Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 28

காலை அட்டெண்ட் செய்து, "ஹலோ.... என்னடா லஷ்மி திடீர்னு போனெல்லாம்?" என்று அவளிடம் கதிர் கேட்டது தான் தாமதம்.....

லாரியிலிருந்து மூட்டையாக கொண்டு வரும் காய்களை கடையில் வந்து மூட்டையைப் பிரித்துக் கொட்டிக் கவிழ்ப்பது போல ஒரு கூடை நிறைய அவனுக்கென சேர்த்து வைத்திருந்த வசவுகளை அவனிடம் கொட்டி தீர்த்து விட்டாள் சந்தனா.

"தண்டக் கருமாந்திரமே.... தூங்குறப்ப தான் போன எடுக்க மாட்ட; காலையில முழிச்சவுடனேவாச்சு என்னைய கூப்டணும்னு அறிவு இல்ல உனக்கு? எந்நேரமும் கையில வச்சுட்டு, அதப் பாத்துட்டே இருக்காத உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு? ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன வீட்ல வாங்கி வைக்க வேண்டியதுதான?
மணி எட்டு ஆகப்போகுது! இவ்ளோ நேரமா மொபைல்ல என் மிஸ்டு கால்ஸ கூடப் பாக்காம என்னடா பண்ணிட்டு இருந்த?" என்று கேட்டவளிடம் ஆச்சரியமான குரலில்,

"மிஸ்டு கால்ஸா........ எனக்கு நீ தந்தியா? ஒரு நிமிஷம் இரு!" என்று சொன்னவன் அவசர அவசரமாக அவனது அலைபேசியை செக் செய்ய இரவு ஒன்றரை மணியிலிருந்து காலை வரை அவனுக்கு அவளிடமிருந்து இருபத்தோரு கால்கள் வந்திருந்தன.

அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினால் அளவற்ற மகிழ்ச்சியும், கூடவே முழுஆண்டு தேர்விலும் இதேயே வாங்க வேண்டுமே என்ற புதிய பொறுப்பும் வருவது போல கதிருக்கு லஷ்மி தன்னை இத்தனை தடவை அழைத்திருக்கிறாள் என்பதில் மிதமிஞ்சிய மகிழ்ச்சியும், இப்போது அவளுடைய கோபத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற புதிய
யோசனையும் தலை மேல் வந்து அமர்ந்து கொண்டது.

"கட.....வுளே! இவ கையில இப்ப மட்டும் கிடைச்சேன்? இருக்குற கோபத்துல நம்மள பிச்சு பிச்சு போட்டுடுவாளே? நம்ம சூபொ இவ்ளோ கால் அடிக்குற வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்த?" என்று அவனை அவனே கேட்டுக் கொண்டு நிஜமாக அவளுடைய கோபத்தை நினைத்துப் பயந்தான் கதிர்.

"மன்னிச்சிடு லஷ்மி! இத்தன வருஷத்துல ராத்திரில யாரும் எனக்கு கால் பண்ணி கூப்ட்டு பேசுனதேயில்ல! நீ சொன்ன மாதிரி அத வச்சு ஏதாவது வேல இருந்தா தான எந்நேரமும் கையில வச்சுட்டு, அதப் பாத்துட்டே இருக்குறதுக்கு? எனக்கு இதுவரைக்கும் அந்த தேவையே வந்ததில்ல லஷ்மி! பத்து நிமிஷத்துக்கு மேல பேசுறதுன்னா எங்கூட கல்பனாக்கா பொண்ணு இளமதி தான் பேசுவா..... மத்தபடி யாரும்!" என்று சொன்னவனின் வாக்கியத்தை முடிக்க விடாமல்,

"இனிமே உங்கிட்ட நானும் பத்து நிமிஷத்துக்கு மேல பேசுவேன் ரேஷன்!" என்றாள் சந்தனா.

"வாம்மா! என் வசந்த கோகிலமே..... இனிமே உங்கிட்ட நானும் பேசுவேன் ரேஷன்னு எங்காதுல
குயிலப் போல கூவுறது நீயேதானா? எப்டி யோசிச்சாலும் நீதானா பேசுறதுன்னு எனக்கு சந்தேகமா இருக்கேம்மா? இப்ப என்னைய கழுவி ஊத்துறதுக்காக கூப்ட சரி! அர்த்த ராத்திரில எதுக்கு கூப்ட?" என்று கேட்டான் கதிர்.

"ம்ம்ம்... அது வந்து....! மார்னிங் இங்க சாப்ட வர்றியான்னு கேக்குறதுக்காக தான் கூப்டேன்!" என்று தடுமாறிய குரலில் அவனிடம் சொன்னாள் சந்தனா.

"நிஜமாத்தான் சொல்றியான்னு தெரியல..... உன் வாய்ஸ கேட்டா நீ பேசுறது நிஜம் மாதிரியும் தெரியல!
ஆனாலும் இத கேக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு லஷ்மி! ஆலென் ஸார் பாவம்..... எதுக்கு அப்பப்ப எனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்லி அவர வேற தொந்தரவு பண்ணிக்கிட்டு? நான் சாப்டதுக்கப்புறமே அங்க வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்மா!"

"இத்தன தடவ நீ என்னை கூப்டதுக்கே உங்க வீட்டுக்கு ஒருதடவ வந்துட்டுப் போகணும்! நான் வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் லஷ்மி?" என்று மென்குரலில் கேட்டவனிடம் நேற்று சின்னக்குழந்தை போல சாக்லெட்டை கேட்டு வாங்கி விட்டோம்; இன்று இந்த உலகத்தில் இருக்கும் எந்தப் பொருளை வாங்கி வரச் சொல்லிக் கேட்பது என்று வாழ்நாளில் முதல்முறையாக சந்தனாவிற்கு குழப்பம் ஏற்பட்டது.

ஆலென், சுமலதா, ஜெபா இவர்கள் மூவரில் யார் எந்த நேரம் அவளிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாலும் அவர்களிடம் கேட்பதற்கு சந்தனாவிடம் ஏதாவது ஒரு பொருளுடைய தேவை கண்டிப்பாக இருக்கும்.

அவள் வேலை பார்த்த கடையிலேயே அவளுக்கு தேவைப்படும் நிறைய பொருட்கள் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு அவள் அந்தப் பொருட்களை தந்தை, தாய் இல்லை தம்பியிடமிருந்து தான் வாங்கி வரச் சொல்லி வாங்கிக் கொள்வாள். அவள் அப்படிக் கேட்கும் விலையுயர்ந்த பொருட்கள் அவித்த சோளமாக இருக்கலாம்; இல்லை சுடிதார் நாடாவாக இருக்கலாம்..... அதுவுமில்லையென்றால் அவளது உதடுகளுக்குப் பயன்படும் லிப் பாமாக கூட இருக்கலாம்!

எனக்கு வேண்டுமென்பதை வாங்கித்தர என்னுடைய குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற திருப்தி அவளுக்கு! அவள் கேட்டதை வாங்கித் தந்த நிறைவு அவளது குடும்பத்தினருக்கு; இப்படியான ஒரு அன்பு தான் ஆலென், சுமலதா, சந்தனா, ஜெபா நால்வரையும் ஒரே வீட்டிற்குள் இன்னமும் கட்டி வைத்திருந்தது.

இதில் இன்னொருவனும் புதிதாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு நின்ற போது ஏற்பட்ட திகைப்பு தான் அவளுக்கு இன்னும் போகவில்லை.

"இப்டி திடீர்னு நீ எங்கிட்ட என்ன வேணும்னு கேட்டா எனக்கு ஒண்ணும் தோணலையே ரேஷன்? நேத்தே உங்கிட்ட இருந்து நான் சாக்லேட் வாங்கிட்டேன் வேற.......
நிஜமாவே இப்போதைக்கு எனக்கு ஒண்ணும் தேவையில்ல!" என்று அவனிடம் சொன்னாள் சந்தனா.

"அதான.....? எங்கையில இருந்து ஒரு பொருள நீ வாங்கிக்கிட்டா தான் ஊரு அழிஞ்சுடுமே?
எங்கிட்ட இருந்து வேலை வேண்டாம்; பணம் வேண்டாம்;  பொருள் வேண்டாம்...... ஒரு ஸ்வீட் பாக்ஸ் கூட வேண்டாம்;

"நாளைக்கே உங்க அம்மா உங்கிட்ட இவன் உனக்கு வேண்டாம்னு சொன்னா நானும் உனக்கு வேண்டாம்! அப்டிதான சந்தானலஷ்மி?" என்று அழுத்தமான குரலில் கேட்டவனிடம் கோபமாக கத்துவதற்கு முன், "இந்தா ஆரம்பிச்சுட்டான்டா!" என்று நினைத்து அவளுக்குள்ளாகவே நொந்து கொண்டாள் சந்தனா.

"லூசுப்பயலே; ஏன்டா திரும்ப திரும்ப இப்டியே பேசிட்டு இருக்க? யார் என்ன சொன்னாலும் நீ எனக்கு வேணும். இதுவரைக்கும் எப்டியோ எனக்குத் தெரியல ரேஷன்; பட் உன்னோட ட்ரூ லவ்வ பார்த்த பிறகு, எனக்கு எவ்ளோ கில்டியா இருக்கு தெரியுமா? இவன் இந்த அளவுக்கு நம்மள விரும்புறதுக்கு அப்டி நம்ம என்ன செஞ்சுட்டோம்னு தோணுது. எங்க என்னை மிஸ் பண்ணிடுவோமோங்குற பயத்துலயே நீ பேசுறது எனக்கு சிரிப்பா வருதுடா!

"நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு நான்  மோஸ்ட் வாண்டட் பிகரும் கிடையாது! இப்போதைக்கு
உன்னை விட்டா என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேற யாருமேயில்ல! என்னவோ பத்து, பன்னண்டு பேர் எனக்காக லைன்ல நிக்குற மாதிரி, நீ எப்போ பார்த்தாலும் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?"

"உன்னைய மாதிரி எடுத்த எடுப்புலயே ஹக், கிஸ்னு நான் பேசாம இருக்கலாம்..... பட் எனக்கு உன் மேல தனியா ஒரு அக்கறை வந்துடுச்சுடா! எனக்கு தெரிஞ்ச விதத்துல உங்கிட்ட அதக் காட்டுவேன்; எந்த காரணத்துக்காகவும் நான்
உன்னை விட்டுட மாட்டேன்..... அம்மா மேல ப்ராமிஸ்! இது எப்பவும் போல கை மேல கை வைக்குற ப்ராமிஸ் இல்ல ரேஷன்! ஹோல் ஹார்ட்டட் ப்ராமிஸ்! சீக்கிரமா வீட்டுக்கு வா.....!" என்று சொன்னவளிடம் சற்றே அமைதியடைந்த மனத்துடன்,

"சரி! உனக்கு எங்கிட்ட கேக்க ஒண்ணுமில்லன்னாலும், எனக்கு உங்கிட்ட குடுக்குறதுக்கு நிறைய விஷயம் இருக்கு! நான் எனக்குப் பிடிச்சத உனக்காக வாங்கிட்டு வர்றேன் லஷ்மி! அத நீ கண்டிப்பா எங்கிட்ட இருந்து வாங்கிக்கணும் சரியா?" என்று அவளிடம் சொல்லி விட்டு அவளது போன்காலை கட் செய்தான் கதிர்.

"குடுக்குறதுக்கு நிறைய விஷயமா? அய்யய்யோ கர்த்தரே இந்த முக்காசைஸூ திமிங்கலம் பேச்சாலயே நம்மள பயமுறுத்துறான்..... தைரியமா இரு சந்து! எது வந்தாலும் பாத்துக்கலாம்!" என்று அவளுக்கு அவளே தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள் சந்தனா.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro