Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 30

பராக்ரம வீரன்களை விடுத்து மற்ற அனைவரும் உறைந்து நிற்க.. நீலி ரக்ஷவ் ஐலா மூவரும் அம்மூவர் யாரென தெரியாமல் முளித்து கொண்டிருக்க நாகனிகளும் சஹாத்திய சூரர்களும் யாளி வீராங்கனைகளும் உண்மையில் அங்கேயே பனிக்கட்டியென உறைந்திருந்தனர்...

அம்மூன்று வம்சத்தினரும் வாழ்கையில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்ந்திருக்கவில்லை... மிதரவர்தனன் விஞ்ஞவெள்ளன் இனி மேலுமா அங்கு இருப்பர்...

கண்ணிமைக்கும் நொடி பொழுதில் இருவருமே அங்கிருந்து மாயமாய் மறைந்திருந்தனர்..

இரட்சகன்கள் மூவரும் மெல்ல கீழே இறங்க இப்போது அனைவரும் எழுந்து நின்றிருக்க.. நாகனிகள் மூவருக்கும் இதயம் துடிக்க மறந்து மறத்து போய் நொடிகள் கடந்திருந்தது...

சித்தார்த் ருத்ராக்ஷ் ஆதியன்த் மூவரின் கண்களும் தன் நிலை பெற்றதும் தனிச்சையாய் கண்ணீர் ஊற்றெடுத்து கண்கள் குளமாகின...

பராக்ரம வீரன்கள் என்ன நடக்க போகிறதோ என எச்சிலை கூட்டி விழுங்க அங்கிருந்த அனைவரின் இதயத்தை உருக்கவதை போல் வாயை மூடி வெடித்து அழுதாள் அனு...

கீழே மடிந்து விழுந்த அனுவை ருத்ரா வேகமாய் வந்து பிடிக்க .. அவனது முகத்தை வெகு அருகில் கண்ட அனு இன்னும் கத்தி அழுதாள்...

அவளின் கதறல் இரட்சகன்களை தவிர்த்து மற்ற சில இதயங்களையும் கனக்க வைத்தது...

அனு : ருத்ரா என அழுகையுடன் அவன் கன்னம் வருட ருத்ராவினாலும் அழுகையை அடக்க முடியவில்லை...

ருத்ரா : அம்மா என கத்தி கொண்டே அவளை அணைத்து கொண்டான்...

திவ்யாவும் ப்ரியாவும் அப்படியே நிற்க அனுவின் பார்வை சித்து ஆதியை தீண்ட இருவரும் அவள் கண்ணீர் நிலத்தை தொடும் முன் ஓடி சென்று அவள் அணைப்பிற்குள் அடங்கினர்...

அனு எவ்வளவோ முயன்றும் அவள் கண்ணீரை நிறுத்த முடியவில்லை... ஆசை தீர மூவரையும் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் கொடுத்து அழுத படியே அணைத்து கொண்டாள்...

ஆதி : சாரி மா என அவன் அழுகையுடன் கேட்ட கதறலில் திவ்யாவும் ப்ரியாவும் ஒரே நேரத்தில் நிஜ உலகை அடைந்து நிகழ்வது கனவெல்ல என உணர்ந்து அதீத மகிழ்ச்சி அடைந்தனர்....

திவ்யா : சித்து ருத்ரா ஆதி.. நீ... நீங்க தா...னா டா பசங்களா... என மண்டியிட்டு அமர்ந்து கேட்க அவளருகிலே அமர்ந்திருந்த ஆதியின் வதனத்தை அவள் பயந்து பயந்து மெதுவாய் தொட்டு பார்க்க அவள் கரத்தை தன் கரத்தால் இறுக்கி பிடித்து " நாங்க தான் அம்மா " என அதே அழுகையுடன் மாறாக முகத்தில் ஒரு புன் சிரிப்புடன் கூற திவ்யா உடனே அவனை அளோடு சேர்த்து அணைத்து கொண்டாள்...

சித்து : எங்க கூட பேச மாட்டியாமா என இவன் அமைதியாய் நின்ற ப்ரியாவை நோக்க அவனை வலியுடன் நோக்கிய ப்ரியா நொடி தாழாமல் அவனை ஓடி வந்து அணைத்து கொண்டாள்...

சஹாத்திய சூரர்களின் மனதிலிருந்த பெரும் பாரம் விலகியதாய் உணர்ந்த எட்டு பேரும் உடைந்து மண்ணில் மடிந்தமர கோவன்களின் நினைவுகளில் அவ்வெண்வரின் கண்களில் இருந்தும் சிறு கண்ணீர் துளிகள் கசிந்து " தங்களுக்கு யாம் புரிந்த வாக்கை நிறைவேற்றி விட்டோமடா " என்று கூறுவதை போல் மண்ணில் சேரவும் வலியிலும் ஒரு நிம்மதியுடன் அனு திவ்யா ப்ரியாவை நோக்கினர்...

யாளி வம்ச வீராங்கனைகளும் கண்களில் கண்ணீருடன் அக்காட்சியை கண்டு கொண்டிருந்தனர்... நடக்கவே நடக்காதா என அவர்கள் கதறி கதறி அழுத நாட்களின் எண்ணிக்கை அங்கில்லை... அக்குடும்பத்தின் முதல் மூன்று வாரிசுகள்.. உயிர் நீங்கியும் அவர்களின் மனதில் நிலைத்த இடத்தை பிடித்த மூவரின் வாரிசுகள்... எட்டு வருடம் மாரிலும் தோளிலும் மடியிலும் போட்டு இவர்களே வளர்த்த மூவர் கண்ணிமைக்கும் நொடி பொழுதில் இறந்து விட்டனர் என்று கூறியதை இருவது வருடம் பின் பொய்த்து முன் வந்து நின்றாள் அதிர்ச்சியில் பேச்சு வராமல் இருப்பது சகஜம் தானே...

தங்கள் தாய்களின் அணைப்பிலிருந்து வெளி வந்த மூவரும் மற்ற அனைவரையும் அதே கண்ணீருடன் கண்டனர்... இன்னும் அனு திவ்யா ப்ரியா ஒரு கனவுலகில் இருப்பதை போலவே இருக்க... அம்மூவரின் கரத்தையும் தன் ஒரு கரத்தில் சேர்த்து பிடித்த சித்து..

சித்தார்த் : வந்தது உங்க புள்ளைங்க தான்மா.. நாங்க அப்போ சாகல.. நாங்க திரும்ப வந்துட்டோம்... இனிமே எப்பவுமே உங்கள விட்டு போக மாட்டோம் என கூற அவன் குரலில் இருந்த நம்பிக்கை அவன் கரத்தின் பிடியிலும் தெரிய நாகனிகளின் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும்..

அவன் பேச்சிலும் முக ஜாடையிலும் தன் யுவாவை ஒத்திருப்பதை வாயை மூடி அழுதவாறு கண்டாள் அனு.. அவள் மாத்திரமா திவ்யா ருத்ராவிலும் ப்ரியா ஆதியிலும் இந்தரையும் ஈஷ்வரையும் கண்டு அழுகையை அடக்க முடியாமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தனர்.....

அடுத்த வேளையாக சகோதரன்கள் மூவரும் அவரவர் அத்தைமார்கள் மற்றும் சித்திமார்களின் அருகில் செல்ல அதற்கு முன்னமே நம் யாளி வீராங்கனைகள் அழுது கொண்டே மூவரையும் அணைத்து கொண்டனர்...

நிரு : பசங்களா.. சித்தி கிட்ட திரும்ப வந்துரேன்னு சொல்லிட்டு போனீங்களே... வர்ரதுக்கு இவ்ளோ வர்ஷம் ஏன் டா லேட் பன்னீங்க என கோவமாய் கேக்க முயற்சித்தாலும் அவள் அழுகை அவளை தன் வசத்தில் வைத்திருந்தது...

மூவரும் : சாரி சித்தி என மூவரும் ஒரே கோரசுடன் அணைத்து கொண்டனர்...

மது : படவா.. இத்தன வர்ஷமுமா எங்கள தேடி வர தோனல உனக்கு என ருத்ராவின் காதை பிடித்து திருக...

ருத்ரா : போ அத்த.. வழி மறந்து போச்சு என அழகாய் உதட்டை பிதுக்கினான்... அவர்களாலும் கூட இந்திரனை அவனுள் காணாமல் இருக்க முடியவில்லை...

ரக்ஷா : இனிமே எப்டி மறக்குதுன்னு பாக்குறேன் என அவள் அவனின் மறுகாதையும் திருக மற்றவர்கள் அழுகையுடனே சிரித்தனர்...

சஹாத்திய சூரர்களை அதை கண்டவாறு எழவும் யாளி வீராங்கனைகளிடமிருந்து பிரிந்த மூவரும் அழுகையை துடைத்து விட்டு அவர்கள் முன் சென்று நின்றனர்...

மூவரும் அவர்களை நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்க.. சஹாத்திய சூரர்களுக்கோ மனதில் ஒரு அபாய சங்கு பலத்த சத்தத்துடன் ஊதப்பட்டது...

சித்தார்த் : எதுக்கு சித்தா மாமா எங்க மூணு பேரையும் தனி தனியா பிரிச்சு வச்சீங்க என இவன் நேரடியாய் கேட்க இம்மூவரையும் சஹாத்திய சூரர்களையும் தவிர்த்து மற்ற அனைவருமே அதிர்ந்தனர்...

சர்ப்பலோகம்

சாகாரகாந்தன் ஒரு திகில் கலந்த பார்வையுடன் அந்த நீண்ட பாதையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்... அருகிலே மகரகாந்தன் மற்றும் அருளவர்தனன் ஹாயாய் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தனர்...

இவனின் பதட்டத்தை பொய்க்காது விண்ணில் ஒரு வெள்ளி நிற ஒளி தோன்றிட அதிலிருந்து விஞ்ஞவெள்ளன் முதலிலும் இரண்டாவது மிதரவர்தனனும் இரத்தகெளரியாய் கீழே விழுந்தனர்... அவர்களுடனே சாம்பரா பதட்டத்துடன் கீழே இறங்கி வந்தாள்

சாகாரகாந்தன் : சகோதரா..சகோதரா.. என்னாயிற்று.. தமக்கு என்னானதடா.. எவ்வாறு இத்துனை காயங்களை பெற்றாய்.. என இவன் இருவரையும் உலுக்க கொஞ்ச நஞ்ச சுயநினைவுடன் இருந்த விஞ்ஞவெள்ளனும் இப்போது " இரட்சகன்கள் " என கூறி விட்டு மயக்கத்தில் ஆழ்ந்தான்...

அருளவர்தனன் : சாம்பரா.. என்னாயிற்று.. இவ்விருவரின் இந்நிலைக்கு யாவர் காரணம்...

சாம்பரா : ஒன்றல்ல இரண்டல்ல ஐயனே.. சஹாத்திய வம்ச எட்டு சூரர்கள்... யாளி வம்சத்து எட்டு வீராங்கனைகள் நாகதாரணி வம்சத்து நாகனிகள் பஞ்சலோகதின் பத்து பராக்ரம வீரன்கள் மற்றும் ஒரு சிறுவன்.. என பதட்டத்துடன் கூறினாள்...

மகரகாந்தன் : என்ன சிறுவனா.. எவ்வாறு எம் சகோதரர்களை ஓர் சிறுவன் இவ்வாறு காயம் புரிய செய்திட முடியும்...

சாம்பரா : அவ்வாறன்று ஐயனே.. அங்கு நிகழ்ந்த போராட்டத்தில் ஒரு சிறுவனும் பங்கு கொண்டிருந்தான்.. அவன் மூலம் ஐயன் மிதரவர்தனனது இதய நாடி அறுந்திருக்கும்.. ஆயினும் சில அடிகளில் தப்பினார்...

அருளவர்தனன் : என்(ன) உளறல் மொழிகிறாய் சாம்பரா.. ஓர் சிறுவனால் எவ்வாறு விந்வார்த்த யஷ்டியின் இதய நாடியை அறுத்தெரிய இயலும்.. அதை சாதாரணமாய் சஹாத்திய வம்சத்தவர்களாலே நெருங்க இயலாதென்பதை மறவாயோ...

சாம்பரா : ம்ச் ஐயனே தற்போது அச்சிறுவனை பற்றி உரை நிகழ்த்த நாழியில்லை.. தம் சகோதரர்களுக்கு மருத்துவமளிக்கப்பட வேண்டும்.. இவர்கள் இரட்சகன்களினால் தாக்கப்பட்டுள்ளனர்... என கூறிட அவளின் குரல் அந்த அரண்மனையெங்கிலும் ஒலிக்க அரண்மனையில் பாதாலத்திலில் இருக்கும் பாதால சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இருள் சிறைசாலையில் இருந்து லீலாவது " யான் பறைவதனைத்தும் நிகழ நாழி நெருங்கிவிட்டதடா... தம் அழிவும் நெருங்குகிறது... யட்சினி சர்ப்ப வம்சமே அடியோடு அழிக்கப்பட எம் பராக்ரம வீரன்கள் இரட்சகன்களுடன் இங்கு வரத்தானடா போகின்றனர் " என கர்ஜிப்பது சர்ப்பலோகமெங்கிலும் எதிரொலித்து யட்சினிகளுக்கு நம் பஞ்சலோக விந்தைகளென போற்றப்படும் தேவதைகளுக்கு வளரி பாட்டிக்கு மற்றும் அனைத்தின மக்களுக்கும் தெளிவாய் கேட்டது...

சாகாரகாந்தன் : இரட்சகன்களா... என்(ன) கூறுகிறாய் சாம்பரா... அவ்வாறெனில் இரட்சகன்களும் வேதபுரத்தை அடைந்து விட்டனரா...

சாம்பரா : ஆம் ஐயனே.. அது மட்டுமன்றி அம்மூவரின் சக்திகள் கோவன்களுக்கு எதற்கும் சலைத்ததன்றெனவே உள்ளுகிறேன்(நினைக்கிறேன் ) அம்மூவரிடமும் அனல் கோவனின் தீ சக்தியும்.. திரவக்கோவனின் நீர் சக்தியும் .. காற்க்கோவனின் வளி (காற்று)  சக்தியும் குறையாது உள்ளது...

சாகாரகாந்தன் : யாம் மிக விரைவிலே யோக பரிபூஜன யாகத்தை புரிதல் வேண்டும் என மிகவும் தீவிரமாய் கூறி கொண்டிருக்க...

சாம்பரா : ஐயனே... தாம் இன்னமும் தாமதித்தால் நாளையே தம் இரு சகோதர்களுக்கு காரியம் செய்ய கூடும்.. குத்துயிரும் குழையுயிருமாய் பரிதவிக்கும் தம் இரு சகோதரர்களுக்கும் உடனடி மருத்துவம் அவசியம் என பதட்டத்துடன் கத்த.. அப்போதே இன்னமும் " நம்மள காப்பாத்துவானுங்களா.. இல்ல இப்டியே விற்றுவானுங்களான்னு தெரியலையே " என பரிதவிக்கும் நிலையில் கிடந்த மிதரவர்தனன் மற்றும் விஞ்ஞவெள்னின் நிலையை கண்டு அவர்களை தூக்கி கொண்டு உடனே மருத்துவ அறைக்கு விரைந்தனர்...

இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த நாயகிகளுக்கு ஒன்றும் புரியாது போக கைகளில் கட்டுடன் சோர்வாய் அமர்ந்திருந்த கயல் ஒரு முடிவுடன் எழுந்து நின்றாள்...

மாயா : ஹே கயல் எங்க போற...

கயல் :இதுக்கு மேலையும் நாம தாமதிக்க கூடாது டி.. நமக்கு நேரம் ரொம்பவவே குறைவா இருக்கு.. இவங்க சொல்ற அந்த ஏதோ ஒரு யாகம் எதுக்கானதுன்னு தெரியல... நாம சும்மாவே இருந்து நம்ம உயிரையே இழந்துர கூடாது...

நித்ரா : என்ன டி ஏதேதோ சொல்ற.. இங்க நடக்குறதுக்கும் நமக்கும் சம்மந்தம் இருக்கா...

கயல் : நிச்சயமா இருக்கு.. நா இங்க முன்னாடியே வந்துருக்கேன்.. எப்போன்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல... இதே சிறைல நா அடஞ்சு கிடந்துர்க்கேன்... அப்போ என்ன இந்திரன் மாமா தான் காப்பாத்துனாங்க... என ஏதோ ஒரு நினைவிலே கூறி கொண்டிருக்க அவளை பிடித்து நந்தினி உலுக்கினாள்...

நந்தினி : பைத்தியம் புடிச்சிடுச்சா உனக்கு.. நமக்கு ஒரு வயசு இருக்கும் போதே பெரியப்பா இறந்துட்டாங்க..

இக்ஷி : கயல் சொல்றதுல வேற ஒரு உண்மையும் ஒளிஞ்சிருக்கு டி.. இவ சொல்ற மாரி நம்ம வாழ்கை கிட்டத்தட்ட ஒரு சஸ்ப்பீஷியஸ் மிஸ்ட்ரி தான்... ஏன்னா நமக்கு ஒரு வயசாகும் போதே நம்மள அனு திவ்யா ப்ரியா அம்மி மூணு பேரும் கெனடாக்கு பாட்டி தாத்தாங்க கூட அழைச்சிட்டு போய்ட்டாங்க... நம்ம இப்போ வர அதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்ல...

வைஷு : சரி இப்போ என்ன தான் டி சொல்ல வரீங்க இரெண்டு பேரும்... டரெக்ட்டா விஷயத்துக்கு வாங்க...

கயல் : அந்த பாட்டிய போய் பாக்களாம் டி..

மதி : உன் கைய புடிச்சு இழுத்தாங்களே அந்த பாட்டியையா...

கயல் : ஆமா.. அவங்க சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல... திரும்ப வந்துட்டியா தாயின்னு கேட்டாங்க... அப்போ அவங்களுக்கு நா இங்க வந்தத பத்தியும் நம்மள பத்தியும் தெரிஞ்சிருக்கு என பாய்ன்ட் பிடித்து கூறவும் மற்றவர்களுக்கும் அது புலப்பட்டது...

சந்தியா : அதெல்லாம் சரி.. இங்கேந்து நாம வெளிய போனுமே.. அதுக்கு என்ன வழி.. யாரு நமக்கு உதவுவாங்க...

சித்ரியா : யாம் இருக்க தமக்கு ஏன் ஐயம் என திடீரென கேட்ட இவளின் குரலில் இவர்கள் வாயிலை நோக்க அங்கோ சித்ரியா சிரித்த முகமாய் வாயிலை திறந்து விட்டாள்...

நவ்யா : உண்மையா தான் சொல்றிறா... நீ.. நீ எங்களுக்கு ஹெல்ப் பன்ன போறியா...

எழில் : தாம் உச்சரித்த அந்த சம்ஹித்த வார்தைக்கு என்(ன) பொருள் என சிறை சாலையின் கதவிற்கு அருகில் நின்றிருந்தவள் தலையை மட்டும் உள்ளே விட்டு கேட்க அவள் கேட்ட விதம் நம் தோழிகளை சிரிக்க வைத்தது...

வைஷு : சம்ஹித்த வார்த்தைனா.. எது

சித்ரியா : தாம் எம்மிடம் யாது வினவினீர் என நவ்யாவை பார்க்க...

நவ்யா : எங்களுக்கு உண்மையாவே உதவ போறியான்னு கேட்டேன்... ஓ ஹெல்ப்பு தான் சம்ஹித்த வார்த்தையா...

சித்ரியா : ஆம் மெய்யாகவே தமக்கு யாம் மூவர் உதவுகிறோம்.. தமிழ் அல்லாது பிற மொழி வார்த்தைகளை யாம் பனுவலின் பால் சம்ஹித்த வார்த்தைகள் எனப்படும்..

எழில் : சரி மேலும் நாழியை வீணடித்து காலம் கடத்த வேண்டாம்.. வெளியே விரையுங்கள்.. யாவரும் வரும் முன்னமே தாம் அச்சிறை சாலையை அடைய வேண்டும் விரையுங்கள் என்க நம் நாயகிகளும் உடனே அவர்களை பின் தொடர்ந்து பூனை நடையிட்டு வெளியேறினர்...

வளரி பாட்டியின் சிறையினருகிலே வேதித்யா யாரேனும் வருகின்றனரா என நோட்டமிட்டவாறு மறைந்து நின்றிருந்தாள்... அனைவரும் அங்கு சென்றதும் சிறையின் கதவை வேதித்யா திறக்க வளரி பாட்டி தன் சிறையின் இரும்பு கதவு இருவதாண்டுகள் பின் திறந்ததால் ஏற்பட்ட க்ரீச் சத்தத்தில் மெல்ல எழுந்து நோக்கினார்...

கயல் : பாட்டி நா கயல் வந்துருக்கேன் என இவள் அவரின் கையை பிடிக்க.. அவள் கரத்தை பிடித்து நம்பிக்கையுடன் புன்னகைத்த வளரி பாட்டியை தெளிவாய் கண்டு கயல் அதிர்ச்சியுற்றாள்...

காலையில் கண்டதை விட இன்னும் உடலில் காயங்கள் அதிகரித்திருந்தது.. கண்களும் தோளும் சுருங்கி மிகவும் வயதான தோற்றத்தில் இருந்தார்.. உடல் சோர்வு அவரின் தேகத்தில் வெளிப்பட்டாலும் கண்களிரண்டிலும் இணம் புரியா ஓர் தீர்க்கம் தெரிந்தது...

வளரி பாட்டி : உனக்காக தான் தாயி.. (இ)ராவு பகல் பாக்காம காத்திருந்தேன்... நீ வந்துட்டியா.. உனக்கு அப்போ ரொம்ப அடிப்பட்டுச்சே தாயி... இப்போ எப்டி இருக்க என அன்பாய் அவளின் கூந்தலை வருடினார்...

சித்ரியா : தாம் கூற வருவதை தெளிவாய் கூறினால் புரியுமாயின் நாழிகளை கடத்த வேண்டாம் அம்மா.. தையை கூர்ந்து யாம் அறிய வேண்டிய மெய்களை தெரிவியுங்கள்...

வளரி பாட்டி : அதுக்கான சரியான நேரமும் வந்துடுச்சு தாயி.. இந்த கதை பத்து பதினைஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பமானது இல்ல.. மொத்தமா ஏழாயிரம் ஆண்டுக்கு முன்னாடி தொடங்குச்சு.. என தன் கரகரவென்ற குரலில் தொடங்கி கேட்கும் நாயகிகள் அனைவருக்கும் நம்பத்தகாத பல காட்சிகளையும் சம்பவங்களையும் உள்ளடக்கிய மீண்டும் தொடரும் காதல் பாகத்தை விளாவரியாய் கோவன்கள் நாகனிகள் சஹாத்திய சூரர்கள் மற்றும் யாளி வீராங்கனைகளின் இரண்டு ஜென்மங்களையும் விவரித்து மூன்றாம் பிறவியான இப்பிறவியில் முப்பது ஆண்டுகள் முன் நிகழ்ந்த அனைத்தையும் கூறி முடித்தார்...

எதையும் நம்ப முடியாமல் சிலை போல் அமர்ந்திருந்தவள்களுள் கயலின் நினைவலைகளில் மீண்டும் ஏதேதோ வந்து செல்ல இறுதியாய் வந்ததென்னவோ பதிமூன்றே வயதான கார்த்திக்கின் வசீகர முகமே...

ஆனால் கயல் முதல் முறையாகவே கார்த்திக்கை அவனது இருவதாவது வயதில் தான் முதல் முறை கண்டாள்.. அப்படி இருப்பின் இது எப்படி சாத்தியமென குழம்பியவளுக்கு அதே நேரம் மற்றவர்களுடன் வேறு ஒரு சந்தேகமும் உதித்தது...

நாயகிகள் : நுப்பது வர்ஷத்துக்கு முன்னாடி கயலுக்கு எப்டி எட்டு வயசா இருக்க முடியும் என ஒரு சேர கேட்க.. அதான என கயலும் நிமிர்ந்து வளரி பாட்டியை பார்த்தாள்... சித்ரியா வேதித்யா மற்றும் எழில் யாரேனும் வருகிறார்களா என கண்காணித்தவாறு நிகழ்ந்தவையையும் கேட்டு கொண்டிருந்தனர்...

வளரி பாட்டி : அது தான்மா உங்க எல்லாரோட வாழ்கையோட முதல் புள்ளி என அன்றைய நினைவுகளிலே மூழ்கினார்...

காடு

ருத்ரா ஆதி : சொல்லுங்க... நாங்க உயிரோட தான் இருக்கோம்னு தெரிஞ்சும் ஏன் எங்கள நீங்க பிரிச்சே வச்சிர்ந்தீங்க.. என இருவருமாய் கேட்க மேலும் மேலும் நாயகிகளுக்கு அதிர்ச்சிகள் கூடிட இப்போது பராக்ரம வீரன்களுக்குமே அதிர்ச்சியானது...

ஆயினும் இன்னும் நம் சஹாத்திய சூரர்கள் இரட்சகன்கள் மூவரையும் தங்கள் கண்களுள் நிறப்பி கொண்டு அப்படியே தான் நின்றிருந்தனர்...

ரக்ஷவ் : ஏன் குருவே அமைதியா இருக்கீங்க... எதாவது பேசுங்க..

ருமேஷ் : அதுக்கு நாங்க பதில் சொல்றோம் டா.. என திடீரென கேட்ட இவனின் குரலில் அனைவரும் திரும்ப... அங்கோ உடலில் ஆங்காங்கு பல இடங்களில் வெள்ளி காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த துருவை இரு புறமும் பிடித்து தூக்கி கொண்டு சில காயங்களுடன் ருமேஷ் விதுஷ் வந்தனர்...

அவர்களின் பின் வளவனை கை தாங்களாய் அழைத்து வந்து கொண்டிருந்தாள் மோகினி...

தான்யா : அக்கா துருவ்க்கும் வளவன் மாமாக்கும் என்ன ஆச்சு.. என பதட்டத்துடன் இருவரின் உடல் நிலையையும் சரிபார்க்க...

வளவன் : எனக்கு ஒன்னும் இல்லடா... நீ துருவ பாரு என தன் இடையை அழுத்தி பிடித்திருத வளவன் சாதாரணமாய் கூறிட தான்யாவும் துருவிற்கு சிகிச்சை அளிக்க தொடங்கினாள்...

திவ்யா : அப்போ உங்களுக்கு சித்து ருத்ரா ஆதி உயிரோட இருக்குரது தெரியுமா ருமி.. என ருமேஷை பார்க்க ருமேஷும் விதுஷும் அவள் கண்களில் தெரிந்த வேதனையை கண்டு தலை குனிந்தனர்...

விதுஷ் : எங்களுக்கு தெரியும் அத்த.. நாங்க தான் சித்து ருத்ரா ஆதி மூணு பேரையும் இத்தன வர்ஷமா கூட இருந்து பாத்துக்குட்டோம்..

வீனா : என்ன பேசிக்கிட்டு இருக்க விது.. அப்டி இருந்தா ஏன் இத்தன வர்ஷமா எதுவும் எங்க கிட்ட சொல்லல.. என கேட்டதும் இருவரையும் அமைதி காத்தனர்..

ரித்விக் : அதுக்கு நாங்க தான் காரணம்.. என்றவனை அனைவரும் உருத்து நோக்க.. சஹாத்திய சூரர்களுடன் அனைவரின் நினைவுகளும் நுப்பது வருடங்கள் பின்னோக்கி பயணித்தது...

நுப்பது வருடங்களுக்கு முன்..

அன்றோடு முப்பெரும் தேவன்கள் இறந்து மாதங்கள் உருண்டோடி நாயகர்களின் திருமண வாழ்வும் இல்லறத்துடன் நல்லறமாய் துவங்கியிருந்தது...

எந்த விதமான இன்னலும் இன்றி அனைவரும் ஒரே வீட்டில் ஏக போக சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தனர்.. காதலுக்கு பஞ்சமின்றி பனிரெண்டு ஜோடிகளும் வீட்டை வளம் வந்தது.. வீட்டிற்கே செல்ல பிள்ளைகளாய் துருவ் மற்றும் கயல் குறும்பு செய்து பெயரெடுத்து அண்ணன் தங்கையென சுற்றி வந்தனர்.. வேதபுரத்தில் குற்றமும் ஏமாற்றமும் குறைந்ததால் மக்கள் முன்பிருந்த பயம் நீங்கி நிம்மதியுடன் வாழ தொடங்கியிருந்தனர்...

அனைவரின் மனதையும் குளிர்விக்கவெனவே வீட்டின் மூத்த வாரிசென ரித்விக் மது தம்பதியருக்கு அஷ்வித் உயிராய் மதுவினுள் உருவாக தொடங்கினான்...

சாதாரணமாகவே அவர்களை ஓட்டி நொங்கெடுக்கும் தோழர்கள் இப்போது சும்மா விடுவரா.. இரவு பகல் பார்க்காமல் நையாண்டி செய்தனர்...

நம் காதல் ஜோடியோ இவை எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் பத்து வருட காதல் உயிராய் உரு பெற்றதில் ஒவ்வொரு நொடியையும் இரசித்து வாழ்ந்தனர்...

இருந்தும் மதுவுக்கு என்று நான்காம் மாதம் தொடங்கியதோ அன்றிலிருந்தே பல மாற்றங்கள் உள்ளுக்குள் உருவாக தொடங்கியது.. உருவான சாதாரண மனித குழந்தையல்லவென்று அப்போது யார் அறிந்திருந்தனர்... அவன் ஆத்ம சக்தி கொண்ட சிறுத்தைபுலியாயிற்றே...

இவ்வாறே நாட்கள் ஓட மது அந்தளவிற்கு தன்னை தளரவிடாமல் தன் தோழிகளுடன் நேரம் செலவழித்து தன்னை சேற்றி வந்தாள்...

அப்போதே நேரங்களும் மாற தொடங்கியது... அன்று மதுவுக்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருந்தது.. ஐந்தாம் மாதத்தில் ஐந்து வகையான உணவு சமைத்து பெண்ணுக்கு ஊட்டுவர்...

அதற்கான வேலைகளில் நம் நாயகன்கள் சுற்றி கொண்டிருக்க நம் நாயகிகள் அவர்களின் கை பட ஐந்து வகையான உணவு சமைத்து கொண்டிருந்தனர்...

அனு மாத்திரம் தன் கவனத்தை ஓரிடத்தில் செழுத்த இயலாமல் தடுமாறி கொண்டே இருந்தாள்... வீட்டு வாயிலில் தோரணம் கட்டி அதை சரி பார்த்து கொண்டே தன்னவளை அவ்வப்போது சைட்டடித்து கொண்டிருந்த க்ரிஷ் இவளின் குழப்பமான மனநிலை கண்டு ரனீஷின் மண்டையில் தட்டி வாழை இலையை கவனிக்க கூறி விட்டு அவருகில் சென்றான்...

ரனீஷ் : போய்ட்டானா... இத என்னாண்டு டா நான் ஒருத்தனா கட்டுவேன்.. என இவன் புலம்பும் போது சரியாக அப்புறமாய் வந்த ரித்விக் அவனிடம் மாட்டி கொண்டான்...

ரனீஷ் : டேய் டேய் ரித்வி.. இங்க வா டா... கண்டுக்காத மாரி போனன்னா மண்டைலையே தேங்காவ விட்டு  எறிவேன் டா என இவன் கத்த எப்பாடு பட்டாவது மதுவை காண சென்றிட வேண்டும் என வாயிலை நோட்டம் விட்டு ரனீஷிடம் தப்பிக்க முயற்சித்து கொண்டிருந்த ரித்விக் இவனின் கடைசி கூற்றில் பல்லை கடித்து கொண்டு இவன் அருகில் வந்தான்...

ரித்விக் : என்ன டா... என் பொண்டாட்டிய கூட பாக்க விடமாட்டியா...

ரனீஷ் : நாள் பூரா அவ கூட தான டா இருக்க... மரியாதையா அந்த பக்கத்து தோரணத்து புடிச்சு கட்டு..

ரித்விக் : எல்லாம் என் நேரம்... வந்து தொலையிறேன் இரு... என்றவாறு மறு புறம் ஒரு சேரை போட்டு அந்த தோரணத்தை ரனீஷுடன் சேர்ந்து ஒரே போல் கட்ட தொடங்கினான்...

க்ரிஷ் : ஹே ரதுமா என தன்னந்தனியாய் பால்கெனியில் நின்றிருந்தவளின் தோளை தொட்டி திருப்பினான் க்ரிஷ்..

அனு : என்னாச்சு...

க்ரிஷ் : உனக்கு என்னாச்சு ரதுமா.. ஏன் இப்டி இருக்க..

அனு : எனக்கு என்ன.. எனக்கு ஒன்னுமில்லையே..

க்ரிஷ் : அப்டியா.. அப்போ எதனால என் அருமை மனைவியோட காந்த கண்கள் சோகமா இருக்கு என மெதுவாய் அவளை சுற்றி கைகளை போட்டவாறு கேட்க தன் கைகளை அவன் கழுத்தில் மாலையை போட்டு கொண்ட அனு...

அனு : ஹேம் ஒருவேளை என் புருஷனோட மார்னிங் ஃபோர்ஹெட் கிஸ் இன்னைக்கு கிடைக்காததுனாலையோ என தாடையில் விரல் வைத்து யோசிப்பதை போல் செய்ய.. இன்று அவசர அவசரமாய் கிளம்பி சென்றதால் அவளை கவனிக்க தவறியதை எவ்வளவு அழகாய் குறிப்பிடுகிறாள் தன் மனைவி என சிரித்த க்ரிஷ் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட இதழை சுழித்து தோளில் இடித்த அனு " ககேட்டா தான் கிடைக்குமோ " என அவனை முறைக்க.. க்ரிஷ் வாய் விட்டே சிரித்து விட்டான்...

அனு : ஸெர் நான் கோவமா இருக்கேன்... சிரிக்கிரீங்க...

க்ரிஷ் : ஆமா அப்டியே கோவத்துல என்ன எரிக்க போறீங்கல்ல மேடம் நா பயந்து அழுகுரதுக்கு என இன்னும் நக்கலாய் கூற அவனை உதறி விட்டு நகர போனவளை மீண்டும் பிடித்து இழுத்து பின்னிருந்தவாறே அணைத்தான்...

சரியாக அவன் பின் ஃபோன் நோண்டி கொண்டே வந்த இந்திரன்...

இந்திரன் : டேய் க்ரிஷ்.. நமக்கு ந்யூ கேஸ் பத்தின ஃபைல்ஸ் எந்த மெய்ல்ல டா இருக்கு என கேட்டு கொண்டே வர...

க்ரிஷ் : ஃபைலாவது மண்ணாவது போய் திவிய சமாளிக்கிர வேலைய பாரு ப்ரதர்.. அக்கா தங்கச்சிங்க மூணு பேரும் இன்னைக்கு ஒரு ப்லனோட இருக்குரதா தூது வந்துருக்கு.. என சிரித்தவாறு கூறியவன் அனுவின் காதை கடிக்க.. அவள் அவன் கைகளை நறுக்கென கிள்ளினாள்...

இந்திரன் : ஆஹா ஆமால்ல.. நாம வேற இரெண்டு நாளா வீட்லையே இல்ல.. கடந்து குதியா குதிப்பாளே.. என் ஷிவானி எங்கே என்றபடி ஓடிய இந்திரன் அவனை நோக்கி ஏதோ தரையை பார்த்தவாறு முனுமுனுத்து கொண்டே வந்த திவ்யாவை வேண்டுமென்றே இடிக்க தடுமாறி விழ போன திவ்யா அவன் கைகளுள் தஞ்சமடைந்தாள்...

திவ்யா : இந்தர் என விழும் முன் இவள் கத்தி விட...

இந்திரன் : இங்க தான் டி இருக்கேன் ஏன் கத்துர... பட்டென கண்களை திறந்த தான் அவன் பிடியிலே உள்ளதை உணர்ந்ததும் ஒரு நொடி பெருமூச்சு விட்டவள் பின் அவனை முறைத்தாள்...

இந்திரன் : என் பொண்டாட்டி... வழக்கத்த விட உன் இந்தர் முகத்துல இன்னைக்கு ரொம்ப அழகு கூடீடுச்சா என்ன இப்டி பாக்குர.. என புருவத்தை உயர்த்தி கேட்க... சரியாக இந்திரனின் காலை வாரவே அவனின் ஃபோனை தூக்கி கொண்டே இந்திரனை போலவே அதை நோண்டியவாறு வந்தான் சத்தீஷ்...

சத்தீஷ் : அது முன்னாடி இருந்திருந்தா இப்போ ஏன் இப்டி பாக்கு போறா இந்திரா.. சரி அத விடு கேஸ் ஃபைல் உள்ள மெய்ல் எது என முதலில் அவன் காலை வாரிவிட்டு பின் தான் கேட்ட அதே கேள்வியை கேட்பவனை இந்திரன் முறைக்க திவ்யாவோ அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்..

அவளின் சிரிப்பு சத்தத்திலே நிமிர்ந்து பார்த்த சத்தீஷ் தன்னை தன் உடன் பிறப்பு மூக்கு முட்ட முறைப்பதை கண்டு ஈஈஈஈ என இளித்தவன் ஒரே ஓட்டமாய் ஓடி விட்டான்...

இந்திரன் : எனக்கு மட்டும் எங்கேந்து தான் இப்டி கூட இருக்குரவனெல்லாம் கரடியாவே வரானுங்களோ தெரியல...

திவ்யா : ம்க்கும் நீங்களே கரடி தான்.. இதுல என் அத்தான் அண்ணன கரடீங்குரீங்களா என வாயை நொடித்து கேட்க..

இந்திரன் : மேடம் இதுக்கெல்லாம் மட்டும் நல்ல வாரி கட்டிக்கிட்டு வருவீங்களே... எனக்கு சப்போர்ட் பன்ன வந்துர்க்கியா நீ...

திவ்யா : பின்ன இல்லாமையா.. நா ஏன் உங்களுக்கு சப்போர்ட் பன்னனும்.. யாரு நீங்க என எங்கோ பார்க்க...

இந்திரன் : யாரோ ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி இந்தர்னு கத்துனாங்களே.. அவங்கள பாத்தியா ஷிவானி என தேடியவாறே கேட்க...

திவ்யா : எனக்குலாம் தெரியாது...

இந்திரன் : ஹான் மடம்க்கு நானே யாருன்னு தெரியாது.. ஆனா நா ஷிவானின்னு உன்ன தான் கூப்ட்டன்னு தெரியுமோ என நக்கலாய் கேட்கவும் திவ்யா யாது பதிலளிக்கவென தெரியாமல் முளித்து விட்டு...

திவ்யா : ம்ச் போதும் உங்க விளையாட்டு.. விடுங்க என்ன என ஓட முற்பட்டவளை ஒரே இழுப்பில் இழுத்து தன் அணைப்பிற்குள் சிறையிட்டான் அவன்...

ஐந்து வித உணவுகளில் புளி சாதத்தில் புளிப்பு போதுமா என பார்க்கவென இரு வாய் டேஸ்ட் பார்த்து கொண்டிருந்த ப்ரியா சற்றே உப்பை போட்டு விட்டு மீண்டும் உண்ண பார்க்கும் முன் சட்டென இடை புகுந்த சத்தீஷ் அதை உண்டு விட்டு...

சத்தீஷ் : ஹே தேவி குட்டி பரவால்லையே.. ஒரு வர்ஷத்துல சமையல் டிப்பார்ட்மென்ட்ல கொஞ்சம் தேரீட்ட டி.. என உண்டவாறே கூற அவனை மூச்சு முட்ட முறைத்த ப்ரியா புளி சாதத்தை கிளரி கொண்டிருந்த தான்யாவும் அவனுடன் சேர்ந்து சிரிப்பதை கண்டு முகத்தை சுருக்கி கொண்டவள்  விருவிருவென எழுந்து சென்றாள்...

தான்யா : டேய் அண்ணா.. அவ போய் பத்து நிமிஷமாச்சு.. அப்ரம் இரசிச்சு சாப்டு போ டா அவ பின்னாடி என கண்களை மூடி இரசித்து சாப்பிடுகிறேனென ப்ரியாவை வெறுப்பேற்றி கொண்டிருந்த சத்தீஷின் தலையில் தட்டி அனுப்பி விட்டாள்...

சத்தீஷ் : போய்ட்டாளா.. சரி குட்டிமா.. அடியேய் நில்லு டி.. என தோட்டத்தின் பக்கம் சென்றவளின் பின் கத்தி கொண்டே ஓடினான்...

தான்யா சிரித்தபடி மதுவை தேடி சென்றாள்... தோட்டத்தின் புறமய் ப்ரியா வேகவேகமாக சென்று கொண்டிருந்தாள்...

ப்ரியா : நாலாம் நிக்க முடியாது...

சத்தீஷ் : ஹே ஓட விடாத டி நில்லு டி...

ப்ரியா : நா ஒன்னும் உன்ன ஓட சொல்லல...

சத்தீஷ் : கட்டுன புருஷன இப்டிலாம் கொடுமை பன்ன கூடாதுடி...

ப்ரியா : நீ ஏன் என்ன கட்டிக்கிர.. போய் உன் கேஸ் ஃபைல் இல்லனா உன் சீபீ ஹெட்டையே கட்டிக்கிட்டு ஆழு.. என பதிலுக்கு பதில் பேசி கொண்டே நடந்து சென்றவளின் ஒரு கரத்தை பிடித்து இழுத்தவன் அவள் கீழே விழும் முன் சரியாய் அவனோடு சேர்த்தணைத்தான்...

தங்கள் தோழன் கதிரவனை தங்களின் தேகத்தின் பின் மறைத்தவாறு உலகின் ஒளி வீச்சை தடுத்து இருண்ட தன் காதலன் வானத்தை முழுவதுமாய் சூழ்ந்து இருள் கவ்வி கிடந்தது அந்த வானம்... ஒரு நொடி ஒரே ஒரு நொடி தன்னுள் பலாயிரக்கணக்கான சக்திகளை ஒன்றிணைத்து ஒரே இடியாய் அந்த உலகையே அதிர வைப்பதை போல் கோரமான அதீத ஓசையுடன் இடித்தது ஒரு பேரிடி... அந்த ஒரே ஒரு இடி மொத்த உலகத்தினரையும் திரும்பி பார்க்க வைத்தது...

முவ்வேறு இடங்களில் மூன்று ஜோடிகளில் ஒருவர் மற்றவரின் அனைப்பில் செல்ல கோபத்துடன் விளையாடி கொண்டிருந்த சகோதரிகள் மூவரும் விண்ணில் இடித்த அந்த பயங்கரமான இடியின் அதீத சத்தத்தில் ஒரே நேரத்தில் மயங்கி விழ அந்த இடியுடன் வெகு தொலைவிலிருந்து பயணித்து வந்த அந்த பெரும் மின்னல் வேதபுரத்தின் தன்ய ஆற்றில் நேராய் சென்று விழுந்து இயற்கையே வழி விட்டதாய் இயற்கையின் மீது பழி உயர்த்தி அந்த நதியின் அடிமட்டத்தில் ஒரு பெரும் பிளவை உருவாக்கியது....

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே ஹப்பா ஃபர்ஸ்ட் ஃப்லஷ்பக் ஸ்டார்ட் ஆய்டுச்சு.. இன்னும் சில பல யூடிகளுக்கு ஃப்லஷ்பக் தான் இதயங்களே.. எப்டீன்னா ஒரு எட்டு வர்ஷத்த நாம ஃப்லஷ்பக்ல பாக்க போறோம்.. மேபீ முடிஞ்ச வர சீக்கிரமே அதாவது ஃபாஸ்ட்டா கொண்டு போறேன்.. கவலப்படாதீங்க நமக்கு தேவையான ஜாலி சீன்ஸ்ஸெல்லாம் இருக்கும்.. ஒரு தரமான போரும் இருக்கு.. உங்களுக்கு தெரிஞ்சதையே நா ஏன் இப்போ திரும்ப ஒளறிக்கிட்டு இருக்கேன்னு தெரியல...

ஆனா நம்ம கதை வரலாற்றுலையே ஃப்லஷ்பக்க நா இந்த கதைல மட்டும் தான் ரொம்பவே சீக்கிரமா.. (ஐ மீன் கம்ப்பரிங் டு அதர் ஸ்டோரீஸ் ) ஆரம்பிச்சிர்க்கேன்னு நினைக்கிறேன்.. பாருங்களேன் நுப்பதாவது யூடிலையே ஆரம்ச்சிடுச்சு..

ஹான் அப்ரம் ஒரு பெரிய விஷயம்.. அக்டோபர் 1 முதல் ஸ்கூல் ஓப்பன் பன்றதா பேசிக்கிராங்க... ஓப்பனே பன்னலன்னாலும் எனக்கு நெக்ஸ்ட் மம்த் தான் குவார்ட்டலி எக்ஸம் வைக்க போறதா சொன்னாங்க... என்ன நடக்கும்னு தெரியல... சோ டெய்லி யூடி வரலன்னா கோச்சிக்காதீங்க.. ஒரு நாள் வரலன்னாலும் மறுநாள் குடுத்துடுவேன்.. சரியா ஓக்கே இதயங்களே டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro