
❤ சிறுநகை 71
கதிருக்கும் சந்தானலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இருபத்தைந்து நாட்கள் ஆகியிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது திருமணத்திற்கு தேதி வைக்கப்பட்டிருந்தது. நிச்சயம் முடிந்த இரண்டு நாட்களில் இருந்து
திருமணத்திற்கு பத்திரிக்கை, கல்யாணம் செய்ய திருமண மண்டபம் என்று பெண்ணுடைய தந்தையாக பரபரத்த ஆலெனிடம்,
"ஸார்.... உங்களோட சைடுல பெரிய கூட்டமா உங்க உறவுக்காரங்க வர்றாங்கன்னா மண்டபத்த பேசுங்க; அப்டி யாரும் வரலையின்னா காலையில ஒரு கோவில்ல தாலி கட்டிட்டு, சாயந்தரம் சர்ச்சுல மோதிரம் மாத்தி எங்க கல்யாணத்த பண்ணிக்கலாம்!" என்று தீர்மானமாக சொல்லி விட்டான் கதிர்.
கதிரின் தரப்பில் திருமணத்திற்கென்று பெரிதாக ஆட்கள் வரமாட்டார்கள், அதனால் தான் அவன் அவ்வளவு விட்டேற்றியாக பேசுகிறான் என்று நினைத்த ஆலென் தன் வீட்டாரிடமும், சுமலதா வீட்டாரிடமும் மிகவும் சந்தோஷத்துடன் ஒவ்வொரு உறவுக்காரரையும் தனித்தனியாக கூப்பிட்டு எங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம் என்று கிட்டத்தட்ட முழுதாக இரண்டு நாட்களை செலவழித்து அவர்களிடம் அலைபேசியில் தெரிவித்தார்.
அவர் எந்த வேகத்தில் அவர்களை தன் வீட்டு விசேஷத்திற்கு கூப்பிட்டாரோ, அதே வேகத்தில் அவர்கள் அனைவரும் நாங்கள் உங்கள் மகளுடைய திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறி தங்களது வரவை உறுதியாக மறுத்து விட்டனர்.
"என்ன ஆலென்.... ஒரு பார்மாலிட்டிக்காக கூட யாரும் பங்ஷனுக்கு வர்றோம்னு சொல்லலையே? இப்டி நம்மள ஒதுக்குனா நம்ப பையன் கல்யாணத்துக்கு நாம பொண்ண எப்டி ஆலென் தேடிக் கண்டுபிடிக்குறது?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட சுமலதாவிடம்,
"ம்க்கும்....! இங்க சந்து கல்யாணத்த முடிக்கறதுக்கே வழியக் காணுமாம்; இதுல என்னைப் பத்தி வேற யோசிச்சுட்டு இருக்கீங்க.... ஃப்ரீயா விடுங்க மாம்..... பட் டாட்..... நாந்தான் உங்க கிட்ட முதல்லயே
சொன்னேன்ல? இந்த ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் நம்ம கதிர்ணா சந்து மேல வச்சுருக்குற லவ்வ புரிஞ்சுக்குற அளவுக்கு அறிவும் கிடையாது! நம்பள அவங்கள்ல ஒரு பேமிலியா அவங்க என்னிக்குமே நெனக்கப் போறதும் கிடையாது!"
"அப்புறம் மாம்..... உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த கேக்கணும்னு நெனச்சேன்!
நீங்க ஒத்தக் காலுல நின்னு போயே தீருவேன்னு அடம்புடிச்சு போயிட்டு வந்தீங்களே.... உங்கண்ணன் பையனோட மேரேஜ்க்கு! அந்த அண்ணன் இப்ப வர்றாரா நம்ம சந்து மேரேஜ்க்கு?" என்று கேட்டவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்தார் சுமலதா.
"ஓ.... அந்த ரிச்மேன் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வரலன்னு சொல்லிட்டாரா? நீங்க
சொன்ன மேரேஜ் டேட்ல
அவருக்கு ரொம்ப பெரிய வேலை வந்துருக்குமே..... அதுனால அவரால பங்ஷனுக்கு வராம போயிருக்குமே?" என்று உற்சாக குரலில் கேட்டவனிடம்,
"ஜெபா.... கொஞ்ச நேரம் பேசாம சும்மாயிரேன்டா!" என்றார் ஆலென்.
"நான் எதுக்காக பேசாம இருக்கணும்? இந்த ரிலேட்டிவ் கும்பல் கிட்ட வாங்க வாங்கன்னு கூப்ட்டு கெஞ்சிட்டு இருக்குறதுக்குப் பதிலா அன்னைக்கு மாதிரி நாம நம்மளோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள், கதிர்ணாவோட எம்ப்ளாயீஸ், சஞ்சீவ், கல்பனா சிஸ்டரோட பேமிலி இவங்க மட்டுமே சந்து கல்யாணத்துல இருக்குற மாதிரி நாம ப்ளான் பண்ணிக்கலாம் டாட்! தேவையில்லாத பிரச்சனைகளும், மனசு வருத்தமுமாவது மிச்சம் நமக்கு!" என்று சொன்னவனிடம்,
"ம்ம்ம்! அந்த மாதிரி தான்டா செய்யணும் போலிருக்கு! நீ என்னம்மா சொல்ற?" என்று கேட்டவரிடம்,
"நான் என்ன சொல்றது ஆலென்? இவ்ளோ நாள் நம்ப சந்து கல்யாணம்னா அது அப்டி, இப்டின்னு ஒரு பெரிய கற்பனையில இருந்துட்டேன்.... ஆனா உண்மை கற்பனைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கும் போலிருக்கு! கதிரும் சந்துவும் அவங்களோட டேவ என்ஜாய் பண்ணுனா போதும் ஆலென்! அதுக்கு என்ன தேவையோ, அதப் பாத்து ஏற்பாடு செய்ங்க! நாம இதப்பத்தி கதிரோட அப்பாட்ட ஒருக்க பேசிக்க வேணாமா ஆலென்?" என்று கேட்ட சுமலதாவிடம் இல்லையென தலையாட்டிய ஆலென்,
"எல்லாமே நம்ப பண்ற ஏற்பாடு தான் சுமா! கதிரோட அப்பாட்ட பேசுறதுக்கு ஒரு விஷயமும் இல்ல!" என்றார் புன்னகைத்த படி.
"ஓகே........ அப்ப நாம ரெண்டு பேருமா சேந்து என்னென்ன செய்யணும்னு முதல்ல ப்ளான் பண்ணலாம்!" என்று சொன்ன தன்னுடைய தாயிடம்,
"ஹலோ மிஸஸ் ஆலென்..... அதென்ன நீங்க ரெண்டு பேருமா சேந்து ப்ளான் பண்றது? ஆறு அடி மூணு அங்குல உயரத்துல இங்க ஒருத்தன் நிக்குறேனே.... என்னை மறந்து போய்ட்டீங்களா? வாங்க எதுவா இருந்தாலும் மூணு பேரா சேந்து பேசலாம்!" என்று சொன்னவனிடம்,
"டேய்... நீ உன் ஹோமுக்கு கெளம்பல? வேல முடிஞ்சு வந்ததுக்கப்புறம் எங்களோட ப்ளான்ல ஜாய்ன் பண்ணிக்குவியாம்! இப்ப வொர்க்குக்கு கிளம்பு ஜெபா....!" என்று சொன்ன தாயின் முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்த ஜெபா,
"டாட்...... என்னைய வேலைக்குப் போன்னு சொல்றது சாட்சாத்
சுமலதா மேம் தானா? என்னப்பா நடக்குது இந்த வீட்ல? ஆளாளுக்கு ரொம்ப பொறுப்பு பொன்மணீஸ் ஆகிட்டீங்களே? இப்டி ஒரு சேன்ஜ நான் இவ்ளோ சீக்கிரமா உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல மிஸஸ் ஆலென்!" என்று சொன்னவனை பின்னால் இருந்து அவன் காலில் ஒரு உதை விட்டவர்,
"எக்ஸ்ட்ராவா டயலாக் எல்லாம் பேசாம ஒழுங்கா வேலைக்கு கெளம்புடா!" என்று சொல்லி விரட்டி விட்டார்.
ஆலென் மூன்று நாட்களுக்கு ஒருமுறை திருமணம் சம்பந்தப்பட்ட எந்தெந்த வேலைகளை செய்திருக்கிறோம், இன்னும் என்னென்ன செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்று பாகேஸ்வரியிடம் அலைபேசியில் விவரம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
"எல்லா வேலையவும் உங்க தலையில கட்டிட்டு.... நான் பாட்டுல இங்க கடையில வந்து ஒக்காந்துக்கிட்டு இருக்கேன் ஸார்..... ஒங்க கூடமாட
நான் ஏதாவது கல்யாண வேல செய்யணுங்களான்னு சொல்லுங்க ஸார்!" என்று கேட்ட பாகேஸ்வரியிடம்,
"அதான் எங்க வீட்ல இருக்கிற எல்லாருக்காகவும் நிறைய வருஷம் நீங்க நிறைய ஒத்தாச செஞ்சு குடுத்துட்டீங்களே பாகேஸ்வரி? அதுனால இப்ப இது எங்களோட மொற! எல்லா வேலையவும் நாங்க தான் செய்வோம். நான் செஞ்சுவச்ச வேலைகள தாண்டி, உங்களுக்கு வேற ஏதாவது செய்ய வேண்டியதிருந்தா சொல்லுங்க. அத நாம செஞ்சுடலாம்!" என்று பேச்சை முடித்து விட்டார் ஆலென்.
எப்போதும் போல கிருஷ்ணராஜிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்று கூட பாகேஸ்வரிக்கு தோன்றவில்லை.
மகனது நிச்சயம் என்ன ஆனது என்று ஒருவார்த்தை கூட அவர் தன்னிடம் கேட்கவில்லை. எனக்கு வந்த விருந்து என்று அந்த வீட்டில் மூன்று வேளையும் உணவு மட்டும் சாப்பிட்டு செல்பவரிடமும் எதையும் சொன்னால் என்ன? சொல்லா விட்டாலும் தான் என்ன என்று நினைத்தவர் கிருஷ்ணராஜின் வேலைகளை அந்த வீட்டில் இருக்கும் ஒரு சக மனுஷியாக இருந்து அவருக்கு செய்து தருவதோடு நிறுத்திக் கொண்டார்.
கதிருடைய திருமணம் முடிந்த பிறகு அவன் சென்னைக்கு சென்று கல்பனாவிற்கு அவனது வீட்டை ரிஜஸ்டர் செய்து தருவதற்கு சஞ்சீவ் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான். பொள்ளாச்சிக்கு சென்றதில் இருந்து கதிருடைய மூன்று சொத்துக்களை விற்பதற்காக அவனது பிஸினஸ் லிங்க்கில் உள்ள நிறைய நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தான். கதிரிடம் பேசும் போதெல்லாம் அதைப் பற்றி மட்டுமே அவன் பேசிக் கொண்டிருக்க கதிர் மிகவும் எரிச்சலடைந்தான்.
"ஏன்டா..... எப்பப் பாத்தாலும் விக்குறது, வாங்குறது, வரையுறதுன்னு பேசியே என்னைய டார்ச்சர் பண்ற? கல்யாணம் முடியுற வரைக்கும் என்னைய அப்டியே பாதாம்பாலுல போட்ட சாரப்பருப்பு மாதிரி ஜாலியா மெதக்க விடேன்!" என்று சலித்துக் கொண்டவனிடம்,
"நீங்க எந்த பருப்பு மாதிரி எப்டி மிதப்பீங்களோ எனக்குத் தெரியாது பாஸ்..... பட் நான் சீக்கிரத்துல உங்க சம்பந்தப்பட்ட எல்லா வேலையும் ஒழுங்குபடுத்தி முடிச்சு அது எல்லாத்தையும் மிஸ் சந்தானாட்ட குடுத்தா தான் எனக்கு நிம்மதி!" என்றான் சஞ்சீவ்.
எப்போதும் இப்படி கத்தரிப்பது போல பேசும் சஞ்சீவின் பேச்சில் அவனிடம் இரண்டு கத்து கத்துபவன், இப்போது அதைக் கூட செய்யாமல் ஒருமாதிரியான உல்லாசமான மனநிலையிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
காலையில் பாகேஸ்வரியை ரெடிமேட்ஸ் கடையில் கொண்டு சென்று விடுபவன் நேராக தன்னவளைத் தேடி ப்யூட்டி பார்லரில் போய் உட்கார்ந்து விடுவான். கூட்ட நேரத்தில்
கஸ்டமர்கள் தங்களுடைய நேரம் வரும் வரை சற்று ரெப்ஃரெஷ் செய்து கொள்வதற்காக அமரும் ஸோஃபாக்களில் அவளை மடியில் போட்டு இறுக்கிக் கொள்பவனின் செயலைக் கண்டு ஜோஸஃபின் தான் சற்று நெளிந்து கொண்டு தன்னுடைய ஸீட்டில் இருந்து வொர்க்கிங் ஏரியாவுக்குள் ஓடி ஒளிந்து கொள்வார். ஆனால் அந்த செயலும் மிஸ்டர் ரேஷின் கண்களிலோ கவனத்திலோ விழுந்திருக்காது.
"இங்க பாரு ரேஷன்..... இது உன்னோட ஷாப்டா! அது போக இது பத்து பேர் வேலை செய்யுற வொர்க்ஸ்பாட்! இங்க வந்து என் கையப் புடிக்கிற, கட்டிப் புடிக்குற.... இப்டி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தன்னா நான் வேலையப் பாப்பேனா; இல்ல உம்மூஞ்சிய மட்டும் பாத்துட்டு ஒக்காந்துருப்பேனா?" என்று கேட்பவளிடம் அசட்டையாக உச்சுக்கொட்டுபவன்,
"எனக்கு காசு சம்பாதிச்சு தர்றதுக்கு எல்லாம் எந்தம்பி இருக்கான்டீ! நீ என்ன வர வர என்னைய கண்டுக்கவே மாட்டேங்குற? இந்த ஒரு மாசத்துல நாம எத்தன தடவ ரங்கநாதர கூப்ட்ருக்கோம் சொல்லு பாப்போம்!" என்று கேட்பவன் அவளுடைய அனல் கக்கும் பார்வையையும் தன்னுடைய காதல் கணைகளால் குளிர வைத்து விடுவான்.
"டேய் சொல்ல மறந்துட்டேன் பாரு! உன்னோட வெட்டிங் சூட்ட குணாளினி தான் ரெடி பண்ணித் தரணும்னு ஆசப்படுறாங்களாம். அதுனால நீயா எங்கயும் போய்ட்டு வாங்கிடாத!" என்றவள் அவன் முதுகில் நசுங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கைகளை வெளியே எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
"சஞ்சீவ் வீட்லயே அவன் ஒருத்தன் தான்டீ எந்நேரம் எப்டி இருப்பான்னு யூகிக்க முடியாத காரெக்டர்! மத்தபடி சஞ்சீவோட அம்மா, மினு, இப்ப இந்த குணாளினி இவங்க மூணு பேருமே எங்கிட்ட பேசுறப்ப ரொம்ப நல்ல விதமா பேசுறாங்க!" என்றான் கதிர்.
"அதான் எடுக்க வரலையில்ல.... நீ தவ்வி குதிச்சு ஓடிடாம இருக்கத்தான உங்கைய பின்னால போட்டு அழுத்தி வச்சுருக்கேன்; எவ்ளோ நேரமா அத எடுக்க எம்முதுக போட்டு நோண்டிட்டே இருப்ப?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவள்,
"சஞ்சீவ் பெரிசா யூகிக்கவே முடியாத காரெக்டர்லாம் இல்லடா ரேஷன்! அவனோட அப்பாவோட இழப்பு அவன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்கு! அதுக்கு நீங்க எல்லாந்தான் காரணம்னு குடும்பத்துல இருக்குறவங்க மேல கோபம்! அந்த கோபத்த விட்டுட்டு எப்டி எல்லாரோடயும் பேசுறதுன்னு புரியாம ஈகோ..... இதுக்கு நடுவுல குணாளினியோட காதல்னு ஸாரோட மனசு கொஞ்ச கொஞ்சமா மெல்ட் ஆகிட்டு வருது! இங்க வந்துருந்தப்போ மதிங்க ரெண்டு பேரையும் எப்டி பாத்துக்கிட்டான் பாத்தல்ல; நீயெல்லாம் நாள் பூரா அதுங்க ரெண்டையும் தூக்கி வச்சுருந்தாலும் அதுங்க உன்னை ஹீரோவா பாக்கல! பட் ரெண்டு வார்த்த பேசுனாலும் வெண்ணு அவன ஹீரோ மாதிரி பாத்தா தெரியுமா?" என்று சொன்னவளின் விரலைப் பிடித்து வலிக்கும் படி கடித்து வைத்தான் சந்தனாவின் முக்கா சைஸ் திமிங்கலம்.
"ஏன்......டா!" என்று எரிச்சல் பட்டவளிடம்,
"சஞ்சீவ பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது பரவாயில்ல..... நல்ல விஷயம் தான்... ஆனா எழுபது எபிசோடுக்கு பிறவும் என்னைய ஹீரோன்னு ஒத்துக்காம, அவன ஹீரோங்குற! அதுவும் வெள்ள நிலாவோட ஹீரோங்குற! வெள்ள நிலாவுக்கு எல்லாம் நாந்தான்டீ ஒரு நல்ல மாப்ள பாத்து கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்! இப்ப ஒழுங்கா உண்மைய சொல்லு..... இந்தக் கதையோட ஹீரோ யாரு?" என்று கேட்டவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,
"இந்தக் கதையோட ஹீரோ யாருன்னு இந்த ரைட்டரம்மா கிட்ட கேட்டா அந்தம்மா கதையே தான் கதையோட ஹீரோன்னு சொல்லும்.... ஆனா என்னோட ஹீரோ நீதான்ப்பா!" என்று சொல்லி கண்சிமிட்டினாள்.
"ஏய்...... சும்மா என்னைய சமாதானம் பண்றதுக்காக இப்டி சொல்றியாடீ சூபொ?" என்று சற்றே பெரிய குரலில் கேட்டவனை தன்னுடன் எழ வைத்து நகர்த்திக் கொண்டு அந்த அறையின் ஒரு மூளைக்குச் சென்றவள்,
"இப்ப எனக்கு ஒரு கிஸ் குடு..... அது எனக்கு எவ்ளோ பிடிச்சிருக்குன்னு டிஸைட் பண்ணிட்டு அப்புறமா நீ எனக்கு எவ்ளோ பிடிச்ச ஹீரோன்னு உன்கிட்ட சொல்றேன்!" என்றாள் சந்தனா.
"ஓ.... மேடம்க்கு கிஸ் வேணுமா....? மொட்டக்கட்டையா கிஸ் வேணும்னு கேட்டா? என்ன வேணும்னு சொல்லு! டிலைட்ஃபுல் வேணுமா?
பனிஷ்மெண்ட் வேணுமா? மெலடியா? அதுவுமில்லன்னா எக்ஸ்ட்ரீம் ஹாட்டா? இல்ல லவ்லி பைட் வேணுமா? கிஸ்ல என்ன வெரைட்டி வேணும் என் வீம்பம்மாவுக்கு?" என்று கேட்டவனிடம்,
"என்னடா இது...? ஒரு கிஸ்ஸுக்கா இத்தன பேரு வச்சுருக்க?" என்று அவனிடம் ஆச்சரியமாக கேட்டாள் சந்தனா.
"ஒரே ரூஃபுக்குள்ள ஒரே மாதிரியான மேக்கப் தான் கொஞ்சம் கொஞ்சம் அவங்களோட விருப்பத்துக்கேத்த மாதிரி
மாத்தி எல்லாருக்கும் போட்டு விடுற..... அதுக்கே நீ மூணு விதமான பட்ஜெட், ஏழு விதமான வெரைட்டின்னு வச்சுருக்கும் போது உன் ஹீரோ உன்னைய லவ் பண்றதுல நான் வச்சுருக்க மாட்டேனா வெரைட்டி?" என்று அவளிடம் கேட்டு அவள் மூக்கை உரசி அதற்கு ஒரு முத்தம் கொடுத்தவனிடம்,
"ஐயயோ ஸோஜஃபின் இங்க வாங்களேன்.... உங்க ஓனருக்கு என்னமோ ஆகிடுச்சு! என்னன்னமோ உளறுறான் லூசுப்பய!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடினாள் சந்தனா.
"ஆக மொத்தத்துல எங்கிட்ட தப்பிச்சு ஓடுறதுக்குத்தான் நீ எங்கிட்ட கிஸ் கேட்டியா? கல்யாணம் முடியட்டும்..... அப்புறம் நீ எங்கிட்ட இருந்து எப்டி தப்பிச்சு ஓடுறன்னு பாக்குறேன் இருடீ!" என்று சிரித்தபடி நினைத்துக் கொண்ட கதிர் ரெடிமேட்ஸ்க்கு கிளம்புவதற்காக அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro