Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 42







Date published: 1 January 2024

Word count 2626

"ரெண்டு நாளா உன்னை பாக்கலை செல்லம்மா படுத்தாத டீ. போதும் உன் விளையாட்டு".

ஏக்கம், காதல், பரிதவிப்பு என எல்லாம் கலவையாக அவனை ஆட்டிபடைக்க கெஞ்சி கொண்டிருந்தான் அவளிடம் கைபேசி வழியாக.

உள்ளூர பாவமாக தோன்றினாலும் ஒரு காரணமாகவே இந்த விளையாட்டை தொடங்கியிருந்தாள் பூரணி.

"விஷ்வா பேபி, நான் தான் சொன்னேன்ல. நாலு நாள் ஒரு கேம். தினம் ஒரு புதிர். அதையெல்லாம் நீ சால்வ் பண்ணினா, உன் பிறந்தநாள் பரிசா we can go on a date.
உன் பிறந்தாளை, நாம ஒண்ணு சேர்ந்ததை புதுமையா கொண்டாட தான் இந்த ப்ளான். இதெல்லாம் சொன்னப்ப பூம் பூம் மாடு மாதிரி மண்டைய ஆட்டிட்டு இப்ப என்னடா சென்டியா பேசி கவுக்க பாக்கற? "

"ஏய் ஃப்ராடு பேபி! Game  duration and சந்திக்க முடியாதுங்கற கண்டிஷன்லாம் அப்ப சொல்லவேயில்ல நீ..."

"Terms and conditions apply னு அன்னிக்கு சொன்னேன் நீ தான் date அப்படீன்னதும் எதையெல்லாமோ எதிர்பார்த்து ஜொள்ளு விட்டுட்டு நான் சொன்ன எதையும் கவனிக்கலை."

"அப்ப! மேடத்தோட விலைமதிப்பில்லாத ஒரு நாளோட ஈக்வல், நான் நாலு நாள் காயுறதா?"

"இல்லை என் சிவாவோட இத்தனை வருஷ காத்திருப்புக்கு பரிகாரம் அல்லது பரிசுன்னு வச்சுக்கோயேன்"
அவள் குரலில் லேசான குற்ற உணர்வும் வருத்தமும் இழையோடியது.

"ஜானூ not again..." அவள் மனப்போக்கை புரிந்தவன் சட்டென பேச்சை மாற்றினான்.
"ஆமா அதெப்படி நான் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடுவேன்னு நம்புற? மாமா ஸ்மார்ட்னு அவ்வளவு நம்பிக்கை உனக்கு?" மேஜையின் மீது வைத்திருந்த இரண்டு  பரிசு பெட்டிகளை பார்த்தான், முதல் இரண்டு புதிர்களை கண்டுபிடித்ததன் அடையாளம்.

"மக்கு மாமா! நீ புத்திசாலியா  இல்லையானு கண்டுபிடிக்க நான் இந்த கேம் விளையாடலை. நம்ம life பேஸ் பண்ணி தான் இதெல்லாம்".

அவனிடமிருந்து பதில் வராது போக, "டேய்ய்ய்... விஷ்வா.. அந்த கிஃப்ட் பாக்ஸை திறக்கலாமானு யோசனையா? அதை மட்டும் நீ திறந்த.. ஆயுசுக்கும் பிறந்தநாளை தனியா கொண்டாட வேண்டியது தான்".
அவள் குரல் எச்சரிக்கையாக ஒலித்தாலும், அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஆமா நீ எப்படி கண்டுபிடிச்ச?  இங்க தான் இருக்கியா?" என ஜன்னல் வழியாக வெளியே தேடினான்.

"அது உனக்கு எதுக்கு இப்ப? இந்த கேம் நீ ஒழுங்கா ரூல்ஸ் கடைபிடிச்சு விளையாடி முடிச்சா தான் உனக்கு உன் பொண்டாட்டி தரிசனம் கிடைக்கும். ஓகே?"

"என்ன பேபி நீ இப்படி சோதிக்கற? எனக்கு உன்னை இப்பவே பாக்கணும் டீ. ப்ளீஸ் பேபி நான் பாவம்ல. இத்தனை வருஷம் என் பேபியை விட்டு தனியா எவ்வளவு ஏங்கி போயிருக்கேன்" கெஞ்சி குழைந்தான். "அது மட்டும் இல்லை சித்தப்பா கூட இங்க இல்லை கொஞ்சம் சந்தோஷமா ஃப்ரீயா மீட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணா ஆப்பு வைக்கிறியே டி என் அழகு ராட்சசி"

"ஓ! என்னை பாக்கணுமா அதுக்கென்ன இப்பவே ஏற்பாடு செஞ்சுட்டா போச்சு. ஒரு நிமிஷம் இரு.." என அவன் அழைப்பை துண்டித்து விட்டு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தாள்.
"சிவா என்னை பாத்தாச்சுல இப்ப ஹாப்பியா?" என்றதும் இங்கே அவன் முகம் சுருங்கியது.

கலகலவென சிரித்து "கடுவன் பூனை மாதிரி மூஞ்சியை வச்சிக்காத டா என் அழகா, சீக்கிரமே கிழவனாயிடுவ."

"ஆமா நேர்ல கொஞ்ச வேண்டியதெல்லாம் போன்ல கொஞ்சு ஜானுமா நீ. ஆமா..."
சந்தேகமாய் இழுத்தான்.
"நான் பண்ணற எல்லாத்தையும் கரெக்டா சொல்ற?"

"ம்ம்..ஸ்பை கேம் வச்சிருக்கேன் உன் ரூம்ல..."

"ரியலீ?" குரலில் குறும்பு கொப்பளிக்க "அப்ப மாமன் பண்ற எல்லாத்தையும் வாட்ச் பண்றியா?"
'எல்லாத்தையும்' என்பதை அழுத்தி சொல்லி அவளை சிவக்க செய்தான்.

"அடப்பாவி! அர்ஜுனோட சேந்து கெட்டு போய்ட்ட டா சிவா. சரி சரி வெட்டி பேச்சு பேசாத. நாளைக்கு உன்னோட டாஸ்க்குக்கு ரெடி ஆகு. கொஞ்ச நேரத்துல என் மெஸேஜ் வரும். ஓகே?

சாப்பிட்டியா?"

"இல்லை சாப்பிடலை. ஏன் நீ வந்து ஊட்டி விட போறியா?"  என்றான் சலிப்பாக

"அலையாத டா.."

"ஜானு இதெல்லாம் முடிஞ்சு உனக்கு நான் ஒரு டாஸ்க் குடுப்பேன்..."

"நீ வில்லங்கமா எதாச்சும் சொல்லுவ போடா. சுகு நிச்சயத்துக்கு முன்னாடி போன்ல சொல்லி மாட்டினதுக்கு இப்ப தான் எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் ரெஸ்ட்டு கிடைச்சிருக்கு" என தன் இதழை  வருடி கொண்டாள் கண்ணாடி பார்த்து, சடைத்து கொண்டாலும் வெட்கத்தில் முகம் பூக்க, உள்ளுக்குள் ஒரு சின்ன ஏக்கம் எட்டி பார்த்தது.

"அந்த கணக்கெல்லாம் வட்டியோட சேத்து சரி கட்டிடலாம், ரொம்ப ஃபீல் பண்ணாத. இப்ப நீ சொன்னதுக்கு எல்லாம் நான் ஒத்துகிட்டது போல நீயும் ஒத்துக்கணும். அதுவும் ஒரே ஒரு டாஸ்க் தான். ஓகே?"

⚜️⚜️⚜️

பூரணி அடுத்த நாளுக்கான புதிரை அவனுக்கு குறுஞ்செய்தியாக அன்றிரவு அன்ப்பினாள்.

'ராம லட்சுமணனுக்கு பிடித்த இடம்.
நட்பு அடுத்த கட்டத்தை எட்டிய இடம்
நீ உயர்ந்தாய், நான் வீழ்ந்தேன்.
விழுந்தவளுக்கு இனிப்பு
உதவியவனுக்கு ஆப்பு!'

இருவரின் கடந்த கால நினைவுகளை புதுப்பிக்கும் வண்ணமாக புதிர்களை வடிவமைத்திருந்தாள். 

"ஹாய் சைத்தான்!" அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் ஷர்மிளா 
"என்ன அடுத்த riddle (புதிர்) ரெடியா?"

"ம்ம்ம் ரெடி அவனுக்கு அனுப்பிட்டேன். பாக்ஸை கொண்டு அங்க வைக்கணும்.

எங்க பிரிவுக்கு முன்னாடி எந்த இடத்துலலாம் முக்கியமான சம்பவம் நடந்ததோ அதெல்லாம் ஞாபகப்படுத்தற வகையில ஒரு க்ளூ குடுப்பேன் புதிர் டைப்ல, அதை கண்டுபிடிச்சுட்டு அதை என்ன இடம்னு கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டான்னா, அந்த இடத்துக்கு போய் பாக்கணும் அங்க ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருக்கும் அதை எடுத்துட்டு வரணும் ஆனா ஓபன் பண்ண கூடாது. எல்லா புதிரும் கண்டுபிடிச்ச பிறகு  கடைசியில அந்த பாக்ஸ் எல்லாம் சேர்த்து ஓபன் பண்ணணும். அதுக்குள்ளேயும் ஒரு ரிடில் இருக்கு அதை சால்வ் பண்ணா ஃபைனல் ஆன்ஸர் கிடைக்கும்."

"Treasure hunt game மாதிரி? கரெக்ட்? என் ஹெல்ப் வேணுமா flower baby?"

"அம்மா அப்பாவோட ஹாஸ்பிடல்ல இருக்க நேரத்துல நீங்க என்னை பாத்துக்கறீங்களே இது எவ்வளவு பெரிய ஹெல்ப்?"

"ஏய் நடிகையர் திலகம் senti scene போடாத டி முடியலை" என கிண்டலாக நெஞ்சை பிடித்து கொண்டாள் ஷர்மிளா. உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்த சுகந்தியிடம் பேசிவிட்டு உறங்க சென்றனர் இருவரும்.

⚜️⚜️⚜️⚜️⚜️

விஷ்வா தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான். முதல் இரண்டு புதிரையும் மீண்டும் படித்தான் ஒரு தொடர்ச்சிக்காக. முதல் புதிரின் விடை பூங்கா காலனி அஸோசியேஷன் ஆபிஸ். அங்கு சென்றபோது பிள்ளைகளுக்கான கேம்ஸ் ரூமில் பரிசு பொருள் இருந்தது.

இரண்டாவது புதிரின் விடையாய் அர்ஜுனின் அறை இருக்க, பரிசு பொருள் அவனிடம் இருந்தது.

மூன்றாவது புதிரை மீண்டும் படித்தான். நெடு நேரம் யோசித்து க்ணணயர்ந்துவிட, சட்டென பொறி தட்டியது போல் விழித்தான். கைபேசியை இயக்கி பூரணிக்கு பதிலை தட்டச்சு செய்து அனுப்பினான்.

Answer: poonga colony basket ball court.
ராம லட்சுமணன்னு நீ குறிப்பிடுறது என்னையும் அர்ஜுனையும் எங்களுக்கு பிடிச்ச கேம் அது. 

நட்பு அடுத்த கட்டத்தை எட்டிய இடம். நீ என்னை basket ball coach ஆக இருக்க சொல்லி கேட்ட.

நீ உயர்ந்தாய்: நான் zonal டீமுக்கு செலக்ட்  ஆகியிருந்தேன்.
நான் விழுந்தேன்: அப்படி விளையாட சொல்லி குடுக்கும் போது உனக்கு அடிபட்டுச்சு. ரொம்ப அழுத.

விழுந்தவளுக்கு இனிப்பு:  உன்னை சமாதானம் பண்ண நான் நிறைய சாக்லேட் வாங்கி குடுத்தேன்.

உதவியவனுக்கு ஆப்பு: அப்புறம் எனக்கு சித்தப்பாகிட்ட செம டோஸ்.

குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான். கைபேசியில் சத்தத்தில் விழித்தவள்

"ஆன்ஸர் கரெக்டு. ஆனா டைமிங்க் தான் ராங்க்" என பதில் அனுப்பினாள்.

"ஏன்" என்றான் அவன் குழப்பமாக.

"சிவா ஊரே தூங்குது, மணி மூணு டா. நீ தூங்கலியா?"

"அச்சோ சாரி ஜானு, நீ தூங்கு மா.."

⚜️⚜️⚜️

உறக்கம் தொலைத்த சமயங்களிலும் மனம் தனிமையில் வெதும்பிய சமயத்திலும் விஷ்வாவிற்கு கைகொடுத்தது விளையாட்டும் ஓவியமும்.

Interior Designing சம்பந்தமாக அவன் புதிய ப்ளானிங்க் செய்வதும். ஓவியம் வரைவதும் இதுபோன்ற அதிகாலை வேளைகளில் தான்.
வரைந்ததை கோப்புகளிலும் பத்திரப்படுத்தி. கணினியிலும் பதிவேற்றி சேமித்து வைத்திருந்தான். அப்படி புதிதாக வரைந்த designs சிலவற்றை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துவிட்டு அலுவலக மின்னஞ்சல் சிலவற்றுக்கு பதிலளித்தான்.

அலுவலகம் போகும் வழியில் பரிசு பொருளை எடுத்து விட்டதாக பதில் வந்தது அவனிடமிருந்து.

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள் பூரணி.

"பேப்ஸ் மருந்து போட்டுகிட்டியா டீ?" ஷம்முவின் குரல் கேட்டு திரும்பியவள் கையில் களிம்பை பார்த்து, "சரியாயிடுச்சா?"

"ம்ம் கொஞ்சம் பெட்டர் கா."

"சரியான சைத்தான்" நெற்றியில் லேசாக தட்டி, "அவனுக்கு தெரிஞ்சுது என்னை கொலை பண்ணிடுவான். எப்படி இதுக்கு தைரியமா ஓகே சொன்ன?"

"அவன் அன்புக்கு முன்னால இதெல்லாம் ஒண்ணுமில்லை கா" கண் கலங்கியது"

அவளை அணைத்து கொண்டு, "babes யாரு அதிகமா லவ் பண்றானு பாக்கறது. யாரு எவ்வளவு செஞ்சாங்கனு கம்பேர் பண்றது. இதெல்லாம் லவ் இல்லை ஆனா மனுஷனோட புத்தி இருக்கு பாரு அது வெளிப்படையா எதாச்சும் proof இருந்தா தான் எல்லாத்தையும் ஏத்துக்கும். இல்லைனா சந்தேகப்படும். அதுவே கற்பனை பண்ணி கண்டதையும் நினைக்கும், சண்டை போட சொல்லும்" மெல்ல அவளை விடுவித்து, மருந்தை போட்டுக்கொள்ள உதவிசெய்தாள்.
 

"மோஸ்ட் இம்பார்டண்ட், இந்த வாழ்க்கை உங்க ரெண்டு பேரோட அழகான பயணம். சும்மா ஒரு டிரைவ் போறது, ஊருக்கு போறதுக்கே எவ்வளவு ப்ளான் பண்றோம்? அந்த சின்ன பயணத்தையே சந்தோஷமா என்ஜாய் பண்ண அவ்வளவு முயற்சி... இது வாழ்க்கை. புரிதல், அன்பு, சந்தோஷம், நம்பிக்கை எல்லாம் இருந்தா தான் எதையும் சேர்ந்து ஃபேஸ் பண்ண முடியும்".

புரிந்து கொண்டதன் அடையாளமாய் புன்னகைத்து தலையாட்டி அவளை அணைத்துக் கொண்டாள் பூரணி.

"அய்யோ! டீ.வி. சீரியல் அம்மா மாதிரி அட்வைஸ் குடுக்கற அளவுக்கு வெட்டியா இருக்கியா டி ஷம்ஸ்?"

அதிர்ச்சியாக முக மாறுதலை காட்டி தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டு "சீக்கிரமா வேலை தேடணும்" என தலையை சிலுப்பி கொண்டாள்.

கல்லூரியிலிருந்து வந்ததும், அடுத்த புதிருக்கும், கடைசி கட்டத்திற்காகவும் தேவையானவற்றை தயார் செய்தாள்.
'Last clue' என குறுஞ்செய்தி அனுப்பினாள்

'அன்னபூரணியாக மட்டுமே
இருந்த நான்
என் சிவாவின் செல்லம்மாவாக மாறிய தருணம்'

ஒரு சில வினாடிகள் புருவம் நெறிய யோசித்தான், 'அவளுக்கு ப்ரபோஸ் பண்ணினதை சொல்றா...'

'ஷம்முவோட வீட்டுல தான் ப்ரபோஸ் பண்ணேன், இப்பவே போகட்டா? அந்த செயின் போட்டுவிட்டதும் அங்கே தான்'

அவள் ஒப்புதல் அளித்ததும், அடுத்த வினாடி படிகளில் கால் படாமல் பறந்தான் என்று தான் சொல்லவேண்டும்.

அவனை எதிர்பாரத்திருந்த ஷர்மிளா, "வா டா நல்லவனே.. நாளைக்கு வரை வெய்ட் பண்ண முடியலையோ?"
என சிரிப்பை அடக்கி கேட்க, வெட்க பட்டு அசடு வழிந்தான். அவனை தனிமையில் விட்டு உள்ளே போய்விட்டாள் ஷர்மிளா.

உள்ளே போனதும் கண்களால் வீட்டை துழாவினான்.

வீட்டின் முன் அறையில் வைத்து தான் அவளிடம் தன் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொண்டதும். நினைவுகளில் மூழ்கியவனுக்கு உடல் சிலிர்த்தது, உள்ளுக்குள் மழை சாரல் அடித்தது, இதயம் உற்சாகத்தில் துள்ளியது.

அந்த நினைவு தந்த ஆனந்தம் மட்டுமே அவன் கடந்து அந்த அனைத்து வலிகளை மறக்கச் செய்து விடும் ஆற்றல் கொண்டிருந்தது.

இதோ இப்பொழுது கூட அவள் தன் கை அணைப்பில் முதன் முறையாக இருந்த நினைவு மேலிட, கண் மூடி ரசித்தான். முதல் முறையாய் தன் மார்பில் அவள் சாய்ந்திருந்த உணர்வு, பசுமரத்தாணியாக உயிரில் பதிந்து விட்டிருந்தது.

அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த ஒவ்வொரு இடத்திற்கு போகும் போதும் இப்படி தான் ஒரு சுகமான உணர்வு ஏற்பட்டது. இயல்புக்கு மீண்டு அந்த அறையை நோட்டமிட்டான். தொலைகாட்சி பெட்டி அருகே மேஜையில் இருந்தது அவன் தேடி வந்த பரிசு பெட்டி, அதை எடுத்து கொண்டு ஷம்முவிடம் விடை பெற்றான். வீட்டிற்கு வந்ததும் நான்கு பரிசுகளையும் ஒன்றாக வைத்து புகைபடம் எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தான்.

"ஹாய் அனகோன்டா, நாளைக்கு உன் பிறந்தநாள் இல்ல? என்ன ப்ளான் பர்த்டேவுக்கு?" அவனை வம்பிழுக்க.

"ம்ம்ம்...நாலு கேர்ள் ஃபிரண்ட்ஸை கூட்டிட்டு டேட்டிங்க் போறேன். அஞ்சாவதா நீயும் வேணா வாயேன்!"

"டேய் கொன்னுடுவேன்! நாலு கேர்ள்ஃபிரண்டு கேக்குதா உனக்கு? இரு வரேன் உன்னை" என ஆங்காரமாக கத்தி அழைப்பை துண்டித்தாள்.

"வாடி செல்லம் மாமா அதுக்கு தான் வெய்டிங்"
குதூகலமாக சீட்டி அடித்தபடி கண்ணாடியில் பார்த்து தலையை கோதி கொண்டான். மீண்டும் கை பேசி அலறி அவள் தான் என தெரிவித்தது.

"என்ன ஜானு வந்துட்டியா?"

"ஏமாந்தா... ஏன் டா நான் இப்படி ரியாக்ட் பண்ணி உடனே வந்துருவேன்னு தான நீ புளுகுன? நாங்கள்ளாம் யாரு? எப்படி என் நடிப்பு?"

அவன் முகம் சுருங்கியது.

"ஸோ sad மிஸ்டர் விஷ்வா! உங்க ப்ளான் ஊத்திகிச்சு. நெக்ஸ்ட் என்ன பண்ணணும்னு அப்புறம் சொல்றேன். ஓகே? அசடு வழியுது மாமா தொடச்சுக்கோ"

அவளின் இந்த விளையாட்டில் அவன் மனம் லேசானது உண்மை. சிறு பிள்ளையாய் அவனை அலைக்கழித்தாலும் அவளின் பேச்சும் குறும்பும் அவனின் இறுக்கத்தை தளர்த்தியது. அவளும் பழைய குறும்பும் கலகலப்புமாய் வளைய வருவது பெருத்த நிம்மதியளித்தது.

அவர்களது கடந்த காலத்தை கசப்பான வலியோடு 
அல்லாமல் இனி இந்த விளையாட்டோடு, தன் பிறந்தநாளோடு பிணைத்து சந்தோஷமான அனுபவமாக நினைவுகூற முடியும் அவனால்.

பத்து மணி அளவில் மீண்டும் குறுஞ்செய்தி.

'நீ உயிரானவன் என்றும்,
என் உயிரினும் மேலானவன்
என்றும் உணர்ந்தேன்!
நீ உயிர் விட துணிந்ததும்
நான் மரணித்தேன்!

நீ அழும் போது நான் கரைந்தேன்
உன் வலியில் நான் துடித்தேன்
என் உயிரை உருக்கி
உன்னை திடமாக்கிட விழைந்தேன்,
என்னையே பருகிவிட்டாய் கள்வனே
முதல் முத்தம் எனும் போர்வையில்!'

படுக்கையிலிருந்து சடக்கென நிமிர்ந்து உட்கார்ந்தான்.

Flashback

ஏழு வருடம் முன் அப்பா அருணாச்சலம் டில்லியில் காணாமல் போய்விட அம்மா பரிதவித்து போன் செய்தாள். பிரயாண ஏற்பாடு செய்துக்கொண்டு மூர்த்தி புறப்பட இரண்டு மூன்று நாட்கள் தாமதமானது.

சில வருடங்களே டெல்லி வாசம் அதனால் மொழியும் தெரியாது தவித்தார் காவேரி. அப்பாவின் நண்பர் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து தேடினர். காசியில் இருப்பதாய் தகவல் கிடைத்து சென்ற போது அவர் அங்கு இல்லை.

காசிக்கு போகும் வழியில் ஒரு விபத்தில் சிக்கிய அருணாச்சலத்தை யாரோ மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

நினைவில்லாமல் இருந்தார் அருணாச்சலம், காலில் முறிவு ஏற்பட்டிருந்தது. அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லாததால் தகவல் தெரிவிக்க இயலவில்லை மருத்துவர்களால். ஐந்து நாட்களுக்கு பிறகு அவரை கண்டுபிடித்து டெல்லி அழைத்துவந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சுய நினைவு திரும்ப பத்து நாட்கள் ஆனது. விவரம் கேள்விபட்டதும் விஷ்வா நிலைகுலைந்து போனான்.

அதுவரை திடமாக இருந்த அந்த இருபது வயது இளைஞன் ஏனோ தனித்து விடப்பட்ட குழந்தை போல பயம் ஆட்கொள்ள, அந்த விபரீத முடிவை எடுத்தான்.

தினம் சந்திக்கும் நேரத்தில் அவனை காணாமல் தவித்த பூரணி அவனை தேடி வந்தாள். சிறுவயது முதல் துணிச்சல் மிகுந்தவனாக மட்டுமே தன்னை காட்டிக் கொண்டவன் அன்று முதன் முறையாக தனது பலவீனத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

அவனுக்கு அவள் தேவதை (guardian angel), காவேரிக்கு அவள் வணங்கும் அபிராமியே வந்ததாய் நம்பிக்கை. வலிமிக்க இந்த நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவனை கைபேசியின் குறுஞ்செய்தி ஒலி அசைத்தது.

'வலி தீர வேண்டுமெனில் ஒரு முறை அழுது தீர்த்திடு,
காத்திருக்கிறேன் உனக்காக வந்து,தோள் சாய்ந்திடு'

அவளை அழைத்தான், "நான் அப்ஸெட் ஆவேன்னு தெரியுமா? ஒரு வேளை கோவப்பட்டிருந்தா?"

"நீ எப்ப கோவப்படுவ எப்ப அப்ஸெட் ஆவேனு ஒரு அளவுக்கு யூகிக்க முடியுது சிவா. நீ வருத்தபடுவேன்னு தான் ரெண்டாவது மெஸேஜ்... ஸாரி நான்..."

"இல்லை. அன்னிக்கு நான் செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு பின்னாடி தான் புரிஞ்சுது."

"சரி ஆன்ஸர் கண்டுபிடிச்சியா?"
அவசரமாக அவனை திசை திருப்பினாள்.

"ம்ம்...இரு மறுபடியும் ஒரு முறை அதை படிக்கணும்" என்று கூறி உரக்க அதை வாசித்ததும்.

"ஹய்யோ! சிவா உன் குரல்ல அதை கேக்கும் போது செம்மையா இருக்கு. நான் எழுதுற மொக்கைய, DTS எஃபக்ட்ல கேக்குற மாதிரி இருக்கு" அவள் சிலாகிக்க அவன் உரக்க சிரித்தான்.

"நீ எழுதினா ABCD கூட கவிதை தான் ஜானு"

"அய்ய்ய்யோ.. முடியலை டா... காதுல ரத்தம் வருது.."

"அப்ப நீ சொன்னது மட்டும்?
சரி... சரி ஆன்ஸர்.."
என சில விநாடிகள் யோசித்தவன், "என் வீட்டு ஹால்".

படுக்கையறை வாயிலிலிருந்தபடி முன் அறை முழுதும் கண்களால் அலசிவிட்டு "ஏய் ஜானு எங்கடா இங்க எதுவுமே இல்லை?"

"ஒழுங்கா தேடினியா?"

"ம்ம்ம்.. பாத்தேனே அன்னிக்கு ஹால்ல தான் நாம இருந்தோம். அங்க எந்த கிஃப்ட் பாக்ஸும் இல்லை" தீர்மானமாக உரைத்தான்.

"சரி.. அன்னிக்கு நீ ஹால்ல எங்க இருந்த நினைவு இருக்கா?" என்றாள்.

"Sofaல உக்கார்ந்திருந்தேன்"

"எந்த சைட்? கிச்சன் பக்கமா இருக்குறதா? இல்லை வாசல் கதவு பக்கமா?"

"ம்ம்ம்...தெரியலை டா" என கண்ணை மூடி தீவிரமாக யோசித்தான்.

"கிச்சன் பக்கம் இருக்கற sofa. அங்கயே போய் மறுபடியும் உட்கார்ந்து பாரு."
உட்கார்ந்து அங்கு மேஜையின் மீதும் அதற்கு கீழேயும் தேடிக் கொண்டிருந்தான்.

பின் பக்கமாக சப்தமில்லாமல் வந்து அவன் தலை முடியை சிலுப்பி
"ஹாய் சிவா" என்று அவன் கழுத்தை கட்டி கொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி அவனுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினாள்.

"ஜானூ" தலையை பக்கவாட்டில் திருப்பி  அவள் கன்னத்தில் முத்தம் வைத்து "ஆமா நீ எப்படி இங்க? எப்ப உள்ள வந்தே?"
முன் பக்கம் வந்து மேஜை மீது அமர்ந்துகொண்டதும் மேஜையோடு அவளை தன் அருகே இழுத்துக் கொண்டான்.

"நீ அக்கா வீட்டுக்கு போனியே அப்ப. அத்தை ரூம்ல ஒளிஞ்சிகிட்டேன்".

"ஆமா ஐஞ்சு பாக்ஸும் எடுக்கணும் அப்பறம் இன்னொரு பாக்ஸ்.. என்னலாமோ சொன்ன.. இப்ப நீயே வந்து நிக்குற"

அவள் கைகளை பற்றி கொண்டு நான்கு நாட்களாய் பார்க்காதவளை கண்ணிலும் இதயத்திலும் முழுவதுமாய் நிறைத்து கொண்டான்.

"அப்படி தான் யோசிச்சேன் ஆனா லாஸ்ட் க்ளூல நீ கொஞ்சம் அதிகமா அப்ஸெட் ஆவியோனு டௌட் வந்துச்சு அதான் வந்தேன். வருத்தமா சிவா, அந்த க்ளூ படிச்சு?" அவன் கண்களை ஆராய்ந்தபடி.

"அது ஒண்ணும் பெருசு இல்லை. சரி அந்த கடைசி பாக்ஸ் எங்கே"? அவள் முயற்சி வீண் போக வேண்டாமென உற்சாகமூட்டினான்.

எழுந்து சமையலறைக்குள் சென்று கையில் மற்றுமொரு பரிசு பெட்டியோடு வந்தாள். அதற்குள் அவனும் மற்ற நான்கையும் எடுத்து வர, மீண்டும் மேஜை மீதே அமர்ந்தாள்.

"எல்லாத்தையும் இப்படி வச்சிட்டு அந்த பேப்ரை பிரி"

மேலே சுற்றியிருந்த பேக்கிங்க் பேப்பரை பிரித்து எடுத்தான். கண் ஜாடை காட்டினாள்.

"அந்த பாக்ஸ் மூடியில சிவப்பு கலர் பாட்டரன் இருக்கு பாரு,
அதை ஒன், டூ..அந்த வரிசைல வைச்சா ஒரு டிஸைன் வரும். பாக்ஸ் கீழே நம்பர் போட்டிருக்கு".

அதே போல பார்த்து அடுக்கி, முதல் இரண்டை வைத்தவுடன் அது இதய வடிவிலான டிஸைன் என்பது புரிந்து போனது. நடுவே ஒரு சிறிய பகுதி மட்டும் இல்லாமல் இருந்தது. நிமிர்ந்து அவளை கேள்வியாய் பார்க்க, ஒரு சிறிய தங்க நிற பெட்டியை கொடுத்தாள், அந்த இடத்தில் பொருத்தினான். அதன் மீது இருந்த தங்க நிற காகிதத்தை பிரித்தான் அவனது புகைப்படம் அதன் மீது ஒட்டப்பட்டு இருந்தது.

"நான் தொலைச்ச என் பொக்கிஷம் நீ, என் இதயத்தின் ஒரு பகுதி நீ. வாழ்க்கையில நான் இழந்தது என் நினைவுகளை மட்டும் இல்ல உன்னையும் தான்.
நினைவுகள் மட்டும் மீண்டு நீ கிடைக்காம போயிருந்தா, my life would have been meaningless. நீ கிடைச்சு நினைவுகள் மீளாம போயிருந்தா... அது இன்னும் கொடுமை."

அவன் முகத்தை தன் கையில் ஏந்தி  அவன் நெற்றியில் மென் முத்தம் பதித்தாள். கண்கள் பனித்தன இருவருக்கும்.

"இதை கலைக்காம பாக்ஸை மட்டும் ஓபன் பண்ணு" திறந்தால் ஒவ்வொரு பெட்டி உள்ளேயும் ஒரு கவர், அதனுள்ளே பூரணி விஷ்வா இருவரும் சேர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள்.

கடைசி பெட்டியில் இருந்த புகைப்படம் வித்தியாசமாக இருந்தது. " இது என்ன செல்லம்மா? புரியலை! ஏதோ எழுதின மாதிரி இருக்கு.. சிக்நேச்சர் (signature) மாதிரி" குழப்பமாய் அவளை ஏறிட்டான்.

"வெய்ட்.. கண்ணை மூடிக்கோ" என ஒரு சிறிய  துவாலையை கொண்டு அவன் கண்களை கட்டினாள் "நான் சொல்ற வரை கண்ணை திறக்க கூடாது".

சில நிமிடங்கள் இடைவெளியில், "சிவா...கண்ணை திற".
மெல்ல கண் கட்டை அவிழ்த்தவன் முதலில் திகைத்தான். அவன் கண் முன்னே பூரணி லேசாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள், இடது தோள் பகுதியில் சுடிதார் லேசாக விலகியிருந்தது.

"ஏய் ஜானு என்ன?" பதட்டமாய் பார்வையை தவிர்த்தான்.

"சிவா தப்பா எதுவும் இல்ல டா.. என்னை பாரு"

சங்கடமாக அவன் திரும்ப.
"My shoulder..." என அவள் குறிப்பிட அங்கே அவன் கண்டது

'Siva's jaanu' என்ற Tatoo.

அதிர்ந்தவன் அவள் முகத்தையும் டாட்டூவையும் நம்பாமல் மாறி மாறி பார்த்தான்.

அவளை நெருங்கி வந்து ஆராய்ந்தான். பூரணிக்கு பயத்தில் இதயம் புல்லட் ரெயில் வேகத்தில் ஓடியது அவனது முகபாவம் வினாடிக்கு வினாடி மாறுவதை கண்டு.

"பைத்தியமா டீ நீ? என்ன வேலை பண்ணி வச்சிருக்க? இதெல்லாம்...எப்ப? எப்படி.. ஏன் செல்லம்மா?"

கோபத்தை அடக்க முயன்று முகம் சிவந்து உதடு துடித்தது.

"சிவா ப்ளீஸ் கோவப்படாத" அவன் கைகளை பற்றி கெஞ்சினாள்.

"இது என்ன முட்டாள்தனம்? என்ன Insta trendஆ? TikTok fashionஆ? அந்த போலித்தனத்துக்கு நீயும் அடிமை ஆகிட்டியா ஜானு? வீட்டுல பெரியவங்களுக்கு தெரிஞ்சா?"

காதல் விவகாரம் தெரிந்ததற்கே சித்தப்பா முர்த்தி வேப்பிலையும் தீச்சட்டியும் ஏந்தி சாமியாடாத குறையாக ஊருக்கு போயிருக்கிறார். இது தெரிந்தால்?

 

"சிவா இது நான் எனக்காக செஞ்சேன்."

"யாருக்காக செஞ்சாலும் இது முட்டாள்தனம்.." அவள் கைகளை உதறியபடி அவன் குரல் உயர்த்தி தனது எதிர்ப்பை தெரிவிக்க, அவளது இதயம் தடக்கென நின்று துடித்தது.

அவள் கண்கள் கலங்க,
"சிவா ப்ளீஸ் என்னை பேசவிடு"

அவன் அமைதியாக அவளை வெறித்தான். கோபத்தை கட்டுபடுத்த வேண்டி சுவாசத்தை முயன்று நிதானப்படுத்துகையில் அவளது பரிசு பொருட்கள் மேஜையில் கண்ணில் பட தன் பிறந்த நாளை கொண்டாட அவள் எடுத்து கொண்ட முயற்சிகள் அவனை சுட்டன. தவறை உணர்ந்தான்.

அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தான். "ஸாரி மா.. நான் கோவப்பட்டது தவறு தான். இப்ப சொல்லு எதுக்கு இந்த டாட்டூ?"

"எனக்கு அந்த பயம் இருந்துட்டே இருக்கு. நம்ம பிரிவை பத்தின பயம். எனக்கு மறுபடி மறதி ஏதும் பாதிக்குமோன்னு பயம். ஒரு வேளை அப்படி எதும் நடந்தா?" கனத்த மௌனம்.

"நான் உன்னை மறந்து போய்ட்டா? மறக்க கூடாதுன்னு தான் இந்த டாட்டூ போட்டுக்கிட்டேன்.

கடந்து வந்த வலியை மறக்கலாம், வலி தரும் நினைவுகளை மறக்கலாம்.
வாழ்ந்த வாழ்க்கையே மறந்தா?"

அவளது கன்னங்களில் தடம் பதித்து ஓடிய கண்ணீரை துடைத்தான். அவனுக்குள்ளும் வீசிக்கொண்டிருந்த சூறாவளியை எப்படி கடந்து வருவது? அதற்கு வடிகால் தான் என்ன?

"ரத்தமும் சதையுமா உயிரோட இருக்கற மனுஷங்களை, என்னை நேசிக்கிறவங்களை நான் நேசிச்சவங்களை மறந்து போறதுங்கறது எத்தனை கொடுமை தெரியுமா?"

அவளது கண்ணீரும் அவளது நியாயமான பயமும் அவனை நிதானப்படுத்தியது.

"அதுக்காக? இதுவா solution? வலிச்சிருக்குமே? உனக்கு பிளட் பாத்தா மயக்கம் வருமே மா.."

"இந்த பிஸிகல் பெயின் கொஞ்சம் நேரம் தான் சிவா. அந்த வலியை கம்பேர் பண்ணா.

கவலை படாத, நான் அம்மா அப்பாகிட்ட பர்மிஷன் கேட்டு தான் போட்டுகிட்டேன். நீ தயவு செஞ்சு கில்டியா ஃபீல்பண்ணாத"

அவள் அளித்த தன்னிலை விளக்கம் அவனை சமன்படுத்தவில்லை.

"உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா செல்லம்மா?"

"சிவா இது உன்னை பத்தியோ என்னை பத்தியோ இல்ல பா."
அவனது முகத்தை தன் இரு கையில் ஏந்தி கொண்டாள், "வார்த்தையால விவரிக்க முடியாத அளவு அன்பை சுமந்துட்டு எனக்காக இத்தனை நாள் உண்மையா காத்திருக்கற என் சிவாவுக்கு முன்னாடி இது ஒண்ணுமே இல்லடா. நீ சொல்ற மாதிரி காரண காரியம் பாத்து வந்தது இல்லை நம்ம காதல். எந்த அற்ப காரணத்துக்காகவும் முடியவும் கூடாது."

"ஒரு உதாரணம் சொல்றேன்.
50 First Dates அப்படீன்னு ஒரு இங்க்லீஷ் படம். அதுல அந்த ஹீரோயினுக்கு short term memory loss. அவளும் ஹிரோவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவாங்க, கல்யாணம் கூட ஆகிடும். ஆனா அந்த பெண்ணுக்கு தூங்கி எழுந்திரிச்சா எல்லாம் மறந்துரும். தினம் ஹீரோ அவங்களை இம்ப்ரஸ் பண்ணி, லவ் பண்ண வைப்பாரு, டேட் கூட்டிட்டு போவாரு. தினம் ஒரு புது முயற்சி.. அவங்களுடைய அன்பை புதுப்பிச்சு உயிர்ப்போட வைக்க."

சற்றே நிறுத்தி பெருமூச்செறிந்து, "ஒரு வேளை futureல என்னோட கண்டிஷன் மோசமாச்சுன்னா?  அதுக்கு தான் இது. வாழ்க்கை எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கு என்னை உண்மையா நேசிக்கிற இந்த ஜீவனோட சேர. அதை எப்படி இழப்பேன்? "

அவள் வார்த்தையில் நெஞ்சம் தழுதழுக்க அவளது உள்ளங்கையில் தனது முகத்தை புதைத்து கொண்டான் சில வினாடிகள்.

அவளை ஏறிட்ட விஷ்வா,
"நான் கோவப்படலை ஆனா தயவு செஞ்சு இனி இந்த மாதிரியெல்லாம் லூஸு வேலையெல்லாம் செய்யாத. நான் எந்த காரணத்தை கொண்டும் உன்னை விட்டு பிரிய மாட்டேன். நம்பு"

அவன் குரலில் இருந்த சாந்தமும் உறுதியும் நம்பிக்கையை கொடுக்கும் விதமாக இருந்தது. கீழே சரிந்திருந்த அவள் துப்பட்டாவை எடுத்து அணிவித்து விட்டு மெல்ல எழுந்தான்.

"என் கூட வா" என அழைத்தவனை எங்கே என்பது போல் பார்ந்தாள். "வா செல்லம்மா" உள் அறைக்கு அழைத்து சென்றான்.





⚜️⚜️⚜️⚜️⚜️


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro