
❤ சிறுநகை 78
"மாமா..... நீ சூப்பராருக்க!" என்று சொன்ன இளமதி கதிருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனுடைய தோளில் சாய்ந்து படுக்கையில் அமர்ந்திருந்த அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
இளமதி அழகாக இருக்கிறாய் என்று சொன்னதற்கு ஏற்றாற் போல கதிர் தன்னுடைய திருமண உடையில் ஒரு தேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் போல தோற்றமளித்தான்.
அடர் க்ரே நிற ஜாக்கெட், வெஸ்ட், பேண்ட் அடங்கிய 3 பீஸ் ஸுட்டுடன் அவனது வெள்ளை நிற சட்டை மிகப்பாந்தமாக பொருந்தியிருந்தது. அவன் கட்டப்போகும் டையை முதலிலேயே சந்தனா அழகாக கட்டி தயார் நிலையில் வைத்து விட்டுப் போய் விட்டாள். தனக்கு டை கட்டிக்கொள்ளத் தெரியாது என்று சொன்னதில் தான் குணாளினி அவனுக்காக தைத்துத் தந்த கோட்டை எடுத்து மதியம் அவனுடன் சண்டையிட்டு சென்றிருந்தாள்.
ப்யூட்டி பார்லரில் மேக்கப் முடிந்து தன்னுடைய அலங்காரத்தில் அவனுக்கு போட்டோ அனுப்பியிருந்த சந்தனாவுடைய புகைப்படத்திற்கு இதழ் பதித்தவன்,
அலைபேசியில் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்த குட்டி இளமதி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள்.
"போதா.... மாமா! நீ என்னைய கண்ணாதில இப்தி காத்தவேயில்ல!" என்று உதடுபிதுக்கியவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானம் செய்தவன் எழுந்து சென்று
குழந்தையுடன் கண்ணாடியின் முன் நின்றான்.
"டேய் மதிக்குட்டி..... மாமாவும், குட்டிநிலாவுமா கண்ணாடி முன்னால நிக்குறப்ப மாமாவ விட குட்டிநிலா தான் ரொம்ப அழகாயிருக்குற மாதிரி தெரியுதுடா செல்லம்! அதுனால கண்ணாடியில தெரியுற குட்டிநிலாவுக்கு மாமா இப்ப ஒரு கிஸ் குடுக்கட்டுமா?" என்று அவளிடம் கேட்டுவிட்டு அவனுடைய முதுகில் இருந்த இளமதியை பத்திரமாக கட்டிக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான்.
சந்தனா அக்காவிற்காவது அவளுடைய போட்டோவுக்கு தான் மாமா முத்தம் குடுத்தான்; ஆனால் எனக்கு என்னுடைய நிழலுக்கே முத்தம் கொடுத்து விட்டான் என்று நினைத்த அந்த குழந்தைக்கு பரம சந்தோஷம்!
நல்லவேளை..... இவர்கள் இருவருடைய இந்த விளையாட்டை அந்த 28 வயது குழந்தை பார்த்துத் தொலைக்கவில்லை.... ஒருவேளை பார்த்திருந்தாள் என்றால் இளமதியைப் போலவே தான் அவளும் பொறாமை அடைந்திருப்பாள். அதில் சந்தேகமே இல்லை!
இளமதியும், கதிரும் இப்படி விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களைத் தேடி கல்பனா கதிருடைய அறைக்கு வந்தாள்.
"ஏ.....ய்! கெளம்புன பிறகும் ரெண்டு பேரும் இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று பரபரத்தபடி அங்கு வந்த கல்பனாவிடம் பல்லைக் காட்டி சிரித்தவர்கள்,
"கெளம்பிட்டோம். அதான் விளையாடிட்டு இருக்கோம்!" என்று கோரஸ் பாடினர்.
"இளா.... நீ கீழ போய் கதிர் மாமா கார்லயாவது, சஞ்சீவ் அங்கிளோட கார்லயாவது உட்கார்ந்து ரெடியா இரு செல்லம்..... அம்மா கதிர் மாமாட்ட பேசிட்டு, அவங்கள கூட்டிட்டு ட்டூ மினிட்ஸ்ல கீழ வர்றேன்!" என்று தன் மகளிடம் சொன்னாள் கல்பனா.
"அப்ப பாப்பாவும் த்து மினித்ல கீழ போவேன்....!" என்று இரண்டு விரல்களை காட்டி சொன்ன குழந்தையை இடுப்பில் கைவைத்துக் கொண்டு முறைத்தாள்.
"நீங்க இப்டியெல்லாம் பேசி வெள்ள நிலாவையாவது ஏமாத்தலாம். இந்த குட்டி வாயாடிய ஏமாத்த முடியுமாக்கா? என்னாச்சுக்கா? இந்த ரெண்டு வாலுங்களோட ஓடி ஓடியே டயர்டாகிட்டீங்களா? முகம் ஒரு மாதிரி டல்லாயிருக்கு? எங்கிட்ட ஏதோ சொல்லணும்னு நினைக்குறீங்க போல? பரவாயில்ல சொல்லுங்க.....!" என்று சொன்ன கதிரிடம் மெல்லிய குரலில்,
"கதிர் நான் சொல்ற விஷயத்த கேட்டு டென்ஷனாகாத!
பீரோவுல வச்சிருந்த அம்மாவோட ரெட்ட வட சங்கிலியையும், ஒரு ஜோடி வளையலயும் காணும்டா! உங்கப்பா தான்..... சாயந்தரமா வீட்டுக்கு சாப்ட வந்தவர், அத
எடுத்துட்டு ஒரு லெட்டர் வேற எழுதி வச்சுட்டுப் போயிருக்காரு. இங்க எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க; அதுனால எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல; இந்த வீட்ல இனிமே நான் இருக்க மாட்டேன்; என் சந்தோஷத்த தேடிப் போறேன்னு எழுதி வச்சுட்டு...... எங்கயோ போயிருக்காரு.....!"
"அவரோட லெட்டரப் பார்த்ததுல இருந்து அம்மா ஒரே அப்செட்! நான் முடிஞ்ச வரைக்கும் சந்தனாவுக்கும், அவங்க வீட்ல வேற யாருக்கும் விஷயத்த சொல்லாம அவங்க எல்லாரையும் முதல்ல கெளம்புங்கன்னு சொல்லி சர்ச்சுக்கு கிளப்பி வச்சுட்டேன்.... ஆனா உங்கிட்ட இத சொல்லாம என்ன இந்த விஷயத்துல மேற்கொண்டு என்ன செய்றதுன்னு எங்களுக்குத் தெரியல..... அதான் கதிர் சொல்லிட்டேன். ஸாரிடா தம்பி!" என்று சொன்ன கல்பனாவைப் புரியாத பார்வை பார்த்த கதிர் அடுத்த ஒரு நிமிடத்திற்குள் பெருமூச்சு விட்டான்.
"கேக்குறப்ப எல்லாம் காசு, வீட்ல இருக்குற நேரம் கிடைக்குற
ராஜ மரியாத, வேளா வேளைக்கு எங்கம்மா குடுக்குற சாப்பாடு இதையெல்லாம் விட்டுட்டு மறுபடியும் ஓடிட்டானா? இப்ப பாத்துக்கிட்டத விட இன்னும் நான் அவன எப்டி பாத்துக்கணும்னு எதிர்பாத்தான்னு தெரியலயேக்கா?" என்று கேட்ட படி தலைகவிழ்ந்தபடி கண்கலங்கிய கதிரிடம்,
"ஏய்....ச்சீ! வாய மூடுறா......! உன்னோட அப்பன்ங்குற ஆளு உன் கண்ணீருக்கெல்லாம் வொர்த்தானவன் இல்ல! இதுவரைக்கும் உங்கள கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருந்த சனியன், இத்தோட உங்கள உட்டுட்டு ஒழிஞ்சு போய்டுச்சுன்னு நெனச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டு நீயும் அம்மாவும் உங்க வேலையப் பாருங்க!" என்றாள் தெளிவான குரலில்.
"நான் வேணும்னா அப்டி நெனைக்கலாம்கா.... ஆனா அம்மாட்ட நான் என்னத்த சொல்லி அவங்கள சமாதானம் பண்ணுவேன்? எங்க இருந்தாலும் எங்கம்மா எல்லா விஷயத்திலயும் அவனை தேடுவாங்களே?" என்று சொல்லி விட்டு தன்னுடைய தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
"என்ன தலைவிதிடா உன்னோட தலைவிதி.....? வாழ்க்கையில எவ்ளோ முக்கியமான நாளும் அதுவுமா உன்னைய இப்டி ஒக்கார வச்சுட்டுப் போயிட்டான் பாரு! இப்டித்தான் கிளம்பித் தொலையணும்னு நெனச்சுருந்தான்னா, அத நாகர்கோவிலுக்கு வந்த ரெண்டாவது நாளே செஞ்சு தொலைச்சுருக்க வேண்டியதுதான? பாவி.... ஒங்க ரெண்டு பேரையும் அழ வச்சுட்டு ஊர் ஊரா சுத்துறானேடா?" என்று தன்னுடைய ஆற்றாமையில் புலம்பிய கல்பனா,
"சீக்கிரமா கீழ எறங்கி வா கதிர்! நாம கொஞ்ச நேரத்துல சர்ச்சுல இருக்கணும்......! ------ போச்சுன்னு போனவனுக்காக உங்கல்யாணத்த எல்லாம் நிறுத்த முடியாது! எழுந்திரிச்சு முகத்த கழுவணும்னா கழுவிட்டு வா!" என்று சொல்லி விட்டு இளமதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவனது அறையில் இருந்து வெளியேறினாள்.
"அம்மா...மாமா அழுவுதான்!" என்று தன்னுடைய அன்னையிடம் கதிரைக் கையைக் காட்டி ரகசிய குரலில் சொன்ன இளமதியிடம் அவளது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய கல்பனா,
"மாமாவுக்கு இங்க ஆ வலிக்குதாம்டா பட்டு...... அதான் அழுவுறான்... நம்ம கீழ போலாம்! மாமா வந்துடுவான்!" என்று அவளிடம் சொல்லி விட்டு இளமதியை கீழே அழைத்துச் சென்றாள்.
ஜனார்த்தனன், மாணிக்கவேல் மற்றும் கல்பனா மூவருடைய முகமும் சரியில்லை என்பதைப் கவனித்த சஞ்சீவ் தன்னுடைய காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்திருந்தான்.
"சஞ்சீவ்..... நீ இன்னும் சர்ச்சுக்கு கிளம்பலையா? நாந்தான் உன்னை அப்பவே கிளம்ப சொன்னேன்ல? நாங்க கொஞ்ச நேரத்துல கதிர கூட்டிட்டு அங்க கிளம்பி வந்துடுறோம்ப்பா! நீ முதல்ல அங்க போ!" என்று அவசரக்குரலில் சொன்ன கல்பனாவிடம்,
"என்னாச்சு சிஸ்டர்? பாஸ் எங்க? அம்மா எங்க? ரெண்டு பேரையும் ஏன் இன்னும் கீழ காணும்?" என்று கேட்டான் சஞ்சீவ்.
"அது வந்து......!" என்று பேச்சை இழுத்த கல்பனாவிடம்,
"ம்ப்ச்! பரவாயில்ல.... சஞ்சீவ்ட்ட சொல்லு கல்பனா; விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான?" என்றான் ஜனார்த்தனன்.
கல்பனா சற்று தயங்கிய படி நிற்க தன்னுடைய மகளின் தடுமாற்றத்தைப் பார்த்த மாணிக்கவேல் சஞ்சீவிடம் பேசினார்.
"சஞ்சீவ்.... கதிரோட அப்பாவ காணும்! சாயந்தரம் வீட்டுக்குள்ள வந்தவர் கதிரோட அம்மா நகைங்க ரெண்ட எடுத்துக்கிட்டு, ஒரு லெட்டர் வேற எழுதி வச்சுட்டுப் போயிருக்காரு!" என்று அவனிடம் அறிவித்தார்.
"அவ்ளோ தைரியம் ஆகிடுச்சா அவருக்கு? ஒரே தப்ப திரும்ப திரும்ப எத்தன தடவ தான் பண்ணுவாரு? நீங்க எல்லாரும் பாஸ கூப்ட்டுகிட்டு போய் அவரோட வெட்டிங்கை அட்டெண்ட் பண்ணுங்க. நான் வெளிய போய் மிஸ்டர் கிருஷ்ணராஜோட ஆக்டிவிட்டி பத்தி கொஞ்சம் விசாரிச்சுட்டு வர்றேன்!" என்று சொன்னவனிடம்,
"வேண்டாம் சஞ்சீவ் தம்பி!" என்று ஒரு தெளிவான உறுதியான குரல் பதில் சொன்னது.
"அம்...மா! சாயந்தரம் தான் கிளம்பியிருந்தா, இந்த நேரத்துக்குள்ள அவர் ரொம்ப தூரம் போயிருக்க முடியாதும்மா! வழியில மடக்கிப் புடிச்சு அவர ஈஸியா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்!" என்று பாகேஸ்வரிக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.
"கூட்டிட்டு வந்து? அவர என்ன கட்டியா போட்டு வைக்க முடியும் தம்பி? இல்லல்ல...... கதிரப்பா எங்க போயிருக்காரு தெரியுமா? கல்கத்தாவுக்கு.... என்ன வேலைக்குப் போயிருக்காரு தெரியுமா? விட்ருங்க! எம்புள்ள வயசுல இருக்குற உங்க கிட்ட அவர் அங்க பாக்கப் போயிருக்குற வேலையப் பத்தி சொல்ல எனக்கு நாக்கு கூசுது!" என்று சஞ்சீவிடம் சொன்னவர் தைரியமான குரலில்
"கதிரு இங்க வாய்யா......!" என்று கூப்பிட்டு தன்னுடைய மகனை தன் பக்கமாக வந்து நிற்கும் படி பணித்தார்.
"கடவுளே... கடவுளே! அந்தாளு எங்க போயிருக்கான்னு எங்கிட்டயும் நீங்க சொல்லிராதீங்கம்மா!" என்று துடித்து தன் காதைப் பொத்திக் கொண்டான் கதிரேசன்.
"சஞ்சீவ் தம்பிட்டயே நான் உங்கப்பனோட யோக்யதய சொல்லல! பெறவு உங்கிட்ட சொல்லுவனா தங்கம்.....? நான் இத்தன வருசமா மூடி மூடி வச்சாப்ல அந்தாள பத்தி உனக்குத்தான் நல்லா தெரிஞ்சுருந்துச்சு தான? அதுக்குத் தான காசு விஷயத்துல கறாரா இருந்து அவன அடிக்கடி மெரட்டிக்கிட்டு இருந்த......?"
"இத்தன செஞ்சும் போய்ட்டான் பாரு! போவட்டும்..... எது எப்டியோ உங்கப்பன் இங்கருந்து கெளம்பிப் போயிருக்குறது நம்ம எல்லாரும் இடிஞ்சு போயி ஒக்கார வேண்டிய அளவுக்கு பெரிய விஷயமில்ல..... நமக்கு அத விட நெறய முக்கியமான வேலையிருக்கு! ராசாத்தி..... நம்ம பாப்பா நம்ம வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்ச நேரம் அந்தாளு கைய ஒதறிட்டு கெளம்பிட்டான் பாரு...... இனி நீ நல்லது கெட்டது எதுக்கும் ஒன்னைய பெத்தவன தேடாதய்யா; ஒருவேள அவனுக்கு அறிவு வந்து அவனா ஒரு நாள் இங்க வந்தான்னா வரட்டும்...... இல்ல தேடிப் போயிருக்குற சாக்கடைக்குள்ளயே முங்கி மூச்சு தெணறி சாவட்டும்!" என்று கரகரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவரிடம்,
"வெல் ஸெட் பாகேஸ்வரி!" என்று சொல்லி பாராட்டினார் வினோதினி.
"அம்மா.... இங்க ஒரு ப்ராப்ளம்.....!" என்று ஆரம்பித்த சஞ்சீவிடம் புன்னகைத்தவர்,
"ப்ராப்ளமா? கதிரோட அம்மா ப்ராப்ளமுக்கு விடையே கண்டுபிடிச்சுட்டாங்க! நீ இப்பப் போயி ப்ராப்ளம்னு சொல்லிட்டு இருக்க? எனக்கு உங்க இவ்ளோ நேர பேச்சுல ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா பாகேஸ்வரி? மருமக வந்த நேரம் இப்டி ஆகிடுச்சுன்னு கதிரோட வொய்ஃப் மேல தப்ப வைக்காம, ஆக்சுவலா தப்பு செஞ்சவங்க யாரோ, அவரத் தான் நீங்க தப்பு சொன்னீங்க..... அவர் உங்களோட ஹஸ்பெண்டாவே இருந்தாலும், வந்தா வரட்டும், வராட்டி அவரோட தலையெழுத்துன்னு தூக்கிப் போட்டீங்க பார்த்தீங்களா..... ஐ'ம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ!"
"பட் ஒரே ஒரு கேள்வி! அவர் கல்கத்தாவுக்கு போயிருக்கார்னு உங்களுக்கு எப்டி தெரியும் பாகேஸ்வரி?" என்று கேட்ட வினோதினியிடம்,
"அங்க தான் போவணும்மின்னு ரெண்டு மாசமா என்னிய கூப்ட்டுக்கிட்டே இருந்தாருங்க. நான் அவருட்ட கதிர விட்டுட்டு எங்கயும் வர மாட்டேன்னு முடிவா சொல்லிட்டேன்; அதுனால தான் அவரு மட்டுமா கிளம்பிட்டாரு போல!" என்று சொன்னார் பாகேஸ்வரி.
கதிருக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து கிருஷ்ணராஜை பாகேஸ்வரி அவனிடம் மிகவும் மரியாதையுடன் தான் பேசுவார்! இன்று முதல்முறையாக மனைவியிடத்தில் தன்னுடைய மரியாதையை மட்டுமல்ல..... கணவன் என்ற உறவையும் மனதளவில் அவர் இழந்துவிட்டார் என்று நினைத்து கதிர் யாருக்காக வருந்துவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றிருந்தான்.
"ஓகே..... ஓகே..... ஃபீல் பண்ணிட்டு நிக்குறதுக்கு எல்லாம் இப்ப நேரமில்ல கதிர்! கெளம்புங்க. லெட்ஸ் மூவ்!" என்று சொன்ன வினோதினியுடைய வார்த்தைகள் அனைவரையும் தார்க்குச்சியால் குத்தியது போல அவசரமாக தயாராகி கதிரின் திருமணத்திற்கு கிளம்ப வைத்தது.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro