Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 56

"அதெல்லாம் அப்புறம் பேசு; இப்டி உன் ரூமுக்கு ஆப்போஸிட்லயே எனக்குப் பிடிச்ச மாதிரி, கம்பர்டபிளா ரூம் ரெடி பண்ணி குடுத்துருக்கியே? நான் அப்பப்ப கோவிச்சுக்கிட்டு இங்க வந்து டோர் லாக் பண்ணிக்கிட்டு படுத்துட்டா என்ன பண்ணுவ?" என்று கேட்டவளின் இடையை இறுக்கி அவன் மார்புடன் அணைத்துக் கொண்டவன்,

"இப்டி வேற ஒரு ஐடியா இருக்கா உனக்கு? நீ இங்க வந்து தனியா லாக் பண்ணிட்டு படுக்குறதுக்கு டோர் இருக்கணும்ல செல்லம்? நீ இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சா அப்புறம் நான் இந்த ரூமோட கதவ மட்டும் கழட்டி வச்சுடுவேனாக்கும். அது பாட்டுல நமக்கு இடைஞ்சல குடுக்காம ஒரு ஓரமா கெடக்குது......!" என்று அவளிடம் அசட்டையாக சொன்னான்.

அவனது முடிக்கற்றைகளுக்குள் விரல்களை விட்டு சுழற்றிக் கொண்டிருந்தவள் அவனுடைய பேச்சில் கடுப்பாகி தன் விரல்களில் இருந்த அவனுடைய முடிகளின் வேர்களை பிடித்து இழுக்க அவன் வலியில் லேசாக உச்சுக்கொட்டினான்.

"ஏன்டா இப்டியெல்லாம் யோசிக்குற?" என்று அவனிடம் கேட்டவளிடம்,

"நீ இல்லாம கதிருக்கு கல்யாணமும் இல்ல; வம்ச விருத்தியும் இல்லன்னு எங்கம்மா உங்கிட்ட சொன்னாங்கல்ல? நீ இங்கயும், நான் எதித்தாப்ல இருக்குற ரூமுக்குள்ளயும் இருந்தோமுன்னா எங்கிட்டு இருந்து வரும் வம்ச விருத்தி?
நான் இல்லாதப்ப நீ நிம்மதியா ரெஸ்ட் எடுக்கத்தான் உனக்குப் பிடிச்ச மாதிரி இந்த ரூம்! நான் உங்கூட இருக்கறப்ப இங்க ஓடியாரணும்னு நெனச்ச.....? நெனச்சுத் தான் பாரேன்! அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும்!" என்று சொன்னவனை புன்னகைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தானலஷ்மி.

"எனக்கு உங்கப்பா பேசுனத கேட்டதுல இருந்து ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருக்கு! ரூமுக்குள்ள போயி அமைதியா ஒக்காந்துருந்தா, கோபம் போயிடுமான்னு பாத்தாலும் அவர் பேசுன பேச்சே திரும்ப திரும்ப மூளைக்குள்ள சுத்திட்டு இருக்கு! உன்னை விட்டுட்டு கிளம்புறேன்னு சொன்னா நீ ஒருபக்கம் டென்ஷன் ஆகுற! நம்ம ரெண்டு பேரோட இந்த மூடையும் சரி பண்றதுக்கு என்ன பண்ணலாம்? நீயே சொல்லு!" என்று கேட்டாள் சந்தானலஷ்மி.

"நீ வேற.... இவனோட விஷயம் எல்லாம் நமக்குத் தெரியும்; அதுனால நாம சொல்றது எல்லாத்தையும் இவன் தலைய ஆட்டிக் கேட்டுக்குவான்ற மைண்ட்செட் தான் எங்கப்பனோடது; ஐயாயிரம் குடுக்கும் போதே இந்த ஆட்டம் போடுறவன் அவங்கேக்குற லட்ச ரூபாய தூக்கிக் குடுத்தோம்னா எங்க அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்னு ஒரு சித்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல;
அந்தாளு பேசுனதெல்லாம் ரோட்ல கெடக்குற நாய் குலைச்சதா நெனச்சுக்க. ஆனாலும் என்னைய விட்டுடுவேன்னு நீ எப்டி லஷ்மி சொல்லலாம்?" என்று சொன்னவனுடைய பேச்சு காதில் விழாமல் இருக்க தன்னுடைய காதைப் பொத்திக் கொண்டாள் சந்தனா.

"காதப் பொத்துனாப்ல உன்னைய விட்டுவேனா நானு? சாப்பாட்டுக்கு காய் வெட்டி வைக்கிற வேலையெல்லாம் அம்மாவும், சேகரும் வந்ததுக்கப்பறம் தான் பாக்கணும். அதுனால ஒரு கஷ்டமான வேலைய செய்ய நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றியா? நீ தான் என்னை விட்டுடுவேன்னு சொன்னதுக்கு இன்னும் ஸாரி கூட கேக்கல இல்ல? வேலையில எனக்கு கொஞ்சம் உதவி பண்ணி உன் ஸாரி கேக்குற படலத்த முடிச்சுடு!" என்று கேட்டவனிடம் ஆத்திரத்துடன்,

"ஐயோ..... உயிர வாங்காதடா! அந்த கஷ்டமான வேல என்ன வேலைன்னு சொல்லித் தொல; அத நானே கூட செஞ்சு தர்றேன்! அத விட்டுட்டு நீ எப்டி அத சொன்ன? நீ எப்டி அத சொல்லலாம்னு கேட்டு கேட்டு என்னைய படுத்தாத!" என்று கதிரிடம் கைகூப்பினாள் சந்தனா.

"சரி சரி! வா வேலையப் பாக்குறதுக்கு போவம்!" என்றவன் அவளை கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.

"மொட்டமாடியில ஏறி என்னடா வேல பாக்கப் போற? வாஷிங் வேலையையும் ஆன்ட்டி முடிச்சுட்டாங்களே? அவங்க போட்ட
வடகத்துக்கு காக்கா வராம அத வெரட்டுன்னு சொல்லிடாத...... அந்த வேலையெல்லாம் என்னால செய்ய முடியாது!" என்று சொன்னவளை படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன்
பின்னால் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

"இப்ப நான் அம்மாவ வடகம் போடுற வேலையெல்லாம் செய்ய விடுறதில்ல லஷ்மி! அம்மாவையும், உன்னையும் பூ மாதிரி கசக்காம வச்சுக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்; உன்னைய போய் காக்கா வெரட்டுற வேலையெல்லாம் செய்ய சொல்லுவேனா?" என்று கேட்டவன்,

"ரெண்டு நிமிஷம் இங்க நில்லு!" என்று சொல்லி அவளை மாடிக்கு ஏறும் படிகளிலேயே நிறுத்தி விட்டு மாடியில் உள்ள ஒரு சிறிய அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு ஐந்து நிமிடத்தில் மெல்லிய பனியன் மற்றும் ஷார்ட்ஸ் உடன் வெளியே வந்தான்.

"ஏதோ கஷ்டமான வேலை இருக்குன்ன..... மொட்ட மாடிக்கு கூட்டிட்டு வந்த; இங்க வந்து ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு ஷார்ட்ஸோட நிக்குற! என்ன தான்டா பண்ணப் போற?" என்று கேட்டவளிடம்,

"முதல்ல நாம ரெண்டு பேரும் தண்ணி தொட்டிக்குள்ள இறங்கி விளையாடப் போறோம்; அப்போ தண்ணி அழுக்காகிடும்! அப்புறம் தொட்டிய கழுவிட்டு தண்ணிய ரொப்பி வச்சுடப் போறோம்; தனியா செஞ்சா இது ரொம்ப கஷ்டமான வேல; உன்னோட சேந்து செஞ்சா ரொம்ப ஜாலியான வேலையாகிடும்! இரும்பு ஏணியில ஏறு லஷ்மி; மேல போலாம்!" என்று கேட்டவனிடம் தலையசைத்தவள்,

"ம்ஹூம்! தண்ணி தொட்டிக்குள்ள எறங்கி ஆடுனா ட்ரெஸ் ஈரமாகிடும்! அத நீயே போயி க்ளீன் பண்ணு; நான்லாம் மேல வரல!" என்றாள்.

"ம்ப்ச்! மேல ஏறி வந்து தொட்டியோட கைப்பிடி சுவர்ல
ஒக்காந்துக்கிட்டு எங்கூட பேசிட்டு இருக்கலாம்லடீ? உங்கூட பேசிக்கிட்டே செஞ்சா வேலைய ஈஸியா முடிச்சிடலாம்; இல்லன்னா தொட்டிய தேய்ச்சு கழுவி அழுக்கு தண்ணிய வெளிய தொறந்து உடுறதுக்குள்ள எனக்கு தாவு தீந்துடும்! வாங்க ஸா.........ர் போலாம்!" என்று சொல்லி இடைவரை குனிந்தவனிடம் எரிச்சலடைந்த குரலில்,

"இங்க பாரு; மறுபடி என்னைய ஸாரு, கீரு, பீருன்னு கூப்ட..... இந்தோ ஓரமா கெடக்குற செங்கல்ல எடுத்துட்டு வந்து
உன் கால் மேலயே போட்டுடுவேன் பாத்துக்க! அப்புறம் தொட்டிய கழுவுறதெல்லாம் நினைச்சுப் பாக்காம பத்து நாளைக்கு நீ நொண்டி அடிச்சிக்கிட்டு இருக்கணும்! இன்னிக்கு உங்கிட்ட ஒருவிஷயம் சொல்றேன். அத நல்லாக் கேட்டுக்க! நம்ம ரெண்டு பேரும் நமக்குள்ள இனிமே ஸார்ங்குற வார்த்தையோ, இல்ல ஸ்லேவ்ங்குற வார்த்தையோ எப்பவுமே யூஸ் பண்ணிக்கக் கூடாது. அத மாதிரி நீ என்னை ஏதோ வானத்துல இருந்து குதிச்சு வந்த ஏஞ்சல் மாதிரி ட்ரீட் பண்ணக்கூடாது. இதெல்லாம் செய்யாம முழுசா உன் லைஃப் பார்டனரா என்னை ஏத்துக்க முடிஞ்சா, புதன்கிழம எங்க வீட்டுக்கு வா. இல்லன்னா காலம்பூரா இப்டியே சிங்கிளாவே இருந்துக்க. போடா!" என்று சொன்னவளின் கையைப் பற்றினான் கதிர்.

"ஏய்.... எதுக்கு இப்ப கையப் புடிக்கிற?" என்று சந்தனா கேட்க,

"நீ ஒண்ணும் பெரிய மகாராணி இல்லன்னு நீயே சொல்லிட்டல்ல சூபொ? அப்போ மேல வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு! வீட்ல நான் பாக்குற எல்லா வேலையிலயும் என் பொண்டாட்டி எங்கூடவே தான் இருக்கணும், வா போவோம்!" என்று அவளிடம் சொன்னவன் அவளை ஏணியில் ஏற்றினான்.

"கதிர்..... இந்த ஹைட் எனக்குக் கொஞ்சம் பயமாயிருக்குடா!" என்றவளிடம்,

"ம்க்கும்.... எட்டூரு கிழியுற மாதிரி வாய் தான் பேசுவ! மத்தபடி தண்ணிக்குள்ள எறங்குனா பிடிக்காது; மண் ஒட்டுனா பிடிக்காது; உயரத்துல ஏறுனா பிடிக்காது...... இப்டி எத்தன விஷயம் பிடிக்காதுடீ ஒனக்கு? பயப்படுற மாதிரி ஸீனப் போடாம மரியாதயா ஏறு!" என்று சொன்னவனிடம்,

"அடேய் லூசுப்பயலே.... நான் ஸீனெல்லாம் போடல. நிஜமாவே எனக்கு பயமாயிருக்குடா!" என்று சற்றே பயந்த குரலில் சொன்னாள் சந்தனா.

"ரேஷன் உன்னைய பத்திரமா மேல கூட்டிட்டுப் போறேன்டா சூபொ! நீ ரெண்டு படி மட்டும் ஏறேன்!" என்று அவளிடம் சொன்னவன், அவளுக்குப் பின்னாலேயே படிகளில் ஏறி இரு கைகளாலும் அவளை அணைகட்டி நின்று ஒவ்வொரு படியாக ஏற்றினான்.

"அவ்ளோதான் லஷ்மி..... ஏறியாச்சு!" என்று புன்னகைத்தவனிடம் ஆமென தலையை அசைத்தவள்,

"யேய் கதிர்.... இங்கருந்து பாக்க ஊர் ரொம்ப அழகா தெரியுதுல்ல?" என்று கேட்டாள்.

"அதுசரி... இத்தன நேரமா கண்ண மூடி கையால துழாவி ஏணியில
நடுங்கிக்கிட்டே ஏறிட்டு இப்ப ஊரு அழகாயிருக்கா ஒனக்கு? ஏன்டீ சொல்லமாட்ட? லஷ்மி நீ இப்ப தொட்டிக்குள்ள எறங்காத! நான் முதல்ல எறங்கிட்டு உனக்கு கைகுடுக்குறேன்!" என்று சொன்னவனின் பேச்சைக் கேட்காமல் பொறுமையாக என்றாலும் சப்பணமிட்டு அமர்ந்து காலை தொட்டிக்குள் போட்டவள் முதலில் தொட்டிக்குள் குதித்தாள்.

"ஏ......ய்! சொன்ன பேச்ச கேக்காம உள்ள குதிச்சுக்கிட்டு? என்னடீ இது?" என்று கேட்டவனிடம்,

"கதிர்.... நான் லைஃப்ல பர்ஸ்ட் டைம் இந்த மாதிரி வாட்டர் டேங்க்ல எறங்கியிருக்கேன். அதுனால இத எப்டி க்ளீன் பண்ணனும்னு எனக்குத் தெரியல. நீ கொஞ்சம் கைட் பண்ணு. நான் கத்துக்குவேன்!" என்று தலையை சரித்துக் கேட்டவளின் அழகில் மயங்கி தொட்டிக்குள் இறங்கியவன் அவளது மூக்கில் முத்தமிட்டான்.

"ஏ....ச்சீ! எதுக்குடா மூக்குல போயி கிஸ் பண்ற? உங்கிட்ட நான் கேட்டா நீ என்ன செஞ்சுட்டு இருக்க? இந்த டேங்க்ல என்ன செய்யணும்னு சொல்லு மேன்!" என்று கேட்டவளிடம்,

"அதான் முதல்லயே சொன்னேனே செல்லம்.... டேங்க்ல தண்ணி ஏத்த வேண்டியிருந்தது. நம்ம ரெண்டு பேரும் கடுப்புல வேற இருந்தமா? அதான் இங்க கொஞ்ச நேரம்
விளையாடலாம்னு உன்னைய இங்க கூட்டிட்டு வந்தேன். இத க்ளீன் பண்ற வேலையெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ ஜாலியா இதுல விளையாடு. போதும்!" என்றவனிடம் புரியாத பார்வை பார்த்தவள்,

"தொட்டிக்குள்ள இத்தூணுன்டா தண்ணியிருக்கு. இத வச்சுட்டு என்ன விளையாடுறது? எப்டி விளையாடுறது? நீ என்ன லூசாடா?" என்று கேட்டாள்.

"ஆமா! உன்னால தான் முழுசா லூசாகிட்டேன்!" என்று சொன்னவன் தன்னுடைய காலால்
முழு வேகத்தில் தண்ணீரை சளாரென தள்ளினான்.

அவன் தண்ணீரை தள்ளிய வேகத்தில் சந்தனாவின் உடை தொடையளவு பாகம் நனைந்து போய் விட்டது.

"ஓ.... இப்டி தான் க்ளீன் பண்ணனுமா?" என்று கேட்டவளை கட்டிப் பிடித்தவன்,

"ம்ஹூம்! இப்டித்தான் விளையாடணும்!" என்று சொல்லி அவளை அப்டியே தாங்கிக் கொண்டு கொஞ்சமாக இருந்த தண்ணீருக்குள் அமர்ந்தான்.

இருவரது இடைப்பகுதி வரை தண்ணீருக்குள் இருக்க, சந்தனா கதிரின் மடியில் அமர்ந்திருந்தாள்.

அவனுடைய உயரத்திற்கும் அதிகமான உயரம் கொண்ட அந்த தொட்டி அவர்கள் இருவரும் அமர்வதற்கு சௌகரியமான ஒரு இடமாக இருந்தது.

"ஏ.........ய்! என்ன தான் பண்றோம் நாம?" என்று கஷ்டப்பட்டு முகத்தைத் திருப்பி அவனிடம் கேட்டவளிடம்,

"எந்த டிஸ்டர்பென்ஸூம் இல்லாம லவ் பண்றோம்! சும்மா இரேன்டீ கொஞ்ச நேரம்!" என்று ஹஸ்கி வாய்ஸிஸ் அவளிடம் பேசியவன் அவளை அணைத்தபடி கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro