7
ஒரு மாதம் கழிந்தது
தமிழ்ச்செல்வி தனது பல்கலைக்கழக தேர்வில் எப்படியோ தேர்ச்சி பெற்றுவிட்டாள். அது முதல் செமஸ்டரின் தேர்வு முடிவுகள். குமரனும் அவ்வாறே தேர்ச்சி அடைந்தான். முடிவுகள் வந்த முதல் நாள் அன்றிரவே உதயனின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி. அமுதன் தனது மனைவி தமிழ்ச்செல்வியை அழைத்துக்கொண்டு அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் கலைக்கட்டியது.
உதயன் மணப்பெண்ணுடன் நடனம் ஆடுவதை அங்கிருந்தவர்கள் ரசித்துக்கொண்டிருந்தனர்,ஒருபக்கம் கமகமக்க உணவு விருந்து, இன்னொரு பக்கம் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். ஏதோ சினிமாவில் காண்பிக்கும் வி.ஐ.பி திருமணம் போல இருக்கவே அதைப்பற்றி எல்லோரும் அரங்கில் அளவளாவிக்கொண்டு இருந்தனர்.
"என்னங்க வாங்க மொய் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துட்டு வரலாம்" என்று அழைத்தாள் தமிழ்ச்செல்வி.
இருவரும் அரங்கில் அவர்களுக்கு கைகொடுத்து வாழ்த்திவிட்டு வரும்போது தான் மணப்பெண்ணின் தோழி ஒருவர் ஆங்கில வார்த்தையை அசைப்போட்டபடி வந்துக்கொண்டிருக்க எதர்ச்சையாக தமிழ்,அவள் மீது மோதிவிட
"ஹேய் டோன்ட் நோ தட் ஐயம் கம்மிங்..ஆர்.யூ..ப்ளைண்ட் ஆர் வாட்" என்று கோபிக்கும் தோரணையில் கூற அருகில் இருந்த அமுதனுக்கு பொங்கியது..
"ஹலோ மேடம் டோன்ட் யூ..ஆவ் மேனர்ஸ் இன் பப்ளிக் ப்ளேஸ்? திஸ் இஸ் அவ் யூ ஷவுட் " என்று நறுக்கென்று கேள்வியை கேட்க அந்த ஆங்கிலக்காரி முறைத்தபடி அந்த இடத்தை விட்டு சென்றாள்.
எங்கேயும் தன்னை விட்டுகொடுக்க மனமில்லாத தன் கணவனின் பறந்த மனதினை நினைத்துப் பார்க்க பூரித்து போனது அவளுக்கு. இருவரும் பங்ஷனிலிருந்து விடைபெற்று வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தாங்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையை கடந்து செல்ல நாளை ஐ.வி.எப் செய்ய போகும் முதல் பகுதி என்பது நினைவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் 'எக் ரீட்ரிவல் டே" எனக்கூறுவார்கள் மருத்துவர்கள்.
மறுநாள் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றனர். இதயமெல்லாம் குழந்தையின் கனவை பற்றி கோலம் போட்டுக்கொண்டு இருந்தது அவளுக்கு..
"என்னங்க எனக்கு என்னமோ தெரியல பயமாவே இருக்கிறது"என்றாள் சட்டென்று உதட்டை பிதுக்கியப்படி
"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று அமுதன் சொல்லி முடிக்கும் முன்பே செவிலியர் வந்துவிட்டார்
"சார் நீங்க வெளியே காத்துக்கொண்டு இருங்க இவங்களை தயார் செய்யனும்"என்று கூற அமுதன் வெளியே சென்றுவிட்டான்.
எல்லாம் தயாரான நிலையில் அவளை அழைத்துக்கொண்டு அந்த மகளிர் சிறப்பு வார்டினுள் சென்றனர்.
'கடவுளே காப்பாற்று' என்று சொல்லி முடிக்கும் போது அனிஸ்தீஷியாவின் எதிர்வினையாக மயக்க நிலைக்கு சென்றாள். சிலமணி நேரத்தில் சிகிச்சை முறை முடிந்தது. அவளை அறையில் வந்து படுக்க வைத்தனர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து..
"அம்முலு"...என்ற அவனது அழைப்பில் மெல்ல கண்களை திறந்தவள் "என்னங்க எனக்கு ஒன்றுமில்லை நான் நல்லா தான் இருக்கேன்,அப்றம் ஏன் கண் கலங்குறீங்க" என்று கேட்க அவனோ அவளது கைகளை பற்றி
"சாரி டா அம்மு எனக்கு மட்டும் எல்லாம் சரியாக இருந்திருந்தால் உனக்கு இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது ல?"என்று உருக்கமாக கேட்க அவளோ அவனது கைகளை இருகப்பற்றிக்கொண்டு
"நமக்காக நான் இந்த கஷ்டம் அனுபவிக்கிறதுல எனக்கு சந்தோஷம் தாங்க..சீக்கிரமே பாப்பா வந்தா சரி தான்" என்று பதிலளிக்க..அவளது தைரியமான பதிலில் அவனது வருத்தத்தை சற்று ஒதுக்கி வைத்தான்.
மீண்டும் செவிலியர் உள்ளே வந்து "மேடம் இப்ப நீங்கள் உங்களது வழக்கமான ஆடையை உடுத்திக்கொண்டு வீட்டுக்கு கிளம்பலாம். வாந்தி எதாவது வரமாதிரி இருந்தால் சொல்லுங்கள் உடனே ஊசி போடுகிறேன்" என்று கூற..
"இல்லை சிஸ்டர் நான் நல்லாயிருக்கேன் வாந்தி எதுவும் வரவில்லை" என்று கூறிவிட்டு செவிலியர் உதவியுடன் தனது சேலையை உடுத்திக்கொண்டு கையில் இருந்த ட்ரிப்ஸ் பேண்டேஜை அகற்றி விட்டு அமுதனுடன் ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றாள்.
வாசலில் ஆரத்தி தட்டுடன் மாமியார் ரங்கநாயகி நிற்பதை கண்டு திடுக்கிட்டு போனாள்.
"அத்தை...நீங்க எப்போ வந்திங்க"
"இப்பதான் தான் தாயி வந்தேன்" என்றபடி அவளுக்கு த்ரிஷ்டி கழித்துவிட்டு உள்ளே அழைத்து சென்று அவளை அமரவைத்தார்.
"களைப்பா இருப்ப கொஞ்சம் பால் காசி தரவா மா" என்று அக்கறையாய் கேட்ட மாமியாரை ஒருகணம் பார்த்து ஆச்சரியம் கொண்டவள் சரிங்க அத்தை என்று ஒப்புக்கொண்டு அவர் தந்த பால் டம்பளரை வாங்கி பருகினாள்.
"குமரா என்னடா இது அதிசயம்"என்று கிசுகிசுத்தான் அமுதன்.
"அண்ணே...நம்ப அப்பா போன் பண்ணி செம்மையா திட்டினாரு . அதான் நம்ப அம்மா கிளம்பி வந்துட்டாங்க"
"ஓ...அப்படியா"
"இங்க பாரு டி அவள் சிகிச்சை எடுத்துக்கிற வரைக்கும் முழுமையாக நீ இங்கதான் இருக்கனும். அதுமட்டுமின்றி எல்லாம் வேலையும் நீ தான் செய்யனும்" என்று உத்தரவிட்டார் தர்மலிங்கம்.
எந்த விஷயத்திற்காக ரங்கநாயகி கோபித்துக்கொண்டு போனாரோ அதே விஷயத்திற்காக தான் மறுபடியும் இங்கே வந்துள்ளார். குழந்தை இல்லை என்ற காரணத்தினால் தமிழ்ச்செல்வியை அரசமரம் சுற்றி வா தினமும் என்று உத்தரவிட அதை மறுத்த தமிழ்ச்செல்வி மீது கோபம் கொண்டு தான் ஊருக்கே சென்றுவிட்டாள் ரங்கநாயகி..
இன்று மறுபடியும் திரும்பியுள்ள ரங்கநாயகி மேற்கொண்டு தன் மறுமகளை எவ்வாறு கவனித்துக்கொள்வார் என்று பொறுத்திருந்தே பார்ப்போம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro