
❤ சிறுநகை 84
"ஏன்டா.... வெட்ட வெடியால எழுந்திரிச்சு எதுக்குடா என்னைய இப்ப எங்கயோ ஓட்டிக்கிட்டு போய்ட்டு இருக்க? கேலரிக்கா போறோம்?" என்று கேட்ட கதிரிடம் ஆமென தலையாட்டினான் சஞ்சீவ்.
"மிஸ்டர் ரேஷ்.... எனக்கு ஒரு டவுட்டு! நேத்து ராத்திரி படுக்கும் போது நீங்க எனக்கும், அவனுக்கும் நடுவுல தான படுத்துருந்தீங்க.... காலையில எழுந்திரிக்கும் போது உங்க வொய்ஃப் பக்கத்துல இருந்து எழுந்திரிக்குறீங்க? இதெல்லாம் புதுசா கல்யாணம் ஆன எஃபெக்டா? லவ் பண்றதுன்னா அத ப்ரைவேட்டா பண்ண வேண்டியதுதான? எதுக்கு எங்க எல்லாரையும் ஆடியன்ஸா வச்சுக்கிட்டு பண்றீங்க?" என்று கேட்டவனிடம் ஒன்றும் பேசாமல் மவுனச்சிரிப்புடன் அமர்ந்திருந்தான் கதிர்.
நேற்றிரவு அவனிடம் "டேய்.... நாந்தான் உங்கிட்ட முதல்லயே சொன்னேன்ல....? ஜெபா, சஞ்சீவ் கூட போய் படு!" என்று சொன்னவளிடம் பதில் பேசாமல் தலையாட்டியவன் தன் மனதிற்குள்ளாக,
"மொதநாளே கூட படுக்க விடாம சூனியம் வைக்கிறா பாரு.... எதுவும் கிடையாது சரி; பக்கத்துல கூடவா படுக்கக்கூடாது? இன்னிக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி;
உன் பக்கத்துல வந்து படுத்த பிறகு தான்டீ நான் தூங்குவேன்!" என்று சூளுரை மேற்கொண்டவன் உண்மையிலேயே அவளுக்குப் பக்கத்தில் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்ட பிறகு தான் அமைதியாக உறங்கினான்.
"ஹலோ பாஸ்... என்ன மறுபடியும் ட்ரீமுக்கு போயாச்சா.... ம்ஹூம் நீங்க சரியில்ல!" என்று சொன்னவனிடம்,
"ம்ம்ம்! சரியாயில்லன்னா.... என்னைய ஒழுங்கா அடுக்கி வச்சுட்டு போ!" என்று கிண்டல் செய்தான்.
"அடுக்கி எல்லாம் வைக்க முடியாது!
இப்டியே இருங்க.... பட் சீக்கிரத்துல ரெகவர் ஆகிடுங்க; மிஸ்டர் கிருஷ்ணராஜ பத்தி விசாரிக்க நான் ஷேடோ யாரையாவது அரேன்ஜ் பண்ணவா பாஸ்?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டிய கதிர்,
"விடுறா.... எங்களோட அந்தாளு இல்லாம இருக்கட்டும் சரி; எப்டியோ ஊர் சுத்திக்கிட்டு வேலை வெட்டிக்குப் போவாம இருக்கட்டும் அத கூட பொறுத்துக்கலாம்; பட் சொல்றதுக்கே அசிங்கப்படுற வேலையெல்லாம் செஞ்சான்னா என்னடா பண்றது?" என்று சொன்னவனை பார்த்து அதிர்ச்சியுற்றவன்,
"அப்ப உங்களுக்கு...." என்று ஆரம்பிக்க,
"ரொம்ப கஷ்டப்படாத! உன்னைய மாதிரி எனக்கும் எல்லாம் தெரியும்! ஜனா ஸார் எல்லாத்தையும் எங்கிட்ட பேசிட்டாங்க..... அவன் எப்டிப் போனாலும், எங்க போய் ஒழிஞ்சாலும் இனிமே நானும் அம்மாவும் அவன நினைச்சு வருத்தப்படப் போறதில்ல! எனக்கு இப்டி ஒரு அப்பன் கெடச்சது என் தலையெழுத்து; அவன நீ வேற எதுக்குடா பின்னாலயே போய் தொரத்திக்கிட்டு இருக்கணும்? விட்டுத்தொல!" என்று சலித்த குரலில் சொன்னான்.
"ஓகே.... நோ மோர் கொஸ்ட்டீன்ஸ்!" என்று தோள்குலுக்கிய சஞ்சீவ் அடுத்த ஐந்து நிமிடங்களில் கேலரியின் வாசலை அடைந்தான்.
"இந்த சாவிய குடுறா குடுறான்னு நானும் இவங்கிட்ட எப்ப புடிச்சு கேட்டுக்கிட்டு இருக்கேன்? குடுக்குறானான்னு பாரு!" என்று நினைத்து சிரித்த கதிரை உள்ளே அழைத்துச் சென்ற சஞ்சீவ், ஒரு கவரை விலக்கிக் கொண்டிருந்தான்.
"காரா.... யாரோடது இது?
இத ஏன்டா இங்க கொண்டாந்து
நிறுத்தி வச்சிருக்க? இந்த இடத்த யார்ட்டயாவது உள்வாடகைக்கு குடுத்துட்டியா என்ன?" என்று கேட்ட கதிரை முறைத்தவன்,
"என்னது உள்வாடகைக்கு விட்டனா? உங்க கண்ணு நல்லா தெரியுதா இல்லையா? இந்த கார் புதுசு பாஸ்; உங்க மேரேஜ்க்கு என்னோட கிப்ட்! எப்பப் பாத்தாலும் நான் எனக்குப் பிடிச்சதயே உங்களுக்கு வாங்கிக் குடுத்துடுறேன். பட் நெக்ஸ்ட் டைம்ல இருந்து இப்டி ஏதாவது பெரிய கிப்ட் தர்றதா இருந்தா உங்க ஒப்பீனியனையும் கண்டிப்பா கேட்டுக்கறேன். இந்த வண்டியோட கலர், மாடல் எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கதிரிடம் கேட்டான்.
சில்வர் நிறத்தில் பளபளத்த ப்ராண்ட் ந்யூ ஆடி Q7 காரைப் பார்த்து கதிருக்கு ஒருநிமிடம் பேச்சே வரவில்லை.
"டேய்... என்னடா இம்மாந்தண்டி கார கொண்டாந்து கேலரியில ஒளிச்சு வச்சுட்டு இதப் போயி கிப்ட்டுங்குற.... இதெல்லாம் நீ யூஸ் பண்ற மாதிரி காருடா தம்பி; எனக்கெதுக்கு இம்புட்டு பெரிசா?
அதான் வீட்ல ஒண்ணு நிக்குதுல்ல? அதுவே நல்லாத்தான இருக்கு?" என்று சஞ்சீவிடம் கேட்டான்.
அவனுடைய முதல் காரான பலீனோவை வாங்கும் போதும் இதே வார்த்தைகளை தான் சற்று வேறு மாதிரியாக சொன்னான்.
"பாஸ்.... வீட்ல இருக்குற கார் உங்க மூணு பேருக்கு மட்டும்! இது 7 ஸீட்டர்; அதுனால இனிமே
எல்லாரும் இங்க வரும் போது யூஸ் பண்ணிக்க இது சௌகர்யமா இருக்கும்! யார் கண்டா? இந்த கிப்ட்ட பார்த்து மிஸஸ் சந்தனா ரொம்ப எக்ஸைட் ஆகி இத அவங்களோட ஓன் பர்ப்பஸ்க்கு வச்சுக்குறேன்னு கேக்கப் போறாங்களோ என்னவோ?" என்று சொல்லி சிரித்தவனிடம் தலையைப் பிடித்தபடி,
"ஏன்டா இதெல்லாம் பண்ற? யார் கிட்டயும் நான் கடனாளியா இருக்கக்கூடாதுன்னு நினைக்குறேன்டா சஞ்சீவ்! அது உங்கிட்டயா இருந்தாலும் தான்!" என்று சொன்ன கதிரிடம்,
"ஹலோ பாஸ்.... உங்களோட பெரிய மைனஸ் என்ன தெரியுமா? நீங்க இன்னும் உங்க வேல்யூவ புரிஞ்சுக்காம இருக்குறது தான்! உங்க பெயிண்டிங்ஸ்கான மார்க்கெட் டிமாண்ட் ஏற ஏற அக்கவுண்ட்ல பேலென்ஸூம் வளர்ந்துட்டே போகுது! உங்களோட அஃபிஷியல் பேங்க் அக்கவுண்ட்ல இருக்குற பேலென்ஸ் 2 சி அ தொட்டு பத்து நாள் ஆச்சு தெரியுமா? அதுனால நீங்க இனிமே ஒரு கோடீஸ்வரன்; இந்த காருக்கான டவுன் பேமெண்ட் உங்க அக்கவுண்ட்ல இருந்து தான் நான் எடுத்தேன்! எம்பேச்சுல நம்பிக்கையில்லன்னா, உங்க போனு இருக்குல்ல போனு..... அதுக்குள்ள போயி உங்க பேங்க் பேலென்ஸ செக் பண்ணிப் பாருங்க! எனக்கு தொந்தரவா இருக்குன்னுட்டு எல்லா நோட்டிஃபிகேஷனையும் ஆஃப் பண்ணி வச்சிருந்தா இப்டித்தான் ஒண்ணுந்தெரியாம உக்காந்துருக்கணும்!
"இனிமே சும்மா எப்போ பாத்தாலும் ஏன்டா இந்த செலவு செஞ்ச? எதுக்குடா அந்த செலவு செஞ்சன்னு கேட்டீங்க.... நான் டென்ஷனாகிடுவேன் பாத்துக்கோங்க! இதப் பிடிங்க!" என்று சொன்னவன் காருக்கான சாவி மற்றும் பேப்பர்கள் அனைத்தையும் கதிரின் கையில் கொடுத்தான்.
"என்ன சொல்றதுன்னு தெரியல.... சட்டுன்னு எதுவும் வர மாட்டேங்குது... ரொம்ப தேங்க்ஸ்டா தம்பி!" என்று சொல்லி அவனை கட்டி அணைத்த கதிரிடம் இருந்து தன்னை உருவிக் கொண்டவன் கதிரிடம்,
"ஹலோ ஸார்! அதுக்குள்ள என்ன அவசரம்? வெயிட் பண்ணுங்க! இது உங்களோட ஜ்வல்லரி, ஷு மார்ட், மொபைல் ஷோரூம் இதுக்கெல்லாம் விலை பேசியாச்சு. எங்க அம்மாட்ட இத சொன்னப்ப வழக்கம்போல ஏன் விக்கணும்னு தான் கேட்டாங்க; பட் அவங்க கிட்ட கொஞ்சம் பேசுனதுக்கப்புறம் சந்தனாவோட ஐடியா தான் அவங்களுக்கும் கரெக்ட்னு தோணுச்சு! உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சு
அம்மாவே இடத்த விக்குற டீலுக்குள்ள வந்ததுனால நமக்கு நிறைய லாபம் தான்..... ஸோ அந்த பணத்த வச்சு ஆர்ட் கேலரிக்கு ஆப்போஸிட்ல இருந்த ஒரு ஸ்கொயர் ஷேப் லேண்டையே பேசி முடிச்சாச்சு. அதோட டாக்குமெண்ட்ஸ வாங்குன பிறகு வீ கேன் ஸ்டார்ட் அவர் வொர்க்ஸ்....!"
"கல்பனா சிஸ்டர் தர்ற வீட்டோட பணம் இங்க பில்டிங்க் கட்டுறதுக்கு சரியா இருக்கும்னு நினைக்குறேன். உங்க வீடு, ஆர்ட் கேலரி, ட்ராயிங் ஸ்கூல், ரெடிமேட்ஸ், ப்யூட்டி பார்லர் இதுல எதையும் கடைசி வரைக்கும் நீங்க விக்குறேன்னு சொல்லவே கூடாது. புரிஞ்சதா?"
"அப்புறம் ஒரு சின்ன சஜஷன்..... நாம ட்ராயிங் ஸ்கூல் ஆரம்பிக்க எப்படியும் இன்னும் அஞ்சாறு மாசம் ஆகிடும்..... அதுனால நீங்க
இன்னையில இருந்து ஷோஸியல் மீடியாவுல கொஞ்சம் ஆக்டிவா இருங்க பாஸ்.... நீங்க யாருன்னு மக்களுக்கு தெரியணும்; உங்களோட பெயிண்டிங்க் ஸ்கில்ஸ லேசா கோடு போட்டு காட்டுற மாதிரி குட்டி குட்டி வீடியோ பண்ணுனீங்கன்னா அது நமக்கு ஒரு இன்டேரக்ட் அட்வர்டைஸ்மெண்ட் மாதிரி ஆகிடும். ஸோ நம்மளோட அறிமுகம் முன்னாலயே இருக்கறதால நம்ம ட்ராயிங்க் ஸ்கூல திறந்தவுடனே நமக்கு நிறைய ஸ்ட்டூடெண்ட்ஸ் கிடைச்சுடுவாங்க!" என்று சொன்னவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த கதிர்,
"ம்ஹூம்! சத்தியமா இதெல்லாம் பொறப்புல இருந்தே ரத்தத்துல ஊறியிருக்கணும்டா சாமி!" என்று நினைத்துக் கொண்டான்.
"என்ன அப்டி பேன்னு பாக்குறீங்க? எப்ப எங்கிட்ட இந்த பொறுப்பையெல்லாம் வாங்கிக்கப் போறீங்க?" என்று கேட்டவனிடம்,
"அதையும் நீ தான் சொல்லணும்! எங்கிட்ட எதுக்கு கேக்குற?" என்று கேட்டான் கதிர் புன்னகைத்த படி.
"ட்ராயிங் ஸ்கூல் கட்டி முடிச்சு அதுக்கு பூஜை போடற அன்னிக்கு நான் உங்க சம்பந்தப்பட்ட எல்லா விதமான கணக்கு வழக்கையும் அம்மா, உங்க வொஃய்ப் ரெண்டு பேர் கையிலயும் சேர்த்து குடுத்துடுவேன். பட் எப்பவும் போல பெயிண்டிங் விக்குற வேலையும், உங்களோட Resh சிக்னேச்சருக்கு பெர்மிஷன் தர்ற வேலையும் லைஃப்லாங் என்னோடது தான்! ஓகே தான?" என்று சொன்னவன் கதிர் பேச்சற்று நின்று கொண்டிருக்கவும்,
"இப்ப குடுங்க நீங்க எனக்கு குடுக்குற ஹக்!" என்று அவனிடம் கேட்டு கதிரை அணைத்துக் கொண்டான்.
"நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்டா தம்பி.... சீக்கிரத்துல அம்மாவ முஹூர்த்தம் பாக்க சொல்லு! கல்யாணத்த
ரொம்ப தள்ளிப் போடாத.... என்ன?" என்று சொன்ன கதிரிடம் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டவன்,
"அது.... வந்து! இத மட்டும் அம்மாட்ட நீங்களே சொல்லுங்களேன். எனக்கு இதப்பத்தி அவங்க கிட்ட பேச கொஞ்சம் எம்பாரஸிங்கா இருக்கு!" என்றான் தலைகவிழ்ந்த படி.
"ஏன்டா என்னோட தேவையின்னா
மட்டும் அவங்க கிட்ட போய் உன்னால பேச முடியுது! உன்னோட தேவைய பேச முடியலயா? சரி விடு; நான் கண்டிப்பா வினோம்மாட்ட பேசிடுறேன்..... உன்னோட கிப்ட், அம்மாவோட கிப்ட் எல்லாம் குடுத்தாச்சுல்ல? நாம இப்ப வீட்டுக்கு கெளம்பலாமா?" என்று கேட்டான் கதிர்.
"நீங்க கெளம்புங்க! நான் கொஞ்ச நேரம் இங்க அப்டியே தனியா.....!" என்று சொல்ல ஆரம்பித்தவனின் சட்டைக் காலரைப் பற்றியவன்,
"தனிமையில இனிமை காணுற வேலையெல்லாம் நீங்க இன்னையில இருந்து விட்டுடுறீங்க தம்பி! தனியா புடுங்குறதுக்கு இங்க ஒரு ஆணியும் மிச்சமில்லயாம்; அதுனால மரியாதயா இப்ப எங்கூட வீட்டுக்கு கெளம்புங்க!" என்று சொல்லி தன்னுடன் சஞ்சீவை இழுத்துச் சென்றான்.
கதிரும், சஞ்சீவும் வீட்டிற்குள் காரை நுழைத்து நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கிய போது ஜெபா சுமலதாவிற்கு முன்பாக
கார் பார்க்கிங்கில் செடிகளுக்குப் பின்னால் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிக் கொண்டிருந்தான்.
"அம்மா.... நேனு டயலாக் மரிச்சு போயானு! நன்னு வெம்படிஞ்சகு! (எனக்கு டயலாக் மறந்து போயிடுச்சு! என்னை தொரத்தாதீங்க) என்று சொன்ன படி தவ்வி ஓடியவனிடம்,
"எலா மரிச்சுப் போயாவு? (எப்படி மறந்தது உனக்கு?) ஒரே தொங்கபடவா..... ஒரு பக்கத்துக்கு டையலாக் குடுத்தாலும் சிங்கிள் டேக்ல அத தூசி மாதிரி அத ஊதித் தள்ளிட்டு போய்ட்டு இருக்குற சுமலதாவோட பையன்..... ஒரு நாலுவரி வசனம் மறந்து போச்சுன்னு எப்டிடா சொல்லலாம்? எப்டி?" என்று சொன்ன சுமலதாவின் வார்த்தைகளில் கதிரும் சஞ்சீவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,
"நம்ம புலவர் மாப்புக்குச்சி மண்டையனோட கதை இன்னும் முடியல போலிருக்கு!" என்று
சொல்லி பெரிதாக சிரிக்க ஆரம்பித்தனர்.
ஒருபக்கம் வினோதினி, மினு, குணாளினி மூவரும் ஊருக்கு கிளம்புவதற்கு தயாராகி வர, மறுபக்கம் மாணிக்கவேல், கல்பனா, ஜனார்த்தனன், வெண்மதி, இளமதி இவர்களும் தங்களுடைய ட்ராலி சூட்கேஸூகளுடன் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
"மாமா" என்று ஓடி வந்து கட்டிக் கொண்ட மழலைகள் இரண்டும் சஞ்சீவ் அங்கிளிடமும் ப்ரத்யேகமாக விடைபெற்றதை பார்த்த கதிர் சிரித்துக் கொண்டான்.
"பாகேஸ்வரி.... தைரியமா இருக்கணும்! இருப்பீங்க தானே?" என்று கேட்ட வினோதினியிடம்,
"கண்டிப்பா வினோம்மா.... நம்மளோட அருமை புரியாம விட்டுட்டுப் போனவங்களுக்காக நம்ம அழுதுட்டே உட்கார்ந்துருக்க முடியாதுல்ல.... நான் செய்யுறதுக்கு நிறைய உருப்படியான வேலைங்க வேற இருக்கு! நான் சீக்கிரத்துல இந்த விஷயத்த கடந்து வந்துடுவேன்... உங்களுக்கு ரொம்ப நன்றி வினோம்மா!" என்று கைகூப்பிய பாகேஸ்வரியின் கைப்பற்றி அழுத்தி விட்டு கிளம்பினார் வினோதினி.
"எல்லாருக்கும் போயிட்டு வர்றோம்! போயிட்டு வர்றோம், டாட்டா, உம்மா, பை பை....!" என்று அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்று சொல்லிக் கொண்ட சத்தத்தில் சந்தனாவிற்கு வருத்தமாக இருந்தது.
"வினோ ஆன்ட்டி... அடுத்து எப்போ இங்க வருவீங்க?" என்று ஏக்கத்துடன் கேட்டவளிடம்,
"இன்னும் பத்தே நாள்ல சஞ்சீவ் குணாளினி கல்யாணத்துக்கு இன்விடேஷன் ரெடி பண்ணிட்டு நேரா இங்க தான் வருவேன். அவனோட கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு!" என்ற ஒரு புதுத் தகவலை அறிவித்தார் வினோதினி.
"டேய்... சீக்கிரத்துல அம்மாவ முஹூர்த்தம் பாக்க சொல்லுன்னு சொன்னதுக்கு நீங்களே சொல்லுங்கன்னு பம்மிக்கிட்டு சொன்ன..... இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணமே நடக்கப்போகுதுன்னு அம்மா சொல்றாங்க; எங்கிட்ட நடிச்சியா?" என்று கோபமாக கேட்ட கதிரிடம்,
"ப்ராமிஸா இல்ல பாஸ்.... என் மேரேஜ்க்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு எனக்கே இப்ப தான் தெரியும்!" என்றான்.
எப்போதும் அவன் மூக்கில் புகையை வர வைக்கும் தன்னுடைய அன்னையின் இந்த மனோபாவம் இன்று ஏனோ அவனைப் பெரிதாக பாதிக்கவில்லை.
சொல்லப்போனால் "அப்பாடா.... இன்னும் ஒன் மன்த்ல டிம்பிள் மிஸஸ் சஞ்சீவ் ஆகிடுவா!" என்ற நிம்மதியான உணர்வு தான் ஏற்பட்டது.
"சரி....சரி.... நீங்க கிளம்புறப்ப நான் உன்னை எதுவும் சொல்லல. போய் வண்டியில ஏறி உட்காரு போ!" என்று சொல்லி சஞ்சீவிற்கு விடைகொடுத்தான் கதிர்.
ஜெபா, ஜனா, ஆலென் இவர்கள் எல்லாம் சஞ்சீவிற்கும் குணாளினிக்கும் வாழ்த்து சொல்லி விட்டு நிற்க கல்பனா "சந்து அப்போ அடுத்த பங்ஷன்ல மீட் பண்ணுவோம்!" என்று உற்சாகமாக தன் தோழிக்கு கையசைத்து விட்டு காரில் ஏறினாள்.
பதினைந்து நிமிடங்களில் அனைவரும் கிளம்பிய பிறகு ஆலெனும் சுமலதாவும் "சம்பந்தி அப்ப நாங்களும் அப்டியே கிளம்புறோம்!" என்று சொல்ல சந்தனாவிற்கு விம்மல் புறப்பட்டு விட்டது.
"மாமா.... ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இங்க இருந்துட்டுப் போங்களேன். நீங்க கிளம்புறேன்னதும் லஷ்மிக்கு இப்பவே அழுகை வருது பாருங்க....!" என்று கேட்ட தன்னுடைய மருமகனின் வார்த்தையை மீற முடியாமல் சுமலதாவும், ஆலெனும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் இங்கு இருப்பதாக சொல்லி விட்டு உள்ளே சென்றனர்.
"பிள்ளைங்க ரெண்டும் போனதும்
வீடே வெறுமையான மாதிரி இருக்குல்லயா கதிரு.....?" என்று கேட்ட தாயிடம்,
"அக்காவுக்கும், பிள்ளைங்களுக்கும் அங்க வேலை இருக்குதுல்லம்மா? சீக்கிரத்துல மறுபடி பார்த்துக்குவோம்; உள்ள வாங்க!" என்று அன்னையை சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் கதிர்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro