Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 45

"மிஸ் சந்தனா! நான் லன்ஞ்ச் ப்ரேக்ல இருக்கேன். இப்ப நான் ஃப்ரீயா தான் இருக்கேன்..... ஆனாலும் உங்க கிட்ட பேசுற மூடு எனக்கு சுத்தமா இல்ல! ஸோ உங்க கிட்ட பேசணும்னு எனக்கு தோணுறப்போ நானே உங்களுக்கு கால் பண்றேன்!" என்று சொன்ன சஞ்சீவிடம்,

"நீ என்ன மூடுல வேணா இரு..... லன்ஞ்ச் சாப்டு, சாப்டாம போ! பட் இப்ப எங்கூட நீ பேசியே ஆகணும் சஞ்சீவ்! நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு உன் வேலையப் பாரு; கதிருக்கு அவனோட லைஃப்ல இருக்குற பெரிய ஆம்பிஷன் என்ன? அவங்கிட்ட கேட்டா என்னை கல்யாணம் பண்ணிக்குறது தான் அவனோட ஆம்பிஷென்னு சொல்றான்! நீதான அஞ்சு வருஷமா அவங்கூடவே இருந்துருக்க! ஸோ அவனோட ஆசை, தேவை, கனவு இப்டி ஏதாவது விஷயம் இருந்துருக்கும்ல? அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்!" என்று பதவிசான குரலில் கேட்டாள் சந்தனா.

"அவரோட ட்ரீமப் பத்தியெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க மிஸ்.சந்தனா? வேற வேல இல்லையா உங்களுக்கு? நாங்க இத்தன வருஷத்துல எங்க ரெண்டு பேருக்குள்ள நிறைய பெர்சனல் மேட்டர்ஸ ஷேர் பண்ணியிருக்கோம். அப்போ எல்லாம் அவர் உங்கள பத்தி எங்கிட்ட மூச்சு கூட விடல.....! நீங்க அவரப் பாக்க வந்ததுக்கப்புறம் தான் உங்களப் பத்தி கொஞ்சம் சொன்னாரு. அதக்கேட்டதும் எனக்கு எரிச்சல் தான் வந்துச்சு! அவரோட அப்பா அம்மாவ நாகர்கோவிலுக்கு கூட்டிட்டு வந்த
பிறகு கூட அவர் உங்க வீட்டுக்கு வந்து பேசுறதுக்கு பயப்படுறாரு! அவர் எந்த சிச்சுவேஷன்லயும் சந்தானலஷ்மிய மிஸ் பண்ணவே விரும்பல..... நான் அவரோட இடத்துல இருந்துருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா.....?"

"என்னைய இத்தன டார்ச்சர் பண்ணுன உன் முன்னால இப்ப எப்டி நான் கெத்தா வந்து நிக்குறேன் பாருன்னு ஒருதடவயாவது உங்க கிட்ட சொல்லிக் காட்டியிருப்பேன்! அவரு அதையும் செய்யாம லவ் இல்லாம வாழ்க்கையில ஒண்ணுமில்ல; என்னோட சந்தானலஷ்மியில்லாம எனக்கு வாழ்க்கையே இல்லன்னு பொலம்பிக்கிட்டு இருக்காரு. அவருடைய காதலுக்கு நீங்க எந்த விதத்துல தகுதியானவங்க மிஸ். சந்தானலஷ்மி?" என்று கேட்டான் சஞ்சீவ்.

"ஹே.....ய்! என்னடா ஆளாளுக்கு இந்த கேள்வியவே வேற வேற மாடுலேஷன்ல கேக்குறீங்க?
உங்களுக்கு எல்லாம் நான் எதுக்காக பதில் சொல்லிட்டு இருக்கணும்? என் தப்ப நினைச்சு ஃபீல் பண்றதையும், அத சரி பண்றதுக்கு முயற்சி எடுக்குறதையும் நான் வெறும் பேச்சுல இல்லாம செயலாலயே கதிருக்கு காட்டிக்கிட்டு தான் இருக்கேன்! ஸோ இப்ப நான் கேக்குற கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல்லு போதும்! அந்த ரேஷன்ஷாப்புக்கு எந்த விதத்துல நான் தகுதியானவங்குறதெல்லாம் என் பிரச்சன; அதப் பத்தி நீ பேசாத!" என்றவளிடம்,

"பாத்தீங்களா? நான் உங்க கிட்ட பேச முடியாதுன்னு சொன்னேன். அதெல்லாம் பேசியே ஆகணும்னு சொன்னீங்க! உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டா மட்டும், அந்த கேள்விய கேக்க நீ யாருடான்னு கேக்குறீங்க...... ஒரு மரத்துல ஆணிய அடிச்சுட்டு அப்புறம் தடவிக் குடுத்தா அந்த மரத்துக்கு வலிக்காம இருக்காது! அந்த தளும்பும் சுலபத்துல
மறைஞ்சு போயிடாது! தெரியுமா?" என்று சற்றே உரத்த குரலில் கேட்டான் சஞ்சீவ்.

"இப்ப என்ன சொல்ல வர்ற?  உங்கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்ட! என்னைய இன்னும் முடிஞ்ச அளவுக்கு திட்டிட்டு ஃபோன வைக்கப்போற! அவ்ளோதான?"

"உனக்கு மட்டுந்தான் எக்ஸாம்பிள் காட்டி பேச தெரியுமா? ஆணியப் புடுங்கி எறிஞ்சுட்டு, நல்லெண்ணயில மஞ்சள குழப்பி வடுவான மரத்துக்கு சீல் பண்ணி விட்டா அது..... அதுதான் அந்த மரம் ஹீல் ஆகிடும் தெரியுமா உனக்கு? நான் உருவாக்கி வச்ச வடுவை எப்டி சரி பண்றதுன்னு எனக்குத் தெரியும். அத நான் கண்டிப்பா சரி பண்ணிடவும் செய்வேன். அது வரைக்கும் நீ என்னை திட்டுடா!" என்று சொன்ன சந்தனாவின் மூக்கு விடைத்து கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

அவளிடம் காயப்பட்டவன் அவளைக் கொஞ்சிக் கொண்டு இயல்பாக இருக்கிறான்; இந்த எக்ஸ்ட்ரா பிட்டுகளுக்கு என்னுடைய இயல்பினால் என்ன பிரச்சனை வந்து விட்டது என்று அலுப்புடன் நினைத்தவள்,

"டேய் டூத்பேஸ்ட்டு..... இருக்கியா லைன்ல?" என்று சஞ்சீவிடம் கேட்டாள்.

"பாஸோட ட்ரீம பத்தி தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க மிஸ். சந்தனா?" என்று சஞ்சீவ் சற்று இறங்கிய குரலில் அவளிடம் கேட்க சந்தனாவிற்கு சிரிப்பு வந்தது.

"இங்க பாரு.....! இப்ப நான் பேசப்போறது உன் பழைய பாஸோட நல்லதுக்காக மட்டுந்தான்; நான் பேசுற விஷயத்த கேட்டு என்னை நீ பணத்துக்கு அலையுற பொண்ணுன்னு தப்பா நினைச்சாலும் பரவாயில்ல! கதிருக்கு பிஸினஸ் பண்ண தெரியல சஞ்சீவ்! அவனோட சொந்தக் கடையிலயே அவன் சூப்பர்வைசர் மாதிரி அங்கிட்டும், இங்கிட்டும் உலாத்துற வேலையத் தான் பாக்குறான். இந்த ரேன்ஜுல போச்சுன்னா பிஸினஸ்ல ரொடேட்டிங் கேபிட்டல் கூட மிச்சமிருக்காது......"

"நான் ரேஷ் ப்யூட்டி பார்லர்ல இன்சார்ஜ் எடுத்துக்குறேன்; பாகேஸ் ஆன்ட்டி அவனோட டெக்ஸ்டைல் பிஸினஸ பார்த்துக்கட்டும்! மத்த மூணு கடைங்களையும் நல்ல விலை கிடைக்கும்போதே நம்ம கைமாத்தி விட்டுடலாம்; சென்னை வீட்டையும் இவன் கல்பனாவுக்கு விலைக்கு குடுத்துடணும்னு முடிவு பண்ணியிருக்கான்!"

"அதுல வர்ற பணத்தையும், கடைகள்ல கிடைக்குற பணத்தையும் சேர்த்து வச்சு அவனோட ஃபீல்டுலயே உருப்படியான வேல ஏதாவது இருந்தா, அத ஸ்டார்ட் பண்ணிடலாம்; இல்ல பணத்த பணமாவாவது பத்திரமா வச்சுருக்கலாம்; அதில்லாம உங்க ரேஷ் ஒரே பாட்டுல மல்ட்டி மில்லினியர் ஆவாருன்னு நீ கனவா கண்டுக்கிட்டு இருக்காத! உன் கனவு கனவாவே தான் போயிடப்போகுது!" என்றாள் சந்தனா.

"ம்ப்ச்! கொஞ்சம் கேர் எடுத்து எல்லாத்தையும் ப்ராப்பரா பாருங்கன்னு அவருக்கு நான் எத்தன தடவ சொல்லிக் குடுக்குறது? க்வாலிட்டி டைரக்டரா 
எனக்கு கூட தான் இங்க வேல நாக்கு தள்ளுற அளவுக்கு இருக்கு! பட் நான் என் வேலைய ஒழுங்கா பாக்கல? அவர் மட்டும் ஏன் இப்டி இருக்காரு?" என்று சலித்துக் கொண்டவனிடம்,

"ஒவ்வொருத்தரோட ப்ராட்அப்ப பொறுத்து மனுஷங்க ஒவ்வொரு மாதிரி தான் சஞ்சீவ் இருப்பாங்க. கதிருக்கு தெரிஞ்சத அவன் பெஸ்டா பண்றான்; உனக்கு தெரிஞ்சதுல நீ எக்ஸ்பெர்டா இருக்க, அதுக்காக உன்னை மாதிரி அவன் இருக்கணும்னு நினைக்குறது தப்பு டூத்பேஸ்ட்டு!" என்று சொன்ன சந்தனாவின் வார்த்தைகளுக்கு சற்றுநேரம் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

"அவருக்கு ட்ராயிங்க டீச் பண்றது ரொம்ப பிடிக்கும் மிஸ் சந்தனா! கொஞ்சமா ட்ராயிங் சென்ஸ் இருக்குற ஒருத்தர, அவரால நல்லா ட்ரையின் பண்ணி சூப்பரா வரைய வைக்க முடியும். காசுக்காக
ரோட்ல வரையுறவங்கள எல்லாம் கூட பாத்து, இவங்களுக்கு என்னை மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கலேயேடான்னு ரொம்ப வருத்தப்படுவாரு......!" என்று சொன்னான் சஞ்சீவ். இந்த வார்த்தைகளை சந்தனாவிடம் சொல்லி விட்டு இப்போது இதை எதற்காக அவளிடம் சொன்னோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

"ம்ம்ம்! அப்போ இந்த விஷயத்தல்ல நீ அவனுக்காக செஞ்சு தந்துருக்கணும்? அவனோட ஆர்ட் கேலரிக்கு பக்கத்துலயே நாம ஒரு சின்ன இடத்துல அவனோட ட்ராயிங்க் ஸ்கூல ஆரம்பிக்கலாம்; ஓவியத்த கத்துக்க நினைக்குற ஸ்ட்டூடெண்ட்ஸ் கிட்ட நிதானமா ஒரு அமௌண்ட் வாங்கிக்கலாம்; அதுதான் வாழ்வாதாரம்னு ரோட்ல வரையுறவங்களுக்கு அவனை ஒரு ட்ரையினிங் செஷன் மாதிரி ஃப்ரீயாவே க்ளாஸ் எடுக்க சொல்லலாம்! என்ன சொல்ற?" என்று அவனிடம் கேட்டாள் சந்தனா.

"நான் ஒண்ணும் சொல்லல!" என்று முறுக்கிக் கொண்டவனிடம் அலுப்புடன்,

"ஏன்டா நீ எப்பவுமே இப்டித்தானா? அந்த திமிங்கலத்துக்கும், உனக்கும் எப்டிறா சிங்க் ஆச்சு? உன்னைய எல்லாம் வச்சுக்கிட்டு உங்க வீட்ல எப்டிதான் சமாளிக்குறாங்களோ? போ..... லன்ஞ்ச் முடிச்சுட்டேன்னா, போயி வரிசை கட்டி இருக்குற வேலையப் பாரு! சும்மா கடுப்ப கெளப்புற மாதிரி பேசி என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத!" என்று சொல்லி விட்டு பேச்சை முடிக்கப் போனவளிடம்,

"ஹலோ....ஹலோ! மிஸ். சந்தானலஷ்மி; இப்ப என்னைய டென்ஷன் ஆக்குறது நீங்க தான்! நான் உங்க கிட்ட எந்த கமிட்மெண்ட்டும் குடுக்கல!" என்று அவசரமாக சொன்னான் சஞ்சீவ்.

"எந்த கமிட்மெண்ட்டும் குடுன்னு நான் உங்கிட்ட கேக்கவேயில்லயே? மிஸ்டர் ரேஷ் நல்லா இருக்குறதும், நல்லா இல்லாம போறதும் உங்கையில தான் இருக்கு மிஸ்டர் சஞ்சீவ்! டேக் கேர்...... பை!" என்று சொல்லி விட்டு அலைபேசியை கட்டிலின் ஒரு ஓரமாகப் போட்டவள், அப்படியே படுக்கையில் விழுந்து விட்டாள்.

கால்மணி நேரத்தில் கதிரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

"ஏய்.... இன்னுமாடீ சாப்ட்டு முடிக்கல நீ? எப்போ இங்க வர்ற?
அணில் மாதிரி நீ கொறுமுற கொறுமுக்கு இவ்ளோ நேரமா?" என்று கேட்டவனிடம்,

"ம்ப்ச்! போன வச்சுட்டு நான் சொன்ன மாதிரி கேட்டலாக் ரெடி பண்ற வேலைய ஜோஸஃபினோட இருந்து பாரு ரேஷன்; எனக்கு டையர்டா இருக்கு! நான் அங்க வரல! தூங்கப் போறேன்!" என்று சொன்னவளிடம் வேகமாக,

"ஐயயோ.... காலையில நீயா டூவீலர்ல அவ்ளோ தூரம் வந்தப்பவே நான் எங்க உனக்கு தலவலி வந்துடுமோன்னு நினைச்சேன் லஷ்மி.... அதேமாதிரியே ஆகிடுச்சோ?
இனிமே எங்க போனாலும் நீ எங்கூட கார்ல வா! நான் இங்க வேலையப் பாத்துக்குறேன்; நீ ரெஸ்ட் எடுமா!" என்று சந்தனாவிடம் அக்கறையாக சொல்லி விட்டு அலைபேசியை சட்டை பாக்கெட்டில் போட்டான் கதிர்.

சஞ்சீவின் வார்த்தைகளால் சஞ்சலப்பட்டிருந்த சந்தனாவின் மனதிற்கு கதிர் இப்போது காட்டிய  கரிசனம் மேலும் வருத்தத்தை தந்தது. மரமும், ஆணியும், எண்ணெயும், மஞ்சளும் அவள் கண்களுக்குள் ஃப்லிம் சுருளில் வரிசையாக இருக்கும் அடுத்தடுத்த காட்சி போல மாறி மாறி அவள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தன.

"கடவுளே..... நான் என்ன பாவம்டா பண்ணேன்? உன்னைய பாக்குற வரைக்கும் நான் ஏன் வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்காம சிங்கிளாவே இருந்து தொலைச்சேன்? எந்தம்பியில இருந்து சஞ்சீவ் வரைக்கும் எல்லாரும் என்னைய கழுவி ஊத்தும் போது நீ மட்டும் ஏன்டா என்னைய இப்டி அஃபெக்ஷனோட பாத்துக்குற? சஞ்சீவ் சொன்ன மாதிரி எப்டி உன் முன்னால வந்து கெத்தா நிக்குறேன் பாருடீன்னு நீ ஏன் என்னைப் பாத்து சொல்லல?"

"டூவீலர்ல சுத்துனா சந்தனாவுக்கு தலவலி வரும்னு யாருடா உங்கிட்ட சொன்னா ரேஷன்.....? இப்ப எல்லாம் நான் எவ்ளோ ஸ்ட்ராங்க் ஆகிட்டேன் தெரியுமா? உச்சி வெயில்ல ஒருமணி நேரம் அலைஞ்சா கூட எனக்கு ஒண்ணும் செய்யாது.....!"

".....ஆனா பாவம், உனக்குத் தான் அது இன்னும் தெரியாது! நான் பிரின்ஸஸ் இல்ல; சாதாரணமான ஒரு பொண்ணுங்குறத நீ எப்பதான் புரிஞ்சுக்கப்போறியோ தெரியல!" என்று நினைத்து தலையை உலுக்கியவள் தன் தந்தை சமைத்து வைத்து விட்டுப் போயிருந்த சாப்பாடை சாப்பிட
மனம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro