
❤ சிறுநகை 43
"அங்க நம்ம வீட்ல ஒக்காந்து விடிய விடிய ஒரு லேண்ட்ஸ்கேப் பெயிண்டிங்க போட்டு முடிச்சீங்களே? அது இப்ப என்ன ஆச்சுன்னு தான் கேட்டீங்களா? இல்ல அத எவ்ளோ விலைக்கு வித்தேன்னு தான் கேட்டீங்களா?" என்று கதிர் தன்னுடைய ஆர்ட் கேலரிக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியாக இதைக் கேட்ட சஞ்சீவைப் பார்த்து முகம் இறுகிப் போய் நின்றிருந்தான் மிஸ்டர் ரேஷ்.
"நோ நோ நோ.... நோ டென்ஷன்! நீங்க நம்ம வீட்ல ஒக்காந்து, நம்ம வீட்டையே வரைஞ்ச பெயிண்டிங் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஸோ அந்த பீஸ்க்கு ஏத்த காஸ்ட்லியான ஃப்ரேம போட்டு, அத நம்ம வீட்ல ஹால்ல செண்டர் ஆஃப் அட்ராக்ஷனா மாட்டியாச்சு! அம்மா உங்க கிட்ட அதுக்காக ஒரு தேங்க்யூ மட்டும் சொல்ல சொன்னாங்க! அத சொல்லிட்டேன் அவ்ளோதான்!" என்று சொன்ன சஞ்சீவின் பேச்சில் கதிர் அவன் தலையில் சிரிப்புடன் லேசாகத் தட்டினான்.
"இந்தாங்க... உங்களுக்காக இந்த தடவை பொள்ளாச்சியில இருந்து
நான் வாங்கிட்டு வந்த கிப்ட்ஸ்;
கனவு கரையும் நேரம், பிருந்தாவனமும் நொந்த குமாரனும், இந்திய நேரம் 2 ஏஎம்!
உங்க பேவரைட் ஆத்தரோட
இந்தக் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா இல்லையா?"
"அதென்ன..... நாவல் படிக்குறதுன்னா ஆன்லைன் ப்ளாட்பார்ம்ஸ்ல எல்லாம் படிக்காம, புக்கை கையில எடுத்து, வாசம் புடிச்சுத்தான் படிப்பேன்னு ஒரு அடம் உங்களுக்கு? இங்க இருந்து போனப்ப மொத்தமா எல்லாருக்கும் ஒரே புக் வாங்கிட்டுப் போன மாதிரியில்ல...... நீங்க சொல்ற மாதிரி இந்த புக்ஸ் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தேடிப் பாத்து வாங்குனது! ஓகேதான?" என்று சொன்ன சஞ்சீவிடம் ஆச்சரிய மிகுதியுடன்,
"டேய்..... சஞ்சீவ் தானா நீ? எனக்குப் புடிச்ச நாவலெல்லாம் வாங்கிட்டு வந்து எங்கிட்ட குடுத்து இதெல்லாம் படிச்ச கதையா, படிக்காத கதையான்னு வேற கேக்குற பாரு! என்ன ராசா இதெல்லாம்? ஊர்ல இருந்தப்ப
என்னோட எக்ஸ் எம்ப்ளாயின்னு சொன்னதெல்லாம் சும்மா வாய்க்கு வந்த பேச்சு தான? இந்த அளவுக்காடா தம்பி உனக்கு கதிரண்ணே மேல பாசம்?" என்று கேட்டு உணர்ச்சி வயப்பட்டான் கதிர்.
"மிஸ்டர் கதிர்..... உங்களுக்குப் பிடிச்சத வாங்கிட்டு வந்தது உங்க மேல இருக்கற பாசத்துனாலயுமில்ல; நேசத்துனாலயுமில்ல.....! உங்களோட நெக்ஸ்ட் ஆர்ட் வொர்க்குக்காக நான் உங்களுக்கு தர்ற லஞ்சம்! நான் போனதுல இருந்து கேலரிய நீங்க யூஸ் பண்ணவே இல்ல போலிருக்கே? அடுத்த ஒரு மாசத்துக்குள்ள ஒரு மெச்சூர்டான தீம்ல ஒரு பெயிண்டிங்க ரெடி பண்ணி வக்குறீங்க, புரியுதா? பின்னாடியே வெரட்டிட்டு வர்றதுக்கு ஒரு ஆளில்லன்னா அப்டியே ஒக்காந்த இடத்துலயே செளகர்யமா படுத்து தூங்குறது!" என்று திட்டு, கட்டளை, பணி குறித்த அறிவிப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பேச்சில் கதிரிடம் அறிவித்தான் சஞ்சீவ்.
"பாசமில்ல, நேசமில்லன்னு நீ சும்மா வாயால சொன்னாலும், உனக்கு உள்ளுக்குள்ள இருக்குற பாசத்த மூடி வைக்க தெரியலடா! உன்னையறியாமயே நீ அத எங்கிட்ட காட்டிடுற! நீ கேட்ட மாதிரியே நான் அடுத்த பெயிண்டிங்குக்கு வேல பாக்க ஆரம்பிக்குறேன்! அதுனால அண்ணன திட்டாத தங்கம்! நீ ஆசப்படுற மாதிரி உனக்கு உன்னோட சைஸ்ல ரெண்டு செட் ட்ரெஸ் புதுசாவே வாங்கிட்டு வந்துட்டேன்; கலர் பிடிக்கல, டிஸைன் பிடிக்கலன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இத மறுபடியும் கடையில கொண்டு போயி என்னால மாத்திட்டு இருக்க முடியாது......!"
"மினு கிட்ட எல்லாத்தையும் பேசி உன்னோட போட்டோவையும் அனுப்பி வச்சாச்சுப்பா! சீக்கிரமா அந்த தடியன அங்கிருந்து
பொள்ளாச்சிக்கு வர்ற உருளைக்கிழங்கு லாரியில போட்டு அனுப்பி விடுங்க மிஸ்டர் ரேஷ்னு உந்தங்கச்சி குலம் கோபமா எங்கிட்ட சொன்னாப்பா! அரைகொறயா சாப்பாட்ட முழுங்காதடா; நொறுங்க தின்னா நூறு ஆயுசுன்னு சொல்லியிருக்காங்க. நல்லா வாய்க்குள்ள வச்சு மென்னு முழுங்கு! எப்டியிருக்கு சாம்பார் சாதமும், வஞ்சிர மீன் ஃப்ரையும்?" என்று கேட்டவனிடம்,
"என்னவோ இது நீங்க பண்ணுன சமையல் மாதிரி எப்டியிருக்குன்னு வேற எதுக்கு கேள்வி கேக்குறீங்க? மிஸ் சந்தனாவோட அப்பா செஞ்சு குடுத்தது தான இந்த சாப்பாடு? அவர்ட்ட சாப்பாடு சூப்பர்; அதுக்காக அவருக்கு நா ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. உருளைக்கிழங்கு லாரியில வரச் சொன்னவள ஊருக்குப் போயிட்டு அப்புறமா கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி புன்னகையுடன் தன் வயிறு நிரம்ப சாப்பிட்டு எழுந்தவன் தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி ஒதுக்கி வைத்து விட்டு கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
"நல்லா தூங்குனியா? வந்தப்ப பாத்ததுக்கு இப்ப உம்முகம் கொஞ்சம் தெளிவா தெரியுது; கோபமெல்லாம் போயிடுச்சா?" என்று சிரிப்புடன் அவன் தோளணைத்து கேட்ட கதிரிடம்,
"கோபமெல்லாம் உங்ககிட்ட பேசுனவுடனே போயிடுச்சு. அவள இப்போ என்ன பண்றதுங்குற யோசனை தான் ரொம்ப மூளையைப் பிச்சி சாப்டுற விஷயமா இருக்கு பாஸ்!" என்றான் சஞ்சீவ்.
"யாரு.... உங்கள பாத்து லவ்வு சொன்ன பொண்ணையா? அந்த கதைய கேக்குறதுக்கு தான் நான் லஷ்மி வீட்ல ரெண்டு மீன் துண்டு அதிகமா சாப்ட்டுட்டு வந்து உக்காந்துருக்கேன்டா தம்பி.....! சொல்லு யாரந்த பொண்ணு?" என்று ஆர்வக்குரலில் சஞ்சீவிடம் கேட்டான் கதிர்.
கதிரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ். தன்னுடைய ஒருதலைக் காதல், இருதரப்பு காதலாகி அது
கைகூடிய நிறைவும், திருப்தியும் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சந்தனா என்ற பெண் கதிருடைய இயல்பிலேயே நிறைய மாற்றங்களை செய்திருந்தாள். வழக்கமாக சஞ்சீவைப் பார்த்ததும் கதிரிடம் காணப்படும் புலம்பல், வருத்தப்பாட்டு இவை ஒன்றையுமே இன்று காணவில்லை.
"என் கதையப் பத்தி பேசுறது இருக்கட்டும்! உங்க ஸ்டோரி ரொம்ப ஸ்மூத்தான வழியில போய்ட்டு இருக்கு போலிருக்கே? மிஸ் சந்தனா மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா? இனிமே எஸ்கவேட்டர் திராட்சை செடிய பிய்க்காதுல்ல?" என்று புருவம் உயர்த்தி கண்சிமிட்டியவனிடம்,
"ம்ம்ம்! கிட்டத்தட்ட எல்லாம் ஓகேவாகிட்ட மாதிரி தான்டா தம்பி....! இன்னும் ஒரே ஒரு பெரிய டாஸ்க் இருக்கு! சுமலதா அம்மா அவங்க வீட்ல முன்னால வெளக்கு தொடச்ச பையன இப்ப அவங்க மருமகனா ஏத்துக்கணும். அந்த இடத்துலயும் எனக்கோ இல்ல எங்கம்மாவுக்கோ அவங்க அவமானத்த குடுத்தாங்கன்னா அத எப்டி தாங்கிக்குறதுன்னு தெரியல!" என்று சஞ்சீவிடம் சொன்னான் கதிர்.
"ச்சே! ச்சே! அப்டி எல்லாம் ஒண்ணும் ஆகாது பாஸ்; எப்பவும் போல மிஸ் சந்தனாவே உங்களுக்காக அவங்களோட அம்மாட்ட பேசுவாங்க; ஏதாவது பிரச்சனையே வந்தாலும் அவங்களோட அப்பாவும், தம்பியும் உங்க சைடு பேசுவாங்கல்ல?" என்று சொன்னவனிடம் ஒரு வருத்த முறுவலுடன்,
"தெரியலடா தம்பி! லஷ்மி வீட்ல எல்லாரும் ஒண்ணுகூடுற அந்த நேரத்துல நான் எப்டி நடந்துக்குவேன்னு என்னால சரியா கெஸ் பண்ண முடியல! பாக்கலாம்; முடிஞ்ச அளவுக்கு சுமூகமா பேசி அவ அம்மாட்ட எங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும்! இல்லன்னா...... ம்ஹூம்; இல்லன்னாங்குற ஒரு ஆப்ஷன என்னால யோசிக்கவே முடியல; அத விடு. உன் விஷயத்த ஓப்பன் பண்ணவே மாட்டேங்குறியே?" என்று சலித்துக் கொண்டவனிடம்,
"இல்ல அது கொஞ்சம் பெரிய ஸ்டோரி; அதான் எங்கருந்து ஆரம்பிக்குறது; எப்டி ஆரம்பிக்குறதுன்னு தெரியல. இப்போதைக்கு நான் அவளுக்குப் பயந்து, அவ கிட்ட இருந்து தப்பிச்சு இங்க ஓடி வந்துருக்கேன். அவ்ளோ பெரிய ரவுடி அவ.....!" என்று சொன்ன சஞ்சீவிடம்,
"ஐயயோ.... ஆர்வம் தாங்க முடியலயே; இன்டர்வெல் உடுற நேரத்துல போயி படம் பாக்க ஒக்காந்த மாதிரியில்ல ஒங்கத.....?
தலையும் இல்லாம, வாலுமில்லாம முழுசா கத புரியாதுடா தம்பி..... முதல்ல உன்னைய விரும்புற பொண்ணு யாருன்னு சொல்லு!" என்று கேட்டான் கதிர்.
"நான் காலேஜ் பைனல் இயர் படிச்சப்ப நம்ம கம்பெனி இருக்குற ரோட்ல நிறைய சின்ன சின்ன கடைங்க இருந்தது பாஸ். டீக்கடை, சின்ன ஹோட்டல் இந்த மாதிரி நம்ம எம்ப்ளாயீஸால அவங்களுக்கு வருமானம் வர்ற மாதிரி கடைங்க! அந்த கடைங்க எல்லாத்தையும் என்க்ரோச்மெண்ட்ல எடுத்துட்டாங்க. கவர்மெண்ட்ல நம்ம சைடுல இருந்து கொஞ்சம் ப்ரெஷர் குடுத்ததுனால தான்னு வச்சுக்கோங்களேன்......!"
"அந்த எல்லா கடைங்களுக்கும் நம்ம கம்பெனி சார்பா கொஞ்சம் அமௌண்ட்ட காம்பன்ஷேஷனா குடுத்தோம். ஆனா ஒரு கடையில இருந்தவங்க மட்டும் நம்ம கிட்ட பணமும் வாங்கல; அப்பாவும், பொண்ணும் சேர்ந்துக்கிட்டு ஏதோ பெரிய protest பண்ற மாதிரி
நம்ம போற, வர்ற நேரமெல்லாம் கார் முன்னாடி வந்து வழிய மறிச்சு ரொம்ப திட்ட வேற செஞ்சாங்க.....!"
"ஒருநாள் அந்த பொண்ணு என்னோட காலேஜ் வாசலுக்கே வந்து எம்பைக் முன்னால விழுந்தா! விழுந்தாளா அப்போ என்ன நடந்துச்சுன்னா.....?" என்று சொல்லி விட்டு புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்த கதையை நிறுத்தியவனிடம்,
"என்ன நடந்துருக்கும்? உனக்கு சும்மாவே பொசுக்கு பொசுக்குன்னு கோபம் மூக்குக்கு மேல வரும்; இதுல அந்த பாப்பா உன் வண்டி முன்னால வேறு வந்து விழுந்துச்சுங்குற? பொடனிய சேத்து ஒரு அப்பு அப்பியிருப்பியே?" என்று கதையுடன் ஒன்றி ஒரு யூகத்தில் சஞ்சீவிடம் கேள்வி கேட்டான் கதிர்.
"ம்ஹூம்! நீங்க சொன்ன மாதிரி அப்பு விழுந்துச்சு; ஆனா அது எனக்கு!" என்று சொன்ன சஞ்சீவிடம்,
"என்ன......து? அடிச்சாளா? உன்னையவா? எதுக்குடா?" என்று வேகமாக ஒரு கேள்வி கேட்டான் கதிர்.
"என்னாச்சுமா? பைக்ல இப்டி வந்து மோதுற மாதிரி வர்றியே? பாத்து வரக்கூடாது? உனக்கு ஒண்ணும் அடி எதுவும் படலையேன்னு கேட்டு முடிச்சது தான்; அதுக்கு அடுத்த நிமிஷத்துல கன்னத்துல கைய வச்சுட்டுத் தான் நின்னேன். அப்டி ஒரு அறை விட்டா!"
"ஏனுங்க! நீங்க பெரிய இவிங்களா இருந்தா இருந்துட்டுப் போங்க! எங்க பொழப்புல என்னத்துக்குங்க மண்ணள்ளிப் போட்டீங்க? எங்க கடைங்க பாட்டுக்கு ரோட்டுல ஒரு ஓரமாத்தானுங்க இருக்கு? உங்க எடத்துக்குள்ளாரயா நாங்க எங்க கடைங்கள கொண்டு வந்து வச்சம்? அன்னாடம் பாக்குற எங்க வியாபரத்துல மண்ணள்ளிப் போட்டுட்டு நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களான்னு கேட்ட அவ கண்ணுல அப்டி ஒரு கோபம்!"
"என்ன சமாதானப்படுத்தியும் அவ கோபத்த என்னால கொஞ்சங்கூட குறைக்கவே முடியல! என்னைய விட ஒரு வருஷம் தான் சின்னப் பொண்ணாம் பாஸ்; என்னோட ஹையர் ஸ்டடீஸ், கேரியர் எல்லாத்துக்கும் இந்த கடை வருமானம் தான் ஸார் பேஸ்..... ரெண்டு பேரோட வாழ்க்கையவே சொடக்கு போடுறதுக்குள்ள நாசமாக்கிட்டீங்களேன்னு கேட்டப்ப என்னால அவளுக்கு பதிலே சொல்ல முடியல!"
"தப்பு தான்; உங்க பிஸினஸ கெடுத்து, உங்களோட கடைய இருந்த எடத்துல இருந்து வேனிஷ் பண்ணுனது எங்க தப்பு தான்; அதுக்கு என்ன பண்ணனும்ங்குற?
உனக்கு என்ன குடுத்தா நீ இப்ப சமாதானம் ஆவ....? நீயே சொல்லும்மான்னு நான் அவ கிட்ட கேட்டேன்!"
"உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்ல; ஆனா நீங்க பண்ணுன ஒரு தப்பு என் வாழ்க்கையவே பொரட்டி போட்டுடுச்சு; நான் அதுக்கு நஷ்ட ஈடெல்லாம் உங்க கிட்ட கேக்க மாட்டேன். உங்களுக்கு சம்பந்தமேயில்லாத யாருக்காவது உதவி செய்ங்க! உங்களால
அவங்க வாழ்க்கையில நல்லாயிருந்து உங்கள வாழ்த்துனாங்கன்னா தான் எங்களுக்கு நீங்க செஞ்ச தப்பு சரியாப்போகும்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நிக்காம போயிட்டா; நான் அவ பேச்செல்லாம் பெரிசாவே எடுத்துக்கல........! அவ எங்கிட்ட இத சொல்லிட்டுப் போன ரெண்டு மாசத்துக்குள்ள அப்பா இஸ் நோ மோர்!" என்று மெதுவான குரலில் சொன்னவன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
"தம்பி..... வருத்தப்படாதடா! எத்தனை வருஷமானாலும் உங்கப்பா விஷயத்துல இருந்து உன்னால கடந்தே வரமுடியலயேடா....!" என்று சொல்லி சஞ்சீவின் தோளைத் தொட்ட கதிரிடம்,
"அப்பா இல்லாம அந்த வீட்ல இருந்து ஓடிவந்தேன்னாலும்,
அந்த சின்ன பொண்ணு பேச்சாலயும் டிஸ்டர்ப் ஆகி தான் இங்க நான் ஓடி வந்தேன்... ஆனா இங்க வந்ததுக்கப்புறம் அவ நியாபகம் சுத்தமாவே எனக்கு வரவேயில்லன்னு தான் சொல்லணும். சம்பந்தமே இல்லாத உங்கள என்னோட பாஸ் ஆக்கிட்டு
நான் என் வேலைய பாத்துட்டு இருந்தப்போ, அவ என்னையும் சேத்தே கவனிச்சுருக்கா. 25 வயசு தான் ஆகுது; அதுக்குள்ள அவகிட்ட
என்ன வேகமான டெவலப்மெண்ட் க்ராஃப்ங்குறீங்க.....?"
"பொள்ளாச்சியில மென்ஸ் ட்ரெஸ்
டிஸைன் பண்ற ஒரு ஷாப் வச்சிருக்கா! அப்பா, பொண்ணு ரெண்டு பேருமே அசுரத்தனமா உழைச்சு ஏதோ ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடிட்டு இருக்காங்க.
"ஒரு மாசம் முன்னால என் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு, என்னைப் பாக்க நம்ம ஆஃபிஸ்க்கு வந்துருந்தா! அப்போ தான் அவ யாருன்னு எங்கிட்ட சொன்னா; எனக்கு அவள பாத்தவுடனே ஷாக்; அவ சொன்ன விஷயத்த கேட்டவுடனே பயங்கர ஷாக்!"
"இதுக்கு மேல எங்கயும் ஓடாதீங்க; உங்கள நான் ஓட விட மாட்டேன்..... உங்களையும் வழக்கமான பணக்காரங்க மாதிரியே ரொம்ப கெட்டவர்னு நான் நினைச்சுட்டேன். நீங்க அப்டியில்ல; ஐ'ம் ப்ரௌடு ஆஃப் யூ! ஐ வாண்ட் ட்டூ பீ வித் யூன்னு அவ்ளோ எலிகெண்டா, கொஞ்சங்கூட டென்ஷனாகாம பேசுனா பாருங்க; அவ பேசுன பேச்சுல எனக்கு தான் உதறிடுச்சு!"
"இங்க பாரும்மா; நீ இவ்ளோ எஃபர்ட் போட்டு உன் பர்சனல் லைஃப்ல மேல வந்தத நெனச்சு எனக்கு ரொம்ப சந்தோஷம்; பட் அதுனால எல்லாம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு அவ கிட்ட சொல்லிட்டேன்!"
"எனக்கு நிறைய நேரமில்ல மிஸ்டர் சஞ்சீவ்! ஏற்கனவே உங்க வீட்ல உங்களுக்கு நிறைய பொண்ணுங்கள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ..... ஒன் மன்த் தான் டைம் உங்களுக்கு! அதுக்குள்ள நீங்களா உங்க வீட்ல போயி என்னைய ஒரு பொண்ணு ரொம்ப வருஷமா டீப்பா லவ் பண்ணுறா; என்னை கல்யாணம் பண்ணிக்க உங்க பெர்மிஷன் கேக்குறான்னு சொல்றீங்களா? இல்ல நான் எங்கப்பாவோட வந்து உங்க வீட்ல பேசட்டுமான்னு அவ
கேட்டதுக்கு பயந்து, அவ கிட்ட எந்த பதிலும் சொல்லாம இங்க ஓடி வந்துருக்கேன்...!"
"நான் என்ன பண்ணட்டும்? எனக்கு அவ மேல லவ்வும் இல்ல; ஒண்ணுமில்ல! நான் எதுக்கு அந்த ரவுடிய கல்யாணம் பண்ணிக்கணும்?" என்று கதிரிடம் கேட்டான் சஞ்சீவ்.
"ஏன்டா டேய்.... அந்த பொண்ணப் பத்தி இத்தன வருஷத்துல ஒருதடவ கூட மூச்சு விடாம அது சொல்லுச்சுன்னு எங்கூட இருந்து என் வேலையில எல்லாம் எனக்கு நீ உதவி செஞ்சுருக்க! நீ அவளோட வார்த்தைய மதிச்சுருக்கங்குற ஒரே காரணத்துக்காக அந்தப் பொண்ணு அதோட தொழில்ல, வாழ்க்கையில ரெண்டுலயும் முன்னேறி மேல வந்துருக்கு! இது உண்மையான அன்பில்லன்னா எதுடா உண்மையான அன்பு? உனக்கு பயமெல்லாம் இல்ல; ஆசை! அந்தப் பொண்ணு உன்னைய தேடி இங்கயும் வரணும்னு உனக்கு ஆசை; அதான?" என்று கதிர் கேட்க சஞ்சீவ் கதிரின் கேள்விக்கு தலையசைத்து வேகமான மறுப்பு தெரிவித்தான்.
"அன்னிக்கு ஒரு நாள் நாம பேசிட்டு இருக்கும் போது உங்கிட்ட
உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு எப்டியிருக்கணும்னு நான் கேட்டதுக்கு பொண்ணு பொண்ணு மாதிரி இருந்தா போதும்னு சொன்னியே? இப்ப ஒரு பொண்ணு உன்னைய தேடி வந்தவுடனே அந்தஸ்து, கௌரவம், தகுதி இதெல்லாம் அவகிட்ட பாக்குறியாடா தம்பி?" என்று கேட்டவனிடம் மெதுவாக இல்லையென தலையசைத்தவன்,
"எனக்கு இந்த லவ் மேல எல்லாம் பெரிசா நம்பிக்கையில்ல. வீட்ல எல்லாரும் சரின்னு சொன்னாங்கன்னா, எனக்கு அவ ஓகே தான்; ஆனா அதுவரைக்கும் அவள எம்மேல வந்து விழுந்து பழகாம இருக்கச் சொல்லுங்க!" என்றான்.
"யாரு.... இதச் சொல்றதுக்கும்
நாந்தானா கெடச்சேன் உனக்கு? போடா நீயே போய் சொல்லு தங்கச்சி கிட்ட!" என்றவன்,
"நாளைக்கு காலையில மொத வேலையா இங்கருந்து கெளம்புற; போகும் போது டூப்ளிகேட் கீய நியாபகமா எங்கிட்ட குடுத்துட்டு ஊருக்கு நடையக் கட்டுற; புரியுதா? போடுற சண்டைய ஊருல போயி போடு! வீட்ல உனக்கு அந்த புள்ள கூட கல்யாணம் பேசிட்டாங்கன்னா உடனே கூப்ட்டு சொல்லு....!" என்று சொன்ன கதிரை ஒன்றும் பேசாமல் குர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro