Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 57

"டேய் தூங்கிட்டியா?" என்று கேட்டு அவனை உலுக்கினாள் சந்தனா.

"இல்ல; யோசிக்குறேன்!" என்றவன் அவளிடம்,

"லஷ்மி! ஒருவேள புதன்கிழம நாங்க எல்லாத்தையும் பேசுன பெறகு உங்கம்மா நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லலையின்னா நீ என்ன முடிவெடுக்கப் போற?" என்று கேட்டான். அவனது முகம் பெரிதாக சிந்தனை வயப்பட்டிருந்தது. குரலும் அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

அவன் அவ்வளவு தீவிரமான முகபாவத்தில் இருப்பது சந்தனாவிற்குப் பிடிக்கவில்லை. அவனை கொஞ்சம் இதமான மனநிலைக்கு கொண்டு வர வேண்டுமென நினைத்தவள், தொட்டியில் கிடந்த
தண்ணீரை ஒரு கையில் அள்ளி அவன் முகத்தில் தெளித்தாள்.

"ம்ப்ச்! என்ன வெளையாட்டு இது?" என்று கேட்டு முகத்தில் இருந்த தண்ணீரை வழித்து எறிந்தவனிடம்,

"விளையாட தான இங்க வந்துருக்கோம்னு சொன்ன? அப்புறம் என்ன?" என்று கேட்டவள்,

"கண்ண தெறந்து என்னைப் பாரு ரேஷன்!" என்றாள் அவன் முகத்தைப் பார்த்த படி.

"சொல்றத அப்டியே சொல்லு! எனக்கு காது கேக்குது; என்ன பண்ணப்போற?" என்று கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் தராமல் எதையோ தீவிரமாக யோசிப்பது போன்ற பாவத்தில் அமர்ந்திருந்து கலங்கியிருந்த கதிரின் மனதை இன்னும் கொஞ்சம் கலங்கடித்தாள் அந்த பாதகத்தி.

அவளிடமிருந்து பதில் வருமென கண்களை மூடி இரண்டு மூன்று நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தவனுக்கு இப்போது பொறுமை பறந்தது. கண்களைத் திறந்தவன் அவளிடம்,

"ஏ.....ஒரு கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்றதுக்கு இவ்ளோ நேரமாடீ ஒனக்கு?" என்று கேட்டு கோபப்பட்டான்.

"ம்ப்ச்! ஏன் இப்டி கத்துற? நீங்க வந்து பேசுனதும், அம்மா நம்ம விஷயத்துல ஓகே சொல்லலயின்னா நீ வாங்கி வச்ச மோதிரத்தயே எனக்கு வெட்டிங் ரிங்கா போட்டுடு. அப்டியே என்னை இங்க கூட்டிட்டு வந்துடு! மிஸஸ் சுமலதா அவங்களோட பொண்ணுக்கு மைசூர்ல தசரா பங்ஷன் நடக்குற மாதிரி நாள் கணக்குல கல்யாண ஏற்பாடு செய்யணும்னு கனவு கண்டுட்டு இருந்தாங்க...... ஆனா அது யார் கூடங்குற ஒரு கேள்வி இருக்குதுல்ல? ஸ்டேட்டஸ பாத்து அவங்க உன்னை வேண்டாம்னு சொன்னாங்கன்னா, அவங்களோட பொண்ணும் வீட்ட உட்டு ஓடி வந்து தான் அவளோட ஆள கல்யாணம் பண்ணிக்கணும்; இந்த விஷயத்துல வேற முடிவுக்கே இடமில்ல!" என்று சொன்னவளை சட்டென கீழே தள்ளி அவள் மேலே படர்ந்திருந்தான் கதிரேசன்.

இந்த ஒரு விஷயத்திற்காக தான் மிகவும் பயந்து போய் இருந்தான், சந்தனா இப்போது பேசியதைப் போலவே தான் அவள் வாயில் இருந்து வார்த்தை வர வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.

அவனது எண்ணம் போலவே அவளும் பேசி முடித்ததும் கதிருக்கு திடீரென அவ்வளவு குதூகலம் வந்து ஒட்டிக் கொண்டது.

அவளுக்கான அறையில் அவன் பார்த்து பார்த்து அவளுக்காக வாங்கி வைத்த மெத்தையையும், சுகமான தூக்கத்திற்கு உதவும் ப்ளாங்கெட்டையும் விட அவள் மிருதுவாக இருந்தாள்.

அவனது இத்தனை வருட பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் உடைத்து சந்தனா அவனுக்கு மோகத்தை விதைத்துக் கொண்டிருந்தாள்.

"கல்யாணத்துக்கு முன்னால உன்னோட சூபொவோட நீ காட்டுற இவ்வளவு நெருக்கம் ரொம்ப தப்புடா கதிரேசா....!" என்று அவனது மூளை எடுத்துரைத்த அறிவுரைகளை எல்லாம் அவனது மனம் தூக்கிப் போட்டு உதைத்து விட்டு அவளுடைய தேகத்துடன் ஒட்டிக்கொண்டது.

அவன் இதழ்கள் அவள் முகமெங்கும் ஒரு இடம் விடாமல் ஊர்ந்து கொண்டிருக்க, அவள் உடல் மீது அவன் கொடுத்த அழுத்தத்தில் கதிர் தந்த முத்தங்களுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்ந்து சந்தனாவின் காதிற்குள் சென்றது.

சந்தனாவின் நிலைமையோ வண்டின் வாயில் சிக்கிக் கொண்ட பூவின் நிலை போல் இருந்தது. தன்னை மொய்க்கும் வண்டு மகரந்தத்தையும், தேனையும் தன்னிடமிருந்து எடுப்பதை பூவால் எப்படி தடைசெய்ய முடியாதோ, அப்படித்தான் கதிரின் செயல்களையும் சந்தனாவால் தடை செய்ய முடியவில்லை.

அவளுடைய பிடிவாதம், கோபம், ஆளுமை இவை அனைத்தும் அவன் தன்னை அணைக்கும் வரையில் தான்! இடையை இழுத்து தன்னருகில் அணைத்தான் என்றால் உலகம் முழுக்க மங்கலாகிப் போன உணர்வு தான் அவளுக்கு!

அவனைப் போல் அவளும் அவனது தோள்களையும், புஜங்களையும், கன்னத்தையும், கண்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவைகளை முத்தமிட்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.

இப்போதைக்கு போதுமான அளவு முத்தங்களும், அணைப்பும், தீண்டல்களும் நிறைவாக கிடைத்து விட்டதால் கதிர் அவளது இதழ்களை ஒருமுறை மென்மையாக சுவைத்து விட்டு அவளைப் பார்த்தான்.

"என்ன?" என்று கண்ணைச் சுருக்கி வினவியவளிடம்,

"என்ன சூபொ.... இவ்ளோ அமைதியா இருக்க? சத்தியமா நான் இதெல்லாம் ப்ளான் பண்ணி உன்னை இங்க கூட்டிட்டு வரல. இங்க வந்ததும் அதுவா ஒரு ப்ளோவுல தான்..... அதுவும் நீ என்னை ரொம்ப நிம்மதியாக்குற அளவுக்கு பேசுனதுக்கு அப்புறமாத்தான்..... இப்டியெல்லாம் யோசிக்க தோணிடுச்சு; நீ எதுவும் தப்பா எடுத்துக்கலையே? என் கண்ணப் பாத்து ஏதாவது பேசுடீ!" என்று அவளிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

"இந்த மூடுக்கு ஏத்த மாதிரி ஒரு கவித சொல்லேன் ரேஷன்?" என்று கேட்டவளிடம் வியப்பான குரலில்,

"ஆங்..... கவிதையா? இப்பயா?" என்றான் திருதிருவென விழித்த படி.

"ஏன்டா இப்டி முழிக்குற....? நீ ஒரு க்ரியேட்டர் தான? இந்த சிச்சுவேஷன்ல உனக்கு கவித எதுவும் வரலையா?" என்று கேட்டாள் சந்தனா.

அவள் கோபமாகவோ, வருத்தமாகவோ, குற்ற உணர்விலோ இல்லை என்ற நிம்மதியில் கதிர் புன்னகைத்த படி இரண்டு நிமிடங்கள் கண்மூடி யோசித்தான்.

"என் நிலவு நீ என்றும்
ஒரே அழகு தான்
சிலநேரங்களில்
என் மனநிலையை
பொறுத்து
உன் அழகு
கூடுதலாகவும்
குறைவாகவும்
பிரதிபலிக்கும்
மாறுபாடு நடந்து
விடுகிறது!
ஆக தவறு என்
மனநிலையின் மீது தான்!
தண்ணீருக்குள் கிடந்தாலும்
தீப்பற்றி எரிய வைக்கும்
உன் அழகின் மீதல்ல!"

என்று அவள் காதருகில் முணங்கியவனை கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தனா.

"கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. அதவிட நீ அத சொல்ற விதம் ஒருமாதிரி ரொமான்டிக்கா இருக்கு.
போதும்...... இங்கருந்து எழுந்திரிச்சு கீழ போய்டலாமாடா?" என்று கேட்டாள்.

"ம்ஹூம்......! கீழ போறதெல்லாம் இப்ப இல்ல! நம்ம கல்யாணத்துக்கு அப்புறந்தான்!" என்றான். சந்தனா அவனைப் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருக்க அதை சாக்காக வைத்து மறுமுறை அவள் கண்களில் முத்தமிட்டான் கதிர்.

"போதும்டா..... இறங்கு! நீ ரொம்ப வெயிட்டா இருக்க! எனக்கு வலிக்குது!" என்று தன் இடையைப் பிடித்துக் கொண்டு வலியில் முகத்தை லேசாக சுளித்தவளிடம் இருந்து சட்டென பிரிந்து எழுந்து அவளை அமர வைத்தான் கதிர். அவளுக்குப் பக்கத்தில் அவளை ஒட்டி அமர்ந்து கொண்டவன்,

"ஏய்.... உன் முடி மொத்தமும் நனைஞ்சு போச்சு லஷ்மி!" என்றான் சற்றே கவலையாக.

"இதெல்லாம் ரொம்ப ஓவர்டா; விட்ருந்தா என்னைய தண்ணிக்குள்ள அமுக்கிக் கொன்னே போட்ருப்ப! நல்லவன் மாதிரி இப்ப என் முடி நனைஞ்சு போச்சுன்னு ஃபீலா பண்ற? நான் உனக்கு கிடைப்பனோ, கிடைக்க மாட்டேனோன்ற பயத்துல தான் ஓரளவுக்கு கண்ட்ரோல்டா இருக்கன்னு நினைக்குறேன். இல்லன்னா நீ இன்னும் என்னென்ன செய்வியோ எனக்குப் பயமாயிருக்கு!" என்றாள் அவனை பீதியாக பார்த்த படி.

"நான் பயத்துல எல்லாம் கட்டுப்பாடா இல்ல; சின்னதுல இருந்து ஊட்டி ஊட்டி வளத்து உட்ட
ஒழுக்கத்தால தான் கட்டுப்பாடா இருக்கேன் பாத்துக்க...... ஆனாலும் நீ என்னை ரொம்ப படுத்துறடீ..... சத்தியமா என்னை இறுக்கிப் புடிக்க முடியல என்னால! உன் ஈரமான சுடிதாரும், உன் பின்னாலயே உன்னை அணைச்சுப் புடிச்சிக்கிட்டு ஏறி வர வச்ச போஸூம், இந்த தொட்டியும், அதுக்குள்ள இருக்குற தண்ணியும் என்னைய கொதிக்க வைக்குது. அதையும் மீறி நீ சொன்ன வார்த்த....... ப்ப்ப்பா! எப்டி இருக்கு தெரியுமா? ஒரு நூறு கிலோ மூட்டைய முதுகுல தூக்கிட்டு நடக்குறவன், அத ஒரு எடத்துல எறக்கி வச்சவுடனே நிம்மதிப் பெருமூச்சு உடுவான் பாரு; அந்த மாதிரியிருக்கு!"

"நீ எனக்கு கிடைப்பியா, கிடைக்க மாட்டியாங்குறதுல எல்லாம் எனக்குப் பயமில்ல. உங்கம்மா பேச்ச மீறுவியா, மீற மாட்டியாங்குறதுல தான் மொத்த பயமுமே.....! நீ எங்கூட கிளம்பி வந்தா உன்னை இங்க கூட்டிட்டு வந்துடுவேன்; நான் உங்கூட வரமுடியாது கதிர்னு சொன்னன்னா உன்னைய உன் வீட்லயே விட்டுட்டுத் தான் வரணும். அது ஒண்ண நினைச்சு தான் ரொம்ப யோசனையா இருந்தது!" என்று சொன்னவனின் தலையிலேயே பொட்டு பொட்டென்று நாலைந்து அடிகள் அடித்தாள் சந்தனா.

"இப்ப என்னடீ?" என்று உச்சுக்கொட்டியவனிடம்,

"பெரிய பவுன்ஸர் மாதிரி என்னைய முன்னால போக உட்டு, நீ பின்னால ஏறி வந்துட்டு இப்ப என் போஸ வர்ணிச்சுட்டா இருக்க? உன்னை கொல பண்ணுனா என்ன?" என்று கேட்டவள் அவன் குரல்வளையைப் பற்ற வந்தாள்.

அவளது கைகளிரண்டையும் தன்னுடைய கரங்களில் கோர்த்துக் கொண்டவன் அவளிடம்,

"சும்மா நடிக்காதடீ! நான் என்ன பண்றது? அழகியல் என் கண்ணுக்கு தெரியும்; கைவிரலுக்குத் தெரியும்..... ஏன் அது ஒரு பாடமாவே எம்மூளைக்குள்ள போயிருக்கு! அதுனால உன்னை நான் பாத்தது என்னோட தப்பில்ல; என்னை இந்த திட்டு திட்டுறியே? நான் கவிதை சொன்னப்ப என்னை நீ ஒருமாதிரி கெறக்கமா பார்த்தல்ல....? நான் குடுக்குற முத்தத்துக்கு எல்லாம் உங்கிட்ட இருந்து எனக்குப் பதிலும் கெடச்சதே....... அப்போ நீயும் என்னை முழுசா தெரிஞ்சுக்கணும்னு தான நினைக்குற? இதுல என்னைய மட்டும் தனியா கொலை பண்றது என்ன நியாயம்?" என்று கேட்டவனிடம்,

"இப்டியே இங்கயே ஒக்காந்து பேசிட்டு இரு! நீ ஜன்னி வந்து தான் சாகப்போற; நான் போறேன் கீழ....!" என்றவள் தொட்டியில் இருந்து எழுந்து நின்று அவனைப் பாவமாக பார்த்தாள்.

"என்ன ஆச்சுங்க வீம்பம்மா?  பகுமானமா உள்ள குதிச்சீங்களே? இப்ப எப்டி மேல ஏறுறதுன்னு தெரியலயா?" என்று குறுஞ்சிரிப்புடன் அவளிடம் புருவம் உயர்த்திக் கேட்டான் கதிர்.

"அது பரவாயில்ல; உன்னைய கொஞ்சம் குனிய சொல்லி உம்முதுகுல கால் வச்சு ஏறிக்கலாம்! பட் நான் சேன்ஜ் பண்ணிக்க ட்ரெஸ் வேணுமே?" என்று கேட்டவளை கைகட்டி நின்று பார்த்தபடி "ஆமால்ல? வேணும்ல?" என்று கேட்டான் கதிர்.

"ட்ரெஸ் வேணும் சரி! எதுக்கு இப்டி நனைஞ்சங்குறதுக்கு முதல்ல ஒரு காரணம் வேணுமே சூபொ? எங்க அம்மாவும், உந்தம்பியும் வந்து கேட்டா கதிர் கூட டேங்க்ல ஏறி அவனுக்கு முத்.......!" என்று சிரிப்புடன் உல்லாசமாக சொல்லிக் கொண்டிருந்தவன் பேச்சை முடிக்க விடாமல் அவனது வாயை மூடியவள்,

"எங்கிட்ட ஆன்ட்டி கேக்குற எல்லா கேள்விக்கும் ஒரு பதில் ரெடியா இருக்கணும் பாத்துக்க. அவங்க ரெண்டு பேருல யாராவது என்னை ஏதாவது திட்டுனாங்கன்னா நீ செத்தடா!" என்று மிரட்டினாள்.

"அமைதி... அமைதி! இப்ப நீ என்ன பண்ற? நேரா என்னோட ரூமுக்குள்ள போயி வலது பக்க மூலையில இருக்குற கபோர்ட தொற! உனக்குன்னு நான் நம்ம கடையில இருந்து எடுத்து வச்ச நிறைய ட்ரெஸ் வரிசையா தொங்கும். அதுல சூப்பரா இருக்குற ஒண்ண செலக்ட் பண்ணி எடுத்துட்டுப் போய் ஷவர்ல ஒரு சுடுதண்ணி குளியலப் போட்டுட்டு வா! அதுக்குள்ள நான் போய் ஆக வேண்டிய வேலைய பாத்து வைக்குறேன். உங்க மாமியாரும், என் மச்சானும் கேக்குற கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்குறேன். நீ ஆமா ஆமான்னு தலைய மட்டும் ஆட்டுனாப் போதும். தலைய எப்டி
ஆட்டணும்னு தெரியும்ல உனக்கு?" என்று கேட்டவனிடம்

"டேய்....!" என்று கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் சந்தனா.

அவளை அலேக்காக இடையைப் பற்றி தொட்டியின் மேற்பரப்பில் அமர வைத்தவன்,

"ஏணியில எறங்கறதுக்கும் உங்களுக்கு உதவி தேவைப்படுங்களா மேடம்?" என்று கேட்டு கண்சிமிட்டினான்.

"மரியாதயா இந்த தடவ நீ எனக்கு முன்னால எறங்கு! உன்னைப் பிடிச்சுட்டே நான் கீழ எறங்கி வந்துடுவேன்!" என்றாள் சந்தனா.

"ஓ இப்ப அப்டியா..... டபுள் ஓகே!
அதுவும் ஜாலியா தான் இருக்கும்; வாழ்வு தான்டா கதிர் உனக்கு!" என்று தன் கன்னத்தைக் கிள்ளி தனக்கே முத்தம் கொடுத்துக் கொண்டவன், அவளுடைய முறைப்பை கண்டுகொள்ளாமல் அவள் சுடிதாரின் முனைகளைப் பற்றி அதை இறுக்கமாக பிழிந்து விட்டு சொட்ட சொட்ட நனைந்த படி
அவளை கீழே கூட்டிச் சென்றான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro