Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 6

ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே

"நோநோ இந்த ராட்சஷன் இல்லா உலகில் ரகசிய இடம்லாம் வேணாம், ப்ளாட்பார்ம்ல படுக்க ஒரு இடம் கிடைச்சா கூட போதும்....மம்மிமிமி என்ன இப்படி புலம்ப விட்டுட்டானே...இதுல ஒன்பது பொருத்தம் வேற!! ஒருவேளை அந்த ஜோசியர் டூபாக்கூரா இருக்குமோ??" மனதில் தோன்றியதெல்லாம் புலம்பியடி மெத்தையின் மேல் அமர்ந்திருந்தவளை தொல்லை செய்யவே அழைப்பு விடுத்தான் அவளின் வருங்கால தொல்லை.

"லேம்ப் போஸ்ட் " என்ற பெயருடன்
அவனுக்கென்றே அவள் வைத்த பிரத்யேக பாடலில்

உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்
என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்.
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்

கைபேசி தன் இருப்பைக் காட்ட
"விநாயகா இவன் ஏன் இப்போ கூப்பிடுறான்...போ அவன் வேணாம், நான் அட்டெண்ட் பண்ண மாட்டேன்" என்று சிறு குழந்தை போல் கை,காலை அசைத்து மெத்தையில் புரண்டு கொண்டிருந்தவளை  "தீரா" என்ற குரல் சிலையாக்கியது.

"நான்தான் அட்டெண்ட் பண்ணவே இல்லையே? அப்புறம் எப்படி அவன் குரல் கேட்கும்" தன் மொபைலை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவளை "தீரா" என்ற குரல் மறுபடியும் அழைக்க கீ கொடுத்த பொம்மை போல் அவன் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள்.

கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு "என்ன" என்பது போல் புருவம் உயரத்தியவனைக் கண்டு திருத்திருவென முழித்தவள் கைகளைப் பிசைந்தவாறே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கால் வந்தா அட்டெண்ட் பண்ணனும்ங்கிற பேசிக் மேனர்ஸ் கூட உன்கிட்ட இல்லையா! அந்த மொபைலில் அப்படி என்ன தான் இருக்கு? அதையே ஏன் முறைச்சு பார்த்துட்டு இருக்க?" என்று வினவியவன் அவள் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க

"அதுல உன் பெயர் வந்ததால தான் முறைக்கிறேன்" என்ற மைண்ட் வாய்ஸை அவள் எப்படி வெளியே கூறுவாள்...

அவனைப் பார்த்து சமாளிக்கும் விதமாய் ஈஈ என்று தன் அனைத்துப் பற்களையும் காட்டியவள் "மொபைல் ஹேங்க் ஆயிடுச்சு" அப்போதைக்கு மனதில் தோன்றிய பொய்யை அவிழ்த்து விட்டாள்.

அவளைக் கூர்ந்து நோக்கியவன்
"சரி கிளம்பு வெளியே போகணும்" கட்டளைப் பிறப்பித்து அவன் சென்று விட

"ஹிட்லருக்கே டஃப் கொடுப்பான் போல இந்த முரட்டு பீசு" அவனை மனதில் வசைப் பாடிக் கொண்டே கிளம்ப தயாரானாள்.

சுடிதாரென்றாலும் சரி, லெகின் மற்றும் டாப் என்றாலும் சரி ஒரு பக்கத்தில் மட்டும் துப்பட்டா அணிவது சுதாவிற்கு பிடித்த ஒன்று.
அதுபோலவே அவள் கிளம்பி வெளியே வர யுவி அவளை முறைக்க ஆரம்பித்தான்.

" இவன் ஏன் முறைக்கிறான், முறைப்பையன் மாதிரி சும்மா சும்மா முறைச்சுக்கிட்டு" மனதில் திட்டிக் கொண்டே பாவமாக அவனைப் பார்க்க

"ஒன்னு இரண்டு பக்கமும் போடு, இல்லைனா போடவே போடாத!! அதென்ன ஒரு பக்கம் மட்டும்" என்றவன் கூறி முடிப்பதற்குள் இரண்டு பக்கம் போட்டுவிட்டாள்.

"ம்ம் அது" என்றவன் "அத்தை தோட்டத்துல இருக்காங்க, நான் ஏற்கனவே அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்... நம்ம கிளம்பலாமா?" என்றவனிடம் மெதுவாக தலையசைத்தவள் தலையைக் குனிந்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்.

காரில் ஏறி அமர்ந்தவன் அவள் இன்னும் ஏறாமல் இருப்பதைக் கண்டு "என்ன ஆச்சு தீரா? ஏறு " என்று கூற

"அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடவா?" என்று அவள் முடிப்பதற்குள்

"உன்னை வண்டியில ஏறுனு சொன்னேன்" என்றவனின் குரலில் பயந்தவள் தலையை வேகமாக ஆட்டியபடியே காரில் ஏறினாள்.

அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது சுதாவிற்கு...

முதல் நாள் தன்னிடம் திருமணத்தைப் பற்றி கூறி சம்மதம் வாங்கிய பொழுது அவளுக்கும்  மாப்பிள்ளையைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆவல் எழத்தான் செய்தது.

"எப்படி இருப்பாங்க,அப்பா மாதிரி நம்மளை பாத்துப்பாங்களா? அப்பா செலக்ஷன் எப்போவும் பெஸ்ட்டா தான் இருக்கும் " என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டவள் அதையே நினைத்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்கவே இல்லை.

காலையில் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி எழுந்து வந்தவளை விசித்திர ஜந்து போலத்தான் பார்த்தான் தீபு.

"என்ன வளர்ந்துக்கெட்டவளே இப்படி வர?எப்பவும் பாடிட்டே தானே எழுந்து வருவ" என்றவனைக் கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர்ந்தவள் அவன் தோள்பட்டை மீது சாய்ந்துக் கொள்ள தன் தமக்கையை திரும்பிப் பார்த்தவன் எதுவும் கூறாமல் அப்படியே அணைத்துக் கொண்டான்.

என்ன தான் இருவரும் அடித்துக் கொண்டாலும் இவர்களுக்குள்ளே இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது...
மனம் சோர்வாக இருக்கும் சமயங்களிலெல்லாம் தன் தம்பியிடம் தான் அடைக்கலமாவாள்.

தன் தலையை தடவிக் கொண்டிருந்தவனை மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவள் இதே போல் தான் சோர்ந்து போகும் சமயங்களில் கணவன் உற்ற துணையாய் இருப்பானா என்ற கேள்வி வேறு தேவையில்லாமல் எழுந்தது.
ஏன் இருக்க மாட்டாங்க? அப்பா செலக்ஷன்னா சும்மா வா!!
என்று கூறி மனதை தேற்றிக் கொண்டாள் என்பதே உண்மை.

"சுதா ஏன் டா முகம் டல்லா இருக்கு " என்று கேட்ட அப்பாவிடம்
" ஒன்னுமில்லையே பா " என்றவள் இப்போது மெலிதாய் ஒரு புன்னகையை சிந்த அதில் அவள் தலையை செல்லமாக கலைத்துப் புன்னகைத்தவரோ பார்வதி கொடுத்த காபியை குடிக்க ஆரம்பித்தார்.

"நைட் புல்லா மொபைலை நோண்ட வேண்டியது  ,ஒழுங்கா தூங்குனா தான் என்ன ஆயிடுவ நீ!! மூஞ்சிய பாரு எப்படி இருக்குனு " சுதாவைத் திட்டிக் கொண்டே அவள் கைகளில் காபியைத் திணித்தவர்

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம் , நாளை மறுநாள் உன்னை பொண்ணு பார்க்க வராங்க " என்ற பார்வதியை அதிர்ந்துப் பார்த்தவள் தன் தந்தையைப் பார்க்க அவரும் புன்னகை முகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.

வினுவின் மீது பாரத்தைப் போட்டவள் "சரி மா " என்று கூறி அறைக்குள் நுழைந்துக் கொள்ள அதற்கு பிறகு வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை.

காலை பதினொரு மணியளவில் அவள் அறையைத் தட்டிய பார்வதி
"நான் கொஞ்ச வேலையா வெளியே போறேன் டா, நீ சாப்பிடு நல்லா ரெஸ்ட் எடு சரியா" என்று கூறி கிளம்பி விட "சரி மா " என்றவளோ சிறிது நேரம் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்.

வீட்டில் இருக்கும் சமயங்களில் மஞ்சள் மற்றும் தயிரை முகம் , கை ,கால்களில் பூசிக் கொள்வாள்.வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து தன் அழகை மெருகேற்றிக் கொள்வது அவள் வழக்கம்.ப்யூட்டி பார்லர் செல்வதெல்லாம் சுதாவிற்கு பிடிக்காத ஒன்று.

இன்றும் அதே போல் மஞ்சள் மற்றும் தயிரை முகத்தில் பூசிக் கொண்டவள் தொலைக்காட்சியில் சத்தமாக பாடலை வைத்து கேட்டபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க வீட்டின் காலிங் பெல் அடித்தது.

"இப்போதானே பிரியாணி ஆர்டர் பண்ணோம் அதுக்குள்ள வந்துடுச்சா " என்று எண்ணியபடியே கதவைத் திறந்தாள்.

வெளியே நின்றுக் கொண்டிருந்தவனோ இவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து சற்று பயந்து ஒரு அடி நகர

"இப்போதானே ஆர்டர் பண்ணேன் , அதுக்குள்ள வந்துட்டீங்க!! எங்கே பார்சலைக் காணோம்?" என்று அவன் பின்னால் தேட அவள் கூறியதில் முறைத்தவனோ
"நான் ஒன்னும் புட் டெலிவரி பண்ண வரல... என்ன பார்த்தா அப்படியா இருக்கு " என்று கேட்க

"ச்ச்ச அவங்க இப்படி இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்க மாட்டங்க " என்று முணுமுணுத்தவள் அவனைப் பார்த்து சமாளிக்கும் விதமாய் சிரித்தாள்.

"நீங்க யாரு " என்று சுதா கேட்க அவளை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தவனோ சோபாவில்  அமர்ந்துக் கொண்டான்.

"ஹலோ யாரு சார் நீங்க? இப்படி கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம என்னைத் தள்ளி விட்டுட்டு உள்ளே வந்து உட்காருறீங்க !! ஏதோ திறந்த வீட்டுல நுழைஞ்ச  மாதிரி" கடைசி வாக்கியத்தில் மட்டும் டோன் குறைந்து விட அது தெள்ளத் தெளிவாக அவன் காதில் விழுந்தது.

"நாய்னு சொல்லுற!! அதை சத்தமாவே சொல்லலாமே!
கொஞ்சம் உன் முகத்தை கழுவிட்டு வரியா ? பார்க்கவே பயமா இருக்கு" என்றவனை முறைத்தாலும் அவன் கூறுவது உண்மை தான் என்பதை ஒப்புக் கொண்டவள் தன் அறைக்கு ஓடினாள்.

வேகமாக கழுவிக் கொண்டு வெளியே ஓடி வந்தவளைக் கண்டு சிரித்தவன் அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு அமைதியாகி விட்டான்.

"எதுக்கு சிரிக்கிறீங்க?ஆமா நீங்க யாரு" என்றவளிடம்

"நான் ஒரு உண்மையைச் சொல்லவா?" என்று கேட்க

"இவன் என்ன லூசா " என்பது போலப் பார்த்தவள்

"யோவ் யாருயா நீ? உண்மை சொல்லவா? பொய் சொல்லவானு உளறிக்கிட்டு... ஒழுங்கா வெளியே போ!! அறிவிருக்கா? இப்படிதான் பர்மிஷன் கேட்காம உள்ள வருவியா?" அவன் பேச இடம் கொடுக்காமல் கத்திக் கொண்டிருப்பவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அம்மா ,தங்கை உட்பட யாருமே இவனிடம் கத்தி பேசியதில்லை...
(நீ பேச விடணும்டா அதுக்கு)

ஆள்காட்டி விரலை நீட்டி திட்டிக் கொண்டிருப்பவளை நெருங்கியவன் அந்த விரலை பிடித்து இழுத்ததில் கொஞ்சம் முன்னே வந்தவள்,

அவன் இப்படி செய்வான் என்று எதிர்ப்பாராததால் விழிவிரித்து அவனை நோக்கினாள்.

"இப்போ யுவராஜ் இன்னும் 2 மாதத்தில் சுதந்திராங்கிற பெண்ணுக்கு என்னோட பெயரை கடன் கொடுக்க போறேன் " என்று கூறி அவளைப் பார்க்க

புரியாது பார்த்தவளின் தலையில் மெதுவாக கொட்டியவன்
"சுதந்திரா சிவராமனை , சுதந்திரா யுவராஜா மாத்த போறேன்!! இப்போவாச்சும் உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்...புரிஞ்சுதா?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்க

தலையை இடம் வலம் என மாத்தி மாத்தி ஆட்டியவள் இமைக்க மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இப்போவாச்சும் அந்த உண்மையை சொல்லவா ?" என்று கேட்டவனிடம்

சரி என்பதாய் சுதா தலையசைக்க
"இதுக்கு முன்னாடி இருந்தியே ஒரு வேஷத்துல அதுல கூட நீ பார்க்க நல்லாருக்க! முகத்தை கழுவுனதுக்கப்புறம் தான் பார்க்க சகிக்கல " என்று கூறி முகத்தை சுழித்தவனைக் கண்டு முறைத்தவள் அவன் கைகளிலிருந்து தன் விரலை உருவிக் கொண்டு தள்ளி நின்றாள்.

"அம்மா, அப்பா இல்லை" அவனைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கூற

"தெரியுமே!! தெரிஞ்சு தானே உன்னைப் பார்க்க வந்தேன் " என்றவனை அவள் அதிர்ந்து நோக்க

"ஆமா இது என்ன வீடு இந்த கலர்ல இருக்கு?? ரொம்ப கேவலமா வேக் வாமிட் வருது " என்றவனை இது எப்படி பட்ட ஜந்து எனத்தான் தோன்றியது சுதாவிற்கு.

இவர்கள் இருக்கும் ஏரியாவில் உள்ள அனைவருக்கும் சுதாவின் வீட்டை மிகவும் பிடிக்கும்.
வீட்டின் நிறத்தையும்...

வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே பின்பக்கம் சென்றவன் தோட்டத்தைக் கண்டு முகம் சுழிக்க
"இதெல்லாம் யாரு பண்ணா?" என்று தோட்டத்தைச் சுட்டிக் காட்டி யுவி கேட்க,

"நான்தான்" என்றவள் அவன் தன்னைப் பாராட்ட போகிறான் போல என ஆவலோடு காத்திருந்தாள்.

(அவன் என்ன சொல்லுவானு தான் நமக்குத் தெரியுமே🚶‍♀🚶‍♀வாங்க நாளைக்கு வந்து அவ எப்படி திட்டு வாங்குறானு பார்க்கலாம்)

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro