Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 89

"எந்தன் முகம் காட்டும்...
புன்னகைகள் தீட்டும்...
மனதின் கண்ணாடி நீயே...

என்னை என்னை போலே...
ஏற்றுகொண்டதாலே...
எதிரொலியாகிடுவாயே...

கண்டதை பாடவும்...
கண்மூடி ஆடவும்...
என் துணை ஆகிட வந்தாயே...

சண்டைகள் போடவும்...
பின் வந்து கூடவும்...
ஆயிரம் காரணம் தந்தாயே...

வண்ணங்கள் நானே
நீ தூரிகையே...
இதய சுவரில்
இறைவன் வரையும்...
சிறுநகையே...

நந நநநா நாநநா
நந நநநா நாநநா!" என்று ஹெட்செட்டின் உதவியுடன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் ஒன்றியிருந்தவன் ஜெபாவை அந்நேரத்தில் மொட்டை மாடியில் கண்டதும்,

"வாடா சேகர்.... என்ன திருட்டு தம்மா?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"ம்ஹூம்! திருட்டு ட்ரீட்மெண்ட்; இன்னிக்கு அசிங்கமா ஒரு இடத்துல விழுந்து வாங்குனேன். வீட்ல சொன்னா எல்லாரும் கலாய்ப்பாங்க; அதுனால தான் மெல்ல மாடிக்கு வந்துட்டேன்.
மூக்கு வலிக்குது அத்தான்!" என்று கதிரிடம் சொன்னவன், தன்னுடைய கையிலிருந்த ஐஸ்கட்டியை கைக்குட்டையில் கட்டி மூக்கின் மீது ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தான்.

"என்னடா இது? மூக்குல அடிபடுற அளவுக்கு என்ன ஆச்சு? யார் கூடயாவது கட்டி உருண்டு சண்டை போட்டியா? நீ அதுமாதிரி வம்பு சண்டைக்கு எல்லாம் போற ஆளில்லயேடா? எதுக்கும் ஒருதடவ டாக்டர்ட்ட போயிட்டு வந்துடலாம்.... வர்றியாடா?" என்று கேட்ட தன்னுடைய அத்தானிடம் உச்சுக்கொட்டியவன்,

"ஆமா.... வார்ல கலந்துக்கிட்டு என் உடம்புல குண்டு பட்டுடுச்சு; டாக்டர் கிட்ட போய் உடம்ப காட்டுறதுக்கு! நீங்க வேற ஏன் அத்தான் சும்மா கடுப்ப கெளப்பிக்கிட்டு இருக்கீங்க? நா போயி கட்டி உருண்டு சண்டை போட்டேன்னா அத உங்க கிட்ட சொல்லியிருக்க மாட்டேனா? இது ஜஸ்ட் ஸ்லிப் ஆகி விழுந்து வாங்குன அடி.... சரி அத விடுங்க..... என்ன இங்க நின்னுட்டு தனியா பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க? உங்களோட ஜோடிப்புறா ரூமுக்குள்ள படுத்து தூங்கிட்டா போலிருக்கு! அதென்ன நடுராத்திரி வரைக்கும் புருஷனும் பொண்டாட்டியும் மைல்டான வாய்ஸ்ல ஏதோ பேசிக்கிட்டே இருக்கீங்க?" என்று கேட்டவனிடம் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியவன்,

"டேய்.... நாங்க பேசுறதெல்லாம் உனக்கெப்படி தெரிஞ்சுச்சு? பேசுறதுல எதையாவது தப்பித்தவறி கேட்டுத் தொ......!" என்று பதறிக் கொண்டிருக்க ஜெபா தன் அத்தானிடம் கைகாட்டி நிறுத்தி,

"கேக்கல.... கேக்கல! எதுவும் கேக்கல! பயப்படாதீங்க. மிட்நைட்க்கு மேல தான் நான் டீப் ஸ்லீப்புக்குள்ள போவேன். அதுவரைக்கும் உங்க ரெண்டு பேரோட பேச்சு ஏதோ தூரத்துல கேக்குற ரயில் சத்தம் மாதிரி தெளிவில்லாம கேக்கும். அவ்ளோதான்.... ரெண்டு பேரும் வேலைக்குன்னு ஓடிட்டே இருந்துட்டு ஈவ்னிங் கொஞ்சம் ரிலாக்ஸ்டாகி இங்க வர வேண்டியதிருக்கு; சாப்ட்டவுடனே எப்டி வீட்டுக்கு கிளம்புறதுன்னு தயங்கிக்கிட்டு இங்கயே ஸ்டே பண்ண வேண்டியதிருக்கு! அப்டி இருக்குற பட்சத்துல ஹால்ல படுத்துருக்குற என்னைய வேற சமாளிக்க வேண்டியதிருக்கு.... பாவம் அத்தான் நீங்க!" என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னான் ஜெபா.

"அப்டியெல்லாம் சொல்லாதடா சேகர்.... லஷ்மிக்கு அங்க இருக்குறது ஓகே தான்னாலும், அவ அப்பப்ப இங்கயும் வந்து தங்கணும்னு நினைக்குறாடா! அதுனால தான்..... ஒருசில நாள் டின்னர கணக்கு பண்ணி இங்க வந்துடுறது; நீ சொல்றதுக்கு முன்னாலயே உன்னையப் பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும்.
நாங்க இங்க வர்றப்ப உன்னைய சமாளிக்குறதுக்கும் ஒருவழி கண்டுபிடிச்சுட்டோம்!" என்று பெருமையாக ஜெபாவிடம் சொன்னான் கதிர்.

"அதுதான ஒண்ணு உள்ளூர் கேடின்னா இன்னொன்னு உலகமகா கேடி... இதுங்க ரெண்டுத்துக்கும் நம்மள மாதிரி ஒரு புள்ளப் பூச்சிய சமாளிக்குறதா கஷ்டமாயிருக்கப் போவுது?" என்று சடைத்துக் கொண்டவன்,

"ஏன் அத்தான்.... இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும். ஒரு நல்ல காதல் மனுஷன என்ன செய்யும்?" என்று கேட்டான்.

"டேய் என்னடா உன் ட்ராக்கே மாறுது? எப்பவும் இந்நேரம் கர்த்தர் நாமம் புகலிடமேன்னு பாட்டு கேட்டுக்கிட்டு இருப்ப.... இன்னிக்கு என்ன பேச்சு காதலப் பத்தி எல்லாம் போகுது?" என்று கண்சிமிட்டிக் கேட்டவனிடம்,

"கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க! அத விட்டுட்டு வெட்டிப் பேச்சு பேசாதீங்க!" என்று சொல்லி எரிச்சலடைந்தான் ஜெபா.

"நீ கேக்குறது ரொம்ப நல்ல கேள்வி தான்.... ஆனா பதில் தான் சரியா தெரியல. ஒரு நல்ல காதல் என்ன செய்யும்? எல்லா தப்பையும் மன்னிச்சு மறந்துடும்; நிறைய அன்பைக் கொடுக்கும். காதலிக்குறவங்களுக்காக விட்டுக் கொடுக்கும். மொத்தத்துல அப்பாடா எப்டியோ இது நம்ம கையில வந்து கிடைச்சிடுச்சுங்குற நிம்மதிய குடுக்கும்னு வையேன்!" என்றான் கதிர்.

"உங்க ரெண்டு பேரோட காதல்ல உங்களோடது நல்ல காதலா? இல்ல சந்துவோடது நல்ல காதலா அத்தான்?" என்று அடுத்த கேள்வி கேட்டவனை முறைத்த கதிர்,

"ஏன்டா..... லூசாடா நீ? சாமிக்கு வக்கிற பொங்கலுல வெல்லம் சேருற வரைக்கும் தான்டா அத கிண்டனும்! நீ பொங்கலெல்லாம் வச்சு முடிச்சு பானைய எறக்கி வச்ச பெறகும் போட்டு கிண்டிக்கிட்டே இருக்க..... எம்பொண்டாட்டி எம்மேல வச்சுருக்குற காதலையும்
நான் அவ மேல வச்சுருக்குற அன்பையும் நல்ல காதல், நல்லா இல்லாத காதல்னு பேரு வச்சு எல்லாம் என்னால சொல்ல முடியாது! நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம் சேகர்.... எங்கள நெனச்சு பயப்படாம, சந்தேகப்படாம, எதப்பத்தியும் யோசிக்காம நீ உன் வாழ்க்கையில அடுத்து என்னங்குறத பாருடா! மாமாவும், அத்தையும் இப்ப உங்கல்யாணத்த நெனைச்சு தான் ரொம்ப பயந்து போயிருக்காங்க! அது நடக்குமா, நடக்காதான்னே தெரியலயேங்குற மாதிரி பேசிட்டு இருக்காங்க!" என்று சொன்ன படி அவனுடைய தோளைப் பற்றிக் கொண்டவனிடம்,

"ம்ப்ச்! என்னையப் பத்தி வீட்ல எல்லாரும் அக்கறையா யோசிக்குறது சந்தோஷம் தான்! பட் கல்யாணம்.... தெரியல பாக்கலாம்!" என்று தன்னுடைய அத்தானிடம் சொல்லி சிரித்து விட்டு "கீழ போறேன் அத்தான்!" என்று சொல்லி விட்டு சென்றான்.

"என்னைய முழுசா கண்ட்ரோல்ல எடுத்து ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்குறதெல்லாம் அவ தான்..... ஆனா இன்னும் இந்தப் பையன் எத நினைச்சு இப்டி பயப்படுறான்னு தெரியலயே?" என்று நினைத்த கதிர் தனக்குள்ளாக சிரித்துக் கொண்டான்.

இப்படியே பனிரெண்டரை மணி வரையில் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தவன் அதற்கு பிறகு மெதுவாக அங்கிருந்து கீழே இறங்கி வந்தான்.

மெயின் கேட் பூட்டியிருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவன், வராண்டாவை கடந்து வீட்டிற்குள் வந்து லேசாக திறந்து வைக்கப்பட்ட க்ரில் கேட்டை பூட்டி விட்டு, கதவையும் சாற்றினான்.

அந்த இரண்டு சத்தத்திற்கும் ஜெபாவிடமிருந்து எந்த அசைவும் புறப்படாமல் மெல்லிய குறட்டையுடன் பேட்மேன் பெட்ஷீட்டுக்குள் முழுமையாக மறைந்து கிடந்தவன், நன்றாக அசந்த உறக்கத்திற்கு சென்று விட்டான் என்று உறுதிப்படுத்திக் கொண்டான்.

ஜெபா படுத்திருக்கும் இடத்திற்கு பக்கவாட்டில் இருந்த தன்னுடைய மனைவியின் அறைக்குள் பூனை போல மெல்லமாக அடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவன், அறைக்கதவை சாற்றி தாழ்ப்பாள் போட்டான்.

"ஒம்போதரையில இருந்து பனிரெண்டரை வரைக்கும் கிடைச்ச தூக்கத்துல இனி குறைஞ்சது ஒரு மணி நேரத்திற்கு என் சூப்பர் பொம்ம ஆக்டிவா இருப்பா!" என்று மென்குரலில் முணங்கிக் கொண்டவன் அவளுடைய கட்டிலில் அமர்ந்து அவளருகில் படுத்து அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டான்.

"ஏய் சூபொ..... எழுந்திரிடி!" என்று மெல்ல அழைத்து அவள் கன்னத்தில் தன்னுடைய மீசை உரசியவன்,

"உன் ரூமுக்குள்ள உன்னைய லவ் பண்ண வர்றதுக்கு நான் ஏதோ மிட்நைட்ல ஓட்டப் பிரிச்சு வீட்டுக்குள்ள இறங்குற திருடன் மாதிரி நிறைய ப்ளான் எல்லாம் போட வேண்டியதிருக்கு; டீன் ஏஜ் பையனை மாதிரி என்னைய ஜெபா முன்னால இப்டி வெக்கப்பட வைக்குறியேடீ? இருந்தாலும் இந்த விஷயம் அவ்ளோ ஜாலியா இருக்கு. எழுந்திரிடீ தூங்குமூஞ்சி....!" என்று அவளது அருகாமையினால் கொஞ்சம் கொஞ்சமாக சூடாகிக் கொண்டிருந்த தன்னுடைய மூச்சுக் காற்றை அவள் கன்னத்தில் தூது விட்டு தன்னவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான் கதிர்.

"ஆலென்...... இந்த மீன் பீஸ் எனக்குத் தான் வேணும்! என் ப்ளேட்ல அத வை டாடி!" என்று தூக்கத்தில் உளறியவளை ஓரக்கண்ணில் பார்த்து முறைத்தவன்,

"அடிப்பாவி.... கனவுல கூட மீன வாய்க்குள்ள போட்டு அதக்கிட்டு இருக்கியா?" என்று சிரிப்புடன் கேட்க அவனுடைய இதழ்கள் திடீரென சந்தனாவால் மெல்லப்பட்டன.

"டே...ய் கதிரு! மீனுன்னு நினைச்சு உன் உதட்டப் பிடிச்சு கடிச்சுக்கிட்டு இருக்குடா ஒம்பொண்டாட்டி!" என்று சொன்ன மனதிடம் மூளை,

"ம்ஹூம்... இந்த சூபொ நடிக்கிறா; சாப்பாடுன்னு நினைச்சு சாப்டணும்னா இப்டியா கரெக்டா மேல் உதட்டையும், கீழ் உதட்டையும் மாறி மாறி உறிஞ்சு எடுப்பா....?" என்று கேள்வி கேட்டது.

அவளுடைய முத்தத்தில் இருந்து தன் இதழ்களை விலக்கியவன்,

"ஏ.....ய் வீம்பம்மா! முத்தம் வேணுன்னா கேட்டு வாங்குடீ; அதென்ன தூங்குற மாதிரி நடிக்குறது? அப்புறம் தூக்கத்துல சாப்பிடுற மாதிரி என் உதட்டைப் பிடிச்சு கடிச்சு வைக்கிறது.....? உங்க ப்ளான் ஊத்திக்கிடுச்சு மேடம்! உங்க நடிப்ப மிஸ்டர் ரேஷ் கண்டுபிடிச்சாரு!" என்று அவள் காதருகில் ரகசியம் பேசியவனிடம் தன் குட்டு வெளிப்பட்டு விட்ட வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு ரகசியமாகப் புன்னகைத்தாள் சந்தனா.

"ஏய்.... திருடி! என் கண்ணப் பாக்காம, நெஞ்சுல முகத்த ஒளிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுட்டு தான இருக்க?" என்று சரியாக அவளது செயலை கணித்து மீசையால் காதுமடலில் குறுகுறுப்பூட்டிய படி பேசியவனிடம்,

"ஐயோ..... கூசுதுடா ரேஷன்!" என்று கண்களைத் திறந்து அவன் கையணைப்பிற்குள் சென்று இயல்பான குரலில் சிணுங்கியபடி சொன்ன தன்னுடைய மனைவியின் வாயைப் பொத்தினான் கதிர்.

"என்ன ஆச்சுடா?" என்று வினவியவளிடம்,

"இனிமே பெட்ரூமுக்குள்ள எதுவுமே பேச்சுல கிடையாது; எல்லாமே ஆக்ஷன்ல தான்! வயசுப்பையன் பக்கத்துலயே படுத்துருக்கான். அதுனால நம்ம ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்! அவனை லேசா கூட தொந்தரவு பண்ணிடக் கூடாது!" என்று முணுமுணுத்தவனை கட்டிக் கொண்டு மறுபடியும் அவன் இதழ்களில் மீன் துண்டு சாப்பிட்டாள் சந்தனா.

"அடியேய்.... கதிர் பாவம்டீ! அந்த ஒண்ணுந்தெரியாத புள்ளைய
இப்டி பாடாப்படுத்தாடீ!" என்று அவள் காதிற்கு மட்டும் குரலில் பேசியவனிடம்,

"ஒண்ணுந்தெரியாத புள்ள தான்
அர்த்தராத்திரியில விரல சூப்பிக்கிட்டு வந்துச்சாம் பெட்ருமுக்குள்ள! என்னடா ஏதோ அவார்ட் வாங்கப் போறவன் மாதிரி பயங்கரமா நடிக்கிற.....? மொதநாளும் இப்டித்தான் வலிக்குதாம்மா? கஷ்டமா இருக்காம்மான்னு கேட்டுக்கிட்டே நாலு மணி வரைக்கும் பொட்டு தூக்கம் வர விடாம படுத்துக்கிட்டு இருந்த? அத இன்னுமா செஞ்சிக்கிட்டே இருப்ப?" என்று கேட்டவளின் கழுத்தெலும்பு பகுதியில் தன் பல்தடத்தைப் பதித்தவன் அவளிடம்,

"நீ எல்லாத்தையும் தாங்கணுமேன்னு நெனச்சு எனக்கு
நெஜமாவே மொதநாள் ரொம்ப பயமா தான்டீ இருந்தது.... ஆனா இப்ப எல்லாம் அப்டி பயமா இல்லப்பா!" என்றான்.

சந்தனாவின் அணைப்பும், அவளது வருடலும், கண்கள் சொருக கிடந்தவளின் அழைப்பும் கதிருக்கு பேசியது போதும் என்ற செய்தியை சொல்ல உடல் வழியே ஓடிய  மோகத்தில் உடலை முறுக்கி தன்னுடைய மனைவியின் மேல் படர்ந்தவன், அவளது உடல் பாகத்தின் நெளிவு சுளிவுகள் அனைத்தையும் முத்தங்களினால் நிரப்ப தொடங்கியிருந்தான்.

அவளுடைய நகங்கள் தன்னுடைய முதுகில் பதிந்து வேகத்தடை விதித்த போது கொஞ்சம் தயங்கி தன்னுடைய வேகத்தை குறைத்தான். தன்னுடைய இயங்கலில் துடித்தவள் அவன்
காதுகளில் முத்தம் வைத்த போது தன் வேகத்தை கூட்டினான். கணவனின் அணைப்பில் அனல் பட்ட கற்பூரமென கரைந்தவள், முடிவில் களிறு ஆக்ரோஷமாக நின்று போரிட்ட யுத்தகளம் போல் உடல் நொந்து களைத்திருந்தாள்.

"ஒரு கிஸ் குடு ரேஷன்... உதடெல்லாம் ரொம்ப ட்ரை ஆகிட்ட மாதிரி இருக்கு!" என்று சந்தனா அவனிடம் கேட்ட போது தன்னுடைய மனைவியை பாடாய்படுத்தி விட்ட உணர்வில் இப்போது மொத்தமாக வன்முறையை விட்டொழிந்து சாத்வீகவாதியாகி இருந்தான் கதிர்.

"இன்னும் ஒண்ணே ஒண்ணுடா!" என்று அவன் மூக்கில் உரசி தன் முகவாயை சற்று மேலே உயர்த்தியவளின் இதழில் ஒரு அவசர முத்தத்தை பதித்தவன்,

"போதும் தூங்கு; அப்புறம் காலையில எழுந்திரிச்சவுடனே என்னமோ நாந்தான் கொலைகுத்தம் செஞ்சுட்டேங்குற மாதிரி உதட்டையும், என்னையும் மாறி மாறி பாத்து மொறைச்சுட்டே இருப்ப!" என்று பாவமாக சொன்னவனின் நெற்றியில் சுண்டியவள்

"குட்நைட் ரேஷன்!" என்று சொல்ல அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கி தலையணையில் கம்பர்டபிளாக படுக்க வைத்தவன்,

"குட்நைட்டீ சூபொ!" என்று அவளுக்கு வாழ்த்துரைத்து விட்டு தன்னுடைய தலையணையில் படுத்துக் கொண்டான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro