Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

இவ்வாறே காரணத்தை யோசித்துக் கொண்டே இருவரும் வெவ்வேறு மனநிலையில் வர வெளியே மழையும் பெய்யத் துவங்கியது .அவனது இறுக்கமான முகத்தை மாற்ற நினைத்த நவ்யா என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வெளியே பார்க்க ஒரு இடத்தில் எதையோ கண்டவள் விக்ரம் வண்டிய நிறுத்துங்களேன்" என்க

அவனோ "ஏன் என்னாச்சு நவ்யா ?"என்க

அவளோ "நீங்க நிறுத்துங்க விக்ரம் "என்று அவன் கையிலேயே அடிக்க அவனும் அவசர கதியாக நிறுத்தினான் நிறுத்திய அடுத்த செகண்ட் அவள் வண்டியை விட்டு இறங்கி அந்த புறம் நனைந்து கொண்டே செல்ல ,அவனோ அவள் நனைந்து கொண்டே செல்வதை பார்த்தவன் புது மழையில் நனைந்தால் சளிப் பிடித்து விடும் என்று பயந்து அவளருகே "நவ்யா நவ்யா" என்று கூறிக் கொண்டே நனைந்து கொண்டே செல்ல

அவளோ அதற்குள் அங்கே எதிரிருந்த பானி பூரி கடைக்கு சென்றவள் "பையா தோ பானி பூரி plate "என்று பானி பூரி வாங்கி உண்ண அவனோ நனைந்து கொண்டே அவள் இத்தனை அவசரமாய் பானிபூரிக்காக நிறுத்தியதை நினைத்து கடுப்பானவன் அவளை முறைத்து பார்க்க, அவளோ coolaaga சாப்பிட்டவள் இன்னொரு plateai வாங்கி அவனிடம் நீட்டி "இது உங்களுக்கு விக்ரம் "என்க

அவனோ முறைத்தவன் "இதுக்கு தான் இவ்ளோ அவசரமா அதுவும் என்ன அடுச்சு நிறுத்துணியா ?"என்க

அவளோ சிரித்தவள் அவன் கூறுவதே காதில் விழாதது போல் அவனிடம் ஒரு plateai கொடுத்தவள் "இங்க பானி பூரி சூப்பராக இருக்கும் விக்ரம்.அதுவும் மழை பெயிலா இந்த காரமான பனி பூரி உள்ள போகேல செம்மயா இருக்கும் சாப்பிடுங்க "என்க

அவனோ வாங்காமல் அவளை ஏதோ சொல்ல வாயை திறக்க அவளோ "அட என்ன பாஸ் "என்று அவன் யோசிக்கும் முன்னே அவன் திறந்த வாயில் ஒரு பானிபூரியை திணித்து விட்டால் .அவளோ அதை ஏதோ என்றும் செய்யும் செயல் போல் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள அவனுக்கோ மின்சாரம் முழுதாய் உடலெங்கும் இறங்கியதை போன்றதொரு சிலிர்ப்பு .

இறுக்கம் தளர்ந்திட உடல் முழுதும் ஐஸ் கட்டியால் நிறைந்ததாய் போன்றதொரு உணர்வு .அவன் பெண்களின் அருகாமையை அறியாதவன் இல்லை எத்தனையோ பெண்களுடன் ஊர் சுற்றியிருக்கிறான் ,இடையில் கைபோட்டு நடனமாடி இருக்கிறான் கை விரல் கோர்த்தபடி பிஸ்னஸ் பார்ட்டிஸ்க்கு சென்றிருக்கிறான், எனில் அப்பொழுதெல்லாம் அவன் உணராத ஏதோ ஒன்றை அவளது சிறு ஸ்பரிசத்தில் ,சிறு அக்கரையில் ,சிறு புன்னகையில் உணர்கிறான்.

பெரும் மலை போன்ற மனதை அழுத்தும் சுமையையும் தன் சிறு செயலால் மடுவினும் சிறிதாக்கி விட்டாலே இதை என்னென்று நான் கூற நட்பா ?அன்பா? .இது எவ்வகையான உணர்வென்று பகுத்துக் கூற அவனால் இயலவில்லை அதை அவன் நினைத்து குழப்பமெனும் சுழலிற்குள் சிக்கவும் விரும்பவில்லை .இந்த நிமிடம் இந்த நொடி அது தந்த இதத்தை அனுபவித்தான் .

அவன் முகம் தெளிவடைந்ததை பார்த்த நவ்யாவின் மனதில் என்னென்று சொல்ல முடியாத நிம்மதி குடிகொண்டது .பின் அவனிடம் ஒரு plateai நீட்டியவள் சாப்பிடுமாறு சைகை செய்ய அவனும் புன்னகையுடன் சாப்பிட்டவன் பின் அவளுடன் அருகில் இருந்த பார்க்கிற்கு செல்ல ,அங்கோ குழந்தைகள் அனைவரும் மழையில் நின்று ஆட்டம் போட அவள் அக்குழந்தைகளை ரசித்துக் கொண்டே நிற்க அவனோ அவள் அருகில் வந்தவன் அக்குழந்தைகளை பார்த்து விட்டு சிறு புன்னகையை உதித்தவன் "குழந்தைங்கன்னாலே cute தான் இல்ல "என்க

அவளோ "ஆமா விக்ரம் எந்த கள்ளம் கபடமும் இல்லாம மத்தவுங்கள எப்படி கஷ்டப்படுத்துறதுனு நினைக்காம எப்போவும் சந்தோஷமா எல்லாரும் குழந்தைங்க மாறியே இருந்துட்டா பிரெச்சனையே வராது இல்லையா விக்ரம் "என்க

அவள் இத்தனை நீளமாய் அவனிடம் பேசியது இதுவே முதல் முறை அவள் கூறிய கருத்தை ஏற்றவன் "உண்மை தான் ஆனா பிரச்னை இல்லாத வாழ்க்கை உப்பில்லாத சாப்பாடு மாறி சுவையா இருக்காது நவ்யா "என்க

அவளோ அவனை பார்த்தவள் "அப்போ நம்ம வாழ்க்கைக்கு ஸ்வாரஸ்யத்தையும் சுவையையும் தர விஷயத்தை நாம சவாலா தான எடுத்துக்கணும் விக்ரம் ஏன் டென்ஷன் ?"என்க அவனிற்கோ அவள் அறிவைக் கண்டு பெரும் ஆச்சர்யம் எத்தனை மன உளைச்சலில் இருந்தேன்? என் மனநிலையை சீராக்கி என் வாய் வார்த்தை மூலமாகவே நான் கையாள வேண்டிய யுக்தியை எனக்கு காட்டி விட்டாலே என்று வியந்தவன் மனதில் ஒரு வழி பிறக்க அவளை நன்றியுடன் பார்த்தவன் அவளோடு நடந்தபடியே காரிற்கு வந்து சேர்ந்தான் .

காரிற்கு வந்து அமர்ந்ததும் பின்னே குனிந்தவன் அவளிடம் ஒரு சிறு துண்டை கொடுத்தவன்" தலையை துவட்டிக்கோ நவ்யா புது மழை சளி புடுச்சுரும் "என்க அவள் கண்ணில் மின்னல் போல் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது .

பின் தன்னை சமன் செய்து கொண்டவள் அவனிடம் துண்டை வாங்கி தலையை துவட்டிக் கொண்டால்.காரை எடுத்தவன் "தேங்க்ஸ் நவ்யா "என்று கூற

அவளோ அவனை பார்த்துக் கொண்டே "பிரியா லோகோன் வச்சே அபரா ஜரூரி நத்தி"(??????சொல்ல மாட்டேனே வெவெவேவே)என்க

அவனோ "என்னது?"என்க

அவளோ திடீரென்று சமநிலைக்கு வந்தவள் "ஆங் அது விக்ரம் தேங்க்ஸ் இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்குன்னு சொன்னேன் விக்ரம் "என்க அவனும் அதை ஆமோதிப்பவன்போல் தலை அசைத்தவன் காரை செலுத்தி அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டான் .

வெளியே வந்தவள் அவன் புறம் நின்று "விக்ரம் புது மழை எனக்கு மட்டுமில்ல உங்களுக்கும் தான் சளி பிடிக்க வைக்கும் சோ வீட்டுக்கு போய் தல வழியா தண்ணி ஊத்திடுங்க, அப்பறோம் ஹாட் வாட்டர் குடிங்க அப்பறோம் முடுஞ்சா இஞ்சி டி குடுச்சுருங்க ஒன்னும் ஆகாது "என்று கூற

அவனோ லேசாய் புன்னகை உதிர்த்தவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி "தங்கள் உத்தரவுப்படியே மேடம் "என்க

அவளோ அவன் முடியை கலைத்தவள் "குட் பாய் "என்று விட்டு உள்ளே ஓடி விட்டால்

அவனோ மனதில் "அடியேய் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு ஷாக் குடு டி இப்டி மொத்தமா ஒரே நாளுல இறக்குனா நா பாவம் ல ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு "என்றவன் அவன் தலையை சிலுப்பி கொண்டு வீட்டிற்கு சென்றான் .

இவளோ வீட்டிற்குள் சென்றதும் சைந்தவியிடமிருந்தும் வித்யுதிடமிருந்தும் செம்மையாக திட்டு வழங்கப்பட்டு பின் உள்ளே குளிக்க அனுப்பி வைக்கப் பட்டால் .தன் அறையில் குளித்து முடித்து வெளியே வந்து கண்ணாடியை பார்த்துக் கொண்டே தலையை துவட்டியவள் இன்றைய நிகழ்வுகளை எல்லாம் அசை போட விக்ரமின் கோபமும் அதை போக்க தான் செய்த செயல்களும் வழக்கத்திற்கு மாறாய் தான் அவனிடம் அதிகமாய் பேசியதும் அவளிற்கே அவள் புதியதாய் தெரிந்தால் ..

சிரித்துக் கொண்டே கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தலையை துவட்டியவள் நினைவில் கடைசியில் அவன் நக்கலாய் நோக்கும் போது மட்டும் ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்க்கும் பார்வையை நினைவு கூர்ந்தவள் தானும் ஒற்றை புருவத்தை உயர்த்த முயற்சித்து அது வராமல் போக அதற்கும் சிரித்துக் கொண்டால்.எனில் அவள் சிரிப்பு பறிபோகும் நாள் வெகுதொலைவில் இல்லையென்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அடுத்த நாள் இவள் வழக்கம் போல் வேலைக்கு கிளம்பி செல்ல அங்கோ அறையில் விக்ரம் மிகவும் சீரியசாக laptoppil வேலை செய்து கொண்டிருந்தான் .அவள் தோள் பையை கழட்டி வைத்து விட்டு அவன் அருகில் வந்து நிற்க தன் அருகில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பியவன் நவ்யாவைக் கண்டதும் ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டு நவ்யா அந்த seatah எடுத்து போட்டு இங்க உக்காரு "என்க

அவளும் அவ்வாறே செய்ய அவள் அருகில் அமர்ந்ததும் தன் திட்டத்தை விளக்க துவங்கினான் "நவ்யா இப்போ நமக்கு எதிரி யாருனு எந்த cluevum இல்ல அண்ட் அவனை கண்டுபிடிக்குறதுக்குள்ள எத்தனை கொழப்பதையும் பிரெச்சனையையும் உண்டு பண்ணுவான்னு தெரில சோ நாம மொதல்ல அவனால எந்த பாதிப்பும் வராத மாறி பாத்துக்கணும் அதுக்கு எனக்கு ஒரு ஐடியா கெடச்சுது "என்க

அவளோ "என்ன விக்ரம் "என்க

அவனோ "இப்போ என் கைல மொத்தமா பல தொழில்கள் இருக்குறதால தான என்னால overall எல்லாத்துலயும் concentrate பண்ண முடில "என்க

அவளோ ஆமோதிப்பதாய் தலை அசைக்க அவனே தொடர்ந்தான் "சோ நா food இன்ஜினியரிங் தான் படுச்சுருக்கேன் அதுனால food பாக்டரிஸ் ,பேபி ப்ரோடக்ட்ஸ் மட்டும் என் கண்காணிப்புல இருக்கட்டும் .மத்ததெல்லாம் வளர்ந்து வர நேர்மையான கம்பனிஸ்ட்ட பார்ட்னெர்ஷிப் போட்டு அவுங்களோட managementuku கீழ போடப் போறேன் ."என்க

அவளோ "பட் விக்ரம் அது நம்ம கண்காணிப்புக்கு ரொம்ப அப்பால போயிராதா"என்க

அவனோ "echinos கம்பெனிசுங்குறது கிட்ட தட்ட 70 வருஷமா பெரிய பிராண்டாக இருந்துட்டு வருது நவ்யா இங்க பார்ட்னெர்ஷிப் வச்சுக்குறதே பெரிய விஷயம். அது அவுங்க கம்பனிய அவுங்களே நெனச்சு பார்க்க முடியாத உயரத்துக்கு கூட்டிட்டு போகும்.அண்ட் வளரும் நிறுவனங்களாக இருக்குறதால பணத்துக்கு ஆசப் பட்டு பொருளோட தரத்தை குறைக்குறதால அவுங்களோட நிறுவனமே இல்லாம போய்டும் அண்ட் கண்காணிப்பும் பலமா இருக்கும் தப்பு பண்ணமாட்டாங்க ,அதுனால வேலையும் சுத்தமா நடக்கும் தப்பில்லாம நடக்கும் என் ஒரே கம்பெனில அவனால கருப்பாட நுழைக்க முடியும் ஆனா நா இந்த கம்பனிய 10 பிரிவா பிரிச்சு வெவ்வேற கம்பனிக்கு குடுக்க போறேன் அது எந்த கம்பெனின்னு கண்டுபுடிக்கவே அவனுக்கு 1 வருஷம் ஆயிடும் .இது நிரந்தரத் தீர்வு இல்ல அவனுக்கு ஒரு வேகத் தடை.அவன் சுதாரிக்குற அந்த நேரத்தை தான் நாம ப்ரோயோகிச்சு அவனை கண்டுபிடிக்கணும்"என்க

அவளோ விழிவிரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் ஏதும் கூறாமல் இருக்க அவளை பார்த்தவன் "என்ன என்று புருவத்தை உயர்த்த

அவளோ "இப்போ தான் தெரியுது எப்படி இந்த வயசுல இத்தனை companiesah உங்க பேர்ல மாத்தீருக்காங்கனு" என்று மனதில் நினைத்தவள்

வெளியே "ஐ guess இட் ஒர்க்ஸ் விக்ரம் இதையே பண்ணலாம் "என்று இருவரும் ஒரு மனதாய் முடிவெடுத்து அதை செயல் படுத்தியும் விட, இங்கே இதை கேள்விப்பட்ட அவ்வுருவமோ தான் நினைத்து வைத்திருந்த அனைத்து திட்டங்களும் தவிடு பொடியானதில் வருத்தம் கொள்வதற்கு பதில் சிரித்துக் கொண்டிருந்தது "வாறே வா தும் பஹுத் இன்டெலிஜெண்ட் ஹெய்ன் விக்ரம் பர் யூ ஆர் நோட் at safer zone விக்ரம் ஐ வில் கம் before you soon வித் an unbearable ப்ரோப்லேம்.ஐ வில் கிவ் யூ தி pain யூ gave மீ .தும் mujhse பச் நெஹி சக்தி ஹெய்ன்"(அட நீ மிகவும் அறிவாளி தான் விக்ரம் ஆனால் நீ இன்னும் தப்பவில்லை .நான் உன் முன் வருவேன் நீ தாங்கி கொள்ள முடியாத பிரச்னையோடு .நீ எனக்கு கொடுத்த வலியை உனக்கு நான் கொடுப்பேன்.நீ என்னிடம் இருந்து தப்பவே முடியாது )என்று விட்டு கோரமாக சிரித்தது .  

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro