Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

13

நம் வாழ்வில் நமக்கு பிடித்தவர்கள், மற்றும்  நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு வேண்டியவர்கள் ஏதும் தவறு செய்து அது நம்மை பாதிக்கும் போது நம்மால் அதை தாங்கிக்கொள்வது கஷ்டம். ஆனால் இங்கு க்ரிஷின் வாழ்க்கையில் அவனுக்கு பிடித்த ஷக்தி மற்றும் அவனின் அக்காவுக்கு பிடித்த சுரேஷ் இருவரும் அவனுக்கு செய்த செயல் அவனை நிலை குலையச்செய்தது.

எந்த ஒரு கணவனும் தன் மனைவி அவளின் கஷ்டமனான நேரங்களில் தன்னிடமே ஆறுதல் தேடவேண்டும் என எதிர்பார்ப்பான். வேறு ஒரு ஆணிடம் அவள் தனது கஷ்டத்தை கூறி அழுவது, அது அவளின் தந்தையாக இருந்தால் கூட அவனின் மனது ஏற்காது. இங்கு பல வீடுகளில் முறையற்ற உறவுகள் தோன்ற காரணம் தன் மனைவியின் மன கஷ்டங்களை கணவன் செவிசாய்க்க தவறுவதுதான். இதுவே அடுத்தவன் மனைவிக்கு ஏதும்  கஷடம் என்றாள் உடனே அவளுக்கு ஆறுதல் கூற போய்விடுவான். இதுதான் இன்றைய ஆண்களின் சாபம்.

எப்படி ஷக்தியால் மீனாக்‌ஷியை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லையோ அதே நிலமையில்தான் சுரேஷும் இருந்தான். க்ரிஷிற்கு எப்படி சுரேஷை பிடிக்காதோ அதே போலவே சுரேஷிற்கு க்ரிஷ் மீது கொஞ்சம் பொறாமை உண்டானது. அதற்கு காரணம் ராதா. எல்லா ஆணும் எதிர்பார்ப்பது போல தன் மனைவியின் முழு அன்பும் தனக்கே வேண்டும் என நினைத்தவன் அதில் பெரும்பாகம் க்ரிஷிற்கு சென்றதால் அவன் மீது ஒரு இனம்புரியாத பொறாமையுடன் கூடிய வெறுப்பு உருவானது. தன் மனைவியை காதலிக்கும் எல்லா ஆண்களும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை கண்டிப்பாக தங்கள் வாழ்வில் சந்தித்து இருப்பார்கள்.

ஹாஸ்பிடலை விட்டு வெளியில் வந்த க்ர்ஷ்ஷின் மூளையில் சுரேஷ் கூறிய விடயங்களே ஓடிக்கொண்டிருந்தது. அவனால் கொஞ்சம் கூட சிந்திக்க முடியவில்லை. தான் வந்த பைக்கையும் மறந்தவன் தன் கால் போன போக்கில் நடந்தான். ஹாஸ்பிடல் காம்பவுண்ட்டை விட்டு வெளியில் வந்தவன் வீதி என்பதை கூட மறந்து, சிக்னலில் வாகனங்கள் செல்வதற்கு பச்சை நிற சமிக்ஞை ஒளிர்ந்தது கூட தெரியாமல் நடக்க அவனை சடாரென்று ஒரு கை தடுத்து நிறுத்தியது. அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவன் வீதியை பார்த்தான். வாகனங்கள் மிக வேகமாக சென்று கொண்டிருந்தன. இன்னும் இரண்டு அடி முன் வைத்திருந்தாள் இந் நேரம் அவனது உயிர் பிரிந்த உடல் வீதியில் கிடந்திருக்கும்.

தன் கையை பிடித்திருந்தது யார் என்று பார்க்க அங்கு ரூபினி நின்றுகொண்டிருந்தாள். இவனின் மனநிலை அறிந்தவள் அங்கிருந்த ஒரு ஆட்டோவை அழைத்து பக்கத்தில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டுக்கு கூட்டி சென்றாள்.

ரெஸ்ட்டாரண்டினுள் நுழைந்தவர்கள் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று இருவரும் அமர்ந்தனர். வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியாமல் அந்த அறை மறைவாக இருந்ததினால் க்ரிஷ்ஷிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. காரணம், தான் இருந்த மனநிலைக்கு அவன் எப்போது அழுவான், அவனின் முகபாவனை எப்போது எப்படி மாறும் என்பது அவனுக்கே தெரியவில்லை.

எந்த உணவு வேண்டும் என்று பேரர் ஆடர் கேட்டு வர ரூபினியே அவனுக்கும் சேர்த்து ஆடர் கொடுத்தாள். இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன் ரூபினைய் நோக்கி

" போறேன்னு சொல்லிட்டு ஏன் அங்க நின்னீங்க?" என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க அவனை பார்த்து முறைத்தவள்

" நீங்க தர்றேன்னு சொன்ன பத்தாயிரம் ரூபா யாரு உங்க அக்காவா கொடுப்பா. அதான் பேசின பேமண்ட வாங்கிட்டு போகலாம்னு நின்னேன்" என்று கூற அவன் தனது பர்ஸை எடுத்து பணத்தை கொடுக்க போக அவனை ரூபினி தடுத்த்தாள்.

" பணமெல்லாம் வேணாம் க்ரிஷ். உள்ளே பெருசா ஏதோ நடக்க போகுதுன்னு என்னோட உள் மனசு சொல்லிச்சி. அதான் நான் வெளியில வெய்ட் பண்ணேன். நீங்க வேற உங்களோட பாஸ்ட் லைஃப் பத்தி என்கிட்ட சொல்றேன்னு சொன்ன்னீங்க. இன்னைக்கு உங்க அக்கா, உங்களோட எக்ஸ் லவ்வர பார்த்த பிறகு உங்க வாழ்க்கையில நடந்த விசயங்கள கேட்கனும்னு எனக்கு ரொம்ப ஆர்வமாகிடிச்சி. அதனாலதான் நான் உங்களுக்காக வெளியில காத்திருந்தேன். அதுவும் ஒருவகையில நல்லதா போச்சி. இல்லைன்னா நீங்க இப்போ ஆக்சிடண்ட் ஆகி அதே ஹாஸ்ப்பிடல்ல இருந்திருப்பீங்க" என்று கூறினாள்.

ரூபினியின் பேச்சில் தெரிந்த கனிவில் அவன் மனம் ஒரு சில நொடிகள் இலகியது. அவன் மனதை மூடியிருந்த கவலை, சூரியனை கண்ட முடுபனி போல கொஞம் கொஞ்சமாக விலக தொடங்கியது. அவளை அவனால் இப்போதெல்லாம் ஒரு விலைமகளாக பார்க்க முடியவில்லை. க்ரிஷ் அவள் மீது காதல் கொண்டான் என்று கூறினால் அது மிகவும் அபத்தமாக இருக்கும் என்று அவனுக்கும் தெரியும். இதை கேட்கும் மற்றவருக்கும் அது கேளிக்கையாக இருக்கும். ' காசு கொடுத்து படுக்க போனாராம். இப்போ லவ்வாகிடிச்சாம்' இப்படி எல்லாம் சமூகம் கேளி செய்யும். ஆனால் சமூகம் எதைத்தான் கேளி செய்யவில்லை.

" சாரி ரூபினி, உங்கள இன்னைக்கு என்னோட அக்காவும், மீனாக்‌ஷியும் மோசமா பேசிட்டாங்க. எல்லாத்துக்கு காரணம் நாந்தான். என்ன மன்னிச்சிடுங்க. பாவம் அவங்க என்மேல இருக்குற பாசத்துல உங்கள திட்டிட்டாங்க" என்றவனை பார்த்து ரூபினி புன்முறுவல் பூத்தாள். அவள் புன்னகையில் ஆயிரம் விடைகள் தெரிந்தது, ஆனால் அந்த விடைகளுக்கான கேள்விகள்தான் க்ரிஷ்ஷிடம் இல்லை.

" அடப்போங்கப்பா. இதெல்லாம் ஒரு திட்டா. இதைவிட ரொம்ப கேவலமாலாம் நான் திட்டு வாங்கியிருக்கேன். ஒரு விபச்சாரிகிட்ட வர்ற ஆம்பளை அவ உடம்ப மட்டும் தேடி வர்றதில்ல. அவன் மனசுல இருக்குற அழுக்குகளையும் சேர்த்து கொட்டத்தான் வர்றான். எத்தனையோ ஆம்பளைங்க என்ன எவ்வளவு கேவலமா பேசுவாங்க தெரியுமா? அதை எல்லாம் ஒரு சாதாரண பொண்ணு கேட்டான்னா அவ அங்கேயே செத்துடுவா. ஆனா இதுதான் என் தொழில் என்று ஆகிடிச்சி. சோ இது எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகனும். நான் கேட்ட அந்த வார்த்தைகளை விட உங்க அக்கா சொன்னது ஒன்னும் பெரிய வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு ஒன்னு தெரியுமா, ஒரு விபச்சாரிகிட்ட வர்ற ஆம்பிளைங்க அவள வேசி, தேவிடியான்னு திட்டுறது எல்லாம் ரொம்ப கம்மி. அவனுங்க எங்கள திட்டுற வார்த்தைகள வெளியில கூட சொல்ல முடியாது. அவ்ளோ மோசமா இருக்கும். அந்த வார்த்தைகளை விட வேசி, தேவிடியா என்ற வார்த்தைகள் எவ்வளவோ மேல்.
ஆனா ஒன்னு, ஆம்பளைங்க கிட்ட திட்டு வாங்கும் போது ' உடம்பு தினவெடுத்து வந்திட்டு என்ன இவன் திட்டுறானே. இவன் என்ன பெரிய யோக்கிய சிகாமனியா' அப்படின்னு மனசுல தோனும். ஆனா இன்னைக்கு உங்க அக்கா திட்டும் போது எனக்கு லேசா ஒரு குற்ற உணர்ச்சி வந்தது. ஒரு குடும்பத்துக்குள்ள பிரச்சினை வர நான் காரணமாகிட்டேனோன்னு" என்று சற்று கவலையாக கூறினாள்.

ரூபினி வாய் வார்த்தைகளால் மீனாக்‌ஷி மற்றும் ராதா பேசியது தன் மனதை காயப்படுத்தவில்லை என்று கூறினாலும் அவளின் மனதில் ' ஒரு பெண்ணிடம் இப்படி கேவலமாக திட்டு வாங்கிவிட்டோமே' என்ற கவலை இருக்கத்தான் செயத்தது. விலைமகளாக இருப்பவளுக்கு ஒரு ஆணிடம் வசை சொல் கேட்பதை விட ஒரு பொண்ணின் வசைச்சொல் அவளை மிகவும் பாதிக்கும்.

ஆடர் செய்த உணவுகள் வர ரூபினி க்ரிஷை பார்த்து

" சாப்பிடுங்க. உங்களுக்கும் சேர்த்துதான் ஆடர் பண்ணேன்" என்று கூறினாள்.

" எனக்கு பசி இல்லை, நீங்க சாப்பிடுங்க" என்று க்ரிஷ் கூற கோபம் கொண்ட ரூபினி

" லூசுத்தனமா பண்ணாம சாப்பிடுங்க. காலையில இருந்து நீங்களும் ஒன்னும் சாப்பிடல, நானும் ஒன்னும் சாப்பிடல. பசியோட இருந்தா நம்மளால எதுவுமே யோசிக்க முடியாது. முதல்ல சாப்பிடுங்க, அப்புறம் உள்ளத சாப்பிட்டிட்டு யோசிக்கலாம்" என்று கூறியவள் அவனை வற்புறுத்தி சாப்பிடவைத்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் ரூபினியே அவர்கள் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க போக இந்த முறை க்ரிஷ் அவளை தடுக்க முயன்றான். ஆனால் அவனை அவள் சட்டை செய்யாமல் அவளே பணத்தை கொடுத்தாள்.

" உங்க பைக் ஹாஸ்ப்பிடல்ல நிட்குது. அத அப்புறமா எடுத்துக்கோங்க. இப்போ நம்ம உங்க வீட்டுக்கு போகலாம்" எனறு ரூபினி கூறினாள். ருபினி தன்னுடன் தன் வீட்டிற்கு வர போகின்றாள் என்பதே க்ரிஷ்ஷிற்கு ஒரு வகை மனநிம்மதியை கொடுத்தது. இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து க்ரிஷ்ஷின் வீடு வந்தனர்.

வீட்டிற்கு வந்த இருவரிடமும் ஒரு தயக்கம் அடுத்து என்ன செய்வது என்று. ரூபினியே அந்த தயக்கத்தை முதலில் உடைத்தாள்.

" சரி, உங்க பாஸ்ட் லைஃப் பத்தி சொல்லுங்க" என்று கூற க்ரிஷ் அவளை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையில் என்ன மாதிரியான உணர்வுகளை காட்டியது என்று ரூபினிக்கு புரியவில்லை. ஆனால் க்ரிஷ்ஷிற்கு ஒரு விடயம் தெளிவாக புரிந்தது. இன்று அவனின் கதை கேட்ட பின்னர் ரூபினி அவனை விட்டு விலகிடுவாள் என்று. காரணம் ராதா அழுததையே தாங்க முடியாமல் அவளிடம் உன்மையை கூறி ஹாஸ்பிடல் அறையை விட்டு வெளியேறியவள், தனது சொந்தங்கள் அவர்களின் தவறை உணர்ந்து தன்னிடம் வரும் போது அவள் அதற்கு தடையாக இருக்க விரும்பமாட்டாள் என்பது அவனுக்கு தெரிந்தது. இருந்தாலும் ரூபினியின் உறவை அவன் இழக்க விரும்பவில்லை.

" என்னோட பாஸ்ட் லைஃப்ப ஒரு ஃப்ரெண்டா உங்களுக்கு கேட்க சம்மதம்னா சொல்றேன். இல்லைன்னா வேணாம்" என்று கூற ரூபினிக்கு இந்த மனநிலையிலும் அவன் அவளை கார்னர் செய்வது புரிய, அவனின் புத்திசாதுர்யத்தை எண்ணி மனதுக்குள் அவள் வியந்தாள்.

மனிதனுக்கு ஒரு விடயத்தை பற்றிய அதீத ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு அவனுக்கு அந்த விடயத்தை முழுவதும் கூற நாம் என்ன செய்ய சொன்னாலும் அவன் கேட்பான். க்ரிஷ்ஷின் கடந்த கால வாழ்க்கை பற்றி அதிகமான எதிர்பார்புகளை ஏற்படுத்தி, இப்போது அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரூபினியின் நட்பை கேட்டு அவளை கார்னர் செய்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. மாறாக அவளும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாரானாள்.

" ஒரு ப்ராப்ளமும் இல்லை. ஆனா நான் உங்கள ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டேன்னா என்னால அதுக்கு அப்புறம் உங்க கூட காசு வாங்கிட்டு படுக்க முடியாது" என்று கூற அவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்தான். அதிலும் குறிப்பாக ' படுக்க' என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி தான் யார், தன் தொழில் என்ன என்பதையும் அவனுக்கு உணர்த்தினாள்.

" இல்லை, நான் ஏன் இதை சொல்றேன்னா உங்க கூட காலேஜ்ல நிறைய பொண்ணுங்க படிச்சிருப்பாங்க. அவங்கள்ள நிறைய பேர் ஃப்ரெண்டாவும் இருந்திருப்பாங்க. ஃப்ரெண்டு கிட்ட போய் செக்ஸ் வெச்சிக்கிற அளவுக்கு நீங்க ஒன்னும் மோசமானவரு இல்லைனு தோனிச்சி. அதனாலதான் அப்படி சொன்னேன்" என்று கூற அவளை பார்த்து புன்னகைத்த க்ரிஷ்

" சோ உங்கள என் ஃப்ரெண்ட்னு ஏத்துக்கிட்டா, ஐ மீன் நீங்க என்ன ஃப்ரெண்ட்னு ஏத்துக்கிட்டா நான் உங்ககிட்ட உங்க உடம்ப எதிர்பார்க்க கூடாது அதானே. உங்க கோரிக்கைய நான் அகசப்ட் பண்ணிக்கிறேன்" என்று கூற இந்த முறை ரூபினி ஆச்சரியமனாள். அதே நேரம் க்ரிஷ் மனதுக்குள்

' எங்க அக்கா என்ன நம்புறா ரூபினி. என்னால இதுக்கு மேலயும் அவங்கள காயப்படுத்த முடியாது. இனிமே என் மனச ஒருமுகப்படுத்த ஒரு பொண்ணோட சகவாசம் தேவைப்படாது. ஆனா உன்ன எனக்கு பிடிக்கும். உன்னோட உறவும் எனக்கு தேவைன்னு தோனுது. இத நான் சொன்னா கண்டிப்பா நீ ஏத்துக்க மாட்ட. அதான் நான் இப்படி பண்றேன். இந்த உறவுக்கு பெயர் என்னன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் நான் விரும்பல. பெயர் தெரியாத உறவாவே இது இருக்கட்டும்' என்று தனக்கு தானே காரணம் கூறிக்கொண்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro