Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 59

"எந்தா மோளே..... கதிர் வீட்டுக்குப் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்னு எங்கிட்ட சொல்லிட்டு போனீங்க? லன்ஞ்ச் டைம் முடிஞ்சு ஈவ்னிங் நாலு மணி ஆகிடுச்சு! இப்ப தான் வர்றீங்க? ரெண்டு பேரும் சேர்ந்து வேற எங்கயாவது போயிட்டு வர்றீங்களா மக்களே?" என்று கேட்ட ஆலெனிடம்,

"இல்ல டாட்! கதிர் வீட்ல தான் லன்ஞ்ச் சாப்ட்டு, அப்டியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றோம்!" என்றாள் சந்தனா.

ஜெபா வண்டியை வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு வராண்டா ஏரியாவில் அமர்ந்திருந்த
தன்னுடைய தந்தையின் அருகில் வந்து அமர்ந்தான்.

"ஆலென்.... அங்க நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் எல்லாம் நடந்துச்சு தெரியுமா....?உங்க பொண்ணுக்கு அந்த வீட்டுக்குப் போனா மட்டும் கோபமே வரமாட்டேங்குது. அந்த கிருஷ்ணராஜ் ரொம்ப மோசம் டாட்!" என்று சொன்னவனுடைய முகத்தைப் பார்த்த ஆலென் கேள்வியாக தன்னுடைய மகளைப் பார்த்தார்.

"எந்தானு ப்ரச்னம் மோளே?" என்று கேட்ட தந்தையிடம் அசட்டையாக உச்சுக்கொட்டிய சந்தனா,

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா! நம்ம வீட்ல நடக்குற மாதிரி தான் அங்கயும்! கையில இருக்கிற பணம் பத்தலன்னா ஒரு ட்ராமா நடக்கும்! என்ன நம்ம அம்மா இப்ப கொஞ்சம் அவங்கள பத்தி நம்ம
கம்ப்ளையிண்ட் பண்ணாத அளவுக்கு நடந்துக்குறாங்க; பட் கதிரோட அப்பா முதல்ல இருந்து இப்ப வரைக்கும் அவரோட இயல்ப மாத்திக்கவே மாட்டேங்குறாரு.....!" என்று சொன்னாள்.

"ஐயோ.... இதென்ன புது சிக்கலா இருக்கு? கதிரோட அப்பா இப்டி இருந்தா, நீ அங்க போயி எப்டி சந்து நிம்மதியான ஒரு வாழ்க்கைய வாழ முடியும்? உங்க அம்மா திரும்ப திரும்ப கதிரோட அப்பா அம்மாவ பத்தி தான் எங்கிட்ட பேசிட்டே இருந்தா மோளே! சந்துவுக்கு அவங்களோட செட் ஆகலையின்னா அவ நம்ம வீட்லயே இருந்துக்கலாம்ல ஆலென்னு எங்கிட்ட கேட்டுட்டு இருந்தா!" என்று சொன்ன தன்னுடைய தந்தையை கோபத்துடன் முறைத்தாள் சந்தனா.

"அம்மா அப்டி சொன்னதும் நீங்களும் அவங்க பேச்ச கேட்டு சரி சுமா கதிர்ட்ட நாம இதப்பத்தி பேசுவோம்னு சொல்லியிருப்பீங்களே? கதிர் நம்ம கிட்ட ரொம்ப ஸாஃப்டா நடந்துக்குறான்ப்பா! அதுக்காக எந்த விஷயத்த பேசுனாலும், அவனுக்கு நம்ம மேல கோபமே வராதுன்னு நாம நினைக்கக்கூடாது. அம்மா கேக்குற மாதிரி நானும் அவனும்
இங்கயே இருக்கணும்னு கேட்டா அவன் டென்ஷனாகிடுவான். அவங்கிட்ட தயவுசெய்து
இப்டியெல்லாம் பேசிடாதீங்க.
அம்மாட்டயும் இத கண்டிப்பா சொல்லிடுங்க. எங்க அம்மாவ? என்ன பண்றாங்க உள்ள?" என்று கேட்டாள்.

"என்ன சந்து.... நீ நம்ம அம்மாவப் பத்தி நல்லா தெரிஞ்சுருந்தும்
இப்டி ஒரு கேள்வி கேக்குற? அவங்க என்ன பண்ணுவாங்க உள்ள? ஆலென் சமைச்சு வச்சத நல்லா சாப்ட்டு, படுத்து தூங்கிட்டு இருப்பாங்க! ஆலென்..... நம்ம சந்துவுக்கு கதிர்ணாவ தான் கண்டிப்பா நாம கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்..... அண்ட் இவ அவரோட அவர் வீட்ல தான் இருக்கணும்! பாகேஸ் ஆன்ட்டி இவள எப்டி பாத்துக்குறாங்க தெரியுமா? அப்டி உன்னை மாதிரி அவ்ளோ அன்பா பாத்துக்குறாங்க!" என்று சொன்னவனிடம்,

"டேய் ஜெபா.... நீ எழுந்திரிச்சு கொஞ்ச நேரம் மேல போடா! நான் ஆலென்ட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்!" என்று சொன்ன தன்னுடைய அக்காவை ஒரு பார்வை பார்த்தான் ஜெபா.

"என்னையும் போய் படுத்து தூங்க சொல்றியா? எது பேசணும்னாலும் அத எம்முன்னாலயே பேசு. ஐ வில் கீப் இட் கான்ஃபிடென்ஷியல்!" என்று சொன்ன தம்பியிடம்,

"கீப் அப் யுவர் வேர்ட்!" என்று சொன்ன சந்தனா தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

"கதிர் ரொம்ப பாவம் டாட்! அவனுக்கு இனிமே அவனோட அப்பா கிட்ட இருந்து பாசம் கிடைக்குறதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல! அவரோட வொய்ஃபயே அவர் ஒரு தேர்டு பெர்ஸன் மாதிரி ட்ரீட் பண்றாரு தெரியுமா? அவரப் பொறுத்தவரைக்கும் பாகேஸ் ஆன்ட்டியும், கதிரும் அவருக்கு தேவைப்படுறப்ப சோறு போட்டு, எல்லா தேவைகளையும் செஞ்சு குடுத்து, காசு தர்றவங்க அவ்ளோதான்..... மத்தபடி பாகேஸ் ஆன்ட்டியும் அவரு கிட்ட ரொம்ப வருஷமாவே ஒரு சாத்வீகமான எதிர்ப்ப காட்டிட்டு இருக்காங்க. வந்தா வா, வராட்டி இருங்குற மாதிரி பேரளவுல ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தாலும், அவர் மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதையும், பக்தியும் இருக்கு. ஷீ இஸ் சிம்ப்ளி அமேஸிங்க்!"

"அவங்க அளவுக்கு புரிதலோட நான் என் ஃப்யூச்சர் ஹஸ்பெண்டோட இல்லாட்டியும், என்னால முடிஞ்ச அளவுக்கு லவ் அண்ட் சப்போர்ட்ட நான் அவனுக்கு கண்டிப்பா குடுப்பேன்..... அண்ட் அம்மா எங்க மேரேஜ்க்கு ஓகே சொன்னாலும் சரி, சொல்லாட்டியும் சரி..... நான் கதிர தான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன். அவனோட தான் இனிமே எப்பவும் இருக்கப்போறேன்!" என்று தீர்மானமாக உரைத்தவளின் பேச்சைக் கேட்டு "வாவ்....!" என்று சொன்ன ஜெபசேகரன் அவனை அறியாமல் தன் அக்காவின் பேச்சுக்கு கை தட்டினான்.

"நீங்க ரெண்டு பேரும் சின்ன கொழந்தைங்களா இருக்குறப்ப உங்களோட பேச்சு, நடவடிக்கை எல்லாத்தையும் பாத்து எனக்கு ரொம்ப பயமாயிருக்கும் சந்து! இன்னிக்கு உம்பேச்ச கேட்டு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இப்ப கூட உங்கள இப்டி தெளிவா யோசிக்க வச்சது நானோ, சுமாவோ இல்ல..... உங்கள நீங்களே செதுக்கிக்கிட்டு எதார்த்தத்த ஏத்துக்க தயாராகி இருக்கீங்க. இது பெரிய விஷயம்! நீயும், கதிரும் நல்லா இருக்கணும்டா மோளே!" என்று ஆசிர்வதித்த தன் தந்தையிடம்,

"அப்போ நானு..... நானு நல்லா இருக்க வேண்டாமா.....? ஏன் ஆலென் என்னைப் போயி ஒரு டொக்கு முதியோர் இல்லத்துல வேலைக்கு சேத்து விட்ட? உன் பொண்ணும் கதிர்ணாவும் எப்டியெல்லாம் லவ் பண்றாங்க தெரியுமா? நான் எப்ப அப்டியெல்லாம் ஒரு பிகர் கூட சேந்து லைஃப்ல என்ஜாய் பண்றது? சந்து கல்யாணம் முடிஞ்ச மூணு மாசத்துல நீ எனக்கும் ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வக்கிற.... வர்ற பொண்ணு எங்கம்மாவ மாதிரியோ, இல்ல இந்தா நிக்குறாளே இவள மாதிரியோ இல்லாம நம்ம வேலைங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றவளா, முக்கியமா நம்ம கிட்ட பதிலுக்கு பதில் வாயாடாதவளா இருக்கணும்! அன்பா, அடக்கமா, பொறுமையா, காதுக்கு மட்டும் கேக்குற மாதிரி பேச தெரிஞ்சவளா, இதமா சிரிக்க தெரிஞ்சவளா..... அப்டி சும்மா நச்சுன்னு ஒரு பொண்ண நீ நமக்காக கர்த்தர்ட்ட ஒரு ஸ்பெஷல் ப்ரேயர போட்டு வாங்கிக் குடுக்குற பாத்துக்க!" என்று சொன்னவனின் பின்தலையில் நங்கென்று குட்டிய சந்தனா,

"நீ சொன்ன ஸ்பெஸிஃபிகேஷன் எல்லாம் இருக்கா, 5 வருஷ கேரண்டி, வாரண்டி எல்லாம் வருமான்னு பாத்து உன் லவ்வர நாங்க என்ன கடையில இருந்து காசு குடுத்து உனக்காக கிப்ட் பேக் பண்ணியா வாங்கிட்டு வர முடியும்? டொக்கு முதியோர் இல்லத்துல வேலைக்கு சேத்து விட்டீங்கன்னு சும்மா ஸீன் போட்டு அழுவுறியே? அன்னிக்கு எங்கிட்ட உனக்கு இந்த வேல ரொம்ப பிடிச்சுருக்கு, மனசுக்கு அமைதியா இருக்குன்னு சொன்னியா இல்லையாடா? அதென்ன பொண்ணு பத்தி
கேக்கும் போதே இவள மாதிரி இல்லாமங்குற? எங்கிட்ட அப்டி என்னடா கொறச்சல்?
திமிரு தான ஒனக்கு?" என்று அவனிடம் கேட்டு அவனைத் திட்டினாள் சந்தனா.

"பாருங்க டாட்.... நான் எனக்கு ஒரு பொண்டாட்டி வேணும்னு கேட்டா, இவ அவள வாரண்டி கார்டோட கடையில இருந்தா வாங்கிட்டு வர முடியும்னு கேக்குறா? நீங்க எதுக்கெடுத்தாலும் ஒண்ணும் பேசாம சிரிச்சுட்டே இருங்க.....!" என்று முறுக்கிக் கொண்டவனின் முதுகில் தட்டி முகவாயை தடவி சமாதானம் செய்தார் ஆலென்.

"நம்ம சந்துவ பாரு ஜெபா.... கதிரோட கம்ஃபர்டனெஸ்க்காக எவ்ளோ யோசிக்குறா? அந்த மாதிரி நீயும் ஏதாவது ஒரு பொண்ணு கிட்ட ஸ்பெஷலா ஃபீல் பண்ணுனன்னா எங்கிட்ட சொல்லு.... இல்லன்னா நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா நான் அந்த பொண்ணு விஷயத்துல உனக்கு எந்த கேரண்டியும் குடுக்க மாட்டேன்!" என்று சொல்லி குறுஞ்சிரிப்புடன் பேச்சை முடித்தார்.

"அட அட அடா! மணி மணியா இப்டி ஒவ்வொரு ரிலேஷனும் கெடைக்குறதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணியிருக்கணும் கர்த்தரே?" என்று இருகையையும் விரித்து வராண்டாவில் தொங்கிக் கொண்டிருந்த கடவுளின் புகைப்படத்தின் முன் சிலுவையிட்டுக் கொண்டவனிடம்,

"இப்ப நீ என்னடா சொன்ன?" என்று கேட்டு அவன் முன் கண்ணை உருட்டிக் கொண்டு நின்றாள் சந்தனா.

"அட என்ன ஒரு வார்த்த சொல்லக்கூடாதா இந்த வீட்ல?" என்று பாவமாக கேட்டவன்,
தன்னுடைய அக்காளின் கோபம் உடனே தீரும் வகையில் அவளை தன் முதுகிற்குப் பின்னால் உப்பு மூட்டை தூக்கிக் கொண்டான்.

"ஏய் ஸாண்டல்......! உனக்கு ஏதாவது கொறச்சல்னு நான் பேச்சுவாக்குல சொன்னேன்?  அப்டி ஏதாவது சொல்லியிருந்தா, சத்தியமா அத இப்ப வாப்பஸ் வாங்கிக்குறேன். ய.....ப்பா! என்னா கனம் கனக்குறடீ என் குட்டிச்சாத்தானே....? நான் பேசுனத எல்லாம் மனசுல வச்சுருந்து, சமயம் பாத்து கழுத்த சேத்து ஒரு வெட்டு வெட்டிராத! உன் தம்பி பாவம்டா ஸாண்டல்!" என்று சொன்னவனின் கையை உருவிக் கொண்டு அவன் முதுகில் இருந்து கீழே இறங்கியவள்,

"உன் உயரத்துக்கு எங்கைய வளைச்சின்னா எனக்கு கை வலிக்குதுடா.... இனிமே என்னை இப்டியெல்லாம் நீ தூக்கக் கூடாது, அது..... கதிருக்குப் பிடிக்காது!
உன் கொரங்கு சேட்டையெல்லாம் இல்லன்னா இந்த வீடு இவ்ளோ லைவ்லியா இருந்துருக்காதுடா... அதுக்காகவே உன்னை இந்த ஒருவாட்டி மட்டும் மன்னிச்சு உடுறேன்! பொழச்சுப் போய் தொல!" என்றவளின் பேச்சில் பெருமூச்சு விட்டு,

"அப்பாடா.... ஏதோ
நல்ல மூடுல இருந்தா போல.... கையி, காலு, முகத்துக்கு
எந்த டேமேஜும் இல்லாம
உட்டுட்டுடா!" என்று நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் அடைந்த ஜெபாவிடம்,

"ஜெபா.... ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு எங்க ரெண்டு பேருக்கும் பழபஜ்ஜி மட்டும் செஞ்சு குடுத்துர்றியா? உங்கையால எனக்கு பஜ்ஜி சாப்டணும் போல இருக்கு!" என்று கேட்டு சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு தன் காலை ஆட்டிக் கொண்டு வேறு இருந்தாள்.

"ம்ஹூம்.....! இந்த வீட்ல ஆம்பளங்களுக்கு ரெஸ்ட்ங்குறத ஆண்டவர் தலைல எழுதி வைக்கல!
கதிர்ணா சீக்கிரத்துல வந்து இவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டுங்க..... மிடில.....!" என்றவன் புன்னகைத்த படி பேசிக் கொண்டிருந்த தன்னுடைய தந்தை மற்றும் அக்காவை ஒரு நிறைந்த பார்வை பார்த்த படி சட்டையை மாற்றிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro