Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என்றும் இன்பமே.......

நான் தொடர் எழுதுவதற்கு முன்பு ஒரு சிறு கதை எழுதுகிறேன்....இது பிடித்து இருந்தால் நான் தொடர் கதை எழுதுகிறேன்....

சரி எனது இந்த சிறு கதை சென்ற வாரம் பாண்டியன் ஸட்டோரஸ் பார்த்து அனைவரும் கோபம் கொண்டோம்( நான் மிகவும் கோபம் கொண்டேன்)......தனம் எனக்கு குழந்தை பெற்றெடுக்க ஆசை இல்லை என்று கூறினாள்.... எனக்கு முல்லை இதை செய்து இருக்க வேண்டும் என்று தோன்றியது... அதனால் தான் இது.......

பாண்டியன் ஸட்டோரஸ் வீட்டில் அனைவரும் hall இல் உட்கார்ந்து இருக்கிறார்கள்...... லட்சுமி அம்மா கோபத்தில் தனத்தையும் மூர்த்தியையும் திட்ட..... 
"ஏன் தனம்..... உனக்கு ஒரு துளி கூட ஆசை இல்லைய.... உனக்கு ஒரு புள்ள வேணுமுன்னு..... "என்று கேட்க

தனம் : எனக்கு பிள்ள வேணுமுன்னு ஆசையும் இல்ல, நினைப்பும் இல்ல..... அதுக்கு என்ன அவசியம்....

இதுவரை அமைதியாக இருந்த முல்லை......
" ஏன் அக்கா..... ஏன் இப்படி உங்கள நீங்களே ஏமாத்திக்குறீங்க.... நீங்க சொல்லுறத இவங்க வேணுமுன்னா நம்பலாம்.... ஆன, நான் நம்ப மாட்டேன்...... "

கதிர் : ஏய்.... என்ன சொல்லுற நீ....

முல்லை : சொல்லுறத விட காட்டின தான் உங்க எல்லாருக்கும் புரியும்.... இருங்க.....  ( இவ்வாறு கூறிவிட்டு உள்ளே சென்று தனம் மீனாவிறக்கு வளைகாப்பிற்கு முன் அவள் அனிந்த  வளையலையும் தலையணையை உம் எடுத்து வந்து )   இத பார்த்து சொல்லுங்க அக்கா... உங்களுக்கு அன்த ஆசை இல்லன்னு......

தனம் சற்று தினற  .... லட்சுமி அம்மா " முல்ல நீ என்ன சொல்ல வரன்னு புரியல...... தனம் முல்ல என்ன சொல்லுற?????

தனம் : அத்த அது வந்து.... வந்து.... நா.. நான்....

முல்லை : அத்த அக்கா வந்து ( தனம் அந்த தலையணையை வைத்தால் வைத்து பார்த்து, வகை நிறைய வளையல்களை அணிந்தது என்று அனைத்தையும் கூற அனைவரும் கண் கலங்கினார்கள்) இப்போ சொல்லுங்க அக்கா... உங்க மனசுல ஆசை இல்லாம தான் அப்படி சென்ஜிங்கள..... அக்கா நீங்க ஏன் தயங்குறீங்கன்னு எனக்கு தெரியல.... அக்கா நீங்க குழந்தை வேண்டாமுன்னு சொல்லவும், முடிவு எடுக்கவும் உங்களுக்கும் மாமாவுக்கும் தான் உரிமை இருக்கு ஒரு வேளை இந்த முடிவ உங்க ரெண்டு பேருக்காக எடுத்து இருந்த.... ஆன, அத நீங்க ரெண்டு பேரும் இந்த குடும்பத்துக்காக எடுத்திங்கன்னு சொன்ன அப்போவே அதுல நாங்களும் சம்மந்தம் பட்டு இருக்கோம்.....

கதிர் : ஏன் அண்ணி..... நீங்க எங்களுக்காக உங்க வாழ்க்கைல ஒரு முக்கியமான விஷயத்த வேண்டாமுன்னு முடிவு பன்னீங்க.... அப்போ அது எங்களுக்காக எடுத்த முடிவு அப்படி தான்ன... அப்போ இப்ப அந்த முடிவ  எங்களுக்காக நீங்க மாத்திகலாமுல்ல....

ஜீவா : ஆம்ம  அண்ணி..... சத்தியமா சொல்லுறேன் , இந்த முடிவு பத்தி எனக்கு அப்போவே தெரிந்து இருந்த நான் என்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சு இருக்க மாட்டேன்....

தனம் : ஜீவா என்ன பேசுற நீ....

முல்லை : மாமா சொல்லுறது சரி தான்.... அக்கா நாங்க உங்கள காயப்படுத்த இத செய்ய சொல்ல... உங்கள யாரும் இதுக்கு மேல காயப்படுத்த கூடாதுன்னு தான் சொல்லுறோம்..... தயவு சென்ஜு யோசிக்காதீங்க..... Please அக்கா....

என்று சொல்லி, முல்லை அவர்களது அறைக்கும், கண்ணன் லட்சுமி அம்மாவை அழைத்து செல்ல, கதிர் மூர்த்தி தளத்திடம்

" அண்ண... அண்ணி.... இது வரைக்கும் நான் உங்கள் ரெண்டு கிட்ட ஏதுவும் கேட்டது இல்ல... ஏன்னா என்ன பொறுத்த வரை எங்க அண்ணா அண்ணி எங்களுக்கு எல்லாம் சரியா தான் செய்வாங்க.... அவங்க முடிவு எப்போதும் தப்ப இருக்காதுன்னு....ஆன, நீங்க ஒரு வேளை உங்களுக்கு ஒரு குழந்தை இருந்த நாங்க உங்கள பார்த்துக்க மாட்டோமுன்னோ இல்ல உங்களவிட்டு போய்டுவோமோன்னு பயமா இருந்த .... இப்போ சொல்லுறேனண்ண நம்ம குடும்பம் எப்போவும் பிரியாது...எல்லாரும் ஒன்னா தான் இருப்போம்...நானும் முல்லையும் இந்த குடும்பத்த விட்டுட்டு போக மாட்டோம்...  எப்போவும் உங்க கூட தான்  இருப்போம்... எங்கள நீங்க கேட்காம எல்லாம் சென்ஜு இருக்கிங்க.... இப்போ நாங்க கேட்குறதுக்கு சரின்னு சொன்ன அதைவிட எங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் இருக்கவே முடியாது... Please அண்ண... யோசிங்க அண்ண... " என்று கூறிவிட்டு கதிரும் தனது அறைக்கு சென்றான்.

கதிர் முல்லை அறையில்..... முல்லை கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க....

கதிர் : ஏய்..... என்ன ஆச்சு..... என் அழற...

முல்லை: இல்ல உங்களுக்கு என் மேல் கோவம் இல்லையா...... நான் அக்காகிட்ட அப்படி பேசினதுக்கு....

கதிர் : உனக்கு தப்புன்னு தோணுதா????

முல்லை : இல்ல... ஆன உங்களுக்கு வருத்தம இருக்குமுல்ல...

கதிர் : உண்மைய சொல்லனுமுன்ன இருக்கு ஆன அண்ணி அண்ணகாக வருத்தம்... அவங்க கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியல... ஆன, நீ பேசினது எனக்கு சந்தோஷமா இருந்துச்சு.....

முல்லை : பின்ன என்னங்க..... இந்த விஷயம் நமக்கு தெரியாம இருந்த பரவாயில்ல... ஆன, தெரின்ஜும் நாம ஒன்னும் செய்யாம இருந்த நாம நன்றி கேட்டவங்களாகிடுவோம்... அது தான்...... ஆன,இப்போ யோசிச்ச  அவங்க தயக்கம் புரியுது.....

கதிர் : என்ன சொல்லுற நீ???

முல்லை: ஆம்மாங்க.... இத்தன  வயசுக்கு அப்பறம் நாம எப்பிடி hospital  போகுறது... பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க.... பெரிய மாமா எப்படி இது தாங்கிப்பாரு.... ஒரு வேளை இது சரி வராது ன்னு சொன்ன மாமா எப்படி எடுத்துப்பாரு... இப்படி பல விஷயங்கள் இருக்குமுல்ல.....

கதிர் : நீ சொல்லுறதும் சரி தான்.... சரி பார்ப்போம் என்ன முடிவு எடுக்குறாங்கன்னு..... ஆன, எனக்கு உங்கிட்ட ஒரு சத்தியம் வேணும்.

முல்லை : என்கிட்ட நீங்க அக்கா மாதிரி நாம்மளும் குழந்தை பெ... த்.... து......

கதிர் : இந்த....நான் எப்போவும் அப்படி நினைக்க மாட்டேன்.... எனக்கு அப்படி ஒரு நினைப்பு கூட இல்ல... அண்ணா அண்ணி வாழ்க்கை அவர்களது... நாம வாழ்க்கை நமது... நாம சேர்ந்து எடுக்கிறது தான்.... அப்படி இருக்கும் போது உன்ன கஷ்டபடுத்திர மாதிரி முடிவ நான் எப்படி எடுப்பேன்.....

முல்லை: அப்போ என்னங்க சத்தியம்...?

கதிர் : நாம ரெண்டு பேரும் எப்போவும் அண்ணா அண்ணிக்கு துணைய இருக்கனும்.... என்னைகும் ஆவங்கள  நாம விட்டுட்ட கூடாது சரி... நமக்கு நாளைக்கு குழந்தைங்க பிறந்த கூட....

முல்லை : அது எப்போவும் நடக்காதுங்க....எனக்கு அக்கா மேல கோவம் இருந்துச்சு....ஏன் தெரியுமா....உங்கள எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சதால இல்ல.....என்கிட்ட ஜுவா மாமாவின் பத்தி சொல்லிருக்கலாமேன்னு...அத விட உங்களுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரியும்....இருந்தும் என்ன உங்களுக்கு கட்டுபடுத்தி கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்களேன்னு தான் எனக்கு வருத்தம்.....ஆன, இப்போ என்ன உயிர் நினைக்கிற உங்கள மாதிரி ஒருத்தற கொடுத்த அவங்க மேல எப்படிங்க கோபம் வரும்.... சரி, இப்போ சொல்லுறேன்ங்க.....நாம ரெண்டு பேரும் கடைசி வரை அவங்க கூட தான் இருப்போம்.... போதுமா.... நம்ம குழந்தைங்க அவங்களுக்ககும் குழந்தைங்க தான்..... போதுமா...... ஆன, ஒரு சந்தேகம்????

கதிர் : என்ன குழந்தைங்கன்னு சொன்னதா????

முல்லை : ஹம்...

கதிர் முல்லை கடைபிடித்து " எனக்கு நாலு பிள்ளைங்க வேணும் முல்ல... அதுலயும் பெண் குழந்தை வேணும்..... உன்ன மாதிரி.... "

முல்லை : நிஜமா வா????

கதிர் : ஏன் நம்ப மாட்டிய?

முல்லை அவன் கை மேல் அவள் கை வைத்து :  " உங்க மேல நான் எப்போவும் சந்தேகம் பட மாட்டேன்... என்ன என்னைக்கு நீங்க எனக்காக  ஜெயிலுக்கு போன்னீங்களோ.... என்னால அவமானப்பட்டிங்களோ... எனக்காக உங்கள மாத்திக்க ஆரம்பிச்சுட்டிங்களோ.... அப்போவே முடிவு பன்னிடேன்... நீங்க தான் எனக்கு எல்லாம்... உங்க வார்த்த என்னொடது..... நான் உங்கள நம்புறேன்.... முலுசா.... போதுமா....

கதிர் " நீ சொன்னது எனக்கு இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி.... நீ என்ன விட்டு எப்போவும் போகூடாது..... சரியா? "

முல்லை " போக மாட்டேன்... எங்கேயும்.. எப்போவும். சரி தூங்கலாம?"

கதிர் :  நான் ஒன்னு கேட்கவ. நாளைக்கு கோயிலுக்கு போலாம..

முல்லை : ஏங்க.... எதாவது வேண்டுதல...???? நீங்க ரொம்ப கடவுள நம்ப மாட்டியலே?

கதிர் : நான் நம்ப வாழ்க்கைய தொடங்கலாமுன்னு ஆசை படுறேன்..... நாளை யிலிருந்து..... அதான் கோயிலுக்கு போய் சாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்களாமுன்னு..... உனக்கும் சரி தான..!

முல்லை : உங்க விருப்பம் என்னோட விருப்பம்...

கதிர் : அப்போ உனக்கு ஆசை இல்லையாக்கும்?

முல்லை : என்னங்க இப்படி கேட்கிறீங்க.... ஆசை இல்லாமல  எங்க அம்மா சாமிக்கிட்ட வேண்டினதுக்கு feel பன்னிட்டு இருந்தேனாக்கும். சரி நாளைக்கு நாம கோயிலுக்கு போகலாம்.... இப்போ வாங்க படுக்கலாம்....

என்று சொல்லி இருவரும் உறங்க சென்று விட்டனர்.....

அடுத்த நாள் காலை அனைவரும் hall யில் அமர்ந்து இருக்க..... தினமும் மூர்த்தியும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருக்க.... இதை கவனித்த  முல்லை

"என்ன அக்கா.... ஏன் ரெண்டு பேரும் மாறி மாறி பார்த்துட்டு இருக்கீங்க.... என்ன விஷயம்.... "

ஜுவா : என்ன ணா.....

மூர்த்தி : டேய் கண்ணா.... அம்மாவ கூட்டிட்டு வா டா  என்று அவர் கூற கண்ணனும் லட்சுமி அம்மாவை அழைத்து வந்தான்.

மூர்த்தி : நான் இது வரைக்கும் இந்த குடும்பத்துக்காக தான் எல்லாம் பன்னேன். ஆன, நான் அன்னைக்கு எடுத்த முடிவு இன்னைக்கு உங்க எல்லாரையும் இவ்வளவு கஷ்டத்தக் கொடுக்குமுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு........ சென்ஜ தப்ப திருத்திக்க வாய்ப்பு இருக்கு..... அத நான் பயன்படுத்த முடிவு பன்னிடேன். நானும் தினமும் ஆஸ்பெத்தரிக்கு போலாமுன்னு முடிவு பன்னிடோம்.... நீங்க என்னமா சொல்லுறீங்க?

அனைவரின் முகத்திலும் ஆனந்தம் கூத்தாட... லட்சுமி அம்மா

" மூர்த்தி நான் உன்னையும் தனத்தையும் நான் என்னோட உயிருக்கும் மேல பார்க்கிறேன்.... ஏன் தெரியுமா இந்த குடும்பம் இன்னைக்கு நல்ல இருக்க காரணம் நீ தான்.... ஆன, நம்ம குடும்பம் நல்லதுக்காக இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுக்கு அநியாயம் பன்ன அந்த பாவம் உனக்கு மட்டும் இல்லடா உன் தம்பிகளுக்கும் தான்... அப்பறம் நீ சென்ஜ நல்லதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும்.... எப்படியோ இப்போவாச்சும் குழந்தை பத்தி யோசிச்சிங்களே அதுவே சந்தோஷம் டா.... "

முல்லை : சரியா சொன்னீங்க அத்த..... சரி அப்போ ஜகா அண்ணனுக்கு  phoneபன்னி இந்த நல்ல விஷயத்த சொல்லிடனும். சரி அதுக்கு முன்னாடி எல்லாரும் கோயிலுக்கு போலாம்.....

ஜுவா : நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. நான் இன்த நல்ல விஷயத்த குமரேசன் மாமாவுக்கு சொல்லிட்டு கடைலையே இருக்கேன் அவங்களுக்கு உதவியா....

கண்ணன் : சூப்பர். வாங்க எல்லாரும் கிளம்பலாம்.

என்று சொல்லி அனைவரும் அவர் அவர் அறைக்கு செல்ல.. ஜுவா அவர்கள் செல்ல car book பன்னி கொண்டு இருக்க... முல்லை கதிர் அறையில்....

கதிர் : எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு முல்ல. இனிமே நமக்கு எல்லாமே நல்லதாவே நடக்கப்போகுது பாறேன்.

முல்லை : ஆம்மங்க. எல்லாம் நம்ம வீட்டு குட்டி தேவதை வந்த நேரம். நீங்க வேண பாருங்க. இனிமே என்னோட வேளை மீனா பாப்பாவையும் தனக்கா பாப்பாவ பார்த்துகுறது தான்....

கதிர் இதை கேட்டு அமைதிகாக்க முல்ல " என்ன ஆச்சுங்க.... ஏன் திடீர்னு அமைதி ஆகிட்டிங்க.? "

கதிர் : அப்போ என்ன யாரு பார்த்துப்பா? 😒😒😒

முல்லை : ஏங்க நீங்க தாங்க என்னோட முதல் குழந்தை... உங்கள கவனிச்சிட்டு தான் அவங்கள கவனிப்பேன்.  சரி இப்படி பேசிட்டு இருந்த எப்படி? வாங்க கிளம்பலாம். (என்று கூறி முல்லை எழுந்திரிக்க கதிர் அவள் கையை பிடித்து உட்கார வைத்து முல்லை கையை பிடித்து)

" முல்ல இனிக்கு நாங்க எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா இருக்கோமுன்ன அதுக்கு நீ தான் காரணம்... நீ மட்டும் இத பத்தி சொல்லாம இருந்து இருந்த இத பத்தி எனக்கு எப்போவும் தெரின்ஜு இருக்காது. நீ வேண சொல்லலாம் குட்டி தேவதையால இது நடந்துச்சு. ஆன, என்ன பொறுத்த வர நீ வந்த நேரம் தான். ஏனோ தானோன்னு இருந்த என்னையும் மத்தி இந்த குடும்பதுக்கும் சந்தோஷம் கிடைப்போகுது. மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது ஆன எனக்கு நீ தான் தேவதை.... என்னோட தேவதை...."

முல்லை இதை கேட்டு " எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. ஆன, எனக்கு நீங்க தான் எல்லாம். உங்க சந்தோஷம் என்னோட சந்தோஷம். உங்கள விட்டு நான் எப்போவும் எங்கேயும் போக மாட்டேன். இது இன்த முல்லை கதிர்வேலனோட சத்தியம்..... 😊"

இதை கேட்டு கதிர் முல்லையை தன் நேன்ஜோடு அனைத்து கொண்டான். 

பின் அனைவரும் கோயிலுக்கு சென்றார்கள். நமது கதிர் முல்லையும அவர்கள் வாழ்க்கை பயணத்தை இனிதாக தொடங்கினார்கள்.


நண்பர்களே உங்களது கருத்துக்கள் நான் எதிர் பார்க்கிறேன்.  Neenga ellarum sona mathiri eni nan ellutha pora kathaiya thanglisha eluthuren.... 😊😊😊

Nandrigaludan 

Tamilmozhi🙂


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro