Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆப்ரேஷன் மெடிட்டேஷன்

பார்கவி அம்மா மதிய உணவு சமைப்பதற்காக கிச்சனில் வைத்து மீன் கழுவிக் கொண்டிருக்கும் சைடு கேப்பில், படிப்புக்கு பை பை சொல்லிவிட்டு வீட்டின் நடு கூடத்தில் மினி வட்ட மேஜை மாநாடு ஒன்றை கூட்டிவிட்டான் அர்ஜுன். இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்பதற்காக அவர்களுக்கு அருகிலேயே இருக்கும் சோஃபாவில் அட்டினக்கால் போட்டுக்கொண்டு படுத்திருந்த தீரா, இன்னுமும் இன்விசிபில் மோடில் தான் இருந்தாள்.

"இதுதான் உன் மொக்க பிளானாக்கும்." காலையில் ரக்ஷவுடன் இணைந்து போட்ட திட்டதுக்கு ஆப்ரேஷன் மெடிடேஷன் என ஒரு பெயரும் வைத்து அதை மிகத் தீவிரமாக விளக்கி முடித்தத் தன் தம்பியை நோக்கி ஒரு பார்வை பார்த்தான், ஹர்ஷன்.

"மொக்கையா இருந்தாலும் அவன் சொல்றது சரின்னு தான் எனக்கு தோணுது.." மயூரி, அர்ஜுனுக்கு சாதகமாக பேசிட, அதே நேரம், "ஆமா. இந்த கத்தியும் மின்னுச்சு, காலைல அவன் இத சொல்லும்போது." ரக்ஷவும் உடன் சேர்ந்துக்கொண்டான். தனக்கு சாதகமாக பேச இருவர் இருக்கிறார்களே என்னும் திமிர் அவன் கண்ணில் தெரியத் தன் சகோதரனை பார்த்து வெற்றிப் புன்னகை சிந்தினான், அர்ஜுன்.

"என்னடா ரக்ஷவ், லூசு மாறி பேசுற. கத்தி மின்னுச்சுன்னா கரக்ட்டா இருக்குமா? மொதல்ல அது ஏன் உன் கைய புடிச்சுட்டு இருக்குன்னே நமக்கு தெரில."

"ஆனா மெடிடேஷன் பண்ணுறது மைன்ட்க்கு நல்லது தானே? மைன்ட் ஸ்டேபிலா இருந்தா நம்மல நாமலே ஈஸியா கன்ட்ரோல் பண்ண முடியும் தானே? கோவில்ல வந்தவரு சொன்ன மாதிரி அப்டி கூட ரக்ஷவ் ரெடி ஆக வாய்பிருக்கு தானே?" மயூரி சொல்ல.. ஹர்சனின் பார்வை, இதுவரை எதுவும் சொல்லாமல் இருக்கும் மித்ராவை நோக்கியது. அதன் பொருளை புரிந்துக் கொண்டவள், "எதுவுமே பண்ணாம இருக்குறதுக்கு எதையாச்சும் ட்ரை பண்ணி பாக்கலாம்ல?" அர்ஜுனின் யோசனைக்கே பரிந்து பேசினாள்.

"அஹ்! எனக்கு சப்போர்ட் பண்ணா ஆளு கெடச்சுருச்சு." தன் சகோதரன் தோளை பிடித்துத் தொங்கியபடியே அவனிட்டக் கூச்சல், கிச்சனை அடைந்துவிட.. "ஏய்.. படிக்காம வெளையாடிட்டு இருக்கீங்களா டா?" பார்கவி அம்மாவின் குரல் இவர்களை அடைந்த அடுத்த நொடி சிதறி ஓடிய ரக்ஷவும் மயூவும் தத்தம் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு மூலையில் சென்று அமர்ந்தபடி, "இல்ல ம்மா" "படிச்சுட்டு தான் இருக்கோம் ம்மா" சமத்து பிள்ளைகள் போல பதில் கொடுப்பதை விழித்துப் பார்த்தார்கள் சகோதரர்கள் இருவரும். "அம்மா வாய்ஸ்க்கு இது தான் பவர்" வாயை மூடி சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்தாள், மித்ரா.

"சரி, இப்போ என் பிளான்க்கு பதில் என்ன டா அண்ணா" அர்ஜுன் தன் அண்ணனை நோக்க, க்ளீன் போல்ட் ஆனா ஹர்ஷன், "ஓகே ஃபைன்.. எப்போல இருந்து ஆரம்பிக்கலாம்?" கையை கட்டிக்கொண்டு பெருமூச்சுடன் தன் தரப்பு வாதத்தை கைவிட்டான்.

"இவங்களுக்கும் கொஞ்சமா மூளை இருக்க தான் செய்யுது போல" இவர்களை கவனித்துக் கொண்டிருந்த தீரா தனக்குத்தானே சொல்லிக் கொண்டபடி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

"இன்னைக்கு ஒரே ஒரு நாள் செய்யுறதுல எந்த யூஸும் இல்ல.. டெய்லி செஞ்சா தான் அதுக்கான ரிசல்ட் கெடைக்கும். சோ, ரக்ஷவுக்கு எக்ஸாம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணுவோம்.

"ஆமா, அப்றம் தான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருவீங்கல்ல அங்க வச்சே ட்ரைனிங் குடுக்க போறீங்களா?" நைசாக நகன்று மீண்டும் இவர்கள் அருகிலேயே வந்துவிட்ட மயூ, ஹர்ஷனை பார்த்து கேட்க.. அதேநேரம், ரக்ஷவும் அதே போல அவ்விடம் வந்திருந்தான்.

"ரைட்டு. எங்க வீட்டுல நெறைய எடம் இருக்கு. நல்லா ரிலாக்ஸா மெடிடேஷன் பண்ணலாம்."

"ஹ்ம் மூளை இருக்குன்னு இப்போ தா சொன்னேன். அதுக்குள்ள .." ஆர்வமாக பதில் சொன்ன அர்ஜுனை கண்டு தலையில் கை வைத்தாள், தீரா.

"அதுவரைக்குலாம் டைம் இல்ல டா.. நேத்தே எவனோ ஒருத்தன் ஒரு பொண்ணு கூட வந்து அட்டாக் பண்ணுனான்னு சொன்ன தானே.. அவன் இன்னைக்கும் வந்துட்டா?" அர்ஜுனை பார்த்த ரக்ஷவ் சீரியசாக சொல்வதை கண்ட தீரா, "ரட்சகன்னா ரட்சகன் தான். இவன் ஒருத்தன் தான் ஆரம்பத்துல இருந்தே தெளிவா பேசுறான்" மைன்ட் வாய்சிலேயே தங்கள் ரட்சகனை மெச்சிக்கொண்ட அதே நேரம், "நேத்து காப்பாத்த வந்தவங்களும் வந்துருவாங்கள்ல?" என பதில் கொடுத்த அர்ஜுனை எங்களுக்கு இதுதான் ஃபுல் டைம் ஜாப் பாரு என்னும் பார்வையில் பார்த்தாள். இப்போது தான், ரட்சகன் அவன் சக்திகளை உணரும் வரையில் மறைவாகவே இருக்கலாம் என தான் எடுத்த முடிவு மிகச் சரியானது என்னும் நம்பிக்கையே அவளுக்கு வந்தது. இல்லையெனில், இவள் தான் கூடவே இருக்கிறாளே என்னும் தைரியத்தில் இவர்கள் எல்லாரும் ஒன்றுகூடி ஒன்றுமே செய்யாமல் இருந்திருப்பார்கள் போலும். இனி ரட்சகன் சக்திகளை அவன் உயிர்பிக்கும் வரை இவர்கள் கண்ணிலிருந்து மறைந்தே தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டாள் தீரா.

"ஒருவேள வரலைனா?"

"சங்கு தான்" அர்ஜுன் அசால்ட்டாக சொன்னதை கண்டு அனைவரும் அவனை முறைக்க, "சரி சரி மொறைக்காதீங்க. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமாவே எல்லாத்தையும் கத்துக்கலாம். வேணும்னா டெய்லி மார்னிங் அன்ட் ஈவ்னிங் படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ட்ரை பண்ணலாமா? மெடிடேஷன் பண்ணிட்டு படிக்கிறது நல்லதுன்னு உங்க மம்மி கிட்ட காரணம் சொல்ல கூட ஈஸியா இருக்கும்.." திடீரென அறிவாளியாக பேசும் அர்ஜுனை வியந்து நோக்கினார்கள் மற்ற அனைவரும். அவன் திட்டம் சரிதான் என ஒப்புக்கொண்ட மற்றவர்கள் அடுத்தக்கட்ட திட்டத்தைப் பற்றி பேச தொடங்கும் முன், ரக்ஷவின் ஆத்மவாள் அவன் கையில் இருந்துக்கொண்டு மின்ன, "என்ன டா? முடிவுக்கு சரின்னு சொல்லுதா உன் கத்தி?" மெல்ல சிரித்தான் ஹர்ஷன்.

"அப்டி தான் நெனைக்குறேன்." ரக்ஷவ் சொல்லி வாயை மூடவில்லை. கையில் இரு வாள்களை பிடித்தபடி போர்க்களத்திற்கு செல்வது போல் வீட்டு வாயில் கதவில் வந்து நின்ற ஷேனாவின் நிழல் இவர்கள் மீது பதிந்தது.

✨✨✨

தேவலோகம்...

தங்கள் இருப்பிடத்தை தேடி வந்திருக்கும் இரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரையும் ராகவி மற்றும் சங்கவி இருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள், தேவலோகத்தின் இளவரசியாகிய நீலியும் அவளது நெருங்கிய நண்பனும் அத்தை மகனுமான சமர் என்னும் சமரகேதுவும்.

"சமர்... நீ ஏன் ஒரு தடவ கூட ரட்சகராஜ்யம் வர மாட்ற.. எத்தன தடவ உன்ட்ட கேக்குறேன்.. ஒரு தடவ கூட வரமாட்டியா?" எப்போதும் போல இப்போதும் சமரிடம் கெஞ்சலாக ரக்ஷா கேட்க, "கண்டிப்பா வரேன் இளவரசி நேரம் வரும்போது நானே வருவேன்" வழக்கமாக அவன் கொடுக்கும் பதிலை தான் இம்முறையும் கொடுத்தான், சமர். "அந்த நேரம் எப்போதான் வருதுன்னு நானும் பாக்குறேன்" நக்கலாக சிரித்தாள், மாயா.

பேசிக்கொண்டே நடந்தவர்கள், வர வேண்டிய இடத்திற்கு வந்துவிட, "இங்கதான்... அந்த குளத்துக்கிட்ட இருக்காங்க பாருங்க.." நீலி ஒரு திசையை சுட்டிக் காட்ட.. மலர்கள் சூழ்ந்திருக்கும் ஒரு குளத்தினுள் கால்களை விட்டபடி அமர்ந்திருந்தார்கள் சகோதரிகள் இருவரும்.

"நீங்க போய் பாருங்க.. நான் போய் அப்பாவ கூட்டிட்டு வரேன்" என்றுவிட்டு சமரை அழைத்துக்கொண்டு நீலி சென்றுவிட.. தங்கள் அத்தை மகள்களை காண சென்றார்கள் ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரும். அவர்கள் வரவை உணர்ந்த சங்கவியும் ராகவியும் சோர்ந்துப்போன ஒரு புன்னகையுடன் இளவரசிகள் இருவரையும் வரவேற்றார்கள். அவர்களின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டார்கள், இளவரசிகள் இருவரும்.

"இப்போ எப்படி இருக்குது ராவி அண்ணி"

"அப்படியே தான் இருக்குது மாயா.. சொல்லப்போனா இன்னும் கொஞ்சம் மோசமா தான் ஆகி இருக்கு" நொந்து போன குரலில் ராகவி சொல்ல, "மாமா சொன்னாங்க கவி அக்காக்கும் இதே மாதிரி ஆகீருச்சுன்னு?" ரக்ஷாவின் கேள்விக்கு ஆமென்று தலையாட்டினாள், சங்கவி.
"என்ன காரணம்ன்னு தேவ அரசருக்கே தெரியலன்னு சொல்லுறாரு. இப்போ அதுக்கான ரிசர்ச்ல தான் இருக்காரு. இப்போதைக்கு டெம்பரவரியா வெண்மணிய வச்சு ஸ்டாப் பண்ணிருக்காங்க" என அவளின் இரு கையையும் தூக்கிக் காட்ட.. அவளின் முழங்கையிலிருந்து உள்ளங்கை வரையில் சுரந்துக் கொண்டிருக்கும் நீரானது மெல்ல மெல்ல அதிகரிக்கக் கிளம்பியிருந்தது.

என்ன காரணம் என்று தெரியவில்லை, மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்து இவர்களின் கை வழியாக நீரானது நில்லாமல் சுரந்துக்கொண்டே இருக்கிறது. அது இவர்களின் சக்தியை வேகமாக உறிஞ்சுகிறது. நுவழி பாட்டியிடம் இதுபற்றி கேட்டதற்கு தேவலோகத்தில் தான் இதற்கான விடை உள்ளது என சொல்லி அனுப்பியதால் அவர்கள் இங்கே வந்திருக்க.. இங்கு, தேவ அரசருக்கே இதுபற்றி எதுவும் தெரியாமல் இருப்பதால் என்ன செய்வதென்றே புரியாமல் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro