
❤ சிறுநகை 64
ஆலென் வீட்டில் நுழைந்ததும் பாகேஸ்வரி, கல்பனா, ஜனார்த்தனன் மூவரும் ஆலென், ஜெபா இருவரின் கைவண்ணத்தில் நன்கு தழைத்து வளர்ந்திருந்த நிறைய ரோஜா வகைகளைப் பார்த்து வியந்து அவருடன் மொட்டைமாடி வரை ஏறிச் சென்று விட்டனர்.
"அக்கா..... இங்க நாம பொண்ணப் பாக்க வந்தமா இல்ல பூவப் பாக்க வந்தமா? நீங்க பாட்டுல வந்ததும் வராததுமா மாடிக்கு ஏறிக்கிட்டு இருக்கீங்க?" என்று கல்பனாவை அரட்டிக் கொண்டிருந்த கதிரிடம்,
"ப்ரதர்..... நாங்க மூணு பேரும் சந்தனா அப்பாட்ட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு; பேசிட்டு வந்துடுறோம்! நீ வேணும்னா அவளப் போயி பாத்து பேசிட்டு இரேன்!" என்று சொல்லி விட்டு ஏறிய கல்பனாவை அதற்கு மேல் கதிர் பிடித்துக் கொண்டு நிற்கவில்லை.
சஞ்சீவ் ஹாலில் அமர்ந்திருக்க கதிரை இருக்கையில் இருந்து எழுந்திரிக்க அனுமதிக்காமல்
வெண்மதியும், இளமதியும் மட்டும் சந்தனா அக்காவை பார்க்கப் போகிறோம் என்று அவனிடம் சொல்லிவிட்டு அவளுடைய அறைக்குள் ஓடி விட்டனர்.
"டேய் சேகர்.... என்னடா ரெண்டு எட்டுல அவ ரூம வச்சுக்கிட்டு என்னைய உள்ள உட மாட்டேங்குறீங்க! எனக்கு லஷ்மிட்ட நிறைய பேசணும்டா!" என்று சத்தமான குரலில் அவளது அறையின் கதவைப் பார்த்தபடி
கத்தியவனை சஞ்சீவும், ஜெபாவும் ஏகத்திற்கும் முறைத்தனர்.
"யேய்... என்னடா ரெண்டு பேரும் என்னைய இப்டி மொறைக்குறீங்க? அதான் ஹால்ல யாருமில்லல்ல; அப்ப நான் இப்டித்தான் கத்துவேன்; டேய் சஞ்சீவ்..... வீட்ல என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியும்ல? எங்கப்பன் குடுத்த கொடச்சலுக்கு என் தலையெல்லாம் விண்ணு விண்ணுன்னு தெறிக்குது! இன்னும் அந்த அம்மா வந்து எந்த குண்ட எப்புடிப் போடப்போகுதோ தெரியல. இந்த ரணகளத்துல கொஞ்ச நேரம் நான் என்னோட வசந்த கோகிலத்த பாத்துட்டு வந்தா உங்க ரெண்டு பேருக்கும் எங்கடா வலிக்குது?" என்று இருவரிடமும் கேட்டான் கதிர்.
"தலவலிச்சா ஒரு டோலோவ வாங்கிப் போடாம சும்மா இன்னொருத்தர் வீட்ல வந்து உக்காந்து கத்திக்கிட்டு..... ஊப்.........ஸ்!" என்று தன் காதைக் குடைந்து கொண்டு பெருமூச்சு விட்டான் சஞ்சீவ்.
"ஆமா.... நம்ம ஷாஷே சொல்றது கரெக்ட் தான்; உங்களுக்கு தலவலிச்சா அதுக்கு நாங்க என்ன
எங்க அக்காவ தூக்கி உங்க கையில குடுக்கணுமா? நெவர்.....! அதென்ன பேரு.... வசந்த கோகிலமா; உவ்......வேக்! என்ன கருமாந்திரம் புடிச்ச பேரு இது? நீங்க கூப்டுற இந்தப் பேருக்கு சந்துங்குற பேரே எவ்வளவோ தேவல! உங்கள மாதிரியே நீங்க வைக்குற செல்லப்பேருக்கும் ரொம்ப வயசாகிடுச்சு போல கதிர்ணா! அருதப் பழசும்பாங்களே...... அத மாதிரி இருக்கு! இந்தப் பேர சந்துட்ட நீங்க சொல்லியும் அவ உங்கள எப்டி உயிரோட விட்டா?" என்று ஆச்சரியமாக கேட்ட ஜெபாவிடம்,
"டே.....ய்! எனக்குப் பிடிச்ச பேர வச்சு, எனக்குப் பிடிச்ச பொண்ண நான் கூப்ட்டுப் போறேன்! அதுல உனக்கென்னடா ப்ரச்சன? சந்தானலஷ்மிங்குற அழகான பேர சந்து, பொந்து என் மடியில வந்து குந்துன்னு கண்றாவியா மாத்தி வச்சுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு வேற..... உங்கக்கா பெரிய இவ; நான் கூப்டுற பேரு பிடிக்காம என்னைய அவ குத்திக் கிழிச்சுடுவா! போடாங்கு..... என்னை கிண்டல் பண்ணி வெறுப்பேத்துன? உன் வாய உடைச்சுடுவேன்டா!" என்று ஜெபாவை திட்டினான் கதிரேசன்.
"உங்க ரெண்டு பேரோட விஷயம்.... தட்ஸ் நன் ஆஃப் மை பிஸினஸ்; என்னமோ பண்ணுங்க! வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்குது; அதுனால கோவிலுக்குப் போயிட்டு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு எங்கம்மா வெளிய போனதால நல்லவேளயா உங்க எல்லாரையும் மரியாதயோட வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்ட முடிஞ்சது கதிர்ணா; ஆனா எங்கம்மா திரும்பி வந்ததும்
இங்க இன்னைக்கு என்னென்ன ட்விஸ்டெல்லாம் நடக்கப் போகுதோன்னு நெனச்சு நாங்க மூணு பேரும் பதறிக்கிட்டு இருக்கோம்...... ஆனா!"
"நீங்க அதப் பத்தியெல்லாம் கொஞ்சங்கூட அலட்டிக்காம அந்த குட்டிக் கொழந்தங்கள மாதிரியே நானும் சந்துவப் பாக்கணும்டா சேகர்னு எங்கிட்ட கேக்குறீங்க! முதல்ல நீங்க ஏதாவது சாப்டுங்க; அப்புறமா சந்து வெளிய வருவா! அதுக்கப்புறமா சுமலதா மேடம் கோவில்ல இருந்து
வீட்டுக்கு வருவாங்க...... அப்புறம் இருக்கு வேடிக்க!" என்று கதிரின் காதைக் கடித்தவன் கடையில் வாங்கி வைத்திருந்த இரண்டு மூன்று வகை பலகாரங்களை சமையலறைக்குள் இருந்து தட்டில் வைத்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தான்.
"ஏன்டா..... ஸ்வீட், காரம், காஃபியெல்லாம் பொண்ணு கொண்டு வந்து குடுக்கணும்டா; ஒன்னையவா நாங்க மாப்ள பாக்க வந்துருக்கோம்? வந்ததுல இருந்து எல்லாத்தையும் நீ இழுத்துப் போட்டு செஞ்சுட்டு இருக்க? என்னதான்டா ஆச்சு அவளுக்கு?" என்று எரிச்சலடைந்தவனின் கோபத்தை தீர்த்து வைக்க ஒருவழியாக அவளது அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் சந்தானலஷ்மி.
"இந்தப் பொண்ணு உங்களுக்கு ஸ்வீட் காரம் காஃபியெல்லாம் தர்ற மாதிரி தெரியல. ஏன்டா ஹால்ல ஒக்காந்துட்டு இப்டி ஆளாளுக்கு கத்தித் தொலையுறீங்கன்னு கேக்காம கேக்குற மாதிரியிருக்கு. என்னாச்சு உங்களுக்கு? நாம மூணு பேரும் ஏன் இப்டி தேவையில்லாம மொக்க போட்டுக்கிட்டு இருக்கோம்?" என்று கதிரிடம் கேட்டான் சஞ்சீவ்.
"அப்பப்பா.... அப்டியே ரெண்டு லிட்டர் தண்ணி குடிக்குற அளவுக்குப் பேசி கிழிச்சுட்டாரு இவரு..... பேசுனது பூரா நானும், கதிர்ணாவும்! இப்டி என்னத்தயாவது லூசுத்தனமா வாய் பேசி அவரு ரிலாக்ஸ்ட் ஆனா ஆகிட்டுப் போகட்டும்! விடேன்.... சும்மா பேசி மனுஷன கடுப்பாக்கிட்டு!" என்று சஞ்சீவை திட்டினான் ஜெபா.
மணப்பெண்ணின் தோழிகள் போல் சந்தனாவின் இருபுறமும் நின்ற வெண்மதியும், இளமதியும் கதிரைப் பார்த்து அவனிடம்,
"கதிர் மாமா..... சந்தனா அக்கா அழகா ட்ரெஸ் பண்ணியிருக்காங்கல்ல?" என்று கேட்க அவர்களிடம் ஆமென தலையாட்டியவன், ஏதோ முதன்முறையாக அவளைப் பார்ப்பவன் போல் அவளது முடியிலிருந்து குதிங்கால் வரை அங்குல அங்குலமாக அவளைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான்.
"குட்டி மதிக்கு கேக் ஸ்லைஸ் ஐஸ்க்ரீம் வேணுமா?" என்று கேட்டு அவளை தூக்கிய ஜெபாவின் பேண்ட்டை பிடித்து இழுத்த வெண்மதி,
"அண்ணா எனக்கும் ஐஸ்க்ரீம் வேணும்!" என்றாள் மெல்லிய குரலில்.
"வெள்ள நிலா.... நீ இவன் குடுக்குற ஐஸ்க்ரீம வாங்கக் கூடாது! மாமா தான் உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன். நாம தான் வீட்ல இருந்து கெளம்புறப்பவே ஐஸ்க்ரீம் சாப்டணும்னு பேசி வச்சமே.... மறந்துட்டியா?" என்று ஒரு மாதிரியான குரலில் வெண்மதியிடம் கேட்டான் கதிர்.
"ஜெபா..... பிள்ளைங்க ரெண்டு பேரையும் மேல கூட்டிட்டுப் போ! இவங்க ரெண்டு பேருக்கும் ஐஸ்க்ரீம் குடுக்கட்டான்னு அவங்க கிட்ட கேட்டுட்டு குடு! அம்மா பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவாங்க; அதுனால அவங்க எல்லாரையும் சீக்கிரம் கீழ வரச்சொல்லு!" என்று சொன்ன சந்தனாவிடம் தலையாட்டி விட்டு இரண்டு ஐஸ்க்ரீம் பெட்டிகளை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு பிள்ளைகள் இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றான் ஜெபசேகரன்.
"டேய் சஞ்சீவ் நீயும்.....!" என்று ஆரம்பித்த கதிரை முறைத்த சஞ்சீவ் கதிரிடம்,
"இப்ப ஏதாவது காரணத்த சொல்லிட்டு நானும் வெளியில எழுந்திரிச்சுப் போகணும்! அப்டிதான பாஸ்? ஸாரி ஐ'ம் நாட் இன் அ மூட்!" என்று தோள்குலுக்கிய படி வசதியாக ஸோஃபாவில் சாய்ந்து கொண்டு
கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
சஞ்சீவை புன்னகைத்த படி பார்த்த கதிர் அவனிடம், "எங்கயும் போகமாட்டியா? நல்லது. அப்ப இருக்குற எடத்துல இருந்து எந்திரிக்காம, இப்டியே இங்கயே ஒக்காந்துரு ராசா! நான் ஹால்ல தான ஒக்காந்துருக்கேன்; பெட்ரூம்ல நீங்க போடுற சத்தம் எனக்கு கேக்கும்ங்குற அறிவு கூடவா இல்ல உங்களுக்கு? அதென்ன உம்மா உம்மா உம்மான்னுட்டுன்னு வீட்ல கேட்டாப்ல இங்கயும் ஏடாகூடமா கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது......? இங்க இருக்குறது கஷ்டமா இருந்தா குணாளினி கூட பேசுறதுக்கு ஃபோன தூக்கிட்டு ஓடிரு! இல்ல.... எதையுமே காதுல வாங்கிக்காம ஞானி மாதிரி ஐம்புலனையும் அடக்கிட்டு ஒக்காந்துரு! நீ உள்ள வா!" என்று சஞ்சீவிடம் சொன்னவன் சந்தனாவின் கையைப் பற்றி அவளை அறைக்குள் இழுக்க சந்தனாவிற்கு ஒருமாதிரியான தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகியது.
"மிஸ்டர் சஞ்சீவ்.... ஏதாவது சாப்டுங்களேன்!" என்று அவனிடம் சொன்னவளிடம்,
"எங்கிட்ட இப்ப என்ன சொல்றதுன்னே தெரியாம குழம்பி கடைசில சாப்டுங்கன்னு சொல்றீங்களா மிஸ் சந்தனா? உள்ள போங்க. பாஸ் சொன்ன மாதிரியே நான் முடிஞ்ச அளவுக்கு உங்க கான்வர்ஷேஷன் எதையும் காதுல வாங்காம தள்ளிப் போயிடுறேன்! மேக் யுவர்செல்ஃப் கம்பர்டபிள்!" என்று சொன்ன சஞ்சீவ் தானும் மாடிக்கே செல்வது தான் உசிதமென்று நினைத்து இரண்டு இரண்டு தாவல்களாக மாடிப்படிகளை ஏறிக் கொண்டிருந்தான்.
கதவு நிலையைக் கூட தாண்ட விடாமல் சந்தனாவை பின்னால் இருந்து அணைத்த கதிர், அவளின் ஆங்கில எழுத்து யூ போன்று வளைந்திருந்த ப்ளவுஸிற்குள் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக
வெளியே இருந்த முதுகில் குட்டி குட்டி முத்தங்கள் வைத்துக் கொண்டிருந்தான்.
"என்னாச்சு ஸார்? இன்னிக்கு என்ன மூட்அவுட்டா இல்ல ஹேப்பி மூட்ல இருக்கீங்களா? முகத்த விட்டுட்டு முதுகுல வேலைய காட்டிட்டு இருக்கீங்க?" என்று அவனிடம் கேட்டாள் சந்தனா.
"இப்ப நான் என்ன மூடுல இருக்கேன்னு எனக்கே தெரியல சூபொ! பட் உனக்கு குடுக்குற இந்த கிஸ் ரொம்ப நல்லாயிருக்கு!"
என்று சொன்னவனை சிரமப்பட்டு இழுத்து தன்னுடைய முன்பக்கம் கொண்டு வந்து நிறுத்தினாள்.
"இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு; வீட்ல இருக்கும் போது யாருக்கு உம்மா குடுத்த நீயி? வீட்ல சஞ்சீவ் உன்னைத் திட்டுனதா சொன்ன?" என்று அவனிடம் கேட்டு கைகளை ஓங்கிக் கொண்டு கண்களால் எரித்தவளின் திமிறல்களை அடக்கியவன் அவளின் அடி எதுவும் தன் மேல் விழாமல் அவளை அணைத்தபடி நின்று கொண்டான்.
"எங்கம்மா சத்தியமா எல்லா உம்மாவும் உனக்குத்தான்டீ குடுத்தேன் என் வீம்பம்மா! சேலையில இருக்குற உன் போட்டோஸ பாத்து ஒருமாதிரியாகிடுச்சா..... அதான் பாத்ரூமுக்குள்ள நின்னு மொபைல்ல இருந்த
உன்னோட போட்டோவ கொஞ்சம் சோப்பாக்கி, மொபைல கொஞ்சம் சோப்பாக்கி எல்லாம் நல்லா போயிக்கிட்டு இருந்த சமயத்துல அந்த தறுதல வந்து ஒரு பஞ்சாயத்த கூட்டிட்டுப் போயிடுச்சு! வீட்டு காம்பவுண்டுக்குள்ளயே நாயக்கட்டிப் போடுற மாதிரி, ஒரு ஓரமா ஒக்கார வச்சுட்டு வந்துருக்கோம். என்ன செஞ்சுட்டு இருக்கானோ தெரியல!" என்று சொன்னவன் ஒரு பெருமூச்சுடன் அவளை கட்டிலில் கிடத்தி அவளது மென்மையான மார்பில் தலை வைத்துக் கொண்டான்.
எப்போதும் அவளுக்கு சற்று சிரமமாக இருக்கும் கதிருடைய உடல்எடை இன்று அவளுக்கு ஒரு எடையாகவே தெரியவில்லை. இவன் காலம் முழுதும் இப்படி தன்னிடம் உரிமை எடுத்துக் கொள்ள தன்னுடைய பெற்றவள் சம்மதிக்க மாட்டாளா என்ற பரிதவிப்பே சந்தனாவிடம் அதிகமாக இருந்தது.
மூச்சு விடும் போது ஏறித் தணியும் தன் மார்புகள் கதிருக்கு ஏதாவது தொந்தரவை தந்து விடுமோ என்ற யோசனையில் இருபது நொடிகள் மூச்சை இழுத்துப் பிடிப்பதும், பின் மெதுவாக மூச்சை வெளியே விடுவதுமாக கதிரின் மன அமைதிக்காக அவள் தனது மூச்சுக்காற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளும் எண்ணமே அவனிடம் இல்லை என்று நினைத்த சந்தனா கதிரை மெல்லமாக அவன் கன்னத்தில் சுரண்டினாள். சலிப்புடன் உச்சுக்கொட்டியவனின் விரலைப் பிடித்துக் கடித்து வைத்தாள். இப்படி விளையாட்டாய் அவனது சோகத்தையும் மறக்கடித்து, தன்னுடைய பீதியையும் சற்றே சரிசெய்து கொண்டிருந்தாள் கதிரின் வீம்பம்மா!
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro