Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 16

சித்தார்த்தை நோட்டம் விட்டவாறு மரத்தின் மேல் அமர்ந்திருந்த அவ்வுருவம் " தாம் தாமதிப்பது தமக்கே ஆபத்தாய் விடிய வாய்ப்புள்ளது.. தற்பொழுதே இவ்விடத்திலிருந்து அகல வேண்டும்.. " என மனதில் நினைத்து கொண்டு அம்மரத்திலிருந்து வேறு மரத்தை நோட்டமிட கீழிருந்து கேட்ட சித்தார்த்தின் குரல் அதை அதிர்ச்சியுற செய்தது...

சித்தார்த் : நனந்தலை ( அகன்ற ) கானகத்தின் (காட்டின்)  எல்லையை நின் நிழல் கடக்கும் முன்னே உம்மை எம்மால் சிறை பிடிக்க இயலும்.. ஆதலின் தனிச்சையாய் கீழ் வருவது சிறத்தையாகும் (சிறப்பு)..  என்கவும் எச்சிலை கூட்டி விழுங்கிய அவ்வுருவம் மெல்ல அக்கிளையிலிருந்து காலை பின் நகர்த்துகிறேனென இடறி விட்டு தவறி கீழ் விழ சித்தார்த் சட்டென பிடித்து கீழே நிற்க வைத்தான்....

சித்தார்த்தை கண்டு கொட்ட கொட்ட முளித்த அவ்வுருவம் பின் தன் சகஜநிலையை பெற்று கொண்டு உரையாடலை தொடங்கியது..

உருவம் : தாம் முன்னமே யான் இங்கிருப்பதை அறிந்திருந்தீரா..

சித்தார்த் : அதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இருக்க அவசியமன்று.. என விவரித்து தனக்கு தெரியும் என அவன் உணர்த்த...

உருவம் : யான்...

சித்தார்த் : வீண் விளக்கம் தேவயன்று அஜயதீபா.. எம் தோழன்களை முடிந்த மாத்திரம் விரைவில் சென்றடைகிறாயா என நேரய் விஷயத்திற்கு வர.. " எப்டி டா கண்டுப்புடிச்ச " என்ற மைண் வாய்சுடன் அவனை ஏறிட்டான் சித்தார்த்தின் முன் கம்பீரமான உடல் வாகுடன் நின்றிருந்த மாவீரனும் நம் தையின் இறுதி கதாநாயகனும் கார்த்திக்கின் சகோதரனுமான அஜயதீபன்...

அஜய் நம் அனைத்து நாயகர்களும் நன்றாய் அறிந்திருக்கும் ஒருவன்... வெளி ஊரில் இருந்து பணியாற்றுவதால் இவன் அங்கிருக்கிறான் என அனைவரும் எண்ணி கொண்டிருக்கின்றனர்... ஆனால் சித்தார்த் மாத்திரமே அறிவான் அஜய் அனைத்தையும் நினைவு கொண்டு ஊட்டியில் தான் உளாவி கொண்டிருக்கிறான் என்று....

அஜய் : எவ்வாறடா என்னை கண்டுப்பிடித்தாய் என அவன் தோளிலே அடித்து கை போட்டு கொள்ள மறுக்காமல் சிறு புன்னகையுடன் அவனை அணைத்து கொண்ட சித்தார்த்...

சித்தார்த் : தம்மை கண்டறிய எமக்கு தனி குழுவை வேறு வகுத்துத்தர வேண்டுமா.. உமது விழியருகில் உள்ள மருவே போதுமானதடா.. என்றான் சிறு சிரிப்புடன்...

அஜய் : மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டேனே...

சித்தார்த் : ஹ்ம் சரி சரி இங்க உனக்கென்ன வேலை..

அஜய் : வேற என்ன இந்த தெண்டசோற தூக்கீட்டு போக தான் வந்தேன்... போய் சர்ப்பலோக காட்டுல போடனும் இல்லனா உன்ன வேற போட்டு குடுத்துடுவான்ல என அந்த கருஞ்சிறுத்தையை சுட்டி காட்டினான்...

சித்தார்த் : ஹ்ம் இவன் போற போக்கே சரியில்ல.. என்னைக்கு என் கைலையோ இல்ல ருத்து அத்து கைலையோ சாவ போறான்னு தெரியல.. ஆனா இவனுக்கு எங்க கையால சாவு இல்ல... அதனால தப்பிக்கிறான்.... என அந்த கருஞ்சிறுத்தையை பார்த்தவாறு கைகளை முறுக்கினான்...

அஜய் : ம்ம் இப்போ தான் நியாபகம் வருது.. அத்து ஏன் என வினவ வரும் போதே சித்தார்த் அவனை ஓரக்கண்ணால் ஒரு மாதிரியாக முறைப்பதை கண்டு நாக்கை கடித்தான்..

சித்தார்த் : என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க...

அஜய் : ஈஈஈ ஆதி ஏன் இங்கேர்ந்து மறஞ்சான்னு கேக்க வந்தேன் என இளிக்க.. சித்தார்த் முறைத்தான்...

என்ன தான் இருந்தாலும் சித்தார்த்திற்கு இது பிறப்பிலிருந்தே (எந்த ஜென்மத்து பிறப்புன்னு கேக்காதீங்க ) உள்ள பழக்கம் இது.. ருத்ராக்ஷையும் ஆதியன்த்தையும் அவனை தவிர்த்து வேறெவரும் ருத்து அத்து என தப்பி தவறி கூட அழைக்க கூடாது.. அழைத்தால் பஸ்மமாக்கி விடுவான்.. ருத்ராக்ஷ் ஆதியன்த்திற்கும் அவ்வழியே அவர்களுக்கும் சித்துவை தவிர்த்து வேறெவரும் அப்படி அழைக்க கூடாது.. ரனீஷ் சித்துவை காண்டேத்தவென்றே இவ்வாறு இருவரையும் அழைக்க ஐந்து வயதிற்கு முன்னே இந்த குட்டி வாண்டுகள் மத்த குட்டி வாண்டுகளுடன் திட்டம் தீட்டி ரனீஷிற்கு பாடம் வேறு புகட்டியிருக்கின்றனர்...

தீரா : அது என்ன சம்பவம்னு நாம ஃப்லஷ்பக்ல பாப்போம்...

அஜய் : டேய் போதும் டா... நீ அத்துன்னு சொல்லாம இருந்துர்ந்தா நா பாட்டுக்கு ஆதின்னு சொல்லீர்ப்பேன்... என சினுங்களுடன் கூறவும் நக்கலாய் முறைத்தவன் பின் சிறு புன்னகையுடன் ஆதிக்கு ஒன்றுமில்லை என்றான்...

சித்தார்த் : சரி அஜய்.. நீ இப்போ வேதபுரத்துக்கு போ.. இனிமேலும் தனியா சுத்திக்கிட்டு இருக்காதடா..

அஜய் : சரி டா போறேன்.. இது என்ன புது மாற்றம் என்க..

சித்தார்த் : எத கேக்குர நீ...

அஜய் : புதுசா முளைச்சிருக்கே இந்த இறெக்கைய தான் கேக்குறேன்...

சித்தார்த் : ஹ்ம் கொஞ்ச தேரத்துக்கு முன்னாடி தான் முளைச்சது.. சத்தியமா அப்பாங்க மூணு பேரும் இந்த வலிய எப்டி தாங்கிக்கிட்டாங்கன்னு தெரியல டா..

அஜய் : ஹ்ம் அவங்க என்னைக்கு டா அவங்களோட வலிய முகத்துல காம்ச்சிருக்காங்க.. அந்த கடைசி நேரத்துல கூட சிரிச்சிட்டே என்ன இந்திரனப்பா தூக்கீட்டு வந்தது இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு...

சித்தார்த் : ஹ்ம்ம்ம் ஒரு நிமிஷம்.. அப்போ அன்னைக்கு என்ன என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா என சட்டென அஜயை நோக்க அஜய் திருதிருவென விழித்தான்...

அஜய் : அ..அது.. அது..

சித்தார்த் : உண்மைய சொல்லு அஜய் உனக்கு தெரியுமா... என்னோட மூணு அப்பாவும் இறக்க காரணமா இருந்தது யாரு டா... சொல்லு டா... என அவனை போட்டு உலுக்க.. வழி தெரியாது அவன் உலுக்கலில் குழுங்கி கொண்டிருந்த அஜய் வேறு வழியின்றி " உங்களுக்காக தான் டா " என கத்தி விட்டான்...

சித்தார்த் : எங்களுக்காகவா... என அதிர்ச்சியுடன் கேட்க...

அஜய் : ஆமா அன்னைக்கு அந்த விந்வார்ந்த யஷ்டிகள் (யட்சினி வம்சத்தவர்கள்) வந்து உன்னையும் ருத்ரா ஆதியையும் கடத்தீட்டு போக முயற்சி பன்னாங்க.. அப்போ கூடவே இருந்த எங்க பத்து (பராக்ரம வீரன்ளையும்)  பேரையும் அழிக்க முயற்சி பன்னாங்க.. அப்போ தான் க்ரிஷ் அப்பா இந்திரன் அப்பா சத்தீஷப்பா மூணு பேரும் உங்க மூணு பேரையும் எதனாலையோ பிரிச்சு மூணு திசைல மறைச்சு வச்சாங்க.. ஆனா அப்போ தான்.. என இழுக்க சித்தார்த் நிறுத்து என்பதை போல் கையுயர்த்தினான் ...

சித்தார்த் : மாமாக்களுக்கும் சிச்சாக்களுக்கும் இதோ தெரியுமா தெரியாதா...

அஜய் : இரட்சகன்கள் மூணு பேர் எங்கையோ உயிரோட இருக்காங்கன்னு தெரியும்.. ஆனா அது நீங்க தான்னு தெரியாது..

தன் கண்களை இறுக்கி மூடி நின்ற சித்தார்த்தின் கண்களில் க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷை இறுதியாய் கண்ட சில நினைவுகள் அலையாடியது... சட்டென அஜயை நோக்கி திரும்பியவன்

சித்தார்த் : நீ இவன விட்டுட்டு இப்பவே வேதபுரத்துக்கு போ.. உடனே அவனுங்க கிட்ட போ.. என்ன நடந்துச்சுன்னு நாங்க நேர்லையே வந்து தெரிஞ்சிக்கிறோம்.. போ

அஜய் : ஆனா சித்து என ஏதோ கூற வர

சித்தார்த் : போன்னு சொன்னேன் அஜய்.. ருத்துவும் அத்துவும் நா இல்லாம வேதபுரம் பக்கம் கூட வர மாட்டாங்க... ஆனா என்னால இப்ப உடனேவும் அங்க வர முடியாது... எனக்கு இங்க இருந்து முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு... நாங்க மூணு பேரும் ஒன்னா வேதபுரத்துக்கு சீக்கிரமே வருவோம்... நீ நம்பிக்கையோட கெளம்பு.. என்ன இங்க பாத்ததையும் மறந்துடு.. என்றவன் அஜய் கூற கூற கேட்காமல் அவனது அகன்ற இறெக்கையை விரித்து இருள் விண்ணில் பறந்து மறைந்தான்...

தன் திலையை எண்ணி தானே நொந்து கொண்ட அஜய் அங்கிருந்து வேதபுரத்தை நோக்கி பயணமானான்.. மெல்ல அரை மணி நேரம் பின் கண் விழித்த கருஞ்சிறுத்தை சித்தார்த் அங்கில்லாததை உறுதி பூண்ட பின்னே தன் மனித உருவிற்கு வந்தது...

அது வேறாரும் அல்ல... சாகாரகாந்தனே.. தலை கிறுகிறென சுற்ற.. சித்தார்த்தின் அந்த ரூபத்தை எண்ணி வெடவெடத்து போயிருந்தவன் எச்சிலை கூட்டி விழுங்கி விட்டு உடனே சர்ப்பலோகத்திற்கு விரைந்தான்...

ஆதியன்த்தின் ஆக்ரோஷமான அலரலை கேட்டு சட்டென கண்களை திறந்தான் ருத்ராக்ஷ்.. அது ஏதோ ஒரு வெட்டவெளியை போல் தான் இருந்தது.. ஒரு காட்டின் உள்ளே அமைந்திருக்கும் வெற்றிடம்.. அவன் மேல் சட்டை மொத்தமும் கீழே கிளிந்து நாற் நாறாய் சில இரத்தக்கரையுடன் கிடந்தது..

எழுந்து தன்னை ஒரு முறை கண்ட ருத்ராக்ஷ் தன் கட்டுடலில் இரத்தம் கசிந்திருப்பதையும் முதுகில் ஏதோ புதிய பாரம் இருப்பதையும் உணர்ந்தவன் தலையை மெதுவாய் திருப்பி பார்க்க அவன் எண்ணியதை போல் விக்ரமாதித்தனை பிடித்த வேதாளம் இல்லாது அழகான பளிச்சென்ற நீல நிறத்தில் சில இரத்தக்கரையுடன் இருந்த பெறிய இறெக்கைகள்...

சில நொடிகள் கண்ணிமைக்காது அதை பார்த்து கொண்டிருந்த ருத்ராக்ஷ் அதுவும் தன் உடலிலுள்ள ஒரு பாகம் தான் என்பதை தன்னால் அதை அசைக்க முடிகிறதென்பதில் புரிந்து கொண்டான்...

அதே நிலையில் இருந்தவனை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது ஆதியன்த்தின் அலரல்... சட்டென திரும்பிய ருத்ராக்ஷ் வெண்ணிற சட்டையில் இரத்தம் கொட்ட நரம்பு புடைக்க அலரி கொண்டு கீழே மண்டியிட்டு கிடந்த தன் இளையவனை கண்டு மனம் துடிக்க அருகில் ஓடினான்...

ருத்ராக்ஷ் : டேய் அத்து.. நா வந்துட்டேன் டா பயப்புடாத.. என அவன் ஒரு பக்கம் பிடித்து கொண்டு அவனுக்கு ஆறுதல் படுத்த... சட்டென ருத்ராக்ஷின் கண்கள் நீலமானது...

ஆதியன்த் : என்னால முடியலடா.. என்ன நடக்குது... ஆஆஆஆஆ என் முதுக பிளந்துட்டு ஏதோ வர மாரி இருக்கு... என தன் வெண்ணிற விழிகளை இறுக்கி மூடி மிகவும் கொடூரமாய் அலரினான்...

ருத்ராக்ஷ் : தாங்கிக்கோ அத்து.. இது கொஞ்ச நேரத்துல சரியாகிடும் நீ எழுந்திரி... என அவனை ஒருவாறு பிடித்து கொண்டு எழுப்ப.. தடுமாறி கொண்டே எழுந்த ஆதியன்த் இடது பக்க முதுகில் ஏதோ பாரம் பெருகிடவும் அப்புறம் சாய அவன் கீழே விழும் முன் ஒரு வலிய கரம் அவனை தாங்கியது...

ருத்ராக்ஷும் ஆதியன்த்தும் ஒரே நேரத்தில் கன்றிய முகத்தை அப்புறம் திருப்ப சித்தார்த் அரணாய் நின்றிருந்தான்..

சித்தார்த் : எந்திரிச்சு என் கூடவா அத்து..

அவன் மேல் இருந்த கோவத்திற்கு " நான் ஏன் டா நீ சொல்றத கேக்கனும் " என காது கேழாததை போல் அப்படியே அமர்ந்திருப்பான் ஆனால் அவனின் அழைப்பு எழாமல் விடாதே இவனை...

எத்துனை வருடங்கள் பின் கேட்கும் அழைப்பு... கசக்குமா என்ன... ஆதியன்த்தின் கால்கள் தானாய் எழுந்து நின்றது...

சித்தார்த் : டேய் ருத்து உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா.. வா டா என மூத்தவனாய் கூற ருத்ராக்ஷும் முகத்தை தூக்கி வைத்தவாறு அவனுடன் நடக்க சித்தார்த் வளராமல் இருக்கும் தன் இளையவன்களின் சிறுபிள்ளை தனமான கோவத்தை எண்ணி புன்னகைத்தான்...

மெதுமெதுவாய் ஆதியன்த்தின் வெண்ணிற சட்டை கிளிய தொடங்கியது... வலியில் அவன் இருவரின் கைகளையும் இறுக்கினான்... சித்தார்த் மற்றும் ருத்ராக்ஷிற்கும் அவர்கள் அனுபவித்த வலி கண்களில் தென்பட்டது.. அவ்வலியிலும் ஆதியன்த் அவர்களுடன் சித்தார்த் கூறிய இடத்திற்கு நடைபோட்டான்.. ஆனால் என்ன செய்தும் அவன் அலரலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..

மூத்தவன்கள் இருவரும் இளையவனுக்கு மாறி மாறி தைரியமூட்டி கொண்டே வந்தனர்.. மெதுமெதுவாய் மொத்தமாய் ஆதியன்த்தின் சட்டை கிளிந்து விழுந்ததும் முதுகிலிருந்து அதிகமாய் இரத்தம் கசிய தொடங்கியது... அவன் முதுகில் முளைக்க தொடங்கிய இரு வெண்ணிற இறெக்கைகளினால் மிகவும் பாடுபட்டான்..

அது தந்த வலியில் சட்டென ருத்ராக்ஷின் பிடியிலிருந்து கீழ் விழுந்தான்... சித்தார்த்தும் ருத்ராக்ஷும் அத்து என கத்தி கொண்டே அவனை பிடித்து கொண்டனர்...

தொண்டை அடைத்தது.. உடல் முழுவதும் ஏதோ ஒன்று அதிவிரைவாய் பரவுவதை கண் முளித்திருக்கும் போதே ஆதியன்த்தினால் உணர முடிந்தது.. இதே வலியை தானே தன் சகோதரன்களும் அனுபவித்திருப்பர் என சிந்தித்தவனுக்கு அவர்களின் வலி கோவத்தை தூண்டி விட்டது...

அந்த கோவம் வலியை மட்டுப்படுத்த உதவ சட்டென எம்பியவனின் முதுகில் இரத்தக்கரைகளுடன் முழுதாய் முளைத்து சமைந்து அசைந்தது அந்த வெண்ணிற இறெக்கைகள்...

இவனின் இறெக்கை முளைக்கவும் மூவரும் சித்தார்த் கூறிய அந்த குறிப்பிட்ட பகுதிக்கு வரவும் நிலவின் ஒளி அவர்களை தீண்டவும் சரியாய் இருந்தது...

இறெக்கை முளைத்த வினாடி காது ஜவ்வே கிளிந்ததை போல் அலரிய ஆதியன்த் மயக்க நிலைக்கு செல்ல.. அடுத்த நொடி நிலவின் ஒளியில் தானாய் கண்களை திறந்தான்..

இப்போது மூவருமாய் அந்த நிலவை ஏறிட்டனர்.. மூவரின் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது அந்த வலியின் சாயல்.. நிலவின் ஒளி உடலில் பட்டதும் மூவரின் உடலில் இருந்த இரத்தம் தானாய் மறைந்து இறெக்கைகளில் இருந்த ஒரு சில சிறு வலிகளும் கானல் நீரென மறைந்து போனது...

சில வினாடிகளில் அந்த நிலவு மேகங்களுள் தன் தற்காலிக விடுப்பை அறிவித்திடாமலே மறைய சகோதரன்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

ஆதியன்த் : ஏதோ எனக்கு முடிக்க வேண்டிய கடமை இருக்கு.. அத முடிச்சிட்டு நானே வரேன்.. என்ன தேடி டைம் வேஸ்ட் பன்னாதீங்கன்னு சொன்ன... இப்போ ஏன் வந்தியாம்.. என நக்கல் தோனியில் கோவமாய் கேட்டான்... இதை கேட்ட ருத்ராக்ஷும் "இப்டி வேற சொன்னானா " என்பதை போல் சித்தார்த்தை முறைத்தான்.. சிறிதாய் சிரித்தவன்

சித்தார்த் : வரனும்னு ஆய்டுச்சு டா... சரி வளவளன்னு பேசாத... நா சொல்றத மட்டும் கேளு... நம்ம மூணு பேருக்குமே சின்ன வயசு நியாபகம் எல்லாம் இருக்கு... அந்த குறிப்பிட்ட ஒரு நாள தவிற.. நாமளே நம்மள இரட்சகன்கள்னு அடையாளங்கண்டதுக்கு காரணம் நம்ம பூர்வஜென்ம நினைவுகள்.. அதனால தான் நம்மளே அறியாம இரெண்டு முறை நம்ம ரூபம் வெளிப்படுச்சு.. ஒன்னு விஸ்வரூப பௌர்ணமி தினம் அன்னைக்கு.. இன்னூன்னு விஞ்ஞவெள்ளன் விடுப்பெற்ற அன்னைக்கு... என்ன நடந்துச்சு ஏன் நம்ம இப்டி பிறந்திருக்கோம்னு எல்லாத்தையும் கூடிய சீக்கிரத்துல தெரிஞ்சிப்போம்... அப்ரம் நீங்க நினைக்கிர மாரி எனக்கு முன்னாடியே நாமம இரட்சகன்கள்னு தெரியும்.. அதாவது விஸ்வரூப பௌர்ணமி தினத்துக்கு முன்னாடியே.. புறனாவ முதல் முற துஷ்ரந்துகள்ட்ட இருந்து காப்பாத்துரதுக்காக நா இரட்சக உருவ எடுத்தேன்... அப்போ தான் நம்மள பத்தியே சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டேன்.. அப்ரம் எனக்கு கண்ணு உண்மையாவே நல்லாவே தெரியும்... ஆனா கண்ணு தெரியாது.. அது ஏன்னு பிறகு உங்களுக்கே தெரிய வரும்.. இப்போ ஒரு வேலை எனக்கு இன்னும் பாக்கி இருக்கு.. அத செஞ்சிட்டு நானே உங்கள தேடி வரேன்.. அது வர என்ன தேடாதீங்க... என்றவன் கண்ணிமைக்கும் நொடி பொழுதில் அவ்விடத்திலிருந்து காற்றென மறைந்திருந்தான்...

அவனிடம் உள்ள அதே சக்திகள் ருத்ராக்ஷ் ஆதியன்த்திடமும் இருந்தாலும் இவ்விருவருக்கும் முன்னமே அவன் சக்திகளை உபயோகிக்க தொடங்கியதால் இவர்களுக்கு வேகம் இன்னும் உதவவில்லை.. அதுவே இவர்கள் அவனை இன்னும் கண்டறியாமல் இருப்பதற்கு காரணம்...

சித்தார்த்தின் நினைவுகள் வலுவாய் இருப்பதற்கு அனுவின் மதிகலைளே காரணம்... என்ன தான் தந்தைகளான கோவன்கள் மூவரும் அச்சடித்த பச்சை போல் ஒரே போல் இருந்தாலும் அன்னைகளான நாகனிகளுக்கு முவ்வேறு சக்திகள் என்பதினால் இது மாத்திரம் மூவருள்ளும் வேறுபாடாய் இருந்தது...

ஆதலாலே மனதில் உள்ளவையை சித்தார்த்தால் படிக்கவும் முடியும்.. மாற்றானுடைய மூளையை விழிகளாலே கட்டுப்படுத்தவும் முடியும்...

ருத்ராக்ஷ்ஷால் ஆத்மாக்களுடன் உரையாடவும் முடியும்.. இவனுக்கு கீழ் அவர்ளை சகாயம் ( சேவை, உதவி ) செய்ய வைக்கவும் முடியும்

ஆதியன்த்தினால் காலத்தை கட்டுப்படுத்தவும் முடியும்... கால மாற்றம் செய்யவும் முடியும்... செய்ய வைக்கவும் முடியும்..

" இது எந்த இடம்... நாம எப்டி இங்க வந்தோம்... " என்று அருண் வினவ....

" தெரியல மச்சி  " ராகவ் பதிலளிக்க...

" அப்பாவ பாக்கத்தான டா போனோம்... அப்ரம் என்ன ஆச்சு.. எப்டி இங்க வந்தோம்..." வருண் மீண்டும் வினா எழுப்ப..

" டேய் அதல்லம் விடுங்க டா... இவ்ளோ பெரிய அரண்மனைய நாம இந்த ஊர்ல பாத்ததே இல்லையே டா... " என அஷ்வித் வினா எழுப்ப...

" ஐ தின்க் மச்சான்... நா மதன்கௌரி அண்ணா விடீயோ ஒன்னுல பாத்துர்க்கேன் டா.... நம்ம தமிழ்நட்ல ஒரு மிகப்பழமையான அரண்மனை இருக்காம்.. ஒரு வேலை இது அதுவா இருக்குமோ... " என்று அதி தீவிரமாய் மிதுன் விவரிக்க...

" அடேய் அது பாண்டில இருக்குடா... இது என்ன பாண்டியா? ?" என இவனே பதில் கொடுத்து வேறொரு வினாவும் எழுப்பினான் ராம்....

" வாஸ்த்தவம் தான் " என ஒத்துக்கொண்டான் ஆதவ்...

" சரி உள்ள போய் பாப்போமா " என மித்ரன் வினவ... அனைவரும் அமோதித்து உள் நுழைய போக.... திடீரென ஏதோ அதிபயங்கர ஒலியுடன் வெடித்தது...

சிறிது நேரம் முன் நிகழ்ந்ததை காணலாம்...

காலை எழுந்தது முதலே மூன்று நாட்களாய் வீட்டையே சுற்றி சுற்றி அலுத்து போயிருந்த இரண்டாம் அணி நாயகர்கள் " வெளியே செல்கிறோம் அனுமதியளியுங்கள் மாத்தாஜீ மாசிஜீ " என அன்னைமார் மற்றும் அத்தைமார் முன் சென்று நின்றனர்..

நம் நாயகிகள் எளிதில் விட்டு விடுவரா.. ஆரம்பத்திலே மறுத்து விட்டனர்.. இந்த நேரம் அவர்களின் பெற்றோரிடம் இதே வயதில் தாங்கள் வெளியே செல்ல அடம்பிடித்தது நினைவில் வந்து சென்றது முதலாம் அணி நாயகிகளுக்கு..

அதை எண்ணி நகைத்து கொண்டவர்களாய் நாயகிகளின் ஆசைக்காய் அவர்களை வெளியே விட்டு அதையே ஆபத்தாய் முடிவடைய விட்டிரக்கூடாதென்பதால் தாங்களே அழைத்து செல்கிறோம் என சமாளித்து அனுப்பி வைத்தனர்..

நம் பராக்ரம வீரன்கள் விடுவார்களா... ஏதேதோ சாக்குகளை கண்டெடுத்து அனைவருக்கும் ஐஸ் வைத்து வெளியேவும் வந்து விட்டனர்... அப்படி ஒரு மனதாய் அனுப்பும் போதும் காட்டின் புறம் செல்ல கூடாது என்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தனர்..

மோகினி : ஏன் மா இவனுங்க அங்க போக மாட்டானுகன்னு நினைக்கிறீங்க என தலை மறையும் வரை மகன்களை பார்த்து நின்ற முதலாம் அணி நாயகிகளிடம் சந்தேகமாய் கேட்டாள்..

அவளுக்கும் அனுபவம் இருக்குமே.. உடன் இருந்து வளர்ந்தவளாயிற்றே...

பவி : காட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லி அவனுங்க அங்க போகலன்னா அவனுங்க நாங்க பெத்த புள்ளையே இல்லையே மோகினிக்கா... அவனுங்க நேரா அங்க தான் இப்போ போவானுங்க... என்றாள் ஒரு அனுபவ சிரிப்புடன்

ப்ரியா : ரொம்பத்தான் எங்க பசங்கள கலாய்க்காத டி.. நம்ம புள்ளைங்க நம்மள மாரி தான இருப்பானுங்க... நாமளும் அப்டி தான் அம்மா பெரிம்மா அத்தைய மடக்கீட்டு அங்க போவோம்.. என இவள் சப்போர்ட்டிற்கு வர...

மது : சரி டி சரி டி உன் பசங்கள ஒன்னும் சொல்லல.. இவனுங்க பாதுகாப்புக்கு எதாவது பன்னனுமே...

வர்ஷி : அட நீ வேற மதும்மா.. இவனுங்கள தாக்க வரதுங்களுக்கு தான் நாம பாதுகாப்பு தேடனும்.. நீ வேணா பாரு இவனுங்க ஏதோ காரணத்துக்காக தான் வெளிய போய்ர்க்கானுங்க...

அனு : ஆமா மச்சி வர்ஷி சொல்றது கரெக்ட் தான்.. பசங்க அண்ணன் அத்தான்ஸ தேடி தான் போறானுங்க...

திவ்யா : நீ மனச படிக்கிரத விட்டு ரொம்ப வர்ஷமாச்சே டி.. என அவளை பார்க்க...

அனு : நா இப்பயும் மனச படிக்கல டி.. ஆனா அவனுங்க அப்பாக்கள தேடனும்னு தான் போய்ர்க்கானுங்க... என்றாள் உறுதியுடன்..

நிரு : ஹ்ம் சரி அப்போ என்ன செய்யலாம்...

மோகினி : மொதல்ல இந்த விஷயம் கோட்டைல இருக்க உங்க புருஷனுங்களுக்கு தெரியவரனும்...

ரக்ஷா : அவங்களுக்கு இந்நேரத்துக்கு இன்ஃபர்மேஷன் போய்ர்க்கும் அண்ணி அடுத்து...

ஒவீ : நம்ம பசங்க எங்க எப்டி போறானுங்கன்னு தெரிஞ்சிக்கனும்...

தான்யா : ஏற்பாடு பன்னியாச்சு..

வீனா : யாரு டி...

தான்யா : பொருத்திருந்து நீயே பாரு என மர்மமாய் சிரித்தாள்..

நம் நாயகிகளின் கூற்றின் படியே காட்டின் முன் தான் நின்றனர் நமது இரண்டாம் அணி நாயகன்கள்.. அந்த அடர்ந்து மேலெழும்பிய காட்டை உருத்து நோக்கி கொண்டிருந்தவர்கள் மிதுனை நோக்கினர்...

மிதுன் : கன்ஃபார்ம் மச்சான் கடைசியா முகிமாமாவோட ஃபோன் சிக்னல் காட்டுக்குள்ள தான் கட்டாய்ருக்கு.. கண்டிப்பா எல்லாரும் காட்டுக்குள்ள தான் இருக்கனும் என்றான் அவன் சேகரித்திருந்த டேட்டாக்களை கண்டு...

கார்த்திக் : ஹ்ம் இவ்ளோ பெரிய காட்டுக்குள்ள எங்கன்னு போய் தேடுரது...

மித்ரன் : இறங்கியாச்சு... ஒரு கை பாத்துடுவோமே.. என இறக்கி விடப்பட்ட ஸ்லீவ்சை மடக்கி விட்டு காட்டிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்தான்...

அவன் எந்த நேரத்தில் காலை எடுத்து வைத்தானோ அடுத்த நொடி காற்று பலமாய் வீச தொடங்கியது... காற்றின் வேகத்தில் தரையிலிருந்து மண் மேலே பறக்க தொடங்க.. மண்ணினால் கண் எரிய தவிக்க தொடங்கிய நாயகன்கள் அங்கிருந்து எங்கு செல்கிறோமென்றே தெரியாது எங்கோ நடக்க (ஓட) தொடங்கினர்...

அவர்களை விட அந்த காற்று அதிவேகமாய் அவர்களை தள்ளி கொண்டு ஒரு புறத்தில் சென்று கொண்டிருந்தது... என்ன நடக்கிறதென்றே புரியாமல் சுற்றி மணலையும் தவிர்த்து வேறதையும் காண முடியாமல் திண்டாடி இறுதியில் தரையில் சென்று தொபக்கடீரென விழுந்தனர்...

யம்மா என முனகியவாறே எழுந்து கண்களை கசக்கி தெளிவாக்கி விட்டு நிமிர்ந்த பார்த்த அருண் வாயை பிளந்து கையை அருகில் துளாவினான்... உடையில் ஒட்டியிருந்த மண் துகள்களை தட்டி விட்டு கொண்டே எழுந்த ராகவ் தன் சகோதரன் ஏன் காற்றிலுள்ள மண்ணை தட்டி விடுகிறான் என அவனை பார்த்தவாறு அவன் பார்த்த திசையில் காண... அனைவரும் இப்போது அதை தான் பார்த்து கொண்டிருந்தனர் ஒரு அரண்மனை போன்ற மண்டபம் பாழடந்து சுத்தபடுத்த நாதியற்று நின்று கொண்டிருந்தது...

சுற்றி அவர்கள் பின்னே மரம் நட்டு நட்டு ஒரு காடே முளைத்திருக்க... அந்த மண்டபத்தை சுற்றி கிட்ட தட்ட ஒரு பத்து ஏக்கராவது வேற்று நிலம் காய்ந்து கிடந்தது... அந்த நிலத்திற்கு அப்பால் முழுவதும் கடல் நீர் தான்...

தற்போது ஏதோ சட்டென வெடிக்க அதன் அதிர்வில் இவர்கள் தடுமாறி கீழ் விழுந்தனர்..

அந்த அதிர்வினால் இன்னும் அந்த நிலம் அதிர தொடங்க... பூகம்பம் வந்ததை போல் அவ்விடம் நடுங்க மாறாய் அருகிலிருந்த காடு அதுப்பாட்டிற்கு அழகாய் தென்றலுடன் டூயெட் பாடி கொண்டிருந்தது... என்னானதென்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு முன் நோக்கியவர்கள் அந்த நிலத்தில் பெரிய பெரிய விரிசல் விழுந்து நிலம் பிளந்து உள்ளிருந்து ஏதோ எழுவதை கண்டு பேரதிர்ச்சியுற்றனர்...

சில நொடிகளில் அந்த அதிர்வும் நடுக்கமும் குறைய விரிசல்கள் அழகாய் உள் சென்று கொள்ள அவர்களின் முன் கடலின் ஓரமாய் கண்களை பறித்திடும் கோடி அழகுடன் கன்னாடி போல் ஜொளித்து கொண்டு சுத்தபடுத்த நாதியன்றும் இத்துனை வருடங்கள் மண்ணில் புதைந்து இன்று தன் எஜமானார் வந்த மிகுதியில் மேல் எழும்பி கம்பீரமாய் நின்றது...  அது பழங்கால பாலமுத்திர கோட்டை...

மாயம் தொடரும்...

ஹாய் மை டியர் இதயங்களே... தென் ஹவ் வாஸ் தி யூடி... நல்லா இருக்கா... ஈஈஈ ஏதோ இருக்கு அதான.. சரி சரி விடுங்க.. நாளைக்கும் யூடி தரேன்னு தான சொன்னேன்... சரி ஓக்கே குடுத்துடுறேன்.. ஆனா நாளன்னைக்கு வாய்ப்பில்ல... அத மட்டும் நினைவுல வச்சுக்கோங்க.. இந்த கதைல என்னால லவ் சீனெல்லாம் குடுக்க முடியுமான்னு தெரியல... சொல்லப்போனா வருமான்னு தெரியல... எல்லாரும் சர்ப்பலோகம் போய்ட்டு தான் ரொமேன்ஸ் பன்னுவாங்களே... சரி அத நாம போ போகையே பாப்போம்... நம்ம ஃபர்ஸ்ட் பட்ச் ஹீரோஸ் அன் ஹீரோயின்சுக்கும் ரொமன்ஸ் வேணுமான்னு கொஞ்சம் நீங்க சொன்னா நல்லா இருக்கும்... பட் ஃப்லஷ்பக்ல கண்டிம்மா லவ் இருக்கும் கவலப்படாதீங்க.. கதைக்கு இரெண்டு ஃப்லஷ்பக் இருக்கு என்பதை தெரிவித்து கொள்கிறேன்... சரி நாளைக்கு யூடியோட வரேன்... இப்போ படிக்க போறேன் டாட்டா..

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro