Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 95

"டேய் தம்பி ரொம்ப வேலையா இருக்கியா?" என்று தன்னுடைய சட்டைக்குள் காற்றை ஊதிக் கொண்டு வியர்த்து வழிந்தபடி வந்தவனைப் பார்த்தவள் அவனை முறைக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த ஒரு முக்கியமான வேலையை மறந்து விட்டு அவன் வாயைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"ரொம்ப வெயில் இன்னிக்கு.... பேங்க் போயிட்டு வர்றதுக்குள்ள என் எனர்ஜி எல்லாம் மொத்தமா காலியாகிடுச்சு! நீ ஃப்ரீயா இருக்கியா? வேலையா இருக்கியாடா?" என்று கேட்டவனிடம்,

"இப்ப என்ன வேணும் உனக்கு?
கிச்சனுக்குள்ள போய் ஃப்ரிட்ஜ்ல இருந்து உனக்கு ஐஸ்வாட்டர் எடுத்து தரணும்... அதான? எடுத்துட்டு வந்து தர்றேன். அதுக்குப் பதிலா நீ என் ஸ்டோரிக்கு ஒரு ஸீன் சொல்றியா?" என்று கேட்டாள் சம்யுக்தா.

"இப்டி அடுத்தவங்க அறிவ புடுங்கி சீன் எழுதிட்டு, இத நானாத் தான் எழுதுனேன்னு சொல்றதுக்கு உனக்கு கொஞ்சம் வெக்கமா இருக்காதாடா தம்பி? இதுக்கு பதிலா நீ பேசாம மலேசியாவுக்கே திரும்பப் போயிடலாம்!" என்று சொன்னவனை கண்களில் வலியுடன் பார்த்தாள் சம்யுக்தா.

"ஏன் இப்டி நாளைக்கு செத்துப் போகப்போறவ மாதிரி லுக் விடுற?" என்று கேட்டவனிடம்,

"அப்பா லாயர்; அம்மா பீரியாட்ரீசியன்.... சும்மா பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காத; அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இருந்தும் நான் அநாதை தான்! 
வீட்ல முழு நேரமும் தனியா தான் இருக்கணும். ஏதோ கையில கிடைச்ச பயோமெடிக்கல் கோர்ஸ்ல சேந்து ஒரு டிகிரி! அதுவும் கருமம்.... முழு டெடிகேஷனோட எல்லாம் படிக்கல.
டிகிரி வாங்கிட்டும் கொஞ்ச காலம் அங்க பல்லைக் கடிச்சுட்டு சமாளிச்சேன். அதுக்கு மேல அங்க இருக்குறதுக்கே பிடிக்கல! இருக்கறதுல அர்த்தமும் இல்லன்னு தோணுச்சு..... அதான் இங்க வந்துட்டேன்; என் கஷ்டம் என்னன்னு தெரியணும்னா நீ
ஒருநாள் பூரா பூட்டுன வீட்டுக்குள்ளயே ஒக்காந்து பாரு... அப்பத் தெரியும் உனக்கு என்னோட பிரச்சனையும்; அதோட சீரியஸ்னெஸூம்.....!"

"எனக்கு அந்த வாழ்க்கையும் வேண்டாம், அந்த தனிமையும் வேண்டாம்! அந்த வாழ்க்கைக்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ சுகமாயிருக்கு!" என்று வந்த நாலாவது நாளில் அவனிடம் சொன்னவள் தான்..... அதற்கு பிறகு ஜெபா அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை. அவள் முகத்தைப் பார்ப்பதைக் கூட பெரும்பாலும் தவிர்த்து விட்டு இல்லத்தில் அவளுடன் ஒளிந்து பிடித்து விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான்.

சம்யுக்தாவிற்கு தான் அவனது ஒதுக்கம் எரிச்சலை தந்தது. இப்படி அவள் கதையைக் கேட்டதும் அவளிடமிருந்து ஒதுங்குவான் என்று தெரிந்திருந்தால் அவனிடம் தன்னைப் பற்றி சொல்லியே இருக்க மாட்டாள்! இந்த வளாகத்தில் அவளது வயதில் இருக்கும் ஒரே துணை..... அவனும் அவளிடம் முகம் திருப்பிக் கொண்டு சென்றது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் பேச மாட்டேன் என்பவனை மடியில் இழுத்து வைத்தா பேச முடியும் என்று எண்ணி ஜெபாவை அவன் போக்கில் விட்டு விட்டாள்.

இன்று மாலையில் பிரகாஷிடம்,  "தாத்தா..... நம்ம ஹோம்ல எல்லாரும் நான் எழுதுன ஹாரர் ஸ்டோரிய கேட்டு சிரிக்குறாங்க தாத்தா! என்னையப் பாத்தா ஒரு புரஃபொஷனல் ரைட்டர் மாதிரி தெரியலையா பிகாஸ்?" என்று பிரகாஷிடம் தன் நிலையைக் கூறி இல்லத்தில் இருந்தவர்களைப் பற்றி புகார் அளித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

"புரஃபொஷனல் ரைட்டரா? யாரு நீயா? காமெடி பண்ணாதடா யுகி!" என்று சிரித்த பிரகாஷிடம்,

"யோவ் ப்ரைட்டு.... யாருய்யா காமெடி பண்றா? உன் புள்ளையும், மருமகளும் என்னைய வீட்ல விட்டுட்டு விட்டுட்டு பரதேசம் போயிருவாய்ங்க! எப்பவாவது மூட் வந்து என்னோட சிலபஸ படிக்குற நேரம் தவிர எனக்கு வேற வேலை இருந்துச்சுங்குற.....? இந்த ரைட்டிங்க் தான்! இது தான் என்னோட ரிலாக்ஷேஷன்; பேஷன்; ஸ்ட்ரெஸ் பஸ்டர் எல்லாமே......!" என்று சொன்ன தன்னுடைய பேத்தியை அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தவர்,

"உன் பாட்டி இறந்தப்பயாவது நான் உன்னைய எங்கூடவே வச்சிக்குறேன்னு உங்கப்பன் கிட்ட சொல்லியிருக்கணும்டா யுகி! தனிமை ஒரு கொடூரமான அரக்கன் மாதிரியில்லடா நம்மள இம்சை படுத்தி கொல்லுது!" என்று கேட்டவரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள்,

"நீ ஏன்யா பேச மாட்ட? வயசானா நம்மள ஏதாவது ஓல்டு ஏஜ் ஹோம்ல சேத்து விட்டுடுவாங்கன்னு பயந்துக்கிட்டு, உனக்கு நீயே ஒரு ஹோம் கட்டிக்கிட்டு, அதுல ஒரு க்ரூப்ப வேற சேத்துக்கிட்டு எவ்ளோ ஹாப்பியா இருக்க? இதுல உன்னைய தனிமை அரக்கன் மாதிரி கொல்லுதா? தாத்தா.... பேசாம நீ எனக்கு ஒரு அலையன்ஸ் பாரேன்; நமக்கும் தான் 23 வயசு ஆகிடுச்சுல்ல..... இண்டியாவுல தான் கல்யாணம் ஒரு திருவிழா மாதிரி நடக்குதே? யாராவது ஒரு ராஜகுமாரன் வந்து "உனக்கு நான் இருக்கேன் பிரின்ஸெஸ். உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சு! இனிமே நாம சந்தோஷமா இருக்கப் போறோம் அப்டினு சொல்ல மாட்டானா தாத்தா?" என்று கண்களை சற்று விரித்தபடி பேசிக் கொண்டிருந்த தன் பேத்தியிடம்,

"வாயத் தொறந்து வச்சுக்கிட்டே கனவு காணாத.... வாய மூடு!" என்று சொன்னவர்,

"கல்யாணம்னா சாதாரண விஷயம் இல்ல. உங்கப்பன கேக்கணும்!" என்றார்.

"யாரு.... உன் புள்ளையவா? பத்தொன்பது வயசுலயே எங்கிட்ட சொல்லிட்டாரு! எவன வேணுனாலும் டேட் பண்ணிக்க; எவன வேணுனாலும் கல்யாணம் பண்ணிக்கன்னு! நானே எவனையாவது லைஃப் பார்டனரா செலக்ட் பண்ணி அவனும் நானும் எங்க அப்பாவையும், அம்மாவையும் மாதிரி இருந்தோம்னா அந்த லைஃப்க்கு மீனிங்கே இல்லன்னு நினைச்சுட்டு தான் இங்க ஓடிவந்தேன். எங்க காலேஜ்ல ஒருத்தன் என்னைய கொஞ்சநாள் டேட் பண்ணிட்டு வேண்டாம்னு வேற சொல்லிட்டான் பிகாஸ்!" என்று சொன்ன பேத்தியை இப்போது என்ன செய்யப்போகிறாய் என்ற பார்வையுடன் பார்த்தார்.

"என்னடா யுகி இதெல்லாம்? என்ன பணத்துக்கு பின்னால ஓடி ஓடி உங்கப்பனும், அம்மாவும் மெஷினாவே ஆகிட்டாய்ங்களா? எவன வேணாலும் கல்யாணம் பண்ணிக்கன்னு ஒரு பத்தொம்போது வயசு குழந்தைட்ட எப்டிடா சொல்லுவான் உங்கப்பன்? ------- இவன்லாம் ஒரு அப்பன்!" என்று கெட்ட வார்த்தையில் தன்னுடைய மகனை திட்டியவரிடம்,

"ரிலாக்ஸ் தாத்தா! நீ டென்ஷன் ஆனன்னா அப்புறம் உனக்கு பிபி அதிகமாய்ட போவுது! இப்ப நம்ம என்கேஜ்டா இருக்குறதுக்கு என்ன பண்ணலாம்?" என்று கேட்டாள் சம்யுக்தா.

"எப்ப உங்கப்பன் உங்கிட்ட அப்டி ஒரு வார்த்தய சொல்லிட்டானோ இதுக்கப்புறம் உன் கல்யாணம் என் பொறுப்புடா யுகி.... உனக்கு நான் ஆறு மாசம் டைம் தர்றேன்; ஆனா இந்த டேட்டிங் கருமம் இதுக்கெல்லாம் பெர்மிஷன் கிடையாது! இந்த ஆறு மாசத்துக்குள்ள உனக்கு ஏதாவது ஒரு பையன பிடிச்சிருந்ததுன்னா சொல்லு... தாத்தா அவனப் பத்தி விசாரிச்ச பிறகு உனக்கு கல்யாணம் பண்ணி வப்பேன். இல்ல நீயா யாரையும் பாக்கலன்னு சொன்னன்னா நாம உனக்கு அரேன்ஜ்டு மேரேஜ் பண்றதுக்கு ஸ்டெப் எடுக்கலாம்! என்ன சொல்ற?" என்று கேட்டவரிடம்,

"நீ சொல்ற ஐடியா ஓகே தான் தாத்தா! பாக்கலாம். என்னோட இண்டியன் பிரின்ஸ் எங்க இருக்கானோ தெரியல.....!" என்று சொன்னவள் தன்னுடைய கதைக்கான கதாபாத்திரங்களின் குணாதிசயங்களாக மனதிற்குள் தோன்றியதை தன்னுடைய டைரியில் குறித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"ஏய்.... எங்கடீ போற?" என்று கேட்ட கதிரை முறைத்தவள் "என்னை முக்கியம் இல்லன்னு சொன்ன எவனும் எனக்கு முக்கியம் இல்ல! அதான் நான் என் ப்ரெண்ட் கூட போய் படுக்கப் போறேன்!" என்று சொல்லி விட்டு கதிர் இருந்த அறையிலிருந்து கல்பனாவின் அறையை நோக்கி நடக்கப் போனவளை வயிற்றில் அணைத்து அவள் முதுகில் சாய்ந்திருந்தான் கதிர்.

"விடுறா என்னைய..... இல்லன்னா செம அடி வாங்கிருவ! சொல்லிட்டேன்!" என்று கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவளை தன்னுடைய முத்தங்களால் குளிர்விக்க முயற்சி செய்து கொண்டிருந்த கதிர் அந்த முயற்சியில் தோற்றுத் தான் போனான்.

அவன் கைகளில் அழுந்தக் கிள்ளியவள், அவன் வலியில் பிடியை லேசாக தளர்த்தவும் அவனைப் பின்புறமாக அப்படியே படுக்கையில் தள்ளி விட்டாள்.

"வீம்பம்மா....
இன்னும் என் மேல் கோபமா.....
கதிரு ரொம்ப பாவம்மா.... இப்டி
கோபப்பட்டால் ஆகுமா...?" என்று கரகரத்த குரலில் பாடியவனின் பாட்டை கேட்க முடியாமல் காதை மூடிக் கொண்டாள் சந்தனா.

"டார்லிங்! இந்த பெட்ரூமோட ராசி எப்டின்னு ஒரு ப்ராக்டிக்கல் டெஸ்ட் எடுத்து பாத்துடுவோமா?" என்று கண்சிமிட்டி படுக்கையை தட்டிக் காட்டி கேட்டவனிடம்,

"டேய்.... நீ சும்மா இருந்தா கூட பரவாயில்லடா! இப்டியெல்லாம் பேசுறப்ப தான்டா கூடக் கொஞ்சம் கொலை வெறியாகுது....!" என்றாள் கதிரின் சூபொ.

"வாடா செல்லம்.... மாமன் உன் கோபத்த சரி பண்றேன்!" என்று சொன்னவன் படுக்கையிலிருந்து எழுந்து அவளை அப்டியே சுற்றி வளைத்து படுக்கையில் கிடத்தினான்.

"என்னை விடுறியா? இல்லையா?" என்று அவனிடம் கேட்டு முரண்டியவளை இலகுவாக தன் கைகளுக்குள் அடக்கியவன்,

"ஏய்.... அங்கிட்டும் இங்கிட்டும் திமிராதடீ! அப்புறம் எங்கை, காலு பட்டு உன் உடம்புல எங்கையாவது இடிச்சிக்கும். அதுக்கும் என்னைய தனியா ஒருக்க திட்டிக்கிட்டு இருப்ப!" என்றான் சிரிப்புடன்.

"நீ எப்டிடா சஞ்சீவ் தான் உனக்கு முக்கியமானவன்னு சொல்லலாம்? அப்போ உனக்காகவே எல்லாத்தையும் யோசிச்சுட்டு
இருக்குற நான் யாரு?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,

"என்னுல பாதி!" என்றான் கதிர் மெல்லிய குரலில்.

"ஏய்...இதென்ன ஆம்லேட்ல பாதி, ஆஃப் பாயில்ல பாதிங்குற மாதிரி சொல்ற?" என்று சொன்ன சந்தனாவுடைய குரல் சற்றே இறங்கியிருந்தது.

"என் செல்ல சூபொ.... ஆஃப் பாயில எல்லாம் பாதியா பிய்க்க முடியாதுடீ! அப்டியே சுருட்டி லபக்குன்னு வாய்ல போட்டுக்கணும்!" என்று சொன்னவன் ஆஃப் பாயிலின் நியாபகத்தில் தன்னுடைய மனைவியின் கன்னத்தை ஒரு கடி கடித்து வைத்தான்.

"நீ என்னுல பாதின்னா நீன்னா நான் தான்; நான்னா நீ தான்! பிஸிக்கலா தான் ரெண்டு பேரு; ஆனா மனசால ஒண்ணு தான்! சஞ்சீவ் எங்கிட்ட நான் உங்க தம்பி தான? எனக்கு உங்ககிட்ட உரிமை இருக்குன்னு மட்டுந்தான் சொல்ல நினைச்சான். நீ தான் லூசு மாதிரி அவன் முக்கியமா நான் முக்கியமான்னு கேள்வி கேட்ட.....!

"நீ கேட்டது மொக்க கேள்வியா இருந்தாலும், அதுக்கு நான் நீ தான் முக்கியம்னு சொல்லியிருந்தா சஞ்சீவ் கண்டிப்பா டிஸ்டர்ப் ஆகியிருப்பான்.... ஏன்னா அவனோட காரெக்டர் அப்டி! என்னோட வசந்த கோகிலம் அப்டியில்ல.... தாட்பூட்னு குதிச்சாலும் மாமா மடியில உக்கார வச்சு தடவிக் குடுத்தா அப்டியே பால் மாதிரி மேலே ஏறி வர்றவ புஸ்ஸூன்னு போய் அடங்கிடுவா....  சஞ்சீவ நான் இப்டி கன்னத்தோட கன்னம் இழைஞ்சு, முத்தம் குடுத்து, மூக்க கடிச்சு வச்சு சமாதானப்படுத்த முடியாது. அது எல்லாத்தையும் நான் உங்கிட்ட செய்யலாம் இல்லடா தங்கமே?" என்று கேட்டவனிடம்,

"எ....தே! அவனுக்கு நீ முத்தம் குடுத்து மூக்க கடிக்க முடியாதா? லூசுப்பயலே..... எப்டிறா இப்டியெல்லாம் யோசிக்குற?" என்று கணவனிடம் கேட்ட சந்தனாவிற்கு அவனது பேச்சு மிகவும் சிரிப்பை வரவழைத்திருந்தது.

"என் சூபொவுக்கு கோபமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போயிட்டு இருக்கு போலிருக்கு?" என்று அவள் காதருகில் கேட்டு இறுகக் கட்டிக் கொண்டவனிடம்,

"ம்ஹூம்! அதெல்லாம் போகல...!" என்று சொன்னவளின் பதில் கொஞ்சல் மொழியாக மாறி வந்தது.

"வா வா.... இன்னிக்கு நைட் ரொம்ப ஸ்பெஷல் நைட்டா இருக்கப் போவுது நமக்கு! சண்ட போட்டு வேற சேத்து விட்டுருக்கோம்! டைரக்டா டெஸ்ட்டுக்கு போய்டலாமா? கொஞ்ச நேரம் விளையாடணுமா?" என்று கேட்டவனிடம் "லைட்ஸ் ஆஃப் பண்ணு!" என்று சொல்லி விட்டு அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள் கதிரின் சந்தானலஷ்மி.

படுக்கையறையின் ராசி எப்படி என்று பார்க்கிறேன் என ஆரம்பித்தவன் தன்னுடைய மனைவியிடம் காதல் பொங்க நிறைய விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro