
காலங்களில் அது வசந்தம்
மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை பாடிக்கொண்டே வாசலில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார் சாரதா பாட்டி
சாரதாபாட்டி பார்ப்பதற்கே தெய்வீக முகத்தோற்றம் கொண்டவர். வட்ட முகமும் குங்குமப்பொட்டும் என இந்த காலத்தில் அவ்வளவு சீக்கிரதில் காண முடியாத அழகு கொண்ட 65 வயது அழகி. குணத்திலும் அப்படித்தான் அவருடைய கணவர் ஜெயராமுடன் இருக்கிறார் அவருடைய ஒரே மகன் ராம் மனைவி லீலா மற்றும் மகன் கிருஷ் உடன் வேலையின் காரணமாக பெங்களூருவில் தங்கி உள்ளார். இவர் வீட்டு மாடியில்தான் வாடகைக்கு தங்கி இருக்கிறான் நம் கதையின் நாயகன் ராகுல்
.ராகுல் ஐ டி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் கை நிறைய சம்பளம் சொந்த ஊர் திருநெல்வேலி இங்கே சென்னையில் வேலைக்காக தங்கி இருக்க்கும் பல பேரில் இவனும் ஒருவன்.
நம்ம கதையின் நாயகன் ராகுல் கோபமாக மாடியில் இருக்கும் அவனுடைய வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது கீழே இருந்த சாரதா பாட்டி கூப்பிட்டார்.
பாட்டி :ஏம்பா ராகுல் நம்ம வீட்ல இந்த டிவி ஒழுங்கா தெரியல கொஞ்சம் என்னன்னு பாக்குறியா
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு இது இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியது
ராகுல் :ஆமா அது ஒண்ணுதான் குறைச்சல் . போங்க அவன் அவன் என்ன பிரச்சனைல இருக்கான்னு தெரியாம. முதல்ல இந்த வீட்டை காலி பண்ணனும் எப்போ பாத்தாலும் எதாவது ஒரு வேலை சொல்லிட்டே இருக்கீங்க. தல வலிக்குது எனக்கு
திட்டிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். சிறிது நேரத்திற்கு பிறகு அஞ்சனா மீது உள்ள கோபத்தை சாரதா பாட்டியின் மீது காட்டியதற்காக அவன் மனம் பதைபதைத்தது. என்றுமே சாரதா பாட்டி இவனை வாடகைக்கு குடி இருப்பதாய் நினைக்கவில்லை சாப்பாடு கூட அவரே கொடுத்து விடுவார். இவனும் சிறு சிறு வேலைகள் செய்து கொடுப்பான். இன்று தான் பாட்டியிடம் இவ்வாறு கோபமாக பேசி இருக்கிறான். சரி பாட்டியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று இவன் கதவை திறக்க பாட்டி வெளியே டீ கப்புடன் நின்று கொண்டிருந்தார்.
பாட்டி :இந்தாப்பா தல வலிக்கிதுன்னு சொன்னல்ல இஞ்சி டீ குடி தல வலி பறந்து போய்டும். நான் கீழ போறேன்
அவனுக்கு அந்த பாட்டியின் வெள்ளந்தி மனதும் தான் அவரிடம் நடத்து கொண்டதும் அவனை யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.
ராகுல் :பாட்டி சாரி பாட்டி. தெரியாம கத்திட்டேன்
பாட்டி :அட விடுப்பா நீ என்ன பிரச்சனைல இருந்தியோ. டீ குடி
ராகுல் :இருங்க பாட்டி நான் வந்து டிவி என்ன ஆச்சுன்னு பாக்குறேன்
பாட்டி :அதெல்லாம் வேண்டாம் நான் போறேன்
ராகுல் :உங்க சீரியல் போடுற டைம் ஆச்சு வாங்க நம்ம வீட்ல உக்காந்து பாருங்க. வாங்க பாட்டி.
சீரியல் ஓட ஆரம்பித்தது பாட்டி இவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
பாட்டி :ஏன் பா உனக்கு எதாவது பிரச்சனையா ஏன் ஒரு மாதிரி இருக்க முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு என்ன காய்ச்சல்லா
ராகுல் :இல்லை பாட்டி நான் நல்லாத்தான் இருக்கேன்.
பாட்டி :உடம்புக்கு ஒண்ணுமில்ல அப்போ மனசுக்குத்தான் வேதனை அப்படித்தானே
மனிதனிடம் இருக்குற ஒரு பழக்கம் என்னனா அவனுள் தேக்கி வச்சிருக்க அந்த கண்ணீர் யாராவது வந்து என்ன ஆச்சுன்னு கேக்குறப்போ வெளியே வந்துடும். ராகுலும் மனிதன் தானே பாட்டியின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தான்.
பாட்டி :எப்பா என்னப்பா ஆச்சு உனக்கு. ஏன் நீ இப்படி அழுற. ஆம்பள பையன் இப்படி அழலாமா
ராகுல் :பாட்டி பையன்னா அழ கூடாதா. உடம்பு வலி வேற அத தாங்கிக்கலாம் ஆனா இது மனசு வலி இத தாங்கிக்க முடியல
பாட்டி :இங்க பாருப்பா நீ அழாத. என்ன ஆச்சுன்னு சொல்லு. கஷ்டத்தை சொன்னாலே பாதி வலி பறந்து போய்டும் சரியா
ராகுல் :நான் ஒரு பொண்ண லவ் பண்ணேன்ல பாட்டி அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சாம். இண்ணைக்கு வந்து என்கிட்ட சொன்னா
பாட்டி :அச்சச்சோ. நீ அவங்க வீட்ல போய் பேசு
ராகுல் :அவ வேண்டாம்ன்னு சொல்லிட்டா.சரி அவளை என்கூட வந்துடுன்னு சொன்னா அதுவும் முடியாதுன்னு சொல்லிட்டா. இப்படி விட்டுட்டு போறவ எதுக்கு என்ன காதலிக்கணும். இந்த பொண்ணுங்க ஏமாத்துவாங்கன்னு என்னோட பிரண்ட்ஸ் எவ்ளோவோ சொல்லியும் நான் கேக்கல இப்போ உண்மையா காதலிச்சிட்டு நான் அவஸ்தை படறேன்.
பாட்டி :ஏம்பா அப்படி சொல்ற அந்த பொண்ணு மனசும் வேதனை படலாம் இல்லையா
ராகுல் :வேதனை படறவ ஏன் பாட்டி அவங்க வீட்ல சொல்றத கேக்க போறா.
பாட்டி :தம்பி நான் உன்கிட்ட ரொம்ப நாளா பேசணும் நினைச்சேன். நம்ம பிரியா(ராகுல் தங்கச்சி ) இருகால்ல அவளும் காதலிக்கிறாளாம்.
ராகுல் :என்னது காதலிக்கிறாளா அம்மா என்ன பண்ணிட்டு இருக்காங்க இவ பண்றத கவனிக்காம . நான் இப்போவே அவளுக்கு போன் பண்ற
பாட்டி :பையன் கூட வேலை பாக்குற பையன் தானாம் நல்ல சம்பளம் நல்ல குடும்பம் தானாம்
ராகுல் :என்ன பாட்டி புரியாம பேசுறீங்க. நாங்க இல்லையா என்ன அவ சின்ன பொண்ணு பாட்டி அவளுக்கு என்ன தெரியும். எங்க குடும்பத்துல பொண்ணுங்க யாரும் காதலிச்சதே இல்லை தெரியுமா. இவ இப்படி பண்ணான்னா எப்படி பாட்டி
பாட்டி :என்னப்பா இப்போதான் காதல் தோல்வி அவ்ளோ வலிக்கும்ன்னு சொன்ன அதே நேரம் உன்னோட தங்கச்சி காதலுக்கு நீயே சப்போர்ட் பண்ண மாட்டேங்குற. என்னப்பா பதிலே இல்லையா என்ன. நான் சும்மாதான் சொன்னேன் உன் தங்கச்சி லவ் பண்றான்னு ஆனா நீ அதுக்கே இவ்ளோ கோவப்பட்டியே அப்போ நீ விரும்புன பொண்ணு வீட்லயும் இதேதான நிலைமை. உன் தங்கச்சிக்கு ஒரு நியாயம் நீ காதலிக்கிற பொண்ணுக்கு ஒரு நியாயமா என்னப்பா இது. நீ காதலிச்ச பொண்ண பத்தி நீயே இப்படி மத்தவங்க சொல்றத கேட்டு தப்பா நினைச்சா எப்படிப்பா. ஒரு காலத்துல உன்னோட சிரிப்புக்கு காரணமா இருந்த அவளை நீ ஏன் இப்போ இப்படி பேசலாமா. காதல் அப்படிங்கிறது காலம் முழுக்க கை பிடிச்சுட்டே போறதில்லப்பா அவங்க நம்ம கைய விட்டுட்டு போனாலும் அவங்க நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறது. அந்த பொண்ணு வேற வழியே இல்லாமதான் உன்ன விட்டுட்டு போச்சுன்னு நீ நினச்ச அப்டினா நீ அவள மன்னிச்சிரு.இதே அவ வேணும்னே பண்ணி இருந்தா அவளை மறந்துரு.
கொஞ்சம் நேரம் இருவரும் பேசினார்கள் சில நிமிட ராகுல் மௌனமாக யோசித்தேன்.
ராகுல் :நீங்க சொல்றதும் உண்மை தான் பாட்டி அவளுக்கும் வேற வழி இல்லை.நான் அவ வழியில குறுக்க போகாம இருக்குறதே நல்லது. தேங்க்ஸ் பாட்டி உங்க கிட்ட பேசலன்னா இப்போ வரைக்கும் நான் அவளை தப்பா தான் நினைச்சிருப்பேன்.
உங்களுக்கு எப்படி பாட்டி இப்படி யோசிக்க தோணிச்சு
பாட்டி :உங்க வயச நானும் தாண்டி வந்தவ தான். உங்க கஷ்டத்தை அனுபவ பட்டவங்க கிட்ட பகிர்ந்துக்கோங்க. அத விட்டுட்டு ஸ்டேட்டஸ் போட்டு சோசியல் மீடியால விரும்புனவங்கள திட்டுனா எல்லாம் சரியா போய்டுமா.சரிப்பா நீ கொஞ்சம் நேரம் தனியா இரு. நான் போறேன்.
பாட்டி சென்று விட்டார். ஒரு மாதம் கழித்து.
ராகுல் :பாட்டி பாட்டி அவளுக்கு கல்யாணம் அடுத்த வாரம் எனக்கு இன்விடேஸன் குடுத்துருக்கா
பாட்டி :நீ போறியாப்பா
ராகுல் :ஆமா பாட்டி நான் போறேன் உண்மைய சொல்லணும்ன்னா எனக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனா என்ன பண்ண எதார்த்தம் இதுதான்னா ஏத்துக்கதான் செய்யணும்.
பாட்டி :சில நேரத்துல எதார்த்தம் ரொம்ப காயப்படுத்துது இல்லைப்பா.
ராகுல் :ஆமா பாட்டி அதுவும் உண்மைதான். ஆமா நீங்க அண்ணைக்கு என்கிட்ட சொன்னிங்கல்ல அனுபவம் உண்டுன்னு நீங்களும் காதலிச்சிங்களா
பாட்டி :ஆமா காதலிச்சேன்
ராகுல் :பாருடா உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க பாட்டி
பாட்டி :அப்போ நான் டைப் ரைட்டிங் கிளாஸ் போயிட்டு இருந்தேன் அப்போ சைக்கிள்ள போவேன் அந்த காலத்துல சைக்கிள் கொஞ்சம் வீட்ல தான் இருக்கும் அதனால அதை ஓடுறப்போ அவ்ளோ பெருமையா இருக்கும். ஒரு நாள் அப்டித்தான் கிளாஸ்க்கு சைக்கிள்ள போயிட்டு இருந்தப்போ அவர போய் இடிச்சிட்டேன்
ராகுல் :அவருன்னா
பாட்டி :அவருன்னா அவருதான்
ராகுல் :ஓ அவரா
பாட்டி :ம்ம்ம். அப்படித்தான் அவர பாத்தேன். என்ன திட்டவே இல்லை போக சொல்லிட்டாரு. அந்த குணம் ரொம்ப பிடிச்சிசுச்சு அப்புறம் தினமும் அவர பாக்க அந்த டைம்ல போவேன். அவரு எங்க டைப் ரைட்டிங் கிளாஸ்கிட்ட இருக்க டீ கடையில டீ குடிச்சிட்டு அந்த புல்லட் பைக்ல போனா பாக்க அப்படி இருக்கும்
ராகுல் :அப்புறம் என்ன ஆச்சு
பாட்டி :அப்புறம் என்ன ஒரு மாசம் இப்டியே போச்சு. திடிர்னு வீட்ல கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. அவ்ளோதான் என்னோட சொல்லாக்காதலும் சொல்லாமலே முடிஞ்சு போச்சு
ராகுல் :அப்புறம் நீங்க அவர பாக்கவே இல்லையா போய் பேசி இருக்கலாமே அடலீஸ்ட் நீங்க சொல்லி இருக்கலாம்ல உங்களுக்கு அவர பிடிக்கும்ன்னு.
பாட்டி :இப்போ மாதிரி இல்லப்பா அப்போ இண்ணைக்கு தான் வாட்ஸாப் எல்லாம். அப்போ இருந்த நிலைமையில பாக்க முடியல.கல்யாணம் முடிவு ஆனதால என்னையும் எங்கேயேயும் போக விடல
ராகுல் :அவங்க பேர் கூட தெரியாதா
பாட்டி :அது ஒரு நாள் அவர ஒருத்தர் ராமானுஜம்ன்னு கூப்டாங்க அவ்ளோதான். அதான் அவரோட பேருன்னு அப்போதான் தெரியும் ஆனா இப்போ அவர் இப்போ எங்க இருப்பார்ன்னு கூட. ஏன் இருக்காரான்னு கூட தெரியாது.
ராகுல் :இந்த கடவுள் ஒருத்தங்கள சேத்து வைக்க முடியலைன்னா ஏன் பாக்க வைக்கிறாரு
பாட்டி :எல்லாம் ஒரு காரணத்துக்காகதான் இருக்கும். இப்போ கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை தானே கொடுத்திருக்காரு. தாத்தா என்மேல எவ்ளோ பாசமா இருக்காரு. இவர விட யாரு என்ன நல்லா பாத்துக்க முடியும்.
உனக்கும் உன்ன நல்லா பாத்துக்க எல்லாவற்றையும் பகிர்ந்துக்க ஒரு மனைவி கிடைப்பா. அப்போ நமக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரு வசந்த காலம் போல இருக்கும்.
ராகுல் :பாட்டி தாத்தாக்கு உங்க லவ் ஸ்டோரி தெரியுமா
பாட்டி :இல்லைப்பா அவருக்கு தெரியாது அது எண்ணைக்குமே அவருக்கு தெரிய வேண்டாம்
ராகுல் :இதோ பாருங்க தாத்தா வந்துட்டாரு
தாத்தா :என்ன பேச்சு இங்க ஓடுது
ராகுல் :இல்லை சும்மா தான் தாத்தா என்னோட பிரண்ட் கல்யாணம் பத்தி பேசிட்டு இருந்தோம்
தாத்தா :உள்ள போய் பேசலாம். சாரதா டீ போடும்மா. நம்ம பையன் ராமானுஜனும் (ராம் ) மருமகளும் பேரன கூட்டிட்டு நாளைக்கு வராங்களாம் அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் பண்ணனும்.
ராகுல் :ஓகே பாட்டி நான் வீட்டுக்கு போறேன்.
பாட்டி :நீயும் வா டீ குடிச்சிட்டு போலாம்
தாத்தா :வாப்பா டீ குடிச்சிட்டு போ
அப்போது ஒரு புல்லட் பைக் அந்த வழியில் சென்றது சட்டென்று சாரதா பாட்டி அந்த பைக் போவதை திரும்பி பார்த்தார் இதை ராகுலும் கவனித்தான்.
❣️காலங்களில் அது வசந்தம் ❣️
காதல் என்பது ஆணோ பெண்ணோ இருவருக்கும் பொதுவானதே.அது தரும் வலி இருவருக்கும் சமம் ஆனதே.உண்மையில் காதலித்தவர்கள் சேரவில்லை எனினும் அவர்கள் குழந்தையின் பெயராய் அல்லது அவர்களின் கடைசி நொடி வரை அவர்கள் நேசித்தவரின் நினைவுகள் என்றும் அவர்களுக்குள் வாழும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro