Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17. மருதாணி

    "என்ன பக்கத்து வீட்டில  இப்படி சத்தம் கேட்குது... மாமியார் மருமக சண்டையா...." எனவிசாரித்த கணவரிடம் மீனாட்சி,

"அது அம்மா பொண்ணு சண்டைங்க..." என்றதும்  அவளது கணவர் மாணிக்கசுந்தரம், மகன்கள் கதிர்(14)  சூர்யா (11)  மூவரும் வாய்பிளந்து நின்றனர்.

"ஆமாங்க... அந்தவீட்டுபொண்ணு பேரு மருதாணி(10)... எம்புட்டு வாய் தெரியுமா... நேத்து ரொம்ப நாள் டேங்க்கீளின் பண்ணாம இருக்கிறதாலே தெருபைப்லே தண்ணி எடுத்துவர சொன்னீங்களே... ஒத்த  குடத்தோட அரைமணிநேரமா நிக்குறேன்.. அந்தபொண்ணு வந்த அடுத்த செகண்ட்ல ரெண்டு குடத்தே பிடிச்சிட்டு போறா.... ஏன்ம்மா இப்பிடி நடுவுல விடுறிங்கன்னு கேட்டா...  இவகிட்டே மல்லு கட்டுனா இன்னைக்கி நைட் எங்க குடும்பத்துல சண்டைமூட்டிவிட்டு குளிர்காய்வா.... இந்த ஊருக்கே குட்டி டான்னாம்..." என்ற அன்னை சொல்லில் மருதாணி என்ற டானை பார்க்கும் பேராவல் எழ கதிர் வெளியே ஓடிவந்து திண்ணை மேலேறி பக்கத்து வீட்டை நோட்டமிட்டான்.

ஆனால் அவன் ஏக்கி ஏக்கி பார்த்தும் அவளது முதுகுபுறம் மட்டும் தெரிய சலித்துக் கொண்டவன் முதுகில்  தம்பி சூர்யா இரண்டு வைக்க உள்ளே சென்றான். மாணிக்கம் நேற்றுதான் இந்த ஊருக்கு கிராம நிர்வாக அலுவலராய்  மாற்றலாகி வர, தன் மகன்களை இன்று  புதுப்பள்ளியில் சேர்க்க சென்றுக்கொண்டிருந்தப் போதுதான் இந்த உரையாடல்.

தூய்மைப் பணியாளர்கள் இல்லாத அந்தப்பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் வாரம் ஒருகுழுவினர் பள்ளிநேரம் முடிந்ததும்  வகுப்பறையை சுத்தம் செய்துவிட்டு செல்லவேண்டும் என்பது எழுதப்படாத விதி.   மாணவர் குழுக்கள்  அக்கறையாய் பணி செய்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு வகுப்பாய் சென்று ஒருத்தி மட்டும் அனைவரையும் வேலை ஏவிக் கொண்டிருந்தாள்.  தன்வகுப்பிற்கும் வருவாள் என ஒன்பதாவது படிக்கும் கதிர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க அவளோ எட்டாம் வகுப்போடு நிறுத்தி கொண்டாள். ஏமாற்றமடைந்தவன் தனது வகுப்பு நண்பர்களிடம் விசாரிக்க,  "மருது! நல்லப்பாெண்ணு டா... நைன்த் ஸ்டாண்ட்ர்டு பசங்கன்னா மதிப்பு கொடுப்பா..." எனப் புகழ,

"அடலூசுங்களா.. அதுக்கு பேரு மரியாதை இல்லே.... இங்கே கெத்து காட்டுனா யாராவது அடிச்சிடுவாங்கன்ற பயம்.. அதான்... இவளா டான் இல்லே சிரிப்பு டான் டா..." என நக்கலடித்த  கதிர், நடந்து சென்று கொண்டிருந்த மருதாணியை நோக்கி, "ஏய்  சிப்பு டான் களவாணி..." என கத்த, அவளோ கோபத்துடன்  முறைத்தப்படி அவன்முன் நின்றாள்.. அன்று தொடங்கிய பனிப்போர் அனுமன் வால் போன்று நின்றது. அவள் மாங்காய் திருடி சாப்பிட, இவன் அவளன்னையிடம் போட்டு கொடுத்தான். சூடுநீர் காய்ந்து கொண்டிருக்க, அந்த விறகுகட்டையால் மருதாணி  சூடுவாங்க, அதுக்கு அடுத்தவாரம் கதிர் சைக்கிளிலிருந்து கீழேவிழுந்து  கைகால், தலையில் கட்டுபோட்டு ஒருவாரம் பள்ளிவிடுமுறை எடுக்க வேண்டியதாயிற்று.

இவன் தனதன்னைக்கு மிகவும் பிடிக்குமென மருதாணிசெடி வளர்க்க, அதிலிருந்த மொத்த இலைகளை பறித்து இவள் ஊருக்கெல்லாம்  வைத்துவிட மறுநாள் அவள் ஆசையாய் வளர்த்த கோழி இவன்வீட்டு குழம்பில் கொதித்தது. இவள் ஊரெல்லாம் தேடி அலைந்து இல்லம்வர,  அவளின் மருதாணி சிவந்த கையில் அவன்சாப்பிட்ட  எலும்புகளை கொடுத்து  ஆறுதல் கூறினான்.

"உன்வீட்டு மருதாணிய பறிச்சதுக்கு என் கங்குவே அநியாயமா கொன்னுட்டேலே... இனி நான் மருதாணியே வைக்க மாட்டேன் டா... எங்கே தில்லுருந்தா நீயும் இனி என்வி சாப்பிட மாட்டேன்னு சொல்லு பார்க்கலாம்..." என மருதாணி இனி அவன் தான் வளர்க்கும் கோழியை திருடி சாப்பிடக்கூடாது என புத்திசாலித்தனமாய் அவனை உசுப்பேற்றினாள்.

அவனோ ."அசுக்குபுசுக்கு... நீ கேனத்தனமா சத்தியம் செஞ்சா நானும் பண்ணனுமா... போடி இனி செஞ்ச சத்தியத்தே மீறி மருதாணி வைச்சே கை சிவக்காது... கையை வெந்து போயிடும்..." என சாபம் கொடுத்து சென்றான். தன்வாயாலே கெட்ட மருதாணியின் மனம் அவன் வீட்டு தோட்டத்தில் பூத்துக் மணம்வீசும் மருதாணியை தழுவித்தான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும்.

அவளுக்கு பிறந்தநாள் என கேள்விப்பட்டு  மீனாட்சி மருதாணி அரைத்து அவளை அழைத்து ஆசையாய் வைத்துவிட, அதை கண்டு கடுப்பான கதிர் அவளின சத்தியம் வைத்து கேலிசெய்ய, "டேய்! உன்டைரியிலே குறிச்சு வைச்சுக்கோ... இந்த ஊரிலே இல்லே என்வீட்டிலே இருக்கிறவரைக்கும் மருதாணி வைக்கமாட்டேன் டா... இந்தமருதாணி என்புருசன் வீட்டிலே என் பப்பி.. ச்சே என் ஹப்பி கையாலே வைச்சு அது சிவந்து உன்மூஞ்சிலே கரிப்பூசுறேன்... இது மருதாணியோட சபதம் டா..." என வீறுக்கொண்ட வேங்கையாய் புறப்பட்டு சென்றவள் அதன்பிறகு அவன்வீட்டு மருதாணி செடியை ஏறெடுத்துக் கூட பார்க்காமல் வைராக்கியத்துடன் இருந்தான்.

அவர்களின் வளர்ச்சி போல் சண்டையும் பகையும் சேர்ந்தே வளர்ந்தது. அவர்கள் வாடகை்குவந்த வீட்டை  சிலமாதங்களில் விலைக்கு வாங்கிவிட மாணிக்கமும் தனக்கு பணிமாற்றல் வந்தாலும் குடும்பத்தை இதேஊரில்விட்டு தனியே சென்று பணிபுரிந்தார்.  காலங்கள்  உருண்டோட இதோ இன்னும் சற்றுநேரத்தில் கதிர் வேறொருத்திக்கு சொந்தமாக போகிறான். இப்போதும் குட்டிகுரா பவுடருக்கு சண்டைபோட்டு அவனிடமிருந்து பிடுங்கி வந்து தன்னை அழகுப்படுத்திக் கொண்டிருந்தாள் மருதாணி.

திடீரென கல்யாணமண்டபத்தில் சலசலப்பு கேட்க வெளியே வந்த மருதாணியின் காதில் அச்செய்தி விழ, மாப்பிள்ளை அறைக்கு ஓடினாள். அவனை கண்டதும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள். அவனோ அவமானத்தில் முகம் சுருங்கியிருக்க, சிரித்துசிரித்து வயிறுவலிக்க சற்று நிறுத்தியவள் வயிற்றை பிடித்துக் கொண்டு மீண்டும் சிரிக்க தொடங்கினாள்.

"இந்த... ஐய்யோ... இந்த மூஞ்சிக்கே உன்னே பிடிக்காம ஓடிப்போச்சே.... உன்னே யாரு இனி கட்டிப்பா.... மானமிருந்தா  செத்து போயிடு..." என அவன்மேல் பவுடர்டப்பா கொண்டு சுடுவதுப்போல் நடித்து காட்டினாள்

"ச்சீ... டிக்டாக் பார்த்து கேவலமா பண்ணாதே... நீ வந்ததாலேதான்   இவே நம்ம பக்கத்து வீட்டுக்காரியான்னு பயந்து வேணாம் சொல்லியிருப்பா.. போடி வெளியே... செம்மகாண்டுல இருக்கேன்... அடுச்சிடுவேன்..." என கதிர் துரத்த,

"நீயா.... டேய் டேய் ஓலே பட்டாசு நீயாடா... இதே கேட்டுதான்டா சிரிப்பு அதிகமா வருது... ஐய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறுவலி தாங்கமுடியலே... செத்தே போயிடுவேன் போல..." என வயிற்றை பிடித்து  சொல்ல, சரியாக அவளது தந்தை கதவை திறப்பதை கதிர் கண்டான். முதுகுக்காட்டி நின்றிருக்க இவளின் காட்டுகத்தத்தில் கதவு திறந்தஒலி கேட்காது நின்றிருந்தவளை  கதிர் திடீரென அணைத்துக் கொண்டான்.

"மருது! என்ஃபீலிங்சே எப்பவும் நீதான்டி சரியா உணருறே... என்னோட நெலைமை பாத்து செத்துடுவேன்னு அழுகுறியே... நீதான்டி எனக்கு எல்லாம்..." என இவன் புலம்புவதை பார்த்து புரியாது  அவன் வயிற்றில் இடித்து பிரித்தாள். இப்போது அவன் சிரிக்க தொடங்க அதன் பொருள் புரியாதவள் அடுத்த அரைமணிநேரத்தில் மணமகளாய் கதிரின் கரத்தில் தாலிகொள்ளும் போதுதான் உணர்ந்தாள்.

இருவீட்டு பெற்றோர்களும் தங்கள் பதினொருவருட நட்பு உறவாக மாறியதில் இல்லை மாற்றிய தங்கள் பிள்ளைகளுக்கு மனதார ஆசிர்வாதம் வழங்கினர். அதன்பின் அனைத்து சடங்களையும் இருவரும் பெற்றோர் சொல்படி செய்ய இரவு நேரமும் வந்தது. மணமகளின் இல்லத்தில்  ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்க, கதிரை காணாமல் அனைவரும் தேடினர்.

ஆற்றங்கரை மண்டபத்தில் நிலவை வெறித்தப்படி அமர்ந்த கதிர் அருகே சூர்யா அமர்ந்தான்.

"டேய்! ஆசைப்பட்டு கட்டிக்கிட்டு ஏன்டா தனியே இங்கே இருக்கே..." என்றதும் முகத்தில் அதிர்ச்சியை வரவழைத்த தமையனின் தலையில் அடித்தான் சூர்யா.

"எனக்கு உன்னேபத்தி தெரியும் டா...எப்பவும் டாம்அண்ட் ஜெர்ரியா நீங்க இருந்தாலும் இந்த த்ரி மன்த்ஸ் ட்ரெயினுக்கு மருது..." என்றதும் கதிர் முறைக்க,

"சாரி அண்ணி போனதும்நீ வாடி வத்தலா போனது எனக்கு தெரியும்... அவங்ககிட்டே காதலே சொல்லமுடியாம இருந்தப்போ அப்பா ஆசைக்காக அவரு ப்ரெண்ட் பொண்ணே கட்டிக்க சம்மதிச்சதும் எனக்கு தெரியும் டா... என் அண்ணா ஒருத்தியே தோக்கடிக்க அவளே கட்டிக்கிற அளவு கேடு கெட்டவனில்லே... உனக்குள்ள இருக்கிற காதல் அவளே உன்னவளாக்க விரும்பியிருக்கு...,போடா இனியாவது பயப்படாம உன்காதலே அண்ணிக்கு புரிய வை... " என அவனின் காதலை அவனுக்கு புரியவைத்து அழைத்துவந்து முதலிரவு அறைக்குள் தள்ளிவிட்டான்.

எப்போதும் பட்டாசாய் வெடிப்பவள் இன்று அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்தாள். "சாரி" என குரல் கேட்க புரியாது திகைத்தவன் முன் மருதாணி, மீண்டும் மன்னிப்பு வேண்டினாள்.

"கதிர்! எனக்கு உன்னே விட உன்கூட சண்டே போட ரொம்ப பிடிக்கும்..., மூணுமாச ட்ரெயினிங் பீரியட்லேதான் உன் பிரிவே முழுசா உணர்ந்தேன்... ஸ்டார்டிங்லே அம்மா உன்னேபத்தி பேசும்போது எரிஞ்சு விழுவேன்.. அதனாலே உன்மேரேஜ் பத்தி எதுவும் சொல்லலே.. ஆனா நேத்து மார்னிங் இறங்கியதும் உங்கவீட்டு வாசல்லே கட்டுன காப்பு, வாழைமரம்தோரணம் எல்லாம் ஏதோ பண்ணிச்சு... உள்ளே போனா அம்மா உனக்கு கல்யாணம் சொன்னதும் பீரிஸாயிட்டேன்... நீ இன்னொருத்திக்கான்ற நினைப்பே கொன்னுடுச்சு . அதான் அந்த பொண்ணுக்கிட்டே போய் நாமே ரெண்டு பேரும் லவ் பண்றோம்... அம்மாஅப்பாவுக்கு பயந்துதான் உன்னே கட்டிக்க சம்மதிச்சான்னு ஒரு சின்ன சார்ட்பிலிம்  ஓட்டுனேன்... அவளும் உன்னே பிடிக்கலேன்னு  போயிட்டா.... எப்படியும் அப்பாகிட்டே பேசி உன்னே கட்டிக்க இருந்தேன்... ஆனா நீ திடீர்ன்னு இப்படி இதையும் நமக்குள்ளே நடக்குற போட்டியா எடுத்துப்பேன்னு நெனைக்கலே.... உனக்கு எப்போ என்னே உண்மையா பிடிக்குதோ அப்ப உன்வீட்டுக்கு கூட்டிட்டு போ கதிர்...  ரியலி ஐ லவ் யூடா கதிர்... ரொம்பநாள் காக்க வைக்காதே..." என்றவள் அவன் யோசிக்க நேரம் கொடுத்து விட்டு கட்டிலில் விழுந்து அழுதப்படியே உறங்கியும் விட்டாள்.

மறுநாள் விடியலில் எழுந்த மருதாணி  தன்னவனை காணாது தேடியவள் அன்னையிடம் கேட்க, கதிர் அதிகாலையிலே அவன் இல்லத்திற்கு சென்றுவிட்டதாக கூற, தனதறைக்குள் புகுந்து கொண்டாள். அழுது முகமெல்லாம் சிவந்திருக்க தனதறை கதவு தட்ட முகத்தை கழுவிக் கொண்டு திறந்தாள். அங்கே சிரித்த முகமாய்  நின்றிருந்த கதிரை கண்டு நெருங்க செல்ல,

"மருது! போய் குளிச்சிட்டு இந்த புடவையே கட்டிட்டு வா... அம்மா உன்னே வீட்டுக்கு அழைச்சிட்டு வரசொன்னாங்க..." என்றதும் அவளின் அன்னை சொல்லுக்காக தன்னை அழைக்கிறான் என நினைத்து பின்வாங்கினாள்  சிறிதுநேரத்தில் தயாராகி புகுந்த இல்லம் வர அங்கே அவர்களை வரவேற்க யாருமில்லை.  அவர்கள் இவன் திட்டப்படி கோயிலுக்கு சென்று விட்டார்களே ..

"ஆன்ட்டி" எப்போதும் போல் அழைக்க கதிர் அத்தைம்மா என அழைக்க சொல்ல, அவளும் அவ்வாறே அழைத்து  வீடுமுழுவதும் தேடியவள் கலைத்து ஒரு அறையை  திறக்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"ஐ லவ் யூ களவாணி..., நானும் உன்னே மாதிரிதான்.." என தன்னிலை விளக்கம் கொடுக்க ஓடிவந்து கட்டிக் கொண்டவளை தூக்கிக் கொண்டு நடுக்கூடத்திற்கு வந்தவன் அவளை மடியில் அமர வைத்துக் கொண்டான்.

அவள் கரத்தை தன்கரத்தில் ஏந்திய கதிர் தானே  அரைத்த மருதாணியை அவளுக்கு இட்டான்.  "என் களவாணி இப்போ ஜெயிச்சிட்டா... ஆனா ஒரு சின்ன மாற்றம் என் முகத்திலே கரிப்பூசலே... புன்னகையாலே நிரப்பியிருக்கே... அது என்வாழ்நாள் முழுசும் தொடரும்...," என்றவனின் பிடி இறுக, பெண்ணவள் அவனின் நெஞ்சத்தில் தஞ்சமடைந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro