Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 85

அன்று காலையில் அவனுடைய வீட்டின் லானில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

"ப்ரெஷ் பண்ணுனீங்களா, குளிச்சீங்களா, ஷர்ட் போட்டீங்களா? சாப்டீங்களா?
ஆஃபிஸ் கிளம்பிட்டிங்களா?" என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் நைநை என்று அனற்றியபடி அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் குணாளினியை இன்று அதிகாலையில் இருந்து அவர்களுடைய அறையில் காணவில்லை.

"டியர் புருஷா... அத்தை கூட ஒரு முக்கியமான விஷயமா வெளிய போறேன். எழுந்திரிச்சதும் உங்க டிம்பிள தேடி எங்க போயிட்டா இவன்னு கேட்டு எம்மேல கோபப்படாதீங்க!" என்று படுக்கையின் சைட் டேபிளில் ஒரு நோட்டை எழுதி வைத்து விட்டு சென்றிருந்தாள் சஞ்சீவின் மனைவி.

வினோதினி கதிருடைய வீட்டில் திடும்மென அவனுக்கு ஒரு மாதத்தில் திருமணம் என்று சொல்லி விட்டு வர பொள்ளாச்சிக்கு வரும் வரையிலும் இந்த மாதிரியான அவசர அறிவிப்புக்கு என்ன காரணம் என்று கேட்டு சஞ்சீவுடைய மூளை அவனை பிராண்டியது.

ஊருக்கு சென்றதும் நேராக தன் சித்தப்பாவின் முன்னால் சென்று நின்றவன் கதிருடைய திருமணத்தைப் பற்றி அவர் விசாரித்ததையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவரிடம், 

"என்ன சித்தப்பா இது? எனக்கு  கல்யாணம்னு அம்மா சொல்றாங்க. அதுவும் ஒன் மன்த்லங்குறாங்க! ஏதாவது ப்ராப்ளமா?" என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல சஞ்சு!" என்ற வார்த்தைகளை அவரிடமிருந்து எதிர்பார்த்தவனிடம்,

"ஆமா சஞ்சு! கொஞ்சம் பிரச்சன தான்! நம்ம கம்பெனியில போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ், பிஸினஸ் சர்க்கிள் ப்ரெண்ட்ஸ்ல சிலர் நம்ம குணாளினியப் பத்தி தப்பா பேசுறாங்கப்பா! அது சின்னப்புள்ள... அவ காதுல விழுற மாதிரி எங்கயாவது, ஏதாவது பேச்சு வந்துடுச்சுன்னா அது ரொம்ப தப்பாயிடும். இப்ப என்ன? கல்யாணத்த பண்ணி அவளுக்கு வேண்டிய உரிமைய குடுத்துட்டா, பேசுறவங்க வாயெல்லாம் தன்னால மூடிக்கப் போவுது கண்ணு!" என்றவரிடம்,

"ஓ.... பணத்துக்காக இவ நம்ம கிட்ட வந்துருக்கா, இவ வேற மாதிரி பொண்ணு.... அந்த மாதிரி எந்தவிதமான பேஸூம் இல்லாம, வாய்க்கு வந்தத பேசுற காஸிப்ஸ் கிளம்பியிருக்கா? ஃபைன்.... நான் அவங்க காஸிப்ஸ எல்லாம் கேட்டு ரொம்ப பயந்துட்டேன்னு சொல்லிடுங்க....! சீக்கிரமா இத ஒரு முடிவுக்கும் கொண்டு வந்துடுங்க!" என்று சொன்னவன் அடுத்தடுத்த நாட்களில் ஜாலியாக தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி விட்டான்.

"சஞ்சீவ்... எஸ்ஆர்ஜி வாரிசு கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணு கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல சுத்திட்டு இருக்கான்னு உன்னைய பத்தி ஜாடையா பேசுறாங்களாம்; உனக்கு அது தெரியுமா தெரியாதா?" என்று கேட்டவளின் இதழைப் பிடித்து இழுத்து தன்னருகில் வர வைத்தவன்,

"யாரு எது வேணும்னாலும் பேசிட்டு போகட்டும் செல்லம்! இந்த மாதிரி கதையெல்லாம் கேக்குற அளவுக்கா நாம வெட்டியா இருக்கோம்? இல்லல்ல..... தென் வொய் டூ பாதர் அபௌட் தட் கைண்ட் ஆஃப் ஸ்டோரீஸ்?" என்று கேட்டவன் அதற்கு பிறகு அவளை இது போன்ற வருத்தத்தில் உழல விடவேயில்லை. திருமணம், ரிஷப்ஸன் என்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் தன்னுடைய எதிர்பார்ப்புகளை அவளிடம் சொல்லியவன் அவனது உடைகளை தயார் செய்வதற்குள் குணாளினியை ஒருவழியாக்கி விட்டான்.

பகலெல்லாம் அவளுடைய தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள், மாலைகளில் எங்காவது சந்திப்பு, வீட்டில் பிக்கப், அதற்கு பின்னர் நள்ளிரவு வரை காதல் பேச்சுக்கள் என நாட்கள் அவர்கள் இருவருக்கும் மட்டும் இறக்கை கட்டிக் கொண்டது பறந்தது.

குணாளினியின் தந்தையை மிகவும் சிரமப்பட்டு அங்கிள் என அழைக்கும் நிலைக்கு வந்திருந்தான் சஞ்சீவ்.

குணாளினியின் சில பல சிறப்பான கவனிப்புகளால் மினு தனது அஸெஸ்ட்மெண்ட் எக்ஸாமில் எண்பது மதிப்பெண்கள் வாங்கினால் எங்கே நூறு மதிப்பெண் என்று கேட்காமல் தன்னுடைய தங்கையை "இன்னும் நல்லா மார்க் வாங்கணும். யூ கேன் டூ வெல்!" என்று சொல்லி முதுகில் தட்டிக் கொடுத்தான்.

சஞ்சீவின் இந்த அளவிலான மாற்றமே வீட்டில் இருந்த அனைவருக்கும் இனிய அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரிடமுமே அளந்து பேசியவன், குணாளினியிடம் மட்டும் வாய் நிறைய பேசி, இதழ் நிறைய சிரித்தான்.

மூவாயிரம் பேர் கலந்து கொண்ட சஞ்சீவின் திருமணமும், ஏழாயிரம் பேர் கலந்து கொண்ட அவனுடைய ரிசப்ஷனும் மிகப் பிரமாண்டமாக
அந்த மாவட்டத்தின் ஒருநாள் செய்தியாக இருந்தது.

கதிர், சந்தனா, பாகேஸ்வரி,
கல்பனா, ஜனா, வெண்மதி, இளமதி, ஆலென், சுமலதா, ஜெபா அனைவரும் சஞ்சீவுடைய திருமணத்திற்கு இரண்டு நாட்களும் முழுமையாக கலந்து கொண்டு அவனுடைய அழுத்தத்தை சற்றே குறைத்தனர்.
அவனது திருமணத்திற்கு வர முடியாத மாணிக்கவேல் அவனது முகவரிக்கு ஒரு வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார்.

"அங்கிள் நீ அழகாருக்க!" என்று கன்னக்குழி நிரம்ப சிரித்தபடி சொன்னவளை முறைத்த கதிர்,

"ஏய் குட்டிநிலா! மாமா கல்யாணத்தனிக்கும் நீ இதையே தான சொன்ன?" என்று கேட்டு அந்தக் குழந்தையை மிகவும் யோசிக்க வைத்தான்.

"ஏன்டா டூத்பேஸ்ட்.... என்னடா இது? அஞ்சரை மணிக்கு ஆரம்பிச்ச ரிஷப்ஸன் பத்தரை மணி வரைக்கும் முடியாம அது பாட்டுல இன்னும் போயிட்டே இருக்கு! ச்சே...... பணக்காரனா இருக்குறது கூட கஷ்டம் தான் போல!" என்று சலித்துக் கொண்டவனிடம்,

"ஆமாடா மாப்; நீ பேசலைன்னா திமிர்ல கண்டுக்காம போறன்னு சொல்லுவாங்க; பேசுனா இவ்ளோ பெரிய பணக்காரன் சிம்பிளா இருக்கான்னு காட்டிக்குறதுக்காக வந்து பேசுறான்டான்னு சொல்லுவாங்க! ஸோ பேசுனாலும் ப்ரச்சன; பேசாட்டியும் ப்ரச்சன!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம்,

"இதுக்கெல்லாம் பயந்துட்டு தான் வீட்ட விட்டு ஓடிட்டியாக்கும்?" என்று சஞ்சீவை கிண்டல் செய்தான்.

இப்படியாக சஞ்சீவும் குணாளினியும் தங்களுடைய திருமணத்தில், வரவேற்பில் சிறிதாக சோர்வடைந்தாலும் அந்த நண்பர்கள் பட்டாளம் அத்தனை கூட்டத்தையும் அப்படியே ப்ளாக் செய்து, மணமக்களை சற்று ஆசுவாசம் அடைய வைத்த பிறகு தான் வாழ்த்தை வழங்க அனுமதித்தனர்.

எந்த சொந்தமும் இல்லாமல் வெறும் பழக்கத்தில் இப்படி ஒட்டிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி ஒன்றை கேட்டால் ஆம் முடியும் என்று நிரூபித்து சஞ்சீவுடன் ஒரு உடன்பிறந்தவன் போல் விழா முழுவதிலும்
ஒட்டிக் கொண்டு நின்றான் கதிரேசன்.

மொத்தத்தில் அத்தனை ஆயிரக்கணக்கான கூட்டம் வந்தாலும், சஞ்சீவ் தனது மனதிற்கு நெருங்கியவர்களின் அருகாமை இருந்ததால் தான் தன்னுடைய திருமணத்தில் மிகவும் சௌகர்யமான ஒரு உணர்வை அனுபவித்தான்.

திருமணத்தன்று இரவில் தன்னுடைய முதலிரவுக்கு கிளம்பியவன் கதிருடைய அருகில் சென்று, "ஏதாவது டிப்ஸ் குடுங்களேன்! எனக்கு இது பர்ஸ்ட் டைம்! நான் உங்கள மாதிரி பையன் வேறயில்லயா.... அதான் கொஞ்சம் நெர்வஸா இருக்கு!" என்று சொல்லி தன்னுடைய வியர்வையை துடைத்துக் கொள்ள கதிர் அவனிடம்,

"ஏன்டா அப்ப நாங்கனாப்ல இந்த எக்ஸ்பீரியன்ஸ்ல சென்ட்சுரி அடிச்சுட்டா பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாகிப் போனோம்....? என்னைய ரொம்ப பேச வைக்காத! மரியாதயா உள்ள போயிடு!" என்று சொல்லி அடிக்காத குறையாக அவனை அறைக்குள் அனுப்பி வைத்தான்.

வெண்மதி தன்னுடைய அன்னையிடம், "ம்மா.... அங்கிள் வீடு மாதிரியே நம்மளும் பெரிய்ய்ய்ய வீடு வாங்கணும். ஆனா இந்த வீட்ல பீச் இல்லல்ல... ம்ப்ச் அங்கிள் தண்ணிக்குள்ள விளையாடுறதுன்னா எங்க போவாங்களோ?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மினுவிற்கு தங்களுடைய பேவரைட் கேங்கை பார்த்ததும் மிகவும் கொண்டாட்டம்! பிள்ளைகளை கூட்டிக் கொண்டு ஹோம் தியேட்டரில் கார்ட்டூன் படங்களைப் பார்ப்பது, சீசா, ஊஞ்சல், ஸ்லைடுகளில் அவர்களுடன் விளையாடுவது, புல்தரையில் அவர்களுடன் டென்னிகைய்ட் வளையத்திற்காக உருண்டு சண்டையிடுவது என தன்னுடைய பத்தொன்பது வயது மூன்று நாட்களாக மறந்தே போய் விட்டது.

இப்படி கோலாகலமாக சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டு இன்றுடன் ஒருமாத காலம் ஆகி விட்டது.

போன மாதம் இந்நேரம் அவள் பக்கத்தில் மாப்பிள்ளையாக அமர்ந்திருந்ததை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

"குட்மார்னிங்...... என்ன ரொம்ப ரிலாக்ஸ்டா உட்கார்ந்தாச்சு? ஆஃபிஸ்க்கு கிளம்பலையா?" என்று பின்னால் இருந்து கேட்ட சப்தத்தில்,

"வந்துட்டாடா நம்ம இன்ஸ்ட்ரக்டர்!" என்று நினைத்து புன்னகைத்தவன் பின்னால் திரும்பி அவளை தன்னருகில் வந்து அமருமாறு கை காட்டினான்.

தன்னருகில் வந்து மூங்கில் சேரில் அமர்ந்தவளை மேலிருந்து கீழே வரைக்கும் கண்களால் ஸ்கேன் செய்தவன்,

"என்ன கண்மணி இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்கீங்க?" என்று அவளிடம் கேட்டான்.

"என்ன மார்க்கமா இருக்காங்க? நான் எப்பவும் போல தானடா இருக்கேன்!" என்று சொன்னவளிடம்,

"ம்ஹூம்! தலைக்கு குளிச்சு, உன்னோட ஸில்க்கி ஹேர் அழகா தெரியுற மாதிரி நாலே நாலு பின்னல் மட்டும் போட்டு, ஸில்க் ஸாரி கட்டி, குட்டி குட்டியா ஜ்வெல்ஸ் எல்லாம் போட்டு இது தான் எப்பவும் போல இருக்குறதா? அம்மா கூட எதுவும் பங்ஷனுக்கு போயிட்டு வந்தியாடீ?" என்று கேட்டவனிடம்,

"ம்ஹூம்! இன்னிக்கு எஸ்ஆர்ஜிக்கு பர்த்டே இல்ல.... அதான் காலையில போயி ஷிப்ட்ல வொர்க் பண்ற அண்ணா, அக்காங்க கூட சேந்து  பேக்டரிக்கு பொறந்தநாள் கொண்டாடிட்டு வந்தோம். ஒரு பொறந்த நாள் கொண்டாட வெறும் டாப்பும் லெக்கினும் போட்டா நல்லாயிருக்குமா சொல்லு.... அதான் கொஞ்சம் அழகா ரெடியாகிப் போவோமேன்னு போயிட்டு வந்தேன்; மினு கூட எங்க கூட வந்தாடா!" என்று ஆனந்தமாக சொல்லிக் கொண்டிருந்தவளிடம்,

"ஓ..... வெரிகுட்! வெரிகுட்..... உங்களோட இவ்ளோ பெரிய பொறந்த நாள் கொண்டாட்டத்துல நான் ஏன் கலந்துக்கல? எனக்கு யாரும் இதப்பத்தி இன்பார்ம் கூட பண்ணலையே? இன்னிக்கு காலைல பேக்டரிக்கு போகப்போறன்னு உனக்கு நேத்து நைட்டே தெரியும்ல? பனிரெண்டரை மணி வரைக்கும் நாம முழிச்சு தானடீ இருந்தோம்? நீ ஏன் இத எங்கிட்ட முன்னாலயே சொல்லல டிம்பிள்?" என்று கேட்டவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல்  திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் குணாளினி.

"நான் உன் புருஷன்டீ! யுவர் ஒன் அண்ட் ஒன்லி ஹஸ்பெண்ட்! எல்லோரோடயும் ஜோடி போட்டுட்டு எங்கயாவது போகும் போது உனக்கேன்டீ என் நியாபகமே வர மாட்டேங்குது?" என்று கேட்டவனிடம், 

"அது வந்து சஞ்சீவ்.... ஜாலியா அப்டியே போகும் போது உன்னைய கூட்டிட்டுப் போக மறந்து போயிடுது! நீ வேற நல்லா தூங்கிட்டு இருந்தியா? அதுனால தான் உன்னைய டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சு..... நான் இன்னிக்கு ஷாப்க்கு போகல. ஈவ்னிங் ஒருக்க பேக்டரிக்கு வரும்போது உன்னோட கேபினுக்கும் வந்துட்டுப் போறேன். இப்ப நீ ஆஃபிஸூக்கு கிளம்புறியா?" என்று கேட்டவளிடம்,

"ஓ கெளம்பலாமே..... எனக்கு ஷர்ட் எடுத்து வச்சிட்டியா?" என்று இயல்பான குரலில் அவன் கேட்க குணாளினி மனதிற்குள்ளாக,

"அப்பாடா.... தப்பிச்சுட்டோம்டா சாமி.... ஆனா இவன மட்டும் ஏன் நாம எந்த ஆட்டையிலயும் சேர்த்துக்கவே மாட்டேங்குறோம்! அடுத்த தடவயெல்லாம் கொஞ்சம் உஷாரா இருந்துக்க குணாப்புள்ள! பயபுள்ள ஏதோ ஒருக்கா தான் நம்பளுக்கு பாவம் பாத்து உடும்!" என்று நினைத்தவள்,

"குணாளினி.... உன்னைத் தான்; எனக்கு ஷர்ட் எடுத்து வச்சியான்னு கேட்டேன்?" என்று மறுபடியும் கேட்டவனுடைய கேள்வியில்

"இந்தா வந்துட்டேனுங்க!" என்று மரியாதை மணக்க பதில் சொல்லி அவர்களுடைய அறைக்குள் ஓடிக் கொண்டிருந்தாள்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro