
❤ சிறுநகை 31
கதிர் சந்தனாவின் வீட்டில் அவனுடைய அம்மாவுடன் வாதம் செய்து கோபித்துக் கொண்டு போய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சந்தனா எத்தனை முறை பாகேஸ்வரியிடம் இந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசினாலும், ஒரு தெளிவான முடிவெடுக்க தெரியாமல் அவர் அழுகையில் தான் பேச்சை முடித்தார்.
பாகேஸ்வரிக்கு கணவர், கதிருக்கு அப்பா.... அவரிடம் இருவரும் ஒரு சுபநிகழ்வைப் பற்றியே தெரிவிக்க விருப்பப்படவில்லை என்றால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்த சந்தனா தன் முயற்சியாக இந்த இரண்டு நாட்களாக காலை ஒரு முறையும், இரவு ஒரு முறையும் அவனிடத்தில் அலைபேசியில் பேசி அவனை சற்று சாந்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவர்களுடைய திருமணத்திற்கு பெரிதாக எந்த தடையும் இல்லை என்றாலும், சந்தனாவிற்கு இந்த திருமணம் எவ்வாறு நடக்கப்போகிறது? கதிருடைய அப்பாவிடம் விஷயத்தை தெரிவித்து அவரும் பாகேஸ்வரி ஆன்ட்டியுமாக தன்னுடைய வீட்டில் வந்து பெண் கேட்கப் போகிறார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை.
வருவதை வரும் நேரத்தில் சந்திந்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தவள் இரண்டு நாளாக அவனிடம் பேசுவதை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருந்தாள்.
அன்றிரவில் இரவு உணவு நேரத்தில் படுக்கையறையில்
அவளது மொபைல் சிணுங்க ஹாலில் இருந்து வந்து அலைபேசியை எடுத்தவளிடம் கல்பனா பேசினாள்.
"ஹலோ சந்தனா! நல்லா இருக்கீங்களாம்மா? நான் கதிரோட புரஃபொஸர் பொண்ணு; எம்பேர் கல்பனா! உங்ககூட பேசணும்னு ரெண்டு நாளா யோசிச்சுட்டுருந்தேன். அதான் அம்மாட்ட உங்க நம்பர் வாங்கி கூப்டேன். அந்தப்பையன் இந்த தடவையும் அவங்க கிட்ட சண்ட போட்டுத்தான் போன வச்சுட்டுப் போனானாமே? நீங்க ரெண்டு பேரும் ஒருதடவ சென்னை வந்துட்டுப் போக முடியுமாம்மா? நம்ம எல்லா விஷயத்தையும் போன்லயே பேசி முடிக்க முடியாதுல்ல?" என்று கேட்ட கல்பனாவிடம் சில நிமிட யோசனைக்குப் பின்னர்,
"இல்ல சிஸ்டர்! அவன் ஏற்கனவே ரொம்ப கோபத்துல இருக்கான்! ஆன்ட்டி அவனுக்கு ஸப்போர்ட் பண்ணாம அவங்க ஹஸ்பெண்ட் சைட் நிக்குறத அவனால அக்செப்ட் பண்ணிக்க முடியல. நாங்க வரலைன்னாலும் பரவாயில்ல; நீ உன்னோட கல்யாணத்த நல்லபடியா செஞ்சுக்குறன்ற மாதிரியே ஆன்ட்டி பேசுறாங்க.....!"
"அவங்க எங்க வீட்டுக்கு வந்தா, எங்க அம்மாவால ஒரு ப்ரச்சன வருமோன்னு யோசிக்குறாங்களான்னு எனக்குத் தெரியல! இப்போதைக்கு ஊருக்கு வர்ற சூழ்நிலையில கதிர் இல்ல சிஸ்டர்! ஒரு வாரம் பத்து நாளுக்குள்ள நாங்க அங்க வர்றோம்! அதுவரைக்கும் கதிர நாங்க நார்மல் மைண்ட்செட்டுக்கு கொண்டு வர முயற்சி பண்றோம்க்கா!" என்று கல்பனாவிடம் சொன்னாள் சந்தனா.
"அக்கா, சிஸ்டர் இதெல்லாம் எதுக்கும்மா சந்தனா? உனக்கு என்னை அக்கான்னு கூப்ட கஷ்டமாயிருந்தா கல்பனான்னே கூப்டு! அக்கா, தங்கச்சி, அண்ணி, நாத்தனார் இதெல்லாம் தாண்டி நாம ப்ரெண்ட்ஸ் ஆகிடலாம்! என்ன சொல்ற?" என்று கேட்ட கல்பனாவிடம்,
"ஓகே கல்பனா..... பட் நான் யூஸ்யுவலான பொண்ணுங்க டைப் கிடையாது; எனக்கு நிறைய கோபம் வரும்! பொஸஸிவா இருப்பேன்; பயங்கரமா ஆர்க்யூ பண்ணுவேன். இதெல்லாம் உங்களுக்கு ஓகே தான்னா நாம
ப்ரெண்ட்ஸா இருக்கலாம்!" என்று கல்பனாவிடம் சொன்னாள் சந்தனா.
"ஓ... அப்போ உங்கள சமாளிக்குறது கிட்டத்தட்ட
எனக்குப் பொறந்த ரெண்டு குட்டிப்பிசாசுங்கள சமாளிக்குற மாதிரி இருக்கும்னு சொல்லுங்க.... எனக்கு அதுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குதுங்க! அதுனால உங்கள என்னால அழகா ஹேண்டில் பண்ணிட முடியும்!" என்று சிரித்தபடி சந்தனாவிடம் சொன்ன கல்பனாவின் பதிலைக் கேட்டு சந்தனா சற்றே ஆச்சரியமடைந்தாள்.
"எனக்கு பெரிசா யாரும் ப்ரெண்ட்ஸே கிடையாதுங்க கல்பனா! ஒண்ணு என்னோட பழகுறவங்களுக்கு என் பிஹேவியர் பிடிக்காம, ப்ரெண்ட்ஷிப் கட் ஆகிடும்! இல்ல அவங்களோட என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாம ப்ரெண்ட்ஷிப் கட் ஆகிடும்! நீங்க ஒருத்தங்க தான், என் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க முடியும்னு இவ்ளோ கான்ஃபிடென்டா சொல்றீங்க! நம்மளோட வேவ்லென்த் மேட்ச் ஆகுதான்னு பாக்கலாம்ங்க!" என்று சொன்ன சந்தனாவிடம்,
"பாக்கலாம்! பாக்கலாம்.... நான் கதிரப் பத்தி உங்ககிட்ட ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா? கதிர் படிக்குறப்ப
எங்கப்பா அவங்கிட்ட ஒருநாள் ஒரு சேலன்ஜ் பண்ணுனாராம். மாடலே இல்லாம நீ ஒரு போர்ட்ரைட் ட்ராயிங்க வரைய முடியுமான்னு கேட்டாராம்! போர்ட்ரைட் ட்ராயிங்க்னா ஒருத்தரோட உருவத்த அப்டியே வரையுறது! அதுல சின்னதா ஒரு தப்பு பண்ணுனா கூட அவங்க அந்த ட்ராயிங்க்ல வேற மாதிரி தெரிவாங்க!"
"கதிர் எங்கப்பா கிட்ட உங்களுக்கு என்னோட இம்சஅரசியையே வரைஞ்சு காட்டுறேன் ஸார்..... அவளோட இமேஜ் என் மூளைய அடைச்சிக்கிட்டு நிக்குது! ஸோ அவள வரையறதுக்கு அவ எனக்கு முன்னால மாடலா உக்கார வேண்டிய அவசியமே இல்லன்னு சொல்லி உங்கள வரைஞ்சு..... அதுவும் சும்மாயில்லங்க.....! ரொம்ப கஷ்டமான ஒரு சாமி பெயிண்டிங்க உங்க முகத்தோட வரைஞ்சு அவ்ளோ அழகான ஒரு போர்ட்ரைட்ட எங்கப்பா கிட்ட நீட்டுனானாம். அதுல இருந்து எங்கப்பாவுக்கு அவன் ஃபேவரைட் ஸ்ட்டூடெண்ட்ங்க சந்தனா!"
"மேலோட்டமா பாக்குறதுக்கு தான் அவன் ரொம்ப ரிஸர்வ்டு டைப் மாதிரி தெரிவான்! அவன் பக்கத்துல கொஞ்சம் நெருங்கிட்டோம்னா, அவன மாதிரி ஒரு ப்ரெண்ட்லியான கேரக்டர் இருக்கவே மாட்டாங்களோன்னு நாமளே யோசிப்போம்! அவனோட வொஃய்ப் ஆகப்போறதுக்கு
நீங்க ரொம்ப லக்கிங்க சந்தனா! சீக்கிரத்துல அவன கண்டிப்பா இங்க கூட்டிட்டு வாங்க. நான் வைக்கட்டுமா.....?" என்று கல்பனாவிடம் பை சொல்லி விட்டு யோசித்துக் கொண்டிருந்தாள் சந்தனா.
அவன் வீட்டில் அவன் தொங்க விட்டிருந்த படத்தை முதலில் ஒரு சாமி படம் என்று நினைத்து அசட்டையாக பார்த்தாள். அவன் கையில் எடுத்து அதைப் பற்றி கொஞ்சம் விளக்கியதும் சற்றே ஆர்வமாக இருந்தது. இப்போது தன்னுடைய முகத்தை அவன் நினைவலையில் இருந்து எடுத்து இவ்வளவு துல்லியமாக வரைந்தான் என்று கேட்ட போது, இதைப் பற்றி நமக்கு யோசனை வரவேயில்லையே என்று நினைத்து அவனது ஓவியத்தைப் பற்றி சந்தனாவிற்கு
மிகவும் கர்வமாக இருந்தது.
"உன்னைப் பத்தி அடுத்தவங்க இவ்ளோ சொன்னா தான் உன்னோட ப்ளஸ்ஸே எனக்கு புரியது; ஆனா நீ மட்டும் எப்டிடா என் ப்ளஸ், மைனஸ் எல்லாத்தையும் பிங்கர் டிப்ல வச்சிருக்க என் வளந்த ரேஷன்ஷாப்!" என்று முணங்கியவள் அவன் நினைவில் கட்டிலில் மெதுவாக உருண்டு கொண்டிருந்தாள்.
அலைபேசியில் மறுபடியும் ஷார்ப்பான ஒரு மிஸ்டுகால் வர சிரித்துக் கொண்டவள், அவனுக்கு கூப்பிட்டாள்.
"உனக்கு எதுவும் பைசாவுக்கு ப்ராப்ளமோ? ஏன் நீயே என்னைக் கூப்டா என்னவாம்டா? என்று எடுத்த எடுப்பில் கேட்டவளிடம்,
"ம்ப்ச்! அதெல்லாம் என்னால முடியாது! ஏன் இன்னிக்கு இப்ப வரைக்கும் என்னைக் கூப்டவேயில்ல? நீ கூப்டுவன்னு சொல்லி நான் பத்து நிமிஷமா மொபைல கையில வச்சுட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!" என்று ஒரு அந்நியக் குரலில் பேசினான் கதிர்.
"ஊர்ல இருந்து உன் பேவரைட் கல்பனா அக்கா என்னைக் கூப்ட்டுருந்தாங்க. அவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன். அந்த போர்ட்ரைட் ட்ராயிங்க வரையறது ரொம்ப கஷ்டமாமே? அவங்க சொன்னாங்க! அதுல எப்டி என்னை பாக்காம வரைஞ்சடா நீ?" என்று அவனிடம் கேட்டாள் சந்தனா.
"நான் உங்கிட்ட என்ன கேட்டா, நீ எங்கிட்ட என்ன பேசிட்டு இருக்க? இவ்ளோ நேரமா என்னைய விட்டுட்டு கல்பனா அக்காட்ட பேசிட்டு இருந்தியாக்கும்? உன்னை கூப்டணும்னு சொல்லிட்டு இருந்தாங்க; ஆனா நீ எங்கிட்ட பேசுற நேரத்துல எதுக்கு உன்னைய கூப்டாங்க? எப்டியோ
எனக்கு கால் பண்ணாம இருந்ததுக்கு நீ முதல்ல எங்கிட்ட ஸாரி கேளு! இந்த தடவை எனக்கு இங்க்லீஷ் லெட்டர் பூரி ஸாரியெல்லாம் வேணாம்; அஞ்சு முத்தம் வேணும்! மொபைல் வழியாவே குடுத்தாலும் ஓகே தான்; இல்ல வீட்டுக்கு வந்து நேர்ல குடுத்தாலும் ஓகே தான்!" என்றான் உறுதியான குரலில்.
"ஏய்..... என்ன வெளயாடுறியா நீ? இப்டி திடீர்னு கி.....கிஸ்ஸூன்னு கேட்டா நான் என்ன செய்ய? நீ தான் எப்பப் பாரு என்னை மோந்து பாத்து எனக்கு கிஸ் குடுத்துட்டே இருக்குற..... எனக்குல்லா அது ரொம்ப கஷ்டமான வேல ரேஷன்!
நம்ம முதல்ல நல்ல கம்பர்டபிள் பாண்டிங்குள்ள வருவோம்! அதுக்கப்பறம் மெதுவா ஒண்ணு ஒண்ணா ஆரம்பிக்கலாம்!" என்று சொன்னவளிடம்,
"அதென்ன கம்படபிள் பாண்டிங்கு? இங்க பிரச்சனை உனக்குத் தான் லஷ்மி! என்னைய உன்னால லவ் பண்ண முடியல! நான் உன்னை கட்டிப்பிடிச்சா, உன்னால நெளியாம நிக்க முடியல! எனக்கு முத்தம் குடுக்க முடியல.....! இப்டி நிறைய முடியல! ஆனா எனக்கு ஒரே ஒரு முடியல தான்.....!"
"உங்கிட்ட நெருங்காம என்னைய என்னால தடுத்து நிறுத்த முடியல! நீ அம்மாட்ட பேசிட்டு இருக்குறப்ப என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியல லஷ்மி! அதுவும் பல்லால உதட்ட கடிச்சுட்டு நின்ன பாரேன்..... ஷப்பா......! அதப் பார்த்தப்பவே நீ மட்டும் உன்னோட உதட்ட இப்டி கடிக்கலாம்! நான் இப்டி கடிக்கக்கூடாதான்னு கேக்கணும்னு தோணுச்சு! எங்கம்மா மேல கோபம், எங்கப்பன் மேல ஆத்திரம்னு ஒரே எரிச்சல்ல இருந்ததுனால அன்னிக்கு விருட்டுன்னு கெளம்பிட்டேன்.....!"
"ரெண்டு நாளா அப்பப்ப உன் வீட்டு வாசலும், மொபைலோட நீ நின்னுக்கிட்டு இருந்த போஸூம் அடிக்கடி மனசுக்குள்ள நியாபகம் வந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது தெரியுமா? இப்பவே வீட்டுக்கு வா லஷ்மி!" என்று உறுதியான குரலில் சொன்னவனின் நிலைப்பாட்டை பார்த்து சந்தனாவிற்கு உதறல் எடுத்து விட்டது.
"என்னடா நீ? பொண்டாட்டிய கூப்டுற மாதிரி கூப்டுற? நம்ம விஷயத்துல அடுத்து என்னதான் நடக்கப்போகுதுங்கறதே தங்கமல ரகசியமா இருக்கு! எப்டி எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்த நடத்தலாம்னு யோசிக்குறத விட்டுட்டு, நீ ஏன்டா தேவையில்லாத விஷயத்த எல்லாம் யோசிச்சுட்டு இருக்க? டின்னர் சாப்டியா?" என்று அவனைப் போலவே தடவிக் குடுக்கும் குரலில் அவனுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை தெளிவுபடுத்திய பின்னர்
அவனிடம் கேள்வி கேட்டாள் சந்தனா.
அவளது இயல்பான குரலை விட இந்த மாதிரியான மெதுவான குரல் அவனை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்வதை சோதனை முயற்சி செய்து தெரிந்து கொண்டாள்.
"மதியம் செஞ்ச சாதம் இருந்தது. வெங்காயம், தக்காளி, முட்டை, இதெல்லாம் ஒரு பேன்ல போட்டு பிரட்டி, மிளகாய், மஞ்சள், மிளகுத்தூள், கரம் மசாலா இதெல்லாம் போட்டு அத சாதத்துல கொட்டி கலந்து சாப்ட்டேன் லஷ்மி! இன்னும் பசிச்சா ஒரு டம்ளர் பால் குடிச்சுட்டு படுத்துக்க வேண்டியதுதான்!" என்று சொன்னவனிடம்,
"சரி..... அப்போ நீ தூங்கு! நாம காலையில பேசலாம்! குட்நைட்!" என்று சொல்லி அந்த உரையாடலில் இருந்து நழுவி செல்ல முயன்றாள் சந்தனா.
"ஏய் ஃபெதரு! அப்டியே மொபைல வச்சுட்டு பாதியில விட்டுட்டுப் போன.... நான் இப்பவே கிளம்பி அங்க வர வேண்டியதா இருக்கும்! இவனுக்கு வீட்ல சொல்றதுக்கு எதுவும் காரணம் கெடக்காதுன்னு நினைக்காத!"
"இந்த வார ப்யூட்டி பார்லர் அக்கௌண்ட்ஸ தூக்கிட்டு வருவேன். என்னன்னு தெரியல அங்கிள்.... இந்த ஒரு கடையில மட்டும் லாபம் சரியா வரல; அதான்
கடைய நடத்துறதுல எங்க தப்பு இருக்குன்னு லஷ்மியோட ஐடியா கேக்கலாம்னு வந்தேன்னு சொல்லுவேன். ஒழுங்கா நான் கேட்டத குடு!" என்று மெதுவான ஆனால் தெளிவான குரலில்
கேட்டவனிடம்,
"ஐயோ.... ஏன்டா என்னைய இப்டி படுத்துற லூசுப்பயலே! நேர்ல பார்க்குறப்ப நீ கேட்டத தந்து தொலையுறேன். இப்ப ஃபோன வச்சுட்டு போய் படு! குட்நைட்!" என்று சொல்லி விட்டு அலைபேசியில் அவனது காலை கட் செய்தாள் சந்தனா.
"நீ எங்கிட்ட முழுசா வந்துடுவங்குற நம்பிக்கை இன்னும் மனசுல தோணவே மாட்டேங்குதே லஷ்மி! இந்த பயம் எனக்கு எப்படா சரியாகும்? நாம ரொம்ப பக்கத்துல பக்கத்துல இருக்குறதுக்கு என்ன செய்றதுன்னு ஒரு வழிய உடனே யோசிக்கணும் போலிருக்கே லஷ்மி?" என்று போன்காலை கட் செய்த பிறகும் அவளிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்த கதிர் எழுந்து தன்னுடைய படுக்கைக்கு சென்றான்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro