Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 33

மணித்துகள்கள் கரைந்து மணி நேரங்கள் கடந்து கதிரவன் விடியலை தேடி உதித்திருந்தான்..

தன் வயிற்றில் கை வைத்து கொண்டு பொருமையாய் கட்டிலில் இருந்து எழுந்தாள் மது.. அவளருகில் இன்னும் நிரு உறங்கி கொண்டிருக்க.. நிருவை கட்டி கொண்டு கயல் அசந்து உறங்கி கொண்டிருந்தாள்..

தன்னவன் இன்னுமா உறங்க வரவில்லை என அறையை சுற்றி பார்த்த மது பொருமையாய் எழுந்து காலை கடன்களை முடித்து கொண்டு வெளியே சென்றாள்..

அங்கோ இரண்டாம் மாடியின் ஹாலில் இருந்த சோபா ஒன்றில் முகில் சுருங்கி படுத்திருக்க.. அவனருகில் கையை நீட்டி அதில் சாய்ந்தவாறு ரித்விக்கும் அவனுக்கு கீழ் அவன் மடியில் சாய்ந்தவாறு அர்ஜுனும் சோர்வாய் அமர்ந்து உறங்கி கொண்டிருந்தனர்..

ரவியும் சரணும் குறுக்கும் நெடுக்குமாய் கண்களை தேய்த்து கொண்டும் கொட்டாவி விட்டு கொண்டும் அவ்வப்போது தூக்கத்தில் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தனர்...

இவன்களை வித்யாசமாய் பார்த்த மது அவர்களருகில் நடந்து வந்தாள்.. அவளின் கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்த ரவி

ரவி : குட் மார்னிங் மதும்மா.. என்னடா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிட்ட... என அவளின் கையை பிடித்து அழைத்து சென்று கதிரையில் அமர வைத்தான்...

மது : முளிப்பு வந்துடுச்சுண்ணா.. அது பிரச்சனை இல்ல.. இன்னுமா யாரும் தூங்க போகல...

சரண் : ஹ்ம்.. தூங்கனும் மது..

மது : என்னாச்சு.. ரொம்ப முக்கியமான வேலைன்னு சொன்னியே அண்ணா..

சரண் : ஆல்மோஸ்ட் சக்ஸஸ் தான் பட் என ரவியை பார்க்க

ரவி : ஹ்ம்ம் எங்க முயற்சி முடிஞ்சிடுச்சு... இப்போ அனு திவி ப்ரியா கைல தான் இருக்கு...

நிரு : என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க.. என கண்களை தேய்த்தவாறு தூக்கம் கலையாத முகத்துடன் வெளியே வந்தாள்... அவள் தலையில் செல்லமாய் கொட்டிய சரண்

சரண் : எந்திரிச்சதும் பல்லு வளக்கனும்ங்குர பழக்கமே இல்ல குட்டி உனக்கு.. பட் கெர்ள்...

நிரு : நீயே பல்லு வளக்கல நீ சொல்ல கூடாது ப என இருவரும் சிறு பிள்ளை போல் பல் துளக்காததற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாடி கொண்டனர்...

இவர்களின் சத்தம் அரைகுறை உறக்கத்தில் இருந்த ரித்விக் மற்றும் அர்ஜுனின் உறக்கத்தை கலைத்து விட்டது...

கைகளை நீட்டி முறித்து நேராய் அமர்ந்த ரித்விக் தன் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்திருந்த மதுவின் நெற்றியில் என்றும் போல் சிறிதாய் இதழ் பதித்து " குட் மார்னிங் பேபி " என்றான் அதே தூக்கம் நிறைந்த குரலில்...

பவி : காலைலயே என்ன ஒரு ரொமேன்ட்டிக் சீனரி என இருவரையும் கலாய்த்தவாறு ட்ரேயில் குழம்பிகளுடன் மேலே வந்தாள் ..

ரித்விக் அதே புன்னகையுடன் அவளிடமிருந்து தனக்கான கப்பை எடுத்து கொண்டு கண்களை தேய்த்தவாறு மெதுவாய் குலம்பியை ருசித்தான்...

அர்ஜுன் கண்களை இன்னும் முழுதாகவே திறக்காமல் தூக்கம் கொஞ்சம் கூட கலைந்து விடாமல் மெதுவாய் அந்த குலம்பியை ருசித்து கொண்டிருந்தான்...

ரவி மற்றும் சரணும் பவியிடமிருந்து காலை வணக்கத்துடன் குலம்பியை எடுத்து கொள்ள முகில் இன்னும் உறங்குவதை கண்டு அவனது குழம்பியை கயலை பள்ளி செல்ல எழுப்ப வேண்டி காலையிலே கிளம்பி அறைக்குள் நுழைய போன ஒவீயிடம் கொடுத்தாள்...

ஒவீ : நா வந்து குடிக்கிறேன் டி.. கயல எழுப்பனும்...

அர்ஜுன் : ஒவீமா கயல எழுப்பாத அவ தூங்கட்டும்... என இவன் கத்தவும் தான் முகில் கண்களை திறந்து எழுந்தமர்ந்தான்... அவனின் சத்தத்தில் மற்ற நாயகிகளுமே அவரவர் அறையிலிருந்து வெளியேறி வந்தனர்..

ஒவீ : ஏன் அத்தான் ஸ்கூல் லீவ் இல்லயே இன்னைக்கு...

ரித்விக் : இன்னைக்கு துருவ் கயல் இரெண்டு பேரும் ஸ்கூல் போக வேணாம்டா என்கவும் பவி கொடுத்த குழம்பியை வாங்கி கொண்டு அவர்களை அனுகினாள்...

வீனா : குட் மார்னிங்.. எங்க என் காஃபீ...

பவி : அத நா குடிச்சிட்டேன் டி என இளிக்க அவளை முறைத்து பார்த்த வீனா பின் ரவி குடிக்க வாய் வைக்க போன குழம்பியை கபக் என பிடிங்கி குடிக்க தொடங்கினாள்...

அவளை முறைக்க முயன்ற ரவிக்கு அந்த கப்பிலிருந்த பாதி காஃபீயை எங்கு தான் பிடிங்கி விடுவேணோ என்ற அவசரத்தில் ஒரே மிடரில் குடித்தவளை காண சிரிக்க தான் தோன்றிது...

வர்ஷி : ஏன் டி உனக்கு காஃபீ குடிக்க வீட்ல பாலா இல்ல... என் அண்ணனோடத பிடிங்கி குடிக்கிர...

வீனா : என் புருஷனோட காஃபீய தான டி குடிச்சேன்... வேணும்னா நீயும் என் அண்ணனோடத பிடுங்கிக்கோ... நா உனக்கு பர்மிஷன் குடுக்குறேன்.. என குடித்து விட்டு இதழை சுழித்து கூறியவளின் மேவாயில் படிந்திருந்த குழம்பியை சிரிப்புடன் துடைத்து விட்டான் ரவி...

வர்ஷி வீனாவின் கூற்றை கேட்டு விட்டு சரணை நோக்க அவனோ ஒரே மிடரில் மொத்த காஃபீயையும் இப்போது தொண்டைக்குள் சரித்திருந்தான்...

அவன் குடித்த வேகத்தை கண்டு அனைவரும் சிரிக்க வர்ஷி முறைத்து வைத்தாள்...

நிரு : சரி சரி நா வரும் போது ஏதோ பேசீட்டு இருந்தீங்களே என்னாச்சு...

மது : ஹான் அதான... என்னாச்சு அனு திவ்யா ப்ரியா கைல இருக்குன்னு சொன்னியே ரவி அண்ணா...

தான்யா : அதான நேத்துலேந்தே இவ்ளோ நேரமா என்ன செஞ்சிட்டு இருந்தீங்க அதோட.. அஷ்வன்த் அத்தான் அப்ரம் ரனீஷ் அண்ணாவும் ஆர்வியும் எங்க...

முகில் : அவங்க மூணு பேரும் தூங்குறாங்க டா...

ஒவீ : தூங்குறாங்களா... வீரா அண்ணா ரொம்ப நேரம் தூங்குர டைப்பில்லையேங்க...

ரித்விக் : உண்மை தான் குட்டிமா... பட் இப்போ மூணு பேரும் டையர்டா இருக்காங்க...

ரனீஷ் : நிறுத்துங்க நிறுத்துங்க.. நேத்து என்ன வேலை செஞ்சீங்க... ஏன் இன்னும் ஏதோ ஒரு குழப்பத்துலையே இருக்கீங்க அஞ்சு பேரும்...

ரவி : நேத்து அனு திவி ப்ரிமா கண்ணு முளிக்காம மயக்கத்துலையே இருந்தது க்ரிஷ் இந்திரன் சத்தீஷ்க்கு சரியா படலடா.. சொல்ல போனா இது ரொம்ப சஸ்ப்பீஷியஸா தெரிஞ்சிது...

பவி : சஸ்ப்பீஷியசான்னா.. என்ன சொல்ல வர அண்ணா...

ரவி : ஹ்ம் க்ரிஷ்ஷோட பாய்ன்ட் எங்களுக்கும் புரிஞ்சிது டா.. முந்தாநாள் வர நார்மலா இருந்த மூணு பேரும் நேத்து திடீர்னு இப்டி ஆழ்ந்த மயக்கத்துல விழுந்தது எங்களுக்கு சரியா படல... அதனால தான் நம்ம மருத்துவ கலைகள உபயோகிச்சு ஒரு மருந்த கண்டுப்புடிச்சோம்.. அது வீக்கா இருக்குர அவங்க ஹெல்த்துக்கு ஸ்ற்றென்த் குடுக்கும்.. அத குடிச்சிட்டா சீக்கிரமே மயக்கமும் தெளியும்.. அதோட அவங்க உடம்புல கண்ணுக்கு தெரியாம அதாவது அவங்க உயிருக்கு ஆபத்து வர மாதிரியோ இல்ல அவங்களுக்கு சம்மந்தமில்லாத எதாவது இருந்தா அவங்க மயக்கம் ஒரு இரெண்டு மணி நேரத்துக்கு தெளியாம கொஞ்சம் அந்த மருந்து நேரமெடுத்துக்குட்டு நமக்கு அத காட்டி குடுக்கும்...

ரக்ஷா : அப்போ இந்நேரத்துக்கு எப்டியும் ரிசல்ட் தெரிஞ்சிர்க்கனுமே...

முகில் : உண்மை தான்... இரெண்டு மணி போலையே மருந்த குடுத்துட்டாங்க... ஆனா அஞ்சு மணி நேரம் கடந்தும் எதுவும் தெரியல...

வர்ஷி : அப்போ எப்டிண்ணா தெரிஞ்சிக்குரது...

ரித்விக் : உங்களோட அண்ணனுங்க மூணு பேரும் வெளிய வந்தா தான் டா தெரியும்..

ஒவீ : ஆனா எனக்கு ஒரு டௌட்.. உடல்ல எதாவது பிரச்சனை இருந்தாலும் இரண்டு மணி நேரத்துக்கு அப்ரம் மயக்கம் தெளிஞ்சிடும்னு சொன்னீங்க... பட் அஞ்சு மணி நேரமாச்சு.. அதோட மூணு பேருமே எழுந்துக்காம எப்டி இருக்க முடியும்.. மூணு பேர்ல யாராவது ஒருத்தராவது எழுந்துருக்கனுமே...

ரவி : உன்னோட எல்லா கேள்விக்கும் அவனுங்க தான் பதில் சொல்லனும்... என அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கும் நேரெதிரே மறு புறத்தில் வரிசையாய் இருந்த மூன்று அறைகளை பார்த்தவாறு கூறினான்...

மீண்டும் மணி நேரங்கள் ஓடியது.. வீட்டிலிருந்த பெரியோரிடம் ஏதேதோ காரணம் சொல்லி ஷாப்பிங்கிற்கு கயல் துருவையும் அவர்கள் உடன் அனுப்பி வைத்தனர்...

நேரம் பத்தை தாண்டி முக்கால் மணி நேரம் போய் விட்டது... இன்னமும் கோவன்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை... அஷ்வன்த் ரனீஷ் மற்றும் வீர் மூவரையும் ரவியின் ஆலோசனை படி எவரும் தொந்தரவு செய்யாததால் ஆழ்ந்த ஓய்வில் இருந்தனர்...

கண்களை மறைந்திருந்த இமைகள் எரிச்சலெடுக்க அதற்கு வெளியே கூசும் ஒளி ஏதோ நகர்ந்து செல்வதில் தன் நிலை பெற்று மெதுவாய் கண்களை திறந்தாள் அனு...

அவள் உடல் முழுவதும் ஏதோ புது சக்தி பரவியதை போலிருந்தாலும் அதற்கும் மேலாக ஏதோ ஒரு பாரமும் வலியும் உடலில் அதிகளவு கூடியிருந்தது... கண்களை திறந்தவளுக்கு அனைத்திற்கும் முன் மதியில் பதிந்ததே அவள் முன்னே கண்கள் இரத்தமாய் சிவக்க இமைக்க மறந்ததை போல் அமர்ந்திருந்த க்ரிஷ்ஷின் பிம்பம் தான்...

அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு வெறியும் வலியும் அனுவையும் தொற்றி கொள்ள வேகமாய் எழுந்து கொள்ள முயன்றவள் தடுமாறவும் பாய்ந்து வந்த க்ரிஷ் அவளை தோளோடு தாங்கி கொண்டான்...

ஆனால் அனு எதனாலோ சட்டென சமைந்திருந்தாள்.. க்ரிஷ்ஷின் ஸ்பரிசம் பட்டதும் அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் மிரட்சியுடன் அவனை நோக்கினாள்...

அனு : யு..யு..வா.. எ..என..க்..கு..ள்..ள என ஏதோ இவள் கூற தினற... அவளை அணைத்திருந்த க்ரிஷ்ஷின் கரத்தை அவளோடு இறுக்கி கொண்டவளின் இதயம் அவள் உணர்ந்த உணர்வுகளை எண்ணி அச்சத்தில் உடலுக்கு நடுக்கத்தை பரவ செய்தது...

க்ரிஷ் : ரது.. ஒன்னும் இல்ல... டோன்ட் பனிக்.. அமைதியா இரு.. என அவளை அவன் நெஞ்சோடு சேர்த்தணைத்து கட்டிலில் அமர்ந்தான்... அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு க்ரிஷின் இதய துடிப்பு பொருமையாய் கேட்டது...

அனு : யுவா.. என மீண்டும் ஏதோ கூற வர...

க்ரிஷ் : ஷ்ஷ் அமைதியா கவனி ரது.. உன்ன நீயே திரும்ப உணரனும் என அவளின் வாக்கியத்தை இடை வெட்டி அவளின் கேசத்தை கோதி கொடுத்தான்...

க்ரிஷ்ஷின் இதய துடிப்பை செவி சாய்த்து கொண்டு அமர்ந்திருந்த அனு அவளுள் இரு துடிப்பு மெதுவாய் கேட்பதை தெளிவாய் கேட்டு கண்கள் குளமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

அனு : நா.. நா அம்மா ஆக போறேன்ல யுவா.. என இவள் ஒரு தவிப்புடன் கேட்க ஆமென்பதாய் அவள் நெற்றியில் இதழ் பதித்து கண்களை மூடி கொண்டான் க்ரிஷ்..

அனுவினால் தெள்ளத்தெளிவாய் அவளுள் ஒரு உயிர் இருக்கிறதென்று உணர முடிந்தது... அது ஏனோ க்ரிஷ்ஷையே அவளுக்கு ஒத்திருப்பதால் அந்த இதய துடிப்பு தவறாய் ஒலித்து அச்சமடைந்திருந்தாள்...

இரண்டு நாட்களுக்கு பின்...

அனு திவ்யா ப்ரியா தங்களின் நிலையை அடைந்து சகஜமாகியிருந்தனர்.. எந்த வித வித்யாசமும் இன்றி மூவரும் மகிழ்ச்சியுடன் வீட்டை வலம் வந்தனர்...

அனு திவ்யா ப்ரியா அன்று எழ தாமதித்ததால் க்ரிஷ் கூறியதை போல் யாரும் ஷேஷ்வமலைக்கு செல்லவில்லை... ஆயினும் மறுநாள் தர்மன் ஐயாவே இவர்களை காண நேரில் வந்தார்...

முதல் வேலையாகவே கோவன்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கூட காது கொடுத்து கேட்காமல் அவரே மூச்சு விடாமல் கூறி முடித்தார்...

தர்மன் ஐயா : நாகனிகளின் வம்சம் வேறானதாலும் இரு வேறு மகா சக்தியும் அதி சக்தியும் இணைந்து உருவாகும் இக்குழந்தைகளை தாங்க தொடக்கத்தில் தாயிற்கு கடினமாக தான் இருக்கும்...எவ்வளவு தான் அத்தாய் பலம் கொண்டவராய் இருந்தாலும் இந்த சிசு அவரை பலவீனமாக்கும்.. அதற்கு உண்டான பலம் கூடிய விரைவிலே அவர்களை கிட்டும்... அவர்களின் உடல் நிலையை எண்ணி எதற்கும் கவலை கொள்ள வேண்டாம்.. அக்குழந்தைகள் தாயினுள் உருவாக தொடங்கிய இருவது இருவத்தி நான்கு மணி நேரகள் பின்னே தாயின் உடல் நலத்தோடு தன்னை ஒன்றி கொள்ளும்... ஆதலாலே நாகனிகள் மூவரும் மயக்கத்திலிருந்து எழ தாமித்திருக்கின்றனர்...

அனைவரிடமும் இருந்து பெருமூச்சை அன்றி வேறெதுவும் வரவில்லை.. அதுவே போதுமானதாய் தான் தோன்றியது.. ஆயினும் தர்மன் ஐயாவின் " இக்குழந்தைகளை நலமாய் எவ்வித சிக்கலும் இன்றி சாதாரண மனிதர்களாகவே நாகனிகள் ஈண்டெடுப்பர் " என்ற சொற்றடரை அனைவரும் நம்பினாலும் அனைத்திற்கும் துணிந்து அவரை நம்பும் அம்மூவர் இச்சொற்றடரை சற்றும் நம்பவில்லை என்பது அவர்கள் கண்களிலே தெரிந்தாலும் முகபாவத்திலும் நடவடிக்கையிலும் தெரியவில்லை...

அவர்களின் முகமும் அகமும் இரு வேறாய் இருப்பதை அவர்களின் விழிகளின் வழியே மனம் வாசிக்கும் அனுவை தவிர்த்து எவரும் கவனிக்கவில்லை.. அவர்களை கவனிக்க கோவன்களின் திறண் அனுமதிக்கவுமில்லை.. ஆயினும் அனுவினால் கோவன்களின் மனதை வாசிக்க இயலாதென்கையால் அவளாலும் எதையும் கண்டறிய முடியவில்லை...

அனு திவ்யா ப்ரியாவை எண்ணி ஐயமடைந்த அனைவரும் இப்போது பெரும் நிம்மதி அடைந்திருந்தனர்.. அஷ்வன்த் ரனீஷ் வீர் தங்களது முயற்சி பொய்க்கவில்லை என தங்களுக்கு தானே ஆறுதல் கூறி கொண்டனர்...

அன்றைய கோரமான இருள் நிறைந்த இரவில் மோகினி தன் நாக உருவில் தன் குடும்பத்திடம் தெரிவிக்காமல் ஷேஷ்வமலைக்கு சென்றாள்...

ஷேஷ்வமலையின் அடிவாரத்தில் ஒரு நதியோரமாய் யாருக்கோ காத்திருந்த மோகினி எவரோ வரும் அரவம் கேட்டு எழுந்து நிற்க இருளில் இருந்து தன் தடியுடன் வெளிப்பட்டார் தர்மன் ஐயா...

மோகினி : பணிகிறேன் தர்மன் ஐயா...

தர்மன் ஐயா : பணிவாய் மகளே...

மோகினி : இன்னலொன்றும் இல்லையன்றோ யாம் உரையாட வரவிருப்பதை தொடங்கட்டுமா...

தர்மன் ஐயா : கூறம்மா..

மோகினி : யாம் எமது இளவல்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன் ஐயா.. தம் வார்த்தைகள் படி எமது இளவல்களில் எவரேனும் ஒருவர் உயிர் நீத்தாலும் அவை எமக்கு தாங்கமாட்டாத துயர்

தர்மன் ஐயா : மரணிக்க உள்ளது தமது இளவல்கள் அன்று மகளே.. எம்மால் உறூதியாய் கூற இயலவில்லை .. ஆனால் சஹாத்திய சூரர்கள் இன்னலில் உள்ளர்...

மோகினி : யாம் பறைந்ததை தாம் தவறாய் எடுத்துள்ளீர் ஐயா.. எமது இளவல்கள் கோவன்கள் மூவர் மாத்திரம் அல்ல.. சஹாத்திய சூரர்கள் எட்டுவரும் எமது இளவல்களே.. யாம் வருத்தம் கொண்டுள்ளது அவ்வெண்வரை பற்றியே..

தர்மன் ஐயா : ஹ்ம் ஆயினும் நிகழ உள்ளவையை யமது மதியினால் கனிக்க இயலவில்லை மகளே..

மோகினி : அவ்வாறெனில் தாம் எதற்காய் எம் இளவல்கள் அனைவரிடமும் இருந்து மெய்யை மறைக்கிறீர் ஐயா...

தர்மன் ஐயா : யான் உமக்கு அறிக்கையிட அவசியமன்று மகளே.. இரு தினம் முன் கொடிய யட்சினி சர்ப்ப வம்சத்தினர் விடுப்பெற்றுவிட்டனர்... அவர்களின் குறி இஞ்ஞாலத்தை அபகரிப்பதிலே மீண்டும் பதியும்.. ஆயின் ஆறாயிரம் வருடாந்திரங்கள் முன்பு அவர்களை அழித்தடக்கிய பஞ்சலோக வம்சத்தவர்கள் இன்னும் இம்மண்ணில் ஈண்டெடுக்கப்படவில்லையம்மா... ஆதலால் அவர்களை அழிக்க இப்போது நம்முடன் அவர்களின் துணையன்று.. இதையே சாதகமாய் கொண்ட அந்த யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள் இஞ்ஞாலத்தை அபகரிக்க கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்களின் சக்திகளை அபகரிக்க முயல்வர்...

மோகினி : ஆயின் அதற்கு துளியேனும் வாய்ப்பன்று என்பதை தாமும் அறிவீர் ஐயா... எமது இளவல்களை எதிர்த்தோ அல்ல பலி கொடுத்தோ அவர்களின் சக்திகளை எவராலும் அபகரிக்க இயலாது...

தர்மன் ஐயா : மெய் தானம்மா... ஆனால் மகாவம்சம் மற்றும் சஹாத்திய வம்சத்தின் உதிரங்களில் உதித்த சிசுக்களுள் ஊரும் குறுதியில் கூட பெற்றோர்களின் சக்தி இருக்குமம்மா... சாதாரண மானிட பிறவிகளாய் இவர்களின் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுள் ஓடும் குறுதியே யட்சினி சர்ப்ப வம்சத்தவர்களுக்கு மோதுமானது... ஆதலால் அவர்களின் பிள்ளைகளை பலி கொடுத்து அவ்வம்சத்தினரின் முழு சக்தியை ஈட்ட முனைவர்.. அவ்வாறு ஒரு சம்பவம் ஈடேறினால் இப்பூலோகத்தை காக்க கோவன்களால் கூட இயலாது.. ஏனெனில் கோவன்கள் எதிர்த்து நிற்க உள்ளதும் அவர்களின் அதே சக்திகளை தான்.... ஆதலின் கோவன்களின் மகவுகளோ சஹாத்திய சூரர்களின் மகவுகளோ பிறக்க உள்ளது மிக விமர்சையாய் வெளியில் தெரியவரக்கூடாது... இன்றைய நிகழ்வுகள் எம்மை சிந்திக்க வைத்துள்ளது... கோவன்களின் மகவுகா பிறந்த பின்னே எமக்கு விடை கிட்டும்.. ஆதலாலே உம் இளவல்கள் எவ்விதமான பயிற்சியும் எடுத்து விட கூடாதென்பதற்காய் பொய்யுரைத்து மறைத்தேன்...

மோகினி : ஆனால்.. கயல்விழி பஞ்சலோக அச்சுடன் எட்டு வருடங்கள் முன்பே பிறந்து விட்டாளே ஐயா... அவ்வாறிருக்கையில் தாம் எவ்வாறு பஞ்சலோக வம்சத்தினர் பிறக்கவில்லை என்கிறீர்...

தர்மன் ஐயா : அதற்கும் காரணம் உள(உள்ளது ) மகளே... யட்சினி சர்ப்ப வம்சத்தை அழிக்க மந்திர சக்திகளுடன் உருவெடுத்தது பஞ்சலோக வம்சத்தின் அதிரதீர பிறிவின் மூன்று இரட்சகன்கள் மற்றும் பராக்ரம பிறிவின் பத்து மாவீரன்கள் .. கயல்விழி பஞ்சலோக விந்தை மாத்திரமே.. அவளுக்கு மாய சக்திகள் எதுவும் இருக்காது... ஆயினும் பஞ்சலோகத்தின் சக்தி அவளுள் இருக்கும்...

மோகினி : இரட்சகன்களோ அல்லது பராக்ரம வீரன்களோ பிறப்பெடுத்தால் மாத்திரம் தானே பஞ்சலோக விந்தைகளென பிற குழந்தைகள் பிறக்க முடியும்.. அவ்வாறெனில் கயல்விழி எவ்வாறு பிறந்தாள் ஐயா...

தர்மன் ஐயா : தாம் இன்னமும் கயல்விழி இப்புவியில் எவ்வாறு ஜனித்தளென அறியவில்லை மகளே.. என்றறிகிறாயோ அன்று தாமே புரிந்து கொள்வாய்... என கூறியதோடு அங்கிருந்து விடை பெற்று சென்றார்...

மோகினி குழப்பம் நிறைந்த கண்களால் அந்த இரவை கடத்தினாள்... நேரம் எவருக்கும் காத்திருக்கவில்லை.. கண்ணிமைக்கும் முன்பே ஒரு மாதம் கடந்திருந்தது... மதுவை முன்பிற்கும் அதிகமாய் கவனத்துடன் கவனித்து கொண்டனர்...

அனு திவ்யா ப்ரியாவின் வயிறு மேடிட தொடங்கியது.. இது வீட்டினர் அனைவரையும் அதிர்ச்சியுற செய்தாலும் தர்மன் ஐயாவை நம்பி அவர்கள் எதையும் கற்பனை செய்து கொள்ளவில்லை...

நாளொறு வண்ணமும் பொழுதொறு மேணியும் நான்கு சிசுக்களும் வளர்ந்தது... மதுவிற்கு ஏழாம் மாதத்தில் வளைகாப்பு வைக்க அன்று அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கலந்தோசித்து கொண்டிருந்தனர்...

மதுவின் வயிற்றில் கை வைத்து கொண்டு இப்பேச்சுக்களிலெல்லாம் தலையிடாமல் தனி உலகில் வர்ஷியும் பவியும் உள்ளிருந்த குழந்தையிடம் ஏதோ பேசி விளையாடி கொண்டிருந்தனர்...

மதுவிற்கு உள்ளிருக்கும் குழந்தை அவன் சித்திகள் கூறுவதை எல்லாம் அமைதியாய் கேட்பதை போலே பிரம்மை ஏற்பட்டது... உண்மையில் அவனும் கேட்டு கொண்டு தான் இருந்தான்...

நன்றாக பேசி கொண்டிருந்த பவி திடீரென தடுமாற அவள் கொச்சகொச்சவென பேசுவதை கவனிக்கவில்லை என்றாலும் காதில் வாங்கி கொண்டு மதுவின் வளைகாப்பு பற்றிய ஆலோசனையில் கண்ணாய் இருந்த அஷ்வன்த் திரும்பி புருவத்தை தூக்கி அவளை பார்த்தான்...

அதை எதற்சையாய் கண்ட பவியோ அவனது கண் வழி பரிமாறிய கேள்விக்கு ஒன்றுமில்லை என பதில் பரிமாறினாள்... இதை கண்டதும் வர்ஷி " சம்த்திங் சம்த்திங் " என நக்கலாய் கூற.. " அதெல்லாம் ஒன்னும் இல்ல " என அவளின் தோளில் வலிக்காமல் அடித்த பவி அடுத்த நொடி மீண்டும் தடுமாறியவள் அங்கிருந்து எழுந்து கழிவறைக்கு ஓடினாள்...

இவள் ஓடுவதை கண்டதும் அனைவரும் முளிக்க தாமதிக்காமல் அஷ்வன்த்தும் நித்ரா என கத்தியபடி அவள் பின்னே ஓட மது அனு திவ்யா ப்ரியாவை கீழேயே விட்டுட்டு மற்றவர்கள் உடனே மாடிக்கு சென்றனர்...

பவி தலை சுற்ற வாந்தி எடுத்து கொண்டிருந்தாள்... அஷ்வன்த் அவளுக்கு உதவி செய்து முகம் கழுவி அவளை கட்டிலில் அமர வைத்தான்... தன் மருத்துவ உபகாரணங்களுடன் உள்ளே வந்த ரக்ஷா வேகவேகமாய் ஸ்ட்டெத்தஸ்க்கோப்பை எடுத்து பவியின் இதய துடிப்பை பரிசோதித்தாள்...

பவி மிகவும் சோர்வாய் உணர அஷ்வன்த்தோ நொடிக்கு நொடி பதறி கொண்டிருந்தான்.. சாதாரண வாந்தி தான் என தெரிந்தாலும் மருத்துவன் அவனுக்குள்ளும் ஒரு திகில் பரவியிருந்தது...

அவளின் இதய துடிப்பை நன்கு உறுதி படுத்தியும் கூட குழப்பம் தீராமல் ஸ்ட்டெத்தசை கலட்டி வைத்த ரக்ஷா அவள் நாடி பிடித்து பார்த்து முகம் மலர்ந்தாள்...

மற்றவர்களுக்கும் அவளின் முக மலர்ச்சியே விஷயத்தை எடுத்து கூற நம் அஷ்வன்த்திற்கு அது புரிபடவில்லை...

அஷ்வன்த் : ரக்ஷாமா என்னாச்சு டா... ஹாஸ்பிட்டல் போகனுமா... ஸ்கன் பன்னனுமா...

பவி : வாந்தி எடுத்தா ஸ்கன் பன்னனுமா என இவள் அவனை பார்க்க...

அஷ்வன்த் : அதெல்லாம் உனக்கு தெரியாது சும்மா இரு... குட்டிமா நீ சொல்லு.. இன்ஜெக்ஷன் போட்டா டிஃஜ்ஜி ஃபீல் குறைஞ்சிடுமா என பதைபதைப்புடன் கேட்க...

ரக்ஷா :என் அண்ணா உனக்கு இவ்ளோ பதட்டம்.. கூல்

அஷ்வன்த் : என்னாச்சுன்னு சொல்லு டா...

ரக்ஷா : அய்யோ அண்ணா இந்த வாந்திக்கு இன்ஜெக்ஷன்லாம் போட தேவையில்ல... அதுவே சரியாய்டும்...

அஷ்வன்த் : அதுவே சரியாகுமா... எவ்ளோ நாள்ள சரியாகும்...

ரக்ஷா : ஒரு இரனூத்தி அருவது நாள்ள சரியாய்டும்..

அஷ்வன்த் : இரனூத்தி அருவதா... என அதிர்ச்சியாக அவன் பின்னந்தலையை அடித்து விட்டு பவியிடம் சென்ற இலக்கியா அவரின் மருமகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்...

இலக்கியா : என் செல்லம்.. உனக்கு இந்த மடையன கட்டி வச்சு தப்பு பன்னிட்டோம் டா என அவளை தோளோடு அணைத்து கூற பவி நக்கலாய் சிரித்தாள்...

அஷ்வன்த் : மா.. அவளுக்கு இவ்ளோ நாள் இப்டி ஹெல்த் சரியா இருக்காதுன்னு குட்டி மா சொல்ற நீ கட்டிப்புடிச்சு சந்தோஷப்படுர... நீ விடு அவள நா ஹாஸ்பிட்டல்க்கு கூட்டீட்டு போறேன்... வா டி என அவளை பிடித்திழுக்க இப்போது பவியே தலையில் அடித்து கொண்டாள்...

ரித்விக் : ஏன் டா இப்டி ட்யூப்லைட் மண்டையனா இருக்க... உனக்கு அண்ணனா பொறந்ததுக்கு நா ரொம்ப கேவலப்படுறேன்டா...

" அவ்ளோ கேவலப்படுர அளவுக்கு நாம என்ன பன்னிட்டோம்"  என அஷ்வன்த் முளிக்க...

முகில் :மண்டு மச்சானே... நீயும் எங்கள மாமாவாக்கீட்ட டா... இப்போவாவது புரியிதா இல்லையா... என கேட்க முதலில் " நா மாமாவாக்கீட்டேனா " என புரியாது பார்த்த அஷ்வன்த்தின் மண்டையில் பல்பெரிந்து அவன் அதிர்ச்சியுடன் பவியை பார்க்க அவள் வெட்கி தலை குனியவும் அஷ்வன்த் சந்தோஷத்தில் " நா திரும்பவும் அப்பாவாய்ட்டேன் " என கத்தினான்...

அனைவரும் இப்போது " எதே " என கோரசுடன் அவனை பார்க்க அவனோ சந்தோஷத்தில் பவியை கட்டி பிடித்திருந்தான்...

பவி : டேய் என்ன நீ திரும்பவும் அப்பாவாய்ட்டேன்ங்குர ... என அவனை தன்னிடமிருந்து பிரித்து சட்டை காலரை பிடித்து கோவமாய் கேட்டாள்...

அஷ்வன்த் : ஆமா.. ரித்விக் மது குழந்தைக்கும் நா அப்பா தானே... என பேந்த பேந்த முளிக்க " அட அவசரத்துக்கு பொறந்தவனே... அத தெளிவா தான் சொன்னா என்ன டா " என அனைவரும் தலையிலடித்து சிரித்தனர்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... எப்டி இருக்கு... போர் அடிக்கிதுல்ல... ஏன்னா எனக்கே போர் அடிக்கிரது தெரியிது... கவலப்படாதீங்க அடுத்த யூடில நம்ம இரட்சகன்களோட என்ட்ரில அசத்தீடுவோம்... ஓக்கே... குட் நைட்.. டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro