Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 81

தங்களுடைய மாப்பிள்ளையின் வீட்டில் நடந்த பிரச்சனையை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட ஆலென், சுமலதா, ஜெபா மூவரும் இவ்வளவு நேரம் கதிருக்கு தங்களால் முடிந்த அளவு உபத்திரவம் கொடுத்து விட்டோமே என்று வருந்தினர்.

"ஆலென்.... சந்து இப்ப அத்தான் வீட்டுக்கு தான் போகணும்ங்குறா? நம்ம என்னப்பா பண்றது?" என்று ஜெபா கையைப் பிசைந்த படி தன் தந்தையிடம் கேட்க ஆலென் அவனிடம்,

"ஒரு ஆட்டோவ பிடி மோனே.... நாம நாலு பேரும் ஆட்டோவுல ஏறிக்கிட்டு, அவங்க ரெண்டு பேரையும் கார்ல வீட்டுக்கு வரச் சொல்லிடுவோம்! நாம இன்னிக்கு சந்து வீட்லயே ஸ்டே பண்ணலாம்! மாப்பிள்ளையோட அம்மாட்ட நாம எப்டியும் பேசணும் வேற!" என்று சொன்னார்.

"ஆமா ஆலென்.... பாகேஸ்வரி என்னை மாதிரி அவங்கள மட்டும் நினைக்குற காரெக்டர் இல்ல; அவங்களோட ஹஸ்பெண்ட் கொஞ்சம் மோசமானவரா இருந்தாலும், அவரை ஒரு இடத்துல  அவங்க இதுவரைக்கும் விட்டுக் குடுத்ததேயில்ல! ஸோ இந்த சிச்சுவேஷன் அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்!" என்று சற்றே வருத்தத்துடன் சொன்ன சுமலதாவிடம் எகிறிக் கொண்டு வந்தான் ஜெபசேகரன்.

"...ம்மா! பாகேஸ் ஆன்ட்டிக்கு என்ன கஷ்டம்ங்குறீங்க? அறுபது வயசுல கொஞ்சம் கூட மெச்சூர்டா யோசிக்காம, வீட்டை விட்டு ஒரு ஆளு ஓடிப்போயிருக்கான். அப்டிப் போனவன நெனச்சு அவனோட பொண்டாட்டியும், புள்ளையும் ஒப்பாரி வச்சுட்டு இருக்கணுமா? என்ன நியாயம் இது.....?"

"பொதுவா ஒரு கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய நம்பிக்கைய ரெண்டாவது தடவையா சுக்கு நூறா ஒடச்சிட்டு ஓடிப்போயிருக்கான்; அதுக்கே அவன தேடிப் பிடிச்சு செருப்பால அடிக்கணும். இதுல அவன் போயிட்டான்னு துக்கம் வேற அனுஷ்டிக்கணுமாம்..... எங்களுக்கெல்லாம் வேற வேலையில்ல?" என்று ஆவேசத்துடன் பேசியவனை அடிக்குரலில் அமைதியாக இருக்கச் சொல்லி மிரட்டினார் சுமலதா.

"ஜெபா பேசட்டும்மா.... அவனை ஏன் தடுக்குறீங்க?" என்று சுமலதாவிடம் கேட்ட கல்பனா,

"உன்னோட ஐடியாலஜி ரொம்ப நல்லாயிருக்கு ஜெபா! உனக்கு வரப்போற வொய்ஃப் ரொம்ப லக்கி!" என்று புன்னகைத்த படி சொல்ல கல்பனாவிடம் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டான் ஜெபா.

"கல்யாணம்ங்குறது பெரிய கமிட்மெண்ட்; எனக்கு இப்போதைக்கு அதப்பத்தின ஐடியாவே இல்ல.... ஆள விடுங்க!" என்று சொல்லி விட்டு அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான்.

ஆலென் கிளம்புவதற்கு பத்து நிமிடங்கள் முன்னரே சந்தனா கதிருடன் சர்ச்சில் இருந்து கிளம்பியிருந்தாள். தன் முழு கவனமும் சாலையில் இருந்தாலும் சந்தனா அடிக்கடி தன்னுடைய ஓரக்கண்ணால் கதிரை ஒரு பார்வை பார்த்தபடியே காரை ஓட்டினாள்.

"கதிர்...... நீ ஓகேவா? ஸாரிடா..... எனக்கு கொஞ்ச நேரம் முன்னால தான் விஷயம் தெரியும்! அதுவும் கல்பனா தான் எல்லாத்தையும் சொன்னா!" என்று சொன்ன தன்னுடைய மனைவியிடம் சடைத்துக் கொண்டு உச்சுக்கொட்டினான் கதிர்.

அவள் காரை ஓட்டும் வேகம் சீராக இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தவன், காரின் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடினான்.
காரை ஓட்டிக் கொண்டு சென்ற சந்தனாவுக்கு தன்னுடைய பக்கத்தில் இருந்த கணவனின் நிலை மிகவும் வருத்தத்தை அளித்தது. காலையில் எவ்வளவு துள்ளலுடன் இருந்தவன், இப்போது இப்படி துவண்டு போய் கிடக்கிறானே என்று நினைத்து வருந்தினாள்.

திருமண இரவு பற்றி அவளிடம் எவ்வளவு ஆசையும், எதிர்பார்ப்புமாக பேசினான்? இப்போது தன் பக்கத்தில் அமர்ந்து காரை ஓட்டிக் கொண்டிருப்பவள் சந்தனா என்பது வரையிலான உணர்வுகளுடன் மட்டும் தான் இருக்கிறான்.

"அந்தாளு, இந்தாளு...." என்று மரியாதையில்லாமல் பேசினாலும் தன்னுடைய தந்தையின் மீதான கதிரின் அன்பு சந்தனாவிற்கு மிக நன்றாகவே தெரியும். அது ஒரு விதமான ஏக்கம்.... மற்ற தந்தைகள் எல்லாம் தங்களுடைய பிள்ளைகளிடம் அன்பு செலுத்துகையில், என் தந்தை மட்டும் என்னை சிறுவயதில் இருந்து அவர் பக்கத்தில் கூட அண்ட விட்டதில்லையே என்ற ஏக்கம்! இந்த ஏக்கம் இனி காலம் முழுவதும் ஒரு நிறைவேறாத ஏக்கமாகவே இருக்கப்போகிறதே என்று எண்ணிய சந்தனாவிற்கு அழுகையாக வந்தது.

"கதிர் பீச்சுக்குப் போகலாமா?" என்று கேட்டவளிடம்,

"வேண்டாம்!" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் அவளது கணவன்.

"இல்ல.... நாம இப்ப பீச்சுக்குப் போலாம்! போறோம்!" என்று சொன்னவளிடம்,

"உன் இஷ்டத்துக்குத் தான் காரியத்த நடத்தணும்னு முடிவு பண்ணிட்டன்னா, பெரிசா எங்கிட்ட எதுக்கு போலாமான்னு சம்மதம் வேற கேக்குற?" என்று எரிந்து விழுந்தான்.

"ஸாரிடா.....!" என்று சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தவளிடம்,

"எதுக்கு இத்தன ஸாரி? எதுக்கு இப்டி பாவமான ஒரு லுக்கு? என்னைய பாத்தா உம்முந்தானைய புடிச்சிக்கிட்டு மூக்கு சிந்துற சுள்ளான் கணக்கா தெரியுதா? எங்கப்பன் எங்கயோ ஓடிட்டான் தான்! மனசுக்கு ரொம்ப கஷ்டமாத் தான் இருக்கு.... ஆனா நீ என்னையப் பாத்து பரிதாபப்படுற அளவுக்கு ஒண்ணும் கஷ்டமாயில்ல!" என்று சொன்னவனிடம் அடிபட்ட குரலில்,

"ஏன் கதிர்.... உனக்காக நான் வருத்தப்படக் கூடாதா? உன்னோட வருத்தம் என்னோட வருத்தம் இல்லையா?" என்று கேட்டாள் சந்தனா.

"ஹா.....ங்! இப்ப என்னடீ சொன்ன?" என்று கனவில் இருந்து விழித்தவன் போல அவளுடைய கடைசி வார்த்தையை திரும்ப சொல்லும்படி கேட்டவனிடம்,

"உன்னோட வருத்தம் என்னோட வருத்தம் இல்லையான்னு கேட்டேன்டா!" என்றாள் சந்தனா மெல்லிய குரலில்.

"எப்பவும் எனக்கு மனசு கஷ்டமா இருந்தா, நீ சந்தோஷம் தானடீ படுவ..... அதுபோக எனக்கு அந்த மனசு கஷ்டத்த குடுக்குறவளே நீயாத் தான் இருப்ப! இப்ப எப்டி உன்னோட இயல்புலயே மாற்றம் வந்துடுச்சு? நான் வருத்தத்துல இருந்தா நீயும் வருத்தப்படுவேங்குற?" என்று சிறுகுழந்தை போல் சந்தேகம் கேட்டான்.

இவனிடம் காதலில் விழுந்ததில் இருந்து அவள் சந்தனக்கட்டை போல் நாளுக்கு நாள் அவளுடைய ஆணவம், திமிர், பிடிவாதம் இவற்றையெல்லாம் தேய்த்து தன்னிலிருந்து கரைத்துத் தான் விட்டிருக்கிறாள்! ஏதோ
இவ்வளவு நாட்கள் அவற்றையெல்லாம் உணரவே இல்லாதவன் போல் புதிதாக இப்போது ஒரு கேள்வி கேட்பவனிடம் என்ன சொல்வது, எதைச் சொல்வது என்று திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

"பதில தெரிஞ்சுக்கணுங்குற ஆர்வத்துல கேள்வி கேக்குறியா? இல்ல தெரிஞ்சுக்கிட்டே என்னை வெறுப்பேத்தணும்னு கேள்வி கேக்குறியா? யூ ஆர் மை ஹஸ்பெண்ட்! யூ ஆர் மை லைஃப் பார்ட்னர்..... ஐ லவ் யூ கதிர்..... அப்கோர்ஸ் நீ கஷ்டத்துல இருந்தா, எனக்கும் கஷ்டமாத் தான் இருக்கும்! நீ வருத்தமா இருக்கன்னு சொல்லிட்டு நான் நம்ம வெட்டிங் டின்னரயே கேன்சல் பண்ணிட்டேன்! நான் சாப்டாதது மட்டுமில்ல, நம்ம கூட வந்த யாருக்கும் சாப்பாடு போடல. எல்லாரும் வீட்ல போய் தோசை சுட்டு சாப்புடுறாங்களோ, இல்ல உப்மா கிண்டி சாப்டுறாங்களோ தெரியல. பட் நீ தலைய குனிஞ்சு அவமானத்துல தவிச்சுட்டு இருந்த நேரத்துல, எனக்கு வேற எதுவுமே பெரிசா தெரியல ரேஷன்!" என்று சொன்னவளிடம் பதிலே பேசாமல் அமைதியாக ஜன்னல் வழியே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.

பத்து நிமிடங்களுக்குப் பின்னர் காரை நிறுத்தியவள் அவனிடம், "ஏய்.... பீச்சுக்கு வந்துட்டோம்! கொஞ்ச நேரம் காத்தாட வாக் பண்ணப் போறமா......? இல்ல காருக்குள்ளே உட்கார்ந்துருப்பமா?" என்று கேட்டவளிடம்,

"எனக்கு ஒரு கிஸ் குடு லஷ்மி! இந்த கிஸ்ஸ கேட்டு வாங்குறதுக்காக நான்
பத்து நிமிஷமா பொறுமையா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!" என்றான் சாதாரணமான குரலில்.

"டேய்...... எங்க வந்து என்னத்த கேட்டுக்கிட்டு இருக்க? நீ வருத்தமா இல்ல?" என்று சந்தேகமாக கேட்டவளிடம்,

"ம்ப்ச்! ரொம்ப வருத்தமா இருந்தேன் தான்! பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும்..... இப்ப ஏதோ ஜிவ்வுன்னு வானத்துல பறக்குற மாதிரி ஃபீல் ஆவுது. என் சூபொ எனக்காக வருத்தப்படுறா, எனக்காக யோசிக்குறா..... எனக்காக அவளோட இயல்புல இருந்து மாறியிருக்கா! மனுஷங்களோட இயல்ப மாத்துறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா லஷ்மி? உங்க அப்பாவுக்காக உங்க அம்மாவும், எனக்காக நீயும் உங்க குணத்துல இருந்து கொஞ்சம் மாறியிருக்கீங்க! என் அப்பந்தான் அவனோட இயல்புல இருந்து மாறல. பரவாயில்ல..... ரெண்டுக்கு ஒண்ணுன்ற கணக்குல நான் ஜெயிச்சுருக்கேன். ஜெயிச்ச வரைக்கும் சந்தோஷம்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..... சரி, நீ எனக்கு கிஸ் குடு!" என்று சாவகாசமான குரலில் கேட்டவனிடம்,

"டேய் லூசுப்பையா! ரோட்ல காருக்குள்ள உட்கார்ந்துருக்கோம். இங்க எப்பிடிறா?" என்று முகம் சிவந்தாள் சந்தனா.

"சரி வீட்ல போயி குடு! பட் நான் கேக்குறதெல்லாம் குடுக்கணும்!" என்று விரல் நீட்டியவனின் விரலைப் பற்றிக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டவள்,

"அட என் த்ரீ போர்த் திமிங்கலம்....
நீ கேக்குறதெல்லாம் நான் உனக்கு குடுக்கணும் தான்.... ஆனா இன்னிக்கு இல்ல! இன்னொரு நாளைக்கு..... நம்மளோட பர்ஸ்ட் டைம் பெட் ஷேரிங் பத்தி நினைச்சு
ரெண்டு பேரோட மைண்டும் ஒரு  எக்ஸ்பெக்டேஷனோட துள்ளிக் குதிச்சுட்டு இருக்கணும் இல்லையா? அதுக்கு இன்னிக்கு வாய்ப்பில்லல..... ஸோ இன்னிக்கு எல்லாருக்கும் ஹால்ல தான் தூக்கம்...... நான், அத்தை, அம்மா, கல்பனா, மதிப்பாப்பாஸ், குணாளினி, மினு, வினோதினிம்மா இவங்க எல்லாரும் ஒருபக்கம்..... நீ, சஞ்சீவ், ஜெபா, ஆலென், ஜனா ஸார், மாணிக்கவேல் ஸார் நீங்க எல்லாரும் ஒரு பக்கம்...... எப்ப எங்களுக்கு தூக்கம் வருதோ அது வரைக்கும் கதபேசப் போறோம், விளையாடப் போறோம், பாடப் போறோம்..... நாளைக்கு எல்லாரும் கிளம்பிடுவாங்க இல்லையா.... ஸோ அதுக்குள்ள முடிஞ்ச வரைக்கும் அத்தைக்கு எங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு கம்பெர்ட்னெஸ் குடுக்கப் போறோம்!" என்று சொன்னவளை அருகில் இழுத்து அவள் கன்னம் கடித்து வைத்தான் கதிர்.

"டேய்.... நான் உனக்கு ரொம்ப எல்லாம் பாவம் பாக்க மாட்டேன்டா!" என்று சொல்லி அவனுடைய கன்னத்தில் அறைய வந்தவளின் கையைப் பற்றிக் கொண்டவன்,

"உங்க அத்தைக்கு மட்டுந்தான் நீ கம்ஃபர்ட் குடுப்பியா? நான் என்ன அத சூப்பர் மார்க்கெட்ல இருந்தா வாங்கிக்கணும்? கல்பனாக்கா எங்கிட்ட பேசுனதுல இருந்து
எப்டி தேங்கிப் போய் நின்னுட்டு இருந்தேன் தெரியுமாடீ? ச்சை..... அப்பவே உங்கிட்ட வந்துருக்கணும்.
இப்ப எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா?" என்று அவளிடம் கேட்டவன் அவனுடைய கம்பர்டபிள் ஸோனான அவள் மார்பில் முகம் வைத்து கண்கள் மூடிக் கொண்டான்.

"வயிறு பசிக்குதா சூபொ? வீட்ல இருக்கிற தோசை, உப்புமா இதுல நமக்கும் பங்கு இருக்குமா? இல்ல வெளிய எதாவது சாப்ட்டு போவமாடீ?" என்று கேட்டவனிடம்,

"ஏன்டா கேக்க மாட்ட? நல்லா சொகுசா படுத்துக்கிட்டு, நைட் டின்னரப் பத்தி கேள்வி வேறயா கேக்குற? கல்பனாட்ட பேசிட்டு வீட்ல ஒண்ணும் சாப்ட இல்லன்னா
போறப்ப ஏதாவது பார்சல் வாங்கிட்டுப் போவோம். சரி சொல்லு.....நீ ஓகே தான?" என்று கேட்டவளின் முகம் பார்த்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தான்.

"ம்ப்ச்! ஒரு கேள்வி கேக்குறேன்.... பதில் சொல்லாம ஈ ன்னா என்ன அர்த்தம்?" என்றவளிடம் மறுபடியும் புன்னகைத்தவன்,

"சித்திரப்பாவை என்
சிந்தனையில் வந்ததால்
சிறுநகை மலர்ந்தது
சித்திரக்கவியவன் இதழினிலே!"

என்று கவிதை சொல்லி கண்சிமிட்டினான்.

"இருட்டான வானம், கடலோட சத்தம், ஜில்லுன்னு காத்து, மூச்சு ஒரசுற அளவு பக்கத்துல நீ, உன் கிட்ட இருந்து திடீர்னு வந்த இந்த கவிதை..... அட்மாஸ்ஃபியரே
ஒருமாதிரி ரொமான்டிக்கா இல்லடா ரேஷன்?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,

"ம்ம்ம்! அதுனால தான் சொல்றேன்..... இவ்ளோ அழகான அட்மாஸ்ஃபியர்ல, இவ்ளோ அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு ஒரு கிஸ் கூட தராம இந்த எடத்த விட்டு கெளம்புனா, நல்லாயிருக்குமா....? நீயே சொல்லு!" என்று கேட்டவன், தன்னுடைய சூனியபொம்மை ஏதோ பதில் சொல்ல வருவதற்குள் அவள் இதழ் மேல் இதழ் பதித்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஒரு முத்தத்தை ஒற்றியெடுத்து விட்டு அவளிடமிருந்து விலகியிருந்தான்.

"எப்படியோ.... இந்த அளவிலாவது நிறுத்தினானே?" என்று நினைத்த சந்தனா மிகவும் நிம்மதியான மன நிலையுடன் காரை அங்கிருந்து எடுத்தாள்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro