
❤ சிறுநகை 92
அன்று சஞ்சீவ் தன்னுடைய வேலையை இயன்ற அளவுக்கு விரைவாக முடித்து விட்டு சென்னைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். கதிருடைய
சென்னை வீட்டை கல்பனாவிற்கு ரெஜிஸ்டர் செய்து தருவதற்காக அவன் சென்னைக்குப் போக வேண்டியதிருந்தது.
இன்று இரவு கிளம்பி விட்டால் நாளை காலையில் அங்கு சென்று
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கல்பனாவின் வீட்டில் இருந்து விட்டு திங்கட்கிழமை ரெஜிஸ்ட்ரேஷன் வேலைகளை முடித்து வர சரியாக இருக்கும் என்று நினைத்து கிளம்பிக் கொண்டிருந்தான்.
தன்னுடைய உதவியாளரிடம் இரண்டு நாட்கள் வரமாட்டேன் எனவும், செவ்வாய் அன்று வந்து வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியவன், தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.
கார் ஷெட்டையே பார்த்துக் கொண்டு வெளியே உலாத்திக் கொண்டிருந்தவள் அவனுடைய எண்ஃபீல்டின் சத்தம் கேட்டு துள்ளிக் குதித்துக் கொண்டு அவன் முன்னால் சென்று நின்றாள்.
"ஹாய் பொண்டாட்டி! இன்னும் தூங்கலையா நீ?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையாட்டியவள்,
"எனக்கு இத ஒரே ஒரு ரவுண்ட் ஓட்ட தர்றியா?" என்று தலைசரித்துக் கேட்டாள்.
"ஏன் அண்ணியும் நாத்தனாருமா சேந்து என் பைக்க ஒருதடவ கீழ போட்டு ஒடைச்சது பத்தாதா? மொதல்ல இத தூக்குற அளவுக்கு ரெண்டு பேரும் வளருங்க. அப்புறமா பைக் கிட்ட வாங்க!" என்றவனிடம் உச்சுக்கொட்டியவள்,
"நீயுந்தான் தென்னங்கீத்து மாதிரி வெடவெடன்னு இருக்க? நீ மட்டும் இத ஓட்டுற?" என்று வாதிட்டவளிடம்,
"நான் ஒல்லியா இருந்தாலும் ஸ்டெமினாவோட இருக்கேன்டீ குல்ஃபி! உங்க ரெண்டு பேர் கிட்டயும் அந்த எலிமெண்ட் மிஸ்ஸிங்க்!" என்றான் அவள் கணவன்.
"சரி சரி.... இதுல என்னைய ஒரு ரவுண்டாவது கூட்டிட்டுப் போயேன்!" என்று சஞ்சீவிடம் ஆசையாக கேட்டாள் குணாளினி.
"ம்ஹூம்! இட்ஸ் கெட்டிங் லேட்!நான் உடனே கிளம்பணும். மூணு நாள் நான் இல்லாம நீ எல்லார் கூடவும் ஜாலியா இரு. போயிட்டு வரட்டுமா?" என்று கேட்ட படி தன் வண்டியை நிறுத்தியவனின் பின்புறச் சட்டையைப் பற்றியிருந்தவள்,
"அப்டியே இங்கருந்தேவா கிளம்பப் போற? வீட்டுக்குள்ள வா. மூணு நாள் ஊருக்குப் போறேன்னு சொல்ற! போட்டுக்க சட்டை, பேண்ட், கொண்டு போக பேக் ஒண்ணுமே எடுத்து வைக்கலயே? நான் வேணும்னா உனக்கு லக்கேஜ் பேக் பண்ணி தரட்டுமா? ரூம்ல வந்து பத்து நிமிஷம் வெயிட் பண்ணு! நான் எல்லாத்தையும் எடுத்து வச்சுடுறேன்!" என்றாள் மெல்லிய குரலில்.
"ஸாரி டிம்பிள்! எனக்கு லக்கேஜ் எல்லாம் பேக் பண்ற பழக்கமே இல்ல! ஏதாவது ஊருக்கு கிளம்புனா அங்க போய் தான் ட்ரெஸ் எல்லாம் வாங்கிப்பேன்!" என்று அவளிடம் சொன்னான் சஞ்சீவ்.
"ஏன் அப்டி? வீட்டுக்குள்ள நிறைய ட்ரெஸ்ஸஸ் இருக்கு! வச்சு எடுத்துட்டுப் போக சூட்கேஸூம் இருக்கு! அந்த சூட்கேஸ கார்ல தூக்கி வைக்க ஆளுங்களும் இருக்காங்க..... பிறகு எதுக்கு ஊர்ல போயி ட்ரெஸ் வாங்கிட்டு? எங்கூட வா. ரூம்ல வந்து அஞ்சு நிமிஷம் உக்காரு!" என்று சொன்னவள் அவனை தங்களுடைய அறைக்கு அழைத்துச் சென்று அதற்கு பிறகு
பத்து நிமிடங்களுக்குள் அவனுடைய பெட்டியைக் கட்டி இருந்தாள்.
"தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்! இப்ப கிளம்பட்டுமா?" என்று அவளிடம் கேட்டு புன்னகைத்தான் சஞ்சீவ்.
"இரேன்..... அதுக்குள்ள கிளம்பவா கிளம்பவான்னுட்டு? கம்பெனியில என்ன டின்னர் இன்னிக்கு? நீ என்ன சாப்டேன்னு சொல்லவேயில்லயே?" என்று கேட்டாள் குணாளினி.
"டின்னர என்னைக்குடீ நான் கம்பெனியில சாப்ட்டேன்? வொர்க் முடிச்சு வரவே லேட் ஆகிடுச்சு.... ஸோ போற வழியில ஏதாவது பாத்துக்கலாம்னு தான் நான் சாப்பாடு பத்தி ஒண்ணும் பேசல!" என்று சொன்னான்.
"நீ சாப்டியான்னு உங்கிட்ட கேட்டேனே? நான் சாப்டேனான்னு எங்கிட்ட கேட்டியா நீ?" என்று குற்றம் சாட்டும் குரலில் சொன்ன குணாளினியிடம்,
"ஓ... அப்ப நீ இன்னும் சாப்டலையா? நான் ஊருக்கு கிளம்புனதுக்கு அப்புறம் போய் சாப்ட்டுட்டு வந்து படு!" என்றவனின் சட்டையை மறுபடியும் பின்புறத்தில் இருந்து இழுத்துப் பிடித்தாள் அவனவள்.
"சாப்ட்டுட்டு கிளம்பு சஞ்சீவ் ப்ளீஸ்.....!" என்று கெஞ்சிய தன்னுடைய மனைவியின் செயலைப் பார்த்து தன்னுடைய புன்னகையை இதழ்களுக்குள் ஒளித்துக் கொண்டவன்,
"எனக்கு டைமாச்சு டிம்பிள்! நான் கிளம்பணும்!" என்றான் அவசரக்குரலில்.
"டேய்.... அங்க உனக்கு திங்கக்கெழம தான வேல....? இன்னிக்கு நைட் கெளம்பி அங்க போயி என்ன செய்யப் போற? நான் வர்றேன்னு கேட்டாலும், அதுக்கும் சரின்னு சொல்ல மாட்டேங்குற.... உன்னைய மூணு நாள் பாக்காம எப்டி சஞ்சீவ்?" என்று கேட்டவளிடம் ஒருமாதிரியான பார்வையை செலுத்தியவன்,
"மூணு நாள் பாக்காம எப்டின்னா.... என்ன சொல்ல வர்ற? என்னைய நீ மிஸ் பண்ணுவேன்னு சொல்ல வர்றியா? இப்ப நான் உங்கூட வந்து சாப்டணுமா இல்ல ஊருக்குக் கிளம்பக் கூடாதா? எதுக்கு என்னை நிப்பாட்டி வச்சிருக்க?" என்று அவளிடம் கேட்டான்.
"ரெண்டுக்கும் தான்.... மூணு நாள் நீ என்னைய விட்டுட்டுப் போயிட்டா உன்னைய கொஞ்சம் இல்ல ரொம்ப மிஸ் பண்ணுவேன்!
சாப்ட்டு, நைட் தூங்கி முழிச்சுட்டு நாளைக்கு காலையில இங்கருந்து கெளம்பேன். அப்டியே மனசு மாறி
என்னையும் நீ ஊருக்குக் கூட்டிட்டுப் போனாக் கூட ரொம்ப சந்தோஷம்!" என்று கேட்டவளை உற்று நோக்கியவன்,
"அதெப்டிறீ? நீ எல்லோரோடையும்
ஊர் சுத்துறதுன்னா மட்டும் அந்நேரம் உனக்கு நான் நியாபகத்துலயே வரமாட்டேங்குறேன்! நான் தனியா வேலையா வெளிய போறப்ப உன்னையும் நான் கூட கூட்டிக்கிட்டே சுத்தணுமா? முடியாது. உன் உலகத்துல நீ சந்தோஷமா இரு. என் உலகத்துல நான் சந்தோஷமா இருக்கேன்!" என்று அவளிடம் தீர்மானமாக சொன்னான் சஞ்சீவ்.
"ஐயயோ.... டேய் என்னடா இது? என் உலகம், உன் உலகம்னு நடுவுல கோட்டப் போட்டு, இந்தப் பக்கம் நீ இருந்துக்க; அந்தப்பக்கம் நான் இருந்துக்குறேன்னு சொல்லுவ போல..... அதெல்லாம் செல்லாது. ஏதோ அறிஞ்சும் அறியாம ஒண்ணு ரெண்டு தப்பு நடக்கும்தான்; அதுக்குன்னு நீ வேணுமின்னே என்னைய விட்டுட்டு சென்னைக்கு கிளம்புவியா? நானும் வர்றேன்!" என்று கேட்டவள் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"நீ கெஞ்சுறத பாத்து எனக்கும் பாவமா தான் இருக்கு. பட் என்ன பண்றது டிம்பிள்? எனக்கு கெளம்புற மூட் வந்துடுச்சே? பாரு..... ட்ரெஸ் எல்லாம் போட்டு பெர்பெக்ட்டா நிக்குறேன். அப்புறம் என்ன? கிளம்ப வேண்டியதுதான?" என்று கேட்டவனின் டையை வேக வேகமாக அவிழ்த்து அவனுடைய சட்டை பட்டன்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குணாளினி.
"டை, ட்ரெஸ்ஸ எல்லாம் பாதி அவுத்து விட்டாச்சு.... இப்ப கிளம்ப மாட்டேல்ல?" என்று விழிவிரித்துக் கேட்டவளிடம்,
"ம்ஹூம்! கிளம்பிடுவேன். ஷர்ட் பட்டன அவுத்துட்டா என் மனசு மாறிடுமா? ரெண்டு செகண்ட்ல திருப்பி மாட்டுனா போச்சு.... அதுபோக வாட்ச், பெல்ட், பேண்ட், ஸாக்ஸ் எல்லாம் போட்டு நான் கிட்டத்தட்ட ரெடியா தான் நிக்குறேன்!" என்று கூறியவனிடத்தில் உச்சுக்கொட்டியவள் அவன் சொன்ன ஒவ்வொன்றாக கழட்டி எடுத்து வைத்து அவனுக்கு வார்ட்ரோபில் இருந்து ஒரு டீ ஷர்ட் மற்றும் நைட் பேண்ட்டையும் எடுத்துக் கொடுத்தாள்.
கிளம்புவேன் கிளம்புவேன் என்று ஒற்றைக்காலில் நின்று குதித்தவன் தன்னுடைய மனைவியிடத்தில் அவள் தனக்கு உதவி செய்வதற்கு வாகாக தன் கைகளையும், கால்களையும் காட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்.
"நைட் ட்ரெஸ் போடுற அளவுக்கு எல்லாத்தையும் கழட்டியாச்சு! இப்ப கிளம்ப மாட்டேல்ல?" என்று பாதி அவநம்பிக்கையுடன் கேட்டவளிடம்,
"ம்ம்ம்.... மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட முடியாது. எனக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு நீ
ஹெல்ப் பண்ணினதுக்கு ரொம்ப
தேங்க்ஸ் டிம்பிள்.... ஐ'ம் ஃபீலிங் கம்பர்டபிள்!"
"எனக்கு தந்த டீ ஷர்ட்டையும் ஷார்ட்ஸையும் நீயே பத்திரமா வச்சுக்க..... ஏன்னா எனக்கு உங்கிட்ட கொஞ்சம் வேலை இருக்கு!" என்று உள்ளாடைகளுடன் படுக்கையில் விழுந்து அவளைப் பார்த்து கண்சிமிட்டியவனிடம்,
"எ....து! இந்த கவிஞர்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடீ? சும்மா எப்பப்பாரு என் நெஞ்சுக்குள்ள நீ இருக்கன்னு ஹீரோ லவ்வர பாத்து பாடிக்கிட்டே இருக்குற மாதிரி எழுதுறாங்க? நீ எனக்கு நம்ம Sippo Fresh பாட்டில்ல கூட தெரியுற? உன்னைய எதுக்கு கஷ்டப்பட்டு நான் என் நெஞ்சுக்குள்ள எல்லாம் தேடணும்னு வழக்கமா ஒரு கத
விடுவியே.... அந்த வேலையா? திருடன்டா நீ.... இன்னிக்கு நைட்
ஊருக்கு கிளம்பலன்னு முதல்லயே முடிவு எடுத்துட்ட! கடைசி வரைக்கும் என்னைய கெஞ்ச வச்சு எனக்கு டென்ஷன் ஏத்திப் பாக்குறது தான் உன்னோட ப்ளான்.... அதான?" என்று கேட்டவளிடம் ஆமென தலையாட்டினான் சஞ்சீவ்.
"எங்க சொல்லாம கொள்ளாம அப்டியே வாசலோட கெளம்பிடுவியோன்னு நினைச்சு, எல்லாரோடயும் ஒக்காந்து சாப்டுறத கூட வேண்டாம்னு நினைச்சு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா நீ என்னைய இப்டி ஏமாத்துற! எனக்கு இப்ப வயிறு பசிக்குது! நான் சாப்புடப் போறேன் போ....!" என்றவளிடம்,
"ம்ஹூம்! வெக்கப்பட்டு வயிறுபசின்னுலாம் சொல்லி எங்கிட்ட இருந்து நீங்க எஸ்கேப் ஆக முடியாதுங்கம்மணி! இன்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் மிட்நைட் ஸ்நாக்ஸ் தான்; அது கூட எழுந்திரிச்சு போய் சாப்ட நமக்கு எனர்ஜி இருந்தா தான்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய பனியனை கழற்றி கட்டிலின் ஓரத்தில் வீசி எறிந்தவன் படுத்தபடியே குணாளினியை நோக்கி தன்னுடைய இரு கரங்களை நீட்டினான்.
கணவனது இந்த அழைப்பு எப்போதும் போல் இப்போதும் அவளுக்கு வெட்கத்தை கொடுத்தாலும், அவனது கைகளுக்குள் வந்து ஒண்டிக் கொள்ள குணாளினி மறுக்கவில்லை.
இதழ்கள் வலித்த முத்தங்களுக்கும், உடல் வலித்த தேடலுக்கும், இடை வலித்த கூடலுக்கும் கூட அவர்கள் உறங்கும் நேரம் வரை ஒருவருக்கொருவர் மறுப்பே சொல்லிக் கொள்ளவேயில்லை.
"உன்னைய விட்டுட்டு ஊருக்குப் போகப்போறேன்னு சொன்னா தான் எம்மேல உனக்கு லவ் வருமாடீ? இது தெரிஞ்சுருந்தா டெய்லி ஒரு ஊருக்குப் போகப்போறேன்னு உங்கிட்ட சொல்லியிருப்பேனே? அப்பா..... இன்னிக்கு பெல்ட்ட கழட்டுறதுல, பேண்ட்ட கழட்டுறதுல எல்லாம் உனக்கு என்ன வேகம் தெரியுமா? இந்த ஸ்பீட நீ பர்ஸ்ட் நைட்ல கூட எங்கிட்ட காட்டல!" என்று சொல்லி புன்னகையை வாய்க்குள் முழுங்கியவனிடம்,
"ச்சீ.. வாய மூடு! என்னவெல்லாம் பேசுற?" என்று அவன் வாயில் கைவைத்தவள் சற்று யோசித்து விட்டு, "ஏய் லூசு..... நம்ம பர்ஸ்ட் நைட்ல நீ பேண்ட் ஷர்ட்டே போடலடா! வேஷ்டி சட்டை தான் போட்ருந்த!" என்று அவனுக்கு நினைவூட்டினாள்.
"நான் சொன்னது நம்மளோட ........ பர்ஸ்ட்டு நைட்டப் பத்தி டிம்பிள்!" என்று அழுத்தமாக சொன்னவனிடம் முகம் சிவந்து,
"போதும் வாய மூடு!" என்று சொல்லி மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்.
"ஏய்.... எங்கிட்ட காலையில இருந்து நைட் வரைக்கும் எல்லா விஷயத்துக்கும் ஒப்பீனியன்ஸ் அண்ட் சஜஷன்ஸ் சொல்ற என் பொண்டாட்டிக்கு லவ்மேக்கிங்ல மட்டும் எப்டிதான் இவ்ளோ வெக்கம் வந்துடுதோ? தெரியல..... நீ உன் சிரிப்ப உதட்டுலயே அடக்கும் போது உன்னோட கன்னக்குழி செம அழகா இருக்கடீ! நாள் பூரா இந்தக் குழிக்குள்ளயே விழுந்து கிடக்கலாம் போலிருக்கு!" என்று சொன்னவனுடைய கழுத்தில் தலை பதித்து அவனுடன் ஒண்டிக் கொண்டவள்,
"நானும் சென்னைக்கு வர்றேன்டா! ப்ளீஸ் என்னைய கூட்டிட்டுப் போயேன்!" என்றாள் ஆசையான குரலில்.
"உன்னை விட்டுட்டு எப்டிடீ தனியாப் போவேன்? நீ கூட இருந்தா, எவ்ளோ வேலை செஞ்சாலும் கொஞ்சங்கூட டயர்டாவே ஆகாது. சென்னைக்கு நீயுந்தான் வர்ற..... நான் இதுவரைக்கும் தனியா சுத்தி என்ஜாய் பண்ணுன இடத்தையெல்லாம் இனிமே நாம ரெண்டு பேரும் சேந்து சுத்திப் பாப்போம்!" என்று சொன்ன சஞ்சீவ் போர்வைக்குள் மறுபடி தன்னுடைய விரல்களுக்கு வேலை தரத் துவங்கியிருந்தான்.
"ஐயோ...... நான் எனக்குன்னு
ட்ரெஸ் எடுத்து பேக் பண்ணி
வைக்கவேயில்லயேஏஏஏஏ...!" என்று சொன்ன அவளுடைய இதழ்களை தன் கைகளால் அழுந்தப் பற்றி இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்
கொண்டிருந்தவன்,
"நைட் சாப்பாடே வேண்டாம்னு ஸ்கிப் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஒரு முக்கியமான வொர்க்கை பாத்துட்டு இருக்கோம்! இப்ப எதுக்கு உனக்கு தேவையே இல்லாத ட்ரெஸ் நியாபகமெல்லாம் வருது? இன்னொரு தடவ குல்ஃபி சாப்டலாம் வா!" என்று சொல்லி விட்டு அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த சைட் டேபிள் லேம்ப்பையும் அணைத்து விட்டான் குணாளினியின் காதல் கணவன்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro