Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீண்டல் 26

சிறிய குறிப்பு...
வசுந்ராவுக்கு நித்யாவை தெரியுமா என பலர் கேட்டனர்...
23 வது எபிசோட்டில்
"இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் இரண்டு கண்கள் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தது".
நித்யா , அருண் மற்றும் அதிதியிடம் விடைபெற்று செல்வதை பார்த்துக்கொண்டிருந்தது வசுந்ராதான். அதை அந்த இடத்திலேயே சொன்னால் சுவாரசியம் குறைந்து போகும் என்று சொல்லவில்லை.
----------இனி கதைக்குள்...
பர்வதம் ஆரம்பத்தில் முறுக்கிக்கொண்டு திரிந்தாலும் இப்பொழுதெல்லாம் அருணுடன் சகஜமாக பேசுகிறார்.ஆனால் அருண் தன் தாயிடம் வசுந்ராவை திருமணம் செய்வது பற்றிய பேச்சை எடுக்கவில்லை.ஏனென்றால் அவனின் தாயிடம் எந்த நேரத்தில் கேட்டால் அவரால் தட்ட முடியாதோ அந்த நேரத்திலேயே கேட்க வேண்டும் என்று தருனம் பார்த்து காத்திருந்தான்.

வீட்டில் எல்லோருடனும் கோபித்துக்கொண்டு பெங்களூர் சென்ற வருண் ஆறு மாதத்திலேயே அமெரிக்காவில் ஒரு ஜாப் கிடைக்க அவன் சென்னை வராமலேயே எல்லோரிடமும் போனில் தகவலை கூறிவிட்டு அல்மெரிக்கா பறந்துவிட்டான்.அவனிடம் யாரும் வசுந்ரா பற்றி கூறவில்லை.அவனுக்கு நித்யா அருணின் திருமணம் தடைபட்டது கூட தெரியாது.

ஆறு மாதங்களின் பின்...........

அருணும் வசுந்ராவும் ஒன்றாக அடிக்கடி வெளியில் சென்று வரத் தொடங்கினர்.இந்த நாட்களில் அதிதி,வசுந்ரா ,நித்யா மூவரும் நெருங்கி பழக ஆரம்பித்து இருந்தனர்.ஒரு நாள் அதிதி

"ச்ச்சே இந்த பக்கி வருண் எப்போ கால் பண்ணாலும் ஆன்சர் பண்ண மாட்டேங்குறான். US போய் 6 மாசமாச்சு.ஒரு தடவை கூட கால் பண்ணல.அப்படி என்னதான் பண்றானோ"என்றதற்கு நித்யா

"உங்க சின்ன அண்ணன் எந்த வெள்ளைக்காரி பின்னாடி சுத்துராறோ..விடு அவரச்சும் அமெரிக்கால செட்டில் ஆகட்டும்.அவரு புண்ணியத்துல நம்மலும் ப்ரீயா அமெரிக்காவ சுத்திப்பார்த்திடலாம்"எறு கூற அதிதியோ வசுந்ராவை நோக்கி

"அண்ணி எங்க வீட்டுக்கு நல்ல வேலை பெரிய அண்ணியா நீங்க வந்துட்டீங்க.இல்லைன்னா இந்த வாயாடிதான் வந்து எங்க எல்லோரையும் டார்ச்சர் பண்ணியிருப்பா "என்று நித்யாவை பார்த்து கூற வசுந்ரா அருணை பார்க்க அவனோ என செய்வது என்று தெரியாமல் அதிதியை பார்த்து 'என்னடி இப்படி பண்ணிட்டியே ' என்று மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தவனை அதிதி என்ன செய்வதென்று அறியாமல் அசடு வழிந்தால்.

நித்யாவோ
"அட அத ஏன் சொல்ரே அதிதி.உன் குடும்பத்துக்கு பால்கோவா மாதிரி இருக்குற என்ன மருமகளா அடைய கொடுத்து வைக்கல்ல.எந்த வீட்டு மகராசனுக்கு கொடுத்து வெச்சிருக்கோ"

என்று அவளின் வழமையான நக்கல் கலந்த பாணியில் பதிலைக்கேட்ட எல்லோரும் சிரித்தனர்.அன்றைய பகல் எல்லோரும் ஒன்றாக ரெஸ்ட்டூரண்டில் உணவருந்திய பின் அதிதியும் நித்யாவும் விடைபெற்று செல்ல வசுந்ராவை அவளது அபார்ட்மண்டில் விட அருண் அழைத்து சென்றான்.போகும் வழி எங்கும் அவள் அருணுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக வருவதை கண்ட அருண் அவனும் மௌனமாக இருந்தான்.

அபார்ட்மண்டின் உள்ளே சென்றதும் அருண்

"என்ன வசு இரு மாதிரி இருக்கே.ஏன் என்னாச்சு?"என்று கேட்க அவள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து

"அருண் ,ஏன்கிட்ட என்ன இருக்குன்னு என் பின்னாடி வந்தீங்க.ஒரு பொண்ண பசங்களுக்கு முதல் பார்வைலயே பிடிக்கிறதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதுல முக்கியமானது அழகு. என்கிட்ட பசங்க எதிர்பார்க்குற அழகெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது.நான் சராசரி உயரம்தான் .கலர் கூட இல்ல.எதப்பார்த்து அருண் உங்களுக்கு என் மேல ஈர்ப்பு வந்திச்சு"என்று கேட்டவளுக்கு அவன் ஒற்றை வரியில் பதில் சொன்னான்

"உன்னோட புருவங்கள்.இயற்கையாவ நேர்த்தியா இருக்குற உன்னோட புருவங்கள வாழ்க்கை பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் வசு.அது மட்டுமில்லா உன்னோட அலை அலையா அசைந்தாடும் கூந்தல்,எப்பொழுதும் முழுக்கை போட்டிருக்கும் உன் டிரெஸ்ஸிங்க் சென்ஸ்,அப்புறமா எல்லாத்துக்கும் மேலா உன்னோட கலர்.எனக்கு இந்த tan கலர்தான் பிடிக்கும்.வெள்ளையா தெர்மகோல் மாதிரி உள்ள பெண்கள பிடிக்கவே பிடிக்காது.இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு அத அப்புறமா சொல்ரேன்.2 வருசம் முன்னாடி பார்க்கிறப்போ கொஞ்சம் பூசின மாதிரி அழகா இருந்த.ஆனா இப்போ கொஞ்சம் மெலிஞ்சிட்டே.இட்ஸ் ஓக்கே.உனக்கு டெய்லி பாலும் ,தயிரும், முட்டையுமா தந்து உன்ன அப்படியே குண்டு பூசனி ஆக்கள என் பேரு அருண் இல்ல"என்றவனை அவள்

"அதென்னப்பா இன்னொரு முக்கியமான விசயம் சொல்லுங்களேன் ப்ளீஸ் "என்று தன் மான் விழிகளை அங்குமிங்கும் அசைத்து கெஞ்சியவளை

"சரி சொல்ரேன்.ஆனா சொல்லி முடிக்கும் போது மாமா ஒன்னு கேட்பேன் அத கொடுக்கனும் ஓக்கேயா"என்றவனை

"சரி முதல்ல என்ன விசயம் அத சொல்லுங்க" என்றாள்

"எல்லா பசங்களுக்கு ஒரு ஆசை இருக்கும்.தன் பொண்டாட்டிய நின்னுகிட்டு அனைக்கும் போது அவனோட நாடி அவளோட தலையில் அழுந்தனும்.இது எல்லோருக்கும் கிடைக்காது.அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு.அதுல இருக்குற சுகம் இருக்கே எத்தனை கோடி கொடுத்தாலும் அதுக்கு ஈடாகாதுப்பா.அத அனுபவிச்சு பார்த்தாத்தான் தெரியும்.அது ஒன்னே போதும்டி எனக்கு உன்ன பிடிக்குறதுக்கு.கடவுள் அந்த பாக்கியத்த எல்லோருக்கும் கொடுக்க மாட்டாரு.எனக்கு கிடைச்சிருக்கு (எனக்கும்தான் ஹிஹிஹி) "என்றவனை வசுந்ரா

"உயரத்துல இவ்வளவு மேட்டர் இருக்கா"என்று யோசித்தால்.

"சரி மாமா ஒரு விசயம் கேட்பேன்னு சொன்னேனே என்ன கேட்கட்டா? " என்றவனை

"அன்னைக்கு ஒருத்தர் எங்கம்மா பெர்மிசன் தந்து வீட்டுக்கு கூட்டி போன அப்புறமாதான் என்ன டச் பண்ணுவேன்னு சொன்னமாதிரி ஞாபகம் "என்றவளை

"ஹலோ மெடம்.நாங்க ஒன்னும் அந்த மேட்டருக்கு வரல்ல.எனக்கு உங்க கையாள ஒரு சுக்கு காபி போட்டு கேட்கலாம்னு பார்த்தேன்.இருந்தாலும் நீ கேடிடி.எப்ப பாரு அந்த எண்ணம்தான் போல"என்று வேண்டுமென்றே அருண் கலாய்ப்பதை உணர்ந்தவள் ரோசம் வர

"ஓஹ் சுக்கு காபி தானே போட்டு தரேன்.அதுக்கு அப்புறம் என் பக்கத்துல வந்த மவனே..உனக்கிருக்கு "என்று கூறிவிட்டு கிட்சனுக்கு சென்றவள் பின்னால் குட்டி போட்ட பூனை போல சென்றவன்

"வசு,அடியே "என்றவனை

"சொல்லுங்க மிஸ்டர் அருண்.இப்போ எத கவுக்குறதுக்கு இப்படி கெஞ்சுரீங்க"என்று கேட்டவளை

"அதாண்டி அந்த மேட்டர்.எவ்வளவு நாளா கேட்குறேன்.ப்ளீஸ்டி இன்னைக்கு பண்ணேன்"என்றவனை

"அடப்போங்க அருண்.நான் இதுவரைக்கும் பண்ணதே இல்ல.ப்ளீஸ் அது மட்டும் வேணாமே"என்றவளை முறைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றான். கையில் காபியுடன் வந்தவள்

"சரி நீங்க குடிங்க ருண்,நான் குளிச்சிட்டு வரேன்"என்று கூறி பெட்றூம் சென்றவள் சரியாக 20 நிமிடத்தில் இளம் பச்சை நிற சாரி ஒன்றை அணிந்து அழகு ஓவியம் போல வந்தவளை கண்ட அருண் வாய்விட்டு சிரித்தே விட்டான்.

"ஏண்டி பொண்டாட்டி,செம்மயா இருக்கடி..ஹாஹா இப்படியே வெளில கட்டிக்கிட்டு போய்டாத.அப்புறம் பார்க்குற பொண்ணுங்க ஏதோ இதுவும் சாரி கட்டுற புது முறை என்று சொல்லிக்கிட்டு லூசு மாதிரி சுத்த போகுதுங்க"என்று கூற அவனை பார்த்து முறைத்தவள்

"நீங்க இப்படி நக்கல் பண்ணுவீங்கன்னுதான் நான் சாரி கட்ட மாட்டேன்னு சொன்னேன்.என் வாழ்க்கைலயே இன்னைக்குதான் முதல் முதலா சாரி கட்டியிருக்கேன்.அதுவும் நீங்க அவ்வளவு கெஞ்சினிங்களேன்னு.எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேனும்"என்றவளை

"அடியே என் சண்டக்கோழி.ரொம்பதான் சிலிர்த்துக்குற.என்னதான் உனக்கு சாரி கட்ட தெரியல என்றாலும் சாரி கட்டினா புருசனுக்கு எதையெல்லாம் காட்டி மயக்கனுமோ அதையெல்லாம் சரியா பண்ணிருக்குற.நீ சரியான கேடி டீ"எறு அருண் கூற அவள் தன் ஆடையை சரி பார்த்தவள் அவளின் இடையில் ஒரு பகுதி புடவையால் சரியாக மறைக்கப்படாமல் இருப்பதை கண்டவள்

"இவ்வளவு இடம் மறைஞ்சிருக்குறப்ப இந்த கொஞ்சூண்டு இடம்தான் சாருக்கு தெரிஞ்சிதோ"என்று நக்கலாக கேட்டவளை

"என்ன செய்ய,நம்ம பார்வைதான் போலீஸ் பார்வையாச்சே"எப்று அவளை தன் வசம் இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் அவளின் கழுத்து வளைவில் வாசம் பிடித்தான்.

"ஏண்டி என்ன பெர்ப்யூம் யூஸ் பண்றே.வாசம் ஆள தூக்குது"என்று அருண் கிறக்கமாக கேட்க அவளோ பதில் கூற முடியாமல் அவனது அனைப்பின் சுகத்தில் திளைத்திருந்தவளை தன் புறம் திருப்பி அவளின் இதழை சிறை செய்ய ஆயத்தமான வேளை அவனது ஐபோன் xylophone ரிங்க்டோனை அலறச்செயதது.யாரு இந்த நேரத்துல என்று போனை எடுத்து பார்த்தவன்

"இவளுக்கு நேரங்காலமே இல்ல.ஒரு மனிசன நிம்மதியா இருக்க விடுறாலா மங்கி"என்று திட்டியவன் காலை ஆன்சர் செய்தவன் மறுபுறம் கேட்ட செய்தியால் அவன் முகம் அஷ்டகோனலாக மாறியது.உடனே வசுந்ரா பக்கம் திரும்பியவன்

"வசு நம்ம இப்போ உடனே ஹாஸ்பிடல் போகனும்.நீ உடனே சுடிதார மாத்திகிட்டு வா"என்றவனை

"என்னாச்சு அருண் ?யார ஹாஸ்பிடல்ல வெச்சிருக்கு ?"என்று கேட்டவளை

"நான் போகும் போது விவரமா சொல்ரேன்.நீ கொஞ்சம் அவசரமா ரெடியாகு"என்று கூறிவிட்டு தனது மொபைலை எடுத்து வருணுக்கு கால் செய்ய அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.உடனே அவன் வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு உடனே ஹாஸ்பிடலுக்கு வசுந்ராவை அழைத்து சென்றான்.
------------
ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி கொஞ்சம் ரொமான்ஸ் டிரை பண்ணியிருக்கேன். கேவலமா இருந்தா திட்டிங்க, நல்லா இருந்தா படிங்க...
ஏன்னா அது நமக்கு சுட்டு போட்டாலும் எழுத வர மாட்டேங்குது..
அப்போ இதை எப்படிடா எழுதினேன்னு கேட்குறீங்களா..
இந்த எபி எழுதவதற்குன்முன்  sankareswari97 யோட
" உன் அன்பில், உன் அனைப்பில் " ஸ்டோரி படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல வந்த ரொமான்ஸ் சீன்ஸோட தாக்கம்தான் இது..
பூ என்னைக்குமே மணக்கும்..
நார் மணக்குமா தெரியல....

புதன்கிழமைகளில் என்னுடைய அப்டேட் வரும் என்பதை நினைவில் வைத்து கேட்ட anbu211996 கு இந்த எபிசோட்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro