Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

42

அந்தி மாலை சூரியன் அஸ்த்தமிக்கும் நேரம். கடவுளால் மனிதனுக்குகொடுக்கப்பட்ட மிகவும் கலை நயமிக்க இரண்டு நேரங்கள் என்றால் அது சூரிய உதயமும் அஸ்த்தமனமும். அதுவும் சூரிய அஸ்த்தமனத்தை கடல் ஓரம் இருந்து ரசிப்பதே ஒரு வகை உவகைதான்.

கடலின் அலைகளில் சிறு குழந்தைகள் விளையாடுவதை ரூபினி ரசித்து கொண்டிருக்க க்ரிஷ் ரூபினியை ரசித்துக்கொண்டிருந்தான். அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார் அவளை தேவலோக கன்னிகையோ என எண்ணும் அளவுக்கு அழகாக காட்டியது. கடல் காற்றின் தாளத்துக்கு ஏற்ப அசைந்தாடும் அவளின் கூந்தல் க்ரிஷ்ஷை இன்னுமொரு உமர் கையாமாக மாற்றாமல் விடாது போல இருந்தது.

" க்ரிஷ் நான் உங்ககிட்ட ரெண்டு ரிக்குவஸ்ட் கேட்கலாம்னு இருக்கேன்" என்று ரூபினி தன் சுடிதாரின் துப்பட்டாவை கைவிரல்களால் சுருட்டிக்கொண்டு கேட்டால். அவனும் தன் கண் அசைவால் அவளுக்கு கூறுமாறு பணித்தான்.

" அன்னைக்கு நான் ஃபுட் கோட்ல காயத்ரி உங்கள திட்டவும்தான் என் மனசு தாங்காம உங்கள மேரேஜ் பண்ணிக்க யெஸ் சொல்லிட்டேன். ஆனா அதுக்கு பின்னாடி நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்கு. அதெல்லாம் எப்படி ஃபேஸ் பண்ணனும்னு நீங்க யோசிச்சிருப்பீங்க. ஆனா நாளைக்கு நமக்கு குழந்தைனு ஆகி அவங்களே வந்து என்கிட்ட நீ கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி பண்ணியாமான்னு கேட்டா என்னால அத தாங்கிக்க முடியாது. எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் மட்டும் வாழ்வோமா? இல்லை உங்க வம்சம் விருத்தி ஆக குழந்தை கண்டிப்பா வேணும்னா பரவாயில்லை. நான் அதுக்கும் தயார்தான். வார்த்தைகளால காயப்பட்டு காயப்பட்டு என் வாழ்க்கை அதுக்கு பழகிடிச்சி. நம்ம குழந்தை வந்து வந்து அப்படி கேட்டாலும் அந்த வலியையும் என்னால தாங்கிக்க முடியும்" என்று கூறி அவள் கண்களில் ஓரம் வடிந்த கண்ணீரை துடைத்தபடி இருந்தால்.

அவளை ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன் " நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம டாக்டர்கிட்ட போய் நம்ம கர்ப்பத்தடை பண்ணிக்கலாம். நான் முழு மனசோடத்தான் சொல்ரேன். உன் வாழ்க்கையில் இனி எந்த ஒரு மன கஷ்டமும் வரக்கூடாது ரூபினி. அது நம்ம குழந்தைகளா இருந்தா கூடவும் சரி" என்று கூற அவர்கள் இருந்தது கடற்கரை என்று கூற பாராமல் ரூபினி அவனை அணைத்து அவன் முகத்தில் முத்தமிட்டால்.

" ஹேய் இது பப்ளிக் ப்ளேஸ்மா, எல்லோரும் நம்மளையே பார்க்குறாங்க" என்று கூற அவனை முறைத்தவள் " ஏன் பப்ளிக் ப்ளேஸ்னா என் புருசன நான் கிஸ் பண்ண கூடாதா? நான் அப்படித்தான் பண்ணுவேன்" என்று கூறி இன்னும் இரண்டு முத்தங்கள் அவனுக்கு இனாமாக கொடுத்தாள்.

காமத்தில் கொடுக்கும் முத்ததிற்கும் காதலுடன் கொடுக்கும் முத்தத்திற்கும் சிறிய வித்தியாசம்தான். காதலுடன் கொடுக்கும் முத்தத்தால் நம் முகம் சிவந்து போகும். அதே முகச்செம்மை காமத்துடன் மட்டும் கொடுக்கும் முத்தத்தில் கிடைக்காது. ரூபினி சாதாரணமாகவே வெளிர்நிற தோலை உடையவள். அவளாகவே அவனுக்கு முத்தம் கொடுத்தாலும் அவள் வெளிர் கண்ணங்கள் செம்மையை பூசிக்கொண்டது. அந்தி மாலை நேர கதிரவனும் ரூபினியின் கண்ணங்களும் யார் அதிகம் செம்மை நிறத்தை கொண்டுள்ளோம் என்று ஒரு போட்டியே நடத்திக்கொண்டிருந்தன.

" சரி ரெண்டாவது ரிக்குவஸ்ட் என்ன" என்று க்ரிஷ் கேட்டான்.

" நம்ம இந்த ஊருல இருக்க வேணாம். ஏதாச்சும் வெளிநாடு போயிடலாமா?" என்று கேட்க அவளி அப்படி கேட்பதற்கான காரணத்தை க்ரிஷ் புரிந்து கொண்டான்.

" நீ ஏன் இந்த ஊரை விட்டு போகனும்னு சொல்ரேன்னு புரியிது. சரி ரூபினி நம்ம போகலாம். சுரேஷ் மாமாவுக்கு தெரிஞ்ச ஒரு ஏஜன்சி இருக்கு. அவங்க மூலமா போகலாம். என்ன முதல்ல கொஞ்ச நாளைக்கு சம்பளம் பெருசா கிடைக்காது. ஆனா அங்க போயி வேற ஏதும் வேலைக்கு டிரை பண்ணலாம். நமக்குத்தான் காசை சேமிச்சி வைக்கனும் என்ற தேவை இல்லையே" என்று கூறினான்.

" உங்க அக்காகிட்ட இருந்து உங்கள பிரிச்சி கூட்டி போறேன்னு கோபம் ஏதும் இல்லையே" என்று அவள் கேட்க அவள் கைகளை தன் கைகளுடன் இணைத்த க்ரிஷ்,

" இங்க பாரு ரூபினி. நீ என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டதே பெரிய விசயம். அதுவும் பழசு எல்லாம் மறந்து இப்படி நீ வெளிப்படையா பேசுறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நீ என்ன காக்க வந்த தேவதை. நீ எது சொன்னாலும் நான் கேட்பேன். என் அக்காவுக்கும் அது புரியும். எங்கக்கா ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டாங்க. அவங்க ஒருத்தங்க மேல லேசுல அன்பு வைக்கமாட்டாங்க. ஆனா அவங்க அன்பு வெச்சிட்டாங்கன்னா அவங்களுக்காக என்ன வேணா செய்வா. சரி வா நேரமாச்சி. நம்ம ரெண்டு பேரும் போய் அக்காவ பார்த்து பேசிட்டு வரலாம்" என்று கூறி ராதாவை சந்திக்க அவளின் வீட்டுக்கு சென்றனர்.
------------------------------------

க்ரிஷ் ரூபினியின் பேச்சுக்கு ராதா மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனாலும் அவள் மனதில் தன் சொந்தங்கள் எல்லாம் தன்னை விட்டு தூரமாக போவது போல ஒரு உணர்வு. ஷக்தியை அவளால் கட்டுப்படுத்த முடியாது. சிறு வயதில் இருந்தே அவள் ஷக்தியை தனது கட்டுக்குள் வைத்திருக்க முயன்றதில்லை. காரணம் ஷக்தியின் தந்தையிடம் காணப்பட்ட பணம். ஆனால் க்ரிஷ் அப்படி அல்ல. தினம் அவன் அணியும் ஆடையில் இருந்து அவன் உண்ணும் உணவு வரைக்கும் ராதாவின் ஆதிக்கம் இருக்கும். ஆதிகம் என்பதை விட அன்பு என்று கூறினால் மிகையாகாது.

" சரி, நீங்க நல்லா யோசிச்சிதான் நீங்க முடிவெடுத்திருப்பீங்க. ஆனால் வெளி நாடு போனாலும் அங்கேயும் சில பிரச்சினைகள் வரும். ரூபினிய தெரிஞ்சவங்க அங்கும் இருப்பாங்க. அதை எல்லாம் எப்படி முகம் கொடுக்க போறீங்க என்பத யோசிங்க. அப்புறம் க்ரிஷ் இது உனக்கு நான் சொல்றது ரொம்ப நல்லா கேட்டுக்கோ. ஒரு பொண்ண கைபிடிக்கிறது ஒன்னும் பெரிய விசயமில்ல. ஆனால் நீ அவள நம்பனும். அதுதான் ரொம்ப முக்கியமானது. குறிப்பா உங்க வாழ்க்கையில நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது நம்பிக்கை இருக்கனும். அதுவும் நீ இப்போ எடுத்திருக்கிற முடிவு ரொம்ப கஷ்டமானது. இந்த முடிவை நீ எடுக்கலாமா வேணாமா என்று யோசிச்சி கடைசியில் இதுதான் வேணும்னு அடம்பிடிச்சி எடுத்திருக்க. இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்க. ஏதாவது ஒரு காரணத்துக்காக, குறிப்பா நீ ரூபினி ஏதாச்சும் ஒரு சந்தர்ப்பத்துல சந்தேகப்பட்டீன்னா அப்புறம் என்ன நீ வேற மாதிரி பார்க்க வேண்டி இருக்கும்.

சொல்றேன்னு தப்பா நினைக்காத. நீயும் மீனாக்‌ஷியும் காதலிக்கும் போது உங்க பிரிவுக்கு முதல் காரணம் உனக்கு மீனாக்‌ஷி மேல இருந்த பொசசிவ்னஸ்தான். அதுதான் ஷக்தி கூட அன்னைக்கு அவ மேடையில பாடினதும் உனக்கு ரொம்ப கோவமாச்சி. ஆனா அதே மாதிரி நீ ரூபினிகிட்ட நீ நடந்துகிட்ட, இந்த அக்காவ நீ வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்" என்றவள் ரூபினியின் கைகளை தன்கைகளுக்குள் சேர்த்துக்கொண்டாள்.

" ரூபினி, இவன் ஏதும் உன்ன கஷ்டப்படுத்தினான் என்றால் என்கிட்ட சொல்லு. நான் அடுத்த ப்ளைட் ஏறி வந்து இவன லெஃப்ட் ரைட் வாங்கிடுறேன்" என்று கூற அவள் " சரி அண்ணி" என்றால். அவளை பார்த்து அன்பாக புன்னகைத்தாள் ராதா.

" ரூபினியும் நீயும் என்ன அக்கான்னே கூப்பிடு. பரவாயில்லை. உனக்கு நான் அக்காவா இருக்கேன், வேணும்னா இவன் என்ன அண்ணின்னு கூப்பிடட்டும்" என்று சிரித்தால். அவள் கூறிய இந்த சிறிய வார்த்தை ரூபினி மனதில் ராதாவுக்கான இடம் மிக உயர்வாகியது.

அடுத்து வந்த நாட்களில் க்ரிஷ் ரூபினி திருமணம் மிக எளிமையாக ரெஜிஸ்டர் ஆபீசில் நடந்தது. பெரிதாக யாரும் அந்த திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. ஏன் மீனாக்‌ஷி, ஷக்தி கூட அவர்கள் கனடா செல்லுவதற்கு தேவையான ஏற்பாடுகளில் மிகவும் பிசியாக இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. ரூபினி சார்பில் பூர்ணி மட்டுமே இருந்தால். க்ரிஷ் சார்பில் ராதாவும் சுரேஷும் மட்டும். நபர்கள் குறைவாக இருந்தாலும் அந்த திருமணத்தில் ஒரு உயிர்ப்பு இருந்தது. எல்லோர் மனதிலும் ஒரு நிம்மதி பரவியது. பந்தல் கால் நடவில்லை, ஐநூறு பேருக்கு பந்தி போடவில்லை. லட்சக்கணக்கில் செலவழித்து அலங்காரம் செய்யவில்லை. மணப்பெண் தோழிகளின் கலகலப்பு எதுவுமில்லை. ஆனால் இந்த திருமணத்தால் எல்லோர் மனதிலும் ஒரு நிம்மதி இருந்தது.

தம்பதிகளுக்கான் மற்றைய சடங்குகளை ராதாவே முன்னின்று செய்தால். இரவு வர ஆரம்பித்தது. திருமணம் முடித்தவர்களுக்கு முதல் இரவு. முதலிரவு அறைக்குள் ரூபினி சென்று கதவை சாத்திகொண்டாள். இங்கு ராதா, சுரேஷ் மற்றும் பூர்ணி மூவரும் மனதில் நிறைவை சுமந்துகொள்ள ரூபினி தன் கணவனான க்ரிஷ்ஷை தன் மீது சுமந்துகொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro