6.
உனக்கு யாருமே இல்லைனு நெனக்காத திவி. பாரு உன் மாமா, அந்த பொண்ணு சுஜி இவங்க உன் மேல அக்கற இருக்குறவங்க தான். சுஜி marriage பண்ணதும் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வரணும்னு ஏன் நெனச்ச ?
கடலையே பார்த்துக் கொண்டிருந்தவள் மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள்.
எனக்கு புரியுது வருண். என்னால யார்கிட்டயும் நெருக்கமா பழக முடில. காலேஜ்ல, அப்றம் Work பண்ற எடத்துலனு நெறய பேர Meet பண்ணேன். ஆனா யாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டாங்க, யாருக்குமே என்ன பிடிக்காதுன்ற Feel எப்பவும் இருந்துட்டே இருக்கும். மாமா பாசமா இருந்தாலும் என்னால அவருக்கும் அத்தைக்கும் எப்பவும் சண்ட. சுஜி என்ன கொஞ்சம் புரிஞ்சிகிட்டவ தான். ஆனா அவ Marriage பண்ணிகிட்டப்போ இனிமே சுஜியும் என்ன விட்டு பிரிஞ்சி போய்டுவான்ற பயம் வந்துடுச்சி.
ஓ... அப்போ அவ உன்ன விட்டுட்டு போறதுக்கு முன்னாடி நீ அவள விட்டுட்டு வந்துட்ட?
அவள் வருணை பார்க்கவில்லை. ஆம் என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.
சரி அத விடு. எனக்கு யாருமே இல்ல, யாருமே இல்லனு சொல்லிட்டு யாரோடயும் பேசாம உன்ன நீயே Isolate பண்ணிக்கிட்டா கடைசி வர யாருமே இல்லாம தான் இருக்கணும்.அம்மா, அப்பா, காவ்யா எல்லாரும் இருந்தாங்க. ஆனா இப்போ இல்ல. அந்த Incident நடந்தே ரொம்ப வருஷம் ஆச்சு. இன்னும் அதே புள்ளில நின்னுட்டு அத தாண்டி வர மாட்டேன்னா எப்டி?
என்னால முடியல வருண். என்ன சுத்தி இருக்குற எதுவுமே என்னோடதுன்ற Feel வர மாட்டேங்குது. நா Try பண்ணாம இல்ல. எல்லோரும் போல சகஜமா இருக்கணும்னு நா எவ்ளோ Effort போட்டாலும் என்னால அப்டி இருக்க முடியல. சுஜி Force பண்ணானு Counseling கூட போனேன். ஆனா என்னால என்ன மாத்திக்க முடியல.
திரும்பவும் விம்மினாள். குடும்பத்தை இழந்து விட்டு அனாதரவாய் இருந்தவளிடம் கொஞ்சம் பாசம் காட்டியிருந்தாள் கூட இன்று இந்த நிலமைக்கு வந்திருக்க மாட்டாள். சின்ன பெண், அவளை அவள் அத்தை கொஞ்சம் கனிவாய் நடத்தி இருக்கலாம்.
அவள் கையை பிடித்திருந்த தன் கையை எடுத்து அவளை தன்னோடு அணைத்தான் வருண். அவன் அணைப்பு அவளை என்ன செய்ததோ அவன் சட்டையை இறுக்கமாய் பற்றிய படி அழுது தீர்த்தாள். அழுது ஓய்ந்து அவளாக விலகும் வரை அவன் அப்படியே இருந்தான்.
வருணிடம் இருந்து விலகி அமர்ந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, இழுத்து மூச்சு விட்டு தன்னை அமைதி படுத்திக் கொண்டாள். இரண்டு நிமிட அமைதி.
"சரி கெளம்பலாமா? " என்றதும் அவளும் தலை ஆட்டி விட்டு எழுந்து நடந்தாள். காரை நேராக ஹோட்டலில் விட்டவன் இருவருக்குமாய் ஆர்டர் செய்தான். இரண்டு வாய் சாப்பிட்டவள், எழுந்து கை கழுவப் போக அவளை தடுத்து மீண்டும் அமர வைத்தவன், ஏதேதோ சொல்லி அவளை சாப்பிட வைத்தான். இறுதியாய் ஹாஸ்டலில் இறக்கி விட்ட போதும் அவளை விட்டுப் போக மனமே இல்லை.
எதையும் யோசிக்காம தூங்கு. காலைல நானே வந்து கூட்டிட்டு போறேன். Good night.
திவ்யா தலையை மட்டும் ஆட்டி விட்டு உள்ளே போனாள். அவள் அவன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவன், அவள் உள்ளே சென்று விடவும் வீட்டுக்கு கிளம்பினான்.
வருண் கார் அந்த Compound ஐ அடையும் முன்னரேஅங்கே அவனுக்காக இரண்டு பேர் காத்திருந்தார்கள். Formal உடையில் அதாவது வேலை விட்டு நேராக இருவரும் அங்கேதான் வந்திருக்க வேண்டும்.
"வாங்கடா, என்ன இந்த நேரத்துல? " காரில் இருந்து இறங்கியவாரே வருண் கேட்க,
"உன்ன பாக்க தான் மச்சி " சாதாரணமாய் பதிலளித்தான் பைக்கில் சாய்ந்து நின்றிருந்தவன்.
"அதுக்கு ஏன்டா வெண்ணைங்களா இப்டி வந்து நின்னுட்டு இருக்கீங்க.? வர்ரதுன்னா ஒரு போன் பண்ணி கேக்க வேண்டியது தான! Dinner க்கு ரோஹினி வீட்டுக்கு போயிருந்தா வர Late ஆகிருக்கும்."
"அதான் ஹோட்டல்ல தின்னுட்டு வந்துட்டியே, நேரா இங்க தான் வருவன்னு தெரியும். " வாசலில் அமர்ந்திருந்தவன் சொல்லிய படி எழுந்து நின்றான். லேசாக முறைத்து தான் பார்த்தான்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வருண் கதவை திறக்கும் போதே பைக்கில் வந்து இறங்கினான் மூன்றாமவன்.
"இந்த மூனு நாதாரிங்களும் எதுக்கு ஒன்னா வந்திருக்கானுங்க. ஏதோ சரியில்லயே " வருணுக்கு உள்ளுக்குள்ளே அபாய மணி சைலன்டாய் அடித்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும் அடுத்த மூவரும் சோபாவில் அமர, மூவரையும் சந்தேகமாய் பார்த்த படி நின்றான் வருண்.
Take your seat Mr Varun.
"டேய் என்னங்கடா வந்ததுல மூனு பேரும் மொறச்சிட்டு நிக்கிறீங்க? " பொறுமை இழந்தவனாய் வருண் கேட்கவும்,
"எங்கடா போய்ட்டு வர? " என்றான் மூன்றாவதாய் வந்தவன்.
"வேற எங்க, Office க்கு தான் " கூலாக சொல்லி விட்டு அமர்ந்தவனை,
"அடிங்... கொய்யால " சோபாவில் இருந்த குஷனை தூக்கி வருண் மேல் வீசினான் ஒருவன். அடி வாங்கி விட்டு விழித்தவனுக்கு, அப்போது தான் உறைத்தது இவர்களின் நடவடிக்கைகளுக்கான காரணம்.
டேய் என்னங்கடா? என்ன ஹோட்டல்ல பாத்தீங்களா?
இல்ல, அதுக்கு முன்னாடி பீச்லயே பாத்தேன். நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தத.
யாரு ரொமான்ஸ் பண்ணா? டேய் எருமைங்களா, அவ என் Friend டா .
"First ராகேஷ் போன்ல சொல்லும் போது நானும் அப்டி தான் நெனச்சேன். அப்றம் ஹோட்டல்ல நீ ஊட்டி விடாத கொறயா சாப்புட வெச்சியே... அப்ப தான் confirm ஆச்சு"
"ஆமாடா, இதுல அந்த பொண்ண ஹாஸ்டல்குள்ள அனுப்ப, என்னவோ Australia அனுப்புற மாரி சீன் வேற "
அடப் பாவிங்களா? பீச், ஹோட்டல்ல இருந்து ஹாஸ்டல் வரயும் Follow பண்ணீங்களா?
"பின்ன, ரூல் போட்ட நீயே அத மீறினா? பாவி ... நம்ம கேன்க்ல எல்லாரும் சிங்கிளா தான் இருக்கணும்னு, நா கஷ்டப் பட்டு கரெக்ட் பண்ண ராஜி ய என்ன அண்ணானு கூப்ட வெச்சவன் தானே நீ! " ராகேஷ் உணர்ச்சி வேகத்தில் பேச, அந்த சம்பவம் நினைவில் வர மற்ற மூவருமே சிரித்தார்கள்.
"டேய் சிரிக்காதீங்கடா, எனக்கு பத்திகிட்டு வருது. " ராகேஷ் முறைத்தான்.
"We need more emotion டா, அவன் ராஜிய மட்டுமா உன்ட இருந்து பிரிச்சான்.அஞ்சலி, நிஷா, சுபா, கயல், ரம்யா, தீபிகா ..." அவன் சொல்லிக் கொண்டே போக,
"சூப்பர்டா சிவா List பெருசா இருந்தாலும் ஒரு நேம் கூட மிஸ் ஆகாம சொல்ற" சிரித்துக் கொண்டே இருவரும் ஹைபை அடித்துக் கொள்ள,
"டேய் அகில், அவன Enquiry பண்ண வந்தா, மூனு பேரும் என்ன வெச்சி ஓட்டிட்டு இருக்கீங்க. " ராகேஷ் சொல்லவும் மீண்டும் கவனம் வருண்மேல் திரும்பியது.
"டேய் அவ உண்மைலயே என் Friend டா, 10th வரைக்கும் ஊர்ல ஒன்னா தான் படிச்சோம். அவ family ல எல்லாருமே Accident ல இறந்துட்டாங்க. அப்றம் அவள அவ மாமா கூட்டிட்டு போய்ட்டாங்க. ரொம்ப வருஷம் கழிச்சி அவள இங்க மீட் பண்ணேன். இப்ப ரெண்டு வாரமா என் Office ல தான் Work பண்றா. யாருமே இல்லாம தனியா இருருக்காடா. ரொம்ப ஒடஞ்சி போயிருக்கா ..."
வருண் சொல்லும் போதே அவன் முகத்தில் இருந்த மாறுதலை கண்டவர்கள் அதற்குப் பின் திவ்யாவை பற்றி எதுவும் கேட்கவில்லை. பேச்சை மாற்றி வேறு திசையில் கொண்டு போய் வருண், சிவா, அகில் மூவருமே ராகேஷை அப்பட்டமாய் கலாய்த்து விட்டு கடைசியாய் அவர்கள் கிளம்பிப் போக மணி பத்தை நெருங்கி இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro