Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16.வேதவல்லி

,காலை தனனவன் சமைத்து வைத்த உணவை தட்டில் போட்ட நவிதா  ஹாலுக்கு லந்தாள்.சோபாவில் அமர்ந்து தலையணையை முதுகுக்கு வைத்தவள்  வீக்கியிருந்த காலை சோபாவின் மேல் நீட்டிக்கொண்டாள்.

கைவளையல்கள் குலுங்க சாப்பிட்டவள் சிறிதாய் வலி உணர பாதிச்சாப்பாட்டில் எழுந்தாள். நேரங்கள் கடக்க வலி அதிகமாக  அன்னை  நினைவு வந்தது.  உதவிஆய்வாளராய் காவல்துறையில்  பணிப்புரிந்த டேனியலை  பெற்றோரை எதிர்த்து கலப்புமணம் புரிய, ஜாதியில் ஊறிய ஊறுகாய்கள் அந்ததிருமணத்தை ஏற்க மறுத்தது. ஆனால் டேனியலின  இல்லம் இவளை மருமகளாய் ஏற்றது ஆனால் ஒருகுடும்பமாய்  வாழ கொடுத்து வைக்காமல் இவனுக்கு சென்னைக்கு மாற்றலானது.

காவலர் குடியிருப்பு வேண்டாமென மறுத்த ஊரில் பள்ளித்தலைமையாசிரியராய் பணிபுரிந்த  மாமானார் அவரது சேமிப்பில் இவளது பெயரில் ஒற்றைபடுக்கையறை கொண்ட ப்ளாட்டை வாங்கி கொடுக்க, இங்குகுடியேறி  இன்றுடன்மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. இரண்டு வருடங்கள் எப்போது குழந்தை.  என் உயிர் இருக்கும்போதே பெத்துக்கொடுத்தால் உனக்கு வளர்க்க வசதியாய் இருக்கும் என்ற நோயுடன் வாழ்ந்த மாமியாரின் நச்சரிப்பு  ஒருநாள் நின்றுவிட விதியின் சதியோ அவர் இறந்த இரண்டுமாதங்கள் முடிவடைய  கருவுற்ற செய்தி அறிந்தாள்.. தனதன்னையே தனக்கு மகளாய் பிறக்கபோகிறார் என்ற கனவுடன் டேனியல் இருந்தான். அவனது தந்தையும் அதே கனவுடன் இருக்க, இவளது கனவு தனதன்னையை காண வேண்டுமென்பதாய் இருந்தது.

ஆசையுடன்  கருவுற்ற செய்தி சொல்ல அழைப்பு விடுத்தால் , தொடர்பு துண்டிக்கப்பட்டு எண்ணும் ப்ளாக்கில் போடப்பட்டது. வேறு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு செய்தியுரைக்க, தனது மகள் இறந்து இரண்டாண்டுகள் மேலாகிவிட்டதென பதில் வர கலங்கிப் போனாள்.  டேனியல் தன்னவளை இமைபோல காத்தாலும் சில சமயங்களில் அன்னை நினைவுவர, உடல்நிலை  சீரற்று போனது

கர்ப்பகால ஆரம்பநிலை அதிகமான வாந்தி காரணமாக உடல்தளர்ந்து போனாள். டேனியலே அவளிருக்கும் நிலை  காண சகிக்காது குழந்தை இல்லாமலே இருந்திருக்கலாம் என எண்ணுமளவிற்கு போனது. பெற்றோர் அல்லது நெருங்கியவர்களின்  துணையை அதிகளவு பெண்மனம் நாடியது

அடுக்குமாடி குடியிருப்பு என்பதால்  அருகில் இருப்பவர் பெயர்க்கூட தெரியாது.. சாலையில் ஒருவரை சந்தித்தால் அவர்களை குடியிருப்புசங்க கூட்டத்தில் பார்க்கும்போதுதான் இவர் இங்கேதான் குடியிருக்கிறார்  என நாமே அறிந்து கொள்ளும் தனித்தனி தீவுகளாய் வாழ்ந்துவரும் நவீனசமூகஅமைப்பு அது. இவளும் ஆரம்பத்தில் கதவு தட்டி சென்று பேச விழைந்தாலும் ஒரு சகமனிதினியாய் இல்லாது  வேற்றுகிரகவாசியாய் அவளை தவிர்க்கவே இவளும் அவர்களாக மாறத் தொடங்கினாள். பின் அந்த இல்லமே அவளது சொந்ததீவாக மாறிப்போனது.   எனவே யாரிடமும் சென்று உதவி கேட்க முடியாது இவள்  அல்லல்பட, டேனியல்  உடன்பணிபுரியும் பெண்காவலர்களிடம் ஏதாவது வாய்க்கு ருசியாய் சமைத்து வர இறைஞ்சி இவளுக்கு
கொடுப்பான். இருப்பினும் மசக்கையில் அதிகமாய் மயக்கமானாள்.

அப்போதுதான் எதிர்ப்ளாட்டில் வசித்தவரின் தாய் கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார். இவள் வாடிய முகத்துடன் கீழே பூங்காவில் அமர்ந்திருந்த போது அவரின் அறிமுகம் கிடைத்தது. நவிதா பற்றிய விவரங்களை அறிந்த வேதவல்லி பாட்டி  மகன் மருமகளுக்கு தெரியாது இவளது வீட்டிற்கு  வந்து சமைத்து கொடுத்து சென்றார்.

தாயாய் அவரின் கவனிப்பில் நவிதாவுடன் குழந்தையும் நன்கு தேறினர்.. டேனியல் நவிதாவின் ஆசைப்படி ஒன்பதாம் மாதம் ஆரம்பத்தில் மூன்றுநாட்கள் முன்புதான் வளைகாப்பு விழாவை நடத்தினான். அடுத்தவாரம் முதல்  பதினைந்துநாட்கள்  பிரசவகாலவிடுப்பு எடுத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டுதான்  காலைப் பணிக்கு சென்றான. ஆனால் அதற்குள்  நவிதாவுக்கு வலி அதிகமாக தன்னவனுக்கு தொடர்பு கொண்டாள். அவனோ அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்துள்ளேன் என உரைத்தவன் அவசரஊர்தி அனுப்பி வைப்பதாகவும்  அதுவரை வேதா பாட்டியை துணைக்கு அழைத்து கொள் என கனத்த மனத்துடன் கூறினான்.

இவளும் வயிற்றை பிடித்துக்கொண்டு  எதிர்வீட்டு அழைப்பு மணியை அழைக்க,  கதவின்  பாதுகாப்புதுளை வழியே இவளை பார்த்த மருமகள்  சங்கிலிகொண்டு  பிணைத்த அரையடிக்கு குறைவான அளவில் கதவை திறந்தார்.

"பாட்டி" என பேசக்கூடமுடியாமல் திணறியவளிடம்,

"அந்தக்கிழவி என்ன உன்வீட்டு வேலைக்காரியா... சமைச்சு  போட்டதுக்கே அவரு  திட்டுனாரு... எல்லாம் வாங்கி கட்டிகிட்டு   அந்த கிழவி. வந்துச்சே எவ்வளவு பணம் கொடுத்தே... இந்த கெழவியும் பணத்தே வாங்கிட்டு அதோட பொ்ண்ணுக்கு அனுப்பினாலும் அனுப்பியிருக்கும்... " என அவரை மரியாதை குறைவாக பேசி அவர்களின் உறவை கொச்சைப்படுத்த பிரசவவலியை விடவும்  அதிக வலியை உணர்ந்தவள் இறைவனை பிராதித்து தனது இல்ல கதவை பூட்டினாள்

தன்னவன் சொல்படி அவசரஊர்தி வந்துவிடும் என லிப்ட்க்கு செல்ல அதுவும் சதிசெய்ய, பயம் கவ்வியது. யாராவது வெளியே வந்தால் தனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்.  மனிதர்களை தொலைக்காட்சி கைப்பேசி அரக்கன் தன்பிடியில் வைத்திருந்ததால் அவளது கடைசி நம்பிக்கையும் பொய்யானது.

அதிகவலி எடுக்க நவிதா  கத்த தொடங்க, அடைத்த கதவு தாண்டி அவள் குரல் செல்லவில்லை. கண்கள் மூடி அழுதவளை  திடீரென     யாரோ தாங்கிக் பிடிக்க, தலைதூக்கி பார்க்க வேதவல்லி பாட்டி நின்றிருந்தார். கையோடு கொண்டு  வந்த காயாசத்தை குடிக்க வைத்தார். அவசரஊர்தி ஆட்கள் வர அவளை தூக்கி கொண்டு சென்றனர்.

மருத்துவமனை அடைந்தாலும் வேதவல்லி நவிதாவின் கைவிடாது அவளுக்கு ஆறுதல்வார்த்தைகள் சொல்ல, தைரியமாய் தன் பிரசவத்தை சந்திக்க தயாரானாள். சிறிது நேரத்தில் சுகப்பிரசவத்தில் அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுக்க முதன்முதலில் வேதாவிடம் ஒப்படைத்தனர். நவிதா சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு குழந்தை அவளிடம் கொடுக்கபட்டு பசியமர்த்த செவிலியர்கள் சொல்லி  கொடுத்து கொண்டிருக்க டேனியல்  வந்து சேர்த்தான்.

செவிலியர் வெளியே வர  உள்ளே நுழைந்த டேனியல் என்னும் வீரஆண்மகன் கோழையாய் மாறி கைகள் நடுக்க  தன்மகவை வாங்கி, அதன் பிஞ்சுபாதத்தில் இதழ் பதித்தான்.  நன்றியுடன் வேதவல்லி.பாட்டியை பார்க்க அவரோ சிரித்தமுகமாய் நவிதாவிற்கு உதவி கொண்டிருந்தார்.

டேனியலின் தந்தை செய்தியறிந்து வர, வேதவல்லி பாட்டியை இல்லம் சென்று விட்டுவந்தான். இங்கு குழந்தையுடன் இவர்கள் குடும்பமாய் களித்திருக்க, வேதவல்லி பாட்டியை அவரது மகன் சாடிக் கொண்டிருந்தான்.

" உனக்கு எத்தன தடவே சொன்னேன் போலீஸ்க்காரன் கிட்டே அளவா வைச்சிக்கன்னு... நீ கூட்டிட்டி போறப்ப அந்த பாெண்ணு குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா.. எவன் பதில் சொல்றது...அந்தப்பொண்ணு குடும்பம் வேற  பட்டிகாட்டான் கூட்டம்... வந்தா வெட்டிபோட்டுடுவாங்க.... நமக்கு இதுதேவையா... அமைதியா ஏதுவும் செய்யாம இருந்தா நமக்கு தெரியாதுன்னு கழன்டுக்கலாம்... இல்லே நீ இங்கே இருந்தா இதுமாதிரி எதாவது பிரச்சனையை  இழுத்து வந்திட்டிருப்பே... உனக்கு காவகாக்க என்னாலே முடியாது....   மூட்டைமுடிச்சே கட்டு.. உன்னே கிராமத்திலேயே கொண்டு விட்டுறேன்...." என கத்த, வேதவல்லி பாட்டியோ மனிதம்மறந்து மகனுடன்  வாழ்வதை  விட தன் மக்களுடன் வாழ்வது மேல்  என அமைதியாய் தனது துணிமணிகளை எடுத்து வைத்தார்.

நவிதா குழந்தையுடன் காரிலிருந்து இறங்க  வேதவல்லி பாட்டி எதிரே வர  புன்னகைத்தாள். எங்கே கொடுக்க முடியாமல் போய்விடுமோ எனப்பயத்தில் இருந்தவர்  மகனுக்கு தெரியாது குழந்தைக்கு வாங்கிய வளையல்களை நவிதா கையில திணித்துவிட்டு காரில் ஏறினார்.

ஒருவன் தாயே மகளாய் பிறநுள்ளாள் என இல்லம் எடுத்து செல்ல, ஒருவனோ பெற்றதாயை சுமையாய்,  ஒரு தொல்லையாய் கருதி அவரின்  முதுமைக்கு தனிமையை பரிசாக கொடுத்தான். 

இரவு பால் கொண்டு வந்த கணவரிடம் நவிதா,  "டேனி! மாமா ஊருக்கே நீ ட்ரான்ஸ்பர் வாங்கிடு..  என்பொண்ணு வேதவல்லி மனுசியா  வளரட்டும்..." என்ற நவிதாவை தனமார்போடு சேர்த்துக் கொண்டாள். தனக்கு தாயே பிறந்துள்ளாள்  என இவன் மகிழ்ந்திருக்க, இவளோ தனக்குதாயாய்  உதவியவரின்  பெயர் வைத்து மகிழ்ந்தாள்.

அடுக்குமாடி குடியிருப்பு நமக்குநாமே தேடிக்கொண்ட  உயர்ரக சிறைச்சாலை....

மனிதம் முகம் காண விரும்பாத புதுவித மிருதனை உருவாக்கும்  ஆய்வுக்கூடம்..

தீப்பெடடியாய் அடுக்கிய கட்டிடங்களில் தீக்குச்சி மருந்தளவு மனிதமில்லா நவீனவாசிகளின் தனித்தீவுகள்...

உலக வலைத்தளங்களில்  நண்பர்களை தேடி களிப்புற்று அண்டைவீட்டாரை அறியாத கலியுக புதுக்கிரகம்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro