Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

எதிர்முனையில் அவளிடம் பேசியது அவளுடைய கொழுந்தன் குமரன்.
"அண்ணி எனக்கு சென்னையில் உள்ள காலேஜில் தான் இன்ஜினியரிங் சீட் கிடைச்சிருக்கு. இனி அங்கத்தான் நான் தங்கி படிக்க போறேன்"

"அதுக்கென்ன குமரா தாராளமா வந்து தங்கிக்கோ இது உன் வீடுமாதிரி புரியுதா" என்று தன் களைப்பை மறைத்து அவனிடம் பாசமாக பேச அவனோ தாயின் பாசம்போல் தன் அண்ணியாரிடமும் கிடைக்க எதுவும் யோசிக்காமல் அங்கேயே தங்கிக்க முடிவு செய்தான்.

"அண்ணி நான் இப்ப பஸ் ஏறப்போறன் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை வந்திடுவேன். உங்கள் வீடு எனக்கு பரிட்சயம் கிடையாது நீங்க வந்து உங்கள் ஏரியா பேருந்து நிலையத்தில் வந்து நில்லுங்க. கோயம்பேடு வந்து இறங்கினவுடனே போன் பன்றேன்."என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு தன்னுள் இருக்கும் மனக்கவலைகளை எல்லாம் சற்று ஒதுக்கிவிட்டு தன்னுடைய கொழுந்தனுக்கு பிடிக்குமென கேரட் அல்வா தயாரிக்க தயாரானாள்.
கேரட்டை துருவிக்கொண்டு இருக்கும்போது தான் வீட்டில் நெய் இல்லை என்பது நியாபகத்திற்கு வந்தது.

சரி கடைக்குச் சென்று வரலாம் என கூந்தலை ஒதுக்கியபடி விருவிருவென காலணியை மாட்டிக்கொண்டு வெளியே நகர்ந்தாள். எதிரே ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வயிற்றை சாய்த்தபடி நடந்துவர அதை கண்டதும் ஏனோ அவளுடைய மனது தனது கர்பக்காலம் பற்றிய சிந்தனைக்கு சென்றது....

"என்னுடைய கர்பக்காலம் எப்போது வரும்" என்று மனதிற்குள் கேள்வி எழுப்பியபடி கடையை நெருங்கினாள்.
"அண்ணாச்சி ஆஷிர்வாத் நெய் இருக்கா?"என்று கேட்க " "ஆஷிர்வாத் நெய்யோட சேர்த்து என்னோட ஆசிர்வாதமும் இருக்கு" என்று சிரித்தவாறே கூற அவருடைய வார்த்தைகள் ஏதோ ஒரு நேர்மறையான எண்ணத்தை அவளுக்கு கொடுக்க நெய்யை வாங்கியப்படி வீட்டிற்கு நடந்து வரும்போது தான் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி அவளை தடுத்து நிறுத்தினார்
"தமிழ் ..என்ன நெய் வாங்கிட்டு போற போல..வீட்டில் எதாவது இனிப்பு பன்ன போற போலருக்கு" என்று வினவ
"ஆமா மாமி என் கொழுந்தனுக்கு பிடிக்குமேனு கேரட் அல்வா பன்னப்போறேன்"
"ஓ...பரவாயில்லை டி மா வீட்டில் நல்லா சமைப்ப போலயே ஒரு நாள் விருந்துக்கே வத்திடுறன்" என்று கூறி முடித்துவிட்டு "அச்சோ சொல்ல வேண்டிய விஷயமே மறந்துட்டேன்.. நாளைக்கு என் மகளுக்கு வலைகாப்பு ,கண்டிப்பாக வந்துடுடி மா.."என்று பரபரப்பாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"வலைகாப்பு" இந்த வார்த்தையை ஒருமுறை உச்சரிக்க அதை தானே நம் மனமும் தேடுகிறது என்று உணர்ந்தவள் விரைவில் அந்த மகிழ்ச்சியான நிகழ்வு தனக்கும் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தாள்.சிறிது நேரத்தில் குமரனிடமிருந்து அழைப்பு வந்தது.
"அண்ணி உங்கள் இடத்துக்கு இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்திடுவேன். சீக்கிரம் வந்து நில்லுங்க"என்றவுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள். குமரன் வரும் செய்தி தர்மலிங்கத்திற்கும் அமுதனுக்கும் தகவலும் தெரிவித்திருந்தாள்.

பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் ஆங்காங்கே ஓரிருவர் நின்று பேருந்திற்காக காத்துக்கிடக்க இடை இடையே ஓர் பார்வையற்ற பிச்சைக்காரன் மட்டும் வந்து நின்று காசு கேட்டுக்கொண்டு இருந்தான். பாவம் அவனை யாரும் கண்டுக்காத நிலையில் அங்கும் இங்குமாக தடியை வைத்துக்கொண்டு நடந்துக்கொண்டிருக்க அவனை பார்த்ததும் ஒரு விஷயம் புரிந்தது.
"வாழ்க்கை சிலருக்கு இருட்டாக இருக்கலாம் ஆனால் உலகமே இப்படி இருட்டாக இருக்கும் பார்வையற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று" எனவே கையில் இருந்த அந்த பத்து ரூபாய் நோட்டினை அந்த பிச்சைக்காரனுக்கு அளிக்க அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு "நீ நல்லா இருக்கனும் தாயி"என்று வாழ்த்திவிட்டு அவளை கடந்தான். அவன் தன்னை கடந்து விட்டு சென்றபின் தான் ஏதோ வாழ்க்கை மீதே ஒரு பிடிமானம் வந்தது அவளுக்கு.
பேருந்து வந்து நின்றது. குமரன் இறங்கிவிட்டு "ஹாய் அண்ணி"என்று கையசைக்க பதிலுக்கு அவளும் புன்னகையித்தபடி "குமரா எப்படி டா இருக்க இப்பதான் சென்னைக்கு வரனும்னு உனக்கு தோன்றியிருக்கு இல்ல.." என்று பாசத்துடன் கோபிக்க..

"அப்படியெல்லாம் இல்லை அண்ணி,அங்க ஊர்ல நண்பர்கள் பள்ளிக்கூடம் என்று கொண்டாட்டமா இருந்தேன். அதான் எங்கயும் வரவே தோன்றல, ஆனால் விதி பார்த்திங்களா கடைசியில் இங்க வந்து படிக்கனும்னு இருக்கு" என்றுரைக்க..

"ஆமா டா குமரா என்ன பன்றது கவுன்சிலிங் ல எந்த காலேஜ் முடிவு ஆகுதோ அங்கத்தானே சேரமுடியும்"என்று புன்னகையிக்க..

"ம்ம்ம் சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கு ஒரு சப்ரைஸ் வச்சிருக்கேன் தெரியுமா? "என்று கூற எதுவும் புரியாமல் அவள் விழிக்க வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் தன் பையை எடுத்து அதிலிருந்து ஒரு அப்லிகேஷனை நீட்டினான்.

அதை வாங்கி படித்தவளுக்கு இன்ப அதிர்ச்சி அதில் புதிதாய் பகுதி நேரத்தில் இன்ஜினியரிங் சேருவதற்கான அப்லிகேஷன்.

"குமரா...என்னடா? இது யாருக்கு"என்று வியப்பாக கேட்க அவனோ சிரித்தவாறே சைகையால் இது உங்களுக்கு தான் என்று கூற ஓர் நிமிடம் திகைத்து போய் நின்றாள்.

"குமரா...உங்கள் அண்ணணுக்கு தெரிந்தால் என்ன சொல்வாரு என்று தெரியாதே,இப்படி திடுதிடுப்புனு அப்லிகேஷனை நீட்டினால் நான் என்னடா பன்னமுடியும்"?

"அண்ணன் கிட்ட நான் ஏற்கனவே எல்லாம் பேசிட்டேன், அண்ணி ஒன்றும் பிரச்சினை இல்லை.. நீங்க தாராளமாக பகுதி நேரப் படிப்பை தொடரலாம்"

"அப்படி னா அமுதனுக்கு ஓகே தானா"?

"டபுள் ஓகே..உண்மையை சொல்லனும் என்றால் இந்த அப்லிகேஷனை வாங்க சொன்னதே எங்க அண்ணன் தான்.. கல்யாணம் ஆன புதுசுல இன்ஜினியரிங் படிக்க முடியவில்லை அப்படினு நீங்க வருத்தப்பட்டிங்களாமே அதான் டிப்ளமோ முடிச்ச உங்களுக்கு மேற்கொண்டு படிப்பை துவங்க அண்ணன் உதவி பன்றாரு"என்று கூறிவிட்டு "சரி சரி நான் கை கால் அலம்பிட்டு வரேன் எனக்கு சாப்பிட எதாவது எடுத்து வைங்க"என்றபடி நகர்ந்தான்.

"அமுதன் ரொம்ப தாங்க்ஸ்"என்று கட்டிபிடித்து சொல்லனும் போல அவளுக்கு இருந்தாலும் அதற்காக இரவு வரை அவள் காத்திருக்க நேரிடுமே...என்ன செய்வது சரி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைப்போம் என்று தன் கைப்பேசியை எடுத்து
"தாங்க்ஸ் அமுதன்" என்று தட்டச்சு செய்து அனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கலானாள்.

எவ்வளவு தான் வேலை செய்துகொண்டு இருந்தாலும் தற்போது அவளுடைய மனம் அமுதனை தேடியது. உண்மையில் குழந்தை இல்லை என்ற குறையை தவிர தமிழுக்கு அப்படி என்னதான் குறை ? ஒன்றுமில்லையே பிறகு ஏன் எப்போதும் அவள் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை? காரணம் அவளுடைய தேடல் குழந்தை பெறுவது மட்டுமல்ல அதையும் தாண்டி அவளுடைய தேடல் நிறைய இருக்கிறது அதில் ஒன்று தான் இந்த இன்ஜினியரிங் கனவு.

இரவு நேரம் ஒன்பது இருக்கும் வீட்டிற்கு வந்த அமுதன் தன் உடன்பிறப்பான குமரனை பார்த்ததும் கட்டித்தழுவி வரவேற்றான்.
"என் செல்லம் இன்ஜினியரிங் படிக்கிற அளவு ஆயிட்டியா. இப்பதான் உன்னை தலையில் கொட்டி பள்ளிகூடத்தில் உக்கார வச்சிட்டு வந்த மாதிரி இருக்கு" என்று கூற..

"அண்ணா...இதில் என்ன ஆச்சரியம் நான் தான் வளர்ந்துட்டேனே! காலேஜ் போய் தானே ஆகனும் அதானே என் எதிர்காலமும்"என்று இயல்பாக பேச அமுதனும் அவனை தோளில் தட்டிக்கொடுத்து "தட்ஸ் மை ப்ரதர்" என்று பாராட்டிவிட்டு எதர்ச்சையாக தமிழை நோக்கினான்.

"அம்முலு எதுக்குடா தாங்க்ஸ் சொன்ன"என்று காதுகடிக்க..

"அ...அது வந்து... நைட்டு தூங்குறப்ப சொல்றேன்" என்று சிரிக்க.

"அப்லிகேஷன் விஷயம் தானே"? என்று புருவத்தை உயத்தியவாறு கேட்க அவளோ அவ்வாறே தலையசைக்க சிறிது நேரத்தில் இரவு நேர உணவை அனைவரும் பகிர்ந்து உண்டுமுடிக்க...

"என்னங்க.."

"என்ன" என்று அமுதன் கேட்க

"குமரன் வந்து ரொம்ப நாள் ஆச்சு,இன்னைக்கு ஒருநாள் எல்லாரும் முற்றத்தில் படுத்து உறங்கலாமே" என்று அவனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அனைவருக்கும் முற்றத்தில் பாயை விரித்து தலையனை வரிசையாக அடுக்கி வைக்க..

"அண்ணே....உன் ஆபிஸ் வேலை எப்படி போது ? அப்றம் எப்படி இருக்காங்க அந்த லேடி எச்.ஆர்" என்று குறும்புத்தனமாக அண்ணணிடம் பேச்சை ஆரம்பிக்க இரவு பன்னிரெண்டு மணி வரை உரையாடல் நீண்டுகொண்டே போனது.

"என்னங்க குட்நைட்" என்றபடி அவளும் மறுபக்கம் திரும்பிக்கொள்ள அமுதனுக்கு ஏனோ ஓர் மனத்திருப்தி ஏனெனில் எப்பொழுதும் ஏதாவது ஒன்றை சிந்தித்துக்கொண்டு தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இருக்கும் தமிழுக்கு இன்று ஏனோ அவளுடைய மனது மலர்ந்த மலர் போல இருக்கிறதே அப்படி என்றால் அவளுடைய மன ஆறுதல் குடும்ப உறுப்பினர்களின் இனிமையான பேச்சிலும் அடங்கியுள்ளது. அப்படி என்றால் இனி அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வரமுயற்சி செய்யவேண்டும்.இவளுடன் நேரம் செலவிடவேண்டும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டவன் தனக்கும் நித்திரா தேவி தழுவிக்கொண்டதை உணர்ந்து போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான்.

அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தபோது தான் அந்த குடுகுடுப்புக்காரனின் சத்தம் காதை பிளந்தது
"நல்ல காலம் பொறக்கது..நல்ல காலம் பொறக்கது..ஆனால் அதற்கு காலம் நேரம் இனிமேல் தான் கூடிவரும். ஜக்கம்மா வாக்கு பலிக்கும்" என்று கூச்சலிட தமிழ்ச்செல்வி விழித்துக்கொள்ள....

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro