
❤ சிறுநகை 51
அன்று காலையில் தன்னுடைய கடைக்கு வந்த குணாளினி தான் வழக்கமாக வண்டியை பார்க் செய்யும் இடத்தில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டிருந்த எண்ஃபீல்டை பார்த்து "வந்துட்டான்டா காலங்காத்தால நம்ம உசுர பிய்ச்சு திங்குறதுக்கு....!" என்று நினைத்து
எரிச்சலடைந்த படி தனது வண்டியை அவனுடைய வண்டியின் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு தன்னுடைய கடைக்குள் நுழைந்தாள்.
"மிஸஸ். சுந்தரவடிவு! நாம ஒண்ணும் இங்க லைப்ரரி நடத்தல. ஸோ இத்தன சேர்ஸ் இங்க அவசியமில்ல! மூணே மூணு பேர் மட்டும் உட்காருற ஒரு த்ரீ ஸீட்டர மட்டும் கடைக்குள்ள வச்சுட்டு, மத்த ரெண்டையும் வெளிய எடுங்க! நிறைய கஸ்டமர்ஸே வந்தாலும், அவங்க காரிடார் ஏரியாவுல வெயிட் பண்ற மாதிரி செட்டப்ப மாத்துங்க. ஒரு கஸ்டமர குணாளினி அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கும் போது, அடுத்தவங்க உள்ள வரக்கூடாது.... அண்ட் உங்களோட எல்லா டிஸைன்ஸையும் இப்டி ஷோ பீஸா வைக்கக்கூடாது......"
"டிஸைனிங் தெரிஞ்சவங்களும் இங்க வர்றதுக்கு அதிகமா வாய்ப்புகள் இருக்கு; ஸோ நம்மளோட சிக்னேச்சர் டிஸைன்ஸ் முதக்கொண்டு எல்லாத்தையும் நாம டிஸ்ப்ளேல வச்சா, அவங்க அத ஈஸியா காப்பி பண்றதுக்கு நாமளே ஒரு ரூட் போட்டுக் குடுத்த மாதிரி இருக்கும்! ஆம் ஐ ரைட்?" என்று கேட்டவனை வியந்து பார்த்த சுந்தரவடிவு அந்த ரோலிங் சேரில் அவன் அமர்ந்திருந்த தோரணையை பார்த்தும் வியந்தார். சுவரில் சாய்ந்து
கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் குணாளினி.
"அய்ய... என் ராசா....! எங்க குணாப்புள்ளக்கெல்லாம் மாங்கு மாங்குன்னு வேல செய்யத் தெரியுமே ஒழிஞ்சு அது இப்டியெல்லாம் கூறுவாறா ஒரு யோசன கூட சொல்லாதுங்க தம்பி;
எங்ககிட்ட துணியக் குடுத்த மாப்பிள்ள பயலுக வந்து நல்லாருக்குதுங்கக்கா; கோட்டு தைச்சது எனக்கு பிடிச்சுருக்குதுங்கன்னு சொல்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் நகத்த கடிச்சிக்கிட்டு ஒக்காந்துருப்போம்! இப்ப நீங்க இங்க வந்து இத்தன யோசன சொல்றதால இந்தப்புள்ளையோட கட எங்கயோ போயிடப்போவுது பாருங்க! மொத வேலையா நம்ம
சூட்டு கோட்டையெல்லாம் யாரும் பாக்க முடியாத அளவுக்கு ஒரு இரும்பு பீரோவ வாங்கி அதுக்குள்ளார வச்சி பத்திரமா பூட்டி வக்கணுமுங்க! நீங்க
ஏதாவது சாப்டுறீங்களா? சூடா ரெண்டு இட்லி வட?" என்று கேட்டார் சுந்தரவடிவு.
"மாங்கு மாங்குன்னு வேல செஞ்சா தான் சக்ஸஸ தொட முடியும்ங்குற கான்செப்டே தப்பு மிஸஸ் சுந்தரவடிவு; என் வொஃய்ப்க்கு அது தெரியல! பரவாயில்ல. அவளுக்கு தெரியாதத எல்லாம் ஒண்ணு ஒண்ணா அவளுக்கு சொல்லிக்குடுத்துட்டா போச்சு! நீங்க என்ன பண்றீங்க.....? எங்க அங்கிள் வர்றதுக்குள்ள எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ மட்டும் வாங்கிட்டு வாங்க! வீட்ல டிபன், ட்ரிங்க் எல்லாம் முடிச்சுட்டு தான் வந்தேன்..... ஆனாலும் நீங்க கேட்டதுக்கு அப்புறம் உங்க கிட்ட வேண்டாம்னு சொல்லக் கூடாதில்லயா? ரொம்ப அவசரம் எல்லாம் இல்ல..... பொறுமையா வந்தா போதும்!" என்று சொன்னவனிடம் அந்தப் பெண்மணி உதடு மட்டும் தெரிய புன்னகைத்த படி தலையாட்டி விட்டு சென்றார்.
அவர் சென்ற பிறகு அந்த இடத்தின் உரிமையாளன் அவன் தான் போல அந்த அறையின் கதவை சாற்றியவன் கதவின் நிலை பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தவளின் அருகில் வந்து,
"மை டியர் டிம்பிள்! வொய் ஆர் யூ ஸ்டாண்டிங் இன் அ சேட் மூட்?" என்று கேட்டு அவள் கன்னம் கிள்ளினான்.
"ம்ப்ச்! நானுந்தான் அந்த தள்ளுற சேருல ஒக்காருறேன், எழுந்திரிக்குறேன்; ஆனா நீ ஒக்காருற மாதிரி கெத்தா இல்ல தெரியுமா? பாரு.... இத்தன நாளு ஒன்னைய மாதிரி வருமா குணாப்புள்ளன்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்த வடிவக்கா கூட போறபோக்குல என்னைய கூறுகெட்டதுன்னு திட்டிட்டுப் போவுது? நீயும் அப்டி நெனச்சுதான
நேத்து ராத்திரியில என் இங்கிலீச கேட்டு நீ உழுந்து உழுந்து சிரிச்ச? உன்னோடது கான்வென்ட் இங்கிலீசு; என்னோடது நடுநிலைப்பள்ளி இங்கிலீசு தான......? அதுக்கும், இதுக்கும் வித்யாசம் இருக்கத்தான செய்யும்? போடா! நான் உன் அந்தஸ்துக்குலா சம்பந்தமே இல்லாத பொண்ணு! அத்த, மினு ரெண்டுபேரும் அப்பப்ப லேசுபாசா எங்கிட்ட சொல்லுவாங்க. ஒண்ணுமில்ல..... எங்க மூணு பேருட்டயும் தனித்தனியா பத்தாயிரம் குடுத்து ஒரு பொடவை எடுத்துட்டு வரச் சொல்லேன். அவிய்ங்க ரெண்டுபேரும் ஆளாளுக்கு சரியா பத்தாயிரத்துக்கு ஒரு பொடவதே எடுத்துட்டு வருமுங்க! ஆனா நான் அந்தக் காசுல ஆயிரம் ஆயிரமுனு பத்து பொடவய அள்ளிக் குவிச்சுருப்பேன்; இது பொறப்புல இருந்தே எங்கூட ஒட்டிக்கிட்ட குணம் சஞ்சீவ்! இந்த மாதிரி குணமெல்லாம் உன் பொண்டாட்டியா வரப்போற பொண்ணு கிட்ட இருக்கக்கூடாதுல்ல?" என்று அவனை மருண்ட பார்வை பார்த்த படி கேட்டவளை,
"பைத்தியம்......! இப்டித்தான் யோசிச்சு நீ ஹர்ட் ஆகியிருப்பன்னு
நான் நேத்து நைட்டே நினைச்சேன்டீ! அதுனால தான் காலையில மொத வேலையா ஒன்னோட ஷாப்புக்கு வந்தேன்! லாங்குவேஜ் தெரியலனா கத்துக்கிட்டா போச்சு; பழக்கம் தெரியலன்னா பழகிக்கிட்டா போச்சு; என் ஸ்டேட்டஸ் தான் முக்கியம்னு நான் நினைச்சுருந்தேன்னா உங்கையில நான் ப்ளாட்டினம் வளையல் தான்
போட்ருக்கணும்.... அதையா நான் உனக்குப் போட்டேன்? இல்லல்ல..... மத்தவங்க உன்னை பார்க்குற பார்வை எப்டி இருக்குதுன்னு யோசிச்சு, நீ உன்னோட ஸ்டேட்டஸ தூக்கிப் புடிச்சுட்டே இருக்க வேண்டாம் பேபி! உனக்கு எது அழகா இருக்குமோ, எது பிடிக்குமோ அத வாங்கிக்கோ. எஸ்ஆர்ஜி டைரக்டரோட பொண்டாட்டி ஆயிரம் ரூபாய்ல ஸாரி கட்டக்கூடாதுன்னு யாராவது சொல்லுவாங்களா என்ன? அப்டி சொல்றவங்கள நாம ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுருவோம் சரியா?
இன்னொருதடவ நமக்குள்ள இந்த ஸ்டேட்டஸ், பணம், காசு, வித்யாசம், உனக்கு தான் நிறைய அறிவிருக்கு...... இந்த மாதிரியான பேச்செல்லாம் வரவேண்டாம்னு நினைக்குறேன். நீ என்ன நினைக்குற?" என்று கேட்டவனிடம்,
"இந்த சூட்ல நீ ரொம்ப அழகாயிருக்க..... உன்னை அப்டியே கடிச்சு சாப்ட்டுடலாமான்னு நினைக்குறேன்!" என்று சொன்னவள் தன் கைகளால்
அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனுடைய ஷுக்களின் மேல் இரண்டு கால்களையும் வைத்து அதில் ஏறி நின்று கொண்டாள். அவளது உடலை சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டவன் அவளிடம்,
"எப்டி யோசிச்சாலும் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதிலே கிடைக்க மாட்டேங்குதேடீ? நான் எப்டி உங்கிட்ட இவ்ளோ சீக்கிரத்துல க்ளோஸ் ஆனேன்? நீ என்ன யோசிப்பன்னு கூட என்னால கரெக்டா கெஸ் பண்ண முடியுது. பட் இதெல்லாம் எப்டின்னு தான் எனக்கு தெரியல? இதுதான் ஒருவேள லவ்வோட மேஜிக்கோ!" என்று சொல்லி அதிசயப்பட்டான்
"ஆமா; இது மோடி மஸ்தான் காட்டுற மேஜிக் தான்..... ஆளப்பாரு; நல்லா சாறு புழிஞ்சு போட்டு சக்கை மாதிரி இப்டி
ஓரியா இருக்க! உன்னைய இறுக்கி கட்டிப்புடிக்க கூட பயமாயிருக்கு; நல்லா சாப்ட்டு இன்னும் கொஞ்சம் பூசுனாப்ல ஆவு மாமா!" என்று சொன்னவளின் கழுத்தில் தன்னுடைய நாடியை வைத்துக் கொண்டவன்,
"ஆகிடுவோம்!" என்றான் சிரித்த முகமாக.
"அத்தைக்கு குட்மார்னிங் சொன்னியா?" என்று கேட்டவளிடம்,
"ம்ஹூம்!" என்று பதிலளித்தவன், "ஏன்டா அவங்களோட உடனே பேசத் தான் முடியாதுன்ன; சரி! ஒரு குட்மார்னிங் கூடவா சொல்ல முடியல உன்னால?" என்று அவளிடமிருந்து திட்டுகளை வாங்கிக் கொண்டான்.
"நான் கொஞ்ச கொஞ்சமா அவங்க கிட்ட நார்மலா மிங்கிள் ஆக ட்ரை பண்றேன் டிம்பிள்! பட் உடனே இதெல்லாம் எங்கிட்ட இருந்து எதிர்பார்க்காத! அது கொஞ்சம் கஷ்டம்!" என்றான்.
"என்னவோ போ! எப்டித்தான் யாருமே வேண்டாம்னு இப்டி இருக்கியோ தெரியல!" என்று கேட்டவளுக்கு ஒரு புன்னகை தான் பதிலாக கிடைத்தது.
"ஹே... நான் நாளைக்கு ஈவ்னிங் நாகர்கோவிலுக்கு கெளம்புறேன். பாஸோட லவ்வுல கொஞ்சம் ப்ராப்ளம்; ஸோ அவர் கூட நாங்களும் இருந்தா பெட்டரா இருக்கும்னு அவர் ஃபீல் பண்றாரு!" என்றவனிடம்,
"அதென்ன அவருக்குன்னா மட்டும் இப்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு ஓடுற?" என்று கேட்டாள் குணாளினி. பெற்ற தாயை விட யாரோ ஒருவர் உனக்கு முக்கியமாகி விட்டார்களா என்ற மறைமுக கேள்வி அவளுடைய பேச்சில் ஒளிந்திருந்தது.
"நீ என்ன கோபப்பட்டாலும் சரி தான் டிம்பிள்! பாஸ் கூப்டா நான் அவருக்காக உடனே போய் நிப்பேன். என் அப்பா, அம்மா, தாத்தா கூட எனக்கு நான் விரும்புன ஃப்ரீடம் தரல; என்னை சுதந்திரமா எம்போக்குல வாழ விடல. இந்த உலகத்துல கதிர் ஒருத்தர் தான் என்னை நம்பி எங்கிட்ட கிட்டத்தட்ட
அவரோட வாழ்க்கையவே ஒப்படைச்சாரு! நீ என்ன பண்ணாலும் சரியாத்தான் இருக்கும்டா தம்பின்னு அவர் எங்கிட்ட சொன்ன வார்த்த என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்! எங்க ரெண்டு பேருல அவர் தான் என்னமோ எங்கிட்ட வேல பாக்குற மாதிரி இருக்கும் தெரியுமா? என்னோட தேவைக்கும் ஏன் அவரோட தேவைக்கும் பணத்த அவருக்கு நாந்தான் குடுக்கணும்! இப்டி எல்லாம் வேற யார்கிட்டயும் நான் விளக்கம் குடுத்ததில்ல. பட் உங்கிட்ட இத சொல்லிடணும்னு தோணுச்சு! ஸோ நான் நாகர்கோவில் போகணும்!" என்றான் சஞ்சீவ்.
"சரி.... அப்போ போயிட்டு வா!" என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தாள் குணாளினி.
"சும்மால்லாம் போக மாட்டேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..... அப்புறமா நிம்மதியா கிளம்பிப் போறேன். உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா? என் பேமிலி மெம்பர்ஸ ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்டவனிடம் உற்சாகமான சிரிப்புடன்,
"ஏனுங்க மாமோய்.... ஒம்பட சொந்தக்காரவிய்ங்கள எல்லாம் நமக்கு வருஷக்கணக்கா தெரியுமுங்க; ஆனாக்க அவுங்க யாரையும் இப்டி கட்டிப்புடிச்சுக்கிட்டு நா நிக்கலீங்க; அப்டிப் பாத்தா எங்களுக்கு ரொம்ப பிடிச்சது மாமே உங்கள தானுங்க.... என்ன சொல்றீங்க?" என்று கேட்டவளை இடுப்பெலும்பு முறியும்படி இறுக்கி அணைத்தவன்,
"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்குமுங்கம்மணி!" என்று சொல்லி விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"இங்க ஒண்ணு.... இங்க ஒண்ணு!" என்று கேட்டு நெற்றியில், மறு கன்னத்தில், புறங்கைகளில் அவனிடம் முத்தம் வாங்கிக் கொண்டவள்,
"ஏ..... ஒனக்கு இன்னும் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு என்ன வேல இருக்கு? கெளம்பு முதல்ல!" என்று தயவுதாட்சண்யம் இல்லாமல் பேசினாள்.
"மேடம் நான் கேட்ட டீ இன்னும் வரல!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம்,
"டீயெல்லாம் நாங்க கரெக்ட் பண்ணிக்குறோம். நீங்க என்ன ஒரு டீத்தண்ணிக்கு தொன்னாந்துக்கிட்டா இங்க வந்தீங்க? இல்லையில்ல!
நீங்க எதுக்கு வந்தீங்களோ அந்த வேலைய தான் சிறப்பா முடிச்சுட்டீங்களே? இப்ப கெளம்புங்க. காத்து வரட்டும்!" என்றாள் கறார்க்குரலில்.
"ஆனாலும் நீ ரொம்ப ஷெல்ஃபிஷ்டீ!" என்று குற்றம் சாட்டியவனிடம்,
"இது ஒன்ற மாமனார் கடைக்கு வார நேரமுடா; அவரு இங்க வாரதுக்குள்ள மரியாதயா கெளம்பி போய்ட்டே இரு! நம்ம டீலெல்லாம் நாம அடுத்த கேப் கெடைக்குறப்ப சரி பண்ணிக்கலாம்! அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்..... என்னோட இடத்துல நீ உன் வண்டிய நிறுத்துனதால, நான்
உன் வண்டியில காத்தப் புடுங்கி உட்டுப்போட்டேன்! கொஞ்ச தூரம் வண்டிய உருட்டிக்கிட்டே போ!" என்று நாக்கை துருத்திய படி சொன்னவளின் தலையில் குட்ட கையை ஓங்கியவன், அவள் கண்மூடி அழகாக பயந்து நின்ற நிலையைக் கண்டு, திருப்தியான சிரிப்புடன் அவளிடம் கையசைத்து விட்டு சென்றான்.
"வண்டிய தள்ளிட்டுப் போவணும்னு சொன்னாக்கூட பல்லக் காட்டுது; இப்ப டாட்டா காட்டுறதுல கூட அதுக்குன்னு ஒரு ஸ்டைல வச்சுருக்குது பாருய்யா....!" என்று அவனை நினைத்து வியந்தவள் அன்றைய வேலைகளை ஆரம்பிக்காமல் ஒரு கிறக்கத்திலேயே அமர்ந்திருந்தாள்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro