
❤ சிறுநகை 96
அன்று ஆலெனும் சுமலதாவும் பிரகாஷ் வீட்டிற்கு மதிய விருந்துக்காக போயிருந்தனர். ஆலென் சுமலதா இருவரையும் பிரகாஷ் இன்று தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்திருந்தார்.
"எந்துக்கு ஆலென் திடீர்னு இந்த விருந்தெல்லாம்? நம்ம ரெண்டு பேரையும் கூப்ட்டு சாப்பாடு போட்டு என்னத்த புள்ளைய வளத்து வச்சுருக்கீங்கன்னு திட்டப் போறாரோ?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,
"என்னை விட வயசுல பெரியவர்மா! வீட்டுக்கு சாப்ட வாங்கன்னு கூப்டுறாரு! அவர் கிட்ட போயி எதுக்கு ஸார் சம்பந்தமே இல்லாம இப்ப இந்த விருந்துன்னா கேக்க முடியும்? எந்த விஷயமா இருந்தாலும் அங்க போனா என்னன்னு தெரிஞ்சுட்டுப் போகப் போவுது! நீ சொன்ன மாதிரி சோத்தப் போட்டுட்டு, என் புள்ளையப் பத்தி ஏதாவது தப்பா பேசுனாருன்னா ஜெபாவுக்கு நம்ம வேற வேல பாத்துக் குடுப்போம்..... கர்த்தரே..... A Family Man live like a Beggar and Die like a King ங்குற ஒரு வாசகத்துல இம்ப்ரெஸ் ஆகி நம்ம மரணம் ராஜாவோட மரணம் மாதிரி இருக்கும்ங்குற ஆசையில
உன்னைய கல்யாணம் பண்ணுனேன் சுமா.... ஆனா வாழ்க்கை பின்னால ஓடி ஓடியே டையர்டு ஆகிட்டேன்!"
"இப்ப தான் என் மாப்பிள்ள ஒரு திருப்திகரமான வேலையக் குடுத்துருக்காருன்னு நினைச்சு அத செஞ்சுட்டு இருந்தா, அதுக்குள்ள உன் பையன் ஒரு பஞ்சாயத்த இழுத்துட்டு வர்றான். என்ன நடக்குமோ தெரியல. போய்ப் பார்ப்போம் வா!" என்று சொன்னவர் தன்னுடைய மனைவியிடம்,
"அப்டி என்ன கஷ்டப்படுற நீ? எப்டி நீ இப்டி பேசலாம் ஆலென்?" என்ற
திட்டுகளை வாங்கியபடி அவரை அழைத்துக் கொண்டு பிரகாஷின் வீட்டிற்கு சென்றார்.
"வா ஆலென்... பாத்து ரொம்ப நாளாகிடுச்சு! எப்டியிருக்க?" என்று கேட்டு ஆலெனை கட்டிக் கொண்ட பிரகாஷ் சுமலதாவிடம் வணக்கம் கூறி "உள்ள வாங்கம்மா!" என்று அழைத்தார்.
ஒரு வீட்டினுடைய செருப்பு ஸ்டாண்ட் இருக்கும் நிலையை வைத்தே இந்த வீடு எந்த வகையிலான சுத்தத்தில் இருக்கும் என்று கணிக்கும் சுமலதா அந்த வீட்டினுடைய செருப்பு ஸ்டாண்டின் ஒழுங்குக்கு 9.9 மதிப்பெண்கள் கொடுத்தார்.
"ஆலென்.... பாரு! ஒத்தையாளு..... வீட்ட சும்மா கண்ணாடி மாதிரி பளபளன்னு வச்சுருக்காரு; நம்மளும் தான் வச்சுருக்கமே நம்ம வீட்ட.....!" என்று முணங்கிய தன்னுடைய மனைவியிடம்,
"வந்த இடத்துல வாய வச்சுக்கிட்டு சும்மாயிரு சுமா.... நாம குசுகுசுன்னு பேசுறத பாத்துட்டு
பிரகாஷ் ஸார் ஒருவேள நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரப்போறேன்னு கிளம்பிடப் போறாரு! இவருக்கு சாப்பாடு போறதப் பத்தி ஒண்ணுமே பிரச்சனையில்ல.... ஆனா நீ சொன்ன மாதிரியே வீட்ட எப்டி வச்சுருக்கீங்கன்னு கேட்டாருன்னா தான் கஷ்டம்!" என்று சொன்ன தன்னுடைய கணவரை பயப்பார்வை பார்த்தார் சுமலதா.
"ஏய் சுமா இது யாரும்மா....? புதுசா ஒரு சின்னப் பையன்... ச்சீ பையன் இல்ல பொண்ணு!" என்று கேட்ட ஆலெனிடம்,
"உன் சீனியர் வீட்ல இருக்கிறவங்கள எனக்கெப்டி ஆலென் தெரியும்? இவருக்கு ஒரே ஒரு பையன்னு தான சொன்ன? அப்ப இந்தப் பொண்ணு அவரோட பேத்தியா இருக்கும்!" என்று ரகசிய குரலில் பேசிய சுமலதாவின் ஊகம்
பிரகாஷ் அவர்களுக்கு தன்னுடைய
பேத்தியை அறிமுகப்படுத்தவும்
சரியாக இருந்தது.
"ஹலோ ஆன்ட்டி; ஹாய் அங்கிள்! வெல்கம்.....!" என்று சொல்லி இருவருக்கும் தண்ணீர் கொடுத்த சம்யுக்தா பத்து நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் குளிர்பானம் எடுத்து வரட்டுமா, ஐஸ்க்ரீமில் அவர்களுக்கு என்ன ப்ளேவர்கள் பிடிக்கும் என்று சுமலதாவிற்கு வெனிலா மில்க்ஷேக்கும், ஆலெனுக்கு குளிரில்லாத அன்னாச்சி பழச்சாறும் கொண்டு வந்தாள்.
"அப்புறம் ஆலென்.... ஸாரிப்பா! உன் பொண்ணு கல்யாணத்துக்கு நீ என்னை இன்வைட் பண்ணி இருந்தும் என்னால வர முடியல. பிபி கொஞ்சம் படுத்தி ஒன் வீக் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். எப்டி இருக்காங்க உன் பொண்ணும், மாப்பிள்ளையும்?" என்று கேட்டவரிடம்,
"நல்லாயிருக்காங்க ஸார்..... மாப்ள பேமிலி சின்ன வயசுல இருந்து எங்களுக்கு தெரிஞ்ச பேமிலி தான்; அவர் முதல்ல எம்பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னாரு; அப்புறம் என் பொண்ணும் அவரை விரும்புனா! அதுனால கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் ஸார்....!" என்று சொன்ன ஆலெனிடம்,
"ஓ....!" என்று கேட்டு ஏதோ யோசனையில் இருந்தார் பிரகாஷ்.
"ஜெபா விஷயமா ஏதாவது பேசணும்னு கூப்டீங்களா ஸார்?" என்று கேட்ட ஆலெனிடம்,
"ஆமா ஆலென்.... என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி நான் அவள இங்கயே இண்டியாவுலயே வச்சுக்கலாம்னு முடிவு எடுத்துருக்கேன். ஜெபாவ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க ரெண்டு பேருக்கும், ஜெபாவுக்கும் என் பேத்திய பிடிச்சிருந்ததுன்னா நாம அவங்களுக்கு கல்யாணம் பத்தி வைக்குறத பத்தி யோசிக்கலாம்!" என்று நேரடியாக தான் பேச நினைத்த விஷயத்தை அவர்களிடம் சொன்னார் பிரகாஷ்.
ஜெபாவைப் பற்றி ஏதோ குறை கூறத்தான் தன்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறாரோ என்று நினைத்த ஆலெனுக்கும், சுமலதாவுக்கும் பிரகாஷ் கல்யாணப் பேச்சை பேசியதும் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்ற யூகம் கூட இல்லாததால் திடீரென அவர் கேட்ட கேள்வியில் சற்று திகைத்துப் போய் அமர்ந்திருந்தனர்.
"என்ன ஆன்ட்டி, அங்கிள்.... தாத்தா உங்க ரெண்டு பேரையும் கூப்ட்டு வச்சு இப்டி பெரிய ஷாக் குடுத்துட்டாரோ? இந்த பொண்ணையெல்லாம் எப்டிடா நம்ம வீட்டுக்கு மருமகளா முடிவு பண்றதுன்னு யோசிக்குறீங்களோ?" என்று புன்னகைத்த படி அவர்களிடம் கேட்ட சம்யுக்தாவிடம்,
"ச்சே ச்சே...... அப்டியெல்லாம் இல்லம்மா! உனக்கு என்னம்மா கொறச்சல்? நல்லா கனிவா பேசுற. ஒருத்தரோட தேவைய புரிஞ்சு நடந்துக்குற.....!" என்று சொல்லிக் கொண்டிருந்த ஆலெனிடம்,
"அதையெல்லாம் விடு.....
மேக்கப்பே போடாம இயற்கையாவே அழகாயிருக்கா ஆலென். என்ன இன்னுங் கொஞ்சம் chubby ஆ இருக்கலாம்! ஜெபா பக்கத்துல நிக்க வச்சா சின்ன ஏணி பக்கத்துல பெரிய ஏணி நிப்பாட்டி வச்ச மாதிரி இருக்கும்!" என்று சொன்ன சுமலதாவிடம் இருபது நிமிடங்கள் தன்னைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றிய முக்கிய விஷயங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லி விட்டாள் சம்யுக்தா.
"ஆன்ட்டி! எனக்கு தாத்தா ஆறுமாசம் டைம் குடுத்து உனக்குப் பிடிச்சவங்க யாராவது இருந்தா சொல்லு.... அந்த பையன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு சொன்னாரு! எனக்கு நிறைய சாய்ஸஸ் எல்லாம் கிடைக்கல ஆன்ட்டி! கண் முன்னால இருந்த ஒரு ஆப்ஷனான ஜெபாவே
பெஸ்ட் ஆப்ஷனா தான் இருந்தான்!"
"ஆகில்னு ஒரு மலேசியன் பையன் என்னோட கொஞ்ச நாள் டேட் பண்ணிட்டு இருந்தான்! அந்த ரிலேஷன்ஷிப்ப அடுத்த ஸ்டெப்புக்கு எடுத்துட்டுப் போகலாமான்னு நான் கேட்டப்ப அவன் என்னைப் பாத்து, எப்டி இப்டி எல்லாம் எங்கிட்ட பேச முடியுது உன்னால? எங்கிட்ட இருந்து நீ மேரேஜ எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணிடாதன்னு ரொம்ப க்ளியர் கட்டா சொல்லிட்டான். எந்த கமிட்மெண்ட்டுமே இல்லாம சுத்தலாம், பிடிக்குற வரைக்கும் ஒண்ணா இருக்கலாம், அது வரைக்கும் எல்லாம் பண்ணிக்கலாம்ங்குற ஐடியாவோட இருந்தான். ஆனா அவனோட அந்த டெஸிஷன என்னால ஏத்துக்க முடியல. சிம்பிளா அவனுக்கு ஒரு குட்பை சொல்லிட்டு வந்துட்டேன்!"
"என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு ரிலேஷன்ஷிப்னா அதுல ஒரு டெடிகேஷன் இருக்கணும், கமிட்மெண்ட் இருக்கணும்; உனக்கு நான், எனக்கு நீங்குற கேரிங் அண்ட் அபெக்ஷன் இருக்கணும். இதெல்லாம் எனக்கு ஜெபா கிட்ட இருந்து கிடைக்கும்னு தோணுது. உங்களுக்கு நான் ஓகேன்னு தோணுச்சுன்னா சொல்லுங்க.... நாம இத பர்தரா வெட்டிங்க் வரைக்கும் கொண்டு போகலாம். இல்லன்னாலும் ஒண்ணும் பிரச்சனையில்ல ஆன்ட்டி...! இப்ப வர்றீங்களா சாப்ட போகலாம்!" என்று சொன்ன சம்யுக்தாவிடம்,
"இல்லம்மா சம்யுக்தா.... இப்ப இல்ல; நான் ரெண்டு, மூணு பேர்கிட்ட கொஞ்சம் பேசணும்.... அதுக்கப்பறம் தான் லன்ஞ்ச் எல்லாம்! எனக்கு ஒரு ஹாஃப் அன் அவர் டைம் குடேன்!" என்று கேட்டார்.
"தாராளமா எடுத்துக்கோங்க அங்கிள்! அந்த ரைட் கார்னர்ல இருக்குறது தாத்தாவோட ரூம்! அங்க போய் கூட பேசுங்க!" என்று சொன்ன சம்யுக்தாவிடம் ஒரு சங்கடமான சிரிப்பை உதிர்த்தவர் எழுந்து அவள் காட்டிய அறைக்குள் சுமலதாவுடன் சென்றார்.
"தாத்தா! ஜெபா அப்பா அம்மாவ இப்டி திடீர்னு வீட்டுக்கு கூப்ட்டு நாம இதெல்லாம் பேசியிருக்கக் கூடாதோ? அவங்க முகமே ரொம்ப குழப்பத்தோட இருக்கு!" என்று சற்று கவலை நிறைந்த குரலில் பிரகாஷிடம் கூறினாள் சம்யுக்தா.
"வீட்டுக்கு கூப்டதெல்லாம் தப்பில்ல. அவங்க நம்ம கிட்ட இருந்து இப்டி ஒரு விஷயத்த எதிர்பார்த்துருக்க மாட்டாங்கடா யுகி! ஜாதி, மதம், வேற நாட்டுல வளந்த பொண்ணு, ஜெபாவோட சம்மதம் இப்டி அவங்க யோசிக்குறதுக்கு நிறைய விஷயம் இருக்குல்ல.... பொறுமையா இரு! அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அது எந்த முடிவா இருந்தாலும், நீ அத அக்செப்ட் பண்ணிக்கணும் யுகி!" என்று சொன்னவரிடம்,
"ஓகே தாத்தா!" என்று தலையாட்டினாள் சம்யுக்தா.
முக்கால் மணி நேரம் கழித்து அவள் முன்னால் வந்து அமர்ந்த ஆலென் சிறு புன்முறுவலுடன்,
"சம்யுக்தா உன்னை எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க எனக்கு, சுமா, என் மருமகனுக்கு, மகளுக்கு எல்லாருக்கும் சம்மதம்மா ஆனா ஜெபா கிட்ட மட்டும் நீ தாம்மா பேசணும்! அவனும் இதுக்கு சம்மதம் சொல்லிட்டா ஒரு பிரச்சனையுமில்ல!" என்றவரிடம்,
"தேங்க்ஸ் அங்கிள், தேங்க்ஸ் ஆன்ட்டி! நான் உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நீங்க எங்கிட்ட டெய்லி நிறைய பேசணும். எங்க ரெண்டு பேரையும் எந்த காரணத்துக்காகவும் தனிக்குடித்தனம் போங்கன்னு சொல்லக்கூடாது. இந்த ரெண்டு கண்டிஷன்ஸ்க்கும் ஓகேன்னா சொல்லுங்க.... நான் ஜெபா கிட்ட பேசுறேன்!" என்றாள் சம்யுக்தா.
"ஏன்ட்டி ஆலென் இதி? மருமகன்னா வந்தவுடனே தனியா போகணும்னு கேப்பாங்க! இந்த பொண்ணு என்ன வித்தியாசமா தனியா போகவே மாட்டேன்னு சொல்லுது? சூடு பங்காரம்.... நீக்கு ஏமனா பிச்சு பட்டிந்தா? (உனக்கு என்ன பைத்தியமா?)" என்று கேட்ட சுமலதாவிடம் புரியாத பார்வை பார்த்தவள்,
"புரியல ஆன்ட்டி.... பிச்சு பட்டிந்தான்னா என்னது?" என்று கேட்க ஆலென் அந்த பெண்ணிடம்,
"அது ஒண்ணுமில்லம்மா சம்யுக்தா! இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்களே? நீ சொல்றியே.... உனக்கு ரொம்ப நல்ல மனசுன்னு சொல்றா வேற ஒண்ணுமில்ல. பிரகாஷ் ஸார் வாங்க சாப்டலாம்!" என்று சொன்ன ஆலெனுக்கு சற்று நேரம் தான் கழித்து தான் நியாபகம் வந்தது இது அவர்களுடைய வீடு; அவர்கள் தான் நம்மை சாப்பிட அழைக்க வேண்டும் என்று!
இந்தக் குடும்பத்துடன் பழகுவதற்கு ஒரு விஷயம் கூட சிரமமாக இல்லை. அதனால் தன்னுடைய பேத்தியின் கணவனாக ஜெபாவே வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தவரை அவன் அழைத்தான்.
"அங்கிள் எங்க இருக்கீங்க? சம்யூவை இங்க எங்கயுமே காணும்? வீட்ல இருக்கீங்களா? அவங்க ஸேஃப் தான?" என்று கேட்டான்.
"எங்கூட தான் ஜெபா இருக்கா. நான் வீட்ல தான் இருக்கேன். ப்ரெண்ட்டுக்கு விருந்து குடுக்கணும்னு நினைச்சேன். அதான் அங்க வரல! நீ இன்னிக்கு மட்டும் தனியா வேலைகள பாத்துக்கோ!" என்று சொன்னவரிடம்,
"ஓகே அங்கிள்.... ஹாவ் அ நைஸ் டைம்!" என்று சொல்லி விட்டு அலைபேசியை பாக்கெட்டுக்குள் போட்டு விட்டு தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெபசேகரன்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro