன்று வித்யத்திற்கு தெரியாமல் இந்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதால் அவளின் உதவியை நாடினால் சைந்தவி .pt பீரியட் வர அனைவரும் வெளியே செல்ல சைந்தவி"பூஜா எனக்கு என் வாட்ச் எங்க போச்சுன்னு தெரில சோ ஹெல்ப் பண்றியா "என்க

மற்ற நண்பர்கள்"நாங்களும் சேர்ந்து தேடவாடி ?"என்க

அவளோ "இல்ல வேண்டாம்டா நாங்க தேடிட்டு வரோம் நீங்க முன்னாடி போங்க "என்று அவர்களை அனுப்பி வைத்தவள் அனைவரும் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தி கொண்டு பூஜாவிடம் திரும்ப

அவளோ "என்ன விஷயம் சொல்லணும்னு நெனைக்குற சொல்லுடி "என்க

தன் செயலை இத்தனை உன்னிப்பாய் புரிந்து வைத்திருக்கும் தன் தோழியை மனதிற்குள் மெச்சியவள் "அது வந்து டி நா இன்னைக்கு சாயந்தரம் ஒருத்தர நம்ம காலேஜ்க்கு ஆப்போஸிட்ல இருக்குற பார்க்கல மீட் பண்ணனும் விதுக்கு தெரியாம சோ இன்னைக்கு உன்னோட உன் வீட்டுக்கு படிக்க வரேன்னு சொல்லணும் அவன்ட ப்ளீஸ் டி "என்க

அவளும் "என்னவோ பண்ண போறன்னு மட்டும் தெரியுது சரி சொல்லுறேன்.ஆனா அவனுக்கு தெரியாம பண்ணுறது எனக்கென்னவோ சரியா படலை"என்க

சைந்தவியோ "அதெல்லாம் ஒன்னும் ஆகாது இதை மட்டும் செய் டி செல்லம் "என்று அவள் தாடையை பிடித்து கொஞ்ச

அவளும் "சரி பண்ணி தொலைக்குறேன் அடியேய் அவன்ட அடி வாங்க மட்டும் விட்றாதடி எடக்கு மடக்கா ஏதாச்சும் பண்ணி அன்னைக்கு அவன் வினய எப்படி அடிச்சான்னு சரணும் ஷ்ரவனும் சொன்னதுக்கே எனக்கு கை கால் நடுங்கிருச்சு ."என்க

சைந்தவியோ "நா இருக்கேன்ல அப்பறோம் என்ன பயம் "என்க

அவளோ "நீ இருக்குறது தானடி பயமே " என்க

அவளோ "சைந்தவி இருக்க பயமேன் நா பாத்துக்குறேன் நீ நா சொன்னதை மட்டும் சொதப்பாம செய் இப்போ போலாம் "என்று கூறி விட்டு அவளோடு சென்றால்.அன்று பாடவேளை முடிய அவளுடனே நடந்து வந்து கொண்டிருந்தான் வித்யுத்.பார்க்கிங் areaவிற்குள் வந்தவன் அவன் வண்டியை எடுத்துவிட்டு சைந்தவி அப்படியே நிற்பதை பார்த்தவன் "என்ன சது இப்டியே நிக்கிற வண்டிய எடு வீட்டுக்கு போற ஐடியா இல்லையா ?"என்க

சைந்தவியோ மனதில் "ஏய் பூஜா எரும மாடே எங்கடி போய் தொலைஞ்ச சீக்கரம் வந்து தொலையேண்டி உன் ஆளுகூட மொக்க போட இந்த நேரம் தான் கெடச்சுதா உனக்கு"என்று மனதிற்குள் பூஜாவிற்கு வசைமழை பொழிய அவளிடம் மேலும் வாங்கி கட்டிகொள்ளுமுன் பூஜாவே வந்துவிட்டால் .

அங்கே வந்தவள் "வித்யுத் இன்னைக்கு சைந்தவி என்னோட என் வீட்டுக்கு வரட்டுமே "என்க

வித்யுத் "ஏன் என்ன திடீர்னு ?"என்க

அவளோ "அது வந்து வித்யுத் எனக்கு சில பாடத்துல doubts இருக்கு அதான் அவளும் நானும் சேர்ந்து படிக்கலாம்னு இன்னைக்கு வீட்டுக்கு கூப்ட்ருக்கேன் ."என்று ஒப்பிப்பதை போல் கூற

அவனோ "ஹே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற என்னவோ எழுதி குடுத்து ஒப்பிக்குற மாறி பேசுற என்னாச்சு உனக்கு "என்க

சைந்தவி மனதில் "சொதப்பு சொதப்புன்னு சொதப்புராளே இனி விட்டா அவன் கண்டு புடுச்சுருவான் "என்று நினைத்தவள் பூஜா வாயை திறக்குமுன் "விது அவ நேத்தே சொன்னா நான் தான் மறந்துட்டேன் அம்மா அப்பாட்ட கூட நேத்தே சொல்லிட்டேன் நீ போ நா வந்துருறேன் அவ வீட்டுக்கு போயிட்டு "என்க

அங்கே வந்த அவர்கள் நண்பர் படை "என்னாச்சு மச்சான் என்ன இன்னும் கெளம்பல நீங்க "என்க

வித்யுத் அவள் கூறியதை கூற சரணோ"ஹே எங்களுக்கும் doubtslaam இருக்குடா வேணா ஒன்னு பண்ணுவோமா நாம எல்லாரும் இன்னைக்கு அவ வீட்ல குரூப் ஸ்டடி பண்ணுவோமா ?"என்க

ஷ்ரவனும் "ஆங் நல்ல ஐடியா டா சேந்து படிக்கலாம் "என்க

அவனை மனதில் மிகவும் நல்ல வார்த்தைகளால் திட்டிய சைந்தவி அவனை முறைக்க அவளை பார்த்த சரண் "என்ன சையு என் ideava பாத்து ஆனந்தமாயிட்டியா அய்யாக்கு எப்போவும் இப்டி தான் ஐடியாஸ் ஆறா ஊத்தும்"என்க

அவளோ மனதில் "மவனே உன் வாயில இருந்து இப்போ ரெத்தம் கொட்ட பொதுடி முதலுக்கே மோசம் பண்ண பாக்குறானே என்ன பண்ணலாம் என்று யோசித்தவள் கண்ணில் சரண் காதலி நேகா பட இவள வச்சே கவுத்துற வேண்டி தான் என்று நினைத்தவள் அவனிடம் "ஓஹ் அப்டியா சரண் சரி வாங்க போலாம் அண்ட் ஒன்னு சொல்லணும்னு நெனச்சேன்டா மறந்துட்டேன் நம்ம நேகா இன்னைக்கு ஏதோ படத்துக்கு போறதா பேசிட்டு இருந்தா வீட்ல அம்மா அப்பா இல்லயாம் அதுனால ஜாலியாஹ் படத்துக்கு போக போதாம் தனியா என்னையும் கூப்டா நாந்தான் இவ கூப்டான்னு சொல்லி விட்டுட்டேன் .சரி வாங்க போலாம் "என்க

சரணோ தனக்கு வராத போனை எடுத்து"ஆங் அம்மா சொல்லுமா இப்பொவேவா வீட்டுக்கா கோவிலுக்கா இந்தா வரேன்மா "என்றவன் "sorryda அம்மா ஏதோ கொல்லங்குடி கருப்பாயி கோவிலுக்கு போணுமாம் பூஜ பண்ண பூஜ தான நமக்கு முக்கியம் நா போய்ட்டு வரேன்" என்று நழுவ

வித்யுத் "டேய்ய் "என்று கத்த

அவனோ "விபூதி கொண்டு வரேண்டா என்றவன்

அடுத்து வித்யுத் "அடேய்ய் "என்க

அவனோ "மச்சான் கண்டிப்பா நாளைக்கு பிரசாதம் கொண்டு வரேண்டா "என்று ஓட்டமாய் ஓடி விட்டான் .

ஷ்ரவனும் ஏதோ சொல்லி நழுவி விட்டான் .சைந்தவி "அப்டி வாங்கடா வழிக்கு என்று நினைத்தவள் வித்யுதிடம் டேய்ய் அதான் ரெண்டும் போயிருச்சுங்கள்ல நீ மட்டும் வந்து என்ன பண்ண போற நா பாத்துட்டு வறேன் "என்று ஏதேதோ சொல்லி அவனை அனுப்பி வைத்தால் .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro