Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 45

இன்னும் அதிர்ச்சி தாளாமல் சஹாத்திய சூரர்களும் யாளி வீராங்கனைகளும் நாகனிகளும் அவளை பார்த்து கொண்டிருக்க உடன் மயூரன் பிறை நீலி மற்றும்சேவனும் வாயை பிளந்து கொண்டு பார்க்க ரக்ஷவ் தான் அனைவருக்கும் மேலாக திறந்த வாயை மூடாமல் இன்னும் பார்த்து கொண்டிருந்தான்...

தேவதைலோகத்தில் என்ன சொல்லி சமாளிப்பதென தெரியாமல் போராளி தீராதீ முளிக்க ... அவளுடன் நீலியின் பெற்றோரும் அபி மற்றும் அவன் தங்கைகளான மாயா மற்றும் ரக்ஷாவும் பதட்டமாய் தீராதீயை பார்த்து கொண்டிருந்தனர்

மற்ற ஐவர் மித்ரா மயூரி ஹர்ஷன் அர்ஜுன் மற்றும் ஷேனா குழப்பமாய் பார்த்து கொண்டிருந்தனர்...

ஆதியன்த் : ஹே பாப்பா நீயா தீராதீ.. என இவன் உறுதி படுத்தி கொள்வதற்காய் கேட்க

தீராதீயும் தலையாட்டி " ஆமா நான் தான் ... " என கூறியவள் திடீரென " ஆமா நீங்க எப்போ அங்க வந்தீங்க... சொல்லவே இல்ல " என உற்சாகமாய் கேட்க அவளை ஓரக்கண்ணால் முறைத்த சித்தார்த்

சித்தார்த் : நாங்க கவர்ரதுக்கு முன்னாடி வர நீ இங்க தான இருந்த என சந்தேகமாய் கேட்க தானே வாயை குடுத்து இவனிடம் மாட்டி கொள்கிறோமே என தீராதீ முளிக்க இவள எப்டி அவங்களுக்கு தெரியும் என ஷேனா புருவத்தை சுருக்கினான்...

ருத்ராக்ஷ் : நீ அங்க என்ன செய்ர... என கேட்ட உடனே ஜொய்ன் என பறந்து வந்த சமர் " இதென்ன வினா... எங்க தர்ம ராஜ்ஜியத்து பெண் வீராங்கனை தளபதியா பொருப்பேற்ற பிறகு இங்க தான இருக்கனும் " என அபியின் ஃபோன் கேமராவில் எட்டி கொண்டு வந்து நிலமை புரியாமல் எரியும் தீயில் எண்ணையை ஊற்றி இன்னும் அவர்களின் அதிர்ச்சியை ஏற்றினான்...

ருமேஷ் விதுஷ் : ஏதெ... தளபதியா.. இவளா என கத்தவும்

" ஏன் டா கத்துரீங்க... நாளாம் தளபதியாக கூடாதா " என தீராதீயும் கண்களை சுருக்கி சினுங்கினாள்...

ரக்ஷவ் : ஹே மொதல்ல நிறுத்துங்கப்பா.. பாப்பா நீ எப்டி அங்க போன... தெளிவா சொல்லு...

இவனின் பாப்பா என்ற அழைப்பில் அவன் சகோதரர்களும் குழப்பமடைந்தனர்.. ஹர்ஷன் " டேய் ரக்ஷவா.. உனக்கு எப்டி டா இந்த புள்ளைய தெரியும்... நாங்களே இப்போ தான பாக்குறோம் " என கேட்க அதற்கு ரக்ஷவ் பதிலளிக்கும் முன் முந்தி கொண்ட மாயா " இவ தான் ரக்ஷவ வேதபுரத்துல விட்டுட்டு வந்தா " என கூறவும் அர்ஜுன் " நீயா ரக்ஷவ அம்போனு அங்க விட்டுட்டு வந்த " என கேட்க " பாதகத்தி.. நா அவன் கூட தான டி இத்தன நாள் இருந்தேன்... விட்டுட்டு வந்தாங்குர... கரெக்ட்டா சொல்லு " என மாயாவின் மண்டையில் கொட்டவும் மாயா அவ்ச் என வலிக்காத தலையை தேய்ப்பதை கண்டு தீராதீயின் கரத்தை பிடித்தான் ஷேனா..

" நீ ஏன் டா என் கைய புடிச்ச.. ஆமா யாரு நீ.. " என கேட்டவள் அவன் முறைப்பதை கண்டு உனக்கு மட்டும் தான் முறைக்க தெரியுமா எனக்கும் தெரியும் என எக்ஸ்ற்றாவாய் முறைத்து காட்டினாள்...

ரக்ஷவ் : ஏ பாப்பா.. இப்போ நீ எனக்கு பதில் சொல்ல போறியா இல்லையா என்ற இவனின் கத்தலில் அதிர்ச்சியிலிருந்த நம் நாயகர்கள் அனைவரும் நிஜ உலகிற்கு வந்தனர்...

தீராதீயின் போராளி உடையையும் அவள் இறுக பற்றியிருக்கும் வாளையும் பார்த்து நம் நாயகர்களே அசந்து தான் போயினர்...

அர்ஜுன் : ஏன் டி குட்டச்சி.. உன்ன நம்பி யாரு டி உனக்கு தளபதி பொருப்பலாம் குடுத்தது... என அதே அதிர்ச்சியுடன் கேட்கவும் ஷேனாவின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவி கொண்ட தீராதீ " என் ரேஞ்சிசுக்கு அது கொஞ்சம் ஓவர் தான்... பட் அந்த வேலைய போட்டு குடுத்துட்டாங்க டா... அதான் நானும் ஏத்துக்குட்டேன் " என கூறினாள்...

நீலி : அது எவ்வாறு சாத்தியமாகும் தீரா.. பூமிவாசியான தமக்கு மறுமை பூமியின் தளபதி பொருப்பை எவ்வாறு மகாராணியார் அளிப்பார்...

அதற்கு தீராதீ பதிலளிக்க வரும் முன்.. அபி " அவ பூமிவாசின்னு யாரு சொன்னா நீலி.. தீராவும் மறுமைபூமி வாசி தான்.. " என மற்றொரு குண்டை தூக்கி அலேக்காய் வீசினான்...

மது : தம்பி ஆல்ரெடி நாங்க அதிர்ச்சிகளல்லாம் தாங்க முடியாம இருக்கோம்.. நீ இப்டி திடுதிபுன்னு எக்ஸ்ற்றாவா தூக்கி போடாத ராசா.. என பாவமாய் கூறவும் அங்குள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை...

நிலமையை அறிந்திருந்த தீராதீ " அண்ணாஸ் அண்ணீஸ்.. அப்ரம் அவங்க பெத்த இரத்தினங்களே.. நல்லா கேட்டுக்கோங்க... நா ஒரு மறுமைபூமி வாசி ப்லஸ் ஒரு பூமிவாசியும் கூட... சில வருடங்கள் முன்னாடி உங்க கூட நா அங்கேயே இருந்துட்டேன்... நேத்து திடீர்னு மகாராணி கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது... எனக்கு ஒரு வீரன பாதுகாக்குர பொருப்பு வந்துருக்கு... " என கூறவும் நாயகிகளும் இரண்டாமணி நாயகன்களும் யாரந்த வீரன் என்பதை போல் பார்க்க சஹாத்திய சூரர்களுக்கு அவள் ரக்ஷவனை தான் குறிக்கிறாள் என்பதும் புரிந்தது...

மிதுன் : யாரு பாப்பு அந்த வீரன்... என கேட்கவும் உடனே அதை திசை திருப்பு

அஷ்வன்த் : பட் உன்னால எப்டி பாப்பு சமாளிக்க முடியும்.. உன்ன யாரு பாதுகாப்பா.. உனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா.. என உண்மையான அக்கரையிலே கேட்டான்...

தீராதீ அவனை கண்டு மெல்லிய புன்னகை வீசி பதிலளிக்கும் முன் அபி " அத பத்தி நீங்க கவலையே பட தேவையில்ல அண்ணா.. நீங்க நினைக்கிர மாரி தீரா காமெடி பீஸ் இல்ல " என்கவும் தீராதீ அவனை இப்போ அவன் கேட்டானா என்பதை போல் பார்த்தாள்...

துருவ் : அவ தான் டெரர் பீஸ்னு எங்களுக்கு தெரியுமே.. ஆனாலும் அங்க அவளால வம்ப இழுத்து விட்டு தப்பிக்க முடியாதே... வம்பிழுக்காம அமைதியா இருக்க மாட்டாளே.. என தீராவை பற்றி நன்கறிந்திருந்தவன் கேள்வியுடன் கேட்க..

இதை கேட்டதும் வாயை மூடி கொண்டு சிரித்த மாயா " அவ எந்த வம்ப இங்க இழுக்கலன்னு நினைக்கிறீங்க.. " என மீண்டும் கலாய்க்க தீராதீ அவளை முறைக்கவும் ஷேனாவும் அவளை முறைக்க இப்போது இவ்விருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டனர்...

கார்த்திக் : அங்க போயும் அந்த பையன் கிட்ட உன் வேலைய ஆரம்பிக்காத டி.. இங்க வந்து தொல என தன் நண்பியை டமேஜ் செய்து அழைத்தான்...

" என்ன பத்தி கவலப்படாதீங்க ... எனக்கு எதுவும் ஆகாது.. நா சீக்கிரமே அங்க வந்து உங்கள சந்திக்கிறேன் " என்கவும் தலையசைத்த நாயகர்கள் அவளிடம் ஒரு அதி முக்கிய கேள்வியை முன் வைத்தனர்...

ப்ரியா : ஆமா வாள் பயிற்சி நீ எப்போ எடுத்த ... ஒரு குச்சிய தூக்கவே அலுப்பு படுர நீ எப்டி டி பாப்பு போரிடுர அளவுக்கு போன என தன் இமேஜே டமேஜ் ஆனாலும் அதை பற்றிய எண்ணமின்றி " அப்டி தான் ப்ரிமா இப்பவும் இருக்கேன்... பட் ஒரே கடமையுணர்ச்சி அழைக்கிது.. அதோட உங்க கூட இருந்துட்டு நா இப்டி இல்லனா தான ஆச்சர்யம் " என கூறவும்

வீனா : ஆனா இவ்ளோ சீக்கிரம் எப்டி கத்துக்குட்ட... அதோட உன்னோட வாள் சுழற்சில சத்தீஷ் அத்தானோட சாயல் தெரியிதே..

" உங்க கிட்டேந்து தான் கத்துக்குக்கேன் " என இவள் உடனே பதிலளிக்க.. சமர் " ஏன் பொய் சொல்றீங்க தீதீ.. சத்தீஷ்வரன் குரு கிட்ட தான அந்த வாள் பயிற்ச்சிய கத்துக்குட்டீங்க " என  தீராதீயை வசமாய் மாட்டி விட்டான்...

சத்தீஷின் பெயரை கேட்டதும் ஷேனா ஒரு நொடி தீராதீயை குழப்பமாய் பார்க்க அடுத்து சமர் கூறிய செய்திகளில் சற்றே அதிர்ந்தான்...

அனு : என்ன சத்தீஷ் அத்தான் கிட்ட பயிற்சி எடுத்தியா எப்போ டி... என அதிர்ச்சியுடன் கேட்க அதற்கு தீரா முளிக்க சமரே மீண்டும் முந்தி கொண்டு வந்து " சில வருடங்கள் முன் தான் தாயே... சத்தீஷ்வரன் குரு மாத்திரமல்ல... யுவக்ரிஷ்ணன் குரு மற்றும் இந்திரஜித் குருவுமான மகா கோவன்களென அழைக்கப்படும் முக்கோக்களால் பயின்றப்பட்டவர் எங்கள் தளபதி " என இன்னும் சீரியஸ்நெஸ் தெரியாமல் தமது தளபதியின் ஹிஸ்ற்றியை புட்டு புட்டு வைத்து கொண்டிருந்தான் சமர்...

ஷேனா இதை கேட்டதும் " முக்கோவன்களால் பயிலப்பட்டவளா " என அதிர நம் தீராதியோ சமரை பொரித்து போடலாமா அறுத்து போடலாமா என்பதை போல் பார்த்து கொண்டிருந்தாள்...

ஒவீ : பாப்புமா என்ன நடக்குது இங்க... நீ எப்போ அண்ணாஸ் கிட்ட பயிற்சி எடுத்த...

இதில் என்ன பதில் கூறலாம் என விழித்த தீராதீ ஒரு பெருமூச்சுடன் " பொருமையா கேளுங்க... என்ன பத்தின உண்மை அவங்களுக்கும் தெரியாது... உங்க கூட நா பயிய்சில இருந்துருக்கேன் டி... பட் நா உங்க புருஷனுங்க கிட்டையும் தான் பயிற்சி எடுத்தேன்... அத சொல்லாம வாய மூடீட்டு இருக்கானுங்க அவனுங்க... மத்தத நானே நேர்ல வந்து சொல்றேன்... நீங்க கோட்டைக்கு கெளம்புங்க... பத்திரமா போய்ட்டு வாங்க " என அழூத்தந்திருத்தமாய் கூறவும் அவளை கண்டு புன்னகைத்த சித்தார்த்

சித்தார்த் : ஆல் தி வெரி பெஸ்ட் என்றான்... அதை கேட்டதும் தீராதீயும் கலவரங்கள் மறந்து மென்னகை புரிய ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்ட நாயகிகளும் நாயகன்களும் அவளுக்கு தனி சொற்பொலிவாற்றல் நடத்தி எச்சரிக்கையாய் இரு பத்திரமாய் இரு பாத்து இரு என ஒரே பொருளை பல விதமான சொற்களில் கூறி பற்பல அறிவுகளை முடித்து அவளை எண்ணி ஒரு பெருமையுடன் புன்னகைக்க கல்கி வீரா நாயகர்களுக்கோ யம்மாடி என்றிருந்தது..

அனைத்திற்கும் தலையாட்டி ஏற்று கொண்ட தீராதீ அனைவரையும் பார்த்து புன்னகைத்ததும் கல்கி வீரா நாயகர்களும் அவர்களிடமிருந்து விடைபெற நீலியின் பெற்றோர் அவர்களின் மகளை கண்ட திருப்தியுடன் அந்த காளை கட் செய்தனர்...

இன்னும் ரக்ஷவ் மாத்திரம் அவன் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்தான்...

ரவி : நாங்களே சரியாய்ட்டோம் நீ ஏன் டா இன்னும் பேயறஞ்ச மாரியே இருக்க

ரக்ஷவ் : இல்ல குருவே.. இங்க லூசா சுத்தீட்டு இருந்த கேஸு அங்க மாஸா என்ட்ரி குடுத்த நம்மளையே படம் பாக்க வச்சிட்டா... அது பாப்பா தான்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நம்புறதுக்கு மை பிஞ்சு மனசு தவிக்கிது என கண்களை விரித்து கூறினான்...

வீர் : உனக்கு வாயி அர அடி கூடி போச்சு வா டா என இழுத்து கொண்டு செல்ல மற்றவர்களும் அவர்களின் இடையே உள்ள அன்பை கண்டு சிரித்தவாறு அற்புத கோட்டையை நோக்கி நடையை கட்டினர்...

சர்ப்பலோகம்

வளரி பாட்டி கூறிய அனைத்தையும் கேட்டு நம் இரண்டாமணி நாயகிகள் பித்து பிடித்ததை போல் அமர்ந்திருக்க தாம் தான் நாகனிகள் தொலைத்த மூன்று குழந்தைகளென அறிந்திராத சித்ரியா வேதித்யா மற்றும் எழிலும் கண்களில் கண்ணீருடன் வாயிலருகில் நின்றிருந்தனர்...

வளரி பாட்டி : அதுக்கப்பரம் என்ன என்னமோ நடந்து போச்சு தாயி.. என்னையும் அந்த பாதகத்தன் எமதர்மன் இங்க சிறை வச்சிட்டான் என கூறி முடிக்க தன் கண்ணீரை துடைக்காமலே அவரை நிமிர்ந்து பார்த்த கயலின் கண்களில் பெரும் மிரட்சி தென்பட்டது..

கயல் : அப்போ காலைல மேடைல இருந்து பொண்ணுங்க தான் நீங்க சொல்ற யட்சினிகளா பாட்டி..

வளரி பாட்டி : ஆமா டா...

நந்தினி : சித்து ருத்ரா ஆதி அண்ணா மூணு பேரும் உயிரோட தான் இருக்காங்களா பாட்டி.. நீங்க சொன்ன எல்லாமே உண்மையா என கண்ணீரை துடைக்க மனமின்றி ஆர்வமாய் கேட்கவும்

வளரி பாட்டி : ஆமா கண்ணு... உன் அண்ணனுங்க உசுரோட தான் இருக்காய்ங்க... அவங்க எல்லாரும் கூடிய சீக்கிரம் உங்கள தேடி இங்க வரத்தான் டா போறாங்க.. என ஆனந்த கண்ணீருடன் உறுதியளிக்க திடீரென கேட்ட சாம்பராவின் கொக்கரித்தலில் அனைவரும் அதிர்ந்து போய் திரும்பினர்...

சித்ரியா : தாம் இங்கிருந்து உடனடியாக சென்றாக வேண்டும் வாருங்கள் ... என துரிதப்படுத்தி அந்த சிறையிலிருந்து நாயகிகளை உடனே அழைத்து கொண்டு எதிர் திசையிலிருந்த இருள் பாதைக்குள் நுழைந்தாள்...

வேதித்யா வளரி பாட்டியை ஜாக்கிரதையாய் இருக்க கூறி விட்டு அவரின் சிறையையும் பூட்டி விட்டு அவள் சகோதரிகள் சென்ற பாதையில் சென்று மறைய சரியாக அங்கே சாம்பரா சினத்துடன் வந்து நின்றாள்...

வளரி பாட்டி : வா சாம்பரா.. வா..

சாம்பரா : கூருக்கெட்ட கிழவியே.. வீண் பேச்சாற்றாமல் எம் வினாவிற்கு விடையளி.. சஹாத்திய சூரர்களுடன் என்றும் உடன் இருக்கும் அச்சிறுவன் யார்

வளரி பாட்டி : தாம் அறியவேண்டுமாயின் சஹாத்திய சூரர்களிடமே சென்று வினவிடு சாம்பரா... இருவது வருடமாய் நான்கு செவுற்றிற்குள் முடங்கி கிடக்கும் ஒன்றுமறியாதவளிடம் வினவுகிறாய்...

சாம்பரா : என்ன டி.. திமாரா...

வளரி பாட்டி : திமிரல்ல டி... இது ஆணவம்.. இரட்சகன்களும் பராக்ரம வீரன்களும் பூலோக மண்ணில் காலடி பதித்ததை அறிந்ததும் உண்டான ஆணவம் என கர்ஜிக்க சாம்பரா அதிர்ந்து நின்றாள்..

சாம்பரா : ஏய்...

வளரி பாட்டி : குரல் உயர்த்துவதை நிறுத்தி விட்டு உம் அமைச்சன்களிடம் போய் கூறு... எம்மை மிரட்டும் காலமெல்லாம் ஓடியாகிவிட்டது... உலகின் நாயகன்களால் தாம் மிகவும் விரைவிலே மடிய போகின்றீர்.. மிக விரைவிலடி... மிகவும் விரைவில்

சாம்பரா : அதற்கு யாம் அனுமதிக்க மாட்டோம் கிழவி.. இன்னும் ஒற்றை திங்களில் யோகபரீபூஜன யாகம் ஈட்டி யட்சினிகளையும் பராக்ரம விந்தைகளையும் கோவன்களின் மூன்று மகள்களையும் உடன் பலி கொடுத்து எம் மகா பிரபுக்களை விடுவித்து பூலோகத்தின் அண்ட சராரத்தையும் நிலை குழைய செய்வோம் என நரம்பு புடைக்க கூறவும் தன் சிரிப்பொலி அந்த சிறை சாலைக்குள்ளே எதிரொலிப்பதை போல் சத்தமாய் சிரித்தார் வளரி பாட்டி

வளரி பாட்டி : சொப்பனம் கண்டு மணல் கோட்டை கட்டினாலும் அது ஒரு நாள் சரிந்து விழ தான் செய்யும் சாம்பரா... அவ்வாறானது தான் தமது சொற்கள்

சாம்பரா : கூறுகெட்ட கிழவி... உமக்கு இரு நாட்கள் நீர் ஊண் எதுவுமில்லையடி என கத்தி விட்டு அங்கிருந்து செல்ல வளரி பாட்டியோ ஆனந்தத்தில் உணவும் வேண்டாம் நீரும் வேண்டாம் என்று அவரது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்...

அந்த சிறை சாலையை விட்டு யாவரும் அறியாமல் நாயகிகளை வெளியேற வைத்த சகோதரிகள் அவர்களின் சிறையிலே அவர்களை விட்டு விட்டு அங்கிருந்து சாம்பராவிற்கு சந்தேகம் வராத படி பணிப்பெண்கள் அறைக்குள் சென்று மறைந்தனர்...

மிதரவர்தனன் மற்றும் விஞ்ஞவெள்ளனுக்கு அதி தீவிரமாய் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க வெளியே சாகாரகாந்தனும் மகரகாந்தனும் பதட்டத்துடன் சாம்பரா கூறியவைகளை அசை போட்டவாறு நடந்து கொண்டிருந்தனர்..

வேதித்யா அவளுடைய அறையிலிருந்து வைத்தியரிடமிருந்து திடீர் அழைப்பு வந்ததால் ஓய்வறைக்கு சென்று கொண்டிருக்க .. அங்கோ இளவரசிகளுக்கான அறைகளில் யட்சினிகள் மூவரும் உடல் சோர்வுற்ற மயக்கமுறும் நிலையில் பஞ்சு மெத்தையினில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர்...

வேதித்யா : வைத்தியரே.. இவர்களுக்கு என்(ன) நேர்ந்தது.. இளவரசிகளின் இந்நிலைக்கு காரணமானவர் யார்..

வைத்தியர் : அமைச்சன் அருளவர்தனன் இளவரசிகளின் சக்திகளை மீண்டும் பறித்து சென்றுள்ளானம்மா.. ஆதலின் மூவரும் சோர்வுற்று மதிளடைந்துள்ளனர் (மயக்கமடைந்துள்ளனர்)

வேதித்யா : மீண்டும் சக்திகளை பறித்து சென்றாரா.. ஆனால் எதற்காய் மீண்டும் பறிக்க வேண்டும்... அத்தகைய தாக்கத்தை தாங்க வலு கூட இம்மூவரிடம் அல்லவே

வைத்தியர் : அவை பற்றி யானறியவில்லையம்மா.. உமது பணி இன்றிரவு முழுவதும் நீவிர் மாத்திரமே இம்மூவரை கவனித்து கொள்ள வேண்டும்.. இன்று முதல் அரசவை கூட்டத்தை அன்றி கோட்டையிலும் மற்ற வேறெந்த இடங்களிலும் நம்மை போன்ற பணியாளர்களுக்கும் மனிதர்களுக்கும் சகாயமில்லை... நீரும் உம் சகோதரிகள் இருவர் மாத்திரம் தான் பணிவிடை செய்ய உள்ளீர் என்க அதற்கு வேதித்யா குழப்பத்துடன் தலையசைத்ததும் அங்கிருந்து சென்றார்...

வேதித்யா : தாம் மூவரை நாடி இரட்சகர்கள் என்று வருவார்கள்.. எம்மை காட்டிலும் தம் மூவர் தாங்கும் வலி அளவற்றதை அறிவேன்.. ஆயினும் அதற்கான தீர்வொன்றை அறியும் வழி எமக்கு கிட்ட மறுப்பது விதியா அல்ல எவரேனும் புரியும் சதியா என வாய் விட்டு அவர்களை பார்த்து வருத்தத்துடன் கேட்டாள் வேதித்யா

சிறிதே நேரங்களில் யட்சினிகளின் சக்திகளை பறித்தெடுத்த அருளவர்தனன் அதை நோயாளர் படுக்கையில் இரத்த கிளரியாய் வீற்றிருக்கும் தன் சகோதரர்களுக்கு கொடுத்து அவர்களை உயிர் பிழைக்க செய்தான்...

யட்சினிகளின் உதிரத்திலிருக்கும் நாக சக்தி அவர்களின் காயங்களையும் உடல் பலவீனங்களையும் குணமடைய வைத்தது

அன்றைய மௌனமான இருள் நிறைந்த நீண்ட இரவில் நமது இரண்டாமணி நாயகிகள் நிலவை வெறித்த படி வெவ்வேறு சிந்தனையில் உளன்று கொண்டிருந்தனர்...

இன்னமும் அவர்களால் சிலவற்றை நம்ப முடியவில்லை... இருந்தும் அது நம்பாமல் இருக்க கூடியதாகவும் இல்லை...

சித்ரியா அவர்களுக்கு துணையாய் உடனே இருந்ததாலோ என்னவோ கயல் அவளையே நோக்கி கொண்டிருந்தாள்..

அவளின் பார்வை வீச்சை கூட கவனியாமல் சித்ரியா தனியொரு சிந்தனையில் உளன்ற போது கீச் கீச் என ஏதோ பேசும் சத்தம் எங்கிருந்தோ கேட்க அதை முதலில் கவனித்த நித்ரா சுற்றத்தை கவனிக்க தொடங்கினாள்...

அவர்களின் சிறை ஜன்னல் வழியாக நீல நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி உள்ளே இறங்கி கொண்டிருந்தது... அதனுடன் இன்னுமொரு பட்டாம்பூச்சியும் சொய்ன் என பறந்து வர சரியாக அதை கவனித்த சித்ரியா பதறி போய் எழுந்து நிற்க அவளின் வேகத்தில் அனைவரும் பதறி விட்டனர்...

அந்த பட்டாம்பூச்சி டக்கென சென்று சித்ரியாவின் மேல் அமர்ந்ததும் அதை உற்று நோக்கிய சித்ரியா " தேவதையினமா " என அதிர்ச்சியாய் கேட்க கயல் அப்போதே அவள் தோளில் பட்டாம்பூச்சியை போல் ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்டாள்... அது நம் பிறை... அவளுடன் வந்தது நீலி

பிறை : ஐயமடைய வேண்டா தேவதைகளே.. யான் பிறையீரா.. அவள் நீலி .. தமக்கு நன்னம் புரியவே விஜயம் புரிந்துள்ளோம் என சிரித்த முகமாய் கைகளை அகல விரித்து கூற சித்ரியாவை தவிர்த்து வேறெவருக்கும் அவள் கூறுவது பாதிக்கும் மேலாக புரியவில்லை...

நீலி : பயப்புட வேண்டாம் தேவதைகளே... அவ பேரு பிறையீரா... என் பேரு நீலி... நாங்க உங்களுக்கு நல்லது செய்ய தான் இங்க வந்துருக்கோம் என பேச்சு வழக்கிலே கூறவும்

சித்ரியா : தாம் தேவதையினத்தவர்களா.. அவ்வாறாயின் சர்ப்பலோகத்திற்குள் நுழைய இயலுமா

பிறை : ஆம் தான்... ஆயினும் எம்மால் உள் நுழைய இயலும்...

சித்ரியா : இவர்களை கண்டு ஐயமடைய வேண்டாம்... தேவதையினத்தவர்களும் மனிதர்களை போலுள்ளவர்களே... ஆனால் உருவத்தில் சிறிதாய் இருப்பர்..

நீலி :ஆமா.. ஆனா அது இப்போ முக்கியமில்ல... இப்போ நாங்க உங்கள பாக்க தான் வந்தோம்... என இரண்டாமணி நாயகிகளை நோக்க

மாயா : எங்களையா ஏன்...

நீலி : ஒரு நிமிஷம் இருங்க... ஹான் இந்தாங்க.. என ஒரு டாலரை எடுத்து நீட்ட அதை படக்கென வாங்கிய கயல் புன்னகையுடன்

கயல் : இது துருவ் அண்ணனோடது என கூற

பிறை : சரியாக கூறினீர்கள்... யாம் இருவரும் தங்கள் குடும்பத்தினராலே இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்...

சந்தியா : அங்க எல்லாரும் எப்டி இருக்காங்க... எங்கள பத்தி அவங்களுக்கு எதாவது தெரிஞ்சிதா

நீலி : தெரியாமலா நாங்க இங்க வர போறோம்... அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க... அவங்க உங்கள காப்பாத்த சீக்கிரமே இங்க வர போறதா சொன்னாங்க... உங்கள ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க... அதோட யட்சினிகள நீங்க நம்பனும்னு சொன்னாங்க...

வைஷ்ணவி : ஆமா யட்சினிகளும் நல்வங்க தான்..

நீலி : ஹோ உங்களுக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சா... நல்லது நல்லது...

கயல் : நீலி.. லீலாவதி ... அவங்க உயிரோட தான் இருக்காங்க...

பிறை : என்ன... தாய் லீலாவதி உயிருடன் உள்ளாரா... எத்துனை பெரிய காரியம் கூறியுள்ளீர் தெரியுமா... எம் மகிழ்ச்சிக்கு அளவே இல்லையே... என சிறகடித்து மேலே பறக்க மேலே பறந்து சென்று அவளை மீண்டும் கீழே இழுத்த வந்தாள் நீலி

நீலி : யாம் கவனமாய் இருக்க வேண்டும் பிறை.. யமது அடையாளம் சற்று வெளியானாலும் இருவரும் சிக்கிக் கொள்வோம்..

பிறை : ஹான் ஹான் சரி நீலி..

நீலி : ஹ்ம்... தேவதையாரே.. உங்களோட நம்பிக்கைய மட்டும் இழக்காதீங்க... சீக்கிரமே நீங்க நம்ம உலகத்துக்கு வந்துடலாம்

மதி : நாங்க காத்துக்குட்டு இருக்கோம்னு சொல்லுங்க

பிறை : தாராளமாக என திரும்பியவள் அவளை கண்டு புன்னகைத்த சித்ரியாவை கண்டாள்

சித்ரியா : தாம் புரியும் உதவிக்கு நன்றி

பிறை : நன்றிக்கு அவசியமன்று தோழி.. ஆமாம் தாம் யார்.. இங்கு எவ்வினா புரிய வீற்றிருக்கிறீர்...

சித்ரியா : யான் சர்ப்பலோக கோட்டையினுள் பணி புரியும் பாவை.. தேவதையார்களுக்கு துணையாய் இங்கு வீற்றிருக்க வேண்டும் என எமக்கு கட்டளை விதிக்கப்பட்டுள்ளது..

பிறை : ஹோ... தமது நாமம் யாது...

சித்ரியா : சித்ரியா என கூறவும் ஹார்ட் கணக்காய் தன் கண்களை விரித்த பிறை

பிறை : அவ்வாறெனில் தாம் தான் கோவன்களின் முதல் புதல்வி சித்ரியாவா என சந்தோஷ மிகுதியில் கேட்க மற்ற அனைவரும் அதிர்ச்சியாக சித்ரியா முளிக்க இவ்வளவு நேரமும் அதே ஜன்னலருகில் மயூரனுடன் வெளியே நின்றிருந்த சேவன் " அவ்வளவு தான்... ஓட்ட வாய் கொண்ட என் தங்கை உளறி விட்டாள் " என தலையிலடிக்க மயூரனும் அதிர்ந்திருந்தான்...

ஆனால் சித்ரியா வாய் திறவும் முன் சட்டென நீலி பிறையை இழுத்து கொண்டு மேல் நோக்கி பறக்க பிறையை பிடிக்க வந்த ஒரு வெள்ளி நிற விசை சித்ரியாவை உராசி விட்டு தள்ளி சென்றது...

அந்த உராசலில் சித்ரியா தடுமாறி கீழே விழ இக்ஷி அவளை தாங்கி பிடித்தாள்...

சிறையின்வெளியே நின்ற சாம்பராவை கண்டதும் சேவன் " பிறை நீலி உடனே அங்கிருந்து தப்பியுங்கள் " என கத்த நீலி பிறையை இழுத்து கொண்டு அங்கிருந்து நகர பார்க்கும் முமுன் சாம்பராவின் கேடையம் நம் குட்டி ராணிகளுக்கு தடை விதித்தது

சாம்பரா : சர்ப்பலோகத்தினுள் தேவதையினத்தினருக்கு என் பணி

பிறை : இதென்ன சேள்வி பேதையே..தேவதைகளை காண தேவதைகள் தான் வருவர்

சாம்பரா : யான் ஒரு சர்ப்பம் தேவதையே.. எம்மால் உம்மை ஊணாய் உண்ண இயலும்..

நீலி : நீ எங்கள சிக்ஸ்ட்டி ஃபையாக்கி திங்கிர வர நாஙங்க சும்மா இருப்போம்னு நினைச்சியா.. பிச்சு பீஸ் பீஸாக்கீடுவோம் என கராத்தே போசில் பறந்து கொண்டே கூற சாம்பரா பல்லை கடித்து அவளை பிடிக்க முயன்றாள்...

அதற்குள் நீலியும் பிறையும் மேலே உயர பறக்க சாம்பரா கோவத்தில் காலை கீழே உதைக்கவும் ஒரே நேரத்தில் குட்டி ராணிகள் இருவரும் அவள் தலை மேல் டங்கென குதித்து எகிரி ஜன்னலுக்கு சென்று அவள் சினமேறி கத்தவும் அங்கிருந்து அலேக்காய் எஸ்கேப் ஆயினர்...

நம் நாயகிகள் இவள் காமெடி பீஸென தெரியாததால் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட அதில் கோவமான சாம்பரா

சாம்பரா : எத்துனை தைரியமிருப்பின் எம்மை கண்டு பணிப்பெண்ணாகிய நீ நகைத்திருப்பாய் என பல்லை கடித்து கொண்டு சித்ரியாவை அறையும் முன் அவளை ஒரு கரம் தடுத்தது...

சாம்பரா அதே எரிச்சலுடன் தன் கரத்தையே பிடித்தது யார் என பார்க்க அங்கு முகமிறுக நின்றிருந்தது சேனை தலைவனின் மனைவி பத்யரூனா

பத்யரூனா : தமக்கு இந்நாழிகையில் இங்ஙனம் என்(ன) வினை சாம்பரா என காட்டமாய் கேட்கவும் சுற்றி அனைவரையும் முறைத்த சாம்பரா பத்யரூனைவை மதிக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்...

பத்யரூனா அவள் செல்லும் வரை காத்திருந்து விட்டு பின் அனைவரையும் கண்டு புன்னகைக்க சித்ரியா அவரை ஓடி சென்று அணைத்து கொண்டாள்...

பத்யரூனா : இனி உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் மகளே... ஐயம் வேண்டாம்.. தாம் தற்போது இங்கிருந்து கிளம்பலாம்... என்னுடன் வாரும் என அவர்களையும் உடனே அழைத்து கொண்டு சென்றார்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... யூடி எப்டி போரடிக்கிதா... எதாவது சொல்லுங்.க... அப்போ தான் என்னால மேற்கொண்டு எழுத முடியும்... நெக்ஸ்ட் என்ன பன்னலாம்னு எனக்கே யோசனையா இருக்கு... பாப்போம் என்ன நடக்குதுன்னு... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro