Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 97

"யாரைக் கேட்டு இப்டி ஒரு முடிவுக்கு வந்தீங்க? ஏதோ லன்ஞ்ச்க்கு போகப்போறோம்னு சொன்னவங்க அது பிரகாஷ் அங்கிளோட வீட்டுக்கு தான்னு ஏன் எங்கிட்ட சொல்லல? எங்க எல்லாருக்கும் சம்யுக்தா ஓகே.... நீ அவ கூட பேசிட்டு ஒரு முடிவுக்கு வான்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம்,

"போய் பேசிட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுன்னு அர்த்தம். இது கூடயா தெரியல உனக்கு?" என்று ஆப்பிளை கடித்து சாப்பிட்ட படி தன்னுடைய தம்பியை வாரிக் கொண்டிருந்தாள் சந்தனா.

"சந்து நீயும் என்ன இப்டி லூசு மாதிரி பேசுற? அவ கிட்டத்தட்ட ஒரு கோடீஸ்வரி சந்து; நான் அவளோட தாத்தாட்ட வேலை பார்த்துட்டு இருக்குற ஒரு எம்ப்ளாயி?" என்று சொன்னவனிடம் கதிர்,

"சேகர் அப்டித்தானடா நானும் உங்க அக்காவும் இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலையா?" என்று கேட்டான்.

"ஐயோ அத்தான்..... உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது! அந்த பொண்ணுக்கு இப்ப கல்யாணம்லாம் தேவையில்ல அத்தான்; அவங்க அப்பா அம்மாவோட இருக்கும்போது லோன்லினெஸ்ஸோட ரொம்ப ஸஃபர் ஆகியிருக்கா! அதுனால தான் இப்டி இன்ஸ்டன்ட் கல்யாணம், இன்ஸ்டன்ட் மாப்பிள்ளன்னு சும்மாயிருக்குற என்னைய புடிச்சு வச்சிக்கிட்டு எல்லாரும் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க!" என்றான்.

"சரிடா.... அப்டியே அவ KL பிடிக்காம, அவ அப்பா அம்மாவோட இருக்கப்பிடிக்காம இங்க வந்ததா இருக்கட்டுமே? இப்ப என்ன எதுக்கு? அவ ஒண்ணும் டீன்ஏஜ் பொண்ணு இல்லையே? உனக்கும் இப்ப கல்யாணம் பண்ணி வைக்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல! அப்புறம் இந்த விஷயத்துல உனக்கு என்ன பிரச்சன? உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா?" என்று கேட்ட சந்தனாவிடம் ஆமென்றும் சொல்லாமல் இல்லையென்றும் சொல்லாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தான் ஜெபா.

"மோனே.... நாங்க பிரகாஷ் ஸார் வீட்ல இருக்கும் போது நீ அவருக்கு கால் பண்ணுன தானே? அவர்ட்ட சம்யுக்தா பத்தி விசாரிச்ச தானே? அந்தப் பொண்ணை நினைச்சு உனக்கு இருக்குற இந்த அக்கறை ஏன்டா நாளைக்கு உங்களுக்குள்ள காதலா மாறக்கூடாது?" என்று கேட்ட ஆலெனிடம்,

"பயமாயிருக்கு ஆலென்.......!" என்றான் தலைகவிழ்ந்த படி.

"மாமா.... நீங்க இருங்க! சேகர்ட்ட நான் பேசுறேன்!" என்று சொன்ன கதிர் ஜெபாவை சந்தனாவுடைய பெட்ரூமுக்குள் தள்ளி அந்த அறையின் கதவை லேசாக சாற்றினான்.

"என்ன சேகர் பிரச்சன உனக்கு?" என்று கேட்ட கதிரிடம்,

"அத்தான்..... நான் எல்லாத்துலயுமே ஆவரெஜ் பெர்ஸன் தான? எம்மேல எப்டி ஒரு பொண்ணுக்கு ஈர்ப்பு வர முடியும்? நான் வாங்குற சம்பளத்துல ஒரு பொண்ணையும் கூட வச்சு என்னால காப்பாத்த முடியுமா? இப்ப எல்லாமே ரொம்ப அட்ராக்டிவா இருக்குன்னு சொல்லிட்டு, நாளைக்கு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு இத்தூணூன்டு சம்பளத்த வச்சுக்கிட்டு என்னத்த நாம வாழ முடியும்னு எங்கம்மா அப்பாட்ட கேட்ட மாதிரியே அவளும் எங்கிட்ட ஒரு கேள்விய கேட்டான்னா நான் செத்துருவேன் அத்தான்! என்ன தான் இருந்தாலும் நிறைய பணத்தோடவே வாழ்ந்த பொண்ணு இல்லையா?" என்று கேட்ட ஜெபாவின் தோளைப் பற்றிய கதிர்,

"ஒண்ணும் பிரச்சனையில்ல சேகர்! பணம் தான் முக்கியம்னா அவ அப்பா அம்மாவோடயே இருந்துட்டு மலேசியாவுலயே யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணியிருக்கலாமே? அத அந்த பொண்ணு பண்ணலையேடா? சந்தோஷமான ஒரு லைஃப் வாழுறதுக்கு தான்டா அவ ஆசைப்படுறா. நீ முதல்ல உன் காம்ப்ளெக்ஸ தூக்கிப் போடு; ஒரே ரூமுக்குள்ள நான் கர்த்தரையும் வச்சுக்குறேன். கந்தசாமியையும் வச்சுக்குறேன்னு நீ முடிவெடுத்துட்டா இந்த கல்யாணம் ஈஸி தான்... நீ அதையும் தான் மனசுக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டு இருக்கன்னு நினைக்குறேன்!" என்று சொன்னான்.

"அதுவும் தான் அத்தான்! உனக்கு பிடிச்சவங்கள நீ கும்பிட்டுக்கன்னு அவ சொல்லுவாளா? யாருக்காகவும் என்னால மாற முடியாது! இதெல்லாம் அந்த பொண்ணுட்ட விளக்கி,  அவளோட பதிலைக் கேட்டு இது ரொம்ப கஷ்டமாயிருக்கே அத்தான்!" என்று சொன்ன ஜெபாவிடம்,

"போடா... முதல்ல அந்த பொண்ணு கிட்ட போய் பேசு!" என்று சொன்னான்.

"ம்ம்ம்!" என்று தலையாட்டிய அவன் முகம் இன்னும் தெளிவடையாமல் இருந்தது.

அலைபேசியை எடுத்து பிரகாஷிற்கு கூப்பிட்டவன், "அங்கிள்.... சம்யுக்தா கிட்ட நான் ஒரு பத்து நிமிஷம் பேசணும். அவங்கள ஈவ்னிங் ஆறு மணி பக்கத்துல காஃபி ஷாப்புக்கு வரச்சொல்றீங்களா?" என்று ஒரு காஃபி ஷாப்பின் இடத்தை அவரிடம் ஜெபா சொல்ல பிரகாஷ் தன்னுடைய பேத்தியை அங்கு அனுப்பி வைப்பதாக அவனிடம் சொல்லி விட்டு வைத்தார்.

பேசியது போல் மாலை ஆறு மணியளவில் ஒரு காஃபி ஷாப்பில் அவளை சந்தித்தவன்,

"என்ன சம்யுக்தா இதெல்லாம்? என்ன பண்ணி வச்சிருக்க என் லைஃப்ல?" என்று எடுத்த எடுப்பிலேயே அவளிடம் கேட்டான்.

"பரவாயில்லயே.... தம்பின்னு சொல்றது போயி இப்ப அத்தை, சித்தி இப்டி ஏதாவது சொல்லி கூப்டுவீங்கன்னு நெனச்சேன். நீங்க அழகா என் பேரையே சொல்லி கூப்டீங்களே? உங்க லைஃப்ல நான் என்ன பண்ணி வச்சேன்? உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சு மொறையா உங்க பேரெண்ட்ஸ் கிட்ட பெர்மிஷன் கேட்டோம்; அவங்களுக்கு ஓகே; உங்களுக்கும் ஓகேன்னு சொன்னீங்கன்னா சந்தோஷமா இருக்கும்!" என்று சொன்னாள் சம்யுக்தா.

"இங்க பாரு.... பொறந்ததுல இருந்து கொஞ்ச வருஷம் வரைக்கும் நாங்க பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ப்ராட் அப்ல வளந்தோம்! திடீர்னு திரும்பி பாத்தா எங்க லைஃப்ல பணமே இல்ல! அப்போத்துலேர்ந்து எனக்கு இந்த பணத்த பாத்தாலே கொஞ்சம் அலர்ஜி! அதுனால தேவைக்கு மட்டுந்தான் எங்க வீட்ல பணம் இருக்கும்; உனக்கு அது பரவாயில்லயா?" என்று கேட்டான்.

"அந்த கேரக்டர் தான் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்சதே.... மாத்தி கீத்தி தொலைஞ்சுடாதீங்க. வாழ்க்கையில பெரிசா வரணும்னு நினைச்சுட்டு பணத்த விரட்டிக்கிட்டு ஓடாதீங்க.... ஐ மீன் இட்!" என்றாள் தீர்மானமாக.

"என்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்ற அளவுக்கு எங்கிட்ட உனக்கு என்ன பிடிச்சது?" என்று கேட்டவனிடம்,

"கண்டிப்பா இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் சம்யூ.

"நான் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொன்னா தான கல்யாண விஷயத்துல என்னால ஒரு முடிவுக்கு வர முடியும்?" என்று கேட்டவனின் வாதமும் நியாயமாக இருக்கவே "ஓகே சொல்றேன்!" என்றவள்,

"பசங்க பாயிண்ட் ஆஃப் வ்யூல நான் ரிஜக்டட் பீஸ் மிஸ்டர் ஜெபா! ஒரு பையன் எம்பக்கத்துல வர்றான்னா ஒண்ணு ப்ளாட் செஸ்ட்னு கிண்டல் பண்ணுறதுக்காக இருக்கும்; இல்ல.... நீ எப்டி இருந்தா என்ன? வா நாம ஜாலியா இருக்கலாம்னு கூப்டுறதுக்கா இருக்கும். ஒரு நல்ல ஆம்பளையோட கேரிங் எப்டி இருக்கும்னு நான் எங்கப்பா கிட்ட கூட ஃபீல் பண்ணதில்ல. தாத்தா அப்பப்ப பேசுவாரு! பட் அதுவும் த்ரூ வீடியோ சேட்ங்குறதால எனக்கு அதுலயும் பெரிசா அன்பு ஃபீல் ஆகாது! பட் பர்ஸ்ட் டைம் உங்களுக்கு அறிவில்லயான்னு நீங்க திட்டுன திட்டு கூட அவ்ளோ ஜெனியூஇனா இருந்தது! டேய் தம்பின்னு நீங்க என்னைய கூப்ட்ட வார்த்தையில சத்தியமா கிண்டல் இல்ல..... நான் உங்கள கீழ தள்ளி
உங்களுக்கு அடியே பட வச்சப்ப கூட யூ ஆர் ஸோ காம்! எவ்ளோ பொறுமையா ஹோம் பத்தி இன்ஞ்ச் பை இன்ஞ்ச் எங்கிட்ட தகவல்கள சொல்லிட்டு இருந்தீங்க? போடீ... நான் என்ன உனக்கு வேலைக்காரனா இல்ல உன் தாத்தாவுக்கான்னு ஒரு வார்த்த கூட கேக்கல. இந்த மாதிரியான உங்க கேரக்டர்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஸோ ஐ ஸ்டார்டட் லவ்விங் யூ!" என்று பெரிய விளக்கம் கொடுத்தவளிடம் சற்றே தடுமாறியவன்,

"எங்க ஆலென் சர்ச்சுக்கு போறத என் அம்மா வேண்டாம்னு சொன்னதில்ல! எங்க அம்மா கோவிலுக்குப் போனத ஆலெனும் வேண்டாம்னு சொன்னதில்ல. நீயும் நானும் அந்த மாதிரி இருப்பமா?" என்று கேட்டான்.

"ஓ... கண்டிப்பா! கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்த ஈடுபாடு இதெல்லாம் ஒருத்தர் எப்டி வளருறாங்களோ அது மூலமா வர்றது! அத மாத்திக்குங்கன்னு சொல்றதோ, இல்ல விட்டுடுங்கன்னு சொல்றதோ என்னைப் பொறுத்தவரைக்கும் தப்பு! நீங்க மட்டுமில்ல நாளைக்கு உங்களுக்கு ஐ மீன் நமக்கு கொழந்தைங்க பிறந்தா கூட அவங்களும் க்ரிஸ்டியானிட்டி தான் பாலோ பண்ணனும்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது அவங்களுக்கும் பிடிச்சிருந்ததுன்னா தாரளமா பண்ணட்டும்!" என்று தோள்குலுக்கினாள் சம்யுக்தா.

இவனது அனைத்து கேள்விகளுக்கும் அவளிடம் ஒரு பதில் இருந்ததே அவனுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. இவளை வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணம் கூட இல்லையா என்று தேடிக் கொண்டிருந்தவன்

"அவ்வளவுதானா?" என்று அவளிடம் சற்றே கோபமாக கேட்டான்.

"வேறென்ன.....?" என்று தலையை சரித்துக் கேட்டாள் சம்யூ.

"எனக்கு இதுல முன்ன பின்ன எக்ஸ்பீரியன்ஸ் இல்ல.... பட் முன்னால ரெஸ்டாரெண்ட்ல
டெலிவரிக்குப் போறப்ப வர்றப்ப எல்லாம் ரோட்ல போற வர்ற பொண்ணுங்கள நிறைய சைட் அடிச்சுருக்கேன். அவங்கள ஒரு டிஸ்டர்பென்ஸூம் பண்ணாம அழகா இருந்தாங்கன்னா கண்ணால ரசிச்சுட்டு அப்டியே கடந்து போயிடுறது....!" என்று சொன்னவனின் பேச்சைக் கேட்டு தன் சிரிப்பை அடக்கியவள்,

"ஓ! அப்ப உங்கள விட இந்த விஷயத்துல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி தான்!" என்று சொல்ல அவள் பேச்சில் கடுப்பானவன்,

"எ......தே! ஜாஸ்தியா?" என்று கேட்டு அவனுடைய பல்லைக் கடித்தான்.

"ஓகே.... ஓகே! ரிலாக்ஸ்.... எப்ப மேரேஜ் பண்ணிக்கலாம்?" என்று சிறு சிரிப்புடன் கேட்டாள் சம்யூ.

"நான் உனக்கு இன்னும் ஓகே சொன்ன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல!" என்று கடுகடுத்தவனிடம்,

"கொழந்தைங்க பிறந்தா கூட அவங்களும் க்ரிஸ்டியானிட்டிய பாலோ பண்ணட்டும்னு நான் சொன்னப்பயும் நீங்க இதெல்லாம் பேசாதன்னு சொன்ன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல!" என்று அவனது பிட்டை அவனிடம் திருப்பிப் போட்டாள்.

"உன்னை மாதிரி உடனே என்னால இதெல்லாம் யோசிக்க முடியல சம்யுக்தா..... கொஞ்ச நாள் ஆகட்டும். ஒரு நாலஞ்சு மாசம் நாம ப்ரெண்ட்ஸா இருப்போம். அதுக்கப்புறமா என்கேஜ்மெண்ட், கல்யாணம் இதெல்லாம் பத்தி யோசிக்கலாம்!" என்று சொன்னவனிடம் கடுப்புடன் உச்சுக்கொட்டியவள்,

"நாலஞ்சு மாசமா? எதுக்கு அவ்ளோ டைம் தள்ளணும் ஜெபா? அதுக்குள்ள ஒருவேள எங்க அப்பா இங்க வந்து என்னை KL க்கு வரச்சொன்னாருன்னா நான் என்ன பண்றது?" என்று கேட்டவளிடம்,

"இண்டியாவுக்குள்ள தமிழ்நாட்டுல நாகர்கோவில் ஊருல தான் உன் மாமியார் வீடு இருக்குன்னு அவர் கிட்ட தெளிவா சொல்லிடு! முடிஞ்சா நம்ம கல்யாணத்துக்கு வந்து விருந்து சாப்ட்டுட்டு ஆயிரத்து ஒருரூபா மொய் வச்சிட்டுப் போகச் சொல்லு!" என்று சொன்னவனை பார்த்து  புன்னகையுடன் கண்சிமிட்டினாள் சம்யுக்தா.

"ஏ.....ய்! இந்த கண்ண சிமிட்டுறது, இடுப்ப பிடிச்சுக்குறது, உதட்டை சுழிக்கிறது, பக்கத்துல வந்து உரசுற மாதிரி நிக்குறது இந்த வேலையெல்லாம் வச்சுக்க கூடாது புரியுதா?" என்றவனிடம் பவ்யமாக தலையாட்டியவள்,

"நீங்க ஒரு விஷயத்த மறந்துட்டீங்க!" என்றாள்.

"என்னது?" என்று சற்றே ஆர்வமாக கேட்டவனிடம்,

"இன்னும் நமக்கு என்ன வேணும்னு நீங்க ஆர்டர் பண்ணவேயில்ல! இருபது நிமிஷமா நாம எப்ப அவரக் கூப்பிடுவோம்னு வெயிட்டர் நம்ம டேபிளையே பாத்துட்டு நின்னுட்டு இருக்காரு!" என்று சொன்னவளிடம் சற்றே அசடு வழிந்தவன் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு காத்திருந்த பணியாளரை தன்புறம் அழைத்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro