Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 75

"அம்மா ஏன் பாஸோட மேரேஜ அட்டெண்ட் பண்ணல? அவர் தான்  பொள்ளாச்சிக்கு வந்து அவங்கள  நேர்ல பார்த்து, மேரேஜ்க்கு கண்டிப்பா வரணும்னு அம்மாவ இன்வைட் பண்ணிட்டுப் போனாரே? அப்புறமும் ஏன் அவங்க இன்னிக்கு இங்க வரல? நாங்க இந்த மேரேஜ்க்காக இன்வைட் பண்ணினவங்க எல்லாருமே கரெக்டா கல்யாணத்துக்கு வந்துருந்தாங்க. அம்மா ஒருத்தர் மட்டும் தான் இங்க வரல! ஏன் இப்டி செஞ்சாங்க?" என்று தன்னுடைய எதிர்ப்புறமாக அமர்ந்து துளைப்பது போல் பார்வை பார்த்து அவளிடம் கேட்ட சஞ்சீவிடம்,

"இப்ப நா மொதல்ல ஒங்க கேள்விக்கு பதில் சொல்லணுங்களா? இல்ல குல்ஃபிய சாப்ட்டுக்கட்டுங்களா?" என்று கேட்டாள் குணாளினி.

கையில் குல்ஃபியை வைத்துக் கொண்டு அதை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் பொறுமையற்ற பெருமூச்சுடன்,

"இத சாப்டுறதுக்கு தான இந்தக் கடை வரைக்கும் வந்துருக்க? வந்த வேலைய முடி. பட் என்னோட கேள்விக்குப் பதில் சொல்லாம ஓடிடலாம்னு நெனக்காத.
சீக்கிரமா இத ஃபினிஷ் பண்ணிட்டு எங்கேள்விக்கு பதில் சொல்லு குணாளினி!" என்றான் சஞ்சீவ்.

"ஐயயோ.... மனசுல இருக்குறத வார்த்த மாறாம கரெக்டா சொல்லுறானே? இந்த ஐச சூப்பிக்கிட்டே அவங்கிட்ட இருந்து எஸ்ஸாகிடுவோம்னு பாத்தா விடாக்கண்டன் அப்டி சூளுவா நம்மள விட மாட்டான் போலிருக்குதே குணாப்புள்ள..... சரி மொதல்ல கையில இருக்குற குல்ஃபிய முடிப்போம்! அப்புறமா இவங்கேக்குற கேள்விக்கு பதில தேடுவோம்!" என்று மனதிற்குள்ளாக நினைத்தவள் அதற்குள் குச்சியில் இருந்த ஐஸில் பாதிப் பாகம் தீர்ந்து போய் விட்டதே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.

"ஒண்ணு போதுமா? இன்னொன்னு சாப்புடுறியா?" என்று கேட்டவனிடம், 

"இன்னும் ஒண்ணுதா வாங்கித் தருவீங்களா? நா இன்னும் ரெண்டு மூணாவது சாப்டலாம்னு நெனச்சேன். ரொம்ப நல்லாயிருக்குதுல்ல ஐசு?" என்று சொன்னவளை கொலைவெறியுடன் பார்த்தபடியே அவளது விருப்பமான குல்ஃபி ஃப்ளேவர்கள் இன்னும் இரண்டை வாங்கி அவளது முன்பாக தட்டில் வைத்து விட்டு பில்லை செலுத்துவதற்காக அங்கிருந்து எழுந்து சென்றான் சஞ்சீவ்.

"குணாப்புள்ள.... இதுதாம்புள்ள சரியான நேரம்! ஐஸ்குச்சிய கையில இடுக்கிக்கிட்டு சிட்டா பறந்துரு!" என்று நினைத்தவள் கதவருகில் செல்வதற்குள் அவனது மார்பில் மோதி நின்று விட்டாள்.

"ஏனுங்க.... பில்லு தான குடுத்துக்கிட்டு நின்னுட்டு இருந்தீங்க? திடும்முன்னு கதவு பக்கத்தால வந்து வழிய மரிச்சுக்கிட்டு நின்னா என்னங்க அர்த்தம்?" என்று கேட்டவளிடம்,

"ம்ம்ம்.... உங்கள எங்கயும் ஓட விடப்போறதில்லையின்னு அர்த்தமுங்கம்மணி! ஆமா.....
எங்க போறதுக்கு இந்த ஓட்டம்....? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே? மேடம் ரெண்டு குல்ஃபிய கேட்டு வாங்குனீங்க.... அதையும் சாப்ட்டு முடிக்கல. அதுக்குள்ள ஓட ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?" என்று கேட்டவன் அவள் கையை வேறு பற்றிக் கொண்டிருக்க ஒரு உளுந்தவடைக்காக ஆசைப்பட்டு வந்து பொறிக்குள் சிக்கிய எலி போல திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் குணாளினி.

"சும்மா நேரத்த போக்குறதுக்காக தான இத கையில வாங்குன? இல்ல.... நிஜமா இந்த குல்ஃபிய சாப்ட்டுருவியா? ஒரே நாள்ல இத்தன குல்ஃபிய சாப்டா உடம்புக்கு எதுவும் செய்யாதா?" என்று சஞ்சீவ் அவளிடம் கேட்க குணாளினிக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.

"அதெல்லாம் எங்கொடம்புக்கு ஒண்ணும் செய்யாதுங்க.
இது என்னத்த தின்னு வளந்த ஒடம்புன்னு நெனைக்குறீங்க? வெறும் ஐஸ்க்ரீமும், மில்க் ஷேக்கும், பாதாம் பாலும், ரோஸ்மில்க்கும் சாப்ட்டு வளத்த ஒடம்பாக்கும்..... வேல செய்ய சடவா இருந்தா இந்த மாதிரியான ஐயிட்டமெல்லாம் தான் எனக்கு சக்தி தர்ற அருமருந்தே..... தெரியும்ல?" என்று அவனிடம் சொன்னவள் அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் மூன்றாவது குல்ஃபியையும் சாப்பிட்டு காலி கவரை குப்பைக் கூடையில் வீசியிருந்தாள்.

"போலாமா....?" என்று கேட்டு ஒரு ஆட்டோவை அழைத்தவனிடம் புரியாமல் விழித்தவள்,

"எதுக்கு ஆட்டோவ கூப்டுறீங்க? நாம கதிர் ஸார் வீட்டுக்குப் போகலையா? எங்க போறோம் இப்ப?" என்று கேட்டாள்.

"காலையில பாஸோட மேரேஜும், அவரோட வீட்ல நடந்த விருந்தும் மட்டுந்தான் என்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டி! பாஸ் எனக்கு குடுத்த வேலைய நான் சரியா முடிச்சுட்டேன். இப்ப மணி 12 ஆகுது. 5 மணிக்கு வந்து ப்ரெஷ் ஆகிட்டு அவரோட சர்ச் வெட்டிங்க்கு கெளம்புனா போதும். இப்ப உன்னைய வீட்டுல கொண்டு போய் விட்டா மறுபடியும் நீ மினு கூட இல்ல குட்டிப்பாப்பாங்க கூட தான் பேசி வெளையாடிட்டு இருப்ப. என் பக்கத்துல கூட வரமாட்ட. பட் எனக்கு உங்கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்! நிறைய பேசணும்! அதான் கடைக்கு கூட்டிட்டு வர்ற மாதிரி வெளிய தள்ளிட்டு வந்தேன். போலாமா?" என்று கேட்டவன் நாகர்கோவிலில் தன்னுடைய ப்ரியமான ஓய்விடத்திற்கு தன்னுடைய வருங்கால மனைவியை அழைத்துச் சென்றான். ஒரு பெரிய சாவியின் உதவியால் பூட்டைத் திறந்து அதன்பின் பெரிய ஷட்டரை திறந்தவனிடம் பயந்த குரலில், 

"ஐயயோ.... இது என்ன எடமுங்க? இம்புட்டு பெரிசா ஆளேயில்லாம கொஞ்சம் பயந்து வர்ற மாதிரியிருக்கு! என்னைய இங்கணக்குள்ள கூட்டிட்டு வந்து போட்டு கீட்டு தள்ளிட்டு பொட்டிக்குள்ள வச்சு அங்கயும், இங்கயும் வீசிட்டு போயிட மாட்டீங்களே?" என்றவளிடம் அடக்கப்பட்ட சினக்குரலில்,

"அடச்சீ! வாயக் கழுவுடீ முதல்ல.... ஸ்டாப் யுவர் நேஸ்டி திங்க்கிங்! இது பாஸோட ஆர்ட் கேலரி! அவர் வரையுற எல்லா விதமான ஆர்ட்டுக்கும் இங்க தான் உயிர் கிடைக்கும்! அவரோட நிறைய பெயிண்டிங்க்ஸ சேல் பண்ணியாச்சு அண்ட் அவர் சமீபமா பெயிண்டிங்க்ல முழுசா கான்சன்ட்ரேட் பண்ணல. அதுனால தான் இந்த ஹால் எம்ப்டியா இருக்கு. உள்ள வா!" என்று சொன்னவன் ஒரு பெரிய ஹாலை தாண்டி நடுப்புறத்தில் இருந்த ஒரு அறையின் கதவை தன்னுடைய கையில் வைத்திருந்த சாவியின் உதவியால் திறந்திருந்தான்.

"இது என்ன நடுவால ஒரு ரூம்பு?" என்று கேட்டவளிடம்,

"இது ஜஸ்ட் யாராவது விஸிட்டர்ஸ் வந்தா மீட் பண்ண, ஆஃபிஸ் ரூம் மாதிரி யூஸ் பண்ணிக்க, ரெஸ்ட் எடுத்துக்க இப்டி எல்லாத்துக்கும்.... ஒக்காரு! இப்பத்தான சாப்ட்ருக்கு அண்ட் குல்ஃபி வேற..... ஸோ கொஞ்ச நேரத்துக்கு பசிக்குதுன்னு கேக்க மாட்டியே?" என்றவனிடம் இல்லையென தலையாட்டியவள் அவனை பயம் அகலாத கண்களுடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏய்.... என்னம்மா! நாம என்னமோ இன்னிக்கு தான் புதுசா மீட் பண்ணிக்குற மாதிரி நீ ஏன் இப்டி வியர்டா பிஹேவ் பண்ற? என்னைய பார்த்து நீ திருதிருன்னு முழிக்குறத பாத்தா நான் ஏதோ இங்க உன்னை கிட்நாப் பண்ணி கூட்டிட்டு வந்த மாதிரியிருக்கு! நீ கொஞ்சம் நார்மலாகு.... நீ இப்டி நடுங்குறத பாத்தா, ஒருவேள
சஞ்சீவ் அண்ணா கிட்டயே போகாதன்னு உங்கிட்ட சொல்லி அந்த மினு பிசாசு உன்னைய வார்ன் பண்ணுனாளா?" என்று கேட்டு அவளருகில் அமர்ந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான் சஞ்சீவ்.

"அதெல்லாமில்லிங்க! அந்தப்புள்ள எதுக்கு என்னைய மெரட்டப்போவுது? அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல!" என்றாள் குணாளினி.

அவளது நீல நிற உடைக்கு பொருத்தமான நிறைய நீல நிற மெட்டல் வளையல்கள் போட்டிருந்தவள் அந்த வளையல் செட்டை தாண்டி அவன் அவளுக்குப் போட்டு விட்ட வெள்ளை வளையல்களை இன்னமும் கையில் அணிந்து கொண்டிருந்தாள்.

அவள் கையைப் பற்றி அந்த வளையல்களில் மென்மையாக இதழ் பதித்தவன், "இத இன்னும் கழட்டாம போட்டுட்டு இருக்குறதுக்கு தேங்க்ஸ் டிம்பிள்!" என்றான்.

"இத வளவிய கழட்டாம போட்ருக்க எனக்கு ஒண்ணும் ஆசயில்ல;
வடிவக்காவுல இருந்து மினு வரைக்கும் எல்லாரும் இத எங்கையில இருந்து உருவி எடுக்க பார்த்துட்டாங்க. கெரகம்.... யாராலயும் இத கழட்டவே முடியல! இது அதுவா உடைஞ்சா தான் எங்கைய விட்டுப் போகும் போலிருக்கு!" என்று சோகமாக சொல்லிக் கொண்டிருந்தவள் அவனுடைய முறைப்பில் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"கம் ட்டூ த பாயிண்ட்..... உங்கிட்ட நான் ரெண்டு கேள்வி கேட்டேன்! ஐ நீட் அன் ஆன்ஸர் பார் தோஸ் கொஸ்ட்டீன்ஸ்!" என்று அவளிடம் கேட்டு தன்னுடைய தலையை கோதிக் கொண்டு ஸோஃபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான் சஞ்சீவ்.

"நான் என்னத்த சொல்ல? அவங்க இங்கணக்குள்ள வந்தா அது உங்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோன்டு...... அத்தைக்கு சந்தேகம்! நீங்களும் அவங்கள இங்க வாங்கன்னு ஒருவார்த்த கூப்டலயா இல்லையா? அதனால கண்டா வராம இருந்தாங்களோ என்னவோ?" என்றாள் மெல்லிய குரலில்.

"சரி.... நீ சொல்ற மாதிரி எங்க அம்மா இந்த மேரேஜ்க்கு வராம போனதுல எம்மேல தப்பு இருக்குன்னே வச்சுக்குவோம்! உங்கிட்ட நான் என்ன தப்பு பண்ணுனேன்? நம்ம ரெண்டு பேருக்குள்ள கிஸ் பண்ணிக்குற வரைக்கும் நாம நெருங்கி தான இருந்துருக்கோம்? ஒவ்வொரு தடவ பாக்குறப்பவும் நான் உங்கிட்ட மறுபடி மறுபடி முதல்ல இருந்து பழக ஆரம்பிக்கணும்னா, அது ரொம்ப கஷ்டமாயிருக்கும் இல்லையா? எல்லாரும் இருக்கும் போது நீ என்னைய மட்டும் அவாய்ட் பண்றது எனக்கு வலிக்குது டிம்பிள்! ஐ வாண்ட் ட்டூ கெட் க்ளோஸர் ட்டூ யூ!" என்று சொல்லி அவளுடைய இடையைப் பிடித்தவனிடம் மறுப்பாக தலையாட்டி உச்சுக்கொட்டியவள்,

"அதெல்லாம் ஒண்ணும் க்ளோஸாவ வேண்டாம்! நீங்க என் பக்கத்துல வரவும் வேண்டாம்! அங்க இங்கன்னு தொடக்கிடவும் வேண்டாம்!" என்று சொல்லி அவனுடைய கையை விலக்கி விட்டாள்.

"ம்ப்ச்.... ஏய்! என்னடீ க்ளோஸா வர வேண்டாம்.....? என் பேமிலியில இருக்குற எல்லார் முன்னாலயும் உங்க அப்பாட்ட இவங்கள கட்டிக்கிட எனக்கு இஷ்டந்தானுங்கப்பான்னு நீ சொன்னியா இல்லையாடீ? அதையும் சொல்லிட்டு இப்ப பக்கத்துல வரவேண்டாம்னும் சொன்னா...... நான் என்ன தான் நினைக்கட்டும்? ப்ளீஸ் டிம்பிள்.... டோண்ட் மேக் ஃபன் ஆஃப் மீ! எப்ப உன்னைப் பார்த்தேனோ, அப்பவே ஐ ஹாவ் ஃபாலன் இன் லவ்! என்னை தூரத்துல நிறுத்தாத! உரிமையா எங்கிட்ட வா, போன்னு பேசு! எங்கிட்ட இருக்குற எத வேணும்னாலும் எடுத்துக்க. அதுக்குப் பதிலா உங்கூட இருக்கறப்ப நான் உணர்ற சந்தோஷத்தையும், மனசு லேசாகுற உணர்வையும் மட்டும் எனக்கு குடுத்துட்டே இரு!" என்று சொன்னவன் அவளை அணைத்து அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.

திடீரென இவள் ஏன் தன்னிடமிருந்து இப்படி விலகுகிறாள் என்று நினைத்து அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவளுடைய தந்தையிடம் ஏற்கனவே இவனை திருமணம் செய்து கொள்ள பயமாக இருக்கிறது என்று வேறு சொல்லியிருந்தாளே? வீட்டளவில் செய்த நிச்சயத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டு அவள் பாட்டில் அவளது வழியைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவாளோ என்று மிகவும் பதட்டமாக இருந்தது சஞ்சீவிற்கு.

குணாளினி ஏன் தன்னை விலக்குகிறாள் என்று புரியாவிட்டாலும், அவளை தன்னிடமிருந்து பிரிந்து செல்ல விடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். பதட்டமும் பயமுமாக அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அவனிடம் ஏதோ பேச வரவும் அவளுடைய பேச்சை மிகவும் ஆவலாக எதிர்நோக்கியிருந்தான்.

சிறுநகை மலரும்!



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro