
❤ சிறுநகை 50
குணாளினியும், சஞ்சீவும் சாப்பிட்டு முடிக்கும் வரை வினோதினி, சஞ்சீவின் சித்தப்பா, சித்தி, மினு, வசந்தன் இவர்கள் அனைவரும் லானில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பத்து நிமிடத்தில் பெயருக்கு சாப்பிட்டு எழுந்து விடலாம் என்று நினைத்தவளை அப்படி சட்டென்று எழுந்திரிக்க விடாமல் அவளுக்கு அங்கிருந்த நிறைய பதார்த்தங்களில் எது எது வேண்டும், எது எது பிடிக்கும் என்று ஒவ்வொன்றையும் கேட்டு அதை அவளுடைய இலையில் பரிமாறிக் கொண்டிருந்தான் புதிதாய் பிறந்த அந்தக் காதலன்.
"சட்டுப்புட்டுன்னு சாப்ட்டு என்னைய எந்திரிக்க உடுடா!" என்று சொல்லி பல்லைக் கடித்தவளிடம்,
"சட்டுபுட்டுன்னு சாப்ட்டுட்டு நீ எங்க போகப்போற டிம்பிள்....? வீட்டுக்குத்தான? அங்க மெதுவா போய்க்கலாம் விடு! உனக்கு சாப்பாட்டுல எது எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்? எது எதெல்லாம் தொட்டே பாக்காம அவாய்ட் பண்ணுவன்னு எனக்குத் தெரிய வேண்டாமா? உன்னைப் பத்தி ஒண்ணுமே தெரியாம இந்தப் பொண்ண நான் லவ் பண்றேன்னு சொன்னா கேக்குறவங்க சிரிக்க மாட்டாங்களா?" என்று கேட்டவனுக்கு பதிலாக கிடைத்த அவளுடைய கண்களின் உருட்டல் சிரிப்பைத் தான் தந்தது.
ஒருவழியாக டைனிங் டேபிளில்
அவன் கொடுத்த இம்சைகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து வந்தவள், அவளுடைய தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஆறு பேருக்கு தான் அங்கு இருக்கை வசதி போடப்பட்டிருக்க சஞ்சீவ் குணாளினியை ஒருமாதிரியாக முறைத்துக் கொண்டே சென்று சேருக்கு சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.
"பெரிமா! சஞ்சு அண்ணா ஊஞ்சல்ல ஒக்காந்து அண்ணிய மொறைச்சு பாத்துட்டு ஒக்காந்துருக்கான்!" என்று வினோதினியின் காதைக் கடித்தாள் மினு.
"உங்கண்ணி அவன் பக்கத்துல உட்காரலன்னு நினைச்சு ஃபீல் பண்றானோ என்னவோடா? இரு முதல்ல அண்ணியோட அப்பா கிட்ட பேசுவோம்!" என்று சொன்ன வினோதினி தன்னுடைய கொழுந்தனாரின் முகத்தைப் பார்த்தார். அவரும் வினோதினியிடம் பேசுங்கள் என்பது போல கண்ணசைக்க வசந்தனிடம்,
"அப்ப..... குணாளினிக்கும், சஞ்சீவ்க்கும் சரின்னா நாம ஏற்கனவே பேசி வச்சிருந்த மாதிரி அவங்க கல்யாணத்த நடத்துறதுல உங்களுக்கு சம்மதந்தான மிஸ்டர் வசந்தன்?" என்று கேட்டார்.
"இல்லிங்கம்மா.... நான் வீட்ல போயி என்ற பொண்ணு கிட்ட கலந்து பேசுனதுக்கு பெறவு நாம எல்லாத்தையும்.....!" என்று அவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே பொறுமையற்ற ஒரு மூச்சுடன் சஞ்சீவ் அனைவரின் நடுவில் வந்து நின்றான்.
"ஸாரி ஃபார் இன்டரப்டிங் மிஸ்டர் வசந்தன்; உங்களுக்கும் மட்டுமில்ல; இங்க இருக்குற எல்லாருக்கும் பொதுவான மெசேஜாவே நான் இத சொல்றேன். எனக்கு குணாளினிய ரொம்ப பிடிச்சிருக்கு. அவள மேரேஜ் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.....!"
"நாலு நாள் முன்னால நீங்க ரெஸ்டாரெண்ட்ல இருக்கும்போது உங்க பொண்ணு உங்க கிட்ட எப்டிப்பா நான் அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழப்போறேன்னு கேட்டா தான? இப்பயும் அதே மாதிரி எண்ணத்தோட தான் இருக்காளான்னு கேளுங்க!"
"அப்டி அவ ஆமான்னு சொன்னா நீங்க தாராளமா அவள இங்கிருந்து இப்பவே கூட்டிட்டு கெளம்பிடலாம்; இதுக்கப்புறம் இந்த வீட்டுப்பக்கம் வரக்கூட தேவையில்ல! யாரோட கம்பெல்ஷனுக்காகவும் நீங்க உங்க பொண்ண எனக்கு குடுக்க வேணாம்; ஆஸ்க் அபௌட் ஹெர் ஒப்பீனியன்!" என்றான் உறுதியான குரலில்.
"போச்சு.... பெரிமா! சஞ்சு அண்ணாக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது! நம்ம ஒரு நல்ல ப்ரெண்டையும் மிஸ் பண்ணப் போறோம்!" என்று முணங்கிய மினுவின் தொடையில் கிள்ளி வாயில் விரல் வைத்துக் காட்டினார் வினோதினி.
"குணாப்புள்ள..... அவிங்களே இப்டி சொல்லிட்டதுக்கு அப்பால நமக்கு என்ன ரோசன? சொல்றா கண்ணு! ஒன்ற மனசுல என்ன இருக்குதோ அத தைரியமா சொல்லு; இந்தப் பையன் நமக்கு வேணாமுல்ல அம்மணி?" என்று கேட்ட தன் தந்தையின் கண்களைப் பார்த்தவள்,
"இல்லீங்கப்பா; அவங்கள கட்டிக்கிட எனக்கு இஷ்டந்தானுங்க!" என்றாள் தெளிவான குரலில்.
"திடீர்னு நீ ஓகே சொல்றன்னா
நான் உன்னை தனியா கடத்திட்டுப் போயி ஏதாவது ப்ளாக்மெயில் பண்ணியிருப்பேனோன்னு உங்கப்பா நெனச்சுக்கப் போறாரு குணாளினி; உனக்கு என் கிட்ட பயமோ, தயக்கமோ இல்லன்னு சொல்ற மாதிரி நீ இப்டி என் பக்கத்துல வந்து நிக்குறியா?" என்று ஒற்றைக்கையை நீட்டியவனின் கையில் மறுயோசனையில்லாமல்
தன்னுடைய கையை வைத்தாள் குணாளினி.
"தேங்க்ஸ் ஃபார் கம்மிங் இன் மை லைஃப் டியர்!" என்று அவளிடம் சொன்னவன் அவளுடைய கையை சற்றே அழுத்தம் கொடுத்து இழுக்க, திடீரென அவன் இப்படி இழுத்ததால் அவனுடைய மார்பில் சென்று மோதி பதிந்திருந்தாள் குணாளினி.
அந்த இருவரின் ஆதுரமான அணைப்பு சுற்றியிருந்த அனைவரும் தவறாக எண்ணும்படி இல்லை. இவள் என்னவள் என்று அவனும், இவன் என்னவன் என்று அவளும் அனைவரிடமும் ஊர்ஜிதம் செய்வது போல் இருந்தது.
"வாவ்..... எப்பவும் பல்லை காட்டி நம்மள கடிச்சு குதறிட்டு இருக்குற நம்ம வீட்டு அல்ஷேஷனா இவன்? இட்ஸ் ஸோ மேஜிக்கல்! இதுக்கா இவ்ளோ பயந்தோம் நாம? வெப் சீரீஸ் பாக்குற மாதிரியேயில்ல இருக்கு! ஹௌ ரொமான்டிக்?" என்று கன்னத்தில் கை வைத்து லேசாக வாய்பிளந்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்த மினுவின் தலையில் பலமாக ஒரு கொட்டு வைத்த அவளுடைய அன்னை,
"அங்க என்னத்த வாய பாத்துக்கிட்டு நிக்குற? தாத்தா ரூம்ல அவர் படத்துக்கு முன்னால பூக்கட்டி வச்சிருக்கேன். அதப் போயி எடுத்துட்டு வா போ!" என்றார்.
"நீ ரொம்ப மோசம் மம்மி! அண்ணா தான அண்ணிய ஹக் பண்ணிட்டு நின்னுட்டு இருக்கான்; நீ என்னைய எதுக்கு அடிக்குற?" என்று உதடு பிதுக்கி தலையை தடவியபடியே வீட்டிற்குள் சென்றாள் அந்தக் குட்டிப்பெண்.
"மிஸ்டர் விநோதன்! உங்களோட பொண்ணும், நீங்களுமா தனியா கஷ்டப்பட்ட காலத்துல உங்க பக்கத்துல கூட வராத சொந்தபந்தம் இப்ப நீங்க குணாளானிக்கு கல்யாணம்னு சொன்னீங்கன்னா கண்டிப்பா வருவாங்க.... ஆனா அவங்க யார்கிட்டயும் குணாளினியால இயல்பா ஒட்ட முடியாது. அவ எங்க குடும்பத்துல தான் நல்லா பேசிப் பழகியிருக்கா!"
"எங்க குடும்பத்துல இருக்குறவங்க எல்லாரையும் பிடிச்சதுனால தான் எம்பையன் மாதிரி ஒருத்தன சமாளிக்க சரின்னு சொன்னாளா இருக்கும்;
அவளோட ப்ளஸ், மைனஸ் எல்லாமே எங்களுக்குத் தெரியும். எங்களப் பத்தி அவளுக்கும் நல்லாத் தெரியும்! சஞ்சீவ் ஒருத்தன பத்தி நினைச்சு ரொம்ப பயந்துட்டு இருந்தா; இப்ப அவனும் அவன் வாயாலயே உங்களுக்கு வார்த்தையும் குடுத்துட்டான்!"
"பணம் நிறைய இருக்குற காரணத்துனால நீங்க எங்க குடும்பத்த பாத்து பயப்படாதீங்க. எங்களுக்கு மினு எப்டியோ, அதே மாதிரி தான் குணாளினியும்! உங்க பொண்ணு இங்க நல்லாயிருப்பாங்குற நம்பிக்கையோட இந்த சம்பந்தத்துக்கு சரி சொல்லுங்க!" என்று விநோதினி சொல்ல வசந்தன் சற்றுநேரம் யோசித்தபடி நின்று விட்டு,
"சரிங்கம்மா! எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதந்தானுங்க! என்ற மக சந்தோஷமா இருந்தா போதுமுங்க!" என்றார்.
"அப்புறம் என்ன? இவ தான் எங்க குடும்பத்துக்கு மருமகன்னு நாங்க உறுதி பேசுக்கிறோம்!" என்று சொன்ன சஞ்சீவின் சித்தப்பா குணாளினியின் அப்பாவின் கைகுலுக்கி,
"உட்காருங்க சம்பந்தி! மணி ஒம்போது தான ஆகுது; நாம இன்னுங்கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்!" என்றார்.
ஊஞ்சலில் அவள் கையை மட்டும் பிடித்துக் கொண்டு வேறெந்த சேட்டையும் செய்யாமல் ஓரடி இடைவெளியில் அமர்ந்திருந்தவன் அவளிடம்,
"ஏய்..... மாம் சொன்னத கேட்டியா இல்லையா நீ?" என்று கேள்வி எழுப்பினான்.
"அவங்க நெறய சொன்னாங்க. எதை கேட்டியான்னு கேக்குறீங்க?" என்று கேட்டு உதட்டை சுருக்கினாள்.
"ம்ப்ச்! மறுபடியும் ங்க பிஸினஸ ஆரம்பிச்சுட்டியா? சரி எப்டியாவது கூப்ட்டுட்டுப் போ. உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா? இல்ல என் பேமிலி மெம்பர்ஸ ரொம்ப பிடிக்குமா? யாரையாவது ஒருத்தர தான் சொல்லணும். நான் எக்ஸ்பெக்ட் பண்ற ஆன்ஸர சொல்லல..... கொன்னுடுவேன்டீ உன்ன!" என்று உறுத்து விழித்த படி அவளுடைய வாயிலிருந்து வரப்போகும் பதிலுக்காக காத்திருந்தான் சஞ்சீவ்.
"அது வந்து..... வந்து!" என்று இழுத்தவளை காப்பாற்ற அவள் அருகே வந்து நின்றாள் மினு.
"அண்ணா.... இந்தப்பூவ அண்ணிக்கு வச்சு விடச்சொல்லி பெரிமாவும், அம்மாவும் எங்கிட்ட குடுத்து உட்டாங்க!" என்றவளிடம்,
"ஏன்.... ஒக்காந்து ஊஞ்சலாடிக்கிட்டு இருக்குறவளுக்கு கை இல்லையா? அவளே வச்சுப்பா! அவ கிட்ட குடுத்துட்டுப் போ!" என்றான் கடுப்பான குரலில்.
"நானே வச்சுக்கிட்டா இது வெறும் பூ தான்! என் நாத்தனார் வச்சு விட்டா நம்ம கல்யாணத்த உறுதி பேசுறது மாதிரி; கூறுகெட்ட ஒங்கண்ணனுக்கு ஒரு வெவரமும் தெரியல; எப்பப்பாரு நம்மள மொறச்சிக்கிட்டே திரிய வேண்டியது; நீ வா மினு..... அண்ணிக்கு வச்சு விடு பூவ!" என்று சொன்னவள் அவனிடமிருந்து விலகி மினுவை அழைத்துக் கொண்டு வினோதினியும், மினுவின் அன்னையும் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"தரையில இருந்து நாலு அடி வளந்துருக்கு; இந்த டோரேமான் பாக்குற கேஸ் உனக்கு பூ வச்சு மேரேஜ உறுதிபேசுறது...? வெளங்கிடும் போ! நாந்தான் வெட்லாக் கிப்ட்டே குடுத்துட்டேனே இவளுக்கு....?"
"இதுக்கு மேல என்னத்த
குடுத்து நீ தான் வொஃய்ப்னு சொல்லி இவகிட்ட கன்ஃபர்ம் பண்ணனுமாம்? அப்டி பண்றதுன்னாலும் அத நாந்தான பண்ணனும்? சென்ஸ் இல்லாம எதையோ ஒளறிட்டு, இவளுக்கு
நான் கூறுகெட்டவனாம்...... நேரந்தான்டீ.....!" என்று புன்னகைத்தவன் தலையை உலுக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்தவனுக்கு உடம்பெல்லாம் ஒருமாதிரியாக சிலிர்த்துக் கொண்டு வந்தது. அவளுடைய வாசம் இன்னும் அறையில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு தோன்றியது. அவன் கொடுத்த முத்தத்தை ரீவைண்ட் செய்து செய்து ஓட்டிப் பார்த்து தன் உடலை முறுக்கிக் கொண்டான்.
"காதல்.......ச்சே! அதெல்லாம் என்ன மாதிரி ஒரு ஃபீல் தெரியுமாடா தம்பி? ம்ஹூம்! சத்தியமா உன் பக்கமெல்லாம் அது அண்டவே அண்டாது; ஒங்கம்மா ஒனக்குன்னு பாத்து வைக்குற பொண்ணத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போற; அந்த பொண்ணு மனசயாவது கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்க முயற்சி பண்ணுடா!" என்று கதிர் அவ்வப்போது திட்டும் வார்த்தைகள் இப்போது நினைவில் வந்தது அவனுக்கு.
அவனைப் பற்றி இவன் இங்கு நினைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு அங்கு தெரிந்ததோ என்னவோ? சஞ்சீவை கதிர் அழைப்பில் பிடித்திருந்தான்.
"அண்ணா......சொல்லுங்க!" என்ற புன்னகையை உள்ளடக்கிய சஞ்சீவின் குரலில் கதிர் மறுமுனையில் "ஸாரி ராங் நம்பருக்கு கால் பண்ணிட்டேன் போல!" என்றான். அதை அவன் சற்று சீரியஸாகவே சொல்லவும் சஞ்சீவ் சிரிப்புடன்,
"ஹலோ பாஸ்.... என் நம்பர கான்டாக்ட் லிஸ்ட்ல ஸ்டோர் பண்ணிட்டு இப்ப என்ன ராங் நம்பர்? சஞ்சீவ கூப்டணும்னு நினைச்சு, அவனுக்கு தான் கால் பண்ணியிருக்கீங்க! ஒரு மனுஷன் கொஞ்சம் சென்டிமெண்ட்டா பேசுவோம்னு பாத்தா உடமாட்டீங்களே? சொல்லுங்க என்ன விஷயம்?" என்றான்.
"டேய்..... தம்பி பேசுறது நீயே தானாடா? என்னாச்சுடா ஒனக்கு?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம்,
"இன்னிக்கு லைஃப்ல பர்ஸ்ட் அண்ட் பைனலா நான் ஒருபொண்ணோட என்கேஜ் ஆகிட்டேன்! அதான் அவளோட அட்வைஸால எனக்கு கொஞ்சம் அறிவு வந்துடுச்சு; அவளோட அப்பாவ இனிமே அங்கிள்னு கூப்ட பழகணும்; அதான் உங்களயும் இனிமே அண்ணான்னு கூப்டலாம்னு நினைச்சேன். இப்ப எதுக்கு கூப்டீங்க? அத சொல்லுங்க முதல்ல!" என்றவனிடம்,
"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா சஞ்சீவ்! வாழ்த்துகள்.....!" என்றவன் இரண்டு நிமிடங்கள் தயங்கி பின்,
"லஷ்மி வீட்ல போய் பேசணும்டா; அம்மா இங்க வந்ததுல இருந்து, அந்த ஹீரோயினம்மா வீட்ல வந்து கல்யாணம் பேசுங்கன்னு கூப்ட்டுட்டே இருக்காம்; இதுக்கு மேல தள்ளிப் போட முடியாது. அதான் கல்பனா அக்காவ நாகர்கோவிலுக்கு வரச் சொன்னேன். நீ இல்லாம எப்டி என் சம்பந்தப்பட்ட ஒரு நல்ல காரியத்த நடத்துறது? அதான் ஒன்னையும் கூப்டலாம்னு...... புதன்கிழம நாகர்கோவிலுக்கு வர்றியாடா?" என்று கேட்டவனிடம்,
"கண்டிப்பா வருவேன்! அங்க மீட் பண்ணலாம்!" என்று பதிலளித்து விட்டு வைத்தான் சஞ்சீவ்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro