Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 94

"இப்ப எதுக்கு தேங்க்ஸ எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க அண்ணி? கதிர் அண்ணாவுக்காக நான் இன்னும் நிறைய செய்யணும்! முதல்ல இருந்தே அவர் எங்கிட்ட பேசுறப்போ அவரோட பிஹேவியர்ல அவ்ளோ ஸாப்ட்னெஸ் தெரியும்! எனக்கு யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம்ங்குற மைண்ட்செட்ல நான் அவரோட அன்பை எவ்ளோ தடவ அவாய்ட் பண்ணியிருக்கேன் தெரியுமா? ஐ ஃபீல் கில்ட்டி அபௌட் தட்! எங்க வீட்ல எல்லாம் நான் எல்லாரோடயும் நார்மலா பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் தான் அவங்க என்னைய ஒரு மனுஷன் மாதிரியே ட்ரீட் பண்றாங்க! இல்லையின்னா எந்தங்கச்சி கூட என்னைப் பாத்து பயத்துல, வெறுப்புல முகத்தை திருப்பிக்குவா; ஆனா.... நான்
எவ்ளோ ஒதுக்குனாலும் கதிர் ப்ரோ என்னைய தப்பா நினைச்சதே இல்ல! இனி அவர் என்னை விட்டாலும்  இந்த லைஃப் முழுசுக்கும் நான் அவர விடுறதா இல்ல..... கதிர் தான் என் அண்ணா; நீங்க தான் என் அண்ணி!" என்று சொன்னவனிடமிருந்து சத்தியமாக இந்த மாதிரியான வார்த்தைகளை சந்தனா எதிர்பார்க்கவேயில்லை.

"என்ன மிஸ்டர் சஞ்சீவ் திடீர்னு அண்ணாங்குறீங்க? அண்ணிங்குறீங்க! நீங்க இப்டி பேசுற ஆளில்லயே? என்ன தான் பழகியிருந்தாலும் ஒரு லிமிட்ல தான ஆளுங்கள நிறுத்தி வப்பீங்க? என்னாச்சு உங்களுக்கு?" என்று ஆச்சரியமாக கேட்ட சந்தனாவிடம்,

"அறிவு வந்துடுச்சு அண்ணி" என்று  சொல்லி விட்டு புன்னகைத்தான் இளையவன்.

"ஓ..... அப்ப இத்தன நாள் அறிவில்லாம இருந்தீங்களா?" என்று அவனிடம் கேட்ட சந்தனா வேகமாக தன்னுடைய பின்புறத்தில் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

"நீங்க என்னை இப்டி பேசுறத அண்ணா கேட்டா உங்களுக்கு செம ரைடு விழும்.... அதான அண்ணி? பயப்படாதீங்க அண்ணா இன்னும் வரல!" என்று தோள்குலுக்கியவன் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணி போட்டதில் சந்தனாவிற்கு
பற்றிக் கொண்டு வந்தது. அவள் பயத்தை இவன் சரியாக கணித்து விட்டதிலும் தான்!

"சரி விடு சந்து.... ஏதோ ஆர்வக்கோளாறுல இந்த ட்டூத்பேஸ்ட் ஷாஷே அண்ணின்னு எல்லாம் கூப்ட்டு ஒரேடியா பொங்குறான்? இவனோட ஸ்டேட்மெண்ட் ஓகே தான்...! பட் ஆட்டிடியூட் தான் கொஞ்சம் இடிக்குது!" என்று நினைத்துக் கொண்டவளிடம்,

"சந்து அக்கா..... இப்ப நீங்க சஞ்சு கிட்ட கேட்ட மாதிரி இனிமே ஒருக்க
பேசாதீங்க! எனக்கு கஷ்டமாயிருக்கு!" என்று சொன்ன குணாளினியிடம்,

"சரி தான்.... இவ வேற இங்க இருக்குறத மறந்து போய்ட்டோம் போலிருக்கே சந்து!" என்று நினைத்த சந்தனா அவளிடம் சிநேகமாக புன்னகைத்து விட்டு சஞ்சீவைப் பார்த்தாள்

"உங்களோட இந்த சேன்ஜ் ஓவருக்கு உங்க பக்கத்துல ஒக்காந்துருக்குற மிஸஸ் சஞ்சீவ் தான் காரணமா சஞ்சீவ்?" என்று கேட்க சஞ்சீவ் ஒரு புன்சிரிப்பை உதிர்த்தான்.

"ஆமா அண்ணி! எப்டி கதிர் ப்ரோவோட சேன்ஜ் ஓவருக்கு அவர் பக்கத்துல இருக்குற நீங்க காரணமோ அதே மாதிரி தான் எங்களோட கதையும்!" என்று சொன்னவனிடம் இனிமேல் வாயைக் குடுக்காமல் பேசாமல் அமர்ந்திருப்பதே சாலச்சிறந்தது என்று நினைத்தாள் சந்தனா.

"என்ன இன்னும் இவன காணும்? பாத்ரூமுக்குள்ள போய் ஒறங்கிட்டானா? இந்தப் பையனோட வழுக்கி விடுற பாசத்த பாத்து நம்மாளு என்ன ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலயே? அந்த ஷாஷே மண்டையன கட்டி கிட்டி புடிச்சான்னா உனக்கு கோபம் வருமே சந்து? அதுசரி.... அந்த திமிங்கலத்துக்கு உன்னைய ரொம்ப பிடிக்குமா இல்ல சஞ்சீவ ரொம்ப பிடிக்குமா சந்து?" என்று அவளது ஒரு ஓரமூளை கேட்ட கேள்வியில் சந்தனாவின் சாண்டல் சாத்தான் மோட் ஆரம்பமானது.

"வரட்டும்! வர்றவன் எதுத்து ஒக்காந்துருக்குறவனோட பேச்சைக் கேட்டு கண்ணு கிண்ணு கலங்கட்டும்! அப்டியே அந்த கண்ணை நோண்டிடுறேன்!"
என்று  அவன் சூனியபொம்மை என்று கூப்பிடுவதற்கு ஏற்றாற்போல பக்காவாக யோசித்தவள், "வாடா நீ வாடா! அப்புறம் தெரியும் சங்கதி!" என்று
நினைத்துக் கொண்டு கதிருக்காக காத்திருந்தாள்.

அவன் வந்ததும், "என்ன சாப்டுற?" என்று கேட்டாள். கதிர் தனக்கு மீல்ஸ் போதும் என்று சொல்லிவிட
அவளுக்காக ப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்தவள் உணவு வந்த ஐந்தாவது நிமிடத்தில் கதிருடைய மீல்ஸ் ப்ளேட்டில் இருந்த பாயாசத்தை பார்த்து "கதிர் உன் பாயாஸம் எனக்கு வேணும்!" என்று சொல்லி விட்டு தன்னெதிரில் அமர்ந்திருந்த சஞ்சீவை ஒரு கெத்தான பார்வை பார்த்தாள்.

"உன்னோட அண்ணா சென்டிமெண்ட் எல்லாம் எங்கிட்ட செல்லாது தம்பி!" என்று சொல்வது போன்ற ஒரு திமிரான பார்வை. இத்தனை மாதங்களில் தன்னுடைய அண்ணனின் மனங்கவர்ந்த பெண்ணுடைய இயல்பை அறியாதவனா சஞ்சீவ்?

"கதிர் அண்ணா யாரு பக்கம்னு இப்போ பாக்கலாமே அண்ணி?" என்ற மாதிரியான ஒரு சிறு தலையசைப்புடன் கண்களால்
சிரித்தவன் கதிரிடம்,

"அண்ணா.... உங்களோட பாயாஸம் எனக்குத் தான் வேணும்!" என்று கேட்ட போது சஞ்சீவுடைய வார்த்தையில் கதிருடைய வாயில் இருந்த சோறு புரையேறிக் கொண்டது.

"ஏ......ய்! மெதுவா.... தண்ணி குடிடா!" என்றவளிடம் தலையசைத்து தன்னுடைய செயலுக்கு ஸாரி சொன்னவனிடம் இவனுக்காக ஏன் இப்படி ரெண்டு பேரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று விளங்காத பார்வை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் குணாளினி.

"சஞ்சீவ்.... என்னடா சொன்ன? தம்பின்னா?" என்று மறுமுறை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்த கதிரிடம்,

"ஆமாண்ணா நான் உங்க தம்பி தான?" என்று கேட்டான் சஞ்சீவ்.

"ஆமா...! இதுல என்ன சந்தேகம் உனக்கு?" என்று யோசிக்காமல் சொன்ன தன் கணவனிடம்,

"டேய் ரேஷன்.... நான் உன் பொண்டாட்டி தான? உனக்கு என்னைப் பிடிக்குமா இல்ல இவனப் பிடிக்குமா?" என்று கேட்டாள் சந்தானலஷ்மி.

"சஞ்சீவையும் பிடிக்கும்! லஷ்மியையும் பிடிக்கும்.... ஆனா யாரை ரொம்ப பிடிக்கும்னு கேட்டன்னா சஞ்சீவ தான் பிடிக்கும்!" என்று பதில் சொன்ன தன்னுடைய கணவனிடம் "டேய்...!" என்று அதிர்ந்து போய் சத்தம் போட்டிருந்தாள் சந்தனா.

"ஷ்ஷ்! அமைதியா இருடீ.... இது பொது இடம்!" என்று சொன்னவனிடம்,

"தெரியுது! அதுனால தான் இன்னும் கம்முன்னு கைய கட்டிக்கிட்டு ஒக்காந்துட்டு இருக்கேன்!" என்றாள் சந்தனா.

"எதுக்கு இப்ப இவ்ளோ ஷாக் ஆகுற? ஒருதடவ நீ கடுப்பாகி எங்கப்பன் கிட்ட இவன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லப் போனியா இல்லையாடீ? எப்டிறீ நீ விட்டுட்டுப் போயிடுவேன்னு சொல்லலாம்?" என்று கேள்வி கேட்டான் கதிர்.

"இந்தா.... ஆரம்பிச்சுட்டான்ல? 
அப்டிப் பார்த்தா இந்தா எதித்தாப்ல ஒக்காந்துருக்குற ப்ரகஸ்பதி கூடத்தான் நான் உங்களோட பார்மர் எம்ப்ளாயி! எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு. என்ன தான் பேசுனாலும் நானும், இவரும் உன்னைய விட்டுட்டு எங்கயும் போகல. உன் கூடவே தான் இருக்கோம்! அதுனால இந்தப் பாயாஸம் யாருக்கு?" என்று பாயாஸத்தை முறைத்துப் பார்த்த படி அவனிடம் கேட்டவளிடம்,

"எந்தம்பிக்கு தான்டீ பாயாஸம்!" என்று சொல்லி சஞ்சீவின் கைகளில் பாயாஸ கிண்ணத்தை திணித்தான் கதிர்.

அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த நால்வரும் இவர்களுடைய காரசாரமான உரையாடலை ஏதோ தூர்தர்ஷனில் ஞாயிறு மாலை போடும் படத்தைப் போல சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ம்மா.... அத்த பாவம்! நீ குடு பாயாசம்!" என்று சொன்ன இளமதியிடம்,

"உனக்கு கூட உங்க அத்தை போடுற சண்ட புரிஞ்சுருச்சா இளா குட்டி?" என்று கேட்டு சிரித்த கல்பனா தன்னுடைய நண்பியிடம்,

"ஏ புள்ள சந்து..... இந்த பாயாஸத்த கையில ஊத்தி லிக் பண்ணுனா நாலு உறிஞ்சுக்கு கூட வராதுடீ! பாயாஸம் தான வேணும் உனக்கு? இந்தா என்னோடத தாரேன் இரு!" என்று சொல்லி தன்னுடைய மீல்ஸ் தட்டில் இருந்த பாயாஸத்தை அவளிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

"ஏய் போயிருடீ பேசாம.... எங்களுக்குத் தெரியாது? இங்க பிரச்சன பாயாஸம் இல்ல.... வேற!" என்று சிடுசிடுத்த தன்னுடைய மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

"கத்தி ஸீன் போட்டு எல்லாரையும் உம்பக்கம் திரும்பிப் பாக்க வைக்காம சீக்கிரம் சாப்ட்டு முடி!" என்று சொல்லி விட்டு அவனுடைய வேலையில் கவனமாக இருந்தான்.

"அண்ணி! ஐஸ்க்ரீம் சாப்டுறீங்களா?" என்று கேட்டவனிடம்,

"வெடிப்புக்கு போடுற க்ராக் க்ரீம் வேணும்னா வாங்கிக்குடு! திங்குறேன்!" என்று வயிற்றுப் புகைச்சலில் சொன்னவள் தன்னுடைய கணவனுக்குப் பதிலாக ப்ரைடு ரைஸை மென்று கொண்டிருந்தாள்.

"போ.... மொறச்சது போதும்;
போய் கை கழுவிட்டு வா!" என்று சொன்னவனையும் ஏகத்துக்கு முறைத்து விட்டு சென்றாள் அவனது சூனியபொம்மை.

"அப்பப்ப சூப்பர் பொம்மயா இருக்கா! சில நேரத்துல சூனியபொம்மையாகிடுறா! அவ பக்கம் பேசாம போனதுக்கு
என்ன ஏழரைய கூட்டப் போறாளோ கடவுளே.....!" என்று பயந்து கொண்டிருந்தவனிடம்,

"அண்ணா..... நீங்க ஓகே தான? இந்த அண்ணாவும் ஓகே தான?" என்று கேட்டான் சஞ்சீவ்.

"ரொம்ப சந்தோஷமா ஓகே தான்டா! நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்ல; உனக்குப் பிடிச்சிருந்தா டேய் கதிருன்னு கூட கூப்டு! அதையும் சந்தோஷமா ஏத்துக்குவேன்டா தம்பி.....!" என்று சொன்ன கதிரிடம்,

"இல்ல.... நான் கொஞ்சம் பேசணும்!" என்றவன்,

இத்தன வருஷத்துல
நான் உங்கள ஒருதடவயோ ரெண்டு தடவையோ தான் அண்ணான்னு கூப்ட்டுருப்பேன். அப்பவும் நீங்க இன்னிக்கு மாதிரி தான் ஷாக் ஆகியிருக்கீங்க! பட் நான் உங்கள அண்ணான்னு கூப்டுறத நீங்க ரொம்ப எதிர்பாக்குறீங்க இல்லையா? உங்க கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு,
நீங்க ஆசைப்படுறத உங்களுக்கு குடுக்கணும்னு எனக்கு தோணுச்சு.
அதான் உங்க கிட்ட ஒரு ஸாரி கேட்டுட்டு இனிம உங்கள அப்டியே கூப்டலாம்னு நினைச்சேன்! சும்மா அண்ணிட்ட கொஞ்சம் விளையாடுனேன். தப்பா எடுத்துக்காதீங்க!" என்று அவள் கைகழுவ சென்ற நேரத்தில் கதிரிடம் சொன்னான் சஞ்சீவ்.

"தப்பா இருந்தா தானடா தம்பி  தப்பா எடுத்துக்க முடியும்...?  என்னோட விஷயம் எல்லாத்துலயும் லஷ்மி ரொம்ப பொஸஸிவ்... நம்ம கேக்காமலேயே ஆயிரம் செய்யுறவ, இந்த மாதிரி விஷயத்துல சில நேரம் குழந்தை மாதிரி தான் அடம் பிடிப்பா! உன் அண்ணிய நீ எதுவும் தப்பா எடுத்துக்காத! அப்புறம் நீ ஹாப்பி தானடா தம்பி?" என்று நலம் விசாரித்தவனிடம்,

"ரொம்ப ரொம்ப ஹாப்பி!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம் ஜனார்த்தனன் மெதுவான குரலில்,

"ஸார்.... நாங்களும் உங்க கூட தான் வந்துருக்கோம்! அது உங்களுக்கு நியாபகத்துல இருக்கா?" என்று கேட்டான்.

"கல்பனாக்கா கை கழுவப் போனவள காணும். அவள அங்க இருந்து எப்டியாவது தள்ளிட்டு வாங்க. இங்கருந்து சீக்கிரம் கிளம்புவோம்!" என்று பொறுப்பை துறந்த கதிர் மனைவியின் திடீர் கோபம் என்ன செய்யப் போகிறதோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro