Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 82

"வெல்கம் ஹோம் பாஸ்!" என்ற வரவேற்புடன் தன் கையிலிருந்த தட்டில் ஐந்தாறு கண்ணாடி டம்ளரை வைத்து, தண்ணீர் நிரப்பி அதில் கலர் கலரான ஜெல்லி பால்களை போட்டு கொண்டு வந்தவனின் கையில் இருந்த தண்ணீரை எட்டிப் பார்த்த கதிர் சஞ்சீவிடம்,

"என்னதுடா இது....? மத்த எல்லாரும் எங்க காணும்? எனக்கு நீ கரெக்டா தேவைப்படுற நேரம் பாத்து பொந்துக்குள்ள போயி ஓடி ஒளிஞ்சுக்கிட்டு, இப்ப வெல்கம் சொல்லிக்கிட்டா முன்னால வந்து நிக்குற? திமிரு தான்டா உனக்கு!" என்று திட்டிய கதிரைப் பார்த்து பல்லைக் காட்டி வழிந்தவன்,

"நாந்தான் உங்கள டீல் பண்ண அம்மாவ அனுப்பி வச்சுட்டேனே? அவங்களோட நீங்க என்ன பேசிட்டு வந்தீங்களோ தெரியல! பட் சர்ச் வாசல்ல கார்ல இருந்து எறங்குனப்போ நீங்க நார்மல் ஆகிட்டீங்க! நாந்தான் இன்னிக்கு பூரா உங்க பேஸ் எக்ஸ்ப்ரெஷன மானிட்டர் பண்ணிட்டே தான இருந்தேன்; இப்ப மத்தவங்க எல்லாரும் உள்ள கொஞ்சம் பிஸியா இருக்காங்க. அதனால தான் நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்க வந்தேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க!" என்று சொல்லி விட்டு மேலாக எண்ணெய் படிந்திருந்த தண்ணீர் டம்ளருக்குள் இருந்த திரியை பற்ற வைத்தான்.

கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீர் விளக்கு ஜெல்லி பால்களுடன் சேர்ந்து அழகாக  எரிந்தது.

"வெல்கம் ஹோம் ந்யூலி மேரீட் கப்பிள்! உங்களோட மேரேஜ் லைஃப் ரொம்ப கலர்புல்லா ப்ரைட்டா ஸ்டார்ட் ஆகட்டும்! மை பெஸ்ட் விஷ்ஷஸ்!" என்று சொல்லி அவர்களுக்கு ஆரத்தி சுற்றி முடித்து விட்டு நிஜமான அக்கறையிலும், அன்பிலுமாக மணமக்களை வாழ்த்தினான் சஞ்சீவ்.

"தேங்க்ஸ்டா தம்பி! இந்த கண்ணாடி டம்ளர் விளக்கு ரொம்ப அழகாயிருக்கு!" என்று கதிர் அவனிடம் புன்னகைத்த படி சொல்ல சந்தனாவும் சஞ்சீவிற்கு நன்றி சொன்னாள்.

"உள்ள வாங்க!" என்று சொன்னவன், வராண்டாவிற்கு சென்றதும் அவர்களை அங்கேயே நிற்க சொல்ல வெண்மதி, இளமதி இருவரும் ஒரு தாம்பாளம் நிறைய ரோஜா இதழ்களை கொண்டு வந்து கதிர், சந்தனா இருவரது தலைகளிலும் தூவினர்.

வெண்மதியை ஜெபா தூக்கிக் கொள்ள, இளமதியை சஞ்சீவ் தூக்கிக் கொள்ள தன்னுடைய கதிர் மாமாவை பூத்தூவி வரவேற்றவள், தன்னுடைய வேலை முடிந்ததும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அவனுடைய மனவலியை சற்றே குறைக்க வேண்டும் என்று நினைத்து வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் எடுத்த ஒவ்வொரு விதமான முயற்சிகளைப் பார்த்து நெகிழ்ந்த கதிர் தன்னுடைய கழுத்தை திடீரென கட்டிக் கொண்ட இளமதியிடம்,

"என் குட்டி நிலாவுக்கு என்ன வேணும்?" என்று ஆர்வமாக கேட்டான்.

"உனக்கு இங்க ஆ வலிச்சதுல? இப்ப போயிதுச்சா?" என்று அவன் நெஞ்சை தொட்டுக் காட்டி கேட்ட பிஞ்சின் அக்கறையிலும், அன்பிலுமாக கண்கள் கலங்கியது அவனுக்கு. தன்னுடைய கணவனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சந்தனாவும் பிள்ளையின் கேள்வியில் உருகித் தான் போய் விட்டாள்.

மூன்றாவது மனிதர்களாக பழகத் தொடங்கிய கல்பனாவின் குடும்பத்தினருக்கு அவனிடம் இருக்கும் அன்பும் வாஞ்சையும் அவனைப் பெற்றவனுக்கு இல்லாமல் போய் விட்டது தான் அவளுக்கு சற்று வருத்தம்....

"மதிக்குட்டி.... உங்க சந்து அத்தை என்னைய கொஞ்ச நேரம் ரவுண்ட்ஸ் கூட்டிட்டுப் போனா! மாமாவுக்கு மருந்தெல்லாம் போட்டு விட்டா! அதுனால மாமா சரியாகிட்டேன்டா! நாம இப்ப ஜாலியா இருக்கோம் தான.... அதுனால ஒரு சுத்து சுத்துவோமா?" என்று கேட்டு இளமதியை வயிற்றுடன் இறுக அணைத்து பிடித்துக் கொண்டு இரண்டுமுறை
தட்டாமாலை சுற்றி விட்டு இறக்கி விட்டான்.

ஜெபாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த வெண்மதியும் தன்னுடைய கதிர் மாமாவின் சந்தோஷத்தால் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

"அம்மா.... கதிர் மாமா ஹாப்பி ஆகிட்டாங்க!" என்று கத்திக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.

"டேய்.... எவ்ளோ நேரம்டா வெளியவே நிக்க வப்பீங்க? வீட்டுக்குள்ள விடுங்கடா! எங்க ரெண்டு பேருக்கும் வயிறு பசிக்குது!" என்று சொன்ன கதிரை ஜெபா வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

"சாப்பிட வாங்க அத்தான்!" என்று கூப்பிட்டவனிடம்,

"எது.... இந்த ட்ரெஸ்ஸோடயேவா? கசகசன்னு இருக்குடா சேகர்! முதல்ல மேல போயி ட்ரெஸ்ஸ மாத்திட்டு, கை கால் முகமெல்லாம் கழுவிட்டு கீழ வர்றோம்! அப்புறமா வந்து சாப்பாடு எடுத்துக்குறோம்!" என்று சொன்னான்.

இருவரும் மாடிக்குச் சென்று கதிருடைய அறையில் தங்களுடைய திருமண உடையை மாற்ற எண்ணி கபோர்டில் இருந்து
வேறு இலகுவான உடையை எடுத்து வைத்தனர்.

"ஏய் சூபொ.... நான் நல்லா சரியாகிட்டேன்டீ! நைட் நிஜமாவே ஒண்ணுமே கிடையாதா?" என்று ஏக்கக்குரலில் விளையாட்டாக கேட்டவன் இந்த ஒரு நாளில் இவள் தனக்காக எத்தனை விஷயங்களை வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறாள் என்று சற்றே கர்வமாக நினைத்துப் பார்த்தான்.

"டே.....ய்! நீ சரியாகிட்டியோ, சரியாகலையோ.... அதெல்லாம் எனக்குத் தெரியாது... ஆனா
இன்னிக்கு இங்க ஒண்ணும் கிடையாது. சஞ்சீவ், குணாளினியாவது ஓகே;
மினு, ஜெபா, பிள்ளைங்க இவங்க எல்லாரையும் வீட்ல வச்சுக்கிட்டு நாங்க மேல பெட்ரூம்ல படுக்கப் போறோம்னு எப்டி சொல்ல முடியும்? நோ வே! மரியாதயா இன்னிக்கு ஒரு நாள் கையும் காலையும் கட்டி வச்சிக்கிட்டு சும்மாயிரு!" என்று சொன்னவளிடம் வருத்தமாக உச்சுக்கொட்டினான் கதிர்.

உதட்டளவில் உச்சுக்கொட்டினாலும்
சந்தனா தன்னை நோக்கி தனக்காக செய்யும் விஷயம் ஒவ்வொன்றும் அவனுக்கு திரும்ப திரும்ப உற்சாகத்தையும், கர்வத்தையும் கொடுத்தது.

அவளுக்கு ஒரு பொருள் வேண்டும் என்று நினைத்து விட்டால், அடுத்த நிமிடம் அவள் கையில் அந்தப் பொருள் இருக்க வேண்டும்! இத்தகைய இயல்புடையவள் இவ்வளவு புரிதலுடன் தன்னுடைய திருமண விருந்தையும், திருமண இரவையும் எவ்வாறு ஒரே வார்த்தையில் வேண்டாம் என்று சொல்கிறாள் என்று நினைத்த கதிருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.

"ச்சை.... இது என்ன இம்ச? காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் இதெல்லாம் செட் பண்றதுக்கு தான் அவ்ளோ நேரம் ஆச்சுன்னு பாத்தா, இப்ப இதக் கலைக்குறதுக்கும் இவ்ளோ டைம் எடுக்குது..... பேசாம ஜோஸஃபின், கல்பனா யாரையாவது ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்துருக்கலாம்!" என்று சொன்னவளுடைய சலிப்பைக் கேட்டு தலையை கோதிக் கொண்டவன், தன்னுடைய கோட், பேஸ் கோட், சட்டை, பனியன் இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கழற்றி ஸ்டாண்டில் தொங்க விட்டுக் கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரத்திற்குள் தனது தலைக்குள் நடந்திருந்த ஹேர்பின்களின் படையெடுப்பில் இருந்து விடுபட்டு ஒருவழியாக
தன்னுடைய தலை அலங்காரத்தை கலைத்து, தலைமுடியை விரித்து விட்டிருந்த சந்தனா ஆயாசமாக தனது ப்ளவுஸின் பேக் நாட்டையும் அவிழ்த்து படுக்கையில் விழுந்தவள் லேசாக வலித்த கழுத்தை அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டிருந்தாள்.

தனது திருமண ப்ளவுஸில் முத்துக்கள் மற்றும் மணிகள் கோர்த்திருந்த பேக் நாட் தனது கூந்தலுடன் பின்னி பிணைந்து தன் முதுகில் அழுத்தி இம்சை கொடுத்ததை கண்டு மறுபடியும் எரிச்சலடைந்தாள்.

தன் மனைவி படும்  அவஸ்தையைப் பார்த்து சிரித்துக் கொண்டான் கதிர்.

"ஏன்டீ.... எந்த வேலைய செஞ்சாலும் பொறுமையே இல்லையாடி உங்கிட்ட?
இதுக்குத்தான் பத்து பேர பெட்ருமுக்குள்ள உள்ள விடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தியா? உனக்கு ஹெல்ப் வேணும்னா என்னைய கூப்ட வேண்டியதுதான? நான் வர்றேன் இரு!" என்று சொன்ன கதிரிடம்,

"டேய்.... அங்கயே நில்லு! கிட்ட வராத!" என்ற கட்டளையில் தள்ளி நிறுத்தினாள் சந்தனா.

"என்னாச்சுடீ.... நான் இப்ப உம்பக்கத்துல வந்து உனக்கு ஹெல்ப் பண்ணலையின்னா ஒண்ணு நீ உன் முடிய வெட்டணும். உன் ப்ளவுஸோட வால வெட்டணும்.... நீ எத வெட்டப் போற?" என்று கேட்டு புருவம் உயர்த்தியவனிடம் சலிப்புடன் உச்சுக்கொட்டியவள்,

"முதுகுல அழுத்துறத மட்டும் எடுத்து விடு! வலிக்குது!" என்று சொல்லி முகம் சுளித்தாள்.

"இப்டி படுத்துட்டு முதுக மட்டும் பாருன்னு சொன்னன்னா நான் எப்டிறீ அத மட்டும் பாக்க முடியும்? கடவுளே.... கதிரோட கையக் கொஞ்சம் கட்டி வையிப்பா! இவ ஒரு மார்க்கமா இருக்கா!" என்று மெல்லிய குரலில் முணங்கிய கதிர், படுக்கையில் அமர்ந்து சந்தனாவின் முதுகுப்புறமாக கைகளை விட்டு, அவளுடைய முடிக்கற்றைகளை மெல்லமாக ப்ளவுஸின் பின்புற நாடாவிலிருந்து பிரித்து எடுத்து விட்டான்.

"எழுந்திரிடா பொம்ம..... இப்டி படுத்துருந்தன்னா திரும்ப திரும்ப முடி சிக்கலா தான் ஆகும்!" என்று சொன்னவனிடம் களைப்பான குரலில்,

"ப்ளீஸ் ரேஷன்.... ட்டூவே ட்டூ மினிட்ஸ்! ரொம்ப டயர்டா இருக்கு!" என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டாள் சந்தனா.

"நீ இருக்கியேடீ.... சரியான இம்ச பிடிச்சவ; ஒன்னைய கட்டிக்கிட்டு எம்பாடு பெரும்பாடு தான் போ! ரப்பர் மாதிரி வளையுறா பாரு!" என்று அலுத்துக் கொண்டவன், அவளை பாதி உடம்பு வரையில் தூக்கி தன்னுடைய மார்பில் கிடத்திக் கொண்டான்.

கதிருடைய வெற்று மார்பும், அவனது உடம்பில் இருந்து புறப்பட்டு வந்த டியோடரென்ட் மணமும், அவனுடைய இதயத்துடிப்பும் அவன் மார்பில் சாய்ந்திருந்த சந்தனாவுக்கு ஏதோ ஒரு புது விதமான உணர்வைக் கொடுத்தது.

கையால் தலைமுடியைக் கோதி படிய வைத்து அதைப் பின்னிக் கொண்டிருந்தவனிடம்,

"டேய் ரேஷன்..... இந்த ஃபீல்
ரொம்ப சுகமா இருக்குடா.... நான் அப்டியே தூங்கட்டுமா?" என்று கேட்டாள் சந்தனா.

"அடி பின்னிருவேன் பாத்துக்க.....! சாயந்தரம் அஞ்சு மணிக்கு குடிச்ச காஃபியும் சாப்ட்ட டிபனும் தான்..... மணி பத்தாகப் போகுது! நீ ட்ரெஸ்ஸ கூட மாத்து, மாத்தாம படுத்துக்க...... ஆனா கண்டிப்பா சாப்ட்டு தான் தூங்கணும்!" என்று கண்டிப்பான குரலில் தன் மனைவியிடம் சொன்னான்.

"சரி ஒரு கிஸ் குடு..... உன்னோட ட்ரெஸ் இல்லாத உடம்பு என்னைய கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிடுச்சு! நீ திமிங்கலம் மாதிரி பெரிசா எல்லாம் இல்லடா..... அங்கங்க குட்டி குட்டியா பாடியில கட்ஸ் வச்சு ரொம்ப மேன்லியா தான் இருக்க!" என்று கண்சிமிட்டியவளை கழுத்தை சேர்த்து ஒரே வெட்டு வெட்டும் நோக்கத்துடன் முறைத்திருந்தான் கதிரேசன்.

"என்னடா மொறைக்குற? ஒரே ஒரு கிஸ் தானடா கேட்டேன்? அதுக்கா இவ்ளோ பயங்கரமான லுக்கு?" என்று சற்றே ஆச்சரியமாக கேட்டவளிடம், 

"இன்னிக்கு வெறும் சைவம் தான்.... அதுவும் ரூம்ல படுக்கை கூட கிடையாதுன்னு சொன்னவ,
ஒரே ஒரு கிஸ் கேட்டதுக்காக தான் இந்த லுக்! வேணாண்டீ......! என் கண்ட்ரோல் போயிடுச்சுன்னா நான் எப்ப உம்மேல பாயுவேன்னு தெரியாது!" என்று மறுப்பாக தலையசைத்து எச்சரித்தவனிடம்,

"அதெல்லாம் பாத்துக்கலாம்! இப்ப நீ எனக்கு ஒரு கிஸ் குடு!" என்று கேட்டு அவனுடன் படுக்கையில் உருண்டாள் சந்தனா.

வெள்ளம் கரை புரண்டு ஓடும் முன் கொடுக்கப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை போல் அவனுடைய உணர்வுகள் கரை புரண்டு ஓட நினைக்கையில் அவன் தன் மனைவிக்கு தந்த எச்சரிக்கையை அவள் பெரிதாக நினையாமல் கதிருடன் ஒன்றி இருந்ததால் சந்தனாவின் உடல் பாகங்கள் சிலவற்றிற்கும், அவளது உடைகளுக்கும் பயங்கரமான சேதாரம் ஏற்பட்டது.

வேறு எவரிடமும் காட்ட முடியாத இடங்களில் அவனது நகக்கீறல்கள், பிடித்த அசைவ  பதார்த்தத்தை ஆவலுடன் சுவை பார்ப்பது போல் அங்கங்கு சுவை பார்த்து மென்று தன் உடம்பில் அவன் தந்த வன்முத்தங்கள்  இவற்றையெல்லாம் விட மனைவியை புதிதாக பார்த்த மயக்கத்தில் காதருகில் கேட்ட
கணவனின் வர்ணனைகள் இவைகளனைத்தையும்
பார்த்த சந்தனாவுக்கு தன்னுடைய வாயை வைத்துக் கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம் என மிகத் தாமதமாக ஞானோதயம் பிறந்தது.

அறைக்கு உடை மாற்ற வந்து ஏறக்குறைய கால் மணி நேரம் ஆகியிருந்த நிலையில் அவன் முன்னே வெற்றுடம்பாக இருந்தவளின் மீது முழுதாக போர்வையை போர்த்தி விட்டவன்,

"இதுக்கு மேல அதெல்லாம் பாத்துக்கலாம்ங்குற வார்த்தைய நீ எங்கிட்ட சொல்லுவ? இப்பவே இன்னும் எல்லாத்துக்கும் கூட நான் ரெடி தான்.... ஆனா உன்னோட ஒரே ஒரு வார்த்த தான் என்னை இதோட நிறுத்திடுச்சு! உன்னோட ப்ளவுஸ் வேற கன்னாபின்னான்னு ஆகிடுச்சு ஸாரி சூபொ..... சீக்கிரம் கீழ வா!" என்று அவள் முகம் பாராமல் சொல்லி விட்டு கதவைத் திறக்கப் போனான்.

"டே......ய்! டே....ய்; சட்டையப் போட்டுட்டு வெளிய போய்த் தொலடா!" என்று வேகமான குரலில் சொன்னவளின் குரல் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன் பரபரவென ஒரு டீ ஷர்ட்டை தலைக்குள் நுழைத்து,
இரண்டு நிமிடங்களுக்குள் அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.

அவனை உடம்பில் சட்டை மட்டும் அணியாமல் பார்த்ததற்கே தனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் தன்னை முழுமையாக ஒன்றும் இல்லாத நிலையில் பார்த்தாலும் இன்று வேண்டாம் என்ற ஒரே வார்த்தைக்காக ஓட்டமாக ஓடுகிறானே என்று நினைத்த சந்தனாவிற்கு தன் கணவன் மேல் அளவிலா காதல் பெருக்கெடுத்தது.

அவன் அவளுக்குத் தந்த மரியாதையைப் போல் அவன் தந்த இம்சைகளும் அளவில்லாதது தான் என்று நினைத்து சிரித்துக் கொண்டவள்,

"இவன் முக்கா சைஸ் திமிங்கலம் இல்ல! முழுத் திமிங்கலமே தான்....
அம்மா.... வாய வச்சிக்கிட்டு சும்மாயிருக்கியாடீ நீ?" என்று வலியில் முணங்கிய படி எழுந்து ஒரு டாப்ஸை அணிந்து கொண்டு மறக்காமல் தன்னுடைய கழுத்தை முழுமையாக மூடிய படி துப்பட்டாவை அணிந்து கொண்டு கீழிறங்கினாள்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro