
❤ சிறுநகை 23
"ஸார் எழுந்திரிங்க! சீக்கிரமா வீட்டுக்கு கெளம்பணும்னு சொல்லிட்டு இப்டி தூங்கிட்டு இருக்கீங்க!" என்று சொல்லி தன்னை உலுக்கி எழுப்பிய கதிரை அரைத்தூக்கத்தில் பார்த்த ஆலென், அந்த அறையில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தார்.
ஆறரை ஆக இன்னும் ஒரு நிமிடம் இருந்தது. அவர் எழுந்து அமர்ந்த நேரத்தில் சரியாக அவருடைய அலாரமும் சிணுங்கியது.
உங்களை எழுப்பவதற்கு முதலில் நான் எழுந்திரிக்க வேண்டுமே என்று நேற்று அவரிடம் சொன்னவன், இன்று குளித்து, நெற்றியில் சின்னதாக ஒரு விபூதி கீற்று வைத்து, அலுவலகம் செல்பவன் போல் ஆலிவ் க்ரீன் அண்ட் ப்ரௌன் நிற கேஷுவல் வியர் அணிந்து முழுதாய் தயாராகித் தான் அவரை எழுப்பவே வந்திருந்தான்.
"எப்ப கதிர் ரெடியான? எப்ப எழுந்திரிச்ச? எங்கயும் வெளிய போறியா? இல்ல என்னை கொண்டு வந்து விடுறதுக்குத் தான் இவ்ளோ டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு நிக்குறியா? மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு ஸ்பீடு ப்ரேக்கர் கூட இல்லாம சும்மா ஹைவே ரோடு மாதிரி இருக்கியேடா? யூ காட் அ நைஸ் பிஸிக் மேன்!" என்று அவனை சிலாகித்தவரிடம்,
"தேங்க்ஸ் ஸார்! காலையில சீக்கிரமா எழுப்பி விடச் சொல்லி
நைட்டே அம்மாட்ட சொல்லிட்டு படுத்தேன்! அவங்க தான் போன் பண்ணி என்னை எழுப்பி விட்டாங்க. இன்னிக்கு காலைல உங்க வீட்ல வந்து பேசி முடிச்சுட்டு, அப்டியே நம்ம கடைங்களுக்கும் ஒரு விஸிட் போயிட்டு வரணும் ஸார்! அதான் சீக்கிரத்துல ரெடியாகிட்டேன். நீங்களும் போய் கொஞ்சம் ப்ரெஷ்ஷாகிட்டு வாங்க. நாம கிளம்பலாம்!" என்று சொல்லி மந்தமாக நின்று கொண்டிருந்த அவரை துரிதப்படுத்தினான் கதிர்.
காரில் அவனோடு வரும் போது ஆலென் அவனிடம் புலம்பிக் கொண்டே வந்தார்.
"கதிர்.... நீ நம்ம வீட்ல வேலை செஞ்ச பையன்னு அவளுக்கு தெரிஞ்சா இரண்டாவது கேள்வியே கேக்காம அப்டியே உன் இடுப்புல எட்டி மிதிச்சி வெளிய தள்ளிருவாடா!" என்று சொன்னவரை பார்த்து முறைத்தவன்,
"அப்ப சொல்லாதீங்க! நான் வெட்டித்தனமா ஊரு சுத்துறவனா, பொம்பள பொறுக்கியா, சொல்லிக்குற மாதிரி ஒரு தொழில் இல்லாதவனா இருந்தா அந்தம்மா என் இடுப்புல இல்ல.... கழுத்துல கூட ஏறி மிதிக்கட்டும்!"
"உங்க மகளுக்கு தகுதியானவனா இருக்கணும்னா நான் என்ன செய்யணும்னு ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு, யோசிச்சு வளந்துருக்கேன் ஸார் நானு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல உங்க பொண்ணுக்கு இப்ப என்ன கௌரவக் குறைச்சல் வந்துடும்?" என்று ஆலெனிடம் கேட்டான்.
"அதில்ல கதிர்! நாங்க ரெண்டு பேரும் தான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவள எங்க பக்கத்துல சேத்துக்கல. என்னை அவங்க அக்செப்ட் பண்ணிக்கல. ஒரு நல்லது கெட்டதுல எங்களால குடும்பமா போய் நிக்க முடியல...!"
"அதே நிலைமை எங்க பிள்ளைங்களோட வாழ்க்கையிலயும் வர வேண்டாம்; என்னோட சைடு ரிலேஷன்ஷிப்ல யாரையாவது சந்துவுக்கு அலையன்ஸா முடிவு பண்ணுவோம்னு அவ சொன்னா. இந்த கல்யாணம் மூலமா எங்க பக்கத்துல அவளுக்கு சுமூகமான உறவு கிடைக்கணும்னு சுமா எதிர்பார்க்குறா! எனக்கும் அதான் சரின்னு பட்டது! ஏதாவது ஒருபக்கமாவது எங்கள ஒரு குடும்பமா சேத்துக்கணுமே?" என்று தயங்கிய படி அவனிடம் சொன்னார் ஆலென்.
"இந்த முடிவ எடுத்து கல்யாணம் பண்ணி கிழிக்கணும்னா நீங்க அத அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே கிழிச்சிருக்கணும் ஸார்!" என்று அவன் வாயிலிருந்து சற்று கேவலமான வசவை எதிர்பார்த்து தான் காத்திருந்தார். நேற்று இரவு தான் அவரை அவனால் முடிந்த அளவு கிழித்து தொங்க விட்டானே?
"அதென்ன ஸார் நீ மட்டும் எங்களுக்கு வேணும்னு ஒரு குடும்பத்துல ஒத்த ஆள மட்டும் சேத்துக்குறது? எனக்குப் புரியல. நீ மட்டும் தான் வேணும்னு அவங்க சொல்றது இந்த இடத்துல உங்களையா இல்ல உங்க பணத்தையா? இல்ல எதுக்காக கேக்குறேன்னா அவங்களோட சொந்த அண்ணன் பையன் கல்யாணத்துல கலந்துக்க போறதுக்கே உங்க பொண்டாட்டி எப்டி போனாங்கன்னு எனக்குத் தெரியும். அதான் கேட்டேன்!" என்று மிகவும் சீரியஸான குரலில் சொன்ன கதிரிடம்,
"அடச்சை......! ஒங்கிட்ட என்னத்த தான்டா பேசி ஒன்னைய சரிக்கட்டுறது? கல்யாணம் பண்ணி ஒருத்தி கிட்ட நான் இத்தன வருஷமா வாயவே தெறக்காம சரி சரின்னுட்டு போற இம்ச பத்தாது? உங்கிட்டயும் அதேமாதிரி தான் இருக்கணும் போல.....!"
"நம்ம அமைப்பு அப்டி! இதுக்கு மேல ஒண்ணும் முடியாது! நீயாச்சு! அவளாச்சு! ரெண்டு பேரும் முட்டிக்கிறதுல யாரு யார ஜெயிக்குறீங்கன்னு பாப்போம்! என்னைய இங்கயே இறக்கி விட்டுட்டு நீ சீக்கிரம் வீட்டுக்குப் போய்த் தொல!" என்று அவனிடம் சொல்லி விட்டு தன்னுடைய வீடு இருந்த பகுதியில் வீட்டுக்குச் சற்று தூரம் முன்னதாக கதிருடைய காரிலிருந்து இறங்கிக் கொண்டார் ஆலென்.
அவன் கிளம்பிய சற்று நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்தவரிடம்,
"எக்கடிகி வெள்ளி ஒச்சாவு ஆலென்? வாக்கிங்கா....?" (எங்கே போய்விட்டு வந்தீங்க) என்று கேட்டார் சுமலதா.
தன் மனைவியிடம் தலையை ஆட்டிய ஆலென் கதிரை வரவேற்று விட்டு அவரது ஹாலில் அமர்ந்து அன்றைய தினப் பத்திரிக்கையை கையில் எடுத்தார்.
"ஆன்ட்டி.... பேபி உங்களோட டெஸிஷன் பத்தி எங்கிட்ட சொன்னா! எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் குடுங்க. அதுக்குள்ள நீங்க என்கிட்ட இம்ப்ரெஸ் ஆகலன்னா, நான் அப்டியே எழுந்திரிச்சுப் போயிடுறேன்!" என்று சொன்னவனை ஏற இறங்க பார்த்த சுமலதா ஜெபாவிடம் கதிர் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வரச் சொல்லி விட்டு அவனை பேசச் சொன்னார்.
சுமலதாவிடம் பேசிய கதிர் ஆலெனிடம் பேசியது போல் முழுமையாக மனதின் மொழியைப் பேசவில்லை; தன்னுடைய கோபத்தைக் காட்டவில்லை; சண்டை போடவில்லை; வாக்குவாதம் செய்யவில்லை; ஆலெனிடம் எதைக் கேவலம் என்று குறிப்பிட்டானோ அதைத் தான் இப்போது செய்தான். தன்னுடைய சிறப்புகளாக தனது கையில் வைத்திருந்த செல்வத்தை தான் அவனால் சுமலதாவின் முன் பட்டியலிட்டுக் கூற முடிந்தது. அரைமணி நேரத்திற்குள்ளாக சிரித்த முகமாக தன் கணவனின் அருகில் வந்து,
"ஆலென்.... ஈ அப்பாயி சால மஞ்ச்சி பிள்ளா! அதானி குறிஞ்ச்சி நூவு ஏ அனுக்குண்டுனானு?" (இந்தப் பையன் ரொம்ப நல்லவன். அவனைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?) என்று கேட்ட தன் மனைவியிடம் ஆலென் ஒரு வார்த்தை கூட பேசாமல் கைதூக்கி கும்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.
"கேன் ஐ ஹாவ் அ கப் ஆஃப் வாட்டர் ஆன்ட்டி? ரொம்ப தாகமா இருக்கு. நானே உள்ள போய் எடுத்துக்குறேன்!" என்று சுமலதாவிடம் சிரிப்புடன் சொல்லி விட்டு போனவனைப் பார்த்து,
"ஸோ ஸ்வீட்!" என்று மெச்சி அவனுக்குப் பாராட்டு பத்திரம் வழங்கிக் கொண்டிருந்தார் சுமலதா.
"இப்ப எதுக்கு இங்க எழுந்திரிச்சு வந்த? அதுவுமில்லாம அம்மா முன்னால எதுக்கு இப்டி ட்ராமா போட்டுட்டு இருக்க? அவங்க ஓகே சொன்னாலும் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்டா!" என்று பல்லைக் கடித்தபடி அவனிடம் பேசியவளை பாத்திரங்களை வைக்கும் ரேக் அருகில் நகர்த்தியவன் அவளுடைய வாயை தன்னுடைய வாயால் மூடி எதற்காக சமையலறைக்குள் வந்தானோ
அந்த தாகத்தை தணித்துக் கொண்டிருந்தான்.
"......ம்ம்ம், ம்ஹூம்!" என்ற சந்தனாவின் முணங்கலான மறுப்புகளை எல்லாம் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. தன்னுடைய வாயை விட்டு அவைகளை வெளியேற்ற சந்தனாவிற்கு வாய்ப்பும் கொடுக்கவில்லை.
இப்போது தந்த இந்த அவசர முத்தத்தை அன்று போல் சந்தனா ரசிக்கவுமில்லை. முத்தம் பெறவும், தரவும் ஒரு இதமான சூழல், மனமும் உடலும் நெகிழ்ந்திருந்த நிலை இதெல்லாம் வேண்டும் அல்லவா?
தன்னை சுமலதா அந்த வீட்டின் மருமகனாக ஏற்றுக் கொண்டார் என்ற வெற்றிக்களிப்பு அவனுக்கு.... அவனுடைய இயல்பை இந்த அளவிற்கு மறைத்து மாற்றி அன்னையிடம் சம்மதம் வாங்கி விட்டானே என்ற எரிச்சல் அவளுக்கு!
இருவரும் வெவ்வேறு விதமான மனநிலையில் இருக்க அவர்களுடைய இதழ்கள் ஒன்றாய் சேர்ந்திருந்து அங்கு ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்ததைப் போல சற்றே கலவரமாக தான் இருந்தது.
அவனது முதுகில், இடுப்பில், மார்பில் தன்னுடைய நகங்களால் கிள்ளியவளின் நகங்கள் கொடுத்த வலி கூட அவனுக்கு மிகவும் சுகமாக இருந்தது.
தன்னுடைய அவசர முத்தத்தை மனமில்லாமல் முடித்தவன், "கல்யாணத்துக்கு ரெடியாகிக்கோ பேபி!" என்று கிறக்கமாக அவளிடம் சொல்லி உதட்டை குவித்து அவள் மூக்கில் முத்தமிட்டான்.
உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தவன் சுமலதாவிடம்,
"நீங்க பெர்மிஷன் குடுத்தா
பேபிய அவளோட வொர்க்ஸ்பாட்ல நான் ட்ராப் பண்ணிடுறேன் ஆன்ட்டி!" என்று சொன்ன வாக்கியத்தில் ஆன்ட்டி, பேபி, வொர்க்ஸ்பாட் என்ற வார்த்தைகள் சுமலதாவின் உள்ளத்தை குளிர வைத்தன.
"நல்லா கூட்டிட்டுப் போங்க மிஸ்டர் ரேஷ்! சந்துவ ட்ராப் பண்ண, பிக்கப் பண்ணன்னு இனிமே நீங்க அடிக்கடி வீட்டுக்கு வரணும்!" என்று சொல்லி விட்டு ஜெபா செய்து தந்திருந்த காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை சீக்கிரமாக வேலைக்கு செல்ல தயாராகச் சொன்னார்.
"நான் இன்னிக்கு லீவ் போடப் போறேன்மா! நான் வேலைக்குப் போகல!" என்று தரையில் பாதத்தை அழுந்தப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம்,
"நோ வொரிஸ் பேபி! வா நாம நம்ம ஜ்வல்லரிக்குப் போயிட்டு வரலாம்! மேரேஜ் பத்தி பேச வந்துட்டு உனக்கு நான் ஒண்ணும் வாங்கிட்டும் வரல! இப்ப போய் உனக்குப் பிடிச்சத எடுத்துட்டு வரலாம்!" என்று அவளிடம் சொன்னான் கதிர்.
ஜெபாவுக்கும், ஆலெனுக்கும் அங்கு நின்று கொண்டிருப்பது மூச்சு முட்டுவது போலிருந்தது. அந்த அளவிற்கு கதிரின் பேச்சில் காதல் வழிந்தது. நேற்று கூண்டில் இருந்து வெளியேறும் பசி கொண்ட சிங்கம் போல் தன் மீது பாய்ந்தவன் இவனே தானா என்று அவருக்கு சந்தேகமாக இருந்தது. நடிப்புத் துறையில் கரைதேர்ந்த சுமலதா கதிரின் நடிப்பை நடிப்பென்று அறியாமல் பால்கனியில் அமர்ந்து படம் பார்க்கும் பார்வையாளர் போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"மாம்.... நான் கிளம்புறேன்!" என்று சொன்ன ஜெபாவிடம்,
"இரு ஜெபா! சந்துவையும் உன்னோட கூட்டிட்டுப் போயிடு!" என்று ஆலென் சொல்ல அங்கு இரண்டு பேர் அவரை ஒரு நேரத்தில் முறைத்துக் கொண்டிருந்தனர்.
"நீ கிளம்பு ஜெபா.... சந்து மிஸ்டர் ரேஷ் கூட கிளம்பட்டும்! அவ இன்னுங்கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்க போறவரோட வெளிய போறா! அப்ப கார்ல போனா தான் ஹேர்ஸ்டைல் கலையாம போக முடியும். அத விட்டுட்டு ஜெபாவோட அவள பைக்ல அனுப்புறேங்குறியே? நீ கொஞ்சங்கூட ரொமான்டிக்கா இருக்க மாட்டியா ஆலென்?" என்று சிரிப்புடன் கேட்ட தன்னுடைய மனைவியின் மீது தோன்றிய கோபத்தை ஆலென் கண்களை மூடி மனதிற்குள்ளாக கட்டுப்படுத்தினார்.
"சுமா சந்து முதல்ல உங்கிட்ட இவரப் பத்தி சொன்னப்ப முடியவே முடியாது, நான் சொல்ற மாப்பிள்ளயத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன! இப்ப இவர் வந்து உங்கிட்ட பேசுனவுடனே நம்ம மோள அவர் கார்ல கிளம்பி அவ வேலைக்குப் போகச் சொல்ற! இப்பயாவது நீ என்ன நினைக்குறம்மா? இவரக் கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு விருப்பமான்னு ஒருவார்த்த அவ கிட்ட கேக்க மாட்டியா நீ?" என்று கொதிக்கும் குரலில் கேட்டவரிடம் அலட்சியமாக,
"எந்துக்கு அடுகாலி (எதுக்கு கேக்கணும்) ஆலென்? மிஸ்டர் ரேஷ் அவளுக்குப் பிடிச்ச பையன் தானே? நீயே பாத்த தான? இவர் எவ்ளோ ஸ்மார்ட்டா பேசுறாரு? ஒரு பக்க டயலாக்க நாலு வார்த்தையில செப்தானுங்குற மாதிரி எவ்ளோ க்ரிஸ்பா பேசுறாரு; அத விட இவங்க ரெண்டு பேரோட மேட்சிங்க பாரு! மேட் ஃபார் ஈச் அதர்ங்குற மாதிரியில்ல? இந்த மாதிரி ஹேண்ட்சம்மான ஒரு மருமகன் கிடைக்கிறதுக்கு நீ குடுத்து வச்சுருக்கணும். மிஸ்டர் ரேஷ்.... உங்கப்பா அம்மாட்ட நீங்க பேசி அவங்கள இங்க வரச் சொல்லுங்க. நம்ம ஒரு நாள்ல உங்க என்கேஜ்மெண்ட்ட க்ராண்டா பண்ணிக்கலாம்!" என்று கதிரிடம் சொன்னார் சுமலதா.
"சந்து நீ தான் இன்னிக்கு வேலைக்குப் போகலைன்னு சொல்லிட்டியே? பர்ஸ்ட் டைம் இவரோட வெளிய போறப்ப கொஞ்சம் ப்ரெசண்டபிளா கிளம்பு. உள்ள போய் சேன்ஜ் பண்ணிக்கோ! போ!" என்று சொன்ன தாயின் வார்த்தைக்கு தலையாட்டி விட்டு அங்கிருந்த காலிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் செல்வதற்காக வந்தாள் சந்தனா.
தனக்கும் ஹாலில் நடக்கும் நிகழ்வுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்ற மாதிரியான பாவத்தில் நின்ற தன்னுடைய அக்காளை உலுக்கிய ஜெபா அவளிடம்,
"ஏதாவது சொல்லு சந்து! உன் ஃபேஸ் ரியாக்ஷன பார்த்தாலே எனக்குப் பயமாயிருக்கு. ஏதோ நாளைக்கு வெட்டப்போற ஆட இன்னிக்கு லாரியில ஏத்திட்டுப் போற மாதிரி திருதிருன்னு முழிச்சுட்டு இருக்க......!"
"இதெல்லாம் நம்ம அம்மா கண்ணுல தெரியலயா? இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்காங்களா?
கதிர்ணாவ உனக்கு பிடிச்சுருக்கு, பிடிக்கல.... இல்ல உனக்கு கொஞ்சம் டைம் வேணும்; அவர் கூட கொஞ்சம் பேசணும்! இப்டி எதுவுமே சொல்லாம நீ பாட்டுல கிச்சன் முன்னால நின்னுட்டு இருந்தன்னா என்ன அர்த்தம்?" என்று மெதுவான குரலில் அவளிடம் அவசர அவசரமாக பேசிய ஜெபாவை பார்த்துப் புன்னகைத்தவள்,
"மறைக்க வேண்டியத மறைச்சு, சொல்ல வேண்டியத சொல்லி அவன் சொன்ன மாதிரியே என்னை ஜெயிச்சுட்டான்டா! இனிமே என் லைஃப் டைம் முழுசும் நான் அவனுக்கான ஸ்லேவ் அவ்ளோதான்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய கையிலிருந்த ட்ரேவை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றாள் சந்தனா.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro