Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

துவக்கம் மாங்கல்யம் (மறுபதிப்பு )

அம்மா :டேய் எங்க  போற நீ

மணி :அம்மா நம்ம தினேஷ்க்கு நாளைகு கல்யாணம்ல அதான் நான் காய்கறி  வெட்டுறதுக்காக போறேன் 

அம்மா :டேய் என்ன  சொல்ற  நீ. வற்ர வெள்ளிகிழமை  உனக்கும் கல்யாணம் தான. நாலு நாள்தான் இருக்குது  உன்னோட கல்யாணத்துக்கும். நீ ஒண்ணும் மோந்தி (இரவு )நேரம் போக வேண்டாம் 

மணி :என்னமா  உனக்கு. இங்க பின்னாடி தான அவனுனோட  வீடு இருக்குது  நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடறேன்

அம்மா :சரி டா  நீ  போய்ட்டு சீக்கிரம் வந்துடு என்ன

மணி :ஆ வரலாம்  வரலாம் . நீ கதவை மூடிட்டு தூங்கு 

அம்மாவிடம் சொல்லிவிட்டு மணி அவன் நண்பன் வீட்டுக்கு சென்றான்.

சதீஸ் :டேய்  இங்க பாரு டா . அடுத்த கல்யாண மாப்பிளை வறான்.

மணி :டேய்  சும்மா இருங்கடா . ஆமா தினேஷ் எங்க .ஆளை காணோம்

சதீஸ் :அது. அவன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இப்போதான்  இப்போதான் போன்  பண்ணா அதான் அங்க பாரு   நின்னு பேசிட்டு இருக்கான்

மணி:ஓ அப்டியா .

சதீஸ் :டேய் ய உனக்கு ஒண்ணும் போன் வரலையா

மணி :எங்க டா  அவள்ட்டபேசுறதே பெரிய கஷ்டமா இருக்கு. அவங்க அப்பாட்ட மட்டும்தான் போன் இருக்கு.அவங்க வந்த பிறகு எனக்கு போன் பண்ணுவா. அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் டா

சதீஸ்  :பின்ன நீ ஒரு புது போன் வாங்கி குடுக்க வேண்டியது தானே

மணி :நான் வாங்கி வச்சிருக்கேன் டா அவள்ட்ட தரலான்னு பாத்தா அவளுக்க வீட்ல கல்யாணத்துக்கு முன்ன நான் தர்றத வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்  அதான் அவளும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா.

சதீஸ் :அட கடவுளே. அத விடுல இனி ஒரு வாரம் கழிச்சு உன்னோட  வீட்ல தானே இருக்க போறா. இதோ பாரு வாரான் பாரு  புது மாப்பிளை

மணி :என்ன டா  பேசியாச்சா தினேசு

தினேஷ் :பேசியாச்சு பேசியாச்சு

மணி :நாங்க காய்கறி  வெட்ட போறோம் முழிச்சுருக்கோம். நீ போய் தூங்கு டா.  இல்லைன்னா நாளைக்கு போட்டோ எடுக்குறப்போ  முகம்  டல்லா இருக்கும்

தினேஷ் :அட போங்கடா .நம்ம என்ன மேக்அப் போட்டு ரெடி ஆகவா போறோம். சீக்கிரம் தூங்க. போட்டோல இருக்க முகம் வந்தா போதும்

சதீஸ் :வருங்கால குடும்பஸ்தர்களே நான்மட்டும் தான்டா இன்னும் சிங்கிள்ளாவே இருக்கேன்.

மணி :டேய் உங்க அம்மாகிட்ட சொல்லி பொண்ண பாக்க சொல்லுடா 

சதீஸ் :அதை ஏன்டா கேக்குற. என்னோட அம்மா  இன்னும் என்ன பச்ச பிள்ளையாதானல பாக்குறாங்க .விட்டா புட்டி பால் கூட தருவாங்க  போல

இங்கே இவர்கள் பேசிக்கொண்டே கறிக்காய் வெட்டி முடித்தனர். மணி விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து படுத்தான். செம்பருத்தியின் புகைப்படத்தை பார்த்தான் அவனுக்கு அன்று அவளை பார்க்க சென்ற போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

அன்று பிப்ரவரி 14 காதலர்கள் தினம் என்பதால் செம்பருத்தியை பார்க்க வருவதாக சொல்லி சென்றிருந்தான்..

மணி :என்ன செம்பருத்தி  ரொம்ப நேரமா நிக்கிறியா 

செம்பருத்தி :இல்லை இப்போதான் வந்தது. ஆனா சீக்கிரம் போணும். ஊருக்காரங்க பாத்தா பிரச்சனை ஆயிடும்

மணி :நீ எனக்கு பொண்டாட்டி ஆக போறவ தான

செம்பருத்தி :ஆமா அதுல  என்ன  சந்தேகம்

மணி :பின்ன எதுக்கு பயபடற.யாரு பாத்தா  உனக்கு என்ன

செம்பருத்தி :எனக்க  அப்பா  பாத்தா  அவ்ளோதான்  தான் நான் தீந்த.அவர் அந்த காலத்து ஆளு. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அதைதான் என்னையும் பின்பற்ற சொல்வாங்க .

மணி :பின்ன எதுக்கு நீ வந்த உன்னோட வீட்லயே இருந்துருக்கலாமே

செம்பருத்தி :நீங்க ஏமாந்துருவிங்களே அதான்  வந்தேன்

மணி :அது சரி  இந்தா உனக்காக சாக்லேட் வாங்கிட்டு வந்தேன்.காதலர்கள் தின வாழ்த்துக்கள்

செம்பருத்தி:நம்ம காதலிக்கிறோமா.

மணி :நான் காதலிக்கிறேன்னு  உனக்கு கொடுக்குற. நீ என்ன காதலிக்கிறன்னு அர்த்தம் இல்லையே.

செம்பருத்தி :அப்படி சரி சரி.நானும் உங்களுக்கு ஒன்னு கொண்டுவந்துருக்கேன்

மணி :என்ன கொண்டு வந்த

செம்பருத்தி :பழம் பஜ்ஜி (பழம் போட்டு பண்ற பஜ்ஜி )கொண்டு வந்த. நானே பண்ணி கொண்டு வந்ததாக்கும்.

மணி அதை சாப்பிட்டான்.

செம்பருத்தி :ருசி எப்படி இருக்குது  

மணி :ருசி நல்லா இருக்கு . அடி பொளி(இந்த வார்த்தை எதாவது நல்லா இருந்தா சொல்லுவோம் )

செம்பருத்தி :தேங்க்ஸ். சரி பின்ன நான் இப்போ போற நேரம்  ஆயிடுச்சி

மணி : இனி எப்ப பாக்கலாம்

செம்பருத்தி :நம்ம கல்யாண மண்டபத்தில் வச்சி பாக்கலாம்.

அந்த போட்டோவை பார்த்து சிரித்துகொண்டே இப்போது உறங்கினான் மணி. இங்கே செம்பருத்தியும் அன்று நடந்ததை நினைத்து கொண்டிருந்தாள்

செம்பருத்தி ❤️

நான் அன்று அவர் கூப்பிடப்போ நல்லா பயந்தேன் .நான் போய் அவர பாக்குறது அப்பாக்கு தெரிஞ்சா எந்து செய்வேன். இருந்தாலும் அவரும் பாவம் ஒவ்வொரு இடத்திலும் கல்யாணம் நிச்சயம் ஆனா போதும் எப்பிடி  எல்லாம் இருக்காங்க. ஆனா இவரு எனக்காக மட்டும்  பொறுத்துட்டு இருக்காரு அதாக்கும் அண்ணைக்கு நான் அவர பாக்க போன. கொஞ்சம் உண்மையும் சொல்லணும்ன்னா அவர பாக்குற  ஆசை எனக்குள்ளும் இருந்துச்சு.  அண்ணைக்கு நான் காலைல சீக்கிரம்  எழுந்து  கிளம்பி. அவருக்காக பழம் பஜ்ஜி செஞ்சி கொண்டு போன.ஆனா அவர்ட்ட சொல்றப்போ சும்மா கொண்டு வந்ததா சொன்ன. என் காது படவே நிறைய பேர் சொன்னாங்க ஒரு டிரைவர் கட்டிட்டு  கஷ்டம்தான் படனும். வரதட்சணை கேக்காம இருக்காங்க அதனால அவருக்கும் எதாவது பிரச்சனை உண்டுன்னு. கூட வரதட்சணைகுடுத்தா இன்னும் நல்ல கவெர்மென்ட் மாப்பிளை கிடசியிருக்கும்னு. எனக்கும் ஒரு பெரிய சந்தேகம். இந்த மக்களலெல்லாம் என்ன நினைசிட்டு வாழறாங்க. பணம் இருந்தா மகிழ்ச்சி வருமோ.இல்ல பணம் போனா கூட அந்த சந்தோசமும் போகுமோ.அது அங்கன அல்ல உண்மையான மகிழ்ச்சி கூட இருக்குனவர பொறுத்து. மற்ற காகிதம் கொண்டு என்ன செய்ய முடியும் அது ஒருநாள் தீர்ந்து போகும்.பணத்தால் ஒரு பந்தம் உருவானால். அங்கே பணத்தை பற்றிய எண்ணம் இருக்கும் அங்கே வாழ்க்கை இருக்காது. எனக்கு ஒரு நல்ல நம்பிக்கை உண்டு இனி என்னோட வாழ்க்கை அவரோட சேர்ந்து . ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் போலாம். ஆனா எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் என்ன நல்ல முறையில் பார்த்துப்பார்ன்னு.

சிறிது நாட்களுக்கு பிறகு

மணி ❣️

எங்களுக்கு கல்யாணம் ஆகி  நாலு நாள் ஆகுது.  இனி எங்க மாமனார் என்ன அவரோட அப்பா வந்தாலும் எங்கள பிரிக்க முடியாது. எனக்கு நல்லா நியாபகம் உண்டு நான் கல்யாண மேடையில இருக்கினப்போ அவளை கூட்டிட்டு வந்து கிட்ட உக்கார வைக்கம்போ பார்த்தேன் என்னோட தங்கச்சி அவளுக்காக ரொம்ப தேடி தேடி எடுத்த அந்த புடவை ரொம்ப அழகா இருந்துச்ச்சு அவளுக்கு. அவளுக்கு தாலி போட்ட பிறகு அந்த எல்லாம் சடங்கு சம்பர்தாயம் முடிஞ்சு இதோ என்னோட மனைவின்னு நினைச்சப்போவே அது ஒரு புது உணர்வாய் இருந்துச்சு. இப்போ கொஞ்சம் கடமைகள் அதிகம் ஆகிஇருக்கு.

செம்பருத்தி :என்னங்க இந்தாங்க காபி என்ன யோசனை

மணி :ஒண்ணுமில்ல காபிய குடு.ஆமா நீ குடிச்சியா

செம்பருத்தி :நானும் அத்தையும் குடிசிட்டுதான் உங்களுக்கு கொண்டு வந்தேன்.

மணி :சரி கிளம்பு

செம்பருத்தி :எங்க

மணி :மண்டைக்காடு கோவிலுக்கு போய்ட்டு அப்டியே கன்னியாகுமரிக்கு போய்ட்டு வரலாம். அம்மாவையும் வர சொல்லு

செம்பருத்தி :சரிங்க

எல்லாரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனார்கள்

செம்பருத்தி ❣️

எல்லாரும் என்கிட்ட சொல்றது உண்டு. கல்யாணம் ஆனா பெண் குட்டிக்கு சுதந்திரம் அவ்ளோதான்னு. எனக்கு அப்படி இல்ல. என்னோட  அத்தை என்ன பொண்ணு போல பாக்குறாங்க  எங்க வீட்ல இருந்தத காட்டிலும் நான் இங்க ரொம்ப சந்தோசமா இருக்கேன் .அவருக்க தங்கச்சி அவங்க ஹஸ்பண்ட் எல்லாம் எனக்கு நல்ல பழக்கம்  ஆகியாச்சு . கல்யாணம் ஆன இந்த நாலு நாளில் இவரு என்ன அப்படி  இப்படி தொட்டு பேசிட்டு இல்லை. அவர் என்கிட்ட சொன்னது இதான் நமக்கு வயசு இருக்கு. நம்ம முதல்ல நல்லா தெரிஞ்சிப்போம் பிறவு மத்தத பாப்போம். ஒரே கவலை அத்தை இன்னும் ஒரு வருஷம் மைனி (அண்ணி )பிள்ளைய பாக்க சென்னை போறாங்களாம்.

மணி :செம்பருத்தி கிளம்பிட்டியா

செம்பருத்தி :இதோ கிளம்பிட்டேன். அத்தை கிளம்பிட்டிங்களா

அத்தை :கிளம்பிட்டேன் மா

இதோ இவர்களின் பயணமும் தொடங்குகிறது. ❤️❤️❤️

மன்னிக்கவும் . நான்  கன்னியாகுமரி  பாஷை எழுதினது உங்களுக்கு புரியல  எனக்கு புரியுது ஏன்னா கிட்டதட்ட மலையாளம் மாதிரிதான் இருக்கும்.ட்ரை பண்ணி பாத்தேன். இனி நார்மல் தமிழ்ல எழுதுறேன். அந்த பார்ட் எனக்கு பிடிச்சதால என்னால டெலீட் பண்ண முடியல அதான் இந்த பார்ட் அப்டேட் பண்றேன்.
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro