Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 37

"இங்க ஒருத்தன் ஒத்தையாளா நின்னுக்கிட்டு அல்லாடிக்கிட்டு கெடக்கேன்! ஒரு பேச்சுக்குன்னாலும் உனக்கு சமையல்ல ஏதாவது ஹெல்ப் பண்ணவான்னு கேக்குறாளான்னு பாரு! சரி, இன்னிக்கு காலைல இருந்து நமக்காக அவ செஞ்சுவச்ச
சூனியமே ரொம்ப ரொம்ப பெரிசுதான்......!" 

"என்ன ஒண்ணு! அவ நமக்குன்னு வச்ச சூனியத்துல எங்கப்பன் வந்து அவகிட்ட வாண்டடா சிக்கிக்கிட்டான்; அதுனால ஒண்ண தொட்டு ஒண்ணுன்னு நிறைய நல்லது வேற நடந்துடுச்சு...... இந்த அளவுக்கு போதும்டா கதிரு! நம்ம ஃபெதரு கொஞ்சநேரம் ஜாலியா வெளையாடட்டும்!" என்று சொன்ன அவனது மனசாட்சியின் பேச்சைக் கேட்டவன் அவளிடம் எப்போதடா தனிமையில் பேச நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"ஹே கிட்டோஸ்.... என்னோட இன்னொரு பேரென்ன தெரியுமா? சாண்டல் சாத்தான்! உங்கள பிடிச்சு, அப்டியே ரெண்டா ஒடைச்சு, வாய்ல போட்டு அரைச்சு சாப்ட்டு பெரிசா ஏப்பம் விடப் போறேன் பாருங்க..... ஹாஹாஹா! ஐ'ம் கம்மிங் ஃபார் யூ!" என்று சிறுமிகளிடம் சொன்ன சந்தனா அறையில் ஒரு போர்வையை முழுதாக அவளது தலையிலிருந்து கால் வரை தெரியாமல் போர்த்திக் கொண்டு தன்னுடைய முகமே தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

"இந்த ஹைட் அண்ட் சீக் விளையாட்டு நல்லாவேயில்ல சந்தனாக்கா! நாம வேற விளையாட்டு விளையாடுவோம்! இப்டி முகத்த மூடிட்டு நின்னீங்கன்னா, நீங்க எங்கயாவது இடிச்சுக்கப் போறீங்க! அப்புறம் நாங்க தான் உங்கள முட்ட வச்சுட்டோம்னு கதிர் மாமாட்ட சொல்லக் கூடாது!" என்று சொன்ன வெண்மதியைப் போலவே இளமதியும்,

"ஆமா சொல்லக்கூடாது!" என்றாள்.

"ஏன் வொய்ட்! உனக்கு இந்த விளையாட்டு பிடிக்கலையா? சரி வாங்க! நாம போய் உங்க கதிர் மாமாவையே டிஸ்டர்ப் பண்ணுவோம்!" என்று அவர்களிடம் சொன்ன சந்தனா சிறுமிகள் இருவரையும் அவர்கள் அறையிலிருந்து கிச்சனுக்குள் அழைத்துக் கொண்டு வந்தாள்.

"மிஸ்டர் கதிர்ரேஷன் எங்க மூணு பேருக்கும் போரடிக்குது! எங்கள கொஞ்ச நேரம் நீங்க எண்டர்டெயின் பண்றீங்களா?" என்று கேட்டவளை ஒற்றை கையை இடுப்பில் வைத்து முறைத்தவன்,

"டின்னரும் நாந்தான் பண்ணனும். உங்களுக்கு எண்டர்டெயின்மெண்ட்டும் நாந்தான் குடுக்கணுமா? நாளைக்கு காலையில கல்பனாக்கா அவங்களோட மாமியார பார்க்க கிளம்புறாங்க. நாமளும் ஊருக்கு கிளம்புறோம். சீக்கிரத்துல சாப்ட்டு முடிச்சுட்டு மூணு பேரும் போய் ஒறங்குங்க. அப்பதான் காலையில சீக்கிரம் எழுந்திரிக்க முடியும்!" என்று சொன்ன கதிர் கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காயத்தாள் இவைகளையெல்லாம் பொடியாக நறுக்கி அவனருகில் சும்மா நின்று கொண்டிருந்த சந்தனாவிடம்,

"லஷ்மி! எண்டர்டெயின்மெண்ட் வேணும்னு கேட்டியே?
இந்த சப்பாத்திய கொஞ்சம் தேச்சுக் குடேன்!" என்றான்.

"சப்பாத்தி தேய்க்குறதெல்லாம் எனக்குத் தெரியாது மிஸ்டர் ரேஷ்! வேற ஏதாவது சின்ன சின்ன ஹெல்ப் பண்றதுன்னா சொல்லு, ஐ கேன் கிவ் யூ அஸிஸ்டென்ஸ்!" என்று அவனிடம் ஸ்டைலாக தோள்குலுக்கியபடி சொன்னாள் சந்தனா.

"பாத்தியா மதி? சந்தனா அக்காவுக்கு சப்பாத்தி கூட செய்யத் தெரியாதாம்! அக்கா நானே ஆம்லெட், தோச, நூடுல்ஸ் எல்லாம் போடுவேன். உங்களுக்கு ஏன் சப்பாத்தி கூட செய்யத் தெரியாது?" என்று தன் தங்கையிடம் சந்தனாவை கேலி பேசிய வெண்மதி சந்தனாவிடம் கேள்வி வேறு கேட்டாள்.

"ஏய் கேர்ள்! ஆம்லெட், நூடுல்ஸ் இதெல்லாம் செய்றது, தோச ஊத்துறது இதெல்லாம் ஒரு வேலையா கேர்ள்? இதே சப்பாத்தி செய்றதுன்னா சொல்லு.... எவ்ளோ கஷ்டம்! மாவு நம்ம கையில ஒட்டாம, கொழகொழன்னு ஆகாம, கரெக்டான பதத்துல...... அது எவ்ளோ டஃப் ஜாப் தெரியுமா?" என்று கோபமாக கேட்ட சந்தனா கதிரின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியே அவனது இதழ்களை தாண்டி அவனது மேல்வரிசைப் பற்கள் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. சும்மா பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறான், அவனை மன்னிப்போம் என்று நினைக்க முடியாமல்,
கண்களின் ஓரம் சுருங்கி உள்ளார்ந்து சிரிக்கிறான் என்று பார்த்தாலே தெரியும்படி இருந்தது.

சிறுவயதில் என்றைக்காவது அக்காவும், தம்பியுமாக ஒன்றாக சேர்ந்து மூட் அவுட் ஆனார்கள் என்றால் அன்று அவர்களுடைய வீட்டின் சமையலறையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

இவர்கள் இருவருமாக சேர்ந்து
தோசை ஊற்றினார்கள் என்றால் தோசை அந்த சட்டியுடனே ஒட்டிக் கொள்ளும்; இல்லையென்றால் அந்த தோசையின் நிறம் நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே சென்று வந்ததைப் போல் இருக்கும். அவர்களுடைய கோபத்திற்கும் சேர்த்து கதிர் தான் அந்த தோசை தவாவை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் சுத்தம் செய்து வைக்க வேண்டும்!

"ஏய்.... என்ன நீ சிரிச்சுட்டு இருக்க? சப்பாத்தி பண்றது ரொம்ப டஃப் ஜாப் தான? சொல்லு அவங்கட்ட!" என்று கேட்டவளிடம் "சரிங்க சார்!"
என்று தலையை வேகமாக ஆட்டியவன்,

"குட்டீஸ்..... ஒருகாலத்துல இந்த சந்தனா அக்காவுக்கு சாப்ட ஆ...ன்னு வாயத் தொறக்குறது கூட ரொம்ப கஷ்டமான வேல தெரியுமா? அதுக்கு கூட ஒரு ஆள் வச்சு அவங்க வாய திறந்து மூடிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருந்தாங்க. அவங்கட்ட போயி சப்பாத்தி போடுறீங்களான்னு நாம கேக்குறதெல்லாம் எவ்ளோ தப்பு?" என்று சிறுமிகளிடம் கேட்டான்.

கதிரின் பேச்சைக் கேட்டு மூன்று பேரும் நிறுத்தாமல் சிரித்ததோடு மட்டுமல்லாமல் "எதுக்கு மாமா இந்த அக்காவப் போயி நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? வேற யாரையாவது செலக்ட் பண்ணலாம்ல?" என்று அவனிடம் கேட்கவும் செய்தாள் வெண்மதி.

"அப்பால்லாம் அவங்க ஆஃபிஸ்ல இருக்குற அங்கிள்ஸ தான் ஸார்னு கூப்பிடுவாங்க! நீங்க எதுக்கு சந்தனா அக்காவ ஸார்னு கூப்டுறீங்க?" என்று யோசனையுடன் தன்னுடைய கன்னத்தில் கை வைத்து கேட்டவளிடம்,

"அதுவாடா வெள்ள நிலா? அது வந்து.... ஸ்லே......!" என்று சொல்லிக் கொண்டிருந்தவன் முதுகில் தாவி அவன் வாயை மூடியிருந்தாள் கதிரின் சூனியபொம்மை.

"எதையாவது சொல்லணும்னு இப்ப வாயத் தொறந்த; அப்டியே அனெபாண்ட் போட்டு ஒட்டி விட்டுடுவேன் பாத்துக்க!" என்று சொன்ன பிறகே அவன் முதுகில் இருந்து கீழே இறங்கினாள்.

"எம்முதுகு என்ன உனக்கு ஜிம்னாஸ்டிக் பார் மாதிரி தெரியுதா? சொல்லாம கொள்ளாம ஏறிக் குதிச்சு விளையாடிட்டு இருக்க.....?" என்று அவளிடம் பல்லைக் கடித்தபடி பேசியவன் சத்தியமாக அவளிடம் கோபத்தில் பேசவில்லை.

பிள்ளைகளின் முன்பாக இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாளே, இவர்கள் தங்கள் அன்னையிடமோ, பாகேஸ்வரி பாட்டியிடமோ இப்போது நடந்ததை சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்து தான் சற்று பயந்தான்.

"மதி..... நீ கேட்டது சந்தனா அக்காவுக்கும், மாமாவுக்கும் நடுவுல இருக்குற சீக்ரெட்! சீக்ரெட்ட வெளிய சொன்னா அக்கா வருத்தப்படுவாங்க. ஸோ அது வேண்டாம் என்ன? குட்டி நிலாவுக்கு
எத்தன சப்பாத்தி வேணும்?" என்றவனிடம்,

"எனக்கு ட்டூ சப்பாத்தி...... பெதிய்ய்ய்ய்ய புல்சப்பாத்தி வேணும் மாமா!" என்றாள் இளமதி. அத்தோடு நிறுத்தாமல் தனது அக்கா சொன்ன மிஸ்ஸையே கல்யாணம் செய்யச் சொல்லி அவளும் கதிரிடம் பரிந்துரை செய்ய சந்தனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

"டியர் வெண்மதி! உங்க மாமாவ தான் மேரேஜ் செஞ்சுக்கணும்னு நான் ஒண்ணும் வந்து க்யூவுல நிக்கல! நீயே என்னை விட பெட்டரான எதாவது பொண்ணப் பாத்து உங்க கதிர் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வை! இளமதியும் ஹாப்பியா இருப்பா!" என்று சடைத்துக் சொன்ன சந்தனாவிடம்,

"ஓகே சந்தனாக்கா! எங்க யோகா மிஸ்ஸ நான் கதிர் மாமாவுக்கு மேரேஜ் பண்ணி வச்சிருக்குறேன். நீங்களும் வேற அங்கிள கல்யாணம் பண்ணிக்கோங்க!" என்றாள் புன்னகைத்த படி.

"யோகா... மிஸ்ஸா! ரொம்ப சந்தோஷம் வொயிட் மூன்! உங்க பாகேஸ்வரி பாட்டி கோவில்ல இருந்து வந்ததும் அவங்க கிட்ட போய் இந்த யோகா மிஸ் கதைய கண்டிப்பா பேசு! சரியா?" என்று சொன்ன சந்தனாவின் முகம் அவ்வளவு அழகாக தெரிந்தது கதிருக்கு.

வெள்ளையும் சிவப்பும் சேர்கையில் ஒரு இளஞ்சிவப்பு நிறம் கிடைப்பதைப் போல, அவள் முகம் சிவந்து கோபப்படுகையில் தான் அவளுடைய வெள்ளைக் கன்னத்தில் லேசான இளஞ்சிவப்பு நிறம் பிறக்கும்!

கிளியின் மூக்கு, விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு, ரத்த நிற ரோஜா, பூமி தொடாத பிள்ளையின் பாதம் போன்ற எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் என்று பாடலை எழுதியவர் இந்த இளஞ்சிவப்பு நிறத்தை ஏன் பாடலில் சேர்க்கவில்லை என்று இப்பொழுதெல்லாம் கோபப்பட்டுக் கொண்டிருந்தான் கதிருக்குள் இருந்த ஆர்ட்டிஸ்ட் ரேஷ்!

எப்படியோ ஒரு சுவாரஸ்யமான சண்டையைப் பார்த்துக் கொண்டே ஸ்டஃப்டு சப்பாத்தியின் வேலைகளை எளிதாக செய்து முடித்தாகி விட்டது என்று நினைத்தவன்,

"டின்னர் ரெடி! சாப்டலாமா?" என்று அவர்களிடம் கேட்டான்.

இரண்டு குழந்தைகளிடமும் ஏதேதோ பேசிக் கொண்டே சிரிப்புடன் சாப்பிட்டவன் முகத்தில் சென்னை வந்ததில் இருந்து தெரிந்த ஒரு தனியான புத்துணர்ச்சியை சந்தனா குறித்து வைத்துக் கொண்டாள்.

அவளுக்கு அவளுடைய பெற்றோர் மாதிரித்தானே இவனுக்கு இவர்களும்.....? அதுவும் அவர்களிடத்தில் எல்லாவற்றையும் சொல்லி விட்ட நிம்மதியில் தான் இவ்வாறு மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறானோ என்று அவளுக்குத் தோன்றியது. அந்த அளவிற்கு வெண்மதியின் மொக்கை ஜோக்குகளுக்கு எல்லாம் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து டீவியின் முன்னர் அமர்ந்திருந்த
குழந்தைகள் இருவரிடமும் சந்தனா குட்நைட் சொல்லி விட்டு கல்பனா அக்காவிடம் முன்கூட்டியே எங்கே தூங்க வேண்டுமென கேட்டு வைத்திருந்த அறையை நோக்கி சென்றவளை கதிர் கையைப் பற்றி நிறுத்தினான்.

"என்ன.....டா! இந்த கடல் காத்துக்கா என்னன்னு தெரியல; எனக்கு இந்த ஊர்ல ரொம்ப ப்ளெசண்டா தூக்கம் வருது! எங்கைய விடு! நான் போய் படுக்கணும்!" என்று சொன்னவளிடம்,

"இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள கல்பனா அக்கா ஹஸ்பெண்ட் வந்துடுவாங்க. அவங்க வந்தவுடனே, நாம எங்கப்பனுக்கு சாப்பாடு எடுத்துட்டு நம்ம வீட்ல போயி உறங்கலாம்! இன்னிக்கு இங்க நீ தூங்கல...... புரியுதா? இப்பவே வேணும்னாலும் நம்ம வீட்ல போய் படுத்துக்கோ. ஆனா என்னைய விட்டுட்டு இங்க தனியா படுத்து தூங்கக் கூடாது!" என்று கறார்க்குரலில் சொன்னான் கதிர்.

"ஊர்ல உன் வீட்ல மட்டும் நான் கம்பர்டபிளா இருக்கணும்; பெரிய பெட்ரூம வேணும்னா எடுத்துக்கோன்னு சொன்ன! இங்க வந்ததும் இந்த வீட்ல ஒருநாள் நைட் ஸ்டே பண்ண விட மாட்டேங்குற! நான் இங்க தான் படுக்கப் போறேன்..... உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ!" என்று சொல்லி விட்டு மாடியேறப் போனவளிடம் லேசான தோள்குலுக்கலுடன்,

"அது வேற.... இது வேற! நான் எங்க இருக்கேனோ அங்க தான் நீயும் இருக்கணும்னு நினைக்குறேன். எனக்கு அதெல்லாம் முக்கியம் இல்ல; பெரிய பெட்ரூம்ல படுக்குறது தான் முக்கியம்னு நினைச்சா நீ தாராளமா மேல ஏறி ரூமுக்குப் போகலாம். பை பை!" என்று சொல்லி அவளுக்கு கைகாட்டினான்.

"ச்சை.... பக்கிப்பய! இவன் பேசுறத நான் கேக்கணும்ங்குற டோன்லயே பேசி உசுர வாங்குறான்!" என்று ஆத்திரத்தில் தரையை தன் காலால் மிதித்தவளிடம்,

"மெல்லம்மா.... மெல்ல! உன் கோபத்த எல்லாம் இந்த ப்ளோர் தாங்காது!" என்று சிரிப்புடன் சொன்னான்.

"பல்லைக் காட்டாம அந்த வீட்டோட சாவிய தந்து தொல!" என்று கேட்டவளிடம் தயக்கமாக,

"ப்ளீஸ் லஷ்மி! நான் வர்ற வரைக்கும் தூங்காம இருக்க முயற்சி பண்ணு. நான் உங்கிட்ட நிறைய பேசணும்!" என்றான்.

"ஸாரி ரேஷன்! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசு. எனக்கு ரொம்ப தூக்கம் வருது! குட்நைட்..... குட்டீஸ் பை!" என்று சொல்லி விட்டு அவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் சந்தனா.

அவள் கிளம்பிய இருபது நிமிடங்களில் கல்பனாவின் கணவன் ஜனார்த்தனன் வந்து விட்டான்.

"ஹலோ மிஸ்டர் கதிர்.... ஸாரி உங்கள ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவனை "அப்.......பா!" என்று அழைத்து வெண்மதியும், இளமதியும் அணைத்துக் கொண்டனர்.

"ஹாய் செல்லம்ஸ்.... என்ன உங்க கதிர் மாமாவோட பீச்ல ஒரே ஆட்டம் போட்டீங்க போல! இன்னிக்கு டே ரொம்ப ஃபன்னா போச்சா?" என்று மகள்களை கட்டிக் கொண்டு கதை பேசியவனிடம் ஆர்வமாக,

"யெஸ் டாட்! கதிர் மாமாவும், மாமா கூட வந்த அண்ணாவும் எங்கள சூப்பரா ஸ்விம் பண்ண வச்சாங்க. தண்ணிக்குள்ள சொய்ங்க்னு ரைட் போனோம்!" என்ற அக்காவைப் போலவே இளமதியும் "சொய்ங்க்!" என்று கூறி கைகளால் அபிநயம் காட்டினாள்.

"ஓகே ஓகே.... நல்லா விளையாடியாச்சு! சாப்டாச்சு. டீவி பார்க்குற டைமும் முடிஞ்சிடுச்சு! இனிமே தூங்க போகலாமா?" என்று கேட்ட தன்னுடைய தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்ட சிறுமிகள் "குட்நைட் டாடி" என்று கோரஸாக சொன்னார்கள். கதிருக்கும் குட்நைட் ஹக்கும், கிஸ்ஸூம் தந்து விட்டு அவர்களுடைய அறைக்கு சென்றவர்களின் பின்னாலேயே சென்று அவர்களைப் பல் தேய்க்க வைத்து, படுக்கையில் கிடத்தி அவர்களுக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தான் ஜனார்த்தனன்.

"ரொம்ப லேட் பண்ணிட்டேனோ கதிர்?" என்று மறுபடி கேட்டவனிடம்

"அதெல்லாம் இல்ல ஸார்;
அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுறேன்னு சொன்னீங்க! கரெக்டா வந்துட்டீங்க! எங்கூட வந்த பையன் ஜெபா கூட்டிட்டுப் போனதுனால கல்பனா அக்கா, அம்மா ரெண்டு பேரும் ஹோட்டல்ல போய் சாப்ட்டு வர்றோம்னு சொன்னாங்க. நீங்க சாப்டீங்களா? இல்ல உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா ஸார்?" என்று அவரிடம் கேட்டான் கதிர்.

"எனக்கு கல்பனா இல்லாம உங்க கூட கொஞ்சம் பேசணும்னு தோணுச்சு! அதான் அவகிட்ட ஆஃபிஸ்ல வேலை இருக்குன்னு ஒரு பொய் சொல்லிட்டேன். நான் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொன்னா, அவ எங்கயாவது வெளியில கிளம்புவான்னு தெரியும். அதான் அவகிட்ட அப்டி சொன்னேன்! வரும்போது ஹோட்டல்ல சாப்ட்டு தான் வந்தேன். நீங்க உட்காருங்க. இதோ ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்!" என்று சொன்னவன் தன்னுடைய அறைக்கு சென்று உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

"எங்கப்பன் பண்ண தப்ப மன்னிச்சுடுங்க ஸார்; ரெண்டு பொம்பளப்புள்ளைங்க இருக்குற இடத்துல இவன மாதிரி கூடவே ஆளையெல்லாம் விட்டு வச்சுருக்க எனக்கு பயமாயிருக்கு. நான் என் அப்பனையும், எங்க அம்மாவையும் ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன் ஸார்! இனிமே இவன் தொல்லையில்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்!" என்று சொன்ன கதிரிடம்,

"தேங்க்ஸ் மிஸ்டர் கதிர்! நாங்க எதையும் டீடெய்லா சொல்லாமலேயே எங்களோட ஃபீல புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! கல்பனா பாகேஸ்வரி ஆன்ட்டிய இனிமே ரொம்ப மிஸ் பண்ணுவா.... ஆனா உங்க வீட்ல இருந்து உங்கள வெளிய போக சொல்லிட்டமேங்குற கில்ட்டினெஸ் இல்லாம எங்கள வாழ விடுங்களேன். இந்த வீட்ட நீங்க எங்களுக்கே தந்துடுறிங்களா மிஸ்டர் கதிர்? இல்ல இந்த வீட்ட விக்க வேண்டாம்னு உங்களுக்கு ஏதாச்சு சென்டிமெண்ட்டல் ஃபீல் இருந்துச்சுன்னாலும் அத நீங்க எங்கிட்ட தாராளமா சொல்லலாம்!" என்று கேட்டவனிடம்,

"அப்டியெல்லாம் எதுவுமில்ல ஸார்! எங்க அம்மாவ இந்த மாதிரி ஒரு வீட்ல தங்க வைக்கணும்னு ஆசப்பட்டு தான் இந்த வீட்ட நம்ம மாணிக்கவேல் ஸார் கிட்ட இருந்து நான் இந்த வீட்ட வாங்குனேன்; அத திருப்பி உங்களுக்கே தர்றதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல! இதப்பத்தி கல்பனா அக்கா கிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடுங்க ஸார்! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி விட்டு சிறு புன்னகையுடன் சில பாத்திரங்களை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் கதிர்.

"கேட்டவுடனே வச்சுக்கோங்கன்னு சொல்லி அவனோடத நமக்கு குடுத்துட்டான்! இந்த மாதிரி ப்ராப்பர்டியோட ரியல் வேல்யூ இவனுக்கு தெரியுமா தெரியாதா?" என்று யோசித்துக் கொண்டிருந்த ஜனார்த்தனனின் காதில்,

"இந்த கதிர் பையன் வேற மாதிரியான பெர்சனாலிட்டி! உங்களால எல்லாம் அவன புரிஞ்சுக்க முடியாது ஜனா!" என்ற மனைவியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. இன்றைய தேதியின் இந்த இடம் மற்றும் வீட்டின் விலையை ஒரு பைசா குறைக்காமல் கதிரிடம் தந்து விட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு தன்னுடைய மனைவியின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro