Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 14

"இங்க வந்ததுல இருந்து ரொம்ப உளறிட்டே இருக்கீங்களே பாஸ்? உங்களோட ஆர்ட் வொர்க்ஸ் நல்ல மூவிங்ல இருக்கு. ஓகேதான்..... ஆனா ஒரு ஸ்டெப்லைஸ்டான இன்கம் எப்பவும் வரணும்னு தான நாம இத்தன பிஸினஸ செட் பண்ணுனோம்? அது எல்லாத்தையுமே என்ட்ட தூக்கி குடுத்துடுறேன்னு சொல்றீங்க? இப்டி ஸடனா யோசிச்சு பெரிய டெஸிஷன்ஸ்லாம் எடுக்காதீங்க பாஸ்..... ப்ளீஸ்!" என்று சொன்ன சஞ்சீவின் படுக்கையறை குழல் விளக்கின் வெளிச்சம் தன் கண்களைக் கூச வைக்கிறதென்று நினைத்து உச்சுக்கொட்டி விட்டு தன் கைக்குட்டையை எடுத்து முகத்தை வெளிச்சம் படாமல் மூடிவிட்டு கட்டிலில் கால் ஆட்டிக்கொண்டு மல்லாக்கப் படுத்திருந்தான் கதிர்.

"கண்ண மூடியாச்சு; கால ஆட்ட ஆரம்பிச்சாச்சு. ஆர்ட்டிஸ்ட் ரேஷ் அவர்களே....... அப்டியே ஏகாந்த உணர்வுக்கு போயிட்டிங்க போலிருக்கு.....!" என்று கேட்ட சஞ்சீவிடம் பதிலொன்றும் பேசாமல் சற்றே சப்தம் எழுப்பி சிரித்தான் பெரியவன்.

"சம்பந்தேயில்லாம இப்ப சிரிச்சா என்ன அர்த்தம்? ஏதாவது புதுசா இன்ஸ்பிரேஷன புடிச்சுட்டீங்களா என்ன?" என்று கேட்ட சஞ்சீவின் கேள்வியில் சூடாகி கைக்குட்டையை முகத்திலிருந்து சற்று விலக்கி விட்டு முறைத்தவன்,

"ஏன்டா.... எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம்னா அது வரையறது மட்டுந்தான்னு முடிவே பண்ணிட்டியா நீ? அதத்தாண்டியும் நிறைய விஷயம் இருக்குடா! நான் இன்னிக்கு அவ வீட்ல தான்டா நைட் சாப்பாடு சாப்டேன். சாம்பார், புடலங்கா கூட்டு, கேரட் பீன்ஸ் போட்டு பொரியல், மீன் வறுவல், நுங்கு பாயாசம் இத்தனை மெனு இருந்தது தெரியுமா? இதுல ஹைலைட் என்னன்னா அவ.... அதுதான்டா அந்த சூனியபொம்ம
ஆலென் ஸாருக்கு வெங்காயத்தல்லாம் வெட்டிக் குடுத்து உதவி செஞ்சாளாம்டா...."

"என்னால நம்பவே முடியல தெரியுமா சஞ்சீவ்..... அவ ஒவ்வொரு ஐயிட்டமா எடுத்து என் இலையில வைக்குறப்ப ஐயயோ இதுல கெரஸின கலந்துருப்பாளோ, அதுல சுண்ணாம்ப சேர்த்து வச்சு இருப்பாளோன்னு நினைச்சு மனசு படக்கு படக்குன்னு அடிச்சுக்குது. ஆனா கடைசி வரைக்கும் அவ சாப்பாட்ட சாப்ட்டு எனக்கு ஒண்ணுமே ஆகலடா! சாப்பாடும்  ரொம்ப டேஸ்டா இருந்த மாதிரி ஒரு திருப்தி..... நான் ஏகாந்தமா இருக்குறதுக்கு இதுக்கு மேல வேற ஏதாவது காரணம் வேணுமாடா? "

"இப்டி ஒரு தொந்தரவுமில்லாம அவ பக்கத்துல ஒக்காந்து ரசிச்சு சாப்டேன்...... இது எத்தன வருஷ கனவு தெரியுமாடா? இன்னும் அந்த மாஜி ஹீரோயினம்மா ஊருல இருந்து வரவேண்டியது மட்டும் தான் பாக்கி! வந்து அது எங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுச்சுன்னா அடுத்த முஹூர்த்தத்துலயே லஷ்மி என் பொண்டாட்டி! சொல்றதுக்கே எவ்ளோ நல்லா இருக்குல்ல?" என்று கதிர் அவனிடம் கேட்க,

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு! முதல்ல நீங்க எழுந்திரிச்சு உக்காருங்க! இன்னும் அரை மணி நேரத்துல நான் கிளம்பணும். நான் இந்த வீட்ல இருந்து கிளம்புனதும், இத நல்லா நீட் பண்ணி ஹவுஸ் ஓனர்ட்ட இதோட சாவிய குடுக்க வேண்டியது உங்களோட பொறுப்பு சரியா? அரை மணி நேரத்துக்குள்ள எது பேசுறதுனாலும் பேசி முடிங்க! நான் சீக்கிரம் கிளம்பணும்!" என்று கட்டளைக் குரலில் கதிரிடம் சொன்னான் சஞ்சீவ்.

"எது.....ரெண்டே ரெண்டு லக்கேஜ வச்சுட்டு இதுதான் நீ ஊருக்கு கிளம்புற லச்சணமா? எல்லாருக்கும் கிப்ட் வாங்கிருக்கேன்னு வேற சொன்ன? அதெல்லாம் இந்த ரெண்டு லக்கேஜூக்குள்ளயே வருதா? நீ இன்னிக்கு எங்கயும் கிளம்பல. டிக்கெட் காசு போனாப் போட்டும்! நாளைக்கு காலையில நம்ம கார்லயே உன் ஊருக்குப் போலாம்! நான் உங்க தாத்தா போனதுக்கு உங்க வீட்ல வந்து துக்கம் விசாரிக்க வரணும். அதுனால நாம ரெண்டு பேருந்தான் ஊருக்குப் போறோம். டேய்.... இந்த புல் ஹேண்ட போட்டுட்டு என்னால தூங்க முடியாது; ஒன்னோட டீஷர்ட் ஒன்ன நான் போட்டுக்க எடுத்துக்குடுடா!" என்று சஞ்சீவிடம் கேட்டான் கதிர்.

"நீங்க இப்டித்தான் செய்வீங்கன்னு எனக்கு முன்னாலயே தெரியும்; நான் அதுனால தான் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி வைக்கல! உங்க கூட பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் போயிட்டு, எங்க ஊருக்கு கிளம்புற பஸ்ல அப்டியே தவ்வி ஏறிக்குவோம்னு பாத்தேன். அதுக்கும் வேலையில்ல; இப்ப புல்ஹேண்ட் போட்டுட்டு என்ன பொண்ணா பாக்கப் போனீங்க? நான் என்னோட ட்ரெஸ்ஸலாம் உங்களுக்கு தரமாட்டேன். புது டீஷர்ட் ஒண்ணு இருந்தது; அத வேணும்னா தரவா?" என்று கதிரிடம் கேட்டுக் கொண்டே தான் அடுக்கி வைத்திருந்த பெட்டியை திறந்து, அதற்குள் சிறு கசங்கல் கூட இல்லாமல் அயர்ன் செய்து அடுக்கியிருந்த உடைகளின் அடியில் இருந்த புதிய டீஷர்ட்டை எடுத்து கதிரின் பக்கத்தில் வீசினான் சஞ்சீவ்.

"ஏன்டா.... இந்தப் பெட்டியில வெறும் துணி தான் இருக்கு போலிருக்கு! அப்போ பெரியப்பாவுக்கு, சித்தப்பாவுக்கு, அத்தைக்கு, அக்கா, தங்கச்சி, அம்மா, பாட்டிக்கெல்லாம் என்ன தான் வாங்குன?" என்று சஞ்சீவிடம் கேட்ட கதிர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து சஞ்சீவின் இரண்டாவது பெட்டியை தூக்கிப் பார்த்து விட்டு கனமாக இருக்கிறதா என்று பார்த்தவன்,
உதடு பிதுக்கினான்.

"இதுக்குள்ளயும் பெரிசா ஒண்ணுமில்ல போலிருக்கே? எல்லாருக்கும் அப்டி என்ன தான்டா வாங்குன?" என்று கதிர் அனற்ற சஞ்சீவ் எரிச்சலுடன்,

"அடடடா! அம்மா இம்சைய விட உங்க இம்சையில்ல பெரிசா இருக்கு; நேத்து
ஒரு புக் ஷாப்புக்குல்ல நுழைஞ்சேன்; முதல்ல என் கையில கிடைச்ச புக்ல தான் பதினைஞ்சு காப்பி வாங்குனேன். அதத்தான் ஊர்ல எல்லாருக்கும் குடுக்கப்போறேன்....!" என்று சஞ்சீவ் சொல்லவும் கதிர் தன் நண்பனின் செயலை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

"ஏன்டா லூசுப்பயலே..... நீ என்ன புதுசா கத எழுதுற ரைட்டரா? உன் மொத புக்கு பப்ளிஷ் ஆகியிருக்கு! அந்த புக்க பதினைஞ்சு காப்பி வாங்கி வீட்ல இருக்குற அம்புட்டு பேருக்கும் அத நீ குடுக்கப்போறியாக்கும்? என்ன தான் அம்மா சொல்லி செய்யுற வேலையா இருந்தாலும், அதுல ஒரு அக்கற வேண்டாமா?"

"உங்க அம்மா வயசுல இருக்குறவங்க படிக்குற புத்தகத்த ஸ்கூலுக்குப் போற சின்னப் புள்ளங்க.... அதான் உன் தங்கச்சிங்க எப்டிடா படிக்கும்? நாளைக்கு காலையில நம்ம கடை திறந்தவுடனே ஒரு பெரிய பர்ச்சேஸ போடுறோம். எனக்கெல்லாம் டைமில்லங்காத! மரியாதயா எங்கூட வர்ற; எல்லாருக்கும் தேவையான பொருள நானே பாத்து வாங்கித்தர்றேன். எனக்கு உன் குடும்பத்துல மொத்தம் எத்தன பேருங்குற ஹெட் கவுண்ட்ட மட்டும் சொல்றியா?" என்று கேட்ட கதிரிடம்,

"அதெல்லாம் நாளைக்கு காலையில சொல்றேன். நம்ம அத விட முக்கியமான விஷயத்த பத்தி பேசிட்டு இருந்தோம். இங்க வந்து உட்காருங்க! என்ன பிரச்சனை? ஏன் திடீர்னு பிஸினஸ நீயே வச்சுக்கன்னு சொல்றீங்க?" என்று வினவினான் சஞ்சீவ்.

"கண்ணா! நீ பெரிய பிஸினஸ் பேமிலியில இருந்து வந்த பையன்; பொள்ளாச்சி சுத்து வட்டாரத்துல உங்க குடும்பம் ரொம்ப பேமஸ்; ஆனா இதெல்லாம் கருமம் எனக்கு உன்னைய பாத்ததுமே தெரியாதுல்ல... தெரிஞ்சுருந்தா ஒன்னைய எங்கிட்ட நான் வேலைக்கு வர்றியான்னு கேட்டுருக்காம வேற எங்கிட்டாவது அடிச்சுப் பத்திருப்பேன்; உன் சோகத்த நானும், என் சோகத்த நீயுந்தேன் உஃபூ, உஃபூன்னு ஊதி ஆத்தணும்னு மேல இருக்குற ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர் எழுதி வச்சுருக்காரு..... என்ன செய்ய?"

"ஒருபக்கம் உன் மாஸ்டர்ஸ், ஒரு பக்கம் நம்ம பாரின் க்ளையண்ட்ஸ் கிட்ட இன்டராக்ட் பண்ண ப்ரெஞ்ச், ஜெர்மன்னு கத்துக்கிட்டு வருஷத்த ஓட்டிட்டாலும் உனக்குள்ள புகுந்த உன் பிஸினஸ் ஆச எப்போ எப்போன்னு உன்னை துரத்திட்டே தான இருந்துருக்கு? லஷ்மி எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் அம்மாவ இங்க கூட்டிட்டு வரணும்னு ஆசப்படுறாடா!"

"எங்கம்மா வந்தா கூடவே அந்த தறுதலையும் வரும்! நான் இருக்குற வீடு, ஆர்ட் கேலரி மட்டும்னா சரி; அது போக இத்தன தொழிலெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுச்சு! நான் தூங்குறப்ப என்னைப் பெத்தவன் எங்காலுல கல்லக் கட்டி கிணத்துல தூக்கிப் போட்டு எங்கதைய முடிச்சிடுவான்!"

"இத்தன வருஷத்துல அஞ்சு பிஸினஸ கையில வச்சு பார்த்துட்டு இருந்தன்னு ஊருல போயி சொன்னா உங்கம்மாவும் உன்னை நினைச்சு பெருமைப்படுவாங்க. அந்த சொத்துங்க.... இப்ப அதுக்கான வேல்யூவுல எனக்கு நீ அரைப்பங்கு காசு குடு போதும். உங்களாலன்னா அந்த இடத்துல அதே தொழிலா இருந்தாலும், இல்ல வேற தொழிலா இருந்தாலும் அத தொடர்ந்து நடத்த முடியும்! என்னால இத ஒத்தையாளா இழுக்க முடியாதுடா தம்பி!" என்று சொன்ன கதிரின் வாதம் சஞ்சீவின் மனதிற்கு சரியானதாக இருக்க அவன் அரைமனதுடன் தலையாட்டினான்.

"ஆனாலும் நீங்க மிஸ். சந்தனாவுக்காக வாங்குனத போயி பாஸ்......!" என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடைநிறுத்திய கதிர்,

"பாஸ்.... நீங்க ரொம்பல்லாம் மிஸ். சந்தனாவுக்காக ஃபீல் பண்ணாதீங்க பாஸ்; அவங்க ரேன்ஜ்க்கு இப்ப அவங்க ரொம்ப லோஇன்கம் வாங்கிட்டு இருக்குறதால அவங்க அந்தக் கடையில காலெடுத்துக் கூட வைக்க மாட்டாங்களாம். அவங்க குடும்பத்துல இருக்குறவங்களையும் அத பாத்துக்க உட மாட்டாங்களாம். கடைசில கடைங்க எல்லாத்தையும்
பட்டணத்தில் பூதம் படத்துல வர்ற ஜாடி மாதிரி சுத்தல்ல உடுற நெலைமையாகிடுச்சேடா....?" என்று பாவமாக கேட்ட கதிரிடம் சிரித்த முகமாக சஞ்சீவ்,

"டோண்ட் வொர்ரி பாஸ்! இந்த கடைங்க எல்லாத்தையும் நானே உங்ககிட்ட இருந்து வாங்கிக்குறேன். பிஸினஸ்ல அப்பாவோட பங்கு ஷேர்ஸ் எங்கிட்ட தான் இருக்கு. அதுல இருந்து நான் உங்களுக்கு இந்த கடைங்களுக்கான அமௌண்ட்ட செட்டில் பண்ணிடுறேன். பட் ஒருவேள உங்களுக்கு பின்னால லிக்விட் கேஷ் தேவைப்பட்டா அப்போ நீங்க இந்த ஷேர்ஸ எங்கிட்ட மட்டுந்தான் விக்கணும். சரியா?" என்று கறாரான குரலில் பேசினான் சஞ்சீவ்.

சஞ்சீவை ஆச்சரியமாக பார்த்து விட்டு சிரித்த கதிர் அவனிடம்,

"நீ பிஸினஸூக்காவே பொறந்தவன் தான்டா தம்பி! உங்க தாத்தா கரெக்டா தான் ஒன்னைய பத்தி கணிச்சு சொல்லியிருக்காரு.....!" என்றான்.

"ஷட் அப்! நான் பிஸினஸ்க்காக ஒண்ணும் பொறக்கல. வீட்ல என் ஜெனரேஷன்ல ஒரே பையனா பொறந்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு! எங்க டாட் அம்மாவ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. பட் அவங்களோட லவ்வுக்கு வயசு வெறும் ரெண்டே வருஷம் தான்; எப்ப எங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பேமிலிக்குள்ள எங்கம்மா வந்தாங்களோ அப்போலேர்ந்து அவங்களும் பக்கா பிஸினஸ் உமன் ஆகிட்டாங்க! டாட் ஒரு டீ டோட்டலர் தெரியுமா பாஸ்....?"

"ரிட்டயர்மெண்ட் ஏஜ்ல உங்கூட நான் ஜாலியா இருக்கேன்டா; உன் இன்கம்ல காலாட்டிக்கிட்டு உட்கார்ந்து சாப்டுவேன்; ரிலாக்ஸ்டா டென்ஷன் ஃப்ரீயா உன் குழந்தையோட ஒக்காந்து விளையாடுவேன்னு எனக்கு அத்தன ப்ராமிஸஸ பண்ணிக் குடுத்தாரு......!"

"அதெல்லாம் காப்பாத்தாம இப்ப எங்க போனாரு? தொழிலும் சரி, அதுல நம்மளோட இன்வால்வ்மெண்ட்டும் சரி.... ஓரளவுக்கு மேல வளந்துடுச்சுன்னா மொத்தமா மலைப்பாம்பு மாதிரி நம்பள சுருட்டி முழுங்கிட்டு தான் மறுவேலை பாக்குதுங்க.... ச்சை! எதுக்கு இந்த கஷ்டமெல்லாம்?" என்று ஆவேசமாக பேசி விட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் முதுகில் தடவி, தலையை வருடி சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான் கதிர்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro