Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

✨திருடியே! மேரி மீ மேரி மீ-8✨

அத்தியாயம் 8

"இவ்ளோ நேரம் எங்க போய் தொலைஞ்ச இடியட்?  ஒரு வேலை கூட ஒழுங்கா செய்ய மாட்டேங்குற?வேஸ்ட் ஃபெல்லோ உனக்கெல்லாம் எதுக்கு சேலரி?"என்று பூபதி இடம் பேசிவிட்டு தாமதமாக வந்த சீதாவிடம் சொப்னா எரிந்து விழுந்தாள்.

மற்றவர்களுக்கு கேட்கக் கூடாது என்று சொப்னா ரொம்பவே மெதுவாக பேசியதாலோ அல்லது பாட்டு சத்தத்தினாலோ என்னவோ  தள்ளி நின்ற சீதாவின் காதுகளுக்கு அவள் சொல்லியது சுத்தமாகவே கேட்கவில்லை.

"மேடம் நீங்க சொன்னது கேட்கல? என்ன சொன்னீங்க?"என்று சீதா காதை அவள் அருகே கொண்டு வர,

மற்றவர்களின் முன், மீண்டும் தான் திட்டியதை திரும்ப சொல்ல முடியாமல், "அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நகர்ந்து போ.. ரொம்ப ஸ்வட்டாகுது டச் அப் பண்ணி விடு, அப்புறம் என்னோட துப்பட்டா கழுத்த ஒட்டி இருக்கு அதையும் கொஞ்சம் சரிபடுத்தி விடு"என்றதும்,"ஓகே மேடம்"என்ற சீதா முதலில் துப்பட்டாவை சரிப்படுத்தி விட்டவள் அடுத்து டச்சப் செய்ய தெரியாமல் சற்று அழுத்தமாக அவளின் முகத்தை துடைக்க ஆரம்பிக்க..

"ஸ்ஸ்ஆஆ ஏய் ஸ்டுப்பிட் மேக்கப்ப லைட்டா டச் பண்ணு இப்படி அழுத்தி தொடச்சு ஸ்மச் பண்ணிடாத.."என்று மெதுவான குரலில் சொப்னா கூறியது இம்முறை சீதாவிற்கு நன்றாகவே தான் கேட்டது. ஆனால் இம்முறையும் கேட்காதது போல், "திரும்ப சொல்லுங்க மேடம் விளங்கள" என்று அவள் கேட்க, மற்றவர்கள் முன்னால் திட்டவும் முடியாமல் கோபத்தை தனக்குள் விழுங்கவும் முடியாமல் தவித்த  சொப்னா அவளை எரிக்காத குறையாக பார்த்தவள், "நீ போயிட்டு நேத்து எங்கேஜ்மென்ட்ல டச் பண்ண பொண்ண வர சொல்லு"என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,
"ஓஓ‌ சரிங்க மேடம்" என்று நல்ல பிள்ளை போல் பவ்யமாக சொன்ன சீதா அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் செல்வதை பார்த்திருந்த சொப்னா," இருடி பங்க்ஷன் மட்டும் முடியட்டும் உன்னை என்ன பண்றேன்னு பாரு"என்று மனதிற்குள்  வன்மமாக நினைத்தவள் அப்போதுதான் கவனித்தால் மெஹந்தி போடும் பெண் அவளின் கைகளில்  யாதவ் பெயரின் முதல் எழுத்தான 'Y'என்ற எழுத்தை எழுத வருவதை , அவசர அவசரமாக  'J' என்று மாற்ற சொன்னாள் அவள்... அவளின் உறவினர் பெண்கள் சிலர் ஏன்? என்று கேட்க, "நா ...நான் அவர ஸ்பெஷலா ஜித்துனு தான் கூப்டுவேன்" என்று வெட்கத்துடன் தலை குனிந்தவாறு அவள் சொல்ல, யாதவ்வின் முழு பெயர் யாதவ் ஜிதேந்திரன் என்பதால் சொப்னா சொல்லியதை நம்பியவர்கள் அதை மேலும் தோண்டி துருவவில்லை.

ஆனால் அப்பொழுது தன் வருங்கால அண்ணியான சொப்னாவிடம் ஆசையாக பேச வந்த அனன்யா அதைக் கேட்டு விட, அவளுக்கு ரொம்பவே குழப்பமாக இருந்தது. ஏனென்றால் சொப்னா அவளின் அண்ணனை 'யாதவ்' என்று அழைப்பதை பலமுறை கேட்டிருக்கிறாள்..'ஏன் அண்ணி பொய் சொல்ல வேண்டும்?'என்ற குழப்பத்துடன் அவள் சொப்னாவை பார்க்கும் பொழுது அவளின் பார்வையோ, சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதில் இருந்த ஓர் அமெரிக்கா ஆண் மகனைப்  பார்த்து கண்களாலேயே பேசி சிரித்தது போல் இருந்தது.

அனன்யாவிற்கு தான் சந்தேகப்படுவது சரியா?தவறா? என்று புரியவில்லை. கண்ணால் பார்ப்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. வாயால் பேசுவதும் பொய்யே.. தீர விசாரிப்பதே மெய் என்று தோன்ற எதற்கும் ஒரு முறை விசாரித்து தான் விடுவோமே என்று தோன்ற அந்த அமெரிக்கா ஆண்மகன் அருகே சென்றாள் அனன்யா.
அவரைப் பார்த்தாலே தெரிந்தது அவரின் வயது நாற்பதின் தொடக்கத்தில் இருக்கிறது என்று... இப்படிப்பட்ட ஒரு ஆளை தன் அண்ணியுடன் சந்தேகப்பட அவளால் முடியவில்லை.
இருந்தாலும் இது தன் அண்ணனின் வாழ்க்கை ஆயிற்றே!
என்று நினைத்தவள், அவர் அருகில் சென்று தன் பெயர் அனன்யா என்றும் 'மணமகனின் தங்கை' என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அதைக் கேட்டு அவர் அதிரவில்லை என்பதோடு அவரும் தன் பெயர் பெஞ்சமின் ஜோஸ்பர் என்றும் சொப்னா படித்த கல்லூரியில் பணிபுரியும்'ப்ரோசஸர்' என்றும் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதை கேட்டதும் அதிர்ச்சி ஆனாள் அனன்யா.
'ச்சே... எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் குரு ஸ்தானத்துல இருக்குறவங்கள போய் தப்பா நெனச்சுட்டேனே.. நல்ல வேளை இத யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்கல'
என்று நினைத்தவள்..
நிம்மதியாக,
அந்த பெஞ்சமின் என்ற நபரோ இங்குள்ள திருமண சட்டங்கள் பற்றி அவளிடம் விசாரிக்க தனக்கு தெரிந்த அளவிற்கு விளக்கி கூறினாள் அனன்யா.
அதன் பிறகு நன்றி சொல்லிவிட்டு அவர் நகர்ந்து விட,
அவளுக்கு தான் இன்னும் ஏதோ மனதிற்குள் அறுத்துக் கொண்டே இருப்பது போலவே இருக்க, யோசனையாய் நின்று கொண்டிருந்தாள்.

அப்போது யாரோ அவளின் தலையில் கொட்ட யோசனை கலைந்தவள்  நிமிர்ந்து பார்த்தாள். நின்றது வேறு யாருமல்ல பிரகாஷ் தான்.

"ஏய் குட்ட அந்த ஆளு கிட்ட எல்லாம் உனக்கு என்னடி  பேச்சு வேண்டி கெடக்கு... நீ இன்னும் சின்ன பிள்ளையா? அந்த ஆளு பார்வையே சரியில்ல"என்று  அவன் எச்சரிக்க,

ஏற்கனவே நான் நினைப்பது சரியா? தவறா? என்ற  குழப்பத்தில் இருந்த அனன்யாவிற்கு பிரகாஷின் அந்த நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை.

"உன் வேலை எதுவோ அத மட்டும் பாரு நான் யாரு கிட்ட பேசணும் பேச கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாரு மொதல? மனசுல பெரிய இவன்னு நினைப்பா.. நீ சொல்றத நான் எதுக்கு கேக்கணும்? நான் யார்கிட்ட வேணாலும் பேசுவேன்"என்று கடினமான முகத்துடன் சொன்னவள்,
"அப்புறம் தேவையில்லாம குட்ட நெட்டனு பேசிட்டு இருந்தா மண்டைய ஒடச்சிடுவேன்"என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு நகர முயல, அவளின் கைகளை இறுக்கி பிடித்தவன், "நீயும் என் அக்கா மாதிரி யாரையும் நம்பி ஏமாந்துற கூடாதுன்னு நினைச்சு தான் உன்கிட்ட வந்து சொன்னேன்.. அதுவும் உன் மேல உள்ள அக்கறையால தான்... ஆனா நீ இவ்ளோ பேசுனதுக்கு அப்புறம் இனி நீ எக்கேடு கெட்டு போனாலும் கண்டுக்க மாட்டேன்" என்று விட்டு அவளின் முகம் பாராமல் திரும்பி நடந்தான் பிரகாஷ்.

அவனின் அக்கா பாவனா இப்படி தான் தன் தோழியின் நண்பன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு வெளிநாட்டு நபரை  நம்பி நட்பாகி பின் அவனின் காதல் வலையில் விழுந்து தான்..  தன் வாழ்க்கையையும் உயிரையும் இழந்தாள் என்பது ஏற்கனவே அனன்யாவிற்கு தெரியும் தான்.. அது எவ்வளவு தூரம் அவனை பாதித்திருக்கிறது என்பது அவளுக்கு புரிய, தான் பேசியது கொஞ்சம் அதிகபடி தான் என்று நினைத்தவள், அவன் பின்னேயே சென்று மன்னிப்பு கேட்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் முறுக்கிக் கொண்டு திரிந்தான்.

எப்படியோ மெஹந்தி ஃபங்ஷன் இனிதாக நிறைவுற்றிருக்க,  மாலை நலங்கு பங்க்ஷன் இருந்தது.

அதற்குள் சீதாவும் சில விஷயங்களை விசாரித்து விட்டு தன் நண்பர்களுக்கு இரவு 1 மணியிலிருந்து 2 மணிக்குள் என்று தகவல் அனுப்பி வைத்தாள்.
 
மாலை ஆனதும் நலங்கு ஆரம்பமாக, மணமக்கள் இருவரும் மஞ்சள் நிற உடையில் ஜொலித்தனர்.

மணமக்கள் இருவருக்கும் தனித்தனியாக நலங்கு வைப்பதாக இருக்க, யாதவ் தனக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று இந்த சடங்கு தனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

தாயம்மாள் தன் பேரனிடம் போராடி பார்த்தவர் முடியாமல் போக , வேறு வழியில்லாமல் தன் மருமகள் யமுனாவையும், அனன்யாவையும் மட்டும் அவனுக்கு நலங்கு மாவு பூசி விட சொன்னார்.

அதனால் பெண் வீட்டு சொந்தங்களுக்குள் அரசல் புறசலாக மாப்பிள்ளை வித்தியாசமானவராக இருக்கிறார், விசாரித்து தான் திருமணம் செய்கிறீர்களா? என்ற மாதிரியான பேச்சு அடிப்பட ஆரம்பிக்க, இந்திரராஜன் பதறி போனார்.

பின்னே இந்த சம்மதத்தை பிடிக்கவும்.. தன் மகளை இதற்கு சம்மதிக்க வைக்கவும் அவர் பட்ட பாடு அவருக்கு தானே தெரியும்? ஏதாவது பேசி குட்டையை குழப்பவதாக இருந்தால் தயவுசெய்து வெளியே சென்று விடுங்கள் என்று நேரடியாக அவர் சொல்லிவிட அவர்களின் வாய் அடைக்கப்பட்டது.

மறுநாள் திருமணம் என்பதால் மணமக்களை விரைவாகவே ஓய்வெடுக்க சொல்லிவிட, அவர்களின் சொந்த பந்தங்களும் உறவினர்களும் கூட அன்று நாள் முழுவதும் நடந்த கொண்டாட்டத்தினால் களைப்பாக இருந்த அவர்களும் விரைவாகவே ஓய்வெடுக்க சென்று விட்டனர்.

சரியாக மணி ஒன்றை தொட, அவ்வளவு நேரம் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த சீதா எழுந்து தன் துணி பையில் மறைத்து வைத்திருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு தான் தங்கி இருந்த அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுக்காக பூபதி,கிரிஜா இருவரும் அந்த மஹாலின் மூன்றாம் தளத்தில் காத்திருக்க, அவர்களிடம் சாவியை வாங்கியவள்,
கிரிஜாவிடம் "எல்லாம் ஓகேவா? யாரும் முழிச்சி இருக்கமாட்டாங்க தான?" என்று விசாரிக்க, "சான்சே இல்ல சீட்டு எல்லாத்துக்கும் தூக்க மருந்து மிக்ஸ் பண்ண காபி டீ ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்துருக்கேன்... குட்டி புலியும் கண்ட்ரோல் ரூம் ல ரெடியா இருக்கான்..  அங்கேயும் அவனைத் தவிர மத்தவங்கல்லாம் மட்டதான்.. அதனால அவனுக்கும் பிரச்சனை இல்ல"என்று சொல்ல,

சரி என்று களத்தில் குதிக்க தயாரான சீதா கருப்பு நிற சுடிதார் வெள்ளை நிற லெக்கின்ஸ் அணிந்து குதிரைவால் போட்டிருந்தாள். ஆனால் இப்பொழுது அவள் திருட போவதால் கைரேகை எங்கும் விழாதவாறு இருப்பதற்காக கிளவுஸ் அணிந்தவள் முடியை சுருட்டி கொண்டை இட்டு, முடியை மறைப்பதற்காக பஞ்சாபி ஸ்டைலில் ஹெட் பாண்ட் போட்டு முகத்திற்கு மாஸ்க் அணிந்ததோடு மிகப்பெரிய கம்பளி போர்வையால் உடல் முழுவதையும் மூடினாள்.

பூபதி அவள் கிளம்பும் நேரத்தில் "ஆல் தி பெஸ்ட் சீத்து.. வென்று வா" என்று சொல்ல, "அடச்சீ ப்பே" என்று சொன்னவள்,
கிரிஜா பூபதி இருவரையும் யாரும் வந்தால் விசில் அடித்து சிக்னல் கொடுக்க சொல்லிவிட்டு
சென்றது மூன்றாம் தளத்திலிருந்த சொப்னாவின் தந்தை இந்தரராஜனின் அறைக்கு தான்..

பூபதி தந்த சாவியை கொண்டு கதவை மெதுவாக திறந்து விட்டு உள்ளே சென்ற சீதா, பார்த்தது சோபாவில் அமர்ந்த நிலையில் தூங்கி இருந்த இந்திராராஜனையும், மெத்தையில் தூங்கி இருந்த அவரின் மனைவியையும் தான்.

இந்திரராஜன் சோபாவில் அமர்ந்தவாறு லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே தூக்கம் மருந்தின் வீரியத்தால் தூங்கி இருந்தார் போல...

சீதாவின் மனதிற்குள் சிறு பயம் ஒருவேளை அவர் தூங்கவில்லையோ என்று? அதனால் எதற்கும் சோதித்துப் பார்ப்போம் என்று அவரின் முன்னே நின்றவள் கையை அப்படியும் இப்படியுமாக ஆட்டி டான்ஸ் ஆடி காட்ட, அவர் அசையவில்லை.

"அப்பாடி ஆளு அப்போ நெசமாவே மட்ட தான்"என்ற முடிவிற்கு வந்த சீதா அப்பொழுதுதான் கவனித்தால் அவரின் திறந்திருந்த லேப்டாப்பில் ஏதோ பலான படம் ஓடிக் கொண்டிருந்ததை..

"அடச்சே டேய் நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாடா? நாளைக்கு பொண்ணோட கல்யாணத்தை வச்சிக்கினு இன்னைக்கு உக்காந்து என்ன எழவுடா பாக்குற கிழட்டு பயலே.. ஒருத்தனுக்கு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஆயிரத்தெட்டு செட்டப் கேக்குதாம்"என்று பயங்கர கடுப்புடன் இந்திரராஜனை வறுத்தெடுத்த சீதாவிற்கு அந்த கருமத்தை ஒரு நொடி பார்த்ததற்கே வாந்தி வருவது போல் இருந்தது.
முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், வந்த வேலையை ஆரம்பித்தாள்.

முதலில் அறை முழுவதையும் நோட்டமிட்டவள், அவர்களின் உடைகள் இருந்த சூட்கேஸ் எல்லாவற்றிலும் தேடி பார்த்தவள், தான்  எதிர்பார்த்தது கிடைக்காததால், அந்த அறையில் இருந்த வாட்ரோப்பை திறக்க முயல,
முடியவில்லை அவளால்.. அது நன்றாக பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.

"இதுக்கு சாவி எங்கன போய் தேட?"என்று நினைத்தவள் இந்திரராஜன் பாக்கெட்டில் இருக்குமோ? என்ற சந்தேகத்துடன், அவரைப் பார்க்க, அடுத்த நொடியே தன் எண்ணத்தை மாற்றி "இல்ல இல்ல எப்பவுமே இதுல்லாம் குடும்ப இஸ்திரி பொறுப்புல தானே இருக்கும் .."என்று பார்வையை இந்திரா ராஜனின் மனைவி பக்கம் திரும்ப, அவள் நினைத்தது போலவே அது அவர் படுத்திருந்த தலையணைக்கு கீழே தான் இருந்தது.

சாவியை மிக கவனமாக எடுத்தவள் வாட்ரோபை திறக்க, அவள் நினைத்து வந்த பொருட்கள் எல்லாம் அங்கே தான் இருந்தது.

பின்னே அவை எல்லாம் வைர நகைகள்  ஆயிற்றே!

ஆனால் சேட்டு சொன்னதை விட ரொம்பவே கம்மியாகத்தான் நகைகள் இருந்தது. ஒருவேளை தன் மகளுக்கு குறைவாக கொடுக்க நினைத்திருக்கலாம் என்று நினைத்தவள் இருப்பதை மட்டும் எடுத்துவிட்டு அதை போல் போலியாக செய்திருந்த நகைகளை அதற்கு பதிலாக வைத்து விட்டு தான் கலைத்து போட்ட அனைத்து பொருட்களையும் இருந்த இடத்தில் மிகக் கவனமாகவே எடுத்து வைத்தவளின் பின்னே ஏதோ  நிழல் ஆடுவது போல் இருக்க, சட்டென்று திரும்ப முயன்ற சீதாவை திரும்ப விடாமல் வளைத்து பிடித்த ஒரு இரும்பு கரம் அவளின் பின் மண்டையில் துப்பாக்கியை வைத்தது.

கணபொழுதில் நடந்துவிட்ட நிகழ்வால் இதயம் உறைந்து போய் உணர்வற்று நின்ற சீதாவிடம்
"வாட் ஆர் யூ திங்கிங்? இஸ் இட் தட் ஈஸி ஃபார் யூ டு ஸ்டீல் அவே? அவ்வளவு சீக்கிரம் திருடிட்டு நீ எஸ்கேப் ஆயிடுவியா?நீ யாருன்னு முதல்ல சொல்லு? நீதான் அந்த சீட்டு வா?"என்று அவளின் பின் நின்ற உருவம் உறுமலுடன் கேட்க,

பயத்தில் மூளை மழுங்கி போய் இருந்த சீதாவிற்கு அந்த குரல் பரீட்சமானதாக இருந்தாலும் அப்போதைக்கு அதை யார்? யோசிக்க முடியாமல் தன் பின்னால் நின்ற நபரிடம் இருந்து தப்பிக்க வழி தேடினாள்.

முதலில் கண்களை மூடி தன் மனதை சாந்தப்படுத்தியவள், தன் கைகளில் இருந்த பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு பின்னால் நின்றவனின் கால்களை தன் பலம் கொண்ட மட்டும் நன்றாக மிதித்து அந்த வலியில்  அவன் தடுமாறும் நேரத்தை உபயோகப்படுத்தி அந்த அறையை விட்டு வெளியேறி கதவை தாள் போட்டுவிட்டு தப்பிக்க வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் வகுத்தவள்,

அதன்படியே அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது, மனதை ஒருமுகப்படுத்தி விட்டு கண்களை திறந்தவள், அவனின் காலை தன் மொத்த பலத்தையும் திரட்டி மிதித்து விட்டு அவன் தடுமாறிய  பொழுதில் கதவு வரை வந்து விட்ட சீதா, வெளியே அடியெடுத்து வைக்க முயன்ற அடுத்த நொடி அவள் தன் மேலே சுற்றி இருந்த கம்பளி போர்வையாலேயே தடுக்கி கீழே விழுந்திருந்தாள்.

தலை குப்பிற கிடந்தவளின் சிறு மூக்கு வேறு விழுந்த வேகத்தில் உடைந்து ரத்தம் வந்து கொண்டிருக்க,

'என் கதை முடியும்
நேரம் இது
என்பதை சொல்லும்
ராகம் இது'என்று அவள் என்றோ கேட்ட பாடல்,
அந்நேரம் பார்த்து மனதிற்குள் ஓடி அவளை மேலும் டேமேஜ் ஆக்க,

தன் முகத்திற்கு நேராக கை நீட்டி,"என்னலா கலாய்க்க வேற யாரும் வேணாம் நானே போதும் த்தூ த்தூ .."என்று தனக்குத்தானே காரித் துப்பி கொண்டாள்.

கீழே விழுந்திருந்தவளை மீண்டும் வந்து பிடித்து விட்டான் யாதவ்.

ஆம் யாதவ்வே தான்..

மாலை நலங்கு பங்க்ஷனில் சிறிது நேரம் மட்டுமே பங்கு பெற்றவன், கம்பெனியில் ஏதோ பிரச்சனை என்று பிரகாஷிடம்  மட்டும் சமாளிக்க சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டான். பிரகாஷ் தான் அவனுக்கு தலைவலியாக இருப்பதால் அறையில் ஓய்வு எடுக்கிறான் என்று சொல்லி அனைவரையும் நம்ப வைத்தது.

அவன் திரும்பி வந்த போது  நேரம் பதினொன்றை தொட்டிருந்தது.
இருந்தாலும் மீண்டும் அறைக்குள் சென்று  முடங்க மனம் இல்லாமல் , நேற்றைக்கு போலவே அதே இறுதி மாடியில் இருந்த பால்கனிக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்தவன்,
லிப்ட் வழியாக கீழே வரும் பொழுது மூன்றாம் தளத்தில் சந்தேகப்படும் படியாக இருவர் நிற்பதை பார்த்தவாறு தான் கீழே சென்றான்.

ஆனால் கீழேயும் வழக்கத்திற்கு மாறாக ஒரு பாடி கார்ட்ஸ் கூட கண்ணில் படவில்லை.. அதோடு ஓரிருவர் கண்டபடி அங்கேயும் இங்கேயும் தூங்குவது போல் கிடக்க, யாதவ் சந்தேகம் அடைந்தான்.

தன் அறைக்கு சென்று பிரகாஷை எழுப்ப, அவனும் ஏதோ மயக்கத்தில் கிடப்பது போல் அசைவே இல்லாமல் கிடந்தான்.  அடுத்ததாக பெற்றோர் அறைக்கு சென்று பார்க்க, அவர்களின் நிலையும் அப்படியே இருக்க..
யாதவ்விற்கு அப்போதுதான் பிரச்சனையின் தீவிரம் புரிய,  எப்போதுமே தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் லைசன்ஸ்ட் துப்பாக்கியை தன் அறைக்கு சென்று எடுத்துக் கொண்டவன், மூன்றாம் தளத்தை நோக்கி வந்தான்.

மறைந்திருந்து மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்று கவனித்தான். அதிக பேர் என்றால் அவனால் கண்டிப்பாக தனியாக சமாளிக்க முடியாது போலீசை கூப்பிட்டாக வேண்டுமே?
நல்லவேளையாக நின்றது இரண்டு நபர்கள் தான்.. அந்த இரண்டு பேரில் திடகாத்திரமான ஆண் ஒருவனும் அதே போல் கொஞ்சம் கட்டுமஸ்தான பெண் ஒருத்தியும் இருக்க,
அவர்கள் இருவரும் பேசியதில் இருந்து சீட்டு என்ற ஒருவன் இந்திரராஜன் அறைக்குள் நகைகள் திருட சென்று இருப்பது யாதவ்விற்கு   புரிய,
மௌனமாக அவர்களின் பின்னே சென்றவன் சிறுவயதில்
தன் தாத்தாவிடம் கற்று வைத்திருந்த வர்மக்கலை  உதவியால் சத்தமே வராதவாறு இருவரையும் சில நொடியில் வீழ்த்தி இருந்தான்.

பெரும்பாலும் அவன் அந்த கலையை அவ்வளவு சீக்கிரம் உபயோகிக்க மாட்டான் தான் ஆனால் இன்றோ மண்டபத்தின் இத்தனை பாதுகாப்புகளையும் மீறி.. தன்னிடத்திற்கே  வந்து  திட்டம் போட்டு செயல்பட்ட திருடர்களை விடுவதா? என்ற கோபத்தில் தான் இதை செய்திருந்தான்.

அடுத்ததாக சீட்டு என்ற திருடனை பிடிக்க இந்திரராஜன் அறைக்குள் வந்தவன் பார்த்தது என்னவோ குல்லா போட்டு ஒரு போர்வையால் உடலை சுற்றி இருந்த ஒரு உருவத்தை தான்... அதுதான் அந்த சீட்டு என்ற திருடன் என்பதை புரிந்து கொண்ட யாதவ்
மிகவும் கவனமாக சத்தம் வராதவாறு  பின்னே நின்று துப்பாக்கியால் மிரட்டியவனுக்கு, ஏனோ வெளியே நின்ற மற்ற இருவரை போல் இந்த உருவத்தை தாக்க தோன்றவில்லை.

ஆனால் அந்த உருவமோ அவனை தாக்கி விட்டு தப்பிக்க முயன்று... தடுக்கி கீழே விழுந்து.. மூக்கை உடைத்துக் கொண்டு இதோ மீண்டும் அவன் கையிலேயே சிக்கிக் கொண்டது.

பின்பக்கம் நின்று அந்த உருவத்தை பிடித்திருந்தவன்
" யூ சீட்...என்னையே அடிச்சுட்டு தப்பிக்க பாக்குறியா? ஹொவ் டேர் யு.."என்று உறுமியவன் கோபத்தில் அந்த உருவத்தின் குல்லாவை கழற்ற அந்த உருவத்தின் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது அப்போதுதான் உணர்ந்தான் அந்த உருவம் ஒரு பெண் என்பதையே!

அதே நேரம் சீதாவும் இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்து பெருமூச்சுடன் திரும்ப இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியானார்கள்.

யாதவ்,"ஏய் நீ என்ன நேத்து நைட் அட்டாக் பண்ணவ தான?"என்று ஒரு விதமான அதிர்ச்சியுடன் கேட்க,

மூக்கில் ரத்தம் வடிய நின்று கொண்டிருந்த சீதாவோ, பதில் சொல்லாது அரண்டு போய் நின்றாள்.
போயும் போயும் இவன் கையிலா வந்து மாட்ட வேண்டும் என்று...

ஏற்கனவே நேற்று இல்லாத சேட்டைகள் செய்து அவன் மீது மயக்க ஸ்பிரே அடித்து எஸ்கேப் ஆனவள் ஆயிற்றே.. மீண்டும் அவனின் கைகளில் திருடியாக அகப்பட்டால் அவளின் நிலை?

"ஹேய் உன்ன நா அட்டாக்கர்னு மட்டும் தான் நினைச்சேன் நீ ஒரு திருடியா? இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.."என்று கண்களில் ஆச்சரியத்தோடு யாதவ் சொல்ல, சீதா கலக்கத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இது மட்டும் தானா? இல்லனா கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல்னு வேற ஏதாவது சைட் பிஸ்னஸ் வச்சிருக்கியா?"என்று அவன் நக்கலாக கேட்க,

அதற்கு, ஏதோ பதில் சொல்ல வாயை திறந்த சீதாவிற்கு திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வந்து விட அவள் மயங்கி சரிந்தாள்.

சீதா மீண்டும் மயக்கம் தெளிந்து எழும்பொழுது யாதவ்வின் மடியில் படுத்து இருப்பதை உணர்ந்தாள்.

'இந்த விளங்காதவன் மடியிலயா படுத்திருந்தோம்' என்று நினைத்துவள் பட்டென்று எழுந்து அமர, "ஹே தலையை கொஞ்ச நேரம் தூக்கி வச்சுக்கோ இறக்கி வைக்காத.. இப்போதான் பிளட் வர்றது ஸ்டாப் ஆகிருக்கு" என்றான் யாதவ்.

அவளின் மூக்கில் வந்து கொண்டிருந்த ரத்தம் அவனின் கைக்குட்டையால் துடைக்கப்பட்டு இருந்தது.

மூக்கில் இருந்து அதிகப்படியான ரத்தம் வந்ததால் தான் அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது போலும்.. ஏற்கனவே சிறிது நாட்கள் முன்னே தானே கையை அறுத்துக் கொண்டு அதிக ரத்தத்தை இழந்திருந்தாள். மீண்டும் இரத்தத்தை இழந்தால் அவள் உடம்பு தாங்குமா என்ன?

சீதா அவன் சொன்னது போலவே சிறிது நேரம் தலையை தொங்க போடாமல் அன்னாந்து பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், ஓரளவு தெளிந்தவுடன் "தேங்க்ஸ்"என்று சொல்ல,

"ஓஹோ திருடி மேடம் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லலாம்  தெரியுமா? உங்களுக்கு மயக்க மருந்து அடிக்கவும்.. என்ன அடிக்கவும்.. நகையை அடிக்கவும் தான் தெரியும்னு நெனச்சேன்"

"இதோ பாரு சாரே நேத்து என்னாண்ட நீ தப்பா நடந்துகிட்ட அதனால நான் அப்படி பண்ண வேண்டியதா போச்சு‌.."

"என்ன தப்பா நடந்துகிட்டேன்?"

"என்னாண்ட உதட்டுல ஏதோ பண்ணியே?"

"அதான் என்ன பண்ணேன்?"

" அது... அது வந்து.. அசிங்கமா எச்சி பண்ணல?"

"அதுக்காக என் மேல கொசு மருந்து ஸ்பிரே மாதிரி ஏதா ஒரு ஸ்ப்ரே அடிச்சுட்டு போயிடுவியா? ஃபர்ஸ்ட் வந்து என்ன அட்டாக் பண்ணது யாரு நீதான?"

"நீ தான் சார் மொதல்ல என் தோஸ்து மேல கை வச்ச, அதுக்காண்டி தான் உன் மேல பூரான் போடணும்னு வந்தேன்.. அதுவும் குட்டியா தான்.. ஆனா நீ என்னாண்ட அப்படி நடந்து கிட்டது தப்பு தான்" என்று சீதா கோபத்துடன் சொல்ல,

"யாரு உன்னோட தோஸ்து வெளியே நின்னவங்களா?"என்று கேட்டான் யாதவ்.

ஆமாம் என்று தலையசைத்த சீதாவிற்கு அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் வெளியே காவலாக இருந்தார்களே இவன் எப்படி உள்ளே வந்தான்? என்று தோன்ற,

"கைல கன்னெல்லாம் வச்சிக்கின்னு வந்திருக்கியே.. அவங்க ரெண்டு பேத்தையும் ஒன்னும் பண்ணிலியே?" என்று சிறு நடுக்கத்துடன் சீதா கேட்க

"அவங்க உயிரோட தான் இருக்காங்க.." என்று மட்டும் சொன்னான் யாதவ்.

ஒரு நீண்ட பெருமூச்சுடன்,

"இங்க பாரு சாரே என்ன வேணா போலீஸான்ட புடிச்சு குடுத்துக்கோ... நான் தான் இங்க திருட பிளான் போட்ட மாஸ்டர் மைண்ட்டு.. அவங்கள மட்டும் விட்டுடு சாரே"என்றாள்.

"நான் எதுக்கு நீ சொல்றத கேட்கணும்?" என்று யாதவ் தனக்கே உரிய திமிருடன் கேட்க,

"நான் தான சாரே உன்ன அடிச்சது.. நகையை அடிச்சது எல்லாம்.. அப்ப நான்தானே பனிஷ்மென்ட்டும் அனுபவிக்கணும்." என்று சீதா பாவமாக சொல்ல,

"அது சரிதான் ஆனால் உன்னோட ஃப்ரெண்ட்ஸ்சும் தப்பு பண்ணி இருக்காங்க தானே? அவங்கள எதுக்கு நான் போலீஸ் கிட்ட சொல்லாம விடனும்? அதோட இதெல்லாம் செய்ய சொல்ல என்கிட்ட உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? கண்டிப்பா உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்"என்றான் யாதவ்.

"எனக்கு உன்னாண்ட என்ன சொல்லனு... என்ன பேசணும்னு ஆத்தா மேல சத்தியமா தெரியல ..நாங்கல்லாம் மெத்த படிச்சவங்க இல்ல சாரே.. ஏழைங்க.. வயித்து பொழப்புக்காக ஏதோ சின்ன சின்ன திருட்டு பண்ணிட்டு இருக்கோம்.. இதான் ஃபர்ஸ்ட் டைமு இவ்ளோ பெரிய சம்பவம் பண்றது.. பூவு சொல்லுச்சு வேணாம் வேணாம்னு நான் தான் கேக்கல... இந்த நகையை சேட்டாண்ட சேர்த்துட்டா போதும் பூவு தங்கச்சி கல்யாணத்துக்கு தேவையான பணம் உஷாராய்டுனு நெனச்சேன்.. எல்லாம் போச்சு... எல்லாம் என்னால தான்.. நீ சரியான வேஷ்டு சீட்டா"என்று அழுது கொண்டே மடை திறந்த வெள்ளம் போல் உண்மையை எல்லாம் உளறி கொட்டிய சீதாவை பார்த்து யாதவ் சிரித்தான்.

"என்ன சாரே நான் அழுவுறத பாத்து சிரிக்கியா? ஏழைங்க அழுதா பணக்காரங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும்"என்று அருவி போல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சீதா கோபப்பட,

"நீ ஒன்னே ஒன்னு பண்ணினா போதும்.. உன் பிரண்ட்ஸ் ஜெயிலுக்கு போக வேண்டாம்.. இந்த திருட்டு சம்பவமும் கூட வெளியே தெரியாது... ஏன் இந்த நகையை கூட நீயே வச்சுக்கலாம்"என்று யாதவ்
அதே வசீகர புன்னகையுடன் சொல்ல,

சீதாவிற்கு அவன் முந்தைய முத்த சம்பவம் ஞாபகம் வர,

"ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல.. இதுக்கெல்லாம் கட்டுப்பட மாட்டா இந்த..சீட்டர் சீதா"

"எதுக்கு கட்டுப்பட மாட்ட?"என்று யாதவ் புரியாமல் கேட்க,

"நேத்து எச்சு பண்ண மாதிரி என்ன எச்சு பண்ணப்பாக்கியா? இந்த வேலல்லாம் என்னான்ட காட்டாத..  சீதா டா.. நெருப்புடா ..இப்பவே போலீஸ கூப்டு நா ஜெயிலுக்கே போறே.."என்றதும்,
யாதவ் கோபமாக,
"வாட் நான்சென்ஸ் யுவர் டாக்கிங் அபௌட் மீ? டூ யூ ஹேவ் எனி ப்ரைன்.. ஐ அம் நாட் தட் கைன்ட் ஆஃப் பெர்வர்ட்டட் பெர்சன்... ஐ திங்க்  யூ ஹேவ் எ மிஸ்அண்டர்ஸ்டான்டிங்..."என்று ஆங்கிலத்தில் படபடவென்று பொரிய,

"ஹே நிறுத்து ...சார் நிறுத்து... இவ்ளோ இங்கிலீஷ் பேச தெரிஞ்சு உனக்கு அதை யாராண்ட பேசணும்னு தெரியல்ல பாத்தியா? எனக்கு நீ சொன்ன ஒன்னுமே புரியல.. தமிழ்நாட்ல இருந்துட்டு தமிழ்ல பேசுங்க சாரே.. ஏன் தேவையில்லாத இந்த ஆணி இங்கிலீபீஸு?"

"ஓ காட்ட்! ..சரி.. தமிழ்லயே சொல்றேன்...அதாவது நா வந்து நீ நினைக்கிற மாதிரி எந்த தப்பான விஷயத்துக்காக அப்படி சொல்லல... நான் அப்படிப்பட்ட ஆளும் இல்ல.."

"அப்போ எப்படிப்பட்ட ஆளு?"என்று சீதா கேட்ட,

"நான் நல்ல குடும்பத்து பையன்.."

"நீ நல்ல குடும்பத்து பையனாவே இருந்துட்டு போ சாரே..அதுக்குனு நான் இப்போ என்ன தான் பண்ணனும்ங்கற?"என்று சீதா கேட்க

"நாளைக்கு என்ன மேரேஜ் பண்ணனும்..."என்றான் யாதவ் சீரியசாக,

"ஏத?.."
தன் காதால் கேட்டது சரி தானா? என்று உறைந்து நின்றாள் சீதா.

தொடரும்...

தங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன் நான்...😊❤️
Happiee reading✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro