Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 42

ஏதேனும் முக்கிய வேலை இருந்தால் அதை முடித்து விட்டு படிக்கவும்... எவரையாவது இவ்வளவு நேரம் வாசிக்க வைத்து நேரத்தை செலவழிக்க வைத்திருந்தால் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்....
____________________________________________

க்ரிஷ்ஷின் கரத்திலிருந்து பாய்ந்த தீயினால் ஆன பெரும் கதிர் சரியாக அவர்களின் பத்து எதிரிகளை மாத்திரம் சூழ்ந்து கதற வைத்தது...

வளவன் அங்கிருந்த ஒரு அம்புலன்சில் அனைவரையும் ஷேஷ்வமலை அருகில் அழைத்து செல்ல முயற்சித்து கொண்டிருக்க நிகழ்வதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த திவ்யா எந்நேரமானாலும் இங்கு மக்கள் நடமாட்டம் கூடலாம் என தீவிரமாய் யோசிக்க அவள் சிந்தனைகளை கணக்கச்சிதமாய் பிடித்த அனு அவள் கரத்தை பிடிக்கவும் திவ்யா சகோதரியை நோக்கினாள்...

அனு காத்திருப்பது வீண் என கண்களாலே கூற அதை புரிந்து கொண்ட திவ்யா தலையசைத்து அவள் நீல நிற அழகிய கண்களால் போரிட்டு கொண்டிருந்தவர்களை நோக்கினாள்...

அவளின் சக்தி அங்கிருந்த அனைவரையும் கண்ணிற்கெட்டாதவாறு சூழ்ந்தாலும் தன்னவளின் மாய சக்தியினை காணாமலே உணர்ந்து அந்த வாகனத்தின் புறமாய் திரும்பிய இந்திரன் இறுதியாய் கண்டது அவனவளின் நீல நிற கண்களை மட்டும் தான்...

அடுத்த நொடியே அங்கு அனைவரும் மறைந்திருந்திருந்தனர்... அந்த வாகனத்தை விட்டு வெளியேறிய ப்ரியா அந்த மருத்துவமனையை காலத்தின் உதவியுடன் பழைய நிலைக்கு கொண்டு வந்தாள்...

வளவன் : ப்ரியா வா சீக்கிரம் என திடீரென கத்தியதில் மருத்துவமனையில் கவனம் பதித்திருந்த சகோதரிகள் மூவரும் இப்புறம் திரும்ப அவர்கள் பின் காட்டிலிருந்து சர்ப்பலோக வாயிலின் வழியாக நொடிக்கு ஒரு நாகமனிதன் அதிவேகத்தில் வெளியேற தொடங்கினான்...

இதை சற்றும் எதிர்பார்க்காத நாயகிகள் அதிர்ச்சியுடன் வளவன் மோகினியை கண்டு விட்டு தாங்கள் அமைதியுறும் நேரம் இதுவல்ல என்பதனை உணர்ந்து களத்தில் இறங்கினர்...

திவ்யா தன் ஒட்டு மொத்த சக்தியையும் பயன்படுத்தி காட்டிலிருந்து மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட நாகமனிதர்களை அவளின் மந்திர வளையத்திற்குள் கொண்டு வர மொத்த நாக மனிதர்களையும் தன் கருநீல விழிகளால் சொடக்கிடும் நேரத்தில் தன் மாயக்கட்டிற்குள் கொண்டு வந்திருந்தாள் அனு...

அனு திவ்யாவின் முறை முடிந்ததும் இருவரும் கண்களை அகற்றாது ஒரே நேரத்தில் ப்ரியா என அழைக்க அவர்கள் முன் வந்து நன்ற ப்ரியா அவளின் கரத்திலிருந்து ஒரு பெரும் வெள்ளை நிற கயிறை வெளியேற வைத்து அந்த நாகமனிதர்கள் அனைவரையும் ஒன்றாய் கட்டினாள்...

இருந்தும் அந்த ஒரே வாயிலின் வாயிலாக நாமனிதர்கள் வெளியேறி கொண்டே இருக்க வருவோர் அனைவரையும் சலைக்காமல் அனு தன் மாயக்கட்டிற்குள் கொண்டு வந்து திவ்யாவின் மாய வளையத்தினுள் நுழைக்க ப்ரியா அவர்களை நகர விடாமல் கட்டினாள்...

ஆனாலும் ஒரு கட்டத்தில் எண்ணிக்கை கூடிட கருவுற்ற நிலையில் ஒரே வளையத்தினுள் ஐநூறுக்கும் மேற்பட்டோரை அடைக்க வலுவற்றிருந்த திவ்யாவை அவளின் சகோதரிகாள் இரு புறத்திலிருந்தும் பிடித்ததில் கருநீல ஒளியும் வெண்ணிற ஒளியும் அந்த வளையத்தோடு இணைய.. நாகனிகள் பல்லை கடித்து கொண்டு அலரிய ஒரு அலரலுடன் அங்கிருந்து அனைவருமே மாயமாய் மறைந்தனர்...

அது ஷேஷ்வமலையின் அருகிலே இருக்கும் ஒரு மாபெரும் வெற்றிடம் அதில் தட்டு தடுமாறி தோன்றிய நாயகன்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கொள்ள இரண்டாம் நாகனியான நீர் வம்ச திவ்யாவின் சக்தி பட்டதால் பற்றியெரிந்து கொண்டிருந்த யட்சினி சர்ப்ப அமைச்சன்கள் தீயிலிருந்து தப்பியிருந்தனர்..

கழுத்திலும் வயிற்றிலும் இரத்தத்துடன் எழுந்த மனித விஞ்ஞவெள்ளன் அவன் இடையிலிருந்த வெள்ளியால் மிளிர்ந்த வாளை உருவி அவன் முன் நின்ற ரவியை காண .. சட்டை காலரில் மே வாயை துடைத்து கொண்ட ரவி இரத்தம் படிந்த அவனது அற்புத வாளை சுழற்றி களத்தில் இறங்கினான்...

இந்திரன் நேரத்தை கடத்தாமல் கண்களை மூடி திறந்து அவன் கரத்தை பார்க்க நீல நிற இரத்தினக்கள் பதித்த அவனின் வீர வாள் சூரிய ஒளியில் பட்டு தெறித்து அவன் கரத்தில் தோன்றியது...

அருளவர்தனன் ஏய் என கத்தியபடி அவனது வாளை இந்திரனின் மீது ஓங்க தன் வாளை பெற நிமிர்ந்து நின்றிருந்த இந்திரன் இவனது எதிர்பாரா தாக்குதலில் சுழன்று பின் நகர ... அருளவர்தனனின் வாள் இந்திரனின் தோளில் ஒரு நீண்ட காயத்தை பரிசளித்திருந்தது...

தங்க நிறத்தில் ஜொளித்த வாளை வீரை நோக்கி உயர்த்திய மிதரவர்தனன் இடையில் அஷ்வன்த் அவனது வாளால் தடுக்கவும் க்ரீச்சிடும் சத்தத்துடன் நிலத்தில் எம்பி கால் பதித்து அஷ்வன்த்தின் வாளுடன் தன் வாளை இடித்தான்...

மகரகாந்தன் வாளுடன் தன்னை எதிர்க்கும் சரணையும் கீழ் நோக்கி அழுத்த.. விட்டால் சரணின் கழுத்தை அவன் வாள் பதம் பார்த்து விடும் என்ற நிலையில் கழுத்தை இடப்புறமாய் திருப்பி தன் கரமிரண்டையும் தூக்கி பிடித்து காலால் மகரகாந்தனை ஓங்கி உதைத்தான் சரண்..

அவனுக்கா சொல்லி தர வேண்டும் என்பதை போல் மறு புறம் திரும்பிய முகில் மீது சடாரென ஒரு வாள் சென்று விட்டு மறைய அதன் வேகத்தில் முகிலின் நெற்றியில் சிறிதாய் ஒரு கீறல் விழுந்து இரத்தம் கசிய தொடங்கியது...

முகிலின் முன் ஏதோ நோபல் பதக்கம் வாங்கியதை போல் முகிலின் துளி இரத்தம் படிந்த தன் வாளை நீட்டி கொண்டு எகத்தாளமாய் நின்றான் சாகாரகாந்தன்..

ஒரு முறை தன் நெற்றியை தொட்டு பார்த்த முகில் அவனது இரத்தத்தை கண்டதும் " கில்லாடி தான் பா நீ " என உதட்டை மடக்கி புருவமிரண்டையும் தூக்கி எக்ஸ்ப்ரஷன் காட்ட .... மறு நொடியே " ஆனா நா பலே கில்லாடி டா " என்பதை போல் நக்கலான ஒரு பார்வை பார்த்தான்...

இதில் சொல்லவா வேண்டும்... முகிலின் திட்டத்தின் படியே சாகாரகாந்தனுக்கு சினம் கூட... போரிடும் முன் வேண்டிய திட்டமின்றியே அவன் வாளை முகிலை நோக்கி ஓங்கினான்...

தன் வாளை சுலபமாய் தூக்கி அதை தடுத்த முகில் அவனை நக்கலாய் பார்க்க ... இன்னும் இப்போது வெறி ஏறி அவன் மீண்டும் மீண்டும் வாளை ஓங்கி ஓங்கி விடாது முகிலை தாக்கி கொண்டே வர... பின் நடந்தவாரே அவன் தாக்குதலை சுலபமாய் முறியடுத்து கொண்டே அவன் அசந்த நொடி காலை முட்டு கொடுத்து எம்பி வாளை இழுத்து வேகமாய் ஓங்கி சாகாரகாந்தனின் தோளை பதம் பார்த்து அவனை கதற வைத்தான் முகில்...

மற்ற ஆறுவரும் திடுதிபுவென மேலிருந்து தொபக்கடீரென விழுந்த நூற்றுக்கணக்கான நாகமனிதர்களை கண்டு முதலில் "எங்கேந்து வரானுங்க இவனுங்க.. நமக்கு தெரிஞ்சு வானத்துல சர்ப்பலோக வாயில் எதுவும் இல்லையே.. நமக்கு தெரியாம மேலையும் போர்ட்டலுக்கு கனெக்ஷன் குடுத்துட்டானுங்களா" என்றபடி மேலும் கீழும் பார்த்து கொண்டிருக்க நாகமனிதர்களோ விழுந்து விட்டு மண்ணை வாரி அப்பிய முகத்தை அங்குமிங்கும் திருப்பி அவர்களை கண்டு முளிக்கும் நாயகன்களை நோக்கியதும் வசியம் தெளிந்து பற்கள் தெரிய கத்தி கொண்டே ஓடி வந்தனர்

க்ரிஷ்ஷும் சத்தீஷும் அவரவர் போர் வாளை தங்களின் மந்திரத்தால் அங்கு கொண்டு வர... ரனீஷ் வீர் ரித்விக் மற்றும் அர்ஜுன் அவரவர் அற்புத வாளால் சிக்ஸர் அடிப்பதை போல் நாகமனிதர்களை வேட்டையாட தொடங்கியிருந்தனர்...

விஞ்ஞவெள்ளனின் தாக்குதலுக்கு இணையாய் தன் வாளை சுழற்றி அவனை வேர்த்து விருவிருக்க வெறியேற்றி கொண்டிருந்த ரவி இடையில் திடீரென கேட்ட சில ஓசைகளில் ஒரு அதிர்ச்சி இரேகை வதனத்தில் பரவ சுற்றி நோக்கினான்...

அவன் கண்ணிற்க்கெட்டிய தூரத்திற்கு எவரும் கிட்டாமல் போகவும் களத்தில் கவனத்தை சிதற விட்டான்... இவன் எப்போதடா கவனத்தை சிதற விடுவான் என்றே காத்திருந்த விஞ்ஞவெள்ளன் அவனது வாளால் திரும்பி நின்றிருந்த ரவியின் முதுகில் ஓங்கி குத்த இதில் திடுக்கிட்ட ரவி பொருமையாய் திரும்பி பார்க்கவும் அவனை எரிப்பதை போல் விஞ்ஞவெள்ளன் நோக்கி கொண்டிருக்க ரவியின் முதுகை லேசாய் கீறுவதை போல் சென்ற போதே அதை இடையில் சாய்ந்து அவனது வாளை குறுக்கே கேடையம் போல் திருப்பி வைத்து கொண்டு ரவிக்கு கேடையமாய் நின்றிருந்தான் வீர்

வீர் : டேய் போர்களத்துல இருக்கப்போ உன் கவனம் இங்க இல்லாம எந்த மாங்காவ டா பறிக்க போச்சு

ரவி : அன் பக்கது ஊரு மாரியம்மா வீட்டுக்கு தான்..

வீர் : ஒன்னு வச்சேன்னு வை.. ரீசன சொல்லு டா...

ரவி : எனக்கு இங்க பக்கத்துல திவி குரல் கேக்குது டா

வீர் : திவியா... அவ வீட்டுக்கு போல என அதிர்ச்சியாய் கேட்க

ரவி : தெரியல... பட் என்னால கன்ஃபார்மா சொல்ல முடியும்.. அது திவி குரல் தான்.. என கூறி கொண்டிருக்க இன்னமும் விஞ்ஞவெள்ளன் அவன் தாக்குதலை நிறுத்தவில்லை...

விஞ்ஞவெள்ளன் : என்ன சூரர்களே... யட்சினி சர்ப்ப வீரதீர அமைச்சன்களிடமிருந்து எவ்வாறு உயிருடன் தப்பி செல்லலாமென திட்டம் தீட்டுகிறீரா.. அது என்றும் நிகழாது.. தம்மை யாம் ஐவரும் ஊனாய் உண்ணாது இப்பூலோகத்தை விட்டு அகல மாட்டோமடா

வீர் : இவன் ஒருத்தன் ... நேரங்காலம் தெரியாம காமெடி பன்னிக்கிட்டு இருக்கான்.. இவனுக்கு டைஜெஷன் ஆகலன்னா என்ன டா செய்வான்

ரவி : எந்த நேரத்துல உன் டாக்டர் மூளைய யூஸ் பன்ற பக்கி என கீழிருந்து கொண்டு எகிரினான்

வீர் : நா எப்போ டா அந்த மூளைய ஆஃப் பன்னேன்.. இவன் வேற கழுதை மாரி கனச்சுட்டே இருக்கான்...

ரவி : சீரியஸ்னெஸ் கிங்கு உனக்கு என்ன டா ஆச்சு... மரகிளண்டுடுச்சா...

வீர் : ம்க்கும் இந்த அகோரமான மூஞ்ச க்லோசப்ல பாத்தா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் முழுசாவே மாறீடுவேன் டா

தன்னை கலாய்ப்பதை அறியாமல் விஞ்ஞவெள்ளன் அவனது வாளை அழுத்தி வீரை எதாவது செய்து விட முடியாதா என மதம் கொண்ட யானை போல் வெறியை தனிக்க இயலாமல் வாளில் அதை தினிக்க நம் நண்பர்களோ அந்நிலையில் இருந்தவாறு கான்வர்ஷேஷன் நடத்தி கொண்டிருந்தனர்

ரவி : அவன் அழுத்துர அழுத்துல நா பூமிக்குள்ள போய்டுவேன் போல.. எதாவது செய் டா என கத்த

வீர் : சும்மா தான கீழ இருக்க நகந்து வாயேன் என விஞ்ஞவெள்ளனின் முகத்தை அருகில் பார்க்க இயலாமல் தலையை திருப்பி கொண்டு ரவியின் காதருகில் கத்தினான்...

அவனது கத்தலில் கொய்யென்ற காதை அழுத்தி மூடி கொண்ட ரவி

ரவி : ஏன் டா இந்த கத்து கத்துர... சும்மாவே என் காதுல எல்லாம் கேக்கும்.. நீ இந்த கத்து கத்துனா நா செவுடா போக வேண்டியது தான்... நா நகந்தா அந்த வெள்ள கரடி வாளுள நீ சட்னி ஆக வேண்டியது தான்...

வீர் : ம்ஹும் இது சரிப்பட்டு வராது.. இந்தா வரேன் டா கரடி மூஞ்சா என கத்திய வீர் இவ்வளவு நேரமும் அழுத்தம் கொடுக்காமல் சற்று எகிர இதற்காகவே காத்திருந்ததை போல் ரவி எழுந்து அங்கிருந்து அகல இதனால் வீர் விஞ்ஞவெள்ளனின் இடையை தாங்காமல் தடுமாறினான்...

ஆனால் விஞ்ஞவெள்ளன் வீரின் மீது விழும் முன் பின்னிருந்து அவனின் கழுத்தை பிடித்து திருப்பி க்ரிஷ் எட்டி உதைத்து தள்ளி விட்டு ரவி வீர் இருவரையும் முறைத்தான்...
ரவி அவன் முறைக்கவும் உடனே மீண்டும் எழுந்த விஞ்ஞவெள்ளனுடன் போராட ஓடி விட வீர் தனியாக மாட்டி கொண்டான்...

க்ரிஷ் : ஏன் டா நீங்க பேச்சு வார்த்தை நடத்த இதுவா நேரம் .. அந்த வெள்ளி மண்டைய ... என கூறி கொண்டிருக்கும் போதே

வீர் : மச்சான் திவி வாய்ஸ் கேக்குதுன்னு ரவி சொன்னான் என உடனே பேச்சை மாற்றி சுற்றி நோக்கினான்...

க்ரிஷ் : திவியா... என்ன டா சொல்ற.. அவளும் இங்க வந்துட்டாளா என அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க... சரியாக ஷேஷ்வமலையை சுற்றியிருக்கும் காட்டிலிருந்து சீரி பாய்ந்து வந்த வளவனை வீர் காண.. ஓரிடத்தை கண்டதும் வீரின் முகம் தீவிரமடைந்தது...

வீர் : திவி மட்டும் இல்ல... நாம ஷேஷ்வமலைக்கு போக சொல்லி அனுப்புன குழந்தைங்கள்ளேந்து வளவன் மோகினி  அக்கா வர எல்லாருமே இங்க தான் இருக்காங்க என கூறினான்

ரவிக்கு கண்ணிற்க்கெட்டிய தூரம் வரை சிக்காதவர்களை கண்களிலே பைனாக்குலரை வைத்து சுற்றும் நம் வீர் இரு நொடிகளில் பிடித்திருந்தான்...

மலையின் ஒடுக்கமான சந்து போன்ற ஒரு பாதையில் அனைவரும் ஒரு பெரும் மரத்தினடையே அமர்ந்து இவர்களை தான் நோக்கி கொண்டிருந்தனர்...

க்ரிஷ் : சரி ஓக்கே விடு மச்சான் பேச டைமில்ல வா... என அவனை இழுத்து கொண்டு மிதரவர்தனனுடன் போரிட்டு கொண்டிருந்த அஷ்வன்த்தை சுற்றி வளைத்த நாகமனிதர்களை நோக்கி ஓடினான்...

வேலு தாத்தாவின் வீட்டிற்கு சென்ற ரக்ஷா பவி ஒவீ மற்றும் நிரு உடனே வீனா தான்யா வர்ஷி மற்றும் மதுவை அழைத்து கொண்டு ஷேஷ்வமலையை அடைந்திருந்தனர்...

இவர்கள் ஒரு குறுக்கு வழியில் சென்றதாலும் அது மலையின் முன் புறத்திலிருந்து செல்லும் பாதையென்பதாலும் ஷேஷ்வமலையின் பின் தீவிரமான போரிலிருந்த நாயகன்களை காணவில்லை...

இவர்கள் நாழ்வரும் கருவுற்றிருந்த நாழ்வரை ஷேஷ்வமலையில் பத்திரமாய் சேர்த்து விட்டு ஷேஷ்வமலையின் இளைஞரணி பட்டாளத்தையும் காவல் காக்கும் ஆண்களையும் ஷேஷ்வமலையின் பாதுகாப்பிற்காய் நியமித்து லீலாவதிக்கு பாதுகாப்பாய் இருந்தனர்...

ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை போல் நாகமனிதர்கள் ஷேஷ்வமலையிலும் படையெடுத்தனர் ... ஆனால் லீலாவதிக்காய் அல்ல.. அவர்களுடனிருந்த கயல் அஜய்  மற்றும் வைஷ்ணவி மதி நந்தினி இக்ஷிதாவிற்காய்..

நம் யாளிவம்ச வீராங்கனைகள் தங்கள் கருவுற்ற தோழிகள் நாழ்வரை ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு நாகமனிதர்களை எதிர்த்து போராடி கொண்டிருந்த ஷேஷ்வமலை காவலணியுடன் களமிறங்கினர்...

போர்களத்தில் போர் நொடிக்கு நொடி தீவிரமடைந்து கொண்டிருக்க நம் நாயகர்களணியும் எதிரணியும் சலைக்காமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போரிட்டு கொண்டே இருந்தனர்...

தன் வலியையும் காயங்களையும் பொருட்படுத்தாமல் அருளவர்தனனை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த இந்திரனை வலுக்கட்டாயமாய் அவனிடமிருந்து பிரித்து ரித்விக் அருளவர்தனனுடன் சண்டையிட்டான்...

அமைச்சன்களுடன் போரிடாது நாகமனிதர்களுடன் போரிட்டு கொண்டிருந்த சஹாத்திய சூரர்கள் அர்ஜுன் ரனீஷ் வீர் மற்றும் ரித்விக் நாழ்வரும் அவர்களின் எதிரியை ஒரு கண்ணில் கவனித்தாலும் மறு கண்ணால் கோவன்கள் மூவரை கண்காணித்து கொண்டே இருந்தனர்...

இப்போதும் அருளவர்தனனை இந்திரனால் தனி ஒருவனாய் எதிர்த்து வெற்றியடைய இயலும் என்றாலும் அவனை அவனிடம் விட மனமின்றி சில நொடிகளிலே தன் இடத்தை அவனோடு மாற்றி கொண்டான் ரித்விக்...

இந்திரன் மீண்டும் தன் இடத்தினை பிடிக்க முன்னேற ரித்விக்கின் சரியான நேரத்தில் வைத்த அடியின் படி நாகமனிதர்கள் தாக்க முன்னேறி கொண்டே இருந்ததால் இந்திரனும் அவர்களிடம் திசை திரும்பினான்...

நம் சஹாத்திய சூரர்களுக்கு எங்கு கோவன்கள் மூவரும் காலையில் நடந்ததை போல் மீண்டும் அப்படியொறு நிலமைக்கு தள்ளப்பட்டு விடுவரோ என்ற பயம் உள்ளூர தலைவிரித்து ஆடி கொண்டிருந்தது...

அதனாலே அர்ஜுன் வீர் மற்றும் ரனீஷ் இம்மூவரை எவரையும் நெருங்க விடாமல் மற்றவர்களை விலாசி கொண்டிருந்தனர்...

தன்னை சுற்றி நின்ற நாகமனிதர்களை வாளால் கணக்கின்றி வெட்டி சாய்த்து கொண்டிருந்த அர்ஜுன் திடீரென அலர அடுத்த நொடி ஒரு நாகமனிதனின் அபாய சீரல் அங்கு ஒலித்தது..

கண்களில் வந்து விழுந்த தன் கேசத்தை பின்னுக்கு தள்ளி அந்த சத்தம் வந்த திசையை நோக்கிய க்ரிஷ் அர்ஜுன் ரனீஷை கடிக்க வந்த ஒரு நாகமனிதனை கண்டு அலருவதை காண ... அவன் ரனீஷை கடிக்கும் முன் வளவன் அவனது வாளை பிடித்து தரதரவென பின் இழுக்க அர்ஜுன் நாகமனிதனின் நாகவாலையும் மனித உடலையும் வெட்டி தனியே பிரித்தான்...

இதை கண்ட க்ரிஷ் அந்த நாகமனிதன் அர்ஜுனின் வாளால் இரண்டாய் வெட்டப்பட்டதும் சில நொடிகள் நிலத்தில் துடிதுடித்து மூர்ச்சையாவதை தீவிரமாய் காண... ப்ரியாவின் க்ரிஷ் அத்தான் என்ற சத்தத்திலே தன் நிலை பெற்ற க்ரிஷ் அவனை கடிக்க வந்த ஒரு கோரமான நாகமனிதனை கவனிக்க க்ரிஷ் சுதாரிக்கும் முன் அந்த நாகமனிதன் சீரி வந்து க்ரிஷ்ஷின் கழுத்தை கடித்திருந்தான்...

ப்ரியா க்ரிஷ்ஷை அழைத்த பின்னே தான் செய்த முட்டாள் தனத்தை உணர்ந்து அதிர்ச்சியுடன் அவள் சகோதரிகளை காண... நடந்ததை மாற்ற இயலாதென்பதை போல் உடனே தன் கருநீல விழிகள் ஒளிர முகம் இறுகி அவளை கடந்து முன்னோக்கி தாம் வீற்றிருந்த இடத்தை நோக்கி ஓடி வந்த நாகமனிதர்களை நோக்கி சென்றாள் அனு...

அதற்கு ஒரு அசைவும் கொடுக்காத க்ரிஷ் அவன் வாளால் அந்த நாகமனிதனை இரு துண்டாய் வெட்ட க்ரிஷ்ஷை கடித்த அவனோ துடிதுடித்து கீழே மூர்ச்சையாக நம் க்ரிஷ்ஷோ கடிப்பட்ட இடத்தில் நீலமாய் ஏதோ பரவுவதை காணாமல் எவ்வளவு தான் வெட்டி சாய்த்தாலும் மீண்டும் மீண்டும் உயிரற்ற ஜடங்களை போலவே எழுந்து வரும் நாகமனிதர்களின் பலவீனத்தை அறிந்து ஒரு உற்சாகத்துடன் எழுந்து ஓடினான்...

நாகமனிதனின் கூரான இரு பல் க்ரிஷ்ஷின் கழுத்தை துளைத்து உள் சென்ற சில நொடிகளிலே அந்த நாகமனிதனின் விஷம் அவனுள் சென்றிருக்க ... அந்த விஷமோ க்ரிஷ்ஷின் தீ போன்ற உடலில் பரவ இயலாமல் கடிப்பட்ட இடத்திலே கட்டியாய் சேர தொடங்கியது..

ப்ரியாவின் அலரலில் நாகமனிதர்கள் சரியாய் இவ்வளவு நேரமும் அவர்களிருந்த இடத்தை கண்டு பிடித்து விட குழந்தைகளை அதே இடத்தில் மறைத்து வைத்து நாகனிகள் அங்கிருந்து முன்னோக்கி உடனே நகர்ந்தனர்... அவர்களுக்கு ஒரு அரணாய் மோகினியும் அத்துனை வருடங்கள் பின் அவளது நாக உருவத்தை முதல் முறையாய் காட்சி கொடுத்தாள்...

இடை வரை கருப்பும் அடர் பச்சையும் கலந்த கலவையான அடர் நிற வாலும் அவளின் தலை முதல் உடல் வரை பரவியிருந்த தங்க நிறமும் தலையில் கிரீடம் போல் அழகாய் பதிந்திருந்த ஒரு மினுமினுக்கும் இரத்தினம் அவளை அந்த ரூபத்திலும் அழகாய் காட்ட அவளின் நஞ்சால் நிறைந்த நீண்ட மெல்லிய நாக்கும் கூரான விஷ பற்களும் நாகமனிதர்களின் பயத்தை தூண்டியது

அனுவின் அந்த அழகிய ஆழமான கருநீல விழிகளை கண்டதும் அழகு ஆபத்தானதென்ற பழமொழியை மறந்து அழகு ஆபத்து என்ற அப்பழமொழிக்கு உரியவளின் கண்களில் வசியப்பட்டு ஓடி வந்த நாகமனிதர்கள் மெதுமெதுவாய் சீருவதை நிறுத்த அவர்கள் நகராத படி தன் நீல நிற நீண்ட வளையத்தால் சிறை பிடித்தாள் திவ்யா...

நாகனிகளின் உதவியால் இந்த நாகமனிதர்களை தடுக்க ஓடி வந்து கொண்டிருந்த அர்ஜுன் ரனீஷ் வீர் இந்திரன் மற்றும் சத்தீஷ் க்ரிஷ்ஷின் அறிவிப்பு படி வசியத்திலிருந்த நாகமனிதர்களை வெட்டி விலாசி இரண்டு துண்டாக்கினர்...

இவ்வாறு இவர்கள் இங்கு நாகனிகளுடன் போராட .. மோகினி தன் ஆக்ரோஷத்தை கொஞ்சமும் குறைக்காமல் அவளை தாண்டி குழந்தைகளை தொட நினைக்கும் எந்த ஒரு நாகமனிதனையும் ஈவு இரக்கம் பார்க்காமல் அவள் வாளால் நசுக்கியும் இறுக்கியும் கொன்றதோடு மற்ற சிலரை தன் கொடிய விஷத்தால் மரணிக்க வைத்தாள்..

சரண் மற்றும் மகரகாந்தன் இருவரும் இரத்த கிளறியாய் மூச்சு வாங்கி கொண்டிருந்தனர்... சரணை போலவே மகரகாந்தன் வாள் பற்றிசியில் வித்தகன்.. எப்படிட்ட கலையாய் இருந்தாலும் மகரகாந்தனுக்கு நிகர் சரணே என்பதை நிரூபிக்கும் விதமாய் இருந்தது மகரகாந்தனின் ஏகாந்த பெருமூச்சுகள்...

சரண் எவ்வளவு சோர்வுற்றாலும் அவனது தோல்வியை ஒத்துக்கொள்வதாய் இல்லாததால் மீண்டும் மகரகாந்தன் அவனை நோக்கி ஆயுதத்தை ஓங்கினான்...

நாகனிகளை காக்க ஓடி வந்த நாயகன்கள் இப்போது அவர்களுடனே போரிடவும் தொலைவில் அமைச்சன்களுடன் போரிட்டு கொண்டிருந்த தோழன்கள் ஐவரை நோக்கி கோவன்கள் மூவரும் சென்றனர்...

ஏனெனில் ரவி காலில் பெற்ற ஒரு நாகமனிதனின் கடியினினால் சற்று சோர்வுற்றிருந்தான்... நாகமனிதன் கடித்த உடனே அந்த விஷம் பரவாமல் ஒரே இடத்தில் கட்டியாய் சேர்ந்ததை கண்ட ரவி அதிர்ச்சியில் கவனத்தை சிதற விட்டாலும் விஞ்ஞவெள்ளனின் தாக்குதலுக்கு இணையாய் தன் வாளை சுழற்றுவதை அவன் நிறுத்தவில்லை...

ரவியின் அதிர்ச்சியை மிதரவர்தனன் தன்னை கீழே தள்ளி விடும் போது எதற்சையாய் கவனித்த அஷ்வன்த் தன் வாளை பற்றி எடுத்து மிதரவர்தனன் அவனை நோக்கி வரவும் காலால் ஒரு உதை விட்டு அவன் தடுமாறி பின் புறம் விழவும் எம்பி எழுந்த அஷ்வன்த் அவன் எழும் முன் தன் வாளை சரியாக அவன் இதயத்தில் சதக்கென இறக்கினான்...

இதை துளியும் எதிர்பார்க்காத மிதரவர்தனன் கண்களை அகல விரித்து வாய் திறக்க இயலாமல் அஷ்வன்த்தை காண அவர்களின் பின் அஷ்வன்த்தின் ஆக்ரோஷமான முகத்தை அத்துனை தெளிவாய் கண்டு வாயடைத்து நின்றான் சத்தீஷ்...

சரக்கென தன் வாளை அவன் இதயத்திலிருந்து உருவிய பொத்து கொண்டு வந்த குறுதி புனலை அவன் அழுத்திப்பிடித்து தன்னை அதிர்ச்சியுடன் காணவும் ஏஏஏஏஏ என்ற அலரலுடன் பாய்ந்து வாளை ஓங்கி அவன் தலையை வெட்டி எடுத்தான்...

அஷ்வன்த்தின் இந்த அபாய அலரலில் அனைவரும் அவனை கவனிக்க திரும்பி நின்றிருந்த அஷ்வன்த்தின் வாள் முழுவதும் மிதரவர்தனனின் இரத்தம் படிந்திருக்க அவனது தலை உடலை விட்டு தனியாய் உருண்டு விழுந்தது...

அந்த அதிர்ச்சியிலிருந்து திடீரென தன் தோளில் பட்ட எரிச்சலிலே சத்தீஷ் வெளி வந்தான்... மிதரவர்தனன் நிலத்தில் சாயும் முன் சத்தீஷின் தோளில் சரியாக சில மணி நேரம் முன்பு சிகிச்சை நடத்தத்தப்பட்ட காயத்திலே தன் விஷம் நிறைந்த விரலால் கீறிவிட்டு கீழே விழுந்திருந்தான்...

ஸ்ஆஆ என எரிச்சலில் அலரிய சத்தீஷ் அவன் தோளில் முன்பிருந்த காயத்திலே அவன் ஐந்து விரலும் ஆழமாய் கீறியிருப்பதை கண்டு மிதரவர்தனின் தலையற்ற முண்டத்தில் ஓங்கி மிதிக்கிறேனென அவன் காலை அவனின் தகரம் போன்ற கேடையத்தில் இடித்து யம்மா என இப்போது காலை பிடித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்...

மிதரவர்தனனின் உயிரற்ற உடலை கண்டு ஒரு சில நொடிகள் சிலை போல் நின்றிருந்த அஷ்வன்த்தின் முகத்திலிருந்த சிறிய வெற்றிப் புன்னகை சத்தீஷ்ஷின் செய்கையை கவனித்ததும் விரிந்தது...

சத்தீஷ் அங்கிருந்து நகர்ந்த உடனே தீவிரத்தை குத்தகைக்கு வாங்கி கொண்ட அஷ்வன்த் ரவியை தேட அங்கோ ரவி தன் மீது விஞ்ஞவெள்ளன் கொடுத்த அழுத்தத்தை தாங்க இயலாமல் மெல்ல மெல்ல நிலத்தில் விழ தயாராகி கொண்டிருந்தான்...

அதை கண்டதும் இன்னும் அஷ்வன்த் தீவிரமாக ... சரியாக ரவி கீழ் விழவும் விஞ்ஞவெள்ளன் அவனது வாளை தன் கோரமான கொக்கரித்தலுடன் ரவியின் கழுத்தை சீவ வேண்டி வீச மயிரிலையில் ரவியை பிடித்து கீழே இழுத்த அஷ்வன்த் அவனை தாங்க விஞ்ஞவெள்ளன் வீசிய வாள் அவனை பின்னிருந்து தாக்கிய இந்திரனின் முதுகை பொத்து சென்றது...

இந்திரன் பல்லை கடித்து வலியை பொருத்து கொண்டாலும் தன் தாக்குதலில் அதை காட்டி அவனது காயத்திற்கு விஞ்ஞவெள்ளனை அலர வைத்தான்...

ரவியை உடனே கண்களால் பரிசோதித்த அஷ்வன்த் அவனது காலில் இரு ஆழமான பல் தடமும் அதை சுற்றி பெரிதாய் ஒரு கட்டியும் இருப்பதை கண்டான்..

அஷ்வன்த் : டேய் என்ன பாரு டா... கண்ண திறந்து என்ன பாரு டா... ரவி... என்ன பாரு... என அவன் கன்னத்தை பிடித்து ஆட்டினான்... அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டிருந்த ரவியின் உடலில் அந்த நஞ்சு பரவவில்லை என்றாலும் அவன் சக்திக்கு நிகரானதே யட்சினி சர்ப்ப நஞ்சும்...

ஆதலால் அதன் திறமையோடு அவனுடன் போரிட்டு கொடிருந்தது...

அஷ்வன்த் : என்ன பாரு... கண்ண மூடிடாத மச்சான்.. என்ன பாரு டா... என கத்தி கொண்டே தன் வாளை சிந்திக்காமல் ரவியின் காலில் கடிப்பட்ட இடத்திலே அழுத்தி குத்தினான்...

அந்த வலி மூளையில் சுல்லென பல்பெரிய வைக்க பெருமூச்சுடன் கண்களை திறந்த ரவி அஷ்வன்த்தின் கரத்தை இறுக்கி பிடித்தான்...

அஷ்வன்த் : தன்க் காட்.. கண்ண மூடீடாத ... நா பாத்துக்குறேன்... பல்ல கடிச்சிக்கோ டா என கூறவும் யோசிக்காமல் தன் தோழன் கூறியவையை செயல் படுத்திய ரவி அஷ்வன்த் அவன் காலை வாளால் கிளிக்கவும் அந்த வலியை பல்லை கடித்து பொருத்து கொள்ள.. அந்த நஞ்சு கட்டியாய் சேர்ந்ததால் நல்ல வேளையாக கடிப்பட்ட இடத்தை கிளித்து அது இரத்தத்துடன் கலக்கும் முன் வெளியேற்ற முயற்சித்து கொண்டிருந்தான் அஷ்வன்த்

கூற அது எளிதாய் தெரிந்தாலும் வாளால் தோளை கிளிக்கும் வலியும் அந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்கனவே முல்லாய் தைக்கும் அந்த நாக கடியின் வலியும் அந்த நஞ்சின் தாக்கமும் ரவிக்கு அளவுக்கு அதிகமான வலியை கொடுக்க அவன் கட்டுப்படுத்தியதாலோ என்னவோ அவன் கண்கள் இரண்டிலும் பாதி இரத்தம் கலக்க தொடங்கி அஷ்வன்த்தின் கரத்திலும் பிடியை இறுக்கினான்....

தன் தோழனின் வலியை அவனது பிடியிலே உணர்ந்த அஷ்வன்த்திற்கும் கண்கள் கலங்க தொடங்க அவன் உடலிலும் வலி பரவியது.. விட்டால் ரவி வலியில் மயங்கி விடுவான் என்ற நிலை வருவதற்குள் துரிதமாய் செயல் பட்ட அஷ்வன்த் அந்த நஞ்சால் உருவான கட்டியை வெளியேற்றினான்...

அது இருந்த வரை தந்த வலியை விட வெளியேறியதும் அதீத வலியை கொடுக்க ரவியின் கலரல் அந்த காடு முழுவதும் ஒலித்தது...

ஆனால் அது ஒரு நிமிடம் தான்... அந்த நிமிடம் முடிந்த மறு நிமிடம் தொடங்கியதும் காலில் கட்டிடும் முன்னே ரவி அவன் வாளை இறுக பற்றி பாய்ந்து எழுந்தான்... அஷ்வன்த் அவன் கால்களை பிடித்து தடுக்க

ரவி : என்ன விடு டா நா போறேன்.. நா அவன சும்மா விட மாட்டேன்..

அஷ்வன்த் : ச்ச நா ஏதோ நீ புதுசா கொல பன்ன போறதுக்கு கால புடிச்சு தடுக்குர மாரி டயலாக் பேசுற.. இரெண்டு நிமிஷத்துல கட்டு கட்டீடுவேன் அப்ரம் போ டா என்றவன் சொன்னதோடு நில்லாமல் இரண்டே நிமிடத்தில் அவன் அணிந்திருந்த சட்டையை கிளித்து ரவியின் காளில் இரத்தம் கசியாதவாறு இறுக்கி கட்டிட்டான்...

இப்போது மீண்டும் கம்பீரமாய் எழுந்த ரவி விஞ்ஞவெள்ளனை கணக்கின்றி கீழிருந்த எழவிடாமல் எண்ணிக்கையில்லாமல் சதக் சதக் சதக் என தன் வாளால் சுற்றி சுற்றி கீறி விலாசி கொண்டிருந்த இந்திரனருகில் சென்று அவனை தள்ளி நிற்க வைத்து விட்டு ஃபினிஷிங் டச்சிற்காய் அவனை நெருங்கி சென்றான்...

மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கி கொண்டிருந்த இந்திரன் திடீரென அனு அலரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்...

தொலைவில் அனு அவள் வயிற்றை பிடித்து படி கீழே மண்டியிட்டிருந்தாள்.. அவளருகில் இருந்த அனைவரின் முகத்திலும் பதட்டமும் அதிர்ச்சியும் கூடியது...

அமைதியின் சொரூபமாய் தன் வசியத்தால் அனைத்து நாகமனிதர்களையும் கட்டுப்படுத்தி சிலரை தங்களை தானே கொல்ல வைத்து கொண்டும் சிலரை தன் அண்ணன்கள் மற்றும் அத்தான்களின் கைகளால் கொல்ல உதவி கொண்டும் இருந்த அனு அஷ்வன்த்தின் முதல் பயங்கரமான அலரலில் ஒரு நொடி உறைந்தாள்...

ஆனால் அடுத்தடுத்து கேட்ட ரவியின் அலரல் அவளை இன்னும் தடுமாற வைக்க அந்த பயம் அவள் அடிவயிற்றில் சுல்லென்ற ஒரு வலியை உணர வைத்தது...

முதலில் அதை கவனிக்காமல் தன் கருநீல கண்களை ஒரு முறை இமைத்து தன் வசியத்தை தொடர்ந்த அனுவால் ஒரு நிலையில் தாங்க முடியாத வலி பெருகவும் அவளையும் மீறி அலரியவாறே கீழே மடிந்தாள்...

இவளின் ஒரே சக்தியினால் அந்த நூற்றுக்கணக்கானோரை அடக்கியும் மடக்கியும் எதிர்த்த அனைவரும் அதிர்ந்து போய் அவளை பார்க்க அவள் கீழே மடிந்தமர்ந்த நொடி அனுவின் வசியக்கட்டு உடைந்து அந்த நாகமனிதர்கள் மீண்டும் ஆக்ரோஷமடைந்து சீர தொடங்கினர்...

திவ்யா அவளின் கவனத்தையும் சக்தியையும் பெருக்கி அவளின் வளையத்தை விட்டு அவர்ளை வெளியேற விடாது காத்தாள் ... அவளுக்கு உதவியாய் உடனே ப்ரியா அவளின் சக்தியை அவளுடன் இணைத்து அந்த நாகமனிதர்களை ஓரளவிற்கு ஒரு பலமான வளையத்திற்குள் அடைத்தனர்...

இருந்தும் வெளியே சில நாகமனிதர்கள் இருக்க அவர்களை நாயகன்களும் மோகினியும் சராமரியாய் வெளுத்து வாங்கி கொண்டிருந்தனர்...

அனுவை தாங்க எவரும் இல்லாமலிருக்க அங்கிருந்து நகர்ந்து அவளிடம் செல்ல இயலாமல் திவ்யாவும் ப்ரியாவும் பல்லை கடித்து கொண்டனர்...

அஷ்வன்த்தும் இந்திரனும் உடனே இங்கு ஓடி வர அந்த வளையத்தை உடையாத அளவு பொருத்தி விட்டு திவ்யாவும் ப்ரியாவும் அனுவை நெருங்கினர்...

அனு வலியில் துடிக்க தொடங்கினாள்.. இருந்தும் அவளது கருநீல விழிகள் எதையோ இமைத்து இமைத்து அகலாமல் பார்த்து கொண்டிருக்க.. அருளவர்தனனை எதிர்க்க ரித்விக்குடன் போரிட்டு கொண்டிருந்த க்ரிஷ்ஷை விட்டு தன் கண்களை நொடியும் அவள் அகற்றவில்லை...

திவ்யா அனுவை தன் மடியில் தாங்கி அவளை அசுவாசப்படுத்த முயல அனுவின் கரத்தை பிடித்து அவளை அழைத்த ப்ரியாவின் மனக்கண்ணில் மின்னலென ஒரு பெரும் காட்சி சென்று மறைய.. அதை ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமர்ந்திருந்த சகோதரிகள் மூவருமே உணர்ந்து அதிர்ச்சியுடன் நிமிர்ந்தனர்...

மரத்தாலான மூன்று சவப்பெட்டிகளில் மூச்சற்று கோவன்கள் மூவர் கிடந்த அக்காட்சி ப்ரியாவின் கரம் மூலமாய் அனுவிற்கு பாய... அனுவின் கண்கள் மூலமாய் திவ்யாவிற்கும் பாய்ந்தது...

அந்த ஒரு நொடியில் அனு அவள் வலியை மறந்து அதிர்ச்சியில் எழ.. அவள் கீழே விழும் முன் இந்திரன் பிடித்து மீண்டும் அமர வைத்தான்...

இந்திரனின் பதட்டமான முகத்தை தவிப்புடன் நோக்கிய நாகனிகள் வாய் திறக்க முயலும் முன்னே கண்களில் இருந்து கண்ணீர் அருவியென கொட்டியது...

இந்திரன் : அனுமா உனக்கு ஒன்னும் இல்ல... வா மெதுவா எழுந்துரு.. என அவளை பொருமையாய் தூக்கி நிற்க வைத்தான்...

அனு : அத்தான்.. உ.ங்க..ளுக்கு ஆ.. என அனுவால் மேற்கொண்டு எதுவும் கூற முடியவில்லை...

அஷ்வன்த் அவர்களை நெருங்க நினைக்கும் சில நாகமனிதர்களை அடித்து துரத்தினான்...

அனுவை மறைவான ஒரிடத்திற்கு அழைத்து செல்ல இந்திரன் முயற்சிக்க அதற்கு முன்னே ப்ரியாவின் கரத்தை இறுக்கி பிடித்தாள் திவ்யா

கண்ணீருடன் எதையோ உணர்ந்த திவ்யாவின் கண்கள் ஆழமான நீல நிறத்தை தத்தெடுக்க ... ப்ரியா அவள் கரத்தை திவ்யாவின் வயிற்றில் வைத்து அதிர்ச்சியடைந்தாள்...

ப்ரியா : தி..திவி..

திவ்யா : பயப்புடாத ப்ரியா.. நம்ம பாப்பாக்கும் எனக்கும் ஒன்னும் ஆகாது.. க்ரிஷ் அத்தான அனுவ பாக்க கூப்டு.. என பல்லை கடித்து கொண்டு வார்த்தைகளை கூறினாள்...

ப்ரியா திவ்யாவை ஒரு கரத்தால் தாங்கி கொண்டு சத்தமாய் க்ரிஷ் அத்தான் என கத்தினாள்... அருளவர்தனனின் வாள் வீச்சில் தலையை குனிந்து தன்னை காப்பாற்றி கொண்ட க்ரிஷ் நிமிர்ந்து ப்ரியாவை நோக்க ப்ரியாவின் பரிதவிப்பான முக உணர்வுகள் தான் அங்கு செல்ல வேண்டுமென்பதை க்ரிஷ்ஷிற்கு உணர்த்தியது...

க்ரிஷ் ரித்விக்கை காண ரித்விக் க்ரிஷ்ஷிற்கு தலையசைத்து செல்ல அனுமதித்தான்... க்ரிஷ் அங்கிருந்து நகர எத்தனிக்கும் முன் தன் இரத்தம் படிந்த கரத்தால் அவன் கழுத்தை பிடித்த அருளவர்தனன் அவன் மறுகையால் க்ரிஷ்ஷின் கழுத்தை வெட்ட வாளை ஓங்க... க்ரிஷ் நகரும் முன் அருளவர்தனன் மீது மேல் எகிரி பாய்ந்த ரித்விக் அவனை வாளால் நொடியில் அருளவர்தனனின் தலையை சீவி எடுக்க தன் முதுகில் சடாரென தெறித்த இரத்தத்தில் நிகழ்ந்ததை உணர்ந்து க்ரிஷ் திரும்ப தலை தனியே உருண்டோட கீழே விழுந்தான் அருளவர்தனன்...

ரித்விக் : வா என க்ரிஷ்ஷை இழுத்து கொண்டு ப்ரியாவிடம் ஓடினான்...

இவர்கள் அங்கு ஓடுவதற்குள் திவ்யாவின் வலி அதிகரித்திருந்தது... திவ்யா வலியில் துடிப்பதை தூரத்திலிருந்தே கண்டு கொண்ட க்ரிஷ் " இந்திரா " என கத்தி கொண்டே ஓடி வர சரியாக இந்திரனும் அனுவை ஓரிடத்தில் பத்திரமாய் இருக்க வைத்து விட்டு வெளியே வந்தான்...

க்ரிஷ் : திவிய கூட்டீட்டு போ உடனே...

இந்திரன் : நீ அனு கிட்ட போ டா.. என அந்நிலையிலும் சகோதரனை எச்சரித்து விட்டு தன் மணையாளை தூக்கி கொண்டு உடனே காட்டிற்குள் சென்றான்...

க்ரிஷ் அனுவை தேடி காட்டிற்குள் ஓட ... க்ரிஷ்ஷை கண்டதும் யுவா என அழுகையை அடக்கி அழைத்து அவனுக்கு தானிருக்கும் இடத்தை காட்டி கொடுத்தாள் அனு..

உடனே அனுவிடம் ஓடிய க்ரிஷ் அவளின் கரத்தை பிடித்து நெஞ்சில் சாய வைத்து கொண்டான்...

திவ்யாவை அசுவாசப்படுத்திய இந்திரன் அவள் திடீரென அழுவதை பல்லைக் கடித்து நிறுத்தி கொண்டு பின் கண் காட்டவும் இந்திரன் உடனே திரும்பி பார்க்க க்ரிஷ் ஒரு சிறு பெண் குழந்தையை கரத்தில் ஏந்தி கண்களில் கண்ணீருடன் நடந்து வந்தான்...

அதை கண்டதும் தனிச்சையாய் இந்திரன் மற்றும் திவ்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க அவள் நெற்றியில் இதழ் பதித்தான் இந்திரன்...

தன் மகளை ஈண்டெடுத்த அனு அவளை கைகள் நடங்க தூக்கும் தன் கணவனை இறுதியாய் கண்டு கண் மூடிட அனுவின் நெற்றியில் மிருதுவாய் இதழ் பதித்த க்ரிஷ் அவள் கன்னத்தில் விழுந்த அவனது கண்ணீரை பட்டும் படாமல் துடைத்து கொண்டு குழந்தையுடன் வெளியேறி அவன் தோழன்களை தேடினான்...

கொஞ்சம் கொஞ்சமாக தன் முதல் அழுகையை அழுத அவன் மகளின் அழுகையில் போரிலிருந்த அனைவரும் திரும்பி நோக்கினர்...

ப்ரியாவிடம் சென்ற க்ரிஷ் குழந்தையை அவளிடம் கொடுக்க ... அவளை ஆசையாய் வாங்கி கொண்ட ப்ரியா மெதுவாய் இதழ் பதித்து சத்தமின்றி கண்ணீர் விட ... அவர்களை நோக்கி ஓடி வந்த அஷ்வன்த்தை கட்டி அணைத்த க்ரிஷ் பின் உடனே அனுவை மருத்துவமனைக்கு அழைத்து போக கூறினான்...

அஷ்வன்த் என்ன கூறிகிறான் என்பதை போல் அவனை பார்க்க க்ரிஷ்ஷின் தீர்க்கமான முகம் அஷ்வன்த்தின் தலையை அசைத்தது...

அதே நேரம் விஞ்ஞவெள்ளன் இனி ஓரு அடி கூட நகர முடியாத படி பெருமூச்சுடன் கீழே விழுந்தான்... ரவி ஏக பெருமூச்சுடன் உடல் நிறைந்த கீறல்களுடன் இரத்தக் காயங்களுடன் பெருமூச்சுடன் நிற்க.. " நா பாத்துக்குறேன் ப்ரோ.. நீ நகரு " என அவன் தோளில் தட்டி அமர வைத்து விட்டு விஞ்ஞவெள்ளனுக்கு முன் சென்றான்...

விஞ்ஞவெள்ளன் சற்று நிமிர்ந்து அவன் முன் நின்ற சத்தீஷை காண... சத்தீஷை மெதுமெதுவாய் சுற்ற தொடங்கிய சுழல் ஒன்று ஆக்ரோஷமாய் விஞ்ஞவெள்ளனை அதனுள் இழுத்து கொண்டு பேய் வேகத்தில் சுழல தொடங்கி அவனுக்கு மரண பயத்தை கொடுத்தது...

சத்தீஷ் : தாம் செய்த இச்ச செயலுக்கு இனி வாழ்நாள் முழுவதும் இதே சுழலில் அடைந்து கிடந்து சாக இயலாமல் கூனி குருகி மருண்டு மடிவாயடா என பல்லை கடித்து கொண்டு கர்ஜித்தவன் விஞ்ஞவெள்ளனது மரண ஓலங்கள் அந்த போர்களத்தையே நிறைக்கவும் தன் இரு கைகளால் அந்த சுழலை வானுலகத்தில் நிரந்தரமான சிறையாய் உருவாக்கி குத்தியிரும் குழையுயிருமாய் இருந்தவனை வெளி வர இயலாதபடி அடைத்தான்...

எஞ்சியிருந்த சாகாரகாந்தனும் மகரகாந்தனும் மட்டுமே.. சரண் தன் இடது தோளில் விழுந்த ஒரு வெட்டினால் கரத்தை அசைக்க முடியாமல் கீழே விழ தன்னால் அசைய முடியாவிடிலும் இவனை விட கூடாதென மகரகாந்தன் தன் இரு கரத்தால் அவன் வாளை பற்றி சரண் மீது ஓங்க சரண் உருண்டு மறு புறம் பிரள... அவன் கழுத்தில் விழ வேண்டிய வாள் மண்ணில் விழ.. மீண்டும் வாளை ஓங்கிய மகரகாந்தனின் காலுக்கு இடையே தன் காலை விட்டு தள்ளி விட்ட சரண் வலியை பொருத்து கொண்டு எழ முயற்சிக்க.. விஞ்ஞவெள்ளன் அவனை மீண்டும் பிடித்திழுத்தான்...

வலியுடன் கீழே விழுந்த சரண் அதற்கு மேல் பொருக்காமல் அவன் இரு காலையும் மடக்கி மண்ணில் அடிக்க அவன் தந்த அதிர்வினால் நிலத்திலிருந்து மகரகாந்தனின் இடதிலும் வலதிலும் புடைத்த இரு பெரும் பாரைகள் அவனை ஒன்றோடொன்று பிடித்து நசுக்கி அதிலே அசைய விடாமல் அடைத்தது...

சரண் : உமக்கு மூச்சற்று மரணிக்க தான் ஆசையென்றால் அதற்கு தடையாய் என்றும் எவரையும் யான் நிற்க விடேனடா.. என உரக்க கூறியவன் தன் தோழர்களை நோக்கி திரும்பி நடந்தான்..

மூச்சற்று கழுத்தில் கிடைத்த பெரும் காயத்தினால் கீழே சரிந்த சாகாரகாந்தனை உணர்ச்சியற்று ஏறிட்ட முகில்

முகில் : நீவிர் தற்போது மரணித்த பிணத்திற்கு சமமடா.. பிணத்தை கொன்று எம் வாளுக்கு கோழையின் வாள் என்ற நாமம் கொடுக்க யான் மூடனில்லை.. என கர்ஜிக்கையில் அதை தன் இறுதி மூச்சுடன் பார்த்த சாகாரகாந்தன் அவனது கண்களை மூடினான்...

இப்படி அனைவரையும் திர்த்து கட்டியதும் தோழர்களிடம் இவர்கள் ஓட அங்கோ அஷ்வன்த் மயங்கிய தன் ததங்கை அனுவை குழந்தை போல் இரு கைகளும் மிருதுவாய் தாங்கி நின்றிருந்தான்...

அவர்களை சுற்றி எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நாகமனிதர்களை வளவன் மோகினியின் உதவியுடன் முழுதாய் தீர்த்து கட்டினர் ரனீஷ் வீர் மற்றும் அர்ஜுன்

சத்தீஷ் ஓடி சென்று ப்ரியாவை அணைக்க குழந்தையுடன் அவனை கண்ணீருடன் அணைத்து கொண்ட ப்ரியாவிற்கு சடாரென வலி எடுத்தது...

அதை அவளின் உடலின் அதிர்வினால் உணர்ந்த சத்தீஷ் நேரம் தாமதிக்காமல் குழந்தையை க்ரிஷ்ஷிடம் கொடுத்து விட்டு ப்ரியாவை காட்டிற்குள் அழைத்து சென்றான்...

அதே நேரம் மயங்கியிருந்த திவ்யாவை இந்திரனும் அவள் ஈண்டெடுத்த செல்வ முத்தை சரணும் மென்மையாய் தூக்கி கொண்டு வந்தனர்...

ப்ரியா : ஈ..ஷ்வர்.. ஈஷ்வர் .. எனக்கு பயமாயிருக்கு என சத்தீஷின் தோளை பிடித்து கொண்டாள்..

சத்தீஷ் : ரிலக்ஸ் தேவி.. உனக்கு ஒன்னும் இல்ல... ரிலக்ஸ்...

ப்ரியா : ப்லீஸ் என்ன விட்டு போய்டாதீங்க ஈஷ்வர்... என்னா..ல... ஆஆ

சத்தீஷ் : ஷஷ்ஷ் ரிலக்ஸ் தேவி

ப்ரியா : இல்ல .. ஈஷ்..வர் நீங்க என்ன விட்டு போய்..டுவீங்க.. அம்மா... க்ரிஷ் அத்தான் இந்திரன் அத்தான் அப்ரம் நீங்க மூணு பேரும் ஒரு சவப்பெட்டிக்குள்ள இருக்குரத நான் பாத்தேன்... எங்க மூணு பேரால உங்க மூணு பேர விட்டு இருக்க முடியாது என கதறி அழுதாள்...

சத்தீஷ் : ஷ்... உங்கள விட்டு நாங்க எங்கையும் போக மாட்டோம் தேவி.. எங்களால மட்டும் நீங்க இல்லாம வாழ முடியுமா... நீங்க மூணு பேர் இல்லாம உன் அண்ணனுங்க என் தங்கச்சிங்க எல்லாரையும் விட்டுட்டு தனியா போனா நாங்க மூணு பேர் செத்து போய்டுவோம் டி

ப்ரியா : ப்லீஸ் ஈஷ்வர்... ஆ.. ஆ.. இப்..டிலா..ம் சொல்.லாதீங்க...

அங்கோ இந்திரன் திவ்யாவை சரணிடம் தந்து விட்டு தன் குழந்தையை ரித்விக்கிடம் இருந்து வாங்கினான்...

சத்தீஷ் பத்து நிமிடத்தின் பின் மோகினி அக்கா என குரல் கொடுக்க மோகினி சில நொடிகளில் முகத்தில் மென்புன்னகையுடன் சிறு மலர் மொட்டை ஏந்தி வந்தாள்...

சத்தீஷ் சில நிமிடங்கள் பின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த ப்ரியாவை தூக்கி வந்தான்...

சத்தீஷ் : அனு திவ்யா ப்ரியாவ அழச்சிட்டு உடனே ஹாஸ்பிட்டல் போங்க டா என ப்ரியாவை ரித்விக்கிடம் கொடுத்தான்...

ரித்விக் : ஏன் நீ என்ன பன்ன போற

இந்திரன் : நாங்க ஷேஷ்வமலை போகனும்... நீங்க காயங்களுக்கு சீக்கிரம் மருந்து போடுங்க.. நாங்க ஷேஷ்வமலைல உள்ள எல்லாரையும் காப்பாத்தனும்...

மோகினி : நானும் உங்க கூடையே இருக்கேன்...

க்ரிஷ் : இல்லக்கா.. ஒரு முடிக்க வேண்டிய வேலை இருக்கு.. சர்ப்பலோக வாயில அடைக்கனும்... அதனால நாங்க மட்டும் போறோம்...

முகில் : டேய் அப்போ குழந்தைங்க..

இந்திரன் : ஷேஷ்வமலைக்கு தான டா போறோம்... நாங்க பாத்துக்குறோம் என அவர்களை வலுக்கட்டாயமாய் அனுப்ப நம் சஹாத்திய சூரர்களும் நாகனிகளின் நிலை கவலைகிடமாய் உள்ளதால் சரியென அமோதித்து மற்ற ஆண் குழந்தைகளையும் உடன் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்...

கோவன்கள் மூவரும் அவரவர் குழந்தைகளை கூட்டி கொண்டு காட்டிற்குள் நடை போட நம் நாயகன்கள் துரதிர்ஷட வசமாய் இறந்ததை போல் கிடந்த சாகாரகாந்தனையும் தலை தனியாய் உடல் தனியாய் கிடந்த அருளவர்தனன் மற்றும் மிதரவர்தனன் என மூவரும் மறைந்திருப்பதை கவனிக்க தவறினர்...

ஷேஷ்வமலையில் வெற்றிகரமாய் நாகமனிதர்களை வென்று அனைவரையும் காத்திருந்தனர் காவலணியும் நம் நான்கு வீராங்கனைகளும்...

ஆனால் இந்த களோபரங்களில் அஜயை ஒரு நாகமனிதன் தூக்கி சென்றதை தவறுதலாய் எவரும் கவனிக்கவில்லை...

எதுவும் பேசிக்கொள்ளாமல் கானகத்தில் நடந்து கொண்டிருந்த கோவன்கள் மூவரும் ஒரு அழுகையை கேட்டு திடுக்கிட அவர்களின் கண் முன்னே ஒரு நாகமனிதன் அஜயை தூக்கி கொண்டு மின்னல் வேகத்தில் சீரி சென்றான்...

இதை எதிர்பார்த்திடாத நம் நாயகன்கள் அதிர தன் கையிலிருந்த குழந்தையை க்ரிஷ்ஷிடம் கொடுத்த சத்தீஷ் உடனே அவனை பின் தொடர்ந்து அதிவேகமாய் ஓடினான்...

பின் தொடர்ந்து க்ரிஷ்ஷும் இந்திரனும் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் ஓடி வர அப்போதே இவர்களிருவரும் சத்தீஷின் தோளில் கருமையான ஊதா நிறத்தில் ஒரு பெரிய கட்டி உருபெற்றிருப்பதை கண்டனர்...

ஒரு கட்டத்தில் அந்த நாகமனிதனை கை நீட்டி சத்தீஷ் பிடிக்கும் நேரத்தில் சட்டென அஜயை முன்னோக்கி தூக்கியெறிந்தான் அந்த நாகமனிதன்...

அஜய் என கத்திய சத்தீஷ் அவனை சட்டென பிடித்த சாகாரகாந்தனை கண்டு அதிர்ந்தான்... அவன் சாகாவரம் பெற்றவனாயிற்றே... முகில் கழுத்தை வெட்டியும் அவன் இறக்கவில்லை...

க்ரிஷ் மற்றும் இந்திரனும் அவனை கண்டு அதிர்ந்து நிற்க.. சாகாரகாந்தனின் கரத்தில் இருந்த அஜய் பெரிப்பா என கத்தியழுதான்...

சாகாரகாந்தன் : ஹாஹா இறுதியில் எமது ஒரு வேட்டையை அடைந்து விட்டேன் கோவன்களே... தம்மால் என் செய்ய இயலும்...

இந்திரன் : ஒரு வேட்டையா... என் கூற வருகிறாய் நீ..

சாகாரகாந்தன் : ஆம் கோவனே... எம் சேனை தலைவன் மருதீபனின் மகன்கள் எம் ஞாலத்திலிருந்து சட்டத்திட்டங்களை மீறி பூலோகம் வந்ததால் அவர்களை தூக்கி சென்றிடவும் அத்துடன் தம் அனைவரின் மகவுகளையும் கிடத்தி செல்லவே தான் யாம் ஐவரும் பூலோகத்திற்கு விஜயம் புரிந்தோம்...

நல்லவேளையாக பராக்ரம வீரன்களின் உண்மை இன்னும் தெரியவில்லை என பெருமூச்சு விட்ட சத்தீஷ் சாகாரகாந்தன் எதிர்பாராத நேரம் அவன் காலால் உதைக்க சாகாரகாந்தனோ அவன் சிறு கத்தியை எடுத்து சரியாக குறி பார்த்து சத்தீஷின் தோள் பட்டையில் இறக்கினான்...

அவன் இறக்கிய கத்தி சரியாக அந்த கட்டியை பிளக்க வைக்க அந்த நொடி சத்தீஷின் உடல் முழுவதும் அந்த நஞ்சு பரவி சத்தீஷை நிலை குழைய செய்தது...

க்ரிஷ் மற்றும் இந்திரன் சத்தீஷ் என அலரி கொண்டு முன் வர .... க்ரிஷ் சத்தீஷ் கீழ் விழவும் அவனின் இடப்புறத்தை பிடிக்க வலப்புறம் அவனை தாங்கிய இந்திரனின் கழுத்தை தன் நகங்களை கூராக்கி இறுக்கி பிடித்தான் சாகாரகாந்தன்

அவனின் நகங்கள் இந்திரனின் கழுத்தை பொத்துகொண்டு உள் சென்று அவன் கழுத்திலும் அதே போல் நஞ்சு கட்டியாய் சேர தொடங்கியது...

க்ரிஷ் சத்தீஷின் காயத்தையும் இந்திரனை சாகாரகாந்தன் ஏதோ செய்வதையும் கண்டவன் அவன் இந்திரனின் கழுத்தில் கத்தியை குத்த செல்வதை கண்டு அவனை கீழே தள்ளி விட்டான்....

அஜயுடன் கீழே விழுந்த சாகாரகாந்தனை இந்திரன் அவனது நீர் சக்தியால் சிறை பிடிக்க பின்னிருந்து அவன் மீது பாய்ந்த நாகமனிதன் சதக் சதக் என விடாது இந்திரனை கடித்தான்...

அந்த வலி ஒன்றும் செய்யவில்லையெனினும் அதில் இந்திரன் தடுமாறியதால் நீர் வளையம் உடைய சத்தீஷிற்கு எழ உதவி கொண்டிருந்த க்ரிஷ்ஷின் கழுத்தில் அவனது மறு கத்தியை இறக்கினான் சாகாரகாந்தன் ..

இப்போது க்ரிஷ்ஷின் உடலிலும் அதே நஞ்சு பரவ தொடங்க .... கோவன்கள் மூவரின் நிலையும் மோசமானது...

சாகாரகாந்தன் மகிழ்ச்சியில் கிடந்து கொக்கரித்தான்...

சாகாரகாந்தன் : ஹாஹாஹா எமது மகிழ்ச்சியை தெரிவிக்கவே அளவில்லை கோவன்களே... இந்த அகில பிரம்மாண்ட பிரவஞ்சத்தின் ஒரே அதிசக்தியான கோவன்கள் மூவரையுமே எம் வம்சம் இன்று மரணிக்க வைக்க போகிறது.... இன்னும் சிறு நாழிகள் தான்... பின் பின்... ஹாஹாஹா தமது ஞால நிலம் தம் மூவரின் பிணத்தை தாங்கும்.... அதன் பின் கூற வேண்டுமா... இந்த ஒட்டு மொத்த பிரவஞ்சத்தையும் எம் ஐவரின் கரத்திற்குள் கொண்டு வந்து எமது பிரபுக்களையும் விடுவித்து உமது தோழர்களையும் கொன்று குவிப்போம் ஹாஹாஹா

இந்திரன் : உம் கொக்கரித்தல் என்றும் நிகழாத டா.. யா..ம் ஹுஹு மூவர் இல்லாவிடினும் எம் தோழன்களை சரிகட்ட உம் ஐவரால் கனவிலும் இயலாது.. எம் மூவரை நீவிர் இப்படி கோழை தனமாய் பிற முதுகில் குத்தி ஏமாற்றியிருக்கலாம்.. ஆயின் எமது தோழர்களை தம்மை விட மாட்டார்கள் என இருமியவனின் வாயிலிருந்து இரத்தம் பீரிட்டது...

நாகமனிதன் அவன் உடல் முழுவதும் ஐந்திற்கும் மேற்பட்ட நஞ்சு கட்டிகளை சேமித்து அனைத்தையும் கத்தியால் குத்தி கிளித்து பரவ வைத்திருந்தான்...

சாகாரகாந்தன் : ஹாஹா தம் மூவரையே மடிய வைத்து எமக்கு அவ்வெண்வரை தகர்க்க தெரியாதா... எமதர்மா அவ்விந்தைகளை அவர்களிடமிருந்து அகற்று என கூற இவ்வளவு நேரமும் கோவன்களின் இரத்தத்தை சுவைத்து கொண்டிருந்த நாகமனிதன் இவர்களின் அடிமை எமதர்மனே ஆவான்...

எமதர்மன் குழந்தைகளை தொட வரவும் நிமிர கூட இயலவில்லை என்றாலும் காலால் உதைத்து அவனை தள்ளி விட்ட சத்தீஷ் அவனை குரூரமாய் முறைத்தான்...

சத்தீஷ் : எமது புத்திரியின் மீது உம் கரம் பட்டது ... ஈவு இரக்கமின்றி உம்மை மூர்ச்சையாக்கி விடுவேன் என அவன் கண்களில் அந்நிலையிலும் தெரிந்த அந்த கொடூரமான சினத்தை கண்டு எமதர்மன் சில அடிகள் பின் வாங்கினான்...

க்ரிஷ் : செவி மடுப்பாய் சாகாரகாந்தா... எம் புத்திரகளான சித்ரியா வேதித்யா மற்றும் எழிலினியாவை தம்மால் என்றும் நெருங்க இயலாது... அதற்கு தந்தை யாம் மூவர் அனுமதிக்கவும் மாட்டோம்... என பல்லிடுக்கில் கர்ஜித்தவனின் கண்களில் தெரிந்த தீ ஜ்வாலை எரிமலையாய் வெடிக்க காத்திருந்தது...

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கும் போதே சரியாக சடாரென எழுந்த இந்திரன் சாகாரகாந்தனை அவன் பின் இருந்த சர்ப்பலோக வாயிலினுள் தள்ள க்ரிஷ்ஷின் கண்கள் வழி பாய்ந்த தீ பந்துகள் சாகாரகாந்தனை எரித்து அந்த வாயிலின் வழியே உள்ளே தள்ள அந்த தீயிலும் நகன்று முன்னேறி வந்த சாகாரகாந்தன்.. எமதர்மன் க்ரிஷ்ஷின் கழுத்தை மீண்டும் கடித்து அவன் திசை மாறிய ஒரே ஒரு நொடியில் அவன் கரத்திலிருந்த சித்ரியா மற்றும் எழிலினியாவை பிடுங்க அவன் பிடுங்கிய வேகத்தில் கீழே விழுந்த க்ரிஷ் எழும் முன் சத்தீஷை உதைத்து தள்ளி விட்ட சாகாரகாந்தன் இந்திரனிடமிருந்த வேதித்யாவையும் பிடுங்க சினம் தலைக்கேற எழுந்த இந்திரன் அவனிடம் தமது குழந்தைகள் இருப்பதை கண்டு பின் வாங்கினான்...

சரியாக ஐந்து வயது அஜய் பயத்தில் அலரும் சத்தம் கேட்டு இந்திரன் அஜயை தூக்க வந்த எமதர்மனை தள்ளி விட எமதர்மன் இந்திரனை கண்டு சீர... அதற்கு திரும்பி இந்திரன் பார்த்த பார்வையில் பம்மி சர்ப்பலோக வாயிலுக்குள்ளே புகுந்து கொண்டான்...

தட்டுத்டுமாறி அஜயை தூக்கிய இந்திரன் அவன் கண்களை இறுக்க மூடி அழுவதை கண்டு சற்று வலியுடன் கூடிய புன்னகையுடன் " அஜய் கண்ணா உனக்கு ஒன்னும் இல்ல அப்பாவ பாரு " என கூறி அவன் கண்களை திறந்ததும் மென்மையாய் சிரித்தான்....

அவன் உதட்டிலிருந்த இரத்தத்தை கண்டு அஜய் இன்னும் அதிர்ந்து பயத்தில் அப்பா என அலர அவனை தூக்கி கொண்ட இந்திரன் இயலாமையுடன் சர்ப்பலோக வாயிலை நோக்கி கொண்டிருந்த சகோதரன்களை நெருங்கி சென்றான்...

க்ரிஷ் மற்றும் சத்தீஷின் உடல் இருக்கும் நிலையை கண்டு அஜய் பயத்தில் நடுங்க மென்மையாய் புன்னகைத்த அவ்விருவரும் தங்களுக்கு ஒன்றுமில்லை என்பதை போல் இந்திரனுடன் அவனை இறுதியாய் அணைத்து கொண்டனர்...

கோவன்கள் மூவரின் நிலையும் இப்போது இறுதி நிலையை நோக்கி செல்ல சரியாக கேட்ட இளவல்களே என்ற மோகினியின் அலரலை கேட்டு மூவரும் பொருமையாய் திரும்பி பார்த்தனர்... மோகினி கண்ணீருடன் இவர்களிடம் ஓடி வர... அவள் பின் அஷ்வன்த் வீர் சரண் மற்றும் அர்ஜுன் செயலற்று போய் நின்றிருந்தனர்...

மோகினியிடம் அஜயை கொடுத்த இந்திரன் அவளை கண்டு புன்னகைக்க மோகினியினால் அழுகையை அடக்க இயலவில்லை...

மோகினி : என்ன டா இது... உ..உங்களுக்கு எப்டி நாகக்கடி பட்டுச்சு... ஏன் எங்க கிட்ட முன்னாடியே சொல்லல... இறைவா நா இப்போ என்ன செய்வேன்... என கதற வீர் ஓடி வந்து விழ இருந்த க்ரிஷ்ஷை அணைத்து கொண்டான்

வீர் : டேய் க்ரிஷ்... என்ன டா ஆச்சு உங்களுக்கு... எங்கள பாரு டா

ஆனால் க்ரிஷ் எதற்கும் பதிலளிக்கவில்லை... அந்நிலையிலும் அவன் இல்லை... வீரின் முதுகை மட்டும் பொருமையாய் தட்டி கொடுத்தான்..

இந்திரன் : நாங்க போக வேண்டிய நேரம் டா... எங்க கவனமின்மையால அந்த பாம்புகாரன்.. ஹுஹு எங்கள கடிச்சிட்டான்... என இந்திரன் ஒவ்வொரு முறை இருமும் போதும் இரத்தம் பீரிட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவனது இரத்தம் ஊதா நிறத்தில் தெரிந்தது...

சத்தீஷ் : தேவி கிட்ட என்னால அவளுக்கு கொடுத்த வாக்க காப்பாத்த முடியலன்னு சொல்லுங்க டா என்றபடி அஷ்வன்த்திடம் நெருங்கி சென்றவன் அவனை தாவி அணைத்து கொள்ள தோழர்கள் நாழ்வருக்கும் கண்ணீர் அணையை இடித்தது

சரண் : ஏன்டா இப்டிலாம் பேசுறீங்க... உங்கள சரி பன்னீடலாம் வாங்க

மோகினி : யட்சினி சர்ப்ப நஞ்சுக்கு மாற்று மருந்தே இல்ல இளவா.. அதோ..ட அதோட இப்..போ மூணு பேருக்கும் கிடைச்சிருக்க கடியையும் அவங்க உடலோட நிறத்தையும் பார்த்தா விஷம் மூளையோட கலந்துருச்சு என அஜயை கட்டி கொண்டு கதறி அழுதாள்...

சரண் : டேய் கொ..கொ.ழந்தைங்க எங்க டா என கேட்கையில் கோவன்களாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...

சத்தீஷ் : எங்களால அவன் கிட்டேந்து காப்பாத்த முடியல டா.... என தன் தோளில் கதறி அழுபவனை என்ன சொல்லி தேற்றுவதென அஷ்வன்த்திற்கும் தெரியவில்லை...

க்ரிஷ் : ஆ..னா அ..வ..ங்க..ளு..க்கு எ..எது..துவும் ஆ..ஆகா...து... ந..ம்..ம கு..குடும்பத்தை..யும் இ..ந்..த உலக..த்தை..யும் அவங்..க கிட்..ட இருந்து நீ...நீங்க தான் பாது....கா..க்கனும்... நீ..ங்க இருக்குரதால தான் டா.. நாங்க இப்போ ஒ...ரு நிம்மதி..யோட போ..க போ..றோம்... என வீரிடம் கூறியவனும் இப்போது இரத்தத்தை கீழே சிந்தினான்...

மோகினி : எங்க போக போறீங்க என்ன சொல்றீங்க...

இந்திரன் : இன்னும் நா..ங்க அந்த வாயில அடைக்கல அக்கா.. அவனுங்க இன்னமும் அழியல... திரும்பவும் வருவாங்க... ஆனா இப்போ வர கூடாது... நம்ம பசங்க எல்லாத்துக்கும் தயாராகனும்... தகுந்த நேரத்துல அவங்க இந்த உலகத்த காப்பாத்த வரனும் என மூச்சை இழுத்து இழுத்து தீவிரமாய் கூறினான்....

சத்தீஷ் : ஒரு விஷயத்த நீங்க செஞ்சே ஆகனும்... சித்து ருத்து அத்து வேதபுரத்துல இருக்க கூடாது என கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைய சத்தீஷ் தொடர்ந்தான்

சத்தீஷ் : மூணு பேரையும் மூணு திசைல தனி தனியா அனுப்புங்க... அவங்க ஒருத்தர ஒருத்தர் சந்திச்சிக்க கூடாது... நம்ம குடும்பத்தையும் சேர கூடாது...

அர்ஜுன் : டேய் பைத்தியம் புடிச்சிடுச்சா உனக்கு... அவனுங்க குழந்தைங்க டா... எங்க தனியா அதுவும் இந்த வயசுல வேற வேற திசைல அனுப்ப சொல்ற

க்ரிஷ் : சொன்னத செய் அஜ்ஜு ... எங்க மூணு பேரோட இரத்தம் யட்சினி சர்ப்ப வம்சத்துக்கு கிடைக்கவே கூடாது... நாங்களே இப்போ எங்கள அழிச்சிக்க தான் போறோம்.... சித்து ருத்து அத்து தப்பித்தவறி அவங்களுக்கு கிடச்சிட்டா அவங்கள பலி கொடுத்து எங்க இரத்தத்த கொண்டு உலகத்தையே அழிக்க போதுமான அதிசக்திய புதிப்பிச்சிருவாங்க... அது நடக்கவே கூடாது என காட்டமாகவும் அதே நேரம் தீர்மானமாகவும் அடித்து கூறினான்

இவர்கள் இவ்வாறு கூறுகையில் மோகினிக்கு ஏதோ புரிபட்டாலும் அவர்ளை பற்றிய உண்மை கோவன்களுக்கு தெரியுமோ என்ற சந்தேகத்துடன் அவர்களை நோக்கினாள்...

இந்திரன் : ஜாக்கிரதையா இருங்க.. நம்ம உலகத்த விட்டுடாதீங்க என்றவன் தன் சகோதரன்களை காண தோழர்களிடமிருந்து பிரிந்து வந்த க்ரிஷ் மற்றும் சத்தீஷ் தட்டுத் தடுமாறி இந்திரனுடன் அந்த வாயிலை நோக்கி சென்றனர்...

சஹாத்திய சூரர்கள் அதை காண இயலாமல் அவர்களை தடுக்க ஓரடி எடுத்து வைக்க சடாரென க்ரிஷ் அவர்களை திரும்பி பார்த்தான்...

அவனது கண்கள் இப்போது எரிமலையின் மறு உருவமாய் ஆக்ரோஷத்துடன் மிளிர... அவன் கண்ணசைத்ததும் தனிச்சையாய் உருவான ஒரு தீ மதில் அவர்களை முன்னோக்கி வர விடாமல் நடுவில் எழுந்தது...

அஷ்வன்த் வீர் சரண் மற்றும் அர்ஜுன் கத்தி கதறினர்.... சரண் அவனது நில அசைவுகளை உபயோகிக்க நினைத்தாலும் அது கோவன்களிடம் பளிக்கிவில்லை..

சர்ப்பலோக வாயில் முன் சென்று நின்ற கோவன்கள் ஒருவர் மற்றவரின் கரத்தை இறுக்கிபிடித்து அவரவர் அதிசக்தியை அந்த வாயில் மீது தாக்க தொடங்கினர்...

அது அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சக்தியையும் உடலிலிருந்து உரிஞ்ச தங்களின் இறுதி மூச்சுள்ள வரை போராடிய மூவரின் அதி சக்திகளும் ஒரு பெரும் சக்தியாய் அந்த வாயிலை அடைக்க அதற்கு முன்னே வாயில் அடைக்கப்படும் போது வெடித்து சிதறும் அதிர்வில் க்ரிஷ்ஷின் தீ சக்தியும் இணைந்து ஒரு எரிமலை வெடிப்பதை போல் வெடித்து சிதறி அந்த மதிலுக்கு மறு புறம் இருந்தவர்களின் கண்களையும் கூசச்செய்து நிற்க விடாமல் கீழே தள்ளி விட ... கோவன்களின் இறுதியாய் கேட்ட பயங்கரமான சக்தி வாய்ந்த அலரலுடன் அந்த வாயில் அடைந்தது

சஹாத்திய சூரர்கள் தாங்க மாட்டாமல் கதற அப்போதும் அவர்களுக்கு அரணாய் நிலைத்து நின்ற அம்மதில் மெதுமெதுவாய் உருகி கரைய கோவன்கள் நின்ற இடத்தில் சாம்பம் கரைய தொடங்கியது

மரணம் தொடரும்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro