Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 13

"என்னடா நீ? அட் அ ஸ்ட்ரெச்ல எல்லாத்தையும் ஆலென்ட்ட போட்டு உடைச்சிட்ட! ஐ'ம் ரியல்லி டையர்டு ஆஃப் மேக்கிங் மணி! எவனாவது பணக்காரன கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாமான்னு நினைச்சு தான் உங்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டேன்; பட் நீ என்ன எப்பப்பாரு உங்கிட்ட எங்க பேமிலியில இருக்குற எல்லாரையும் வேலை பார்க்க வைக்குறதுலயே குறியா இருக்க? ஆலென நீ உங்கிட்ட வேலை பாக்க கூப்டக்கூடாது....!" என்று சொன்னவளை ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்த கதிர் அவளிடம்,

"ஏன் கூப்ட்டா என்ன தப்பு? நாளப்பின்ன மிஸஸ் கதிரா ஆகப்போறது உனக்கு அவமானமில்ல; ஆனா நமக்கு சொந்தமான கடைகள்ல உன் வீட்டு ஆளுங்க வேலை பார்க்குறது உனக்கு அவமானம்... அப்டித்தான? ஒருவேள உன் பேமிலியில இருக்குறவங்க எங்கிட்ட வேலை பார்த்தா எங்க நானும் உன்னை மாதிரியே அவங்கள உயிர வாங்குவேன்னு நினைச்சு உனக்குப் பயமாயிருக்கோ லஷ்மி?" என்று கேட்டவனது கண்கள் பளபளப்புடன் மின்ன சந்தனாவிற்கு அவன் கண்களைப் பார்த்த பிறகு அடிவயிற்றைப் பிரட்டியது.

"இங்க பாரு கதிர்..... சில நேரம் நீ அவ்ளோ கொயட்டா இருக்க; ஆனா ரேர் அக்கேஷன்ஸ்ல பசியோட காத்திருக்குற புலி இரையப் பாக்குறது மாதிரியே டெரரா மொறைக்குற; எல்லார்ட்டயும் உள்ள நின்னு ஒருமாதிரி பேசுற; வெளிய வந்து எங்கிட்ட வேற ஒண்ண பேசுற! ஆக்சுவலி நீ நல்லவனா?  கெட்டவனா? என்னை கொஞ்சம் கொஞ்சமா இப்டி சித்ரவதை பண்ணாத! உனக்கு எங்கிட்ட இருந்து என்ன தான் வேணும்?" என்று பயக்குரலில் கேட்ட சந்தனாவிடம்,

"நீ மட்டுந்தான் வேணும்..... மொத்தமா அந்த பழைய சந்தான லஷ்மியாவே எனக்கு நீ வேணும்!" என்றான் கதிர்.

"சரி ஓகே... அதுமட்டுந்தான்னா க்ராண்ட்டட்... எப்டியும் நான் எவனையாவது மேரேஜ் பண்ணிக்கத்தான செய்யணும்? அதுனால உன்னையே பண்ணிக்குறேன் விடு;
அம்மா வந்தவுடனே பாகேஸ் ஆன்ட்டிய இங்க கூட்டிட்டு வந்து பேசு. கல்யாணம் முடிஞ்சும் நாம நாகர்கோவில்ல தான் இருக்கணும்; ஆன்ட்டிய வேணும்னா இங்க கூட்டிட்டு வந்துடு; உங்க அப்பாம்மா, எங்க அப்பாம்மா, ஜெபா எல்லாரையும் நீ தான் பாத்துக்கணும். உன்னை நான் பாத்துக்குறேன்.....!" என்று சொன்னவளின் முன் தன் வலக்கையை நீட்டினான் கதிர்.

"என்ன கை நீட்டுற? சில்ற எதுவும் வேணுமா? ஸாரி நான் பர்ஸ் எடுத்துட்டு வரல!" என்று சொன்னவளின் மண்டையில் ஓங்கி குட்ட தன் இடக்கையை ஓங்கியவன் கையை அந்த போஸிலேயே நிறுத்தி வைத்திருந்தான்.

"உன்னை நான் பார்த்துக்குறேன்னு சொன்னியே? அந்த வார்த்தைய திரும்ப ஒருதடவ சொல்லி எனக்கு ப்ராமிஸ் பண்ணிக் குடு!" என்று கேட்டான்.

"இதுக்குத் தான் கைய நீட்டுனியா? நீ கேட்ட மாதிரி நான் ப்ராமிஸ் பண்றேன். ஆனா நீ உள்ள பேசிட்டு இருக்கும் போது என்னைத் தவிர வேற பொண்ண பார்த்ததேயில்லங்குற மாதிரி
ஆலென் கிட்ட சீன் போட்டியே... அது நிஜமா இல்ல சும்மா அடிச்சு விட்டியான்னு சொல்லு? அப்புறமா நான் ப்ராமிஸ் பண்றேன்!" என்று அவனிடம் சொன்னாள் சந்தனா.

"பதினெட்டு வயசுல எனக்கு மீச முளைச்சதுல இருந்து முப்பது வயசுல மீசையில ஒரு நரைமுடி வந்தது வரைக்கும் நான் கனவுலயும் நிஜத்துலயும் நினைச்ச, ரசிச்ச, திட்டுன, கொஞ்சுன ஒரே பொண்ணு சந்தானலஷ்மி மட்டுந்தான். நானும் உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணனுமா?" என்று கேட்டவனிடம் அவள் யோசனையுடன் கைநீட்ட சடுதியில் இடக்கரத்தால் அவள் இடையைப் பற்றி அவளை தன்னருகில் இழுத்தவன் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கி மிகப் பொறுமையாக அவள் நெற்றியில் தன்னுடைய நெற்றியை இணைத்து அவள் கேட்ட சத்தியத்தை அவளுக்கு செய்து கொடுத்தான்!

"Slave I Remain" என்ற வார்த்தையை அவனையறியாமல் அவனது உதடு முணுமுணுக்க சந்தனாவிற்கு அந்த வார்த்தை அவள் காதுக்குள் போன பஞ்சு உருண்டை காதிலேயே தொக்கி நின்றது போன்ற அவஸ்தையை கொடுத்தது.

இரண்டு நெற்றிகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டால் அவர்களின் கண்கள், கன்னங்கள், இதழ்கள் இவையெல்லாம் பக்கத்து ஊரிலா இருக்கும்? அவனது அடர்த்தியான புருவமும், சற்று சொரசொரப்பான சருமமும், இமைக்கும் வேலையெல்லாம் உன்னைப் பார்த்ததும் நான் மறந்து விட்டேன் என்று சொல்வது போல அவளை கூர் பார்வையால் நோக்கிக் கொண்டிருந்த அவன் கண்களும் அவளை ஏதோ குற்றம் சாட்டுவது போலவே சந்தனாவுக்கு தோன்றியது.

சத்தியமாக அவன் அண்மையிலும், பார்வையிலும் அவளுக்கு காதலோ, மயக்கமோ தோன்றவில்லை. "எதுக்கு இவன் நம்மள இப்டி சாவடிக்குறான்?" என்ற கேள்வியும் பயமும் தான் தோன்றியது.

அவனிடமிருந்து விலகி சீட்டில் ஒழுங்காக சாய்ந்து அமர்ந்தவள்,
"ம்ஹூம்! கதிர் இது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு!" என்றாள் மெல்லிய குரலில்.

"எனக்கு மட்டும் இது கஷ்டமா இல்லங்குறியா? எவனாவது ஒரு ஆம்பளய கல்யாணம் பண்ணிக்கணும், அது நீயா இருந்தாலும் பரவாயில்லன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே? இப்டி எல்லாம் பேச்ச ஒரு நல்ல ஆம்பள கேட்டா அவனுக்கு உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் சுர்ருன்னு ஏறும்! நீ அடிச்சு அடிச்சு எனக்கு இப்ப இதெல்லாம் பழகிடுச்சு! கவலப்படாத!" என்றவனிடம்,

"ஸோ..... நீ எப்டியும் என்னை கல்யாணம் பண்ணியே தீருவ! நான் வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க விடமாட்ட; அப்டித்தானடா ரேஷன்.....? எல்லாரோடயும் ஸ்மூத்தான ரிலேஷன்ஷிப்ல இருப்ப! ஆனா நமக்குள்ள இந்த கோல்டுவார் நடந்துக்கிட்டே இருக்கும்!  இதெல்லாம் எதுக்காக செய்ற கதிர்? நிஜமாவே எனக்குப் புரியல!" என்று சொன்ன சந்தனாவிடம்,

"ம்ப்ச்! புரியலன்னா என்ன அர்த்தம்? இப்பத்தான் ஆரம்பிச்சுருக்கோம். இன்னும் நீ இந்த மாதிரி நிறைய வாங்கணும்னு நாந்தான் அன்னிக்கே உங்கிட்ட சொன்னேன்ல? எல்லா க்ளாஷஷையும் சீக்கிரத்துல சரி பண்ணினா தான அதுக்கப்புறம் நாம லவ் பண்ணி குழந்தைங்க எல்லாம் பெத்துக்க முடியும். ஸோ லெட்ஸ் ஸ்டார்ட் அவர் ஃபைட் அஃபிஷியலி!" என்று உறுதியான குரலில் உரைத்தவனிடம் தலையசைத்தவள்,

"இல்ல! இந்தப் பேச்சால குத்திட்டே இருக்குறது, பழிவாங்குறது இதெல்லாம் நீ சும்மா சொல்ற..... அன்னிக்கு நான் உன் மடியில படுத்தப்போ நீ எவ்ளோ லவ் அண்ட் அஃபெக்ஷனோட எனக்கு ஆறுதல் சொன்ன! ஸோ நான் சின்ன வயசுல உனக்கு செஞ்சத நீ இப்போ எங்கிட்ட திருப்பி செய்யமாட்ட!" என்று அவளுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவளிடம்,

"கண்டிப்பா செய்யத்தான் போறேன் சந்தானலஷ்மி! அத தெளிவா பேசிடுவோம்னு தான் உன்னை இங்க கூட்டிட்டே வந்தேன்; பை த வே அன்னிக்கு நான் உனக்கு ஆறுதல் சொல்லல; உன் கன்னம் எவ்வளவு ஸாஃப்டா இருக்குன்னு தடவிப் பார்த்துட்டு இருந்தேன். சும்மா நேரம்னா விடுவியா? மாட்டல்ல? அதான்.... நீ கொஞ்சம் வீக்கா இருந்த நேரத்துல உன்னை தொட்டு பார்த்துட்டு இருந்தேன்!" என்று அவளிடம் சொன்னான் கதிர்.

"இப்ப நீ சொல்ல வர்றது என்னன்னா.... நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டவுடனே நீ பழசையெல்லாம் எனக்கு திருப்பிக் குடுக்கப்போற. அதுனால தான் வேற எந்தப் பொண்ணையும் இன்னிக்கு வரைக்கும் நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்க; இந்த அவளத் தவிர வேற யாரையும் நினைப்பால கூட எம்பக்கத்துல நிறுத்த முடியலன்னு ஆலென்ட்ட நீ சொன்னதெல்லாம் சும்மா வாயில வட சுட்ட கதை அப்டித்தான?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தவன்,

"அதுவும் நிஜம்; இதுவும் நிஜம்..... உன்னைய மட்டுந்தான் எனக்கு ரொம்ப பிடிக்கவும் செய்யும்! உன்னைய மட்டுந்தான் இந்த உலகத்துலயே நான் ரொம்ப வெறுக்கவும் செய்றேன்!" என்றான் அவளைப் பார்த்தபடி.

"அதெப்டிடா..... உன் கான்செப்டே எனக்குப் புரியலயே; ஒருத்தர ஒண்ணு பிடிக்கணும் இல்ல பிடிக்காம இருக்கணும்; நீ உனக்கு புடிக்கவும் செய்யும், ஆனா புடிக்காதுன்னும் சொல்றியே? உங்கூட இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டு இருந்தா எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும். நான் உள்ள போறேன். நீயும் கெளம்பி உன் வீட்டுக்குப் போ!" என்று அவனிடம் சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கப் போனவளை தடுத்தவன்,

"ஏய்.... இங்க ஒருத்தன் உசுரக் குடுத்து பேசிட்டு இருக்கேன்; அத சரியா காதுல வாங்காம நீ பாட்டுல கெளம்புனா என்னடீ அர்த்தம்? நீ சின்னப்பாப்பாவா இருந்தப்ப என்னை எவ்ளோ அடிச்சாலும் நான் அசராம நின்னு வாங்குனேன்ல? அதேமாதிரி இப்ப நீ நான் குடுக்குறத எல்லாம் திருப்பி வாங்கிக்குற புரியுதா? நான் இன்னிக்கு சஞ்சீவ செண்ட் ஆஃப் பண்றதுக்கு அவங்கூட சேர்ந்து அவன் ஊருக்கு கிளம்புறேன். அங்கருந்து திரும்பி வர்றதுக்கு ரெண்டு நாளாகும். அதுக்குள்ள நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மாவோட சம்மதத்தையும் வாங்கி வச்சிருக்க..... அப்போ தான் சீக்கிரத்துல நான் எங்க அம்மாவ கூட்டிட்டு உங்க வீட்ல வந்து நம்ம கல்யாணத்த பத்தி பேச முடியும். இப்ப கீழ இறங்கிக்குறியா? நான் வீட்டுக்கு கெளம்பணும்!" என்று சொன்னவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவனது காரின் இருக்கையில் இருந்து கீழே இறங்கி அவனை திரும்பிக் கூட பார்க்காமல் தன் வீட்டிற்குள் சென்றாள் சந்தனா.

"நம்ம பேச்சால ஃபெதரு ரொம்ப ஆட்டம் கண்டு போயிருக்கு போலிருக்கே..... நீ இடுப்ப கட்டிப் புடிச்சிக்கிட்டு படுத்துருந்த நேரம் உன் கன்னம் என் உதட்டுக்கு எட்டாமப் போச்சேன்னு நான் எம்புட்டு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்னு உனக்கென்னடீ தெரியும் சூனியபொம்மை? வார்த்தையால உன்னை குத்திக் கிழிச்சுட்டு, அது தாங்காம நீ முகம் சுணங்குனா அந்த வலிய உன்ன விட அதிகமா அனுபவிக்குறவனும் நானாத் தான்டீ இருக்கேன்..... நமக்குள்ள இந்த சண்டையெல்லாம் முடியுற நல்ல நாள் என்னைக்கு தான் வரப்போகுதோ தெரியல...... கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காம நல்லா தூங்கு செல்லம்!" என்று அவளிடம் சொல்வது போல அவனாகப் பேசிக் கொண்டவன் லேசான சிரிப்புடன் காரை அங்கிருந்து கிளப்பி நேராக சஞ்சீவ் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று நிறுத்தினான். தன்னுடைய பாஸை இந்நேரத்தில் தன் வீட்டில் எதிர்பாராத சஞ்சீவ் அவனை தன் வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தான்.

"என்ன பாஸ்..... ரொம்ப பிஸியோ? அன்னிக்கு பார்ல பார்த்ததோட சரி; அதுக்கப்புறம் நான் உங்கள பாக்கவேயில்ல?" என்று கதிரிடம் கேட்டான் சஞ்சீவ்.

"ஏன் பாக்கல? அதுக்குள்ள நீ என்னை மறந்துட்டல்ல? இனிமே நான் எக்கேடு கெட்டுப்போனா உனக்கென்னன்னு இருப்ப அப்டித்தான?" என்று முறைப்புடன் கேட்ட கதிரிடம்,

"ஹலோ பாஸ் கோபத்துல நீங்க என்னென்னத்தயோ ஒளறுறீங்க...? 
திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்! அம்மாவுக்கு ஊர்ல இருக்கிற மத்த ரிலேட்டிவ்ஸ்க்கு கிப்ட் வாங்கணும். அதுனால ரெண்டு நாள் வேலைக்கு வர மாட்டேன்னு நான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேனா இல்லையா? அப்ப நல்லா மண்டைய ஆட்டிட்டு, இப்ப இங்க வந்து செம ரைடு விடுறீங்க?" என்று கேட்ட சஞ்சீவிடம் ஆச்சரியத்துடன்,

"நானாடா உன்னை லீவ் எடுத்துக்கோன்னு சொன்னேன்.  ஸாரிடா நியாபகமே இல்ல; 
மறந்துட்டேன்!" என்று சஞ்சீவிடம் அமைதியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro