Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வீட்டுல இருந்து தப்பிச்சாச்சு!

"பாட்டி! ஒரு பத்து நாள் தான். சேட்ட பண்ணாம ஒழுங்கா சமத்தா இருக்கணும், சரியா? ஐயா வீட்டுல இல்லன்னு அழுமூஞ்சியா இருக்கக் கூடாது" 

"அடி! கழுத, நீ இல்லாம வீடு நிம்மதியா இருக்கும் போ டா"

"சும்மா சமாளிக்காதீங்க பாட்டி, நான் இல்லன்னு ரொம்பலாம் ஃபீல்  பண்ணாதீங்க. உங்கள நல்லா கவனிக்க ஆளு வச்சுட்டு தான் போறேன். புரியுதா? நான் இல்லாத நேரத்துல நீங்களும் வீட்ட பத்ரமா பாத்துக்கோங்க. நான் இல்லாம அது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் என்ன பண்ணுறது! ஒரு வி.ஐ.பி ஆகிட்டா ஆயிரம் கல்யாணம் ஆயிரம் காதுகுத்துன்னு கூப்புடுறாங்களே! முடியாதுன்னும் சொல்ல முடியல,"

"உன் அண்ணன் கூட ஓசில போறதுக்கே இந்த ஆட்டம் ஆடுறியே! உன் கூட படிக்கிற புள்ளைங்களுக்குலாம் கல்யாணம்னா அவங்க வீட்டுக்கு தத்து புள்ளையா கூட போய்ருவ போலவே!"

"ஒஹ்! டெஃபனட்லி, டெஃபனட்லி!" 

"அஜ்ஜு, ரெடியா டா?" ஆளுக்கு முத்தி கிளம்பிவிட்டு, நடுகூடத்தில் அமர்ந்து தன் பாட்டியை வம்பிழுத்துக் கொண்டிருந்த தம்பியை நோக்கி கத்தியபடியே ஹர்ஷன் கிளம்பி வர, "ஐயா ஆல் செட்." பாட்டியிடமிருந்து எழுந்த அர்ஜுன், "ஓகே! பேமிலி மெம்பர்ஸ்... எல்லாரும் வாங்க, வாங்க. வந்து, ஐயாவ வாழ்த்தி வழியனுப்பி வைங்க" வீட்டில் உள்ளவர்களை ஏலமிடத் தொடங்கினான்.  நடுவீட்டில் நின்றுக்கொண்டு கூப்பாடு போடும் தம்பியை தலையில் தட்டிய ஹர்ஷன், "பாட்டி, கவல படாதீங்க. உங்க குட்டி கழுதைய பத்ரமா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துறேன்." தன் பங்கிற்கு பாட்டியிடம் சொல்லியவன், அர்ஜுனின் கூச்சலால் கூடத்திற்கு வந்துவிட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, தம்பியை இழுத்துக்கொண்டு வாயிலுக்கு வந்தான்.

நேற்றைய இரவு பொழுதில் தாத்தா பாட்டியை எப்படியோ கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து முடித்த அர்ஜுனும் ஹர்ஷனும், அவனின் கல்லூரி தோழிக்கு திருமணம் என சொல்லிவிட்டு அதை சாக்காக வைத்து பத்து நாள் விடுமுறையை கழிக்க பக்காவாக ஒரு திட்டம் தீட்டி அவர்களின் கையில் கொடுத்துவிட்டு இப்போது, தேனியில் உள்ள தன் அத்தையை காண புறபட்டு விட்டார்கள் சகோதரன்கள் இருவரும். மனதில் உள்ள பாரத்தை மறைத்து, அவர்களை வழியனுப்பி வைத்தார்கள், சங்கரி மற்றும் செல்வகுமார்.

✨✨✨

ரட்சக ராஜ்யம்

பெண் பார்க்கும் நிகழ்வுக்கு இளவரசிகள் தயாராகி விட்டார்களா என பார்பதற்காக அவர்களின் அறையை திறக்கப்போன சமயம், கதவானது தானாகவே திறந்துக்கொள்ள.. கதவின் கைபிடியை பிடிக்கப்போன நிலையிலேயே, இழுத்துவைத்த உள்மூச்சை அப்படியே நிறுத்தி வைத்தபடி உறைந்து நின்றான், அபிஜித்; கண்ணுக்குக் கீழே முகத்திரையிட்டு அவன் முன் நின்றிருந்த அழகியின் கயல் விழிகளில் சிக்கிக்கொண்டு.

"ஹலோ, பாஸ்! வாய மூடுங்க, கொசு உள்ள போய்ற போகுது" அவன் முகத்திற்கு நேராக சொடுக்கிட்டு, அவனை தாண்டி நடந்தாள், ராகவி. அவள், நக்கலடித்த நொடியில் லபக்கென வாயை மூடிக்கொண்டவன், தன்னை தாண்டிச் செல்பவளின் வலது கரத்தினை படக்கெனப் பிடிக்க.. எவ்வித அதிர்ச்சியையும் கண்ணில் காட்டாமல், சிரிக்கும் விழிகளுடன் அவனை நோக்கித் திரும்பியவள், இரு புருவங்களையும் உயர்த்தி என்னவென வினவினாள்.

அவளின் விழியசைவால், ஏக்கம் கொண்டது போல் ஒரு பெருமூச்சுடன், "குட்டிமாவும் அம்முவும் ரெடியா ராவி?" நொந்துக்கொள்ளும் குரலில் கேட்டவனை நோக்கியவள், "அவளுங்க ரெடியான்னு தெரியல; ஆனா, நா எப்பவோ ரெடி ஆகிட்டேன்" கண்ணடித்து கூறியபடி கையினை உருவிக்கொண்டு நழுவி ஓடினாள்.

இரண்டடி ஓடியவளை படக்கென மீண்டும் கைபிடித்து இழுத்த அபி, குறும்புப் பார்வையுடன், "ஓய், ராவி! நீ ரெடின்னு தான் எனக்கு தெரியுதே. அம்முவும் குட்டிமாவும் அவங்க ஜோடிய கை புடிக்கட்டும்... அடுத்து, நாம ஜோடியா கை புடிச்சுட்டு ஊரு சுத்தலாம். என்ன? டீல் ஓகே தானே?" அவன் கண்ணடித்துக் கேட்க, "போலாம், போலாம்" மீண்டும் நழுவியவளின் நாணம் அவள் விழியில் பிரதிபலித்தது.

தன் பிடியிலிருந்து மீண்டும் நழுவியவளை மறுபடியும் பிடித்து இழுத்தவன், இம்முறை, அவளை தன்னோடு சேர்த்து இடையோடு அணைக்க, "ஜித்தூ.. நீ உன் தங்கச்சிங்கள தானே பாக்க வந்த.. அவளுங்க உள்ள தா இருக்காளுங்க.. போ, போய் பாரு, போ." சிணுங்களுடன், அவன் பிடியிலிருந்து நழுவியோடத் திமிறினாள்.

"லவ் யூ, ராவி" அவள் பேச்சினை காதில் வாங்காமல், நாணத்தில் மூடியிருக்கும் விழியினை பார்த்து அபி கூற, அவன் பிடியிலேயே தலை குனிந்தவள், தக்க சமயம் பார்த்து நழுவி ஓடினாள். சிரித்துக்கொண்டே தங்கைகளின் அறைக்குள் நுழைந்தான் அபி.

அவன் உள்ளே வந்தது என்னவோ அலங்காரத்துடன் இருக்கும் தங்கைகளை காண.. ஆனால், அவனை வரவேர்த்தது என்னவோ வெறுமையான அறையில், கட்டில்மேல் இருந்த தங்கைகளின் விழாவுக்கான ஆடையும் மேஜையில் படபடத்துக் கொண்டிருந்தத் துண்டுக் காகிதமும் தான்.

விருவிருவென மேஜையின் அருகில் சென்றவன் அந்தக் காகிதத்தை எடுக்க 'டாட்டா, அண்ணா.. நாங்க நேத்து சொன்னத நீ சீரியஸா எடுத்துக்குட்ட மாதிரியே தெரியல. ஆனா, நாங்க சீரியஸா தான் சொன்னோம். இப்போ, தீருவ ஃபாலோ பண்ணி ஓடிட்டோம்.. டாட்டா .. பை பை..'  இரண்டு மூன்று சிரிக்கும் பொம்மைகளுடன் இருந்தது, அந்த துண்டுக் காகிதம். அதை படித்த அபி, தலையில் கை வைத்துவிட்டான்.

"ராவி...." இளவரசிகளின் அறையிலிருந்து அப்போதே படியில் இறங்கிக் கொண்டிருந்த ராகவி, இறுதி படியில் நின்றவாறு மாடியிலிருந்துக் கத்துபவனை நிமிர்ந்து நோக்க, "ரெண்டு பேரும் எங்க?" பதட்டத்துடன் வினவியபடி அவளை நோக்கி விரைந்து வந்தான், அபி. 

"அங்க தானே இருக்காங்க? அங்கருந்து தானே ஜித்தூ வர்ற?" சரசரவென மீண்டும் அவள் மாடியேற.. இவனும் கீழிறங்க, "அவங்க அங்க இல்ல, ராவி" இளவரசிகளின் அறையில் கண்டுபிடித்த அந்த துண்டுக் காகிதத்தை அவளின் கையில் திணித்தபடி தீராவின் அறைக்கு விரைந்தான். அந்த துண்டுக் காகிதத்தை வாசித்துப் பார்த்தவள், "என்ன ஜித்தூ இது?" அதிர்ந்துப்போய் அவன் பின்னேயே செல்ல.. தீராவின் அறையும் வெறுமையாக இருப்பதை கண்டு மீண்டும் ராகவியை நோக்கித் திரும்பினான், அபிஜித்.

"தீரா எங்க போய்ருக்கா, ராவி?"

"அவ பூமிக்கு போய்ட்டாளே"

"ஆங்? அவளுக்கு தா தெரியும்ல இன்னைக்கு இளவரசிங்க மாளிகைல தா இருக்கனும்ன்னு. ஃபங்ஷன் முடியவும் போலாம்ன்னு சொல்லியும் எதுக்கு அவளுங்கள கூட்டிட்டு போனா இவ"

"ஹே ஜித்தூ, தீராவ திட்டாத நீ. அவ எப்போவோ போய்ட்டா. இவளுங்க ரெண்டு பெரும் இப்போ தான் எங்கேயோ போய்ருக்காளுங்க. நா பாத்துட்டு ரெடி ஆக சொல்லிட்டு வெளிய வரைல தா நீ உள்ள போன." ராகவி கூறிய சொல்லால் ஒரு நொடி நின்ற இடத்திலேயே உறைந்து நின்றவன், விருவிருவென மீண்டும் மாடியேறினான். அவன் எதிர்பார்த்து வந்தது போலவே இளவரசிகளின் அறையின் தரையில் மினுமினு துகள்கள் இளநீல நிறத்தில் சிந்திக் கிடந்தது.  

"உஃப்ப்.. ராஜபதக்கம் இல்லாம மாயத்த யூஸ் பண்ண இவங்க ரெண்டு பேரும் கத்துக்குட்டாங்களா?" தலையில் கை வைத்துவிட்டான், அபி. அதேநேரம் பூமியில், ரக்ஷவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்தபடி அவன் வீட்டையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள், தீரா.

~ இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நம்ம கணக்குபடி ஈவ்னிங் வரையும் அவன் கவசம் அவன காப்பாத்தும். ஆனா, இப்போவே அந்த கவசம் இவ்ளோ வீக்-ஆ இருக்குதே! ~ அவள் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம், "தீருஊஊ..." அவள் காதினுள் வந்து கத்தினார்கள், மாயாவும் ரக்ஷவும்.

"யம்மாடி......." ஒரு நொடி திகிலடைந்தவள், " எப்டி டி இங்க வந்தீங்க?" அதிர்ந்து நோக்கினாள் அவ்விருவரையும்.

"தோ! இப்டி தான்" தனக்கு பின்பாக இருந்த நீல நிற மாயவாயிலை ரக்ஷா சுட்டிக்காட்ட, "ஹே! எப்டி இது தெறந்துச்சு? நா தெறக்க-"

"ஏன்? நீ மட்டும் தா மாயவாயில தெறப்பியாக்கும். நீ செய்யும்போது நாங்க செய்ய மாட்டோமா?" அவளை இடையில் குறுக்கிட்டாள், மாயா. ஒன்றும் புரியாமல் அவளை நோக்கினாள், தீரா.

"அப்டிலாம் பாக்காத தீரு மா.. வைர மாளிகையோட சக்தி இல்லாம மாயவாயில தெறக்க நாங்களும் கத்துக்குட்டோமே" மாயா கூறி சிரிக்க, "சுத்தம்" மானசீகமாக சுவற்றில் முட்டிக் கொண்டாள் அவள்.

"அதுலாம் இருக்கட்டும், நா இருக்குற எடத்த எப்டி கண்டு புடிச்சீங்க?"ஆச்சரியத்துடன் வினவியவளை பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரித்தவர்கள், "தீரு மா.. எங்களுக்கு, உனக்கு தெரிஞ்ச மாயமும் தெரியும் தெரியாத மாயமும் தெரியும்" விஷமத்துடன் கூறி இளவரசிகள் இருவரும் கைகளை அடித்துக் கொள்ள, "அடி பிராடு பாவிகளா.. மாயத்த வரிசையா கத்துக்குற பழக்கமே இல்லையா உங்ககிட்ட? இப்போ நீங்க யூஸ் பண்ணிருக்குற மாயத்த கத்துக்குற முன்னாடி ஏகபட்ட பாடம் கத்துக்கனும் டி" உச்ச ஸ்தானியில் கத்தினாள், தீரா. "அடி போ டி ரூல்ஸ் பைத்தியமே," அவளை ஓரங்கட்டிவிட்டு, கூடத்தை நோக்கி நடைபோட்டாள், ரக்ஷா. அவளை தொடர்ந்து மாயாவும் செல்ல, "சரி, இன்னைக்கு உங்கள பொண்ணு பாக்க வர்றதா தானே இருந்துச்சு, இங்க வந்துருக்கீங்க ரெண்டு பெரும்?" இருவரையும் தொடர்ந்து நடந்தாள் தீரா.

"ஃபங்ஷன் நின்னு போச்சு"

"நின்னு பொச்சா? ஏன்?"

"பொண்ணு ஓடி போச்சு"

"எந்த பொண்- அடியேய், ஏன் டி?"

"எங்களுக்கு அங்க போக புடிக்கல. நீ தா பூமில உனக்கு ஏதோ மிஷன் இருக்குன்னு சொன்னல? அதா உனக்கு ஹெல்ப் பண்ண இங்க வந்துட்டோம்"

"சுத்தம்.. நீங்க என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களே? சரி, வந்துட்டீங்க,  இங்கேயே இருந்து தொலைங்க" தீரா, சலிப்புடன் கூறிய அதே நேரம் அபியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. டெபிளின் மேல் இருந்த மொபைலில் தெரிந்த பெயரை மூவருமே பார்த்துவிட, "இந்த விஷயம் அபி மாமாக்கு தெரியுமா?" அவன் எச்சறிக்கையுடன், மொபைலை அட்டன் செய்யும் முன்பாகவே கேட்க, "ஹான், ஹான். அதெல்லாம் தெரியும், தெரியும். நீ எடுத்து பேசு, நாங்க சாப்டாமலே வந்துட்டோம்.. என்ன சாப்பாடு இருக்கு? எங்களுக்க பசிக்குது. சாப்பாடு! சாப்பாடு! சாப்பாடு!" அக்காவும் தங்கையுமாக கிச்சனை நோக்கி ஓட, "தின்னி பக்கிகளா" வாய்குள்ளேயே முணங்கிக்கொண்டு தன் மொபைலை எடுத்துக் காதில் வைத்தாள், தீரா. காத்திருக்கும் விபரீதம் புரியாமல்.


❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro